December 12, 2025, 11:13 AM
25.3 C
Chennai

கள்ளக்காதலுக்காக பெற்ற மகனை கொலை செய்த தாய்…!

murder - 2025

அம்பத்தூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது மகன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாய், அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அய்யப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி புவனேஸ்வரி. தம்பதியினர் இவர்களுக்கு கிஷோர் (3)வயது என்ற மகன் உள்ளான்.

கார்த்திகேயன் மனைவி புவனேஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரத்துக்கும் என்பவருக்கும் தகாத உறவு இந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்த கணவா் கார்த்திகேயன் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.

இந்நிலையில் கணவன் கார்த்திக்கேயனை விட்டு பிரிந்த புவனேஸ்வரி, தனது மகன் கிஷோர் மற்றும் கள்ளக்காதலன் சோமசுந்தரத்துடன் அம்பத்தூர் மேனாம்பேடு வ.உ.சி நகரில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினர்.

நேற்று முன்தினம் சிறுவன் கிஷோர் வீட்டு மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததில் அடிபட்டு இறந்துவிட்டதாக பெருந்துறையில் உள்ள மாமியாருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் மகன் கிஷோர் உடலை இறுதிச்சடங்குகள் செய்வதற்காக பட்டுக்கோட்டையில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு புவனேஸ்வரி கொண்டு சென்றார். சந்தேகம் அடைந்த அவரது அக்காள் இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை நடத்தியபோது சிறுவன் கிஷோர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அவனது தலையில் காயம் இருந்தது.

இதுகுறுத்து பட்டுக்கோட்டை போலீசார் அம்பத்தூர் உதவி கமி‌ஷனர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் பட்டுக்கோட்டை சென்று சிறுவன் கிஷோரின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சென்னை கொண்டு வந்தனர். தற்போது கிஷோர் உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் தலையில் காயம் இருப்பதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதுதொடர்பாக புவனேஸ்வரி, அவரது கள்ளக்காதலன் சோமசுந்தரம் ஆகியோரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக புவனேஸ்வரின் மாமியார் சுதா அம்பத்தூர் போலீசில் புகார் மனு அளித்தார். அதில் பேரன் கிஷோர் சாவில் மர்மம் உள்ளது. அவனை புவனேஸ்வரியும் அவளது காதலன் சோமசுந்தரமும் தாக்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

புவனேஸ்வரியும், சோமசுந்தரமும் கடந்த 4 மாதத்துக்கு முன்புதான் மேனாம்பேடு பகுதிக்கு குடிவந்துள்ளனர். அப்போது முதலே சிறுவன் கிஷோரை சோமசுந்தரம் அடிக்கடி தாக்கியுள்ளார். இதனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கவனித்துள்ளனர்.

எனவே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்டு இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

Topics

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

தென்காசி டூ காசி… அகத்திய முனிவரின் 9 நாள் வாகனப் பயணம்!

அகத்திய முனிவரின் வாகனப் பயணம் 9 நாள் யாத்திரையை வெற்றிகரமாக முடித்து காசியை அடைந்தது.

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Entertainment News

Popular Categories