December 6, 2025, 6:59 PM
26.8 C
Chennai

சாலையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளியை கொலை செய்து கொள்ளையர்கள் அட்டகாசம்

சென்னை விருகம்பாக்கத்தில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது:
விருகம்பாக்கம் காந்தி நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர்கள் ஜெகா, அசோக் இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதற்காக அந்தப் பகுதியில் 2 பேரும் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
 
இந்த நிலையில் இவர்களைப் பார்ப்பதற்காக ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து அவர்களது நண்பர் சதீஷ் சனிக்கிழமை இரவு விருகம்பாக்கம் வந்துள்ளார். அவரை அழைத்துக்கொண்டு 3 பேரும் அந்தப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
 
அப்போது அந்த வழியாக வந்த 2 இளைஞர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டையை எடுத்து 3 பேரையும் தாக்கி அவர்கள் வைத்திருந்த செல்போனை பறிக்க முயன்றனர். இதில், காயமடைந்த அசோக், ஜெகா, சதீஷ் ஆகியோர் வலிதாங்க முடியாமல் கூச்சலிட்டனர். இதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதைப் பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இந்தச் சம்பவம் நடக்கும்போது அந்தப்பகுதியில் சாணை பிடிக்கும் தொழிலாளி ஒருவர் சாலையோரம் தூங்கிக் கொண்டு இருந்தார். அவரைத் தட்டி எழுப்பிய கொள்ளையர்கள் அவரிடமிருந்த கைப்பேசியைப் பறித்தனர். அப்போது அவர் சத்தம் போட்டதில் அச்சமடைந்த கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த கத்தியை எடுத்து அந்த தொழிலாளியை சரமாரியாக குத்தினர். இதில் அவரது கை, இடுப்பு, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த தொழிலாளி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விருகம்பாக்கம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த தொழிலாளியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
 
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் அப்துல் ஜைனு(42) என்பது தெரியவந்தது. இவர் அரக்கோணத்தை சேர்ந்தவர். விருகம்பாக்கம், வடபழனி, உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் சாணை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர் இரவில் நடைபாதையில் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இதுபோல் சனிக்கிழமை இரவு தூங்கியபோதுதான் கொள்ளையர்கள் பிடியில் சிக்கி உயிரிழந்தார். விருகம்பாக்கம் காவல் நிலையத்தினர் விசாரிக்கின்றனர்.
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories