தேசிய நெல் திருவிழா: 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகள் பங்கேற்பு!

traditional paddy farmers - 2026
#image_title

அலங்காநல்லூரில் தேசிய நெல் திருவிழா -150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமுதாய கூடத்தில் கிரியேட் – நமது நெல்லை காப்போம் அமைப்பின் சார்பில் 18 ஆம் ஆண்டு தேசிய நெல் திருவிழா நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் இயற்கை விவசாயிகள், 50க்கும் மேற்பட்ட தியாகராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தாவரவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன் வரவேற்றார். கிரியேட் அமைப்பின் தலைவர் முனைவர் துரைசிங்கம் தலைமை தாங்கி நெல் திருவிழாவின் நோக்கங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து கடந்த 18 ஆண்டுகளில் நெல் திருவிழா மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதையை கிரியேட் அமைப்பு வழங்கியுள்ளதை பற்றி கூறினார்.

பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிரியேட் அமைப்பின் “வெற்றிக்கு வித்திடும் இயற்கை வேளாண்மை” புத்தகத்தை வெளியிட்டார்.

பாரம்பரிய நெல் சாகுபடி நன்மைகளான கலை கட்டுப்பாடு, பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் செயல்திறன், அதன் ஊட்டச்சத்து, மற்றும் மருத்துவ பயன்கள் குறைந்த கிளைசெமிக் குறியீடு, மற்றும் மண்வள மேம்பாடு ஆகியவற்றில் அதன் நேர்மையான தாக்கத்தை பற்றி கூறினார்.

மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேளாண்மை துறை விவசாயிகளுக்கு வழங்கும் மானிய திட்டங்கள் பற்றி பேசினார். மாவட்ட வள பயிற்றுனர் பரணிதரன் விவசாயிகள் சாகுபடிக்கு பின் தங்கள் விளை பொருட்களை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல் முறை குறித்து விரிவாக எடுத்து கூறினார்.

விழாவில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ஆத்தூர் கிச்சலி சம்பா, காலாபாத், குதிரைவால் சம்பா, பூங்கார், சீரகச் சம்பா, கருங்குருவை, சொர்ண மசூரி, ரத்தசாலி, அறுபதம் குறுவை, வெள்ளை கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களில் ஏதேனும் ஒன்று தலா 2 கிலோ வழங்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories