Home Blog Page 176

ஆபத்து: ஆன்மிகத் தலம் சுற்றுலா தலமானால்…? 

courtallam temple water pots - 2026
#image_title

இப்போதெல்லாம் ஒரு வித்தியாசமான சூழ்நிலையை, நம் கோயில்கள், ஆன்மீகத் தலங்களில் பார்க்கிறோம். பாரம்பரியமான கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவது,  குலதெய்வக் கோயில்களுக்குச்  சென்று வழிபடுவது, ஆலயங்களின் தேர்த் திருவிழா போன்ற திருவிழாக்களில் பங்கேற்பது என்பதெல்லாம் காலம் காலமாக நம்மிடம் இருந்து வரும் நல்ல பழக்கம் தான்.  ஆனால் இப்போது புதிதாக முளைத்துவிட்ட ஜோதிடர்களாலும்,  யுடியூப் போன்ற சமூகத்தளங்களின் கைங்கரியத்தாலும் கணக்கற்ற மக்கள், எவர் சொல்வதை எல்லாமோ கேட்டு,  கண்களை மூடிக்கொண்டு அப்படியே நம்பி, அவற்றை செயல்படுத்த முனைவது பல நேரங்களில் விபரீதங்களை ஏற்படுத்துகிறது! 

இதற்கு அண்மைய உதாரணம், திருச்செந்தூர்! முன்பெல்லாம் கடற்கரைக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்ற குளித்து, முருகப்பெருமானை தரிசித்து வருவது பாரம்பரிய வழக்கம். ஆனால் அண்மைக்காலமாக பௌர்ணமி வந்துவிட்டால் இரவு நேரம் முழு நிலவொளியில், கடற்கரையில் பாயை விரித்துப் படுக்கும் ‘ஜோதிட’ பரிகாரத்தால், திருச்செந்தூர் திக்குமுக்காடி விடுகிறது. உள்ளூர் மக்கள் கையைப் பிசைந்து கொண்டு, என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கித் தவிக்கிறார்கள். 

திருவண்ணாமலையில் கிரிவலம் வருதல், மகான்களின் வழிகாட்டலில் நடைபெற்று வந்த பாரம்பரிய ஆன்மிகக் கண்ணோட்டத்தில் இருந்து மாறி, பரிகாரங்களில் பார்வையில் பட்டு விட்டதால், லட்சக்கணக்கான மக்களின் நெரிசலைச் சமாளிக்கத் தேவையான கட்டுமான வசதிகளின்றி திருவண்ணாமலை திக்கு முக்காடித் தவிக்கிறது. உள்ளூர்வாசிகள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்கும் இடையூறுகளைச் சொல்லி நொந்து போயிருக்கிறார்கள்.  

எங்கு சுற்றிலும் அரங்கனைச் சேர் என்பது பழமொழி. எந்த ஊர்களில் இருந்தாலும் இறுதியில் திருவரங்கம் வந்து அரங்கன் அடி பணிய வேண்டும் என்பது பழங்காலத்தில் இருந்தே வந்த வழக்கம். இன்னும் சொல்லப்போனால் ஒரு வருடம் முழுமையாகவாவது திருவரங்கம் கோயிலை சுற்றி எங்காவது வசித்து தினமும் உத்ஸவங்களைக் காண வேண்டும் என்பதை வாழ்நாள் இலக்காகக் கொண்டிருப்போர் பலர். ஆனால் இப்போதெல்லாம் அத்தகைய நிலை சாத்தியமற்றதாகவே மாறிவிட்டது. 

பாரம்பரிய ஆன்மீகத் தலங்களில் இடையூறுகள் இப்படி என்றால், இன்று சுற்றுலாத்தலமாக உருவெடுத்து விட்ட தலங்களிலோ இடையூறுகள் வேறு வகையில் முன்நிற்கின்றன! அதற்கு மிகச் சிறந்த உதாரணம் திருக்குற்றாலம்!

திருக்குற்றாலம் பிரதான அருவியுடன் இணைந்த குற்றாலநாதர் கோயில், ஒரு பாடல் பெற்ற தலம். மூர்த்தி- தலம்- தீர்த்தம் எனும் வகையில் பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த புனிதத் தலம். அருவி நீர் விழும் பாறையில், நந்தி, சிவ லிங்கங்கள் நிறைய செதுக்கி வைத்திருப்பார்கள். குற்றாலநாதர் கோயில் பூஜைகளுக்கு அருவித் தண்ணீர்தான். இங்கே பூஜை, புனஸ்காரங்களுக்கே முன்னுரிமை இருந்தது. அது சுற்றுலா தலம் என்று ஆன பின்னர், பாரம்பரிய ஆன்மிகத் தலம் எனும் நிலையை இன்று இழந்து விட்டது!

ஆடி அமாவாசை, தை அமாவாசை நீத்தார் கடன்கள் இங்கே அருவியில் பிரதானம், சபரிமலை பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும் முன் செய்யும் கடமைகளில் அருவி நீராடலும் குற்றாலநாதர், சித்திரசபை ஆடல்வல்லானை தரிசிப்பதும் முக்கியமான ஒன்றாக இருந்தது. சுற்றிலுமுள்ள கிராமங்களில் ஆடி மாத விழாக்கள், கோயில் கொடை விழாக்கள், அம்மன் ஆலய செவ்வாய் வெள்ளி விழாக்கள், கோயில் கும்பாபிஷேகங்கள் நடந்தால் யானை மீது குற்றால அருவி நீர் எடுத்து சுமந்து வந்து அந்த அந்த ஊருக்குள் கம்பீரமாக வலம் வந்து கும்பாபிஷேகம் செய்வது என்பதெல்லாம் வழக்கமான ஒன்று! 

இப்போது சுற்றுலாவாக வருபவர்க்கே முன்னுரிமை என்பதால், திருக்குற்றாலம் எனப்பட்டது ‘குற்றாலம்’ ஆகிவிட்டது. காவல் துறையும் உள்ளூர் நிர்வாகமும் சீசன் காலங்களில் காட்டும் கெடுபிடிகள் அனேகம். உள்ளூர்வாசிகள் சீசன் காலத்தில் ஒரு நாள் கூட குளிக்கச் செல்ல முடிவதில்லை என்று புலம்புகிறார்கள். அது ஒருபுறம் என்றால், ‘வெள்ளம் ஏற்பட்டதால் அருவியில் குளிக்க அனுமதி மறுப்பு’ என்ற காரணத்தைக் காட்டி, கோயில்  திருவிழாவிற்காக புனித நீர் எடுக்கக் கூட போலீசார் அனுமதி மறுத்ததால் பக்தர்கள் போராட்டத்தில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகில் உள்ள சடையப்பபுரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பள்ளத்து பேச்சியம்மன் கோவில் திருவிழாவிற்காக புனித நீர் எடுக்க குற்றாலம் மெயினருவிக்கு வந்தனர். ஆனால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருகே செல்லக்கூட அனுமதி வழங்க முடியாது என போலீசார் தடுத்தனர். இதனால் குற்றாலநாதர் கோவில் அருகே உள்ள ஒரு தண்ணீர்க் குழாயில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குளித்து விட்டு, அதையே புனித நீராக எடுத்துச் சென்றனர் என்பது செய்தி. 

உள்ளூர் மக்களின் பாரம்பரிய ஆன்மிகச் செயலுக்கான வேண்டுகோளை ஏற்று, போலீஸாரே தகுந்த பாதுகாப்புடன் புனித நீர் எடுக்க மட்டுமாவது உதவியிருக்கலாம். சுற்றுலா வந்து குளிப்பவர் மீதான தடையை உள்ளூர் பக்தர்கள் மீதும் திணித்திருப்பது, நிர்வாகத்தின் அவல நிலையையே காட்டுகிறது! 

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் 19ம் நாள் திருவிழா!

veeran dn 3 - 2026
புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கி
அறந்தாங்கி வீரமா காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு 18 ஆம்  நாள் வல்லம்பர் சமுதாயத்தின்  சார்பில்  திருவிழா நடந்தத
 அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆடிப்பெருந் திருவிழா பூச்சொரிதல் காப்பு கட்டுதளுடன் தொடங்கி 18ம் நாள்
வல்லம்பர் சமுதாயத்தின் சார்பில்  நடந்தது விழாவை முன்னிட்டு
 அபிஷேகம் அன்னதானம் நடந்தது தொடர்ந்து நடந்த வழிபாட்டில் மேளதாளம் முழங்க  பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்  இரவு கலை நிகழ்ச்சி நடந்தது வல்லம்பர் சமுதாயத்தின் சார்பில் நடந்தது விழா ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் செ்யதனர்

 

Gpay-ல பணம் அனுப்பும்போது மாத்தி அனுப்பிட்டீங்களா?

upi 1 - 2026

தவறுதலாக செலுத்திய பணத்தை திரும்ப பெறமுடியுமா, எப்படி பெறுவது, யாரை கேட்பது என்கிற குழப்பங்கள் மக்களுக்கு இருக்கின்றன.

பணத்தை தவறான யு.பி.ஐ ஐடி-க்கோ மொபைல் எண்ணிற்கோ செலுத்தி விட்டாலும், உங்கள் அங்கீகாரம் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருந்தாலும், ஒருவேளை நீங்கள் மோசடி செய்யப்பட்டிருந்தாலும், முறைகேடான வழியில் உங்கள் பணம் செலுத்தப்பட்டிருந்தாலும், உங்கள் பரிவர்த்தனை தோல்வி அடைந்த போதிலும் உங்கள் வங்கி கணக்கில் இருந்த பணம் டெபிட் ஆகியிருந்து, நீங்கள் பணம் செலுத்த வேண்டியவருக்கு பணம் சென்றடையாமல் இருந்தாலும், நீங்கள் தாராளமாக உங்கள் பணத்தை திரும்ப பெற முயற்சிக்கலாம்.

பணம் பரிவர்த்தனையை திரும்ப பெற நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள்:

சம்பந்தபட்ட நபரை தொடர்பு கொள்ளுதல்:

அதாவது நீங்கள் பணத்தை தவறாக செலுத்திய அந்த நபரை அணுகி உங்கள் நிலமையை விவரியுங்கள்.

அவர் ஒப்புக்கொண்டால் உங்களுக்கு பணத்தை அவரே திருப்பி அனுப்பலாம்.

வங்கியின் வாடிக்கையாளர் சேவை:

சம்பந்தபட்ட நபர் ஒப்புக்கொள்ளாத நிலை அல்லது அவரை தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகாரளியுங்கள். அவர்கள் உங்களுக்கு பரிவர்த்தனையை திரும்ப பெற வழிக்காட்டுவார்கள்.

  • யு.பி.ஐ பரிவர்த்தனை ரி -கால்:

நீங்கள் அனுப்பிய பணத்தை திரும்ப பெற பல வங்கிகள் டிரான்ஸாக்ஷன் ரி-கால் போன்ற அம்சங்களை வழங்குகின்றன.

உங்கள் வங்கியில் இந்த அம்சம் உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.

என்.பி.சி.ஐ ஹெல்ப் டெஸ்க்:

நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), மின்னஞ்சல் (upi@npci.org.in) அல்லது அவசர உதவி எண்ணை (022-4000-9100) தொடர்பு கொள்ளலாம்.

பணம் மாற்றி அனுப்ப பட்ட சில மணி நேரங்கள் நீங்கள் பணத்தை திரும்ப பெற முயற்சிக்க வேண்டும்.
இதை நினைவில் கொள்ளுங்கள்.

ரயில்வேயில் அப்ரென்டிஸ் வேலை வேணுமா?: இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு!

rail madad - 2026

தெற்கு ரயில்வேயில் பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், பிளம்பர், டீசல் மெக்கானிக், பெயின்டர், வயர்மேன், எலக்ட்ரீசியன், வெல்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

10ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு; மொத்தம் 2,438 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.,12ம் தேதி. இன்னும் 3 நாட்கள் மட்டும் உள்ளன.

தெற்கு ரயில்வேக்கு உட்பட சென்னை, கோவை, திருச்சி, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு கோட்டம், பெரம்பூர், அரக்கோணம் பணிமனை உள்ளிட்ட இடங்களில், 2,438 தொழில் பழகுநர் (apprentice) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி என்ன?

இந்த பயிற்சி இடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும் எம்.எல்.டி., பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது

விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் ஆகஸ்ட் 12.

விண்ணப்பிக்க கட்டணம்

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்.சி, எஸ்.டி., மற்றும் மகளிர் ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை – பெங்களூரு ‘வந்தே பாரத்’ எப்போது?

new vande bharat train color - 2026

விரைவில் மதுரை-பெங்களூரு, சென்னை நாகர்கோவில், எர்ணாகுளம்-பெங்களூரு வந்தேபாரத்’ நெல்லை பெங்களூரு எப்போது?

சென்னை எழும்பூா் – நாகா்கோவில், மதுரை – பெங்களூரு, எர்ணாகுளம் -சேலம்-பெங்களூரு ‘வந்தே பாரத்’ ரயில் சேவைகள் செப்டம்பா் முதல் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், பிரதமா் நரேந்திர மோடி பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க வரும்போது இந்த ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் திருநெல்வேலி பெங்களூரு வந்தேபாரத் ரயில்சேவை திண்டுக்கல் கரூர் சேலம் வழியாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் கொச்சுவேலி-தாம்பரம், திருவனந்தபுரம் -செங்கோட்டை-பெங்களூரு வழியாக புதிய ரயில் சேவை ஆரம்பிக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவை 2019-இல் தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 51 வழித்தடங்களிலும், தெற்கு ரயில்வேயில் 8 வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இரு நகரங்களுக்கு இடையே குறைந்த நேரத்தில் விரைந்து செல்ல சிறந்த போக்குவரத்தாக ‘வந்தே பாரத்’ விளங்குவதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதனால், மற்ற ரயில்களைவிட அதிக கட்டணம் என்றாலும் பெரும்பாலான நேரங்களில் இந்த ரயில் முழுவதும் நிரம்பியே காணப்படுகிறது.

சென்னை – நாகா்கோவில்-சென்னை மதுரை – பெங்களூரு இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் தொடங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து பல மாதங்களாகிவிட்டது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து கடந்த ஜூன் மாதம் ரயில் போக்குவரத்து தொடங்குவதாக இருந்தது. பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதும் தமிழகத்துக்கு 2 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அந்த நேரத்தில் நிகழ்ந்த மேற்கு வங்கத்தில் ஜூன் 17-இல் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்து மற்றும் சென்னை, தாம்பரம், மதுரையில் ரயில் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த இரு ரயில் சேவைகளின் தொடக்கம் தள்ளிவைக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்குவதற்கான வழித்தடம் கண்டறியப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. இந்தப் புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் எனவும் ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

தென்மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூரு செல்வோருக்கு புதிதாக தொடங்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்

குறிப்பாக, நாகா்கோவிலில் இருந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பகல் நேரத்தில் எவ்வித ரயில்களும் இயக்கப்படுவதில்லை. அதே நேரத்தில் மாலையில் இயக்கப்படும் கன்னியாகுமரி, அனந்தபுரி ரயில்களில் பயணச்சீட்டு கிடைக்காத நிலையில், வந்தே பாரத் ரயில் ஒரு மாற்றுத் தீா்வாக விளங்கும். மேலும், இரவுக்குள் சென்னை செல்வதால் பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும்

இதுபோல் மதுரையில் இருந்து பெங்களூருக்கு என பிரத்யேக ரயில் இதுவரை இயக்கப்படவில்லை. இந்த வழித்தடத்தில் புதிதாக வந்தே பாரத் ரயில் இயக்கும்போது பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும். அதே நேரத்தில் கரூா், நாமக்கல், சேலம் உள்ளிட்ட தொழில் நகரங்கள் வழியாக இயக்கும்போது தொழில் துறையினருக்கும், மாணவா்களுக்கும் பயனுள்ளதாக அமையும் ஆனால் மதுரை பெங்களூரு வந்தேபாரத் ரயில்சேவை திருச்சி வழியாக இயக்கப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் குமரி நெல்லை விருதுநகர் தென்காசி தூத்துக்குடி பகுதி மக்கள் வர்த்தகர்கள் சுற்றுலா பயணிகள் நலன் கருதி நெல்லை பெங்களூரு நெல்லை வந்தேபாரத் ரயில்சேவை மதுரை கரூர் சேலம் நேர்வழியில் இயக்க வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை பெரம்பூா் ஐசிஎப் தொழிற்சாலையில் தற்போது வரை 70 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 51 ரயில்கள் இயக்கத்திலும், 9 ரயில்கள் அவசரத் தேவைக்காகவும் (ஸ்போ் ரயில்) உள்ளன. மேலும், 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்குவதற்குத் தயாா் நிலையில் உள்ளன

இந்நிலையில், சென்னை-நாகா்கோவில், மதுரை- பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவைகள் செப்டம்பா் மாதம் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

மதுரை – பெங்களூரு-மதுரை சென்னை எழும்பூர் நாகர்கோவில் சென்னை எழும்பூர் மற்றும் எர்ணாகுளம் சேலம் பெங்களூரு வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கு அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன. ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாக தென்னக இரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

தற்போது ராமேசுவரம் புதிய பாம்பன் பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அதன் திறப்பு விழாவை செப்டம்பா் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கிவைக்கவுள்ளதால், இதனுடன் சோ்த்து புதிய வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்புகள் வெளியாகும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்துக்கு மேலும் 3 வந்தே பாரத் ரயில் சேவைகள் செப்டம்பரில் கிடைத்தால், அவை பண்டிகை கால பரிசாக தமிழ்நாட்டு மக்களுக்கு அமையும் என பயணிகள் வர்த்தகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சென்னை எழும்பூா் – நாகா்கோவில், மதுரை – பெங்களூரு, எர்ணாகுளம் -சேலம்-பெங்களூரு ‘வந்தே பாரத்’ ரயில் சேவைகள் செப்டம்பா் முதல் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், பிரதமா் நரேந்திர மோடி பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க வரும்போது இந்த ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் திருநெல்வேலி பெங்களூரு வந்தேபாரத் ரயில்சேவை திண்டுக்கல் கரூர் சேலம் வழியாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் கொச்சுவேலி-தாம்பரம், திருவனந்தபுரம் -செங்கோட்டை-பெங்களூரு வழியாக புதிய ரயில் சேவை ஆரம்பிக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

VHP issued Helpline and seeks action against attackers and Compensation to victimised minorities of Bangladesh

0
vhp kallakurichi meet - 2026
#image_title

VHP issued Helpline and seeks action against attackers and Compensation to victimised minorities of Bangladesh

Kallakurichi, Tamilnadu: Speaking to the press during the North Tamilnadu, Vishwa Hindu Parishad State and District Executive Meeting, Shri. Alok Kumar, International President of Vishwa Hindu Parishad. Stated that the minorities in Bangladesh are going through very challenging times. There have been targeted attacks on them including videographed gruesome murders, atrocities and vandalizing their places of worship, business establishments and homes.

He also stated that, we have seen the statement of Shree Muhammad Yunus, Chief Advisor of Bangladesh calling for a cessation of hostilities against minorities and if not stopped, he would resign.

We hope Bangladesh would walk the talk.

Shri. Alok Kumar, also stated that V.H.P have also noticed that Prime Minister Shri Narendra Modi in his first message to Shri Muhammad Yunus emphasized the urgency of safeguarding Hindus and other minorities in Bangladesh. We can only hope that the advice would be heeded.
For restoration of peace and confidence amongst Bangladeshi Hindus and other minorities, VHP demands that,

  • Peace and welfare of minorities in Bangladesh is assured,
  • The families of those where any family member is killed or suffered damages are compensated, and
  • Guilty persons are brought to book, tried and punished as per the law.

The VHP today released a Help line No. +9111-26103495 whereby any distressed Bangladeshi Hindu can approach us and we in coordination with the Central Govt. shall try to help them out in every possible way.

We are surprised to see the grotesque silence of so-called human right bodies and persons who have not spoken a word for the suffering minorities in Bangladesh, he said.

Shri Alok Kumar, also paid obeisance to the dead in the illicit hooch tragedy in Kallakurichi, stated that to eradicate the evils of liquor and drugs, is the responsibility of both government and the civil society, The VHP shall accelerate the campaign against the evils of liquor and drugs. The Bajrang Dal shall lead it in the youths of Tamilnadu. The campaign would include the strengthening of the family values and living the virtuous Hindu life away from Intoxication.

Shri. Alok Kumar, also requested the Tamilnadu Government to not interrupt in anyway. the Kadal (Samudhra) Aarathi and Annadhanam being conducted on Purnima day every month at Thiruchendur by Andal Bhaktargal Peravai and advice its officers of Hindu Endowments and Charitable Trust against harassing the organizers and provide appropriate security and facilities to the ever-increasing pilgrims, who are seeking Lord Muruga’s blessings and create a tranquil atmosphere for the devotees at the holy place of Hindus.

    கனகசபையின் அளவீடு மற்ற கோயில்களுக்கும் உண்டா?!

    nataraja chidambaram patanjali - 2026

    தில்லைச் சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சன விழா, அறநிலையத்துறையின் தலையீட்டில், நெருக்கடியான முறையில், கோயிலை நிர்வகித்து வரும் பொது தீட்சிதர்களை அச்சுறுத்தி, மிரட்டலுக்கு உள்ளாக்கி, அவர்களின் நடைமுறைகளை நசுக்கி, ஒரு வழியாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதே போன்ற அளவுகோல், பக்தர்களின் தரிசனத்தை தடுத்து நிறுத்தி, தட்டிகள் வைத்து, அர்த்த மண்டபத்தை அர்த்தமே இல்லாமல் அனர்த்தமாக அப்பிரதட்சிணமாக சுற்ற வைத்து ஆகம விரோதமாக நடக்கும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் இருக்குமா, அவற்றை நீதிமன்றங்களும் கணக்கில் எடுக்குமா என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி!  

    சிதம்பரம் கோயிலை குறி வைத்து, காவல்துறை அடக்குமுறையுடன், எத்தனை எத்தனை தாக்குதல்களை அறநிலையத்துறை இதுவரை தொடுத்திருக்கிறது என்பதை நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்! அதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த வருடம்,  ஆனி திருமஞ்சன விழாக் காலத்தை ஒட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையை அகற்ற வேண்டும் என்று மிரட்டிய அறநிலையத் துறை அதிகாரிகளிடம், தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தங்கள் உரிமைக்காகவும், கனகசபையின் பாதுகாப்பைக் கருதியும் குரல் கொடுத்தார்கள். 

    அப்போது, சிதம்பரம், தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர், தாசில்தார், எஸ்.ஐ.,க்கள், போலீசார் என நாத்திக திமுக., அரசின் அலுவலர் படையே கோவிலுக்குள் திரண்டு வந்து, தீட்சிதர்கள் வைத்த அறிவிப்புப் பலகையை அகற்றிவிட்டு, கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்று வலுக்கட்டாயமாக சிலரை ஏற்றி, அடாவடியில் ஈடுபட்டனர்.

    தீட்சிதர்கள் தரப்பில் இது பற்றி விளக்கம் அளித்த போது, அதிகாரிகள் மற்றும் சிலர் வேண்டுமென்றே பிரச்னை செய்கின்றனர். தேர் மற்றும் தரிசனத்தின் போது, கருவறையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜரை கனகசபையில் எழுந்தருளச் செய்து பூஜை செய்து வெளியே கொண்டு வருவோம். அதற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் பக்தர்களை கனகசபையில் அந்த நான்கு நாட்களுக்கு மட்டுமே அனுமதிப்பதில்லை. திருவிழாவிற்காக நடராஜருக்கு அணிவிக்க விலை உயர்ந்த நகைகள் வைக்கப்பட்டுள்ளன. கருவறையில் இருந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜர் தேரில் எழுந்தருள வெளியே கொண்டு வரும் பணிகள் நடைபெறும்போது பாதுகாப்பு கருதி கனகசபை மீது பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை. இது வெகுகாலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. ஆனால் புதிதாக பிரச்னை ஏற்படுத்தியது போல் கிளப்பி, எங்களது பணியை செய்யவிடாமல் அறநிலையத்துறை செயல் அலுவலரும் அறநிலையத்துறை அதிகாரிகளும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர் என்று கூறினார்கள். 

    இப்படி எல்லாம் கடந்த காலங்களில் நடந்து கொண்டு, இந்த வருடம் கனகசபையில் வீம்புக்கு மக்களை ஏற்றி, அறநிலையத்துறை தன் சட்டாம் பிள்ளைத்தனத்தை நிலைநாட்டி இருக்கிறது! கடந்த வருடம் பழனி கோயில் அறிவிப்பு பலகை அகற்றம், அதைத் தொடர்ந்து நடந்த குளறுபடிகள் எல்லாம், அறநிலையத்துறை அதிகாரிகளின் உள்நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

    தெற்கே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அறநிலையத்துறை அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு அளவே இல்லை. பக்தர்களின் போராட்டங்களுக்கும் பஞ்சமில்லை! 

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், சரியாக ஆய்வும் செய்யாமல், திருப்பணிகளையும் முழுமையாக செய்து முடிக்காமல், கும்பாபிஷேக தேதி அறிவித்ததை பக்தர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். இது குறித்து இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர், திருப்பணிகளை முழுமையாக முடித்து திருவிழா சிறப்பாக நடக்கவும், ஆடித்தபசுக்கு வரும் பக்தர்களுக்கு குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளை கோவிலுக்கு உட்பகுதியில் செய்து கொடுக்கவும் வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். 

    இதே அமைப்பின் கீழ் நெல்லை மாவட்டத்தின் பல இடங்களில் உழவாரப்பணிகள் நடப்பதுண்டு. இதற்காக ஆலயங்களில் சிறிய இடம் ஒதுக்கி, உழவாரப்பணிக்குத்  தேவையான கருவிகளை சேமித்து வைப்பதுண்டு. பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் தொடங்கி பல ஆலயங்களில் இந்த இடங்களை காலி செய்யுமாறு இப்போது கெடு விதித்து வருகின்றனர். அதற்கு, செங்கல் வைத்து கட்டப்பட்ட நவீன   கட்டட அமைப்புகளை புராதன ஆலயத்துக்குள் அனுமதிக்க முடியாது என்கின்றனர் அதிகாரிகள். ஆனால் அவர்கள் கோயில்களுக்குள் தங்கும் குளுகுளு ஏசி அறைகள் நவீன கட்டடங்கள் தானே என்பதை சுட்டிக் காட்டினால், அதைக் கேட்பதற்கு அவர்களுக்கு காதுகள் இல்லை! 

    ஒருபுறம், ஆலயங்களின் பணத்தில் அதிகாரிகள் சொகுசு கார்கள் வாங்குவதற்கு செலவிடுவதை நீதிமன்றம் கண்டிக்கிறது! ஆனால் அவற்றின் பார்வைக்கு அறநிலையத்துறையின் எத்தனையோ ஓட்டைகளை எடுத்துச் சென்றாலும் ஓட்டைகள் இன்னமும் பெரிதாகிக் கொண்டுதான் உள்ளன! 

    கோயிலை பூட்டி வைக்கக் கூடாது என்ற தீர்ப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு

    kadeswara subramaniam hindu munnani - 2026
    சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி எந்த கோவிலையும் பூட்டி வைக்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை இந்துமுன்னணி வரவேற்கிறது என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்    அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது….
     
    மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள முத்தாலம்மன் மாரியம்மன் திருக்கோவிலை திறக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று மாண்புமிகு  மதுரை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பினை வழங்கி உள்ளது
     
    இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோயிலைப் பூட்டிய சீல் வைப்பதால், சாமிக்கு பூஜைகள் நடத்துவது தடுக்கப்படுகிறது. கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம். குற்ற வழக்கில் சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது.
     
    கோவிலை பூட்டுவதால் சாமிக்கு தேவையான பூஜை உள்ளிட்ட தேவைகள் கிடைக்கப் பெறுவதில்லை. கோயிலை காலவரையறையின்றி மூடி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் வேடிக்கை பார்க்க கூடாது.
     
     கோயிலைத் திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும். இதில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். 
     
    ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, எந்த கோயிலையும் பூட்டக் கூடாது என நீதியரசர் திரு ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்பிற்குரியதாகும்
     
    கடந்த சில வருடங்களாக சில நாத்திக, இந்து விரோத கும்பல்கள் இந்து ஆலயங்களில் இரு பிரிவினரிடையே மோதல்களை தூண்டிவிட்டு அதன் மூலமாக கோவில்களை பூட்டி போடும் செயல்கள் பல இடங்களில் அரங்கேறி வருகிறது. கோவிலைத் திறந்தால் பிரச்சனை வரும் எனக் கூறி பல ஆண்டுகளாக கோவில்களில் எந்த பூஜையும் செய்யாமல் பூட்டி போட்டு இருளடைய செய்து வருகின்றனர். 
     
    கோவில் என்பது இறைவன் வாழும் இடம். இந்து சமயத்தில் இறைவனுக்கு பூஜை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதனை தடுப்பதால் பல தீமைகள் ஊருக்கு ஏற்படும் என்பது ஐதீகம். கொரானா பெருந்தொற்று சமயத்தில் கூட பூஜை செய்வது தடுக்கப் படவில்லை.
     
    ஆனால் வேற்று மத வழிபாட்டுத் தலங்களில் அல்லது பல பொது இடங்களில் பிரச்சனைகள்   நிகழ்ந்தால் இதுபோல் கோவில்களைப்போல மூடி சீல் வைப்பதில்லை. இத்தனைக்கும் அவை பிரார்த்தனை கூடங்கள் தான். ஆனால் அவர்களின் மத விஷயத்தில் அரசும் அதிகாரிகளும் மிகுந்த கவனமுடன் கையாண்டு அவற்றிற்கு சீல் வைப்பதை தவிர்க்கின்றனர்.
     
    இந்துமத வழிபாட்டு தலங்கள் மட்டும் திட்டமிட்டு சில சதி செயல்களின் பின்னணியில் பூட்டப்படுகிறது என இந்துமுன்னணி நெடுங்காலமாக குற்றஞ்சாட்டி வருகிறது. 
     
    இந்நிலையில் மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆலயங்களையும் ஆன்மீகத்தையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து மக்களின்    சிந்தனையை   பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்துமுன்னணி இந்த தீர்ப்பை மனதார வரவேற்கிறது.

    ஒரே அக்கவுன்டில் 2 பேர் UPI பயன்படுத்தலாம்; விரைவில் அறிமுகமாகிறது!

    upi 1 - 2026

    ஒரே அக்கவுன்டில் 2 பேர் UPI பயன்படுத்தலாம் – விரைவில் அறிமுகமாகிறது.

    இது குறித்து ரிசர்வ் பேங்க் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், யு.பி.ஐ., வாயிலாக வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பு, 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வரி செலுத்துவோர் வேலை சுலபமாகும்.

    யு.பி.ஐ., பரிவர்த்தனைகளில் மற்றொரு பெரிய மாற்றமும் அறிமுகமாகிறது. ஒருவர் தன் வங்கி கணக்கில் இருந்து, தன் குடும்ப உறுப்பினர் ஒருவரை பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கலாம்.

    குறிப்பிட்ட தொகை வரை அவர் பரிவர்த்தனை செய்யலாம். அவருக்கு யு.பி.ஐ., உடன் இணைக்கப்பட்ட தனி வங்கி கணக்கு தேவையில்லை. இதன் முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

    கடன் வழங்கும் நிறுவனங்கள், சி.ஐ.சி., எனப்படும் கடன் தகவல் நிறுவனங்களுக்கு தரவுகளை அளிப்பதற்கான அவகாசம், ஒரு மாதத்தில் இருந்து இரு வாரங்களாக குறைக்கப்படுகிறது.

    தங்களது கடன் விபரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக புதுப்பிக்கப்படுவதால், கடன் வாங்குவோர் பயனடைவர். கடன் வழங்கும் நிறுவனங்கள், கடனாளிகள் குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்க உதவும். இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: 14ம் நாளில்…!

    paris olympics 2024 - 2026
    #image_title

    பாரீஸ் ஒலிம்பிக் 2024 – பதிநாலாம் நாள் – 09.08.2024

    முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

    ஆகஸ்ட் 9 ஆம் தேதி, இந்திய தடகள வீரர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4×400 மீ தொடர் ஓட்டம் மற்றும் ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் விளையாடுவார்கள்.

    கோல்ஃப்

    பெண்களுக்கான தனிப்பட்ட ஸ்ட்ரோக் விளையாட்டு சுற்று 3 – திக்ஷா தாகர், அதிதி அசோக் இருவருக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக அமையவில்லை.

    தடகளம்

              பெண்களுக்கான 4×400 மீ தொடர் ஓட்டம் 1 – ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பூவம்மா எம்.ஆர். பெண்கள் அணி 3:32:51 நேரத்தில் 4 x400 மீ ஓட்டத்தை ஓடி ஹீட் இரண்டில் எட்டாம் இடம் பிடித்தார்கள். 

              ஆண்களுக்கான 4×400 மீ தொடர் ஓட்டம் 1 – முஹம்மது அனஸ், முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ். ஆண்கள் அணி 3:00:58 நேரத்தில் தங்களது 4×400 மீ ஓட்டத்தை ஓடி முடித்தார்கள். இது அவர்களது சிறப்பான சாதனை நேரம். ஆனால் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறவில்லை.

    மல்யுத்தம்

              ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ வெண்கலப் பதக்கப் போட்டி – அமன் செஹ்ராவத் vs டேரியன் டோய் குரூஸ் (புவேர்ட்டோ ரிக்கோ) இரவு 2145க்கு நடக்கவுள்ளது.