நிர்மலா தேவி விவகாரத்தில் திடீர் திருப்பங்கள்…! என்னதான் நடக்கிறது மேல் மட்டத்தில்?!

aruppukkottai nirmala devi - 2026

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் திடீர் திருப்பங்கள் பல நிகழ்ந்துள்ளன. இன்று இரண்டாவது நாளாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், போலீஸாரின் விசாரணையை சிபிசிஐடி போலீஸார் வசம் மாற்றி உத்தரவிட்டுள்ளார் டிஜிபி ராஜேந்திரன்.

முன்னதாக, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற புகாரில் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார். இந்நிலையில், அவரிடம் இருந்து அவர் பயன்படுத்தி வந்த 3 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே இன்னொரு திருப்பமாக நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த ஐந்து நபர் கொண்ட குழுவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நியமித்திருந்தது. அதனை திடீரென வாபஸ் பெற்றுள்ளது பல்கலைக் கழகம்.

சர்ச்சைப் பேச்சு தொடர்பாக கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இப்போது சிபிசிஐடி வசம் விசாரணை ஒப்படைக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

nirmala devi - 2026

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநர் மாளிகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை சந்தித்துப் பேசினார். அப்போது பேராசிரியை விவகாரம் குறித்தும், பல்கலை சார்பில் நடத்தப்படும் விசாரணை தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதனிடையே, ஆளுநர் இந்தப் பிரச்னையை விசாரிக்க ஒருநபர் விசாரணைக் குழு அமைத்திருந்தார். அது குறித்தும் விவாதிக்கப் பட்டது. அப்போது, ஆளுநர் மாளிகையில் இருக்கும் சிலரே, இந்த ஒரு நபர் விசாரணைக் குழு தேவையில்லை என்றும், பல்கலை., அமைத்திருந்த 5 பேர் விசாரணைக் குழுவே போதும் என்றும், அந்தக் குழுவின் விசாரணையை ஆளுநர் கண்காணித்திருக்க ஏற்பாடு செய்யலாம் என்றும் கூறினராம்.

governor banwarilal purohit - 2026

இந்நிலையில், ஆளுநருடனான சந்திப்புக்குப் பின்னர், பல்கலைக் கழக துணைவேந்தர் செல்லத்துரை, தங்கள் பல்கலை., சார்பில் அமைக்கப் பட்ட விசாரணைக் குழுவைத் திரும்பப் பெற்றுள்ளார்.

முன்னதாக, தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, மாணவர்கள், பேராசிரியர்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் தலைவர் துணைவேந்தர். அவர்தான் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து உரிய நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்க ஆளுனர் ஏன் உத்தரவிட்டார் என்பது தெரியவில்லை. அவர் உத்தரவிட்டது ஏன்? இதில் குழப்பம் உள்ளது புரிகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்பது எனது கருத்து என்று கூறினார்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories