April 30, 2025, 9:42 PM
31.3 C
Chennai

இசை நிகழ்ச்சியுடன் ஓராண்டு நிறைவை கொண்டாடிய காவிய காமுதி குழுமம்!

செய்திக் கட்டுரை :- ஜெயஸ்ரீ எம்.சாரி

ஹைதராபாத்திலிருந்து இயங்கும் காவிய காமுதி சர்வதேச கவிஞர்கள் குழுமம் கடந்த ஆண்டு முதல் ஜூம் மூலமாக பல இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறது.  இந்த குழுமத்தின் ஓராண்டு காலம் நிறைவு பெற்றதை முன்னிட்டு சமீபத்தில் காவிய காமுதி இன்டர்நேஷனல் மல்ட்டி-லிங்க்வல் மியூசிகல்  ஈவினிங் என்ற கண்கவர் நிகழ்ச்சியை நடத்தியது.

இங்க்ட்யூ பப்ளிகேஷன்ஸ் இந்த நிகழ்ச்சியை வழங்கியது.டாக்டர் குமுத் பாலா, தலைவர், காவிய காமெடி குழுமம், தன்னுடைய  உரையில் குழுமத்தின் மூலமாக ஒரு ஆண்டு காலமாக நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் பற்றி தொகுத்து வழங்கினார். 

சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பல முன்னணி இசைக் கலைஞர்கள் பங்குகொண்டனர். முதலாவதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ டி பிலண்கர் பழைய திரைப்படப் பாடல்களை ஒன்றரை மணி நேரம் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். அவருடைய கணவர் டி பிலண்கர் ஹிந்தி மற்றும் மராட்டிய பாடல்களை பாடினார். அதன் பின்னர் நடைபெற்ற பகுதியில் சிதார் கலைஞரான புது தில்லியைச் சேர்ந்த அனுப்ரத்தன் முகர்ஜி தன்னுடைய அருமையான வாசிப்பினால் அனைவரையும் கவர்ந்தார்.

‘நைட்டிங்கேல் ஆப் ஹைதராபாத்’ என்றழைக்கப்படும் தீப்தி சார்யா தன் இனிமையான குரலால் தமிழ் ஹிந்தி தெலுங்கு பாடல்களை பாடி நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார். இதனையடுத்து, காவிய காமுதி குழுவிலிருந்த கவிஞர்கள் தங்களுடைய இசைத் திறமையும் இந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

டாக்டர்.ஹசினாஸ் சுல்தான்- அஸ்ஸாம், ராஜீவ் மூத்தேடாத்- பெங்களூரு, டாக்டர்.மைதிலி தேவி- மங்களூர், உதயஸ்ரீ- ஹைதராபாத், அருந்ததி முகர்ஜி-கோல்கட்டா, ஸ்வப்னா பெஹரா-புவனேஷ்வர், பத்மாவதி- ஹைதராபாத், டாக்டர். புட்டபர்த்தி நாகபத்மினி- ஹைதராபாத் மற்றும் எஸ். ரிதிகா- மும்பை ஆகியோர் தங்கள் இசைத் திறமையையும் வெளிப்படுத்தினர்.

கொல்கட்டாவின் குமார் சானு என்றழைக்கப்படும் பிவாஷ் பட்டாச்சார்யா தன் சக இசைக் கலைஞர்களான மஉ பட்டாச்சார்யா மற்றும் அபராஜிதா பாஸுவுடன் சேர்ந்து வழங்கிய அற்புதமான லைவ் பாண்ட் இசை நிகழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது.

டாக்டர்.த்ரீஷிதா முகர்ஜியின் தன் அருமையான வர்ணனையால் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார். டாக்டர் குமுத் பாலா நன்றியுரை வழங்கினார். ‘டக் லைன் கிங்க்’ என்றழைக்கப்படும் லெக்ஷ்மிநாராயண் ஆலாபாடி- ஹைதராபாத், டாக்டர் ஹசினாஸ் சுல்தான்-அஸ்ஸாம், டாக்டர் ரமா பஹீத்-ஹைதராபாத், சபிதா சாஹு- ஒடிஷா, ஸ்வப்னா பெஹரா- ஒடிஷா, டாக்டர் ரஞ்சனா ஷரன் சின்ஹா- நாக்பூர், ஹரீஷ் மசந்த்-  கனடா, சீமா ஜெயின்-ஜலந்தர், நிவேதிதா ராய்-பஹ்ரைன், டாக்டர் கே.தேஜஸ்வனி – ஹைதராபாத், உதயஸ்ரீ- ஹைதராபாத், டாக்டர் ரூபாலி சிர்கார் கௌர், மீரட், மாயா சௌஹான் மற்றும் நிஹாரிகா சிப்பெர்- யூ.எஸ்.ஏ ஆகியோர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு உதவினர்.

ALSO READ:  குமரி அனந்தன் என்ற தேசபக்தர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

Topics

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories