கொலை மிரட்டல் விடும் திமுக.,வினர்! கதறும் நடிகை!

aadhira pandilakshmi
aadhira pandilakshmi

திமுக இளைஞரணியினர் தன்னையும் தனது மகனையும் வீட்டில் நுழைந்து மிரட்டுவதாகவும், கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள் என்றும் நடிகை ஆதிரா பாண்டிலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இங்கே பாருங்க என்று வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு, இது தொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலினிடம் நியாயம் கேட்டிருக்கிறார்.

ஒரு குப்பை கதை, அப்பா, மருது உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆதிரா பாண்டியலட்சுமி.. சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இவருடைய வீட்டின் அருகே திமுக பிரமுகர்கள் என்று சொல்லிக் கொண்டு சிலர் தகராறு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து ஆதிரா கடந்த 7ஆம் தேதி போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகும், அந்த நபர்கள் இவர் வீட்டின் அருகில் பிரச்னை செய்தனராம். இதை அடுத்து, ஆதிரா தன் ட்விட்டர் பக்கத்தில், “சந்தேகத்திற்கிடமான சிலர் எதிர் வீட்டில் சுவர் ஏறுவதை தட்டிக்கேட்ட என்னையும், மகனையும் அப்பகுதி திமுக இளைஞர் அணியினருடன் சேர்ந்து சுற்றி வளைத்து தாக்கி, வீட்டில் நுழைந்து என் மகனை அடித்துக் கொலை மிரட்டல் விட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு அரசு கொடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

இன்னொரு ட்வீட்டில், “என் சொந்த வீட்டிலிருந்து எங்களை விரட்ட தொடர்ச்சியாக ஈடுபடுகிறார்கள். திமுக.,வின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க கட்சிப் பெயரை தவறாக பயன்படுத்தி பல தவறுகளை செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் இது” என்று பதிவிட்டார். அந்த பதிவுடன், ஏற்கெனவே தான் போலீசில் தந்த புகாரின் நகலையும் பதிவு செய்தார்.

இன்னொரு ட்வீட்டில், “நம்மாழ்வார் அக்குப்பஞ்சர் சிகிச்சை மையத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்ணை “இங்கு வந்தால் கொன்று விடுவேன்!” என்று மிரட்டி அங்கிருந்த பைக்குகளை அவர் மீது தள்ளும் மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் திமுக இளைஞர் அணி நபர்கள். அரசின் நடவடிக்கை தேவை” என்று பதிவிட்டார். இந்தப் பதிவுடன், அந்த நபர்கள் மிரட்டுவது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

ஆதிராவின் இந்த ட்வீட்டுகளில் முதல்வர் ஸ்டாலின், எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ட்விட்டர் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இப்போது இந்த ட்வீட்கள் டிவிட்டரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

மேலும் வேறொரு ட்வீட்டில், “லாக் டவுனில் மளிகை கடை திறந்து வைத்து வியாபாரம் பார்த்த நபரின் கடையை ஸ்குவாடு வந்து மூடினார்கள். வீட்டின் மாடியிலிருந்து வேடிக்கை பார்த்த என்னை ஆபாசமாக திட்டத் தொடங்கினார். அதை வீடியோ எடுத்தேன். ஆபாசமாக செய்கையுடன் மிரட்டினார். இதை பாருங்கள் @mkstalin @Udhaystalin @KanimozhiDMK” என்று குறிப்பிட்டு எம்பி கனிமொழியையும் அதில் டேக் செய்துள்ளார்.

திமுக.,வினரின் மிரட்டல்கள் என்று குறிப்பிட்டு, இப்படி கொலை மிரட்டல் ஆடியோக்களும், வீடியோக்களும் இணையத்தில் அதிகம் வலம் வருவதால் மக்கள் தங்கள் கருத்து சுதந்திரம் முதல் உயிருக்கு ஆபத்து என்பது வரை அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories