இந்தியாவில் வேகமாக பரவும் லம்பி வைரஸ்..

Swat1 1 696x389 1 - 2026

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கால்நடைகளை குறிவைத்து வேகமாக பரவும் லம்பி வைரஸ் தொற்றால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

இந்தியாவில் லம்பி வைரஸ் நோய் தாக்குதலால் இதுவரை 57 ஆயிரத்துக்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன. குறிப்பாக பசுக்களை இந்த வைரஸ் தாக்கி வருகிறது. இது தற்போது பல்வேறு மாநிலங்களுக்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கால்நடைகள் ஏற்றுமதியை குஜராத் அரசு தடை செய்துள்ளது. தற்போது வரைக்கும் பால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் கால்நடைகளை இந்த லம்பி வைரஸ் அதிகளவில் பாதித்து வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்த பசுக்களை குழி தோண்டி புதைத்து வருகின்றனர். தற்போது வரைக்கும் நாடு முழுவதும்  57,000த்துக்கும் மேலான பசுக்கள் இந்த வைரஸ் நோயால் இறந்துள்ளன. இவற்றில் 37 ஆயிரம் பசுக்கள் ராஜஸ்தானில் மட்டும் இறந்துள்ளன. 

இதுகுறித்து மத்திய மீன்வளம், விலங்குகள் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் கோடாபாய் ருபலா கூறியுள்ளதாவது,

தற்போது லம்பி வைரஸ் நாட்டில் 6 முதல் 7 மாநிலங்களில் பரவி இருக்கிறது. முக்கியமாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவி இருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்திலும் சில பசுக்களை இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது. சூழலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மாநிலங்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

பசுக்களை வைத்து இருப்பவர்கள் தங்களது பசுக்களுக்கு கோட் பாக்ஸ் தடுப்பூசிகளை (Goat Pox Vaccine) செலுத்திக் கொள்ள வேண்டும். மாநில அரசுகளை இந்த தடுப்பு ஊசி போடுவதற்கு துரிதப்படுத்தி வருகிறோம். குஜராத் மாநிலத்தில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது.

பஞ்சாப், அரியானா மாநிலங்களில் தொற்று பரவுவது கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில்தான் அதிகளவில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.

இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் லம்பி வைரஸ் தொற்று நோயை தேசிய பேரழிவு நோயாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு கால்நடைகள் ஏற்றுமதியை குஜராத் அரசு தடை செய்துள்ளது. தற்போது வரைக்கும் பால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மிகவும் மோசமான இந்த வைரஸ் கால்நடைகளுக்கு பரவுகிறது. இது ஒரு விலங்கிடம் இருந்து மற்ற விலங்குகளுக்கு ஈக்கள், சிறு பூச்சிகள், கொசுக்கள், உண்ணிகள் மூலம் பரவுகின்றன.

இதனால் பாதிக்கப்படும் விலங்குகளுக்கு காய்ச்சல், தோலில் முடிச்சுகள், கண் மற்றும் மூக்கில் இருந்து நீர் வடிதல், பால் சுரப்பது குறைதல், சாப்பிடுவதில் சிக்கல் போன்றவை ஏற்படுகின்றன. இவை தவிர முகம், கழுத்து, வாய், மூக்கு கண் இமைகள் ஆகியவற்றில் கட்டிகள் ஏற்படும்.

இத்துடன் கால்களில் வீக்கம், நடையில் தடுமாற்றம், நடப்பதை குறைத்துக் கொள்வது போன்ற சிக்கல்கள் ஏற்படும். நோய் பெரிய அளவில் தாக்கி முற்றும்போது, பசுக்கள் இறக்கின்றன. இந்த நோயினால் பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு கருக்கலைப்பும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் இந்த லம்பி வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்று உலக சுகாதார அமைப்பின் விலங்குகள் நல அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories