கார்ல் மார்க்ஸ் குறித்த ஆளுநர் கருத்து; கம்யூனிஸ்ட்களுக்கு ஆதாரத்தைக் கொடுத்த ஹெச். ராஜா!

raja hariharan bjp - 2026

காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் கதறியுள்ளனர். இந்த, நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச். ராஜா அதற்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அரசு நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது இந்திய நாட்டின் பெருமைகள் குறித்து பேசுவார். இவரது, கருத்துக்கள் இன்றைய இளைஞர்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளன. எனினும், இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல், தி.க., தி.மு.க., வி.சி.க., உள்ளிட்ட இடது சாரிகள் ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். 

இப்படிப்பட்ட சூழலில், சென்னை கவர்னர் மாளிகையில், பேராசியர் தர்மலிங்கம் மொழி பெயர்ப்பு செய்த நூல்களின் வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய கவர்னர், “சனாதன தர்மம் என்பது விரிவானது. அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்தையும் உள்ளடக்கிய ‘தர்மம்’ என்று அழைக்கப்படும் பிரபஞ்ச சட்டத்தால் அனைவரும் கட்டுப்படுத்தப் படுகிறார்கள் என்பதாகும். இது சமஸ்கிருதத்தில் மட்டுமல்ல, நமது பண்டைய தமிழ்ப் பாடலான கணியன் பூங்குன்றனாரின் புறநானூறில்கூட ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகளில் காணப்படுகிறது. 

‘தர்மம்’ என்ற சொல்லை ‘மதம்’ என்பதன் ஆங்கில பொருளாக தவறாகப் புரிந்துகொண்டு, தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் மாபெரும் தவற்றைச் செய்து விட்டோம். நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பிரபஞ்சத்தின் நித்திய சட்டம், தர்மமாகும். பிரிட்டிஷ் ஆட்சி, பாரதத்தின் சமூகம், கலாசாரம் மற்றும் நாகரிகத்திற்க்கு அழிவை ஏற்படுத்தியது. 

நமது தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது வெளிநாட்டு இறையியல் கோட்பாடு, டார்வீனிய கோட்பாடு, காரல் மார்க்ஸ் கோட்பாடு, ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகிய 4 முக்கிய மேற்கத்திய சித்தாந்தங்கள்தான். இதனால்தான், கடந்த 7 தலைமுறைகளை கடந்து வறுமை, பசி, ஆரோக்கியமின்மை, கல்வியின்மை ஆகியவற்றை ஒழிக்க முடியாமல் இருக்கிறோம். 

கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என்றே கட்டுரையை எழுதி இருக்கிறார். கார்ல் மார்க்ஸின் சிந்தனைதான் இந்தியாவை சிதைத்தது. தற்போது அவரது தத்துவம் புறந்தள்ளப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் பல படித்தவர்கள், எதற்கெடுத்தாலும் மேற்கத்திய சிந்தனைவாதிகள், தத்துவவாதிகள் போன்றோரை மேற்கோள்காட்டியே பேசுகிறார்கள். காரணம், மேற்கோள்காட்ட இந்த நாட்டிலிருந்து ஒருவர்கூட இல்லை எனக் கருதுகிறார்கள். 

மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்துவது என்ற ஜனநாயகம் பற்றி பேசும்போது, ஆபிரகாம் லிங்கனை மேற்கோள் காட்டுவார்கள். ஆனால், அதே நபர்தான் பெண்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. கருப்பர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை; வேறு வழி இல்லாமல்தான் அவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தார். அதை மறந்துவிடுகிறார்கள். ஆனால், அடிமை முறையை ஒழித்ததற்காக லிங்கனை புகழ்கிறார்கள். இதெல்லாம் பதிவுசெய்யப்பட்ட வரலாறு. இது நம் மனதில் ஆழமாக வேரூன்றிய காலனித்துவ சிந்தனையேயன்றி வேறில்லை என கூறியிருந்தார். 

ஆளுநரின் இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், தி.மு.க., வி.சி.க., மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்கள் கதறி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஹெச்.ராஜா. இவர், பிரபல எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய பஞ்சம், படுகொலை, பேரழிவு என்ற புத்தகத்தின் 195-ம் பக்கத்தை மேற்கோள் காட்டி இருக்கிறார். 

அதாவது, இந்த, புத்தகம் முழுவதும் கம்யூனிசம் பற்றிய பயங்கர உண்மைகள் பல உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories