கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா நாளை புதன்கிழமை அமாவாசை திதியில் நடக்கிறது.
இக்கோயிலில் கடந்த ஏழாம் தேதி (7.3.2026)பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதனை தொடர்ந்து பெரிய மாரியம்மன் தினமும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்வு (தீமிதித்தல்) வ நாளை புதன்கிழமை 18ஆம் தேதி மதியம் 1.35க்கு மேல் நடைபெறுகிறது .இந்த நிலையில் பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு கோவிலில் காப்பு சீட்டும், கைப்பட்டையும் வழங்கப்படுகிறது.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி கூறுகையில், கொடியேறிய நாளிலிருந்து பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு கோவிலில் காப்புச்சீட்டும் கை பட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. பூக்குழி இறங்கும் பக்தர்கள் கோவிலில் இவற்றை பெற்றுக் கொள்ளலாம். பக்தர்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் கோவிலில் பக்தர்கள் இடையே நெரிசல் குறையும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பெரிய மாரியம்மன் திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் அமாவாசை அன்று பக்தர்கள் விரதமிருந்து, காப்புக்கட்டி, மஞ்சள் ஆடை அணிந்து, கோயிலுக்கு முன்புள்ள பூக்குழி குண்டத்தில் தீ மிதித்து அம்மன் அருள் பெறுவது வழக்கம். பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மன் அருள் பெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து பெரியமாரியம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, இரவு வேளைகளில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெறும்.
புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயிலுக்கு எதிரே உள்ள தீ குண்டத்தில் அக்னி வளர்க்கப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும் .முன்னதாக அதிகாலை பெரிய மாரியம்மனுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு பெரிய மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார்.மதியம் 1.35க்கு மணிக்கு ல் பூக்குழித் திருவிழா சிறப்பாகத் தொடங்கி நடைபெறும்.
இந்நிகழ்வில், ஆண்களும், பெண்களுமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பூக்குழி இறங்குவர்.மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்ச்சை செலுத்துவர்.ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த தீச்சட்டி ஏந்தியும், உடம்பில் அலகு குத்தியும், வேப்பிலை ஆடை அணிந்து அங்கப்பிரதட்சணம் செய்தும் நகர்வலம் வருவர்.பூக்குழி நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூரைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொள்வர்.
பிரச்னை, விருதைக் கேட்டு வாங்கிக்கொண்ட வயிரவ முத்து(ராமலிங்கம்) மீது அல்ல; கேட்டவருக்குக் கொடுத்த ஞானபீடம் மீதும் அல்ல. அது சமூகத்தில் இருக்கிறது.
‘ஞான பீட விருது’ தகுதிக்கு மீறிய அல்லது தவறான பெருமையைக் கொண்ட ஒரு விருது. தேசத்தின் விருதுபோல் தோற்றம் காட்டும் தனியார் விருது.
ஒருவகையில் தனக்கான பெருமையை பெருமளவுக்கு நிலைநிறுத்திக்கொண்ட விருதும்கூட. என்றாலும் தேசத்தின் விருதாக ஒரு தனியார் விருதைக் கருதுவது தேசத்துக்கும் நல்லதல்ல; தனியாருக்கும் சரியல்ல.
அரசு தரும் விருதுகளான சாஹித்ய அகாதமி விருது, கலை மாமணி போன்ற விருதுகள்தான் உண்மையில் தேச – பிராந்திய விருதாக, மக்கள் விருதாக மதிக்கப்படவேண்டியது. மக்கள் விருது என்று சொன்னால் எளிய மக்கள் திரள் என்ற அர்த்தத்தில் அல்ல. அந்த மக்களுடைய விருதும்கூட. என்றாலும் இலக்கிய நயத்துக்காகத் தரப்படக்கூடிய விருதுகளே அவை.
உன்னத இலக்கியங்கள் மக்கள் கலையாகவும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். லெளகிக, யதார்த்த விஷயங்கள் சார்ந்தும் அது இருக்கலாம். ஒட்டு மொத்த மானுட குலம் சார்ந்ததாக, கால, வெளிகளைக் கடந்த அறமும் ஆன்மிகமும் கொண்டதாகவும் அது இருக்கலாம்.
பொதுவாக, ஒரு காலகட்டத்தின் கண்ணாடியாக, ஒரு மக்கள் திரளின் ஆன்மாவாக அது திகழும். திகழவேண்டும்.
அந்த அளவுகோலின்படிப் பார்த்தால் இந்த ஞானபீடவிருது தகுதியானவருக்குத்தான் தரப்பட்டிருக்கிறது. விருதுக் குழு சரியான செயலைத்தான் செய்திருக்கிறது.
கண்ணாடியில் தெரியும் முகம் அசிங்கமாகத் தெரிகிறதென்றால் கண்ணாடியின் குறையில்லை. சமூகம் மலினப்பட்டுக் கிடக்கிறது. எனவே அதைப் பிரதிபலிக்கும் இந்த விருதும் மலினப்பட்டுவிட்டிருக்கிறது.
ஒருவேளை மிகவும் சிறப்பான வேறொரு படைப்பாளிக்கு இந்த விருது தரப்பட்டிருந்தால் கண்ணாடி, மாய பிம்பத்தைக் காட்டுகிறது என்று அர்த்தம். சிதிலமடைந்த புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு கொண்டு துலக்கிக் காட்டுவதுபோன்ற மாயத் தோற்றம்.
அப்படி ஒரு படைப்பாளி மிகச் சிறந்த படைப்பை உருவாக்கியிருந்தால் அவர் யதார்த்த உலகையோ வாழும் காலத்தையோ பிரதிபலிக்காமல் மாய உலகை சிருஷ்டித்திருக்கிறார் என்றே ஆகிறது. எனவே அவருக்கு விருது தராததும் சரியே.
ஒரு படைப்பாளி சமகால ஆன்மாவைப் பிரதிபலிக்கவேண்டும். அப்படியான எழுத்தைக் கண்டுபிடித்து விருது தரவேண்டும். அது அற்புதமான படைப்பாகவும் செயலாகவும் இருக்கவேண்டுமென்றால் சமூகம் அப்படி அற்புதமானதாக இருந்தாகவேண்டும்.
சமூகம் அற்பமானதாக இருந்துகொண்டு அற்புதமான கலையை எதிர்பார்க்க முடியாது.
கண்ணாடி பளபளப்பாக இருந்தாலும் முகத்தின் கறை மாறாது. அசிங்கமான முகத்தை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி மிகவும் சரியான செயலையே செய்கிறது.
இதில் கல்லூரி – கல்விப்புல பேராசிரியர்கள் இதை விமர்சிப்பதெல்லாம் இழவு வீட்டுல கொன்னவனும் கூட உட்கார்ந்து அழுவதைப் போன்றது.
இலக்கியவாதிகளின் அறச்சீற்றங்கள் எல்லாம் வேறு பல விஷயங்களையெல்லாம் மறந்தாலே பொருட்படுத்தத் தகுந்தவையாக ஆகமுடியும்.
படைப்பாளிகளின் தனி மனித ஒழுக்கம் சார்ந்து வைக்கப்படும் விமர்சனங்கள் எல்லாம் தனியாகப் பார்க்கப்படவேண்டியவையே. அவை ஒரு படைப்பை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ அதிகம் பாதிக்க வேண்டிய ஒன்றே அல்ல.
கலை இலக்கியம் ஒழுக்கசீலர்களால் உருவாக்கப்படுவதல்ல. கலை இலக்கிய பிரபல்யத்தையும் அதிகாரத்தையும் ஒருவன் மலினமாக பயன்படுத்திக் கொண்டால் அது தனி மனித ஒழுங்கீனமாகத் தனியாகப் பார்க்கப்படவேண்டிய விஷயம் மட்டுமே.
கலை சார்ந்தும் பெரிதாக எதையும் செய்யாத ஒருவன் லாபியிங் மற்றும் அதிகாரத்தின் தாழ்வாரங்களில் நெளிச்சிரிப்புடன் கூழைக் கும்பிடுகளுடன் சஞ்சரித்த வண்ணம் இருந்திருந்தால் இந்த ஒழுங்கீனத்தையும் சார்ஜ் ஷீட்டில் எழுதிச் சேர்த்துக் கொள்ளலாம். மற்றபடி கலைக்கும் தனி மனித மதிப்பீடுகளுக்கும் கொஞ்சம் இடைவெளி இருக்கலாம்.
எதையும் பொதுமைப்படுத்துதல் கூடாது. *
கலை, இலக்கியத்துறையில் மட்டுமல்ல; போலி திராவிட அதிகார மையத்தின் மலினம் அனைத்துத் துறைகளிலும் துலக்கமாகத் தெரியும்படியாகத்தான் இருக்கிறது.
தமிழகத்தின் அரசியல் இயக்கங்களையும் தலைவர்களையும்போல் ஆகக் கேடு கெட்ட கும்பல் உலகில் மிகவும் குறைவாகவே இருக்கும். மக்களும் நவீன கால விஷயங்களும் கொண்டுவந்த மாற்றங்கள், சாதனைகள் ஆகியவற்றுக்கு வெறும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டுமே திராவிட இயக்கமும் ஆட்சியும் கட்சியும் செய்துவந்திருக்கிறது.
23-ம் புலிகேசியின் அப்பட்டமான அழுத்தமான வாழும் வரலாற்று உதாரணம் திராவிட இயக்கமே.
அந்த சிக்ஸ் பேக் உடம்புடன் இந்த டெரர் மரு முகத்தை ஒட்டி வருங்கால சந்ததிக்கு காட்டும் சாதனை மட்டுமே நடக்கிறது.
திரையுலகை எடுத்துக்கொண்டால் வதவதவென பன்றியைவிட அதிக குட்டிகளைப் பெற்றுப் போட்டு அதில் சாதனை படைத்துவருகிறது. உலகின் சிறந்த படங்களுக்குத் தரப்படும் விருதுகளைப் புறந்தள்ளிவிடலாம். தமிழ் வாழ்வை தமிழ் சினிமாக்கள் பிரதிபலிப்பதே இல்லை என்ற ஒற்றை காரணமே தமிழ் திரைப்படங்களின் இடத்தைச் சுட்டிக்காட்டிவிடுகின்றன. கற்பனைகளுமே கூட தமிழ்த் தன்மை கொண்டதாகவோ தமிழ் மண் சார்ந்ததாகவோ இல்லை என்பது அதையும் விடப் பெரிய பலவீனம்.
கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் திராவிட அரசுப் பள்ளிகள் உலகின் அடிமட்ட இடத்தைப் பிடிப்பதில் வேக வேகமாக முன்னேறிவருகின்றன. தனியார் மற்றும் மத்திய அரசின் பள்ளிகளிலும் பல குறைகள் உண்டு. ஆனால் அவை இன்றைய லெளகிகக் கல்வியின் தேவையை பெருமளவுக்குப் பூர்த்திசெய்பவையாகத் திகழ்கின்றன. அந்த ஒரு பெருமைகூட திராவிடக் கல்வித்துறைக்கு இல்லை.
மருத்துவத்தை எடுத்துக்கொண்டால் அங்கும் அதே விஷயம்தான். உலகின் முன்னணி மருத்துவர்கள், மருத்துவமனைகள் இருக்கிறார்கள் என தமிழர்களும் தமிழகமும் பெருமை கொள்ள முடியும். இவையும் திராவிட அரசுகளை மீறி நடந்த சாதனைகளே இவை.
ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?
ஆக, உள்கட்டமைப்பு (மத்திய, அந்நிய நாடுகளின் உதவியால் மட்டுமே), அடிப்படைவசதிகள், குடிமை உரிமைகள் – மதிப்பீடுகள் என பல விஷயங்களில் இந்திய அளவில் தமிழகம் மேம்பட்ட நிலையில் இருப்பதன் முக்கிய காரணம் திராவிட இயக்கத்துக்கு முந்தைய வரலாறு மட்டுமே.
நாம் இன்று லட்சாதிபதியாக இருக்கிறோம். மறுக்கவே முடியாது. முன்பு கோடீஸ்வரராக இருந்தோம். இதையும் மறக்கவே கூடாது.
ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்… தமிழக அரசு தரும் கலைமாமணி விருதுகளுக்கு தமிழகத்திலேயே என்ன மரியாதை இருக்கிறது?
இந்த விருதுகளைப் பெற்ற சில நல்ல கலைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த விருதை இந்தக் கைகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட தவறைத் தவிர அவர்களுடைய கலைத்துறையில் நிச்சயம் திறம்பட வெளிப்பட்டவர்கள் உண்டு. அவர்களுக்கு அந்தக் கலைத் திறமைக்கான மரியாதையை நிச்சயம் தரத்தான் வேண்டும். ஆனால், திராவிட மாடல் அரசின் விருதுக்கு தமிழர்களிடமே மரியாதை இல்லை என்பது மறுக்கவே முடியாத உண்மையே.
முப்பது நாட்களில் சாஹித்ய அகாதமி விருது பெறுவது எப்படி? என்ற தொழில் நுணுக்கத்தை அதாவது இடது பக்கம் கெந்திக் கெந்தி நடக்கும் சப்பாணி நடையை ‘ராஜ நடை’யாகக் கருதி கற்றுத் தேர்ந்து கரை கண்ட கும்பலின் அடுத்த கட்டப் பாய்ச்சல் இப்போது நடந்தேறியிருக்கிறது. அல்லது அடுத்தகட்ட வீழ்ச்சி நிகழ்ந்திருக்கிறது.
ஒரு தனியார் அமைப்பு இதுவரை காப்பாற்றிய போலிப் பெருமையை இனியும் காப்பாற்றத் தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கிறது. திராவிட இயக்க ஆசுகவி (இவன் ராஜ பரம்பரையின் அந்தப்புரத் தோழனும்கூட) தன் வழக்கமான மலினத்தையே செய்திருக்கிறான்.
சாஹித்ய அகாதமி இந்தச் செயல்களை எப்போதோ செய்ய ஆரம்பித்துவிட்டது. திராவிட அரசின் விருதுகள் என்றைக்குமே இந்த கண்ணியம் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை.
பன்றிகள் சாக்கடையில் வாழ்வதில்லை. தாம் வாழும் இடத்தை அவை சாக்கடை ஆக்கிக் கொள்கின்றன.
இதில் பெரிய வேதனை என்னவென்றால் இரண்டுக்கும் நம் வீட்டின் முன் வாசலில் இடம் ஏற்படுத்தித் தந்திருக்கும் நாம் தான் முக்கிய குற்றவாளிகள்.
‘சாக்கடையில் பன்றிகள் குதுகலமாக விளையாடிக் கொண்டிருக்குமே அந்த வீடு’ என்று நம் வீட்டுக்கு அற்புதமான அடையாளத்தை நாமே அரும்பாடுபட்டு உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.
இதில், பன்றிகளையும் சாக்கடையையும் நொந்துகொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம் சென்னை -31 89391 49466 விலை : ₹ 125/-
தொல்லியல் இன்று ஒரு அறிவியலாக வளர்ந்திருக்கிறது. அறிவியல் என்ற சொல்லுக்குள் பல துறைகள் இருப்பது போலவே இதிலும் பல துறைகள் , தளங்கள் உள்ளன.
ஒரு தொல்லியலாளரின் வேலை பாதுகாப்பாகத் தோண்டுவது, பொருட்களை மீட்பது, அவற்றை துல்லியமாக குறியிட்டு அறிக்கை அளிப்பது மட்டும்தான், என்கிறார் பி எஸ் ராமன் என்ற தொல்லியல் துறை அதிகாரி.
செராமிக் ஆய்வாளர்கள் களிமண்ணை அடையாளம் காண்பார்கள். கல்வெட்டியியல் அறிஞர்கள் எழுத்துக்களை படிப்பார்கள். கதிரியக்கக் கரிம ஆய்வகங்கள் வயதை கணக்கிடும். அதில் இருக்கும் கலாச்சார தன்மைகளை ஆராய்வார்கள். இதெல்லாம் அடிப்படை ஆய்வுகள். இதைச் செய்பவர்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வுகளில் கிடைக்கும் தரவுகளை கொண்டு முடிவுகளை நோக்கி செல்பவர்கள், வரலாற்றின் ஒட்டுமொத்த சித்திரத்தை உருவாக்குபவர்கள் வரலாற்று ஆசிரியர்கள். அடிப்படை ஆய்வு தரவுகளையும் அதன் மூலம் கிடைத்த சித்திரத்தையும் கொண்டு வரலாற்றை தீர்மானிக்கும் கொள்கைகளை வகுப்பவர்கள் வரலாற்று கோட்பாட்டாளர்கள்.
ஒவ்வொரு கலாச்சாரமும் தான் மிகவும் பழமையானதாக இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறது. இந்த பெருமித கனவுக்கு தொல்லியலில் இடமில்லை. தொல்லியலில் காலக் கணிப்பு அனைத்தும் அறிவியல் அளவீட்டை பொறுத்தவை. கற்பனைக்கோ உற்சாகத்திற்கோ இதில் இடமில்லை . எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்ல பொறுமையாகவும் இருக்க வேண்டும். மண் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பொறுமையாக இருந்துள்ளது. முடிவுகளை தீர்மானிக்க நாம் இன்னும் சில ஆண்டுகள் பொறுமையாக இருப்பதில் தவறில்லை. அவசரப்பட்டு தவறிழைத்தால் திருத்துவது மிகவும் கடினம்.
எடுத்துக்காட்டாக, புகழ்பெற்ற தொல்லியலாளர்களில் ஒருவரான சர் மோர்டிமர் வீலர் சிந்து சமவெளி அகழ்வாராட்சியில் பணிபுரிந்த போது, அங்குள்ள கோட்டை சுவர்களையும் அம்பு முனைகளையும் கண்டார். உடனடியாக, ‘இங்கே போர் நடந்ததுள்ளது. ஆரியர்கள் ஹரப்பர்களை போரிட்டு விரட்டி இருக்க வேண்டும்’, என்று அறிவித்தார்.
அதற்கு போதிய ஆதாரம் இல்லை. அதொரு சாத்தியக்கூறு மட்டும்தான். ஆனால் அவர் அவசரப்பட்டு அறிவித்ததன் விளைவு பல தசாப்தங்களாக இனவாத கோட்பாட்டிற்கு வழிவகுத்தது . ஆரிய படையெடுப்புக் கோட்பாடு சமூக மற்றும் அரசியல் தளத்தையே மாற்றிவிட்டது.
பிற்கால ஆராய்ச்சிகள் அதுபோன்ற வன்முறை படையெடுப்புகளுக்கு தெளிவான ஆதாரம் இல்லை என்றது. காலநிலை மாற்றம், ஆற்றின் திசை மாற்றம், வர்த்தக காரணங்கள் என்று பல்வேறு காரணங்களை சிந்து சமவெளி நாகரிகத்தின் சரிவிற்கு காரணம் காட்டினார்கள். ஆனால் வீலரின் ஆரம்பகால அவசரம் தேசத்தையே பிளக்கும் அரசியலுக்கு இன்று வரை அடிநாதமாக விளங்குகிறது.
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல் பகுதியில் 1980 களில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் மூலம் இரும்பு பயன்பாட்டை தொல்லியல் துறை கண்டறிந்தது. இது தமிழர்களின் தொழில் துறை திறனை பற்றி கூறியது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் ஈமத்தாழிகள் கண்டறியப்பட்டன. இது கொடுமணல் கண்டுபிடிப்புகளில் இருந்து மாறுபட்ட, விரிவான சடங்கு மரபுகளை காட்டியது. புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு அகழ்வாராய்ச்சிகள் சர்வதேச வர்த்தக இணைப்புகள், உள்நாட்டு வாழ்க்கை முறைக்கு மாறுபட்ட உலகளாவிய கடற்கரை வாழ்க்கையை காட்டிற்று. இதில் எல்லாம் விவாதம் எழுவில்லை. கீழடியில் விவாதம் எழுந்துள்ளது. அது ஏன் ?
தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டு காலமாக குடி கொண்டிருக்கும் திராவிட அரசியல் கருத்தியலே அதற்கு காரணம். மதம் சாராத, பிராமண ஆதிக்கம் இல்லாத, தன்னாட்சி பெற்ற ஒரு தமிழ் சமுதாயத்தை நிறுவ வேண்டும் என்பது அதன் ஆசை. தமிழ் சமுதாயம் ஒரு தொன்மையான, பகுத்தறிவு மிக்க, சமத்துவமான, மதசார்பற்ற கடந்த காலத்தை கொண்டதாக இருந்தால் நிகழ்கால பிரிவினை அரசியலுக்கு ஒரு தார்மீக அடித்தளம் கிடைத்துவிடும். அவர்களது கருத்தியலின்படி தமிழ் சமுதாயம் நகர நாகரீகம் கொண்டதாக, எழுத்தறிவு பெற்றதாக, ஆன்மீக நம்பிக்கை இல்லாமல் இருக்க வேண்டும்.
கீழடி இவற்றை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஆரம்பகால அகழ்வாய்வில் செங்கல் கட்டுமானங்கள், மட்பாண்டங்கள், மணிகள் மற்றும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஓடுகள் வெளிவந்தன. உடனே இது கோயில்கள் இல்லாத, கடவுள்கள் இல்லாத, சடங்குகள் இல்லாத ஒரு உலகம். இது மதத்தால் அல்லாமல், பகுத்தறிவாலும் , நகர திட்டமிடலாலும் வரையறுக்கப்பட்ட ஒரு சமுதாயம் என்று கருதப்பட்டது. உடனடியாக , கொண்டாட்டத்துடன் பிரகடனம் செய்யப்பட்டது.
இதற்கு எதிர் தரப்பு என்று எதுவும் எழவில்லை. கீழடி வேதகாலத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்றோ அல்லது சமஸ்கிருத கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்றோ எந்த ஒரு பெரிய அரசியல் அல்லது பண்பாட்டுக் குழுவும் கோரவில்லை. எதிர்ப்பு இல்லாத நிலை ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது. அதில் திராவிட இயக்கத்தின் விளக்கங்கள் நிலை பெற்றன.
கீழடியில் கோயில்கள் கண்டுபிடிக்கப்படாததால் தமிழ் சமுதாயம் மதச்சார்பற்றது என்று கூறப்பட்டது. இது திராவிட கற்பனைக்கு கச்சிதமாக பொருந்தியது. மதத்திற்கு முன்பே தமிழ் சமுதாயம் நுட்பமாக இருந்திருந்தால் மதமே வெளியில் இருந்து வந்த ஒரு ஊடுருவலாக மாறுகிறது.
ஒரு வடிகால் அமைப்பு பகுத்தறிவு திட்டமிடலுக்கு ஆதாரமாக மாறியது. கீறல்கள் கொண்ட ஒரு பானை பரவலான எழுத்தறிவுக்கு ஆதாரமாக மாறியது. சந்தேகம், கேள்விகள் எல்லாம் ‘தமிழ்த் துரோக’மாக ஆனது. நுட்பமான அறிவியல் விளக்கங்கள் ‘சதி’ என்று நிராகரிக்கப்பட்டன. தொல்லியலுக்கு இது மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது.
கடவுளர்கள், சடங்குகள், பலிகள், சகுனங்கள், ஆவேசம் மற்றும் நிலத்தின் புனிதத் தன்மை ஆகியவற்றை கொண்டதாக தமிழ் சமுதாயம் இருந்துள்ளது. தமிழ் கலாச்சாரம் ஒருபோதும் மதச்சார்பற்றதாகவோ நாத்திகமாகவோ இருந்ததில்லை. இந்த குணங்கள் அனைத்தும் நவீன அரசியல் கொள்கைகள். கீழடியில் இவை இருந்ததாக பாசாங்கு செய்வது கடந்த காலத்தை சிதைப்பதற்கு சமமாகும்.
சங்க கால தமிழ் இலக்கியங்களில் நாத்திகம் கொண்ட தமிழ் சமுதாயம் இல்லை. தனிமைப்பட்ட நாகரீகம் இல்லை. வெளியில் இருந்து கலாச்சார திணிப்பு இல்லை. ‘ஆரியர் திராவிடர்’ என்ற பிளவு இல்லை. வேத கடவுளர்களையும் ஏற்றுக் கொண்டதாக, வேள்வி தீ வளர்த்ததாக, மந்திரங்கள் ஓதியதாக, மூதாதையர்களை வழிபட்டதாக, அவர்களுக்கு நினைவு தூண்களை அமைப்பதாக, பலிமண்டபங்கள் கொண்டதாக, யாத்ரிக பாதைகள், புனிதமான நிலப்பரப்பு , அண்டவியல் அறிவு கொண்டதாக தமிழ் சமுதாயம் இருந்ததென சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
கீழடி தொல்லியல் ஆய்வில் தோற்கவில்லை. தொல்லியல் ஆய்வுதான் கீழடியில் தோற்றுவிட்டது. தமிழக அரசு இதை ஒரு அடையாள போர்க்களம் ஆக்கிவிட்டது. கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற பல தளங்கள் ஒரு சங்கடமான உண்மையை காட்டுகின்றன. தமிழ் தொல்லியல் ஆய்வில் மண் மவுனமாக இருப்பதால் அது தோல்வி அடையவில்லை. மாறாக மாநில ஆட்சி அதிகாரம் அதன் பேச்சை பாதியிலேயே நிறுத்துகிறது. அதனால்தான் அவை தோல்வி அடைகின்றன.
அறிவியல் பூர்வமான ஆய்வு முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு பொறுமை அவசியம். மண் அறிஞர்களிடம் பேசும். சினிமா நடிகர்களிடம் அல்ல. ஆட்சி மாறும் அப்போது காட்சியும் மாறும். உண்மை வெளிப்படும்.
தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் என்பது தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய இந்த தேர்தல் ஆணையத்தா அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விதிகள், அரசு அதிகாரம், பொதுப்பணத்தைப் பயன்படுத்தி பிரசாரம் செய்வதைத் தடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்துதல், சாதி, மத ரீதியான வெறுப்புப் பிரசாரம், மற்றும் தேர்தல் ஆணைய அனுமதி இல்லாமல் புதிய திட்டங்கள் அறிவிப்பதை தடுப்பதற்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் விதிகள்:
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதில் பொதுமக்களுக்கான மற்றும் அரசியல் கட்சிகளுக்கான நடத்தை விதிகளும் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி,
பொது இடங்கள் மற்றும் அரசு சுவர்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்க பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் பணியைத் தொடங்கி உள்ளன.
கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்.
அரசியல்கட்சிகள்,
தேர்தல் முடியும் வரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது. பிரசாரத்தின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து தனிநபர் விமர்சனம் செய்ய கூடாது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசு பணியாளர்கள், பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது.
அரசு விழாக்கள் நடத்த கூடாது, அமைச்சர்கள் என்ற முறையில் எந்தவிதத்திலும் பரப்புரை மேற்கொள்ள கூடாது. அமைச்சர்கள் வேட்பாளராகவோ, வாக்குச்சாவடி முகவராகவோ கலந்து கொள்ளலாம்.
ஆளும் கட்சி அரசு இயந்திரத்தையோ, வாகனங்களையோ, அதிகாரிகளையோ சொந்தப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது.
வழிபாட்டுத் தலங்களைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக்கூடாது. சாதி, மதம், மொழி அடிப்படையில் ஓட்டுக்களை கேட்கக் கூடாது .
வாக்காளர்களுக்குப் பணமோ, பரிசுப் பொருட்களோ கொடுப்பது, மற்றும் ஓட்டுக்களுக்கு விலை பேசுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன், பொதுக் கூட்டங்கள் மற்றும் பிரசாரங்கள் செய்யக்கூடாது.
பொதுமக்கள்,
உரிய ஆவணங்கள் இன்றி பெரிய தொகையை எடுத்துச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், ஆவணங்கள் இன்றி அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்து செல்ல வேண்டும்.
அதற்கு மேல், அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இல்லையெனில், தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்படும்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவித்தது.
தில்லி விஞ்ஞான் பவன் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அஸாம் ஆகிய மாநில தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையர்கள் வெளியிட்டனர். இதனுடன், சில மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்குச் சென்ற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அரசு அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதை அடுத்து, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை இறுதி செய்யும் பணி நிறைவடைந்தது.
மேற்கு வங்கம் தவிர, தமிழகம் உள்ளிட்ட மற்ற நான்கு மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி,
தமிழக தேர்தல் விவரம்
மனு தாக்கல் தொடங்கும் நாள் மார்ச் 30 மனுத்தாக்கல் கடைசி நாள் : ஏப்ரல் 06 மனுக்கள் பரிசீலனை : ஏப்ரல் 07 மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்ரல் 09 வாக்குப் பதிவு நாள் : ஏப்ரல் 23 வாக்கு எண்ணிக்கை : மே 04
புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாமில்:
மனு தாக்கல் தொடங்கும் நாள்: மார்ச் 16 மனுத்தாக்கல் கடைசி நாள் : மார்ச் 23 மனுக்கள் பரிசீலனை : மார்ச் 24 மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்: மார்ச் 26 வாக்குப் பதிவு நாள் : ஏப்ரல் 9 வாக்கு எண்ணிக்கை : மே 04
மேற்கு வங்கத்தில்…
மேற்கு வங்கம் – 2 கட்டம் மனு தாக்கல் தொடங்கும் நாள் மார்ச் 30 | ஏப்ரல் 02 மனுத்தாக்கல் கடைசி நாள் : ஏப்ரல் 06 | ஏப்ரல் 09 மனுக்கள் பரிசீலனை : ஏப்ரல் 07 | ஏப்ரல் 10 மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்ரல் 09 | ஏப்ரல் 13 வாக்குப் பதிவு நாள் : ஏப்ரல் 23 | ஏப்ரல் 29 வாக்கு எண்ணிக்கை : மே 04
தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் விதிகள்
*“தேர்தல் முடியும் வரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது.
*பிரசாரத்தின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து தனிநபர் விமர்சனம் செய்ய கூடாது.
*தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசு பணியாளர்கள், பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது.
*அரசு விழாக்கள் நடத்த கூடாது, அமைச்சர்கள் என்ற முறையில் எந்தவிதத்திலும் பரப்புரை மேற்கொள்ள கூடாது. அமைச்சர்கள் வேட்பாளராகவோ, வாக்குச்சாவடி முகவராகவோ கலந்து கொள்ளலாம்.
*கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்
மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:
மதுரை பாலமேடு பேரூராட்சியில் 3.50 லஞ்சத்தை பெற்றுக் கொண்டு வாரச்சந்தை ஏலத்தில் கலந்து கொள்ள விடாமல், காவல்துறையினரை வைத்து தடுத்து மிரட்டுவதாக பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தலைவர் துணைத் தலைவர் மீது ஒப்பந்ததாரர் குற்றச்சாட்டுகள் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை, மாவட்டம், பாலமேடு முதல்நிலை பேரூராட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தைக்கு பணம் வசூலிக்க வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் கடைகளுக்கான வாடகை வசூலிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த வார சந்தைக்கான ஏலம் பாலமேட்டை சேர்ந்த குணசேகரன் (47) என்பவர் 21 லட்சத்து 66 ஆயிரத்து 35 ரூபாய்க்கு ஏலம் எடுத்ததுடன், கடையை கடந்த 11 மாதமாக நடத்தி வந்துள்ளார்.
மேலும் வாரச்சந்தை நடைபெறும் கடைகளை சாலையில் போட எதிர்ப்பு தெரிவித்ததால் ஒப்பந்ததாரர் குணசேகரன் சாலையில் வாரச்சந்தை கடை போட அனுமதிக்க வேண்டும், மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டார்.
ஆனால் , பேரூராட்சி நிர்வாகமோ . அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர இயலாது என்றும், சந்தைக்கு மறு ஏலம் விடப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது இதனைத் தொடர்ந்து வாரச்சந்தை. ஏலம் எடுப்பதற்கு பலர் பாலமேடு பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த நிலையில் திடீரென பழைய ஒப்பந்த தாரர் குணசேகரன் ஏற்கனவே 21 லட்சத்துக்கு வாரச்சந்தை ஏலம் எடுத்து நஷ்டம் ஏற்பட்டதால் தனக்கே மறுபடியும் வாரச்சந்தையை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் என்னிடம் லஞ்சப்பணமாக வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர், தலைவர், துணை தலைவர் என மூவரும் சேர்ந்து ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய பணத்தை திருப்பி தந்து விட்டு பொது ஏலத்தை நடத்த வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை வைத்தார்.
ஆனால், அவரை அலுவலக ஏலத்தில் கலந்து கொள்ள விடாமல் வெளியே போகச் சொல்லி போலீசாரை விட்டு வெளியேற்றியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த குணசேகரன் தன்னிடம் பெற்ற 3.50 லட்சம் லஞ்ச பணத்தை திருப்பி தர வேண்டும் இல்லையென்றால் பேரூராட்சி அலுவலகத்தை விட்டு செல்ல மாட்டேன் என தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .
இதனால், பேரூராட்சியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் ஆகியோர் தன்னை காவல்துறையின் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். அதனால் ஏலக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செயல் அலுவலருக்கு 50 ஆயிரம், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் என மொத்தம் 3.50 லட்சம் லஞ்சமாக கொடுத்ததாகவும் ஒப்பந்ததாரர் குணசேகரன் கூறிய நிலையில், இதுகுறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் நேரடியாக விசாரணை செய்து பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் தலைவர் துணைத் தலைவர் ஆகியோர் லஞ்சப்பனம் பெற்றது உண்மையாக உண்மையாகும் பட்சத்தில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தலைவர் துணைத் தலைவர் மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இதுபோல், பேரூராட்சியில் நடைபெறும் மற்ற பணிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதா என விசாரணை நடத்த வேண்டும் என பாலமேடு பேரூராட்சிக்கு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரையில் பள்ளி மாணவர்கள் உலக சாதனை; டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த 107 மழலையர் பள்ளி மாணவர்கள்!
மதுரையில் உள்ள தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள், தங்களின் அபார ஒருநிலைப்படுத்தும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளனர். கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்ட் (Kingdom World Record) அமைப்பின் நேரடி கண்காணிப்பில் இந்த சாதனை முயற்சி நடைபெற்றது.
மதுரையிலேயே, முதல் முறையாக ஒரே இடத்தில் நான்கு விதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டதாக சாதனை அமைப்பின் பிரதிநிதி செல்வராஜ் தெரிவித்தார். 107 மாணவர்கள் ஒரு சிறிய டம்ளர் மீது ஏறி நின்று, ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி வியக்க வைத்தனர்.
எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி பயிலும் 3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அரை மணி நேரம் தொடர்ந்து புஜங்காசன நிலையில் நின்று சாதனை படைத்தனர். மாணவர்கள் கர்ணபீடாசன நிலையில் இருந்துகொண்டே அரை மணி நேரம் சிலம்பம் சுற்றி தங்களின் பன்முகத் திறமையை நிரூபித்தனர்.
இது குறித்து பள்ளி தாளாளர் பேசுகையில்: குழந்தைகளின் மனதை ஒருநிலைப்படுத்துவதற்காகவும், அவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரவும் கடந்த 45 நாட்களாக தினமும் ஒரு மணி நேரம் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. பெற்றோர்களின் பெரும் ஆதரவும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமே இந்த வெற்றிக்குக் காரணம்,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பயிற்சியாளர் ரமேஷ் மாஸ்டர் மாணவர்களை யோகா மற்றும் சிலம்பம் ஆகிய இரண்டிலும் பக்குவமாகத் தயார்படுத்தியதை கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு வெகுவாகப் பாராட்டியது.
ஏற்கனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘நோபல் ரெக்கார்ட்’ செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸாம் ஆகிய ஐந்து மாநில சட்ட மன்றங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக, தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்குச் சென்ற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அரசு அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதை அடுத்து, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை இறுதி செய்யும் பணி நிறைவடைந்தது.
இந்நிலையில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது இதற்கான அறிவிப்பு இன்று காலை வெளியிடப்பட்டது.
தில்லி விஞ்ஞான் பவன் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அஸாம் ஆகிய மாநில தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையர்கள் இன்று வெளியிடுகின்றனர். இதனுடன், சில மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுகிறது
தமிழகம் உள்ளிட்ட மற்ற நான்கு மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் மேற்கு வங்கத்தில் ஐந்து முதல் ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிகிறது
பொதுவாக இலக்கியம் என்றாலே சர்ச்சை நிறைந்தது என்பதை எழுதப்படாத விதியாக இருக்கிறது. முக்கியமாக இலக்கியவாதிகள் என்று வரும்போது அரசியல்வாதிகளைப் போன்று குழுக்களாகப் பிரித்துக் கொண்டு சண்டை போடுபவர்கள் என்கிற கண்ணோட்டமும் உலகம் முழுதும் ஏற்பட்டிருப்பது தான்! காரணம் இது சிந்தனை வயப்பட்டும் சித்தாந்தங்களுக்குள் சிக்கிக் கொண்டும் வெளிப்படுத்தும் எண்ணங்களின் தொகுப்பு என்பதால்.
எனவே சர்ச்சை இல்லாமல் இலக்கியம் முழுமை பெறாது என்பது ஒரு விதத்தில் அதன் ஜனநாயகத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இருந்தாலும் அதிக அளவில் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஒருவருக்கு இது போன்ற இலக்கிய விருதுகள் அறிவிக்கப்படும் போது அது பெருமளவில் அந்த அமைப்பின் மீதும் விருதின் மீதும் அவமரியாதையை சமூகத்தில் ஏற்படுத்த தான் செய்யும். அத்தகைய நிலைமை இப்போது ஞானபீடம் விருதுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு காரணமாக அமைந்தது, தமிழகத்தின் சினிமா கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிற ஞானபீட விருது.
அரசியல் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு ஆள்பவர்களுக்கு அனுசரணையாக வாழ்ந்து கொண்டு இலக்கியம் எனும் போர்வையில் அரசியல் பிரசாரம் செய்து வரும் வைரமுத்து போன்றவர்களுக்கு விருது அளிக்கப்படுவது உண்மையில் இலக்கிய ஆர்வலர்களுக்கு பெரும் மனச்சோர்வையும் கொந்தளிப்பையும் தந்துள்ளது என்பது கடந்த ஓரிரு தினங்களாக வெளிவரும் கருத்துக்களை பார்த்தபோது புரிகிறது. அவ்வாறு வந்த சில கருத்துகள்…
முகத்தில் பூசிய கரி!
ஜடாயு, பெங்களூரு
முதலில் திட்டமிட்ட வதந்தியோ என்று நினைத்தேன். ஆனால் கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு என்று செய்திகளில் வந்து விட்டது. ஒரு தேசத்தின் உயர்ந்த விருதுகள், அதுவும் கல்வி, கலை, இலக்கியம், கலாசாரம் போன்ற துறைகளின் விருதுகள் அதற்கு முற்றிலும் தகுதியற்றவர்களுக்கும் கயவர்களுக்கும் அளிக்கப் படுவது என்பது பெரும் கொடுமை. அந்தத் தேசத்தின் அறிவுப் பாரம்பரியத்தின் மீது வீசப்படும் மற்றுமொரு சாணி, அதன்மீது படியும் மற்றுமொரு கறை. அப்படிப்பட்ட ஒரு தருணம் இது.
1965ல் நிறுவப்பட்ட பாரதத்தின் மிக உயர்ந்த இலக்கிய விருது ஞானபீட விருது. கடந்த வருடங்களில், தாராசங்கர் பந்தோபாத்யாய, குவெம்பு, ராமதாரி சிங் தினகர், சிவராம் காரந்த், ஜெயகாந்தன், எம்.டி.வாசுதேவன் நாயர் போன்ற மகத்தான இலக்கிய சாதனையாளர்களுக்காக வழங்கப் பட்ட இந்த விருதை இந்த வருடம் வைரமுத்து வாங்குகிறார்.
ஏற்கனவே 6-7 முறை சிறந்த திரைப்பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளையும், பத்மஶ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் “வாங்கி”யுள்ள வைரமுத்து, 2018ல் இந்த விருதுக்காக கடுமையாக முயற்சி செய்வதாக வதந்திகள் வரத் தொடங்கியதும், அப்போது அதை எதிர்த்து ஆன்லைன் பெடிஷனில் கையெழுத்து போட்டது, கையெழுத்து சேகரித்தது எல்லாம் நினைவு வருகிறது. ஆண்டாளைக் குறித்த அவதூறுப் பேச்சினால் அப்போது வைரமுத்துவின் மீது படிந்திருந்த எதிர்மறைப் பிம்பத்தில் விருதை வாங்கும் அவரது முயற்சி வெற்றியடையவில்லை என்று இப்போது தோன்றுகிறது.
ஆனால், வைரமுத்து போன்ற ஜந்துக்கள் இத்தகைய விஷயங்களில் மனம் தளர்வதில்லை. எந்தவித இலக்கியத் தரமும் இல்லாத சராசரிக்கும் கீழான ஒன்றிரண்டு புனைவுகளையும், பாலியல் வக்கிரங்களும் வெறுப்புணர்வு அரசியலும் தளும்பும் பாடல்களையும் மட்டுமே எழுதியது போக, பாலியல் அத்துமீறல்களுக்காக பாதிக்கப்பட்ட #Metoo பெண்கள் வெளிப்படையாக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானவர் இந்த நபர். இந்த உயர்விருது இத்தகைய ஒரு ஆசாமிக்கு வழங்கப் படுவது அசிங்கம், தேசிய அவமானம்.
அதிகாரபூர்வமாக ‘பாரதிய ஞானபீடம்” என்பது ஒரு தனியார் அறக்கட்டளை என்று கூறப்பட்டாலும், ஒவ்வொரு வருடமும் இந்த விருதுக்கான தேர்வுகள் மத்திய அரசின் பார்வையையும், பரிந்துரையையும் தாண்டி வழங்கப் படுவதில்லை என்பது நாடறிந்த உண்மை. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்ற இந்த வருடம், இப்படியாகப் பட்ட ஒரு மிக மோசமான விருதுத் தேர்வை செய்துள்ள மத்திய பாஜக அரசுக்கு வன்மையான கண்டனங்கள். அதுவும் பாரத கலாசாரத்தையும், இந்து பண்பாட்டையும் பாதுகாக்கக் கூடிய கட்சி என்பதையே மையமாக தமிழ்நாட்டில் முன்னிறுத்தும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஆதரவாளர்கள், தொண்டர்கள் முகத்தில் இதைவிட மோசமாக கரியைப் பூசவே முடியாது. வெட்கம்.
சூடு சொரணை, வெட்க, மானமெல்லாம் நமக்கெதற்கு?
வேதா டி. ஸ்ரீதரன்
ஆண்டாளை தே* என்றவனுக்கு ஞானபீட விருது. மத்திய அரசாங்கம் தவறிழைத்து விட்டதாம். மோதிஜி குற்றவாளியாம்.
மன்னிக்கவும்.
ஞானபீடம் என்பது ஒரு பணக்காரக் குடும்பம் தனது அந்தஸ்தை வெளிக்காட்டுவதற்காக ஏற்படுத்திய விருது. அது பல வருடங்களாகப் பாரபட்சமில்லாமல்தான் இயங்கி வருகிறது. ஆனாலும், ஆங்காங்கே – குறிப்பாக, மாநில வாரியாக – ஏற்படுத்தப்படும் தேர்வுக் குழுவினரின் முடிவுகள் எப்படி அமைகின்றனவோ, அதன்படிதான் அந்த அமைப்பு செயல்பட முடியும்.
இதற்கும் மத்திய அரசுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை.
பாரதத்தில் பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த தேர்வுக்குழுக்களில் ரத்த வாடை வீசும். காரணம், இலக்கியம் என்பதே தற்கால இந்தியாவில் இடதுசாரிகளின் குத்தகைப் பொருள் என்றாகி விட்டது.
அதிக துர்நாற்றம் வீசுவது சாகித்ய அகாதமியில்தான். காரணம், அது மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் சுதந்திர அமைப்பு. அரசுப் பணம் என்பதாலும், சுதந்திர அமைப்பு என்பதாலும் அதில் இடதுசாரிகள் அதிகம் கோலோச்ச முடிகிறது. சிவலிங்கத்தின்மேல் சிறுநீர் கழித்தேன் என்று எழுதிய கன்னட கார்ல்புகிக்கு ஓடோடிப்போய் சாகித்ய அகாடமி விருது வழங்கினார்கள்.
ஆண்டாள் பிரச்சினையில் வைரமுத்துவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததுமே (அதுவரை இல்லாமல், திடுதிடுப்பென) மாலனுக்கும் எஸ். ராமகிருஷ்ணனுக்கும் சாகித்ய அகாடமி விருது வழங்கினார்கள். (ஆண்டாள் திருவெம்பாவையை இயற்றினார் என்று இவ்விருவரும் கண்டுபிடித்த காரணத்துக்காகவும் இருக்கலாம்.)
அமெரிக்க நிறுவனத்திடம் பணம் வாங்கிக்கொண்டு (மாதொருபாகன் என்ற நாவலில்) திருச்செங்கோட்டுத் தேர்த்திருவிழாவைப் பற்றிக் கொச்சையாக எழுதிய பெருமாள் முருகனை உள்ளூர் ஹிந்துக்கள் நாறடித்து விட்டார்கள். அவனும் தனது புத்தகத்தை வாபஸ் வாங்கிவிட்டு எழுத்துப் பணிக்குத் தலைமுழுக்குப் போட்டு விட்டான்.
ஆனால், இடதுசாரிகளின் மானம் போய்விட்டதே, என்ன செய்வது? அட்ரஸ் இல்லாத அவனுக்காக இந்தியா முழுவதும் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தார்கள். மேலும், மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு (மோதிஜி பிரதமராக இருக்கும்போதே) சாகித்ய அகாடமி விருது வழங்கி அரிப்பைத் தணித்துக் கொண்டார்கள்.
ஒருபுறம் பாரத அரசாங்கம் நக்சல்களை எதிர்த்துப் பல விதங்களில் போராடிக் கொண்டிருக்கும்போது – ஏராளமான காவல்துறை, ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து கொண்டிருக்கும்போது – நக்சல்கள் தேசபக்தர்கள் என்று அருந்ததிராய் எழுதிய புத்தகத்தை (மத்திய அரசாங்கத்தின் நிதியுடனும், கண்காணிப்பின் கீழும் செயல்படும்) மனோன்மணியம் பல்கலைக்கழகம் பாடநூலாக வைத்தது.
இத்தகைய சூழலில்கூட ஓரளவு மரியாதைக்குரியதாக இயங்கி வந்தது ஞானபீடம். எனவேதான், அது ஆண்டாளை தே* என்றவனுக்கு விருது வழங்கியது என் போன்றவர்களைப் புருவம் உயர்த்த வைக்கிறது.
அதேநேரத்தில், இந்த விருது வழங்கும் குடும்பம்தான் எகனாமிக் டைம்ஸ் அவார்ட், ஃபிலிம்ஃபேர் அவார்ட், மிஸ் இந்தியா அவார்ட் ஆகியவற்றையும் வழங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டால், ஞானபீடம் என்பது வெறும் ஃபேமிலி ஷோ மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, இதற்காக அலட்டிக்கொள்வது அனாவசியம்.
ஆனாலும், ஞானபீட விருது என்பது சான்றிதழ், (ரூ 11 லட்சம்) பணமுடிப்பு ஆகியவற்றுடன் ஸரஸ்வதி விக்கிரகத்தையும் உள்ளடக்கியது. ஆக, ஆண்டாளை தே* என்றவனுக்கு வாக்தேவி ஸரஸ்வதியைப் பரிசாக வழங்கப் போகிறார்கள்.
அந்த விக்கிரகத்தை அவன் ஈ. வெ. ரா., கருணாநிதி சமாதிகளில் வைத்து அஞ்சலி செலுத்தினாலும் செலுத்துவான். யார் கண்டது? பாம்புக்கறி தின்னும் கூட்டத்தில் வாழ்கிறோம். நடுக்கண்டம் நமக்குத்தான் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவதுதான் புத்திசாலித்தனம்.
சூடு சொரணை, வெட்க, மானமெல்லாம் நமக்கெதற்கு?
உணர்ச்சிவசப்பட என்ன இருக்கிறது?
டி.கே.எல். ஸ்ரீராம்
இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதாக கருதப்படும் ஞானபீட விருது, மத்திய அரசால் வழங்கப்படுவது கிடையாது. இந்த விருதை பாரதிய ஞானபீடம் (Bharatiya Jnanpith) என்ற தனியார் பண்பாட்டு அமைப்பு வழங்குகிறது.
இது 1944-ல் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாகு சாந்தி பிரசாத் ஜெயின் மற்றும் அவரது மனைவி ரமா ஜெயின் ஆகியோரால் நிறுவப்பட்டது. முதல் விருது 1965-ஆம் ஆண்டு மலையாள எழுத்தாளர் ஜி. சங்கர குருப்பிற்கு வழங்கப்பட்டது. ஞானபீட விருதுக்கும் மத்திய அரசுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை.
அரசு விருதுகளான ‘சாகித்ய அகாடமி’ போன்றவற்றுடன் இதை ஒப்பிடக்கூடாது; அவை மத்திய அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்புகளால் வழங்கப்படுபவை. இருப்பினும், இந்த விருதின் கௌரவம் கருதி, பெரும்பாலும் நாட்டின் குடியரசுத் தலைவர் அல்லது துணைக் குடியரசுத் தலைவர் தான் விழாவில் கலந்துகொண்டு விருதை வழங்குவார்கள்.
விருது பற்றிய முக்கிய விவரங்கள்:
பரிசுத் தொகை | ₹11 லட்சம், பாராட்டுப் பத்திரம் மற்றும் வெண்கலத்தால் ஆன சரஸ்வதி சிலை.
விருதுக்கு தகுதி என்னவென்றால் இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும். தேர்வு முறை நடக்கும் விதம் எப்படி என்றால் ஒரு குறிப்பிட்ட நூலுக்கு மட்டுமல்லாமல், அந்த எழுத்தாளரின் ஒட்டுமொத்த வாழ்நாள் இலக்கியப் பங்களிப்பிற்காக வழங்கப்படுகிறது.
இதுவரை அகிலன், ஜெயகாந்தன் மற்றும் கவிஞர் வைரமுத்து (2024-ஆம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது) ஆகியோர் பெற்றுள்ளனர். திரும்பவும் சொல்வது என்னவென்றால் மத்திய அரசு நேரடியாக சாகித்ய அகாடமி விருதுகளைத் தான் வழங்குகிறது. ஞானபீடம் என்பது ஒரு கௌரவமிக்க தனியார் இலக்கிய அங்கீகாரம். ஆக உணர்ச்சி வசப்பட வேண்டாம்.
வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும்ரயில், 80 நிமிடப் பயணம் இனி 15 நிமிடங்களில்!
வேளச்சேரி – பிருங்கிமலை (பரங்கிமலை) பறக்கும் ரயில் : இருபது வருட கனவு நிறைவேறியது பல ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த இந்தத் திட்டத்தை சாத்தியமாக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
சென்னைவாசிகளின் 18 வருட கனவான வேளச்சேரி – பிருங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் இணைப்பு மார்ச் 14ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் MRTS எனும் பறக்கும் ரயில் ஒரு வரப்பிரசாதம். ₹5க்கு அடுத்த ஸ்டேஷன் பஸ் கட்டணம் கூட இல்லாமல் போனபின்பு அதை தருகிறது. மந்தைவெளி – பரங்கிமலை ரிட்டர்ன் டிக்கெட் ₹10. அதனால் மட்டுமல்ல, அதன் மூலம் சேமிக்கும் நேரம் என்பது அதீதமானது. பரங்கிமலை – மந்தைவெளி ஒரு 35 நிமிட நேர பயணம். அதுவும் பரங்கிமலையிலிருந்து வேளச்சேரி மெதுவாக வருவதால் ஒரு 5 நிமிடம் கூடுதல் நேரம். வேளச்சேரி, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஸ்டேஷன் நிற்பதில்லை, அடுத்து பரங்கிமலை ஸ்டேஷன். அது வேளச்சேரி அளவிற்கு பெரியதல்ல என்பதால் அது அங்கிருந்து நீட்டிக்கப் படலாம்.
வேளச்சேரி – பிருங்கிமலை இடையே கடந்த 11ம் தேதி பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனுமதி சான்றிதழ் கிடைக்காததால் தொடங்கி வைக்கப்படவில்லை.. தற்போது தற்காலிக அனுமதிச் சான்றிதழ் கிடைத்துள்ளதால், மார்ச் 14 அன்று பறக்கும் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பிருங்கிமலை வரை எத்தனை ரயில் சேவை, வேளச்சேரி வரை எத்தனை ரயில் சேவைகள், வேளச்சேரி -பிருங்கிமலை இடையே எத்தனை ரயில் சேவைகள் என்பது குறித்து தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வழித்தடத்தில் பல்வேறு சோதனைகள் மற்றும் சவால்களைக் கடந்து பணிகள் முடிக்கப்பட்டது. அண்மையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பயணிகள் ரயிலை இயக்கி பாதுகாப்பு சோதனை செய்தார். அதற்கு முன்பாக சரக்கு ரயில்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டது. தற்போது அனைத்து சோதனைகளும் முடிந்து, தற்காலிக பாதுகாப்புச் சான்றிதழ் கிடைத்தது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மார்ச் 5 அன்று புதிய பாதையில் ஆய்வு மேற்கொண்டார். அதில் திருப்தி அடைந்த அவர், மார்ச் 11 அன்று இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க தற்காலிக அனுமதியை வழங்கினார். இதன்படி தொடக்கத்தில் ரயில்கள் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும். மேலும், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்கள், லிஃப்ட் மற்றும் குடிநீர் வசதி போன்ற சில பணிகளை வரும் மே 15-க்குள் முடிக்க நிபந்தனை விதிக்கப் பட்டிருக்கிறது. எனவே இந்த ரயில் நிலையங்களில் நிறுத்தம் பின்னர் வரும்.
இதுவரை சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் ரயில்கள் வேளச்சேரியுடன் நின்றுவிடும். இனி வேளச்சேரி வழியாக பிருங்கிமலை வரை நீட்டிக்கப்படும். அதேபோல் பிருங்கிமலையிலிருந்து ரயில்கள் கடற்கரைக்குத் திரும்பும். எனவே பயணிகள் மயிலாப்பூர் அல்லது திருவான்மியூரிலிருந்து நேரடியாக பிருங்கிமலை சென்று, அங்கிருந்து மெட்ரோ ரயில் அல்லது செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்களுக்கு எளிதாக மாற முடியும்.
இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதை அடுத்து வேளச்சேரி, ஆதம்பாக்கம் மக்கள் இனி பஸ் அல்லது ஆட்டோவை நம்பி இருக்காமல் நேரடியாக எழும்பூர் அல்லது செங்கல்பட்டு செல்லும் ரயில்களைப் பிடிக்க பிருங்கிமலைக்கு போக முடியும். அதேபோல் பிருங்கிமலையில் பறக்கும் ரயில், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் என மூன்றுமே ஒரே இடத்தில் சந்திப்பதால் பயண நேரம் பெருமளவு குறையும். வேளச்சேரி-விமான நிலையம் செல்லும் உள்வட்டச் சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.