தேனிக்கு வாக்கு இயந்திரப் பெட்டிகள் மாற்றம்..! தேர்தல் ஆணையர் விளக்கம்!

election commissioner satyaprada sahu - 2026

கோவை, மதுரையில் இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனிக்கு மாற்றப் பட்டதாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில், தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மேலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.

இந்நிலையில் தேனி வட்டாட்சியர் அலுலகத்தில் 50 வாக்கு இயந்திரங்கள் வந்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்ததை அடுத்து, திமுக, காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள், உடனே தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு விரைந்தனர்.

கோவை, மதுரையில் வாக்குப் பதிவு செய்யப்பட்ட வாக்கு இயந்திரங்கள்தான் இங்கே கொண்டு வரப் பட்டுள்ளன. இங்கே வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை. இந்நிலையில் எப்படி வாக்குப் பதிவு இயந்திரங்களை இங்கே கொண்டு வரலாம் என்று வாக்குவாதம் செய்தனர். மேலும், வாக்கு பதிவு இயந்திரன்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தேனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதற்கு கோவை வருவாய் அலுவலர் சௌந்தர்ராஜன் இந்த வாக்கு இயந்திரங்கள் எதிலும் வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை; இவை வெற்று இயந்திரங்களே! என்று தெளிவுபடுத்தினர்.

ஆனாலும், எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இவற்றில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறி தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி யிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தலில் பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் அங்கே கொண்டு வரப் பட்டுள்ளன. அவை அலுவலகத்தில் வைக்கப் படும். இது எப்போதும் நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான் என்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories