கலையம்ச பெண் சிலையை காமத்தில் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து படத்தைப் பகிர்ந்தவர் கைது!

statue in tanjore - 2026

தஞ்சாவூர் பெரிய கோயில் பெண் சிற்பங்களுடன், பெண்களுடன் சல்லாபம் செய்வதைப் போல சித்திரித்து, இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதுகுறித்து திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு, மதுரை ஒத்தகடையை சேர்ந்த முஜிபுர் ரகுமான் என்பவரைக் கைது செய்தனர். திருச்சி கல்லுக்குழியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்த முஜிபுர் ரகுமான் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவர் திருச்சியில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி தஞ்சையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட சில படங்கள் காண்போரை கதி கலங்க வைப்பதாக இருந்தன.

facebook boy - 2026தஞ்சைப் பெரிய கோவிலுக்குச் சென்ற முஜிபுர் ரஹ்மான் அங்குள்ள பழங்காலச் சிற்பங்களை வக்கிர எண்ணத்துடன் அணுகியுள்ளார். சிலைகளை கட்டிப் பிடிப்பது, சிலைகளுக்கு முத்தம் கொடுப்பது, பெண் சிற்பங்களை பாலியல் வக்கிர ரீதியாக வெளிப்படும் படி காண்போரை மோசமாகத் தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, அதனை படங்களாகவும் எடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

பலர் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அக்கால மனிதர்கள் வாழ்ந்த சூழ்நிலை, தமிழர்களின் வாழ்வியல் கலை, மன்னர்களும் மக்களும் வாழ்ந்த நடப்பியல் சூழல் இவற்றை சிற்பங்களாக அந்த அந்தக் கால கட்டங்களில் செதுக்கி வைத்தார்கள். அவற்றை காமத்துடன் அணுகுவது, மனிதனின் வளர்ப்பில் கோளாறு என்று கருத்துகள் பகிரப் பட்டன.

துணிக்கடையில் சேலை கட்டியிருக்கும் பொம்மையை ஒருவன் இப்படி அணுகினால் அவனது வக்கிர எண்ணம் எப்படி இருக்கும் என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

facebook boy1 - 2026இதனைச் செய்தவன் ஒரு இஸ்லாமியன். அதனால்தான் கோயில்களுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என்று போர்டு வைத்திருக்கிறார்கள்… என்று சிலர் கருத்திட்டனர்.

ஒரு கல்லையும் பொம்மையையுமே இப்படி காமக் கண் கொண்டு அணுகி, அதனை சமூக வலைத்தளங்களில் பகிரும் வக்கிரம் படைத்தவர்கள் முன், பெண்கள் எப்படி தைரியமாக நடமாட முடியும்?! என்று கேள்வி எழுப்பினர் சிலர்.

திராவிடர் கழகம், ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஆகியோரின் கருத்துகளை பகிர்ந்து, இவர்களால்தான் இத்தகைய கீழ்த்தரமான எண்ணம் இந்த இளைஞர்களுக்கு வருகிறது என்று சிலர் சாடியிருந்தனர்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

இந்நிலையில் இந்தப் படங்களை எடுத்துப் பகிர்ந்த முஜிபுர் ரஹ்மான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பேஸ்புக் அக்கவுண்டில் உள்ள முகவரி மூலமாக திருச்சியில் உள்ள அவனது சகோதரி வீட்டில் அந்த இளைஞன் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அங்கே சென்ற போலீசார் அவனைக் கைது செய்தனர்.

விளையாட்டுத்தனமாக செய்தததாகவும், உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் முஜிபுர் ரஹ்மான் கூறிய போதும், உள்நோக்கம் வெளிப்பட செய்த செயல் என்றும், அதன் விளைவுகள் எப்படி இருக்கின்றன என்பது குறித்தும் கூறிய போலீஸார், முஜிபுர் ரகுமானைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Entertainment News

Popular Categories