இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பாரீஸ் ஒலிம்பிக் 2024 – பதிநாலாம் நாள் – 09.08.2024
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஆகஸ்ட் 9 ஆம் தேதி, இந்திய தடகள வீரர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4×400 மீ தொடர் ஓட்டம் மற்றும் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் விளையாடுவார்கள்.
கோல்ஃப்
பெண்களுக்கான தனிப்பட்ட ஸ்ட்ரோக் விளையாட்டு சுற்று 3 – திக்ஷா தாகர், அதிதி அசோக் இருவருக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக அமையவில்லை.
தடகளம்
பெண்களுக்கான 4×400 மீ தொடர் ஓட்டம் 1 – ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பூவம்மா எம்.ஆர். பெண்கள் அணி 3:32:51 நேரத்தில் 4 x400 மீ ஓட்டத்தை ஓடி ஹீட் இரண்டில் எட்டாம் இடம் பிடித்தார்கள்.
ஆண்களுக்கான 4×400 மீ தொடர் ஓட்டம் 1 – முஹம்மது அனஸ், முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ். ஆண்கள் அணி 3:00:58 நேரத்தில் தங்களது 4×400 மீ ஓட்டத்தை ஓடி முடித்தார்கள். இது அவர்களது சிறப்பான சாதனை நேரம். ஆனால் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறவில்லை.
மல்யுத்தம்
ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ வெண்கலப் பதக்கப் போட்டி – அமன் செஹ்ராவத் vs டேரியன் டோய் குரூஸ் (புவேர்ட்டோ ரிக்கோ) இரவு 2145க்கு நடக்கவுள்ளது.
புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக் கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஆக.15-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
ஸ்ரீஹரிகோட்ட்டா சதீஷ் தவன் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஆக.15 அன்று காலை 9.17 மணிக்கு அந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் காா்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட், உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் தொலையுணா்வு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் புவிக் கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கைக்கோளை சிறியரக எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இஒஎஸ்-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு மற்றும் சிக் யுவி டோசிமீட்டா் ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இஒஐஆா் கருவி பேரிடா் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்க உதவும்.
இதேபோல், ஜிஎன்எஸ்எஸ்-ஆா் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீா்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசிமீட்டா் விண்ணில் புற ஊதாக் கதிா்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும்.
இது மனிதா்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது. மேலும், எதிா்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ள உள்ளன என்றும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களை 8 ஆண்டுகளுக்கும் மேலாக அலைக்கழிப்பதா? என்று, திமுக., அரசுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, கடந்த எட்டரை வருடங்களாக, அதாவது 102 மாதங்களாக, அகவிலைப்படி உயர்வு வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. மேலும், கடந்த 18 மாதங்களாக, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, ஓய்வுக் காலப் பணப் பலனையும் வழங்காமல் இருப்பதாகத் தெரிகிறது.
கடந்த 8 ஆண்டுகளில், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், சுமார் 93,000 தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலும், ஓய்வூதியத்தை முறைப்படுத்தாமலும், வயது முதிர்ந்த காலத்தில், மிகக் குறைந்த அளவில் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். பல முறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும், கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்றமே, அகவிலைப்படி உயர்வு வழங்கக் கூறி தீர்ப்பளித்த பின்னரும், திமுக அரசு, இதுவரை ஓய்வு பெற்றோருக்கான அகவிலைப்படி உயர்வை வழங்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இது தொடர்பாக, ஓய்வூதியதாரர்கள் பலமுறை அரசின் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும், வேறு வழியின்றி, பொங்கல் பண்டிகை நேரத்தில், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பதும், அந்த நேரத்தில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து அவர்களைச் சமாதானப்படுத்தி, பின்னர் அவர்கள் கோரிக்கைகளைக் கிடப்பில் போடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால், பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றார்கள். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஓய்வு பெற்றவர்களை அலைக்கழிப்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.
திமுக அரசு உண்மையில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது? அரசுத் துறைகளில் பல ஆண்டுகள் சேவை செய்து ஓய்வு பெற்றவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்காமல், கார் பந்தயம் போன்ற அனாவசியச் செலவுகளுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கிக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் வரிப்பணம், பொதுமக்களுக்கான சேவைகளுக்கே தவிர, திமுகவினர் கேளிக்கைகளுக்கு அல்ல.
உடனடியாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் நியாயமான கோரிக்கைகளான, ஓய்வூதியத்தை முறைப்படுத்தி, கடந்த 102 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வு, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு, கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் ஓய்வுக்கால பணப்பலன் ஆகியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பொங்கல் பண்டிகை வரை இழுத்தடித்து, மீண்டும் வழக்கம்போல போராட்டத்தில் ஈடுபடும் சூழலுக்குப் போக்குவரத்துத் துறை ஊழியர்களைத் தள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துக் கொள்கிறேன். – என்று, அண்ணாமலை (பாஜக மாநிலத் தலைவர்) குறிப்பிட்டுள்ளார்.
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை: 15 உயிர்கள் பலியான பிறகும் மக்களைக் காக்க அரசுக்கு மனம் வரவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ள மருத்துவர் ராமதாஸ் இதற்காக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தனியார் நிறுவன மேலாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 15 லட்சத்திற்கும் கூடுதலான பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கிருஷ்ணமூர்த்தியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனியார் நிறுவன மேலாளரான கிருஷ்ணமூர்த்தி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். தமது குடும்பத்தினருக்கு தெரியாமல் ஆன்லைனில் சூதாடி ரூ.15 லட்சத்தை இழந்த அவர், கடுமையான குற்ற உணர்விலும், மன உளைச்சலிலும் தவித்திருக்கிறார்; மன உளைச்சல் ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலைக்கு சென்றதால் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டம் ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் அடிமையாக்கி அழிக்கும் என்பதற்கு அங்கமுத்து தான் மோசமான எடுத்துக்காட்டு
ஆன்லைன் சூதாட்டம் எளிதில் அழிக்க முடியாத பெரும் தீங்கு ஆகும். நிலத்தில் வெட்ட வெட்ட முளைக்கும் களைகளைப் போல, ஆன்லைன் சூதாட்டமும் தடை செய்ய, தடை செய்ய சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி மீண்டும், மீண்டும் முளைத்துக் கொண்டிருக்கிறது. பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது.
தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த 9 மாதங்களில் மொத்தம் 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாத இடைவெளிக்குள்ளாக இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் தற்கொலைகள் அதிகரிப்பதை தடுக்க முடியாது.
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு 9 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை. , உச்சநீதிமன்றம் கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் கூட, ஆன்லைன் சூதாட்டத் தடை வழக்கை விசாரணைக்கு கொண்டு வரவோ, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவோ எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? தமிழ்நாட்டு மக்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அக்கறை இருந்தால், இந்த விவகாரத்தில் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இந்திய நாடே தயாராகி வருகிறது. சுதந்திர தின கொண்டாடத்தில் அனைவரின் நெஞ்சங்களிலும் தவறாமல் இடம் பிடிப்பது மூவர்ண தேசிய கொடி என்றால் அது மிகையல்ல.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அச்சகத்தில், சுதந்திர தின கொண்டாடத்திற்கு தேவையான தேசிய கொடிகள் அச்சடிக்கும் பணிகளும், தயாரான கொடிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகாசி அச்சகத்தில் துணியிலான தேசிய கொடிகள், வார்னீஸ் பேப்பர், பளபளக்கும் ஆர்ட் பேப்பர், அட்டை உள்ளிட்டவைகளில் தேசிய கொடிகள் தயாராகி வருகின்றன. சட்டையில் குத்தும் வகையில் பேப்பர் தேசிய கொடிகளும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்புகளில் பொருத்தும் வகையிலான அட்டையால் தயாரிக்கப்படும் தேசிய கொடிகள் அதிகளவில் தயாராகி வருகின்றன.
மேலும் இந்தியா வரை படத்துடன் கூடிய தேசிய கொடிகள், தேசத்தந்தை மகாத்மா காந்தி உருவத்துடன் கூடிய தேசிய கொடிகள், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேரு உருவத்துடன் கூடிய தேசிய கொடிகள் அழகிய வடிவங்களுடன், கண்ணை கவரும் டைகட்டிங் வடிவத்துடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தொப்பி வடிவில் தலையில் மாட்டிக்கொள்ளும் வகையில் தேசிய கொடிகள், கைகளில் மாட்டிக் கொள்ளும் வகையிலான தேசிய கொடிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
தேசிய கொடிகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அச்சக உரிமையாளர் காசிராஜன் கூறும்போது… “எங்களது அச்சகத்தில் பல்வேறு வகைகளிலான அச்சு பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய கொடிகள் தயாரிக்கும் பணிகளையும் செய்து வருகிறோம். ஆரம்பத்தில் தமிழகத்தில் உள்ள பிரபலமான பள்ளிகள், கல்லூரிகளில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக தேசிய கொடிகளை மொத்தமாக ஆர்டர்கள் கொடுத்து வாங்கினார்கள்.
பொது மக்கள் பயன் படுத்துவதற்காக ஸ்டேசனரி கடைகளில் பல வடிவங்களிலான தேசிய கொடிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. படிப்படியாக தமிழகம் முழுவதும் சுதந்திர தினமன்று தேசிய கொடியை சட்டைகளில் குத்திக் கொள்ளும் உற்சாகம் தொடங்கியது.
இது தமிழகத்தை தாண்டி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் பரவியது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்வதற்கான தேசிய கொடிகள் ஆர்டர்கள் அதிகளவில் கிடைத்தது.
ஒரு முறை எங்களது நிறுவனத்தில் தேசிய கொடிகள் வாங்குபவர்கள் பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு நாடு தயாராகி வரும் நிலையில், தேசிய கொடிக்கான ஆர்டர்களும் எதிர்பார்த்த அளவில் சிறப்பாக உள்ளது.
பேப்பர் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடிகளின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் இந்த சின்ன விலையேற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
கடந்த இரண்டு மாதங்களாக தேசிய கொடிகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது எடுக்கப்பட்ட ஆர்டர்களுக்கு கொடிகள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன” என்று கூறினார்.
திருவனந்தபுரத்திலிருந்து தாம்பரம், ராமேஸ்வரம், கோயமுத்தூருக்கு கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் வழியாக தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று கேரளா மற்றும் தென்மாவட்ட வர்த்தகர்கள் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்திய அளவில் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் கோவில் பக்தர்கள் அதிக அளவில் சென்று பார்வையிடும் புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு மாத அமாவாசை விடுமுறை தினங்களில் ஆண்டு திருவிழா காலங்களில், இங்கு திருவனந்தபுரம் கொல்லம் கோட்டயம் பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய பரிகாரம் செய்ய அதிகளவில் வருகின்றனர்.
அவர்கள் நலன் கருதி திருவனந்தபுரம் ராமேஸ்வரம் தினசரி ரயில் இயக்க வேண்டும்.மேலும் கேரளா தமிழ்நாடு தென்காசி திருநெல்வேலி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் கோவை பெங்களூர் சென்னை நகரங்களில் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகளவில் படிக்கின்றனர். பலர் இங்கு வேலை செய்து வருகின்றனர்.முந்திரி காப்பி தேயிலை மற்றும் இதர பொருட்கள் வாங்க தொழில் நிமித்தமாக வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் நலன் கருதி திருவனந்தபுரம் கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழியாக தாம்பரம் கோயம்புத்தூர் பெங்களூர்க்கு தினசரி ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுவாக திருவனந்தபுரம் கொல்லம் மாவட்டங்களில் அதிக அளவில் ஆன்மிக சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும் செங்கோட்டையிலிருந்து புனலூர் வரை உள்ள மலை வழிப் பாதையில் ரயில் பயணம் செய்வதில் சுற்றுலா குற்றாலம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தென்காசி, கொட்டாரக்கரை, கொல்லம், வர்க்கலா போன்ற ஆன்மீக தலங்கள் இப்பகுதியில் உள்ளன. மேலும் ராஜபாளையம் மிகப்பெரிய வர்த்தக தலமாக விளங்குகிறது. இங்கு காட்டன் நூல் மற்றும் ஆயத்த ஆடைகள் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன. அதை வாங்கிச் செல்வதற்கு கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து ஏராளமான வர்த்தகர்கள் தினமும் ராஜபாளையத்திற்கு வருகின்றனர்.
அது போல் சிவகாசி விருதுநகர் போன்றவையும் மிக முக்கிய வர்த்தக நகரங்களாக உள்ளன. மதுரை மிகப்பெரிய ஆன்மீக சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் கூடலழகர் பெருமாள் கோவில் அழகர் கோவில் போன்ற பழமையான வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களை பார்வையிடவும் திருமலை நாயக்கர் மஹால் போன்ற சுற்றுலாத் தலங்களை பார்க்கவும் கேரளா கர்நாடக பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
மேலும் பழனி, குற்றாலம், செங்கோட்டை போன்ற முக்கிய இடங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவை, பெங்களூரு, சென்னை பகுதிகளில் அதிக அளவில் படிக்கின்றனர். இவர்களுக்கு போக்குவரத்திற்கு போதிய வசதிகள் இல்லாததால் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் நலன் கருதி திருவனந்தபுரத்திலிருந்து தாம்பரம் கோயம்புத்தூர் பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு நேரடி ரயில் வசதி ஏற்படுத்தித் தருவது மிக அவசியம்.
தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திருவனந்தபுரம் கொல்லம் எம்பி.,க்கள் கோரிக்கையை கேரள மக்கள் சார்பில் ரயில்வே வாரியத்திடமும் ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவிடமும் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோல் தமிழக எம்பி.,க்களும் புதிய ரயில் இப்பகுதிகளில் இயக்க வலியுறுத்துவது மிக அவசியமாகும்.
ரசாயன பாட்டில் உடைந்து மாணவிகள் மயக்கம் அடைந்ததால் அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை எஸ்ஆர்எம்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் அறையில் திடீரென ரசாயன பாட்டில் ஒன்று உடைந்து பத்துக்கு மேற்பட்ட மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.இதை அடுத்து, மயக்கமடைந்த மாணவிகள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்கோட்டை அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா. செங்கோட்டை அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி திருககோவிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு உத்ஸவ நிகழ்ச்சி நடைபெற்றது இந்த விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம். அதே போல இந்தாண்டிக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நாளான காலை 10 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அறம்வளா்த்தநாயகி அம்பாள் திருக்கோவில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னா் அம்பாளுக்கு பல்லாயிரக்கணக்கான வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வண்ண மின்னொளியில் குலசேகரநாதசுவாமி ஜொலித்த வண்ணம் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த திருநாளில் திருமணமான பெண்கள் மாங்கல்யம் நிலைக்க வேண்டியும், அம்மன் வளையல் அணிந்து தாய்மை கோலம் பூண்டுள்ள நன்னாளில் பெண்கள் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஆடிப்பூரத் திருநாளை திருமணமான பெண்கள் விசேஷமாக வழிபட்டு வருகின்றனர். மாலை 5 மணிக்கு ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசைகள் மேளதாளங்களுடன் எடுத்து வரப்பட்டது. 6 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் வளைகாப்பு உத்ஸவ நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர். முடிவில் அருள் பிரசாதத்துடன் பெண்களுக்கு சட்டை துணியுடன் வளையல்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மணடகபடிதாரர்கள் சாமில் உரிமையாளர் சுப்பிரமணியன் சிறப்பாக செய்திருந்தனர்.
பாகிஸ்தானின் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் வியாழக்கிழமை ஸ்டேட் டி பிரான்ஸில் நடந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக்கின் இறுதிப் போட்டியில் 92.97 மீட்டர் தூரம் எறிந்து ஒலிம்பிக் சாதனையை முறியடித்து உலகையே திகைக்க வைத்தார். நடப்பு சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
நீரஜ் சோப்ராவின் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி ஒரு ஃபவுலுடன் தொடங்கியது; அவர் ஈட்டையை எறிந்த பிறகு தடுமாறினார், இதனால் அவரது கால் கோட்டைத் தாண்டியது. மனம் தளராமல், அவரது இரண்டாவது வீசுதல் மூலம் 89.45 மீட்டருக்கு வீசினார். இதனால் நதீமின் சாதனையை முறியடித்த 92.97 மீட்டருக்குப் பின்னால் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
அவரது மூன்றாவது முயற்சி 75 மீட்டர் தூரம் எறிந்து ஏமாற்றம் அளித்தது. நான்காவது வீசுதல் அவரது ஆரம்ப முயற்சியை பிரதிபலித்தது, நீரஜ் வீழ்ந்தார் மற்றும் ஈட்டி 80 மீட்டரைக் கடக்கவில்லை. ஐந்தாவது வீசுதல் சிறப்பாக இல்லை; அவர் கால் இடறியது. அவரது உடல் கோட்டைக் கடந்தது, அவரது மூன்றாவது முறைகேட்டைக் (ஃபவுல்) குறித்தது.
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 90.57 மீட்டர் தூரம் எறிந்த நார்வேயின் ஆன்ட்ரியாஸ் தோர்கில்ட்செனின் முந்தைய சாதனையை நதீமின் நம்பமுடியாத சாதனை முறியடித்தது.
2023 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற அர்ஷத், 2022இல் பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 90.18 மீட்டர் தூரத்தைத் தாண்டி தங்கம் வென்றார். இறுதிப் போட்டியை ஒரு தவறுடன் தொடங்கிய போதிலும், அர்ஷத் தனது சாதனையை முறியடிக்கும் இரண்டாவது முயற்சியின் மூலம் வெற்றியைத் தொடங்கினார் மற்றும் மூன்றாவது எறிதலுடன் 88.72 மீட்டர்களை தனது முன்னிலையை உறுதிப்படுத்தினார்.
நதீமின் எறிதல் புதிய ஒலிம்பிக் சாதனையைப் படைத்தது மட்டுமல்லாமல், ஒலிம்பிக் வரலாற்றில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 90 மீட்டர் ஓட்டத்தைத் தாண்டிய நான்காவது தடகள வீரர் என்ற பெருமையையும் பெற்றார். ஒலிம்பிக்கில் 90 மீட்டருக்கு அப்பால் எறிந்த நட்சத்திரங்கள்: 2000: ஜான் ஜெலெஸ்னி, செக்கியா – 90.17 மீ; 2008: ஆண்ட்ரியாஸ் தோர்கில்ட்சென், நார்வே – 90.57 மீ; 2016: தாமஸ் ரோஹ்லர், ஜெர்மனி – 90.30 மீ
ஆண்கள் ஹாக்கியில் வெண்கலப்பதக்கம்
நேற்று பரபரப்பான வெண்கலப் பதக்கப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் சிங்கின் இரண்டு பெனால்டி கார்னர் கோல்களால் ஸ்டேட் யவ்ஸ்-டு-மனோயர் மைதானத்தில் ஆடவர் ஹாக்கியில் ஸ்பெயினுக்கு எதிராக இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி, இந்தியாவின் இரண்டாவது தொடர்ச்சியான ஒலிம்பிக் வெண்கலத்தை உறுதி செய்தது. இது 1968 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளில் அவர்கள் தொடர்ச்சியாகப் பதக்கங்களைப் பெற்றதில் இருந்து 52 ஆண்டுகளில் சாதிக்கப்படாத சாதனையாகும்.
இந்திய அணிக்காக தனது இறுதிப் போட்டியில் விளையாடும் மூத்த கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், குறிப்பாக ஸ்பெயின் கேப்டன் மார்க் மிரல்லஸின் பெனால்டி கார்னர்களை அசாதாரணமாகத் தடுத்தார். இறுதி விசில் அடிக்க, இந்திய வீரர்கள் ஸ்ரீஜேஷைச் சூழ்ந்துகொண்டு, அவரது அற்புதமான வாழ்க்கையைக் கொண்டாடி, 36 வயதில் அவருக்குப் பொருத்தமான பிரியாவிடை அளித்தனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் -வருடம் 1933 – அன்று சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதிய அந்தக் கால தமிழ் நடையில் சுவாரஸ்யமான தகவல்கள் …
சுதேச மித்திரன்- 10 டிசம்பர் – 1933
இந்த வருஷ திருவண்ணாமலை கார்த்திகை உற்சவம் மிக அதி விமரிசையாக நடைபெற்றது.
வெளியூர் ஜனங்கள் முப்பதாயிரமென்று ரயில்வே கணக்கால் தெரிகிறது. இவ்வாண்டிலும் அவ்வளவுக்குக் குறையாதென்றே கூறலாம்.
கால்நடையாக வந்திருக்கிற ஜனங்கள் முப்பதாயிரத்துக்கு மேலிருக்கும். நாட்டுக்கோட்டை ஆண் பெண் மக்கள் சுமார் ஆயிரம் பேருக்கு மேலிருக்கலாம்.
பக்தியுள்ள போலீஸ் அதிகாரிகள்
முனிசிபாலிடியாரால் கூடிய வரை ஊர் பாதுகாக்கப் படுகிறது. ஆங்காங்கே முக்கியமாகக் கூட்டம் நெருக்கும் இடங்களில் போலீசார் நின்று செளகரியம் செய்து வருகின்றனர்.
போலீஸ் அதிகாரிகள் தெய்வ பக்தியுடை யவராகவும், நேர்மையாகவும், சாந்தமாகவும் நடந்து கொள்வதாலும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியேற் பட்டிருக்கிறது.
ரயில் வசதி மிகவும் குறைவு. கழிபட்ட வண்டிகளில் கணக்கற்ற ஜனங்களை ஏற்றிக் கொண்டு வந்து தள்ளினர்.
விழுப்புரத்தில் இருந்தும் காட்பாடி யிலிருந்தும் விடப் படும் வண்டிகளின் நிலைமை எழுதுந் தரத்தன்று.
சுமார் பதினைந்துக்கு மேற்பட்ட கோஷ்டிகள் சுவாமிக்குப் பின் வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
காலை விழாவில் வருபவர் இரவில் வருவதில்லை. இரவில் வருபவர் காலை விழாவில் ஓய்வெடுத்துக் கொள்கின்றனர். எல்லாக் கோஷ்டிகளிலும் கேட்பவர்கட்குக் குறைவில்லை.
உணவும் மடங்களும்
“சோறு மணக்கும் மடங்களெலாம்” என்று முற்காலப் பெரியார் ஒருவர் கூறிய தமிழ்வாக்கு ஈண்டு கண் கூடாகும்.
மடங்கள் தோறும் சோறிடப்படுகிறது. இங்கு வருகிற எந்த ஜாதியாருக்கும் உபசாரத்தோடு சாப்பாடு கொடுக்கப் படுகிறது.
பிராமண குலத்தவரில் ஆண் பெண் ஆகிய இருபாலாருக்கும் கோட்டையூர் மெ.க. வகையாரின் சத்திரத்தில் இரவு பகல் எந்த நேரத்திலும் அறுசுவையுண்டி அளிக்கப் பெறுகிறது.
சாதுக்களுக்குக் காரைக்குடி சா.நா.சா. வகையாரின் சாதுக்கள் மடத்தில் நல்ல உண்டி உதவப் பெறுகின்றது.
நகரத்தாருக்குப் பல இடங்களில் சுவை யுணவு நல்கப் படுகிறது.
கோவிலூர் மடத்தைச் சார்ந்த ஈசானிய மடத்திலும் பிற்பல இடங்களிலும் சாப்பாடு நடை பெறுகிறது.
நகரத்தாருக்கு நடைபெறும் விருந்துகளில் ராவ்பகதூர் ஸ்ரீமான் பெ.க.அ. சித. ஜாகையில் நடை பெறும் விருந்தே முக்கிய மானதாகும்.
நகரத்தாரின் மடமாகிய ஓயா மடத்தில் ஏழாந் திருவிழா முதல் மகேசுவர பூஜை நடைபெறுகின்றது.
ஜாதி சமய பேதமின்றி வந்தவர் கட்கெல்லாம் உணவளிக்கப் படுகிறது.
நகரத்தாரின் பேருதவி பெற்று நடை பெறும் அறுபத்து மூவர் மடம், பவளக் குன்று மடம் முதலிய இடங்களிலும் உணவளிக்கப் படுகின்றது.
சமயப் பிரசாரங்கள்
இந்தத் திரு விழாவே ஜனக் கூட்டத்திலும் மற்ற வசதிகளிலும் தென்னாட்டிலே நடைபெறும் பிற உற்சவங்களை விடச் சிறப்பு டையதாக இருப்பதால், கிறிஸ்தவர்கள் மிகக் குறிப்பாக இருக்கிறார் களென்று தெரிகிறது.
இவ்வூரிலேயே டேனிஷ் மிஷன் சர்ச் இருக்கிறது. அதைச் சார்ந்த உபதேசியார்களும் இருந்து வருகின்றனர்.
இத் திருவிழாவுக் கென்றே பலவகைப் பட்ட ஆயிரக் கணக்கான பிரசுரங்களும் அச்சிட்டுப் பரப்பு கின்றனர். வீதி தோறும் வாத்தியப் பெட்டிகளுடன் கிறிஸ்தவ மத போதகர்களைக் காணலாம்.
காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின் பிரசாரகர் நெ.சி. விசுவநாத சாஸ்திரி களும் கடைய நல்லூர் ஹரிஹர சிவமும் ஆங்காங்கே உபந் யாசங்கள் புரிந்தனர்.
மேற்படி சங்கத்துப் பிரசுரங்களும், காரைச் சிவ னடியார் திருக் கூட்டத்து ஜீவ காருண்யப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
இங்கு வசதி யாகயிருந்து உபந் யாசம் நடக்கத்தக்க இடம் சத்திவிலாச சன்மார்க்க சபைக் கட்டிடமேயாகும். இதில் பல உபந்யாசங்கள் தினந்தோறும் நடைபெறுவதுண்டு
பன்னிரண்டாம் தேதி காலையில் சுந்தரமூர்த்தி ஓதுவார் தலைமையில் சுவாமி அற்புதா நந்தாவும், சுவாமி மயில் சுந்தரமும், காவேரிப்பாக்கம் கோவிந்தராஜ முதலியாரும், ராமலிங்க சுவாமிகளின் பிரபாவத்தைப் பற்றி உபந் யாசங்கள் புரிந்தனர்.
மறுநாள் காலை காவிய கண்ட கணபதி சாஸ்திரிகள் தலைமையில் மதுரை திருப்புகழ் சாமி ஐயர் திருப்புகழைப் பற்றியும், சொ. முருகப்ப செட்டியார் ‘தமிழ் நாட்டின் நிலை’ என்பது பற்றியும் பேசினர். பதினான்காம் தேதி பிற்பகல் கோட்டையூர் கிரீச பாகவதரவர்களால் ‘வல்லாள மகாராஜா சரித்திரம்’ கதா ரூபமாக நடத்திக் காட்டப்பட்டது.
முந்திய ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு விசேஷமாகச் செய்யப் பெற்றவைகளுள் முதலாவதாக குறிப்பிடத் தகுந்தது கோவிலினுள் மின்சார விளக்குகள் போடப் பெற்றிருப் பதேயாகும்.
இதனை கோட்டையூர் அ.க. வகையார் தங்கள் செலவில் (ரூபா அறுபத்தைந் தாயிரம்) அமைத்திருக் கிறார்கள்.
தீபதரிசன சமயத்தில் இவ்விளக்குகள் ஏற்றப்பட்ட போது ஆனந்தமாக இருந்தது.
மாட்டுச் சந்தை
இப்பகுதியில் கார்த்திகை விழாவையொட்டி நடைபெறும் மாட்டுச் சந்தையே பெரிதாகத் தெரிகிறது. மலையில் பிராகாரத்தில் இரண்டாவது மைலில் இச்சந்தை கூட்டப்படுகிறது. இவ்வருஷத்தில் ரூபா 5000 முனிசி பாலிடியாரால் குத்தகை விடப்பட்டி ருக்கிறது.
மாடு ஒன்றுக்கு ரூபா ஒன்று வசூலிக்கப் பட்டதில் ரூபா 7000 வசூலாகியிருப்பதாகத் தெரிகிறது. அருமையான மாடுகள் வந்திருந்தன. எந்த மாதிரியான மாடும் இங்கு வாங்கலாம்.
சுமார் 1500 ரூபா விலையுள்ள ஜோடிகளும் வந்திருந்தன. இதைத் தவிர குதிரைகளும் எருமைகளும் வந்திருந்தன. ஆனால் குதிரைகள் கழிபட்டன வேயாகும். மயில் குஞ்சுகளும் மயில்களும் ஏராளமாக விற்கப்பட்டன.
கிரி வலம்
இங்கு வந்த பதினாயிரக்கணக்கான ஜனங்களும் மலையில் ஏற்றப்படும் தீப தரிசனத்தையே முக்கியமாகக் கருதுகின்றனர். எனினும் யாவரும் அருணகிரியைப் பிரதக்ஷணம் செய்வதிலும் பேரூக்கம் கொள்கின்றனர். இப்பிராகாரம் சுமார் எட்டு மைல் தூரமிருக்கிறது. இந்த வழி முற்றும் ஒழுங்கான ரோடு போடப்பட்டிருந்தாலும் மழை பெய்தால் சேறு படுகின்றது.
கற்பாறை யாகவுள்ள சில விடங்கள் தவிர மற்ற இடங்கள் யாவும் மழையாலும் ஜனங்களின் அளவு கடந்த போக்கு வரத்தாலும் குழம்பாகி உழவு செய்யப்பட்ட நீர் நிறைந்த வயல் போலக் காணப் படுகின்றது.
பிராகார வீதியில் இருபுறங்களிலும் ஏழை ஜனங்கள் உட்கார்ந்தி ருக்கின்றனர்.
அவயவப் பழுதுள்ள மக்கள் பலரைச் சர்வ சாதாரணமாகக் காணலாம். கையற்றதும் காலற்றதும் விழியிலாததும் மூக்கில்லா ததுமான பல பிறவிகளைக் காண்பது இங்கு தான் எளிது. இறைவன் படைப்பிலுள்ள குறைபாடுகளைக் காண்பதற்குத் திருவண்ணா மலையின் பிரதக்ஷணமே தகுந்த இடமெனத் தோன்றுதல் கூடும்.
கற்றாழை இலைகளைப் பரப்பி அதன்மேல் கண்மூடிப் படுத்திருக்கிற சாமியார்களும், ஆட்கள் நெருங்கி வருகிற சந்தர்ப்பங்களில் கண்மூடி மெளனியாக வீற்றிருக்கும் ஞானிகளும், ஒரு காலில் நின்று தவம் புரிபவரும், தல புராணத்தைக் கையில் வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்த பார்வையுடன் காசு கொடுப்பார் யாரென்ற கருத்துடன் படித்துக் கொண்டிருக்கும் சாதுக்களும், யோக தண்டங்களுடனும் நீண்ட கைவிரல் நகங்களுடனும் ஜபமணியுருட்டுவோரும் அங்கே மலிவாக இருக்கின்றனர். சில ஏழைப் பெண் மக்கள் தங்கள் பிள்ளைகளைப் படுக்கச் செய்து அதன் முகத்திலும் உடலிலும் எண்ணெயில் நனைக்கப்பட்ட காகிதங்களை ஒட்டி அதன் மேல் சிற்சில இடங்களில் குங்குமத்தையும் தடவி சலம் பிடித்த புண்ணுள்ள தேகமெனக் காண்போர் நினைக்குமாறு செய்திருப்பதையும் ஆங்காங்கே காணலாம்.
வலம் வரும் பாதை
இந்தப் பிராகாரத்தில் பலவிதமான குளங்களும், குட்டைகளும் மண்டபங்களும் இருக்கின்றன. சில சிறு கோவில்களு முண்டு. விநாயகர் ஆலயங்களும் எந்தை முருகன் திருக் கோயில்களும் காணப்படுகின்றன. சிற்சில இடங்களில் நந்தி மட்டும் இருப்பதையும் காணலாம்.
வழியில் ஓரிடத்தில் கற்கள் குவிக்கப் பட்டிருக்கின்றன. அங்கு ஒருவன் இருந்து, ‘அடுப்புக் கூட்டுங்கள், பிள்ளை பிறக்கும்’ என்று கூறுகிறான்.
வருகிறவரில் பெரும்பாலாரும் மூன்று கற்களை யெடுத்து அடுப்புப் போல வைத்து அதன்மேல் மற்றொரு கல்லை வைத்து விட்டு காலணா வரி கொடுத்து அப்பாற் செல்கின்றனர். இந்த வேடிக்கைகளின் முதற் பகுதியைச் சுமார் நாலரை மைல் தூரம் வரை கண்டு களித்த பின்னர் அணி யண்ணாமலை கோவில் வருகின்றது.
தினை மா
அணியண்ணாமலைக் கோவில் மிக அழகாக இருக்கின்றது. இவ்வழகிய திருக்கோவிலின் கோபுரம் தெரிகிற இடம் முதல் கடைகளும் கடைத் தெருவும் தோன்றுகின்றன. தேங்காய் பழம் முதலிய ஆராதனைப் பொருள்களை வழங்கும் கடைகளே பெரும் பாலனவாகும்.
ஆனால் நாட்டுப்புறத்து ஜனங்கள் தினையை இடித்துத் தெள்ளிய மாவைப் பெட்டி பெட்டியாக வைத்து விற்கிற காட்சியானது கானவர் குலக் கொடியான வள்ளி நாயகியாரை நினைப்பூட்டுகிறது. தெள்ளிய தினை மாவும் வெள்ளிய அரிசி மாவும் அணியண்ணாமலைக் கோவில் வாயில் வரை விற்கப்படுகின்றன.
அத்தினைமாவைக் கண்டவுடன் மாவிளக்கு வைக்கும் நினைப்பு யாரையும் விடாது. தினைமா, சர்க்கரை, தேங்காய் நெய், தாமரை நூல் திரி ஆகிய யாவும் அந்த இடத்திலேயே கிடைக்கின்றன. இவற்றை யாவும் வாங்கி ஒரு இலையில் வெகு எளிதாக மாவிளக்கு வைக்கிறார்கள்.
பின்னரும் முன் குறிப்பிட்டிருக்கிற எளிய ஜனங்களை வழியின் இருமருங்கினுங் காணலாம். வழி நடக்கும் ஜனங்கள் தேங்காய், பழம், காசு, பொரி அவல் கடலை முதலி யவற்றை ஏழை ஜனங்கட்கு வழங்கிக் கொண்டே செல்கின்றனர்.
வசந்த உற்சவ காலத்திலும் கார்த்திகையின் மறுநாளும் சுவாமி கிரிப் பிரதக்ஷ¢ணம் வரும் போது தங்குவதற்காக ஒரு பெரிய மண்டப மிருக்கிறது. ஆனால் வேறு மண்டபங்கள் விசேஷமாக இப்பகுதியில் இல்லை.
எம வாதைக் கதவு
ஊரை நெருங்கி வருகிறபோது வேடிக்கையான நிகழ்ச்சிக்கு ஒரு இடமிருக்கிறது. அதுதான் ‘எமவாதைக் கதவு’. இது வெள்ளைக் கற்களால் பழைய காலத்தில் கட்டப்பட்டது. இதற்கு வெளியில் ஒரு சிறு நந்தி யிருக்கிறது. இதற்கு நேரே ஒரு கோவில் இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
கோவிலுக்கு முன்னாலுள்ள நந்தியின் முகம் தெரியும் பொருட்டு துவாரம் விட்டுக் கட்டப்பட்டிருக்கிற ஒரு மிகச் சிறிய மண்டபமே இப்போது எமவாதைக் கதவாகிவிட்டது.
கொஞ்சம் முன் பின்னாக ஒரு அடி அகலமுள்ளதான அந்த வழியில் மனிதர் நுழைய முயல்வது வேடிக்கையாகவே இருக்கிறது. இந்த வழியானது நாலைந்தடி நீளமிருப்பதால் கை கால்களின் உதவியின்றியே உடலால் நகர வேண்டியிருக்கிறதுவிசேஷமாக ஆண் மக்களே நுழைகின்றனர். பெண் மக்கள் அவ்வளவாக நுழையவில்லை.
ஜனக் கூட்டத்தினிடையே பெண் மக்கள் நுழைய முடியாது. இந்த எம வாதையில் நுழைவோர் காலணா வரி செலுத்த வேண்டும். இதனைத் தேவஸ்தானத்தார் பதினாறு ரூபா குத்தகைக்கு விட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
பெரிய மலையைச் சுற்றி நாற் புறத்திலும் சிறுசிறு மலைகள் பல காணப்படுகின்றன காடும், வெளியான நிலப்பரப்பும், பசுமை நிறம் பொருந்திய குன்றுகளும், கண்ணுக்கு விருந்து செய்கின்றன.
பெரிய மலையின் அடிப்பாகத்தில் செழுமை பொருந்திய செடிகளும் சிறு மரங்களும் அடர்ந்து பச்சிலை நிறைந்து விளங்குந்தோற்றம் இன்பம் பயக்கின்றது.
பாதையில் இருமருங்கிலும் மரங்கள் வரிசையாக வளர்க்கப் பெற்றிருப்பதாலும், அதனிடையே ஆற்றில் பெருகி ஒரு வழிப்பட்டுச் செல்கிற நீரின் ஒழுங்கைப் போல் ஜனங்கள் நிறைந்து செல்வதாலும் காண்போர் உள்ளம் களிப்புறுகின்றது.
நெய்க் குடங்கள்
மலையில் ஏற்றப்படும் தீபத்திற்கு தேவஸ்தானத்திலிருந்து நெய் சிறிதே அனுப்பப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு தரும ஸ்தாபனங் களிலிருந்தும் நெய்க் குடங்கள் அனுப்பப் படுகின்றன.
பிரார்த்தனை செய்து கொள்பவர் அனுப்பும் குடங்களே எண்ண முடியாதனவாகும். தீபத்தன்று காலை முதல் மாலை வரையும் நெய்க் குடங்கள் சென்ற வண்ணமாக இருக்கின்றன. இக்குடங்கள் யாவும் மலையில் வாசஞ் செய்கின்ற வேடர்களே கொண்டு செல்கின்றனர். மலையின் உச்சியில் இருக்கிற செப்புக் கொப்பராவில் இந்நெய் கொட்டப்பட்டு தீபம் போடப்படுகிறது.
கீழிலிருந்து நெய்க் குடங்களை அனுப்புபவர்கள் சூடத்தினை வாங்கிப் பொடியாக்கி நெய்க் குடத்தினுள் கொட்டி நன்றாகக் கலந்து விடுகின்றனர். விளக்கேற்றுவதற்காகத் துணி வாங்கி அதனைத் துண்டு துண்டாகக் கிழித்து அதனையும் நெய்க் குடத்தினுள் போட்டு விடுகின்றனர்.
நெய்யாவது துணியாவது திருட்டுப் போகாதிருப் பதற்காகவே இப்படிச் செய்யப்படுகிறது.