Home Blog Page 19

பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

1001291839 - 2026

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி கோயிலில் இன்று மாசி பூரம் பொங்கல் பெருவிழாவில் திருவனந்தபுரத்தில் மாநகர் முழுவதும் பல லட்சம் பெண்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்தினர்.

திருவனந்தபுரம் நகரம் முழுவதும் பெண்கள் பொங்கலிட்டு ஆற்றுகால் அம்மனை வழிபடும் இந்த விழா பார்க்க மிக அற்புதமான இந்து கலாச்சாரம் நிகழ்ந்த விழாவாக அமைந்தது.இதற்காக திங்கட்கிழமை மாலை முதலே பெண்கள் திருவனந்தபுரத்தில் குவிந்தனர். இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டதாக கூறப்படுகிறது

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் பொங்காலை வழிபாடு நடப்பது வழக்கம். பொங்காலை வழிபாட்டின்போது பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதால் பெண்களின் சபரிமலை என ஆற்றுகால் கோயில் அழைக்கப்படுகிறது.

தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி தேவி இத்திருத்தலத்தில் பகவதி அம்மனாக வீற்றிருக்கிறார். மதுரை சென்ற கோவலன் மகாராணியின் கால் சிலம்பை திருடிவிட்டதாக தவறாக குற்றம்சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். கணவனுக்கு நேர்ந்த அநீதியை கண்டு கோபத்தால் கொந்தளித்த கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு தனது ஒற்றைக்கால் சிலம்புடன் அரண்மனை சென்றார். அங்கு தன் கணவன் கோவலன் கள்வன் அல்ல என உணர்த்த தனது கால் சிலம்பை வீசி எறிந்தார். அநீதி இழைத்து விட்டோமே என உணர்ந்த பாண்டிய மன்னன் மரணமடைந்தார்.அதைத்தொடர்ந்து மகாராணி மரணம் அடைந்தார். சினம் தணியாத கண்ணகி மதுரையை தீக்கிரையாக்கிவிட்டு கோபாவேசத்துடன் தெற்கு நோக்கி சென்று திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆற்றின் கரையில் இளைப்பாறினார். அப்போது அந்த ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முதியவர் கண்ணகி தெய்வம் என்பதை அறிந்து அவரை ஆற்றுபடுத்தி அங்கேயே குடியமர்த்தினர்


ஆற்றங்கரையில் அமைந்த கண்ணகி தேவியை ஆற்றுகால் பகவதி அம்மனாக மக்கள் வழிபடத்தொடங்கினர். ஆற்றுகால் பகவதி அம்மன் சாந்த சொரூபியாக, பெண்களுக்கெல்லாம் காவல் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். ஆற்றுகால் தேவிக்கு ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் பூரம் நாளில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டுவருகின்றனர். ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருந்திருவிழா கடந்த மாதம் 23-ம் தேதி மாலை 5.30 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டி குடியிருத்தும் நிகழ்வுடன் தொடங்கியது. கண்ணகி தேவியின் வரலாற்றை தோற்றம் பாட்டாக தினமும் பாடுவது இந்த விழாவின் முக்கிய சடங்காக பார்க்கப்படுகிறது.

தினமும் அதிகாலை 4.30 மணி தொடங்கி மதியம் 1-மணிவரையும், மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நள்ளிரவு 1 மணி வரையும் சிறப்பு பூஜைகள், களபாபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.

பொங்காலை விழாவுக்காக திருவனந்தபுரம் நகரத்தை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கிவைத்த மேயர் வி.வி.ராஜேஷ்
9-ம் நாள் விழாவான இன்று அதிகாலை 4.30 மணிக்கு பள்ளி உணர்தல், 5 மணி நிர்மால்ய தரிசனம், 5.30 மணி அபிஷேகம், 6.05 மணி தீபாராதனை, 6.40 மணிக்கு உஷபூஜை, தீபாராதனை, 8.30 மணி பந்தீரடி, தீபாராதனை, 9.15 மணிக்கு சுத்த புண்யாகம், காலை 9.45 மணிக்கு அடுப்பு வெட்டி பண்டார அடுப்பில் அம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி கோவில் மேல்சாந்தி தலைமையில் நடந்தது. பின்னர் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட துவங்கி அம்மனை வழிபடுகின்றனர். ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்காலையிடுவதற்காக பெண்கள் விரதமிருந்து வருவது வழக்கம். கோயில் வளாகம் மட்டும் அல்லாது திருவனந்தபுரம் நகரம் முழுவதும் பெண்கள் பொங்கலிட்டு ஆற்றுகால் அம்மனை வழிபட்டனர். அதற்காக அதிகாலை முதலே பெண்கள் திருவனந்தபுரத்தில் குவிந்து பொங்கல் இட தயாராகினர்.இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் கண்டதாக கூறப்படுகிறது.பொங்கால் மஹோத்ஸவம் நடைபெறும்போது கண்ணகி தேவி பாண்டிய மன்னனை வதம் செய்யும் நிகழ்வு தோற்றம் பாடலாக பாடப்படுகிறது.

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா
மதியம் 2.15 மணிக்கு உச்ச பூஜை, பொங்காலை நைவேத்யம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திருவனந்தபுரம் நகரம் முழுவதும் பொங்கலிட்டபின் நைவேத்யம் அம்மனுக்கு சமர்ப்பிக்கும் விதமாக கோயிலில் இருந்து புனிதநீர் பொங்காலை பானைகள் மீது தெளிக்கப்படும். இதற்காக 350 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 3.10 மணி முதல் இரவு 7 மணிவரை சந்திரகிரகணம் என்பதால் கோயில் திருநடை அடைக்கப்பட்டிருக்கும். இரவு 7 மணிக்கு நடை திறக்கப்படும். 7.30 மணிக்கு தீபாராதனை, 8.30 மணிக்கு குத்தியோட்டம், சூரல்குத்து நடைபெறுகிறது. இரவு 10.45 மணிக்கு அம்மன் எழுந்தருளல் நிகழ்வு நடக்கிறது.நாளை புதன்கிழமை இரவு திருவிழா நிறைவடைகிறது.

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

thiruparankundram murugan temple - 2026

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

2026-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று பிற்பகல் தொடங்கி மாலை வரை நிகழ உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கியக் கோவில்களில் நடை அடைக்கப்பட்டு, பரிகார பூஜைகள் செய்யப்பட உள்ளன.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், கிரகண காலத்தை முன்னிட்டு இன்று காலை 8:20 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

இன்று காலை 8:20 மணி முதல். கிரகணம் முடிந்து சுத்திகரிப்பு பூஜைகள் முடிவடைந்த பின், இன்று இரவு 7:30 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும். அதன் பிறகு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பரிகார பூஜைகள் நடைபெறும். அதன் பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று நிகழும் இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 3:20 மணிக்கு தொடங்கி, மாலை 6:48 மணிக்கு நிறைவடைகிறது. கிரகண காலத்தில் கோவில்களில் பூஜைகள் தவிர்க்கப்படுவது வழக்கமான நடைமுறை என்பதால்,
இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மட்டுமின்றி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களிலும் இன்று காலை முதல் நடை சாத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை காலை முதல் வழக்கம் போல் அனைத்து கால பூஜைகளும், தரிசனமும் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாஜக., அரசு அமைந்ததும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்; மம்தாவின் குண்டர்களுக்கு சிறை: அமித் ஷா

amitsha in kolkatta meeting - 2026

வங்காளத்தை ஊடுருவல்காரர்களின் புகலிடமாக மாற்றிய மம்தா பானர்ஜி அரசு, பதவியில் இருந்து வெளியேற்றப்பட உள்ளது என்று குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெற்கு 24 பர்கானாஸில் “பரிவர்த்தன் யாத்திரை” தொடங்கி வைத்து உரையாற்றினார். மேலும், மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக., ஆட்சிக்கு வந்ததும், ஊடுருவல்காரர்களை கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம் என்று அமித் ஷா சூளுரைத்தார். 

பாஜகவின் பரிவர்த்தன் யாத்திரைக்கு பொதுமக்கள் அளித்த ஆதரவு, வங்காளம் மாற்றத்திற்குத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது. ஊடுருவல் மற்றும் ஊழலை தனது கொள்கையாகக் கொண்டு, வேலைவாய்ப்பைப் பறித்து, இளைஞர்களின் உரிமைகளை மீறுவதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று குறிப்பிட்டு, தெற்கு 24 பர்கானாக்களில் இருந்து ‘பரிவர்த்தன் யாத்திரை’யைத் தொடங்கி வைத்து உரையாற்றினார் அமித் ஷா.  

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாஜக., கடுமையாக வேலை செய்து வருகிறது. மேற்கு வங்கத்துக்கு, தமிழகத்துடன் சேர்த்து விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும், எதிர்க்கட்சியான பாஜக., இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாஜக.,வின் ‘பரிவர்த்தன் யாத்திரை’ நிகழ்ச்சியில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  பங்கேற்றுப் பேசினார். அவரது உரையில் இருந்து…

மேற்கு வங்கம் வங்கதேச எல்லையில் உள்ள ஒரு மாநிலம். அதன் பாதுகாப்பை ஆளும் திரிணமுல் காங்கிரசால் உறுதி செய்ய முடியவில்லை. மாநிலத்தை ஊடுருவல்காரர்களின் சொர்க்கமாக அக்கட்சி மாற்றி விட்டது. சட்ட விரோத குடியேற்றத்தை ஆதரிக்கும் அக்கட்சியால், மாநிலத்தின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது. பாஜக.,வால் மட்டுமே மேற்கு வங்கம் போன்ற எல்லையோர மாநிலத்துக்கு பாதுகாப்பை வழங்க முடியும்.

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தத்துக்குப் பின், பட்டியலில் இருந்து மட்டுமே வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கே முதல்வர் மம்தா பானர்ஜி பதற்றமடைகிறார். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக., ஆட்சிக்கு வந்தவுடன், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்; ஊழலையும் ஒழிப்போம். இது, பா.ஜ.வின் வாக்குறுதி. வங்காளத்தில் பாஜக அரசு அமைந்தவுடன், மம்தா பானர்ஜியின் குண்டர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

தேர்தலில் திரிணமுல் காங்கிரசை வெற்றி பெறச் செய்யக் கூடாது. இந்தத் தேர்தலில் திரிணமுல் காங்கிரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். பாஜக.,வை அரியணையில் அமர வைக்க வேண்டும். 

பட்ஜெட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ₹80 கோடியும் மதரஸாக்களுக்கு ₹5700 கோடியும் ஒதுக்கியதன் மூலம் மம்தா அரசு அனைத்து திருப்திப்படுத்தும் வரம்புகளையும் தாண்டிவிட்டது.

ஆர்.ஜி. வரிகளாக இருந்தாலும் சரி, சந்தேஷ்காலியாக இருந்தாலும் சரி, மம்தா அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர்.

மம்தாவின் அரசாங்கம் CAA-வை எதிர்த்தது, ஆனால் மோடிஜியின் அரசாங்கம் மத்தியில் உள்ளது. ஒரு இந்து அகதியின் குடியுரிமையை கூட யாராலும் பறிக்க முடியாது. வங்காளத்தில் பாஜக.,வின் பரிவர்த்தன் யாத்திரையின் நோக்கம், மாநிலத்தை ஊடுருவல், ஊழல் மற்றும் சிண்டிகேட் ஆட்சியிலிருந்து விடுவிப்பதாகும்.

பாஜக., அரசு அமைந்தவுடன், வங்காளத்தில் காலியாக உள்ள அனைத்து அரசுப் பதவிகளும் டிசம்பர் 2026க்குள் நிரப்பப்படும்; இதனுடன், வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வும் வழங்கப்படும். மம்தா அரசாங்கம் அரசு ஊழியர்களை ஆறாவது சம்பளக் குழுவில் சிக்க வைத்துள்ளது, மேலும் பாஜக அரசாங்கம் அமைந்தவுடன் 45 நாட்களுக்குள் ஏழாவது சம்பளக் குழு செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

T20 WC 2026: அரையிறுதிப் போட்டிகள் எப்படி?

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி
சூப்பர் 8 ஆட்டங்கள் 02.03.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          27.02.2026 அன்று கொழும்புவில் நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி (19.3 ஓவர்களில் 161/6) நியூசிலாந்து அணியை (20 ஓவர்களில் 159/7) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 28.02.2026 அன்று பல்லேகலேயில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி (20 ஓவர்களில் 212/8) இலங்கை அணியை (20 ஓவர்களில் 207/6) 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இருந்தபோதிலும் குறைந்த ரன் ரேட் காரணமாக பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறவில்லை. குரூப் 2வில் இருந்து இங்கிலாந்து (முதலிடம்), நியூசிலாந்து (இரண்டாமிடம்) ஆகிய இரண்டு அணிகளும் தேர்வாயின. இலங்கை அணி தேர்வாகாததால் இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் இந்தியாவிலேயே நடக்கும்.

          நேற்று (01.03.2026) டெல்லியில் நடைபெற்ற ஜிம்பாபே, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் தெனாப்பிரிக்க அணி (17.5 ஓவர்களில் 154/5) ஜிம்பாபே அணியை (20 ஓவர்களில் 153/7) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்று, குரூப் 1 பிரிவில் முதலிடத்தைத் தக்கவைத்துகொண்டது.

          நேற்று கொல்கொத்தா ஈடன்கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த மற்றொரு சூப்பர் 8 ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. பூவாதலையா வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதனால் முதலில் ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் (33 பந்துகளில் 32 ரன்) மாற்றும் ரோஸ்டன் சேஸ் (25 பந்துகளில் 40 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். அவர்களுக்குப் பின்னர் வந்த வீரர்களான ஷிம்ரொன் ஹெட்மயர் (12 பந்துகளில் 27 ரன்), ரூதர்போர்ட் (9 பந்துகளில் 14 ரன்), ரொவ்மென் போவெல் (19 பந்துகளில் 34 ரன்) ஜேசன் ஹோல்டர் (22 பந்துகளில் 37 ரன்) எடுத்தனர். 12ஆவது ஓவரை வீசிய பும்ரா ஹெட்மயர், சேஸ் ஆகிய இருவரின் விக்கட்டுகளை எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மே.இ. தீவுகள் அணி 4 விக்கட்டுகள் இழப்பிற்கு 195 ரன் எடுத்தது.

          இரண்டாவதாக விளையாட வந்த இந்திய அணியின் வீரர்கள் நிலைத்து ஆடவில்லை, தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா (11 பந்துகளில் 10 ரன்), இஷான் கிஷன் (6 பந்துகளில் 10 ரன்), சூர்யகுமார் யாதவ் (16 பந்துகளில் 18 ரன்) ஆகியோர் விரைவாக ரன் சேர்க்கவேண்டும் என்ற துடிப்பில் விக்கட்டுகளை இழந்து வெளியேறினர். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் (50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன், 12 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினார். அவருக்கு திலக் வர்மா (15 பந்துகளில் 27 ரன்), ஹார்திக் பாண்ட்யா (14 பந்துகளில் 17 ரன்), ஷிவம் துபே (4 பந்துகளில் 8 ரன்) ஆகியோர் நல்ல கம்பனி கொடுத்தனர். இதனால் இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 199 ரன் எடுத்து வெற்றிபெற்றது.

          சஞ்சு சாம்சனின் இன்றைய ஆட்டம் இந்திய வீரர்கள் எப்படி ஆடவேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. 18ஆவது ஓவரில் ஷிவம்துபே அடித்த இரண்டு ஃபோர்கள் இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்தது. மே.இ. தீவுகள் அணி விளையாடிய போது பும்ரா எடுத்த இரண்டு விக்கட்டுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஆயினும் ஒரு அணியாக இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை. அர்ஷதீப்பின் ஒரு ஓவரில் 24 ரன் கொடுத்தது இந்திய அணிக்கு கடினமான இலக்கைத் தந்தது. பிடிக்காமல் விட்ட கேட்சுகள் இந்திய அணிக்குப் பாதகமாக அமைந்தன.

          சூப்பர் 8இல் குரூப் 1இல் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தையும் இந்திய அணி இரண்டாமிடத்தையும் பெற்றன. அரையிறுதி ஆட்டங்கள் 4 மற்றும் ஐந்து தேதிகளில் நடைபெற உள்ளன.

முதல் அரையிறுதிப் போட்டி கொல்கொத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 4ஆம் தேதி இரவு 0700 மணிக்கு நடைபெறும்.

இரண்டாவது அரையிறுதி ஆட்டம் 5ஆம் தேதி இரவு 0700 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறும்.  

செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

sengottai thiruvilakku poojai - 2026

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் காலை 8மணிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாய் கிளினிக் சித்தமருத்துவா் கலா ஏற்பாட்டில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. அதனை தொடா்ந்து ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டது.

பின்னா் திருவாசகி சிவபகவதி தலைமையில் குழுவினா் திருவாசகம் முற்றோதுதல் சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலை 6மணிக்கு உலக நன்மை வேண்டி மாபெரும் திருவிளக்கு வழிபாடு நடந்தது. முதல் திருவிளக்கினை சித்த மருத்துவா் டாக்டர் சிந்து (எம்டிஎஸ்) .ஏற்றி துவக்கி வைத்தார்.

திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சியை முத்துலெட்சுமி, ஸ்ரீதேவி, புனிதா, பழனியம்மாள் பேச்சியம்மாள், போட்டோகிரியேட்டர்தேவி, உஷா ஆகியோர் நடந்தினா். பின்னா் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் தங்கையா, இராம்நாத், ஆடிட்டர் சங்கர், கோபாலகிருஷ்ணன், ராஜகோபால், குருவூர்கண்ணன், வீரபுத்திரன், கணேசன், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனா்.

திருவிளக்கு வழிபாட்டில் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.

மதுரையில் என்ன பேசினார் பிரதமர் மோடி?!

pm modi in madurai meet - 2026

மதுரை விமான நிலைய வளாகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசிய பேச்சு விவரம்:

மதுரை விமான நிலைய வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறைக்கான திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .

விழாவில், பிரதமர் ரூபாய் 4 ஆயிரத்து,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மதுரை விமான நிலைய வளாகத்திற்குள் அமைக்கப் பட்டுள்ள அரசு நிகழ்ச்சி மேடைக்கு வந்தடைந்து ரூ.4,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.

பின்பு, தேசிய நெடுஞ்சாலை-332A-வில் மரக்காணம்-புதுச்சேரி பிரிவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை-87-ல் பரமக்குடி-ராமநாதபுரம் பிரிவு ஆகியவற்றை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் மறுசீரமைக்கப்பட்ட 8 ரயில் நிலையங்களை பிரதமர் திறந்து வைத்து, சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர் 4-வது பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் என் சகோதர சகோதரிகளே வணக்கம் என் சகோதர சகோதரிகளே வணக்கம் புனித மதுரை மாநகரான இந்த பழமையான நகரில் வருவதை நான் பெரும் கௌரவமாக உணர்கின்றேன் மீனாட்சி அம்மைக்கும் நான் தலை வணங்குகிறேன் தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தின் பெருமிதமான அத்தியாயம் இன்று நாம் 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மேற்பட்ட சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணம் செய்திருக்கின்றோம் .

இந்த திட்டங்கள் மாற்றி அமைத்து நாட்டின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தி பல லட்சம் மக்களின் வாழ்க்கையை உருவாக்கக்கூடிய வகையிலே வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் சந்தைகளை சென்றடைய விவசாயிகளுக்கு மேம்பட்ட சாலைகள் சுற்றுலா பயணிகளும் புனித யாத்திரை மேற்கொள்வோருக்கும் சுலபமான பயணம் வர்த்தகத்துக்கு உகந்த வேகமான போக்குவரத்து அந்த வகையில் உயர்தர கட்டமைப்புகளை உருவாக்குவது என்பது மக்களுக்கு அதிகார பங்களிப்பை அமைத்து தருவது என்று பொருள்.

நண்பர்களே கடந்த 12 ஆண்டுகளாகவே இந்திய அரசாங்கம் தமிழ்நாட்டை நெடுஞ்சாலை வலை பின்னலில் மகத்தான முதலீடுகளை செய்து வந்திருக்கின்றது.

2014 ஆம் ஆண்டு முதல் 4000 கிலோமீட்டர் அதிகமான அளவில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டிருக்கின்றன இரண்டு பெரும் இன்று திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதிலேயே நான் தேர்வு வகை அடைகின்றேன்.

முதலாவதாக மரக்காணம் புதுச்சேரி பிரிவிலே 2100 கோடி ரூபாய் முதலீட்டில் நான்கு வழி சாலை திட்டம் இது தமிழ்நாடு புதுச்சேரியின் கரைப்பகுதியில் சுற்றுலாத்துறை வர்த்தகம் பொருளாதாரத்தை பலப்படுத்தும் அடுத்ததாக பரமக்குடி ராமநாதபுரம் பாதையை நான்கு வழி பாதையாக மாற்றுதல் இந்த திட்டத்தில் நாங்கள் 1800 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கின்றோம்.

ராமேஸ்வரம் தனுஷ்கோடி ஆகிய இடங்களை சென்றடைவதை கணிசமாக இது மேம்படுத்துகின்றது. மேலும் , இதனால் புனித பயணம் மேற்கொள்வோருக்கு மற்றும் கடல் சார் பொருட்களின் போக்குவரத்தையும் இது மேம்படுத்தும்
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை சரித்திரபூர்வமான ஒரு மாற்றத்தை சந்தித்திருக்கின்றது இது நவீன வசதிகளை.திறந்து மக்கள் சார்ந்த போக்குவரத்து முறையாக உருமாறி இருக்கின்றது.

எங்கள் அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பிறகு கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்திருக்கின்றது 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரையிலான வருடாந்திர ரயில்வே நிதி ஒதுக்கீடு வெறும் 880 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது 2026 27 ஆம் ஆண்டிலேயே 1300 கிலோமீட்டர் அதிகமான புதிய ரயில் தடங்கள் போடப்பட்டிருக்கின்றன 97 சதவிகிதம் மின்மயமாக்கல் எட்டப்பட்டு இருக்கின்றது பாதுகாப்பு மற்றும் செயல் திறனை அதிகரிக்கும் வகையிலே நூற்றுக்கணக்கான மேம்பாலங்களும் சுரங்க பாதைகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன .

கடந்த ஆண்டுதான் தமிழ்நாட்டிலே புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் நற்பெயர் எனக்கு கிடைத்தது அருமை சொந்தங்களே இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலம் என்ற வகையிலே பொறியியல் சிறப்புத் தன்மைக்கு இது ஒரு அடையாளம் இந்த பாலம் மட்டுமே கூட தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளில் பயணிகளை பெரிய அளவில் இருக்கும் விஷயமாக இருக்கின்றது.

ஒன்பது வந்தே பாரத் 9 அம்ருத் பாரத ரயில்களும் தமிழ்நாடு மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது அதிவேக விரைவு வண்டிக்காண ரயில் பெட்டிகளை சென்னையில் இருக்கும் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் தயாரிக்கின்றது.

மேக் இன் இந்தியா இந்தியாவில் தயாரிக்கும் நம்முடைய தொலைநோக்கு திட்டம்
நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம் அம்ருத் வாரத்தின் நிலை திட்டத்தின் படி 77 ரயில் நிலையங்களில் நவீன பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ரயில் நிலையங்கள் சவுரியம் அனுவல் தன்மை மற்றும் உள்ளூர் அடையாளத்தை ஒன்றிணைகின்றது தமிழ்நாடு எங்கிலும் நாம் 8 பரிணமிக்கப்பட்ட ரயில் நிலையங்களை தொடங்கி வைத்திருக்கின்றோம். சென்னை கடற்கரை சென்னை எழும்பூர் நான்காவது தடம் காரணமாக சென்னையின் தின சரி பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு ஆதரவாக இருக்கும்.

கும்பகோணம் வேர்காடு, வேலூர் ஆகிய இடங்களில் ஆகாச வாணியின் புதிய பண்பலை அஞ்சல் நிலையங்கள் தொடங்கி வைப்பதில் நான் வெறும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வானொலி அஞ்சல் நிலையங்கள் இன்று முதல் உங்கள் சேவையில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ்நாடு உள்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிட்டு பார்க்கயில் மூன்று மடங்கு அதிகமாய் இருக்கின்றது .

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டமானது தமிழ்நாட்டின் மீது தனது பலமான கவனத்தை செலுத்துவதன் வாயிலாக இந்த போக்கினை தொடர்கிறது இந்த வரவு செலவுத் திட்டத்தில் பெங்களூரு சென்னை மற்றும் சென்னை ஹைதராபாத் காண புல்லட் ரயில் இடைவெளிகளை நாங்கள் முன் வைத்திருக்கிறோம் இவை இந்த பகுதியில் பொருளாதாரம் முழுவதையும் புரட்சிகரமானதாக மாற்றும் அரிய வகை கனிம வளம் கொண்ட இடைவெளிகளில் ஒரு பகுதியாக தமிழ்நாட்டினை இந்த வரவு செலவுத் திட்டம் அறிக்கை நிலைநிறுத்துகின்றது .

அரிய வகை கனிம வளங்கள், உயர்தர தயாரிப்பு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் முன்னேற்றத்தை மேம்படுத்துகின்றது.

வளமான வரலாறு மற்றும் மரபுக்குச் சொந்தமான மாநிலம் ஆதிச்சநல்லூர் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உலகளாவிய மரபுச்சார்பிடங்களாக மேம்படுத்தப்படும்.

புலிகாட்டி ஏரி பொதிகை மலை போன்ற இடங்களை சுற்றி சுற்றுச்சூழல் சுற்றுலா முன்னெடுப்புகள் புதிய வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் அதே வேளையில் இயற்கையான சூழல் அமைப்புகளை பாதுகாப்போம்.

தேசம் எங்கிலும் சுமார் 200 தொழில் துறை தொகுப்புகள் இடம் காணப்பட்டு தயாரிப்பினை ஊக்கப்படுத்தும் வகையிலே ஆதரிக்கப்படும் தமிழ்நாட்டிலே பல தொழிற்சாலைகள் இருக்கின்றன என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.
ஆகையால், இந்த திட்டம் இங்கே இருக்கும் இளைஞர்களுக்கு உயர உதவியாக இருக்கும்.

2047 ஆம் ஆண்டிற்கு உள்ளாக வளர்ச்சி அடைந்த தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற உணர்வினால் ஒவ்வொரு இந்தியரும் ஒன்று பட்டு தேசத்தின் எதிர்காலத்தை வழிபடுவது தமிழ்நாடு தனது தீர்மானமான பங்கினை கண்டிப்பாக மாற்றும் நம் அனைவரின் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க நாம் வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அளிப்பதிலும் மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்வதிலும் மத்திய அரசு முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது நன்றி – என பிரதமர் மோடி விழா மேடையில் பேசினர்.

திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி; சந்நிதியில் சாஷ்டாங்க நமஸ்காரம்!

pm modi in thiruparankundram temple - 2026

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த ‘முதல் பிரதமர்’ என்ற பெருமையைப் பெற்றார் பிரதமர் மோடி. அவர், அங்கே 15 நிமிடங்களுக்கும் மேல், பக்திப் பரவசத்துடன் முருகப் பெருமானை தரிசனம் செய்து வழிபட்டதுடன், சந்நிதி முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். 

அண்மைக் காலமாக, திருப்பரங்குன்றம் தேசிய அளவில் கவனம் பெற்றது. அதற்குக் காரணம்,  தீபம் ஏற்றுதல் தொடர்பாகவும், நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் விவகாரம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்திலும் விவகாரத்தை முன்வைத்த திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள். அந்நேரம், தில்லியில் உள்ள பாஜக., தலைவர்களும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படாததற்கு கண்டனம் தெரிவித்தனர். அப்போதே பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று மதுரையில் தேஜ., கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்தார். முருகப் பெருமானை மனமுருகி வழிபட்டார். அப்போது அவர், காவி சால்வை, வெள்ளை வேட்டி அணிந்து ஆலயத்துக்கு வந்திருந்தார். அவருக்கு மேளதாளம் பூர்ண கும்பத்துடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் ராஜா, சந்திரசேகரன் ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்தனர். பின்பு அவர், கருவறைக்குச் சென்று குமரனை மனமுருகி வழிபட்டார். தரிசனம் செய்து திரும்பும்போது கொடிமரம் இருக்கும் மண்டபத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். 

நிர்வாகம் சார்பில் அவருக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை திருக்கல்யாண அலங்கார படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. 

இந்த பயணத்தின் போது, முக்கியமாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த மதுரையைச் சேர்ந்த பூர்ணசந்திரன் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி. மதுரை மண்டேலா நகரில் கூட்டம் தொடங்கும் முன், பூர்ணசந்திரனின் தாய் காளீஸ்வரி, மனைவி இந்துமதி, மகன்கள் சிவனேஷ், இனியன் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்  பொதுக்கூட்ட மேடையில் பேசும் போதும், அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதை, மேடையில் தெரிவித்தார்.

T20 WC 2026: அரை இறுதியில் இந்திய அணி!

icc t20 worldcup - 2026

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த இரண்டு போட்டிகளின் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்பது குறித்து முடிவு எட்டின.  இதன்படி, அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெளியேறியது.  முந்தைய நாள் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை வென்ற போதும், அரை இறுதியில் இருந்து வெளியேறியது. 

இந்தியா, இலங்கையில் ‘டி-20’ உலகக் கோப்பை 10வது சீசன் நடக்கிறது. ‘சூப்பர்-8’ சுற்றின் முடிவில், பிரிவு-1ல் தென் ஆப்ரிக்கா 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பிரிவு-2ல் இங்கிலாந்து 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் நியூசிலாந்து 3  புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் அரையிறுதிக்கு முன்னேறின. 

இதை அடுத்து, கொல்கட்டாவில், வரும் மார்ச் 4ல் நடக்கவுள்ள முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மும்பை வாங்கடே மைதானத்தில் மார்ச் 5ல் நடக்கவுள்ள 2வது அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

‘டி-20’ உலகக் கோப்பை அரங்கில் அதிக முறை, அதாவது 6 முறை அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள் பட்டியலில் இங்கிலாந்து (2010, 2016, 2021, 2022, 2024, 2026), பாகிஸ்தானுடன் (2007, 2009, 2010, 2012, 2021, 2022) இந்தியா (2007, 2014, 2016, 2022, 2024, 2026) இடம்பெற்றது.

அரையிறுதியில் இந்தியா:

பிரிவு-1ல், கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ‘சூப்பர்-8 போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசத் தீர்மானித்தார். 

அதன்படி களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இந்த இணை 53 பந்தில் 68 ரன் சேர்த்த போது வருண் சக்ரவர்த்தி பந்தில் ஹோப் 32 ரன்னில் போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார். முன்னதாக, அர்ஷ்தீப் ஓவரில் ஒரு ரன்னுக்காக சேஸ் ஓடினார். மறுமுனையில் ஹோப் தயங்கினார். பந்தை ‘பீல்டிங்’ செய்த வருண், கீப்பர் இருக்கும் திசையில் ‘த்ரோ’ செய்யாமல், பவுலர் திசையில் தவறாக ‘த்ரோ’ செய்ததால், சேஸ் ரன் அவுட்டில் இருந்து தப்பினார். இதை பயன்படுத்தி அடுத்தடுத்து 2 பவுண்டரி விளாசினார். இதே போல், பும்ரா ஓவரில் சேஸ் 14 ரன்னில் இருந்த போது கொடுத்த ‘கேட்ச்சை’ அபிஷேக் சர்மா தவற விட்டார். எனவே முதல் 6 ஓவர் ‘பவர் பிளே’யில் வெஸ்ட் இண்டீஸ் அணி 45 ரன் எடுத்தது குறிப்பிடத் தக்கது. 

11 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 99/1 ரன் எடுத்து வலுவாக இருந்தபோது, 12வது ஓவரை வீசிய பும்ரா, 3வது பந்தில் ஹெட்மெயர் (27), மற்றும்  5வது பந்தில் சேஸ் (40)  ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். 12 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 103/3 என்ற நிலையில் இருந்தது. தொடர்ந்து பாண்ட்யா பந்தில் ஷெர்பேன் ரூதர்போர்டு (14) ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் பாவெல், ஹோல்டர் இணை அதிரடி காட்டி, 5வது விக்கெட்டுக்கு 35 பந்தில் 76 ரன் சேர்த்தது.  20 ஓவர் இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்து வலுவான இலக்கை நிர்ணயித்தது. 

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. அபிஷேக் சர்மா 10 ரன்னிலும், இஷான் கிஷான் 10 ரன்னிலும் வெளியேறினர். பின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.  சஞ்சு சாம்சன் மட்டும் நிலைத்து நின்று விளையாடி,  அரைசதம் கடந்து அசத்தினார். இவருக்கு இணையாக திலக் வர்மா அதிரடி காட்டினார்.  அவர்  27 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.  பின் பாண்ட்யா 17 ரன்னும், ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் இரண்டு பவுண்டரிகளும் அடித்து வெற்றிக்குத் தேவையான ரன்களுக்கு அருகில் நிறுத்தினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்ட நிலையில், முதல் இரு பந்துகளில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் சாம்சன். இதன் மூலம் இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை சாம்சன் பெற்றார்.

இந்தப் போட்டியில் சில சாதனைகள் படைக்கப்பட்டன. ‘டி-20’ உலகக் கோப்பை அரங்கில், ‘சேஸ்’ செய்த போட்டியில் அதிக ரன் (97*) குவித்த இந்திய வீரராக சஞ்சு சாம்சன் சாதனை செய்தார். முன்னதாக, விராத் கோலி இரண்டு முறை (எதிர்: ஆஸ்திரேலியா- 2016, எதிர்: பாகிஸ்தான் – 2022) 82* ரன் எடுத்திருந்தார்.

‘டி-20’ உலகக் கோப்பை அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் சஞ்சு சாம்சன் (97*). முதலிடத்தில் ரெய்னா (101 ரன், எதிர்: தெ.ஆப்., 2010) உள்ளார். 

இருந்த போதும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் கவலைக்குரியதாக இருந்தது. இந்திய  அணி வீரர்கள்  3 ‘கேட்ச்’, ஒரு ரன் அவுட் வாய்ப்பை வீணாக்கினர். இதனை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. 

பாகிஸ்தான் வெளியேற்றம்:

பிரிவு-2ல் இலங்கையின் பல்லேகெலேயில் நடந்த போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு  212 ரன் எடுத்தது. நல்ல ரன் எடுத்திருந்தாலும், அரையிறுதிக்கு ரன் ரேட் அடிப்படையில் தகுதி பெற, இலங்கையை 147 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது பாகிஸ்தான்.

எனினும், இலங்கை அணி 16வது ஓவரிலேயே 5 விக்கெட் இழப்புகு 148 ரன் எடுத்ததால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்து தோல்வியடைந்தது. இதனால் சிறந்த ரன் ரேட் வைத்திருந்த நியூசிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. பாகிஸ்தான் வெளியேறியது.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா மார்ச் 23ல் துவக்கம்

1001148555 - 2026

உலக பிரசித்தி பெற்ற கேரளா மாநிலத்தில் உள்ள
சபரிமலை ஐயப்பன் ஸ்ரீகோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா வருகின்ற மார்ச் 23-ஆம் தேதி வேத நாராயண முறைப்படி புதிய கொடி பட்டம் கொண்டு கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் உற்சவம் தொடங்குகிறது.

சபரிமலை சபரீசன் ஆலயத்தின் உற்சவமான பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது . இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி வருகிற மார்ச் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.அன்று வேறு பூஜைகள் ஏதும் நடைபெறாது.

23-ஆம் தேதி அதிகாலை 4மணிக்கு கோயில் நடை திறந்து கணபதி ஹோமம் நிர்மால்யதரிசனம் உற்சவ பூஜை சடங்குகள் நடத்தி காலை 9.30 மணிக்கு தந்திரி கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைப்பதோடு துவங்கும் உற்சவமானது 01-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது .

விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி ஸ்ரீ பூபதி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

மார்ச் 31-ஆம் தேதி இரவு 9 மணிக்கு பகவான் ஐய்யப்பன் நெற்றி பட்டம் கட்டிய யானை மீது அமர்ந்து அடியோர் புடைசூழ மேளதாளங்களுடன் சரம் குத்தி எழுந்தருளி உற்சவ பள்ளிவேட்டையானது நடைபெற உள்ளது . விழாவின் உட்ச நாளாகிய ஏப்ரல் 01-ஆம் தேதி அதிகாலை துவங்கி பல்வேறு பூஜைகளுடன் பகல் 11 மணிக்கு பம்பை நதி நோக்கி பகவான்யானையில் பயணித்து ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெற உள்ளது

சபரிமலை ஆலயத்தின் கொடியேற்றி நிகழும் பெரு உற்சவமான பங்குனி உத்திர ஆராட்டு விழாவிற்கு அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு பகவான் அருளினை பெற்றிட‌ கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது .

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

chozhavanthan temple sani peyarchi - 2026
#image_title

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், வைகை காலனி, அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில் மார்ச். 6..ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9…மணிக்கு சனிப்பெயர்ச்சி மஹா யாகம் நடைபெறுகிறது.


தொடர்ந்து சனி பகவானுக்கு, சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெறுகிறது.


சனி பகவான், மார்ச் மாதம் 6..ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.20…மணிக்கு பூரட்டாதி நட்சத்திரம் 4..ம் பாதத்தில் மீன் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.


அதையொட்டி, மதுரை அருகே சோழவந்தான் சனீஸ்வரன் ஆலயத்தில் காலை 8 மணிக்கு சிறப்பு அர்ச்சணைகள் நடைபெறுகிறது.


அதோ போல, மதுரை மாவட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் அருள்மிகு பிரளயநாத விசாக நட்சத்திர ஸ்தலத்தில், மார்ச் மாதம் 6..ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5…மணிக்கு, இக் கோயிலில் வன்னி மரத்தடியில் அமைந்துள்ள சனீஸ்வர லிங்கம், சனி பகவான் சன்னதியில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம் அர்ச்சணைகள் நடைபெறுகிறது.


இக் கோயிலில் ஸ்தல மூர்த்தி சனீஸ்வரன் ஆகும். சுவாமி, ராகுவுக்கு அதிபதி. நட்சத்திரம் விசாகம், குருவுக்கு அதிபதி ஆகும்.


இதற்கான ஏற்பாடுகளை, தொழிலதிபர் எம்.வி.எம். மணி, கோயில் செயல் அலுவலர் இளமதி, கவுன்சிலர்கள் டாக்டர் எம். மருதுபாண்டியன், வள்ளிமயில் மணி, கணக்கர் சி. பூபதி மற்றும் ஆலயப்
பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


இதேபோல, மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் , சித்தி விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 8…மணிக்கு சனிப்பெயர்ச்சி மஹா யாகம், அபிஷேகம், மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, மீனம் ராசி நேயர்களுக்கு அர்ச்சணைகள் நடைபெறுகிறது.


இதற்கான ஏற்பாடுகளை , ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.