தேனிக்கு வாக்கு இயந்திரப் பெட்டிகள் மாற்றம்..! தேர்தல் ஆணையர் விளக்கம்!

election commissioner satyaprada sahu - 2026

கோவை, மதுரையில் இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனிக்கு மாற்றப் பட்டதாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில், தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மேலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.

இந்நிலையில் தேனி வட்டாட்சியர் அலுலகத்தில் 50 வாக்கு இயந்திரங்கள் வந்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்ததை அடுத்து, திமுக, காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள், உடனே தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு விரைந்தனர்.

கோவை, மதுரையில் வாக்குப் பதிவு செய்யப்பட்ட வாக்கு இயந்திரங்கள்தான் இங்கே கொண்டு வரப் பட்டுள்ளன. இங்கே வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை. இந்நிலையில் எப்படி வாக்குப் பதிவு இயந்திரங்களை இங்கே கொண்டு வரலாம் என்று வாக்குவாதம் செய்தனர். மேலும், வாக்கு பதிவு இயந்திரன்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தேனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதற்கு கோவை வருவாய் அலுவலர் சௌந்தர்ராஜன் இந்த வாக்கு இயந்திரங்கள் எதிலும் வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை; இவை வெற்று இயந்திரங்களே! என்று தெளிவுபடுத்தினர்.

ஆனாலும், எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இவற்றில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறி தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி யிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தலில் பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் அங்கே கொண்டு வரப் பட்டுள்ளன. அவை அலுவலகத்தில் வைக்கப் படும். இது எப்போதும் நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான் என்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories