December 5, 2025, 11:21 PM
26.6 C
Chennai

தேனிக்கு வாக்கு இயந்திரப் பெட்டிகள் மாற்றம்..! தேர்தல் ஆணையர் விளக்கம்!

election commissioner satyaprada sahu - 2025

கோவை, மதுரையில் இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனிக்கு மாற்றப் பட்டதாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில், தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மேலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.

இந்நிலையில் தேனி வட்டாட்சியர் அலுலகத்தில் 50 வாக்கு இயந்திரங்கள் வந்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்ததை அடுத்து, திமுக, காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள், உடனே தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு விரைந்தனர்.

கோவை, மதுரையில் வாக்குப் பதிவு செய்யப்பட்ட வாக்கு இயந்திரங்கள்தான் இங்கே கொண்டு வரப் பட்டுள்ளன. இங்கே வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை. இந்நிலையில் எப்படி வாக்குப் பதிவு இயந்திரங்களை இங்கே கொண்டு வரலாம் என்று வாக்குவாதம் செய்தனர். மேலும், வாக்கு பதிவு இயந்திரன்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தேனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதற்கு கோவை வருவாய் அலுவலர் சௌந்தர்ராஜன் இந்த வாக்கு இயந்திரங்கள் எதிலும் வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை; இவை வெற்று இயந்திரங்களே! என்று தெளிவுபடுத்தினர்.

ஆனாலும், எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இவற்றில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறி தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி யிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தலில் பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் அங்கே கொண்டு வரப் பட்டுள்ளன. அவை அலுவலகத்தில் வைக்கப் படும். இது எப்போதும் நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான் என்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories