spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்கணவன் மனைவி தகராறு்; புதுப்பெண் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!

கணவன் மனைவி தகராறு்; புதுப்பெண் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!

sangeetha photo

திருமணமாகி ஓராண்டுகளே ஆன நிலையில், இளம்பெண் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெள்ளக்கல் ஆலமரத்து வட்டம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி சங்கீதா.

இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டுகளே ஆன நிலையில், வீரபுத்திரன் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார்

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகாரறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த சில மாதங்களாக வீரபத்திரன் மது அருந்தி வீட்டுக்கு வந்து மனைவி சங்கீதாவிடம், அடிக்கடி உன் தாய் வீட்டிற்கு சென்று நகை, பணம், மற்றும் டூவிலர் வாங்கி வருமாறு அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று முன்தினம் வீரபத்திரன் குடித்துவிட்டு வந்து சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே நேற்று வீட்டின் அருகே உள்ள வீரபத்திரனுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சங்கீதா சடலமாக கிடந்தார்.

இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் சங்கீதா எழுதி வைத்த கடிதம்

sangeetha letter

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து கணவர் வீரப்பத்திரன் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது சங்கீதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சங்கீதாவின் தந்தை சொக்கன் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பெயரில் சங்கீதாவின் கணவர் வீரபத்திரனை கைது செய்து, சங்கீதா கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என இரு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் சங்கீதா எழுதி வைத்த கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

திருமணமாகி ஓராண்டுகளே ஆன நிலையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடுமையான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe