சாலையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளியை கொலை செய்து கொள்ளையர்கள் அட்டகாசம்

சென்னை விருகம்பாக்கத்தில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது:
விருகம்பாக்கம் காந்தி நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர்கள் ஜெகா, அசோக் இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதற்காக அந்தப் பகுதியில் 2 பேரும் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
 
இந்த நிலையில் இவர்களைப் பார்ப்பதற்காக ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து அவர்களது நண்பர் சதீஷ் சனிக்கிழமை இரவு விருகம்பாக்கம் வந்துள்ளார். அவரை அழைத்துக்கொண்டு 3 பேரும் அந்தப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
 
அப்போது அந்த வழியாக வந்த 2 இளைஞர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டையை எடுத்து 3 பேரையும் தாக்கி அவர்கள் வைத்திருந்த செல்போனை பறிக்க முயன்றனர். இதில், காயமடைந்த அசோக், ஜெகா, சதீஷ் ஆகியோர் வலிதாங்க முடியாமல் கூச்சலிட்டனர். இதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதைப் பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இந்தச் சம்பவம் நடக்கும்போது அந்தப்பகுதியில் சாணை பிடிக்கும் தொழிலாளி ஒருவர் சாலையோரம் தூங்கிக் கொண்டு இருந்தார். அவரைத் தட்டி எழுப்பிய கொள்ளையர்கள் அவரிடமிருந்த கைப்பேசியைப் பறித்தனர். அப்போது அவர் சத்தம் போட்டதில் அச்சமடைந்த கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த கத்தியை எடுத்து அந்த தொழிலாளியை சரமாரியாக குத்தினர். இதில் அவரது கை, இடுப்பு, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த தொழிலாளி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விருகம்பாக்கம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த தொழிலாளியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
 
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் அப்துல் ஜைனு(42) என்பது தெரியவந்தது. இவர் அரக்கோணத்தை சேர்ந்தவர். விருகம்பாக்கம், வடபழனி, உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் சாணை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர் இரவில் நடைபாதையில் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இதுபோல் சனிக்கிழமை இரவு தூங்கியபோதுதான் கொள்ளையர்கள் பிடியில் சிக்கி உயிரிழந்தார். விருகம்பாக்கம் காவல் நிலையத்தினர் விசாரிக்கின்றனர்.
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories