Home Blog Page 147

இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது டெஸ்ட், மும்பை, 02.11.2024, இரண்டாவது நாள்

ind vs nz test series - 2026
#image_title

இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது டெஸ்ட், மும்பை, 02.11.2024, இரண்டாவது நாள்

முனைவர்கு.வை.பாலசுப்பிரமனியன்

நியூசிலாந்து(முதல் இன்னிங்க்ஸ் 65.4 ஓவர்களில் 235, டேரில் மிட்சல் 82, வில் யங் 71, டாம் லேதம்28, கிளன் பிலிப்ஸ் 17, ஜதேஜா 5/65, வாஷிங்க்டன் சுந்தர் 4/81; இரண்டாவது இன்னிங்க்ஸ்43.3 ஓவர்களில் 171/9, வில் யங் 51, கிளன் பிலிப்ஸ் 26, தேவன் கான்வே 22, ஜதேஜா4/52, அஷ்வின் 3/63) இந்திய அணி (முதல் இன்னிங்க்ஸ் 59.4 ஓவர்களில் 86/4, ஷுப்மன் கில்90, ரிஷப் பந்த் 60, வாஷிங்க்டன் சுந்தர் 38, ஜெய்ஸ்வால் 30, ரோஹித் ஷர்மா 18, அஜாஸ்படேல் 5/103) நியூசிலாந்து அணி 143 ரன் கள் முன்னிலையில் இருக்கிறது.

          இரண்டாம் நாளான இன்று, நாலு விக்கட் இழப்பிற்கு86 ரன் என்ற நிலையில் ஷுப்மன் கில் 31 ரன்னோடும் ரிஷப் பந்த் ஒரு ரன்னோடும்ஆடவந்தனர். முதல் ஓவரிலேயே பந்த் மூன்று ஃபோர் அடித்து அவரது மனநிலையைக் காட்டினார்.சுழல் பந்து வீச்சாளர்களை அடித்து ஆடியும், வேகப்பட்ந்து வீச்சாளர்களைத் தடுத்து ஆடியும்கில்லும் பந்தும் ரன் சேர்த்தனர். பந்த் 60 ரன் சேர்த்திருந்த நிலையில் இஷ் சோதியின்சுழல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

          ஸ்பைடர் கேமிராவில் ஏதோ பிரச்சனை ஏர்பட்டதால்ஆட்டம் உணவு இடைவேளைக்காக சற்று முன்னதாக நிறுத்தப்பட்டது. அச்சமயம் ஜதேஜா 10 ரன்னுடனும்கில் 70 ரன்னுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். இந்திய அணி 5 விக்கட் இழப்பிற்கு 195 ரன்எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்குப் பின்னர் ஜதேஜா 14 ரன்னிற்கு ஆட்டமிழந்தார்.சர்ஃப்ராஸ் கான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இந்திய அணி வீரர்கள்எவரும் சரியாக ஆடவில்லை. வாஷிங்க்டன் சுந்தர் மட்டும் 4 ஃபோர், 2 சிஸ்க்சர்களுடன்38 ரன் எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை 263 ரன்னுக்குக் கொண்டுவந்தார். இந்திய 28 ரன்முன்னிலையில் இருந்தது.

          நியூசிலாந்தின் இரண்டாவ்து இன்னிங்க்சில்டாம் லேதம் 1 ரன்னுக்கு ஆகாஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வாஷிங்க்டன்சுந்தர் 1 விக்கட், அஷ்வின் 3 விக்கட்டுகள், ஜதேஜா 4 விக்கட்டுகள்என எடுத்து ஆட்டநேர இறுதியில் நியூசிலாந்து அணி 9 விக்கட்டு இழப்பிற்கு 171 ரன் எடுத்திருந்தது.

          நியூசிலாந்து அணி 143 ரன்கள் முன்னிலையில்உள்ளது. இன்னமும் ஒரு விக்கட் கையில் உள்ளது. இன்னமும் மூன்று நாட்கள் ஆட்டம் உள்ளது.அதிக பட்சம் 160 ரன் இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்படலாம். இந்திய அணியின் மட்டையாளர்கள்அதனை எடுப்பார்களா? வெற்றியா? தோல்வியா? நாளை வரை காத்திருங்கள்.

 

மதுரை மாவட்ட கோவில்களில் கந்த சஷ்டி விழா!

chozhavanthan temple kandha sasthi - 2026
#image_title

மதுரை மாவட்டத்தில், உள்ள கோயில்களில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுடன் தொடங்கியது.

மதுரை அருகே திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், மதுரை திண்டுக்கல் ரோடு பால தண்டாயுபாணி திருக்கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், மதுரை நகரில் அண்ணா நகர் தாசில்தார் நகர், சௌபாக்கிய விநாயகர் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், வரசித்து விநாயகர் ஆலயம், மதுரை கோமதிபுரம், ஜூப்பிலி டவுன், ஞான சித்தி விநாயகர் ஆலயம், அருள்மிகு சர்வேஸ்வர விழா ஆலயம், வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயம், சோழவந்தான் விசாக நட்சத்திரம் நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயம், தென்கரை அகிலாண்டேஸ்வரி மூலநாதர் சுவாமி ஆலயம் உட்பட கோயில்களில் கந்த சஷ்டி முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள முருகனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷே அத்தனை வழிபாடுகள் நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி விரதத்தை தொடங்கினர். மதுரை அண்ணா நகர் சௌபாக்கியம் ஆலயத்தில், கந்த சஷ்டியை முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள பாலமுருகனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. இதை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப் பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக மகளிர் பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.

பொதுவெளியில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டிய கடை உரிமையாளர்களுக்கு அபராதம்!

thenkarai commissioner inspection - 2026
#image_title

மதுரை மாநகராட்சி வைகை தென்கரை சாலை பகுதியில், இறைச்சி கொட்டியதாக புகார் வந்ததன் அடிப்படையில், ஆணையாளர் ச.தினேஷ்குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேலும், கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி வைகை தென்கரை சாலை பகுதியில் வைகை
ஆற்று கரைப்பகுதியில், இறைச்சி கழிவுகளை கொட்டியதாக புகார் வந்ததன் அடிப்படையில், ஆணையாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டு
மாநகராட்சி பணியாளர்களை கொண்டு கழிவுகள் அகற்றப்பட்டு அப்பகுதியில் தூய்மைப் படுத்தப்பட்டு பீளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.

மேலும், பொதுவெளியில் கொட்டிய 5 கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.50000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது போன்று சாலைகள், பொது இடங்கள், வைகை ஆறு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி கழிவுகள் கொட்டுவது கண்டறியப்பட்டால் மாநகராட்சியின் மூலம் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து, மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு எண்.16 பீ.பீ.குளம் நேரு தெருவில் சாலைகளில் தேங்கியிருந்த மழைநீரினை அகற்றும் பணிகள், பீ.பீ.குளம் வாய்க்கால் செல்லக்கூடிய பகுதிகளான நரிமேடு கேந்திரியா வித்யாலயா பள்ளி பின்புறம் சொக்கி குளம் அண்ணாநகர் பகுதி, டாக்டர் தங்கராஜ் சாலை உலக தமிழ்ச்சங்கம் அருகில், கே.கே.நகர் மெயின் ரோடு வக்பு வாரிய கல்லுரி வளாகம், ராமமூர்த்தி தெரு மற்றும் கோகலே ரோடு 1வது தெரு சந்திப்பு (விஷால் டி மகால் பின்புறம்) ஆகிய பகுதிகளில் ஆணையாளர் , நேரில் பார்வையிட்டு வாய்கால்களில் மண் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மேலமடை ஆவின் சந்திப்பு அருகில் செல்லும் மானகிரி வாய்க்காலில் மழைநீர் செல்வது குறித்தும், செல்லூர் கண்மாயில் நீர்வரத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக்,
செயற் பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய
சேவியர், காமராஜ், உதவிப் பொறியாளர்கள் சோலைமலை, அமர்தீப், கருப்பையா, சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், சுகாதார
ஆய்வாளர் அலாவுதீன், பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா!

solaimalai murugan temple kantha sasthti - 2026
#image_title

அலங்காநல்லூர்: பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவில்அழகர் மலை உச்சியில் உள்ளது இங்கு ஆண்டுதோறும் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்

அதன்படி நேற்று காலையில் இக் கோவிலில்பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர் இதில் முன்னதாக சுவாமிக்கு சண்முகா அர்ச்சனையும் யாகசாலை பூஜைகளும் மகா அபிஷேகம் நடைபெற்றது

தொடர்ந்து அன்ன வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க தீவட்டி பரிகாரம்களுடன்சுவாமி புறப்பாடல் நடைபெற்றது மாலையிலும் சண்முகா அர்ச்சனை நடைபெற்றது

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சஷ்டி மண்டபத்தில் அமர்ந்து காப்பு கட்டி விரதங்களை தொடங்கினர் ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம் இணை ஆணையாளர் செல்லத்துரை மற்றும் அறங்காவலர்கள் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதில் , வருகிற ஏழாம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நடைபெறுகிறது 8 ந் தேதி திருக்கல்யாணம் மற்றும் பல்லாக்க வாகனமும் ஊஞ்சல் சேவையும் மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறும். இத்துடன் 7 நாள் நடைபெறும் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.

Ind Vs NZ Test: மூன்றாவது டெஸ்ட்டிலும் தொடரும் அதே பாணி!

ind vs nz test series - 2026
#image_title

இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது டெஸ்ட், மும்பை, 01.11.2024, முதல் நாள்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமனியன்

நியூசிலாந்து(முதல் இன்னிங்க்ஸ் 235, டேரில் மிட்சல் 82, வில் யங் 71, டாம் லேதம் 28, கிளன் பிலிப்ஸ்17, ஜதேஜா 5/65, வாஷிங்க்டன் சுந்தர் 4/81) இந்திய அணி (முதல் இன்னிங்க்ஸ் 86/4, ஷுப்மன்கில் ஆட்டமிழக்காமல் 31, ஜெய்ஸ்வால் 30, ரோஹித் ஷர்மா 18, அஜாஸ் படேல் 2/33)

          இந்தியா வந்துள்ள நியூசிலாந்துஅணியிடம் இந்திய அணி ஏற்கனவே தாங்கள் ஆடிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டியையும் பரிதாபமாக பறிகொடுத்த. நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது.

          டாஸ் வென்ற நியூசிலாந்துமுதலில் பேட் செய்ததுடன், வாஷிங்டன்சுந்தர், ஜதேஜா சுழலில் சிக்கி 235 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கிய இந்திய பேட்ஸ்மேவன்கள் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் போல சொதப்பாமல் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

          கேப்டன் ரோகித் சர்மாபவுண்டரிகளாக விளாசினாலும் 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால்30 ரன்களில் அவுட்டானார்.

          ஆட்டம் முடிய இரண்டு ஓவர்கள் மட்டுமே இருந்த காரணத்தால் முகமது சிராஜ் நைட் வாட்ச்மேனாக களமிறக்கப்பட்டார்.ஆனால், அவர் முதல் பந்திலேஅஜாஸ் படேல் சுழலில் சிக்கி எல்.பி.டபுள்யூஆனார். 

          இதையடுத்து, விராட் கோலி களமிறங்கினார். பவுண்டரிஅடித்து தன்னை நிலைநிறுத்த கோலி முயற்சித்த நிலையில்இன்றைய நாளின் கடைசி ஓவரில் ஒரு ரன் எடுக்கமுயற்சித்து ஆட்டம் முடிய 3 பந்துகள் இருந்த நிலையில் 4 ரன்னில் ரன் அவுட்டானார் விராட்கோலி. 

          இதனால், இந்திய ரசிகர்கள்பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆட்ட நேர முடிவில்இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. 

          நியூசிலாந்து அணியை காட்டிலும் இந்திய அணி 149 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணியின் கைவசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் களத்தில்சுப்மன் கில்லும், ரிஷப்பண்டும் உள்ளனர்.

          இந்தியாவின் சுழல் எடுபட்டது போல நியூசிலாந்து அணியிலும்அஜாஸ் படேல், ப்லிப்ஸ், ரவீந்திரா, இஷ் சோதி சுழலில் மிரட்ட காத்துள்ளனர். இதனால், இந்திய பேட்டிங் இவர்களை சமாளித்து இமாலய ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

          இந்த போட்டியிலும் இந்தியஅணி தோல்வியை தழுவினால் இந்த நூற்றாண்டில் முதல்முறையாகதொடரை முழுமையாக சொந்த மண்ணில் பறிகொடுத்த மோசமான சாதனையை இந்திய அணி படைக்கும்.

          முதல் நாளிலே 14 விக்கெட்டுகள்காலியாகியிருப்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் கில், ரிஷப், சர்பராஸ் கான் சிறப்பான ஆட்டத்தைகாட்டுவார்களா? ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, அஸ்வின் பேட்டிங்கில் கைகொடுப்பார்களா? என்பதையும் பொறுத்திருந்து நாளை பார்க்கலாம்.

சபரிமலை நடை அடைப்பு; மீண்டும் நவ. 15ல் மண்டல பூஜைக்காக திறப்பு!

sabarimala nada opened - 2026
#image_title

சபரிமலை ஐயப்பன் கோவில் ஸ்ரீ சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை புதன்கிழமை மாலை திறக்கப்பட்டு இன்று நாள் முழுவதும் பூஜைகள் நடைபெறுகின்றன.

சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் இன்று இரவு 10 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மண்டல பூஜை வழிபாட்டிற்காக நவ 15ல் நடை திறக்கப்பட உள்ளது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான பாலராம வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுவதால், நேற்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டது.

இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று பூஜைகள் எதுவும் நடைபெறாத நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

காலை 10 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெற்றது இன்று இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது‌. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக வந்திருந்தனர்.

மீண்டும் மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்

ஐந்து நாள் கொண்டாடப்படும் அட்டகாசமான தீபாவளி!

diwali in ayodhya - 2026
#image_title

“தீபாவளி ஆசீர்வாதங்கள் “

  • குருஜி கோபாலவல்லிதாசர்

தீப ஆவளி. தீபங்களின் வரிசை. பகவான் ஜோதி ஸ்வரூபமாக இருக்கிறான். தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து பகவானை வசீகரிப்பது தான் இந்தக் கொண்டாட்டம்.

தீபாவளி – ஐந்து நாட்களாகக் கொண்டாடுவது வழக்கம்.

முதல் நாள்: தனத் திரயோதசி. தன்வந்திரி திரயோதசி. ஆரோக்கியத்துக்காக. எது தனம்? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் (தனம்). எனவே, இந்த தீபாவளியிலிருந்து, ஏதேனும் ஒரு உடற்பயிற்சி ஆரம்பிக்க சங்கல்பம் செய்யவும். தன்வந்திரி பகவான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்ல ஆரொக்கியத்தைத் தரட்டும். தன்வந்திரி பகவான் தான் அமிர்த கலசத்தை எடுத்து வந்த பகவான் விஷ்ணுவின் அவதாரம். அந்தக் காலத்தில் இந்த தன்வந்திரி திரயோதசி அன்று தான் லேகியம் செய்து பூஜை செய்து அதை ஏற்றுக் கொள்வது வழக்கம். தன்தேரஸ்!

இரண்டாம் நாள்: நரக சதுர்தசி. பகவான் கிருஷ்ணன் சத்தியபாமா தேவியோடு சென்று நரகனை வதம் செய்து 16 ஆயிரத்து நூறு கன்னிகைகளை விடுவித்த நாள் நரக சதுர்தசி. பெண்களுக்கு விடுதலை கொடுக்கும் நாள் தீபாவளி. வடக்கே இதை சோட்டி தீபாவளி என்பார்கள்.

மூன்றாம் நாள்: அமாவாசை. பகவான் ஶ்ரீராமச்சந்திர மூர்த்தி 14 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடைய வனவாசம் முடித்து அயோத்தி வந்த நாள். கேதார்நாத் பகவானை கௌரி அடைந்த நாள் – கௌரி அர்தாங்கினியாக சிவபெருமானின் பாதி உடலை தன்னுடைய பாகமாக வாங்கி உமையொருபாகனாகிய நாள். லக்ஷ்மி அனுக்கிரகிக்கும் நாள்.

நான்காம் நாள்: பலி பத்யாமி. மஹாபலிச் சக்ரவர்த்தி பாதாள லோகத்திலிருந்து வரக்கூடிய நாள். இதே நாள் தான் இந்திரனின் கர்வத்தை அடக்க கிருஷ்ணர் இந்திர பூஜையைக் கெடுத்த்து கோவர்தன பூஜை செய்த நாள்.

ஐந்தாம் நாள்: பாய் தூஜ் என்கிற யம த்விதியை. யம ராஜன் – யமுனா சகோதர சகோதரிகள். இன்று யாரெல்லாம் யமுனா தேவியை ஸ்மரிக்கிறார்களோ, யாரெல்லாம் யமுனைத்துறைவனான கண்ணனை ஸ்மரிக்கிறார்களோ அவர்களுக்கு யம ராஜனாலும், யமுனா தேவியின் இன்னொரு சகோதரனான சனைஷ்ச்சரனாலும் (சனீஸ்வரன்) எந்த விதமான கஷ்டங்களும் வராது.

தீபாவளியை ஆனந்தத்தோடு கொண்டாடி மகிழுங்கள். தீபாவளி ஆசீர்வாதங்கள். மூன்று வாரங்கள் இமய மலையிருந்து அக்டோபர் 27 தான் கீழே வந்தேன். இமய மலையில் எனக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைத்ததோ, என்ன அனுக்கிரஹங்கள் கிடைத்ததோ, அவை எல்லாம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவருக்கும் பகவான் சாட்சியாகக் கொடுக்கிறேன். எல்லோரும் சந்தோஷமாக இருங்கள். ராதே கிருஷ்ணா

– Gurujee Gopalavallidasar

மகாகவி பாரதியார் தீபாவளி பற்றி எழுதிய கட்டுரை

2023 11 23 3 - 2026
#image_title

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், ஆசிரியர் கலைமகள்


வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

கலைமகள் இதழ் தமிழகத்தின் சரித்திரங்களை நமக்கு அவ்வப்பொழுது எடுத்து இயம்பும் இலக்கியத் திங்கள் இதழ். எத்தனையோ மகான்கள், தமிழ் இலக்கிய ஆளுமைகள் கலைமகளில் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாரதியார் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக வெளிவந்த கட்டுரையை ‘கலைமகள்’ பத்திரிகையில் தீபாவளி சிறப்பிதழில் 1941-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மறு பிரசுரம் செய்திருந்தோம்.

பாரதியாரின் படைப்புக்கள் வெளியானால் அந்தப் பத்திரிகையைப் பற்றி பிரிட்டிஷ் காரர்கள் அதிகமாக நோட்டமிடுவார்கள். சில கஷ்டங்களுக்கும் கூட அந்த பத்திரிகைகள் உள்ளாவது உண்டு! தேசத்தின் மீதும் தெய்வீகத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட கலைமகள் மாத இதழ் சுதந்திரப் போராட்ட காலத்தில் பல சுதந்திர தியாகிகளின் எழுத்துக்களைப் பிரசுரம் செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பாரதியார் எழுதி கலைமகளில் மறு பிரசுரம் கண்ட கட்டுரையை அப்படியே கீழே தந்துள்ளேன்……………. ‘

பாரத் மாதா கி ஜெய்’

பாரதியின் கட்டுரை

“நம் நேயர்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம்.சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவர்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம்தற்காலத்திலே இந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்று போய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை.

நமது நாட்டைப் பற்றிய நரகாசுரன் இறந்துபோய்விட்டான். பகவானுடைய சக்தியும் எல்லா ஐசுவரியங்களுக்கும் ஆதாரமும் ஆகிய லட்சுமிதேவி நம்மீது கருணை கொண்டவளாகி நரகாசுரனை வதைத்துவிட்டாள்.

நாமெல்லோரும் அது பற்றிச் சந்தோஷமடைந்து மங்கள ஸ்நானம் செய்து, நல்லாடைகள் புனைந்து ஆனந்தவசமாகி இருக்கின்றோம். ஆனால் சிறுகுழந்தைகளைப் போல் விளையாட்டுக்கு ஸ்நானம் செய்தும், தீபங்கள் கொளுத்தியும் சும்மா இருந்துவிடாமல் நாம் செய்யும் செய்கையினது பொருளை நன்றாக அறிந்து காரியங்கள் செய்ய வேண்டும்.எத்தனை தரம் கொன்றபோதிலும் மறுபடியும் மறுபடியும் உயிர் தளிர்ப்பது ராட்சதர்களுடைய சுபாவம். அவர்களுடைய மர்ம ஸ்தலத்தை அழித்த பிறகுதான் மடிவார்கள்.

அதுபோலவே லட்சுமிதேவி நரகாசுரனை வதைத்தவுடனேயே நாம் அவனுடைய மர்ம ஸ்தலத்தை அழித்து விடாமையால் அவன் மறுபடியும் தளிர்க்கத் தொடங்குகிறான். ஆதலால் நாம் இனியேனும் நரகாசுரனுடைய மர்ம ஸ்தலத்தை நன்றாக அறிந்து அதைத் தாக்காமல் இருப்போமானால் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.

தீபாவளி தினத்திலேகூட அந்நிய தேசத் துணிகள் வாங்கும் ஈசுவரத் துரோகிகள் நமது நாட்டிலே இருப்பார்களானால் நரகாசுரன் எவ்வாறு ஒழிவான்? லட்சுமிதேவி எப்படி ஜயமடைவாள்?

பாரத புத்திரர்களே! ராட்சதர், அசுரர், பிசாசர் முதலான துர்க்குணங்களுடைய ஜன்ம விரோதிகளே! உங்களுடைய உண்மையான சுபாவத்தை அறிந்து கொள்ளுங்கள்.மஹா வீரத்தன்மை பெற்று அஷ்ட லட்சுமிகளுக்கும் இருப்பிடமாகி விளங்குதற்குரிய வழிகளைத் தேடுங்கள். உங்களுக்கெல்லாம் பரிபூர்ணமான மேன்மையும் சர்வாபீஷ்டங்களும் சித்தியடைவதாக.

ஓம் தத் ஸத். வந்தேமாதரம்.”

“எப்போதும் இந்தியனாக இருப்போம்! இந்தியப் பொருட்களை மட்டுமே வாங்கி தேசத்திற்கு வளம் சேர்ப்போம்!! பாரதியின் கட்டுரை சொல்லாமல் சொல்லும் விஷயம் இது”

ஜயந்தி விழா: மதுரை பகுதியில் தேவர் சிலைக்கு மரியாதை!

devar jayanthi in madurai - 2026
#image_title

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜயந்தி மற்றும் 62வது குருபூஜை முன்னிட்டு இன்று அவருக்கு மரியாதை செய்யும் வகையில், அவரது சிலைக்கு மாலையிட்டு மரியாதைகளைச் செய்தனர். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது பாண்டியர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை மரியாதை செய்வதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் இன்று குவிந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7 மணி அளவில் கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மருது சகோதரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவில் அரசின் சார்பில் கலந்து கொண்டு அவரது நினைவாலயத்தில் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு,பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ராஜ கண்ணப்பன், டி.ஆர்.பி.ராஜா, மகேஷ் அன்பில் பொய்யாமொழி, கீதா ஜீவன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

உசிலம்பட்டியில், தேவர் சிலைக்கு மரியாதை!

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி பசும்பொன் முத்து
ராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத் தேவர் சிலைகளுக்கு தேமுதிக சார்பில், மதுரை தெற்கு மாவட்ட தொகுதி பொறுப்பாளரும் வழக்கறிஞருமான ரவிச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், உசிலம்பட்டி நகர செயலாளர் அசோகன் ,உசிலை ஒன்றிய செயலாளர் ஒய். எஸ் .டி. சமுத்திரபாண்டி, சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், ஏழுமலை பேரூராட்சி செயலாளர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் கருமாத்தூர் பாண்டி, மாவட்ட விவசாய அணி செயலாளர் எம். எஸ். பாண்டியராஜன், வாசக ராஜா, அழகு ராஜா, காசிமாயன், மகளிர் அணி பாண்டியம்மாள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து  கொண்டனர்.

உசிலம்பட்டியில், தேவர் சிலைக்கு பாலாபிஷேகம்!

உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜையை முன்னிட்டு – பார்வட் ப்ளாக் கட்சி சார்பில் 117 முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது குருபூஜை விழா நாடு முழுவதும் குறிப்பாக தென்மாவட்டங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் மையப் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு இன்று திமுக சார்பில் நகர, ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தேமுதிக, பாரதிய பார்வட் ப்ளாக், தென்னிந்திய பார்வட் ப்ளாக், தமிழ் தேசிய பார்வட் ப்ளாக் கட்சியினர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி நகர் மன்றத் தலைவர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், பல்வேறு அமைப்பினர், கிராம பொதுமக்கள் ஊர்வலமாக வந்து தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, அகில இந்திய பார்வட் ப்ளாக் சார்பில் அதன் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கதிரவன் தலைமையில் 117 வது தேவர் குரு பூஜையை முன்னிட்டு 117 முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்த பெண்கள் தேவர் சிலைகளுக்கு பால்அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தேவர் ஜயந்தி விழா: முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பாஜக சார்பில் மரியாதை!

devar jayanthi in pasumpon bjp - 2026
#image_title

ராமநாதபுரம் மாவட்டம்,பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இன்று (அக்டோபர் 30) பாஜக சார்பில் ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச். ராஜா, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில துணைத்தலைவரும் சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, மாநில பொதுச்செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான பேராசிரியர் ராம.ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

முன்ன தாக மதுரை கோ ரிப்பாளையத்தில் அமைந்துள்ள தெய்வத்திருமகன் தேவர் பெ ருமகனாரின் திருவுருவச் சிலைக்கு பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். முத்துராமலிங்க தேவரின்117வது பிறந்த தினமும், 62வது குருபூஜை விழாவும் இன்று கடைப்பிடிக்கப் படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் பாஜக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

இது குறித்து ஹெச். ராஜா தமது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது…

ஆர்எஸ்எஸ் பேரியக்கத்தின் இரண்டாவது தலைவரான பரமபூஜனீய ஸ்ரீகுருஜி கோல்வால்கர் அவர்கள் மீதும், இந்துத்வாவின் பிதாமகன் வீரசாவர்க்கர் அவர்கள் மீதும், மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் மீதும் பேரன்பும், பெருமதிப்பும் கொண்ட …

தேசியமும் தெய்வீமும் எனது இரு கண்கள் எனக்கூறி தமிழகத்தில் தேசியம் வளர்க்க! தெய்வீகம் காக்க! தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த விடுதலை போராட்ட வீரர் தெய்வத் திருமகன் தேவர் பெருமகனாரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது அவதாரத் தலமான பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்திற்கு சென்று அவரது திருவுருவ சிலைக்கு BJP Tamilnadu சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. Dr.L.Murugan தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் திரு. Nainar Nagenthran MLA, மாநில பொதுச் செயலாளர், திரு. Karuppu Muruganandham , மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு.கதலி நரசிங்க பெருமாள், இராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி திரு.முருகேசன், மாவட்ட பொதுச் செயலாளர் திரு.ஆத்மா கார்த்திக், சகோதரி திருமதி.கோமதி நாச்சியார் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நான் கடந்த 30 வருடங்களாக புண்ணிய பூமி பசும்பொன் கிராமத்திற்கு தேவர் பூஜைக்கு சென்று வழிபாடு செய்து வருகிறேன்.

தெய்வத் திருமகன் தேவர் பெருமகனாரின் ஜெயந்தி தினத்தில் அவரது தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குகிறேன்.

இந்திய தேசிய இராணுவத்தை கட்டமைத்த மாவீரன் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் நண்பரும் விடுதலை போராட்ட வீரருமான தெய்வத் திருமகன் தேவர் பெருமகனாரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு BJP Tamilnadu சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு.Dr.L.Murugan

தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் திரு. Nainar Nagenthran MLA, மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு.Raama Sreenivasan, மாநில பொதுச் செயலாளர், திரு.Karuppu Muruganandham , மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு.கதலி நரசிங்க பெருமாள் மதுரை மாவட்ட தலைவர் திரு.மகா.சுசீந்திரன், மீனவர் பிரிவு மாநில செயலாளர் திரு.சிவ.பிரபாகரன் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.