கலையம்ச பெண் சிலையை காமத்தில் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து படத்தைப் பகிர்ந்தவர் கைது!

statue in tanjore - 2026

தஞ்சாவூர் பெரிய கோயில் பெண் சிற்பங்களுடன், பெண்களுடன் சல்லாபம் செய்வதைப் போல சித்திரித்து, இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதுகுறித்து திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு, மதுரை ஒத்தகடையை சேர்ந்த முஜிபுர் ரகுமான் என்பவரைக் கைது செய்தனர். திருச்சி கல்லுக்குழியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்த முஜிபுர் ரகுமான் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவர் திருச்சியில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி தஞ்சையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட சில படங்கள் காண்போரை கதி கலங்க வைப்பதாக இருந்தன.

facebook boy - 2026தஞ்சைப் பெரிய கோவிலுக்குச் சென்ற முஜிபுர் ரஹ்மான் அங்குள்ள பழங்காலச் சிற்பங்களை வக்கிர எண்ணத்துடன் அணுகியுள்ளார். சிலைகளை கட்டிப் பிடிப்பது, சிலைகளுக்கு முத்தம் கொடுப்பது, பெண் சிற்பங்களை பாலியல் வக்கிர ரீதியாக வெளிப்படும் படி காண்போரை மோசமாகத் தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, அதனை படங்களாகவும் எடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

ALSO READ:  இக்கணம் - தேவை சிக்கனம்!

பலர் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அக்கால மனிதர்கள் வாழ்ந்த சூழ்நிலை, தமிழர்களின் வாழ்வியல் கலை, மன்னர்களும் மக்களும் வாழ்ந்த நடப்பியல் சூழல் இவற்றை சிற்பங்களாக அந்த அந்தக் கால கட்டங்களில் செதுக்கி வைத்தார்கள். அவற்றை காமத்துடன் அணுகுவது, மனிதனின் வளர்ப்பில் கோளாறு என்று கருத்துகள் பகிரப் பட்டன.

துணிக்கடையில் சேலை கட்டியிருக்கும் பொம்மையை ஒருவன் இப்படி அணுகினால் அவனது வக்கிர எண்ணம் எப்படி இருக்கும் என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

facebook boy1 - 2026இதனைச் செய்தவன் ஒரு இஸ்லாமியன். அதனால்தான் கோயில்களுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என்று போர்டு வைத்திருக்கிறார்கள்… என்று சிலர் கருத்திட்டனர்.

ஒரு கல்லையும் பொம்மையையுமே இப்படி காமக் கண் கொண்டு அணுகி, அதனை சமூக வலைத்தளங்களில் பகிரும் வக்கிரம் படைத்தவர்கள் முன், பெண்கள் எப்படி தைரியமாக நடமாட முடியும்?! என்று கேள்வி எழுப்பினர் சிலர்.

திராவிடர் கழகம், ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஆகியோரின் கருத்துகளை பகிர்ந்து, இவர்களால்தான் இத்தகைய கீழ்த்தரமான எண்ணம் இந்த இளைஞர்களுக்கு வருகிறது என்று சிலர் சாடியிருந்தனர்.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

இந்நிலையில் இந்தப் படங்களை எடுத்துப் பகிர்ந்த முஜிபுர் ரஹ்மான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பேஸ்புக் அக்கவுண்டில் உள்ள முகவரி மூலமாக திருச்சியில் உள்ள அவனது சகோதரி வீட்டில் அந்த இளைஞன் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அங்கே சென்ற போலீசார் அவனைக் கைது செய்தனர்.

விளையாட்டுத்தனமாக செய்தததாகவும், உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் முஜிபுர் ரஹ்மான் கூறிய போதும், உள்நோக்கம் வெளிப்பட செய்த செயல் என்றும், அதன் விளைவுகள் எப்படி இருக்கின்றன என்பது குறித்தும் கூறிய போலீஸார், முஜிபுர் ரகுமானைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories