சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் உட்கட்சி பூசல்…

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகை குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில்
மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்பே காங்கிரஸ் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

ராகுல் காந்தி வருகிற 28-ந் தேதி சென்னை வருகிறார். முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களின் ஒருவன்” என்கிற நூலை ராகுல் காந்தி வெளியிடுகிறார்.சென்னை வருகை தரும் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர்கள் தலைமையில், வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில், தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுடன் ராகுல் காந்தி கலந்து கொண்டு ஆலோசனை செய்கிறார்.
இதில், உள்ளாட்சியில் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பற்றியும், காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்திருத்தம், உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.

இதுகுறித்து ‌இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில்
கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துக் கொண்டு இருந்தபோது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமரும் மேடையில் ஐ.என்.டி.யூ.சி. தலைவர் முனுசாமி அமர்ந்ததற்கு, முன்னாள் நிர்வாகி பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து ஒருமையில் பேசி மேடையிலிருந்து அவரை கீழே இறங்கும்படி கூறினாராம். இதன் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்பே இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

நிர்வாகிகளின் மோதல் போக்கு காரணமாக செய்வதறியாமல் திகைத்த மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி திக்குமுக்காடினார். இரு தரப்பினரும் மாறி மாறி தகாத வார்த்தையால் திட்டி சண்டையிட்டனர்.இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் ஐ.என்.டி.யூ.சி. அலுவலகத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உருவப்படத்தை பன்னீர்செல்வம் சேதப்படுத்தியதாக முனுசாமி கட்சி தலைமையிடம் புகார் செய்து பன்னீர்செல்வத்தை நீக்கும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Topics

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Entertainment News

Popular Categories