2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் மற்றும் பள்ளிகளிலும், தேசிய கீதமான ‘ஜன கண மன’ க்கு முன்பாக இசைக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. பாடல் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருது விழாக்கள் உள்ளிட்ட குடிமக்கள் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ கட்டாயமாக இடம்பெறும்.
சினிமா அரங்குகள் உள்ளிட்ட பொது அரங்குகளிலும் ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படலாம்; ஆனால் அங்கு எழுந்து நிற்பது கட்டாயமில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1937ஆம் ஆண்டு நீக்கப்பட்ட நான்கு சரணங்களும் உட்பட, பாடலின் மொத்த ஆறு சரணங்களும் இனிமேல் இசைக்கப்பட வேண்டும்.
தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ், பாடலை அவமதிப்போருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, ‘வந்தே மாதரம்’ தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடந்த ஆண்டு எழுந்த அரசியல் சர்ச்சையின் பின்னணியில் வெளியாகியுள்ளது.
வந்தே மாதர கீதம் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு தற்போது கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தேசிய எழுச்சி மற்றும் சுதந்திரத்தின் அடையாளமாகத் திகழும் வந்தேமாதர கீதத்துக்கு மரியாதை செய்யும் வகையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. நாட்டின் சுதந்திரப் போருக்கு வித்திட்ட கீதத்தை நாடு சுதந்திரம் அடைந்தபோது இருட்டடிப்பு செய்து, இதுவும் ஒரு தேசிய கீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டதற்கு பிராயச்சித்தம் சேர்க்கும் வகையில் தற்போது நாடு இந்த தேசியப் பாடலுக்கு மரியாதை செலுத்துவதாகக் கருதலாம்
பக்கிம் சந்திர சட்டோபாத்யாய எழுதிய வந்தேமாதர கீதத்தின் முழு வடிவம்”
மாசி மாத பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை பிப் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். கோவில் திருநடையை மேல் சாந்தி திறந்து வைத்ததும் ஆழியில் நெய் தீபம் ஏற்றி கோவிலில் தீபமேற்றி பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்குவார்.
அன்று எந்த சிறப்பு பூஜையும் இல்லை. பிப் 13-ஆம் தேதி காலை 5 மணியிலிருந்து சிறப்பு பூஜைகள் தொடங்கி, மதியம் 1 மணிக்கு கோவில் நடை மூடப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.
மாலை 6 மணி முதல் 7:30 மணி வரை படி பூஜை நடைபெறும். (இது 13 முதல் 17 தேதி வரை தினமும் நடைபெறும்). அபிஷேகம் காலை நேரத்தில் மட்டும் காலை 5:15 முதல் 7 மணி வரை, பின்னர் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை நடைபெறும். (இது 13 முதல் 17 தேதி வரை தினமும் நடைபெறும்).
இரவு தினமும் 9:50 மணிக்கு ஹரிவராசனம் கீர்த்தனை பாடி, 10 மணிக்கு கோவில் நடை மூடப்படும் பிப் 12 முதல் 17 தேதி வரை தினமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் பக்தர்கள் பங்கேற்க ஆன்லைன் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.முன் பதிவு செய்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்
கருவூல கணக்குத் துறையில் கடந்த 2021 முதல் 2026 இன்று வரை CPS Missing credit எனப்படும் விடுபட்ட பங்களிப்பு ஓய்வூதிய பிடித்த தொகை ஒவ்வொரு மாதமும் அரசு பணியாளர்களின் சம்பளம் மற்றும் நிலுவை சம்பளங்களில் இருந்து IFHRMS வழியாக பிடிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்பொழுது சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களின் சி பி எஸ் இல் பிடிக்கப்பட்ட தொகை IFHRMS சர்வரில் காணாமல் போய் உள்ளது. இதை, கருவூல கணக்குத் துறையின் GDC அலுவலகத்தில் உள்ள பெண் அதிகாரி மற்றும் IFHRMS திட்டத்தில் உள்ள அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக மறைத்துள்ளனர்.
தற்பொழுது தமிழக அரசால் TAPS ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட உள்ளதால் பழைய திட்டத்தில் உள்ள இந்தக் குளறுபடிகளை அவசரகதியில் தனது துறை பணியாளர்களை வைத்து இரவு பகல் பாராமல் மற்ற அனைத்து துறைகளில் உள்ள பணியாளர்களை நிர்பந்தித்து பதிவேற்றம் செய்கின்றனர். இதன் காரணமாக பல ஆயிரக் கணக்கான தவறான பதிவுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. மேலும் IFHRMS வழியாக 2021 முதல் தற்பொழுது 2026 வரை அனைத்து அரசு பணியாளர்களின் CPS பிடித்தங்கள் காணாமல் போய் உள்ளது.
GDC பெண் அதிகாரி – தனது பெயரை காப்பாற்றிக் கொள்ளவும் அரசு உயர் அதிகாரிகளிடமிருந்து நற்பெயர் பெறவும் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளையும் பணியாளர்களையும் பிற துறை பணியாளர்களையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் விதத்தில் அசிங்கமான வார்த்தைகளால் பேசியும் திட்டியும் மிருகத்தனமாக நடந்து கொள்கிறார்.
ஆனால் IFHRMS மென்பொருளில் உள்ள இவ்வளவு பெரிய குறைகளைக் களைய பட்டைய கணக்காளர்கள் என்று தங்களை பெருமையாக கூறிக்கொள்ளும் கருவூலத்துறையில் எந்த ஓர் அரசு அதிகாரியும் முன்வரவில்லை.
மேலும் IFHRMS மென்பொருளில் பட்டியல்களில் உள்ள சிறிய குறைகளைக் களைய டிக்கெட் எனும் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் விப்ரோ பணியாளர்கள் இதை சாதமாகப் பயன்படுத்தி எங்களிடமிருந்து லஞ்சம் பெற்று சரி செய்து வருகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தங்களை பெரிய அறிவாளிகளாக நினைத்துக் கொள்ளும் கருவூலக் கணக்குத் துறை அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் IFHRMS மென்பொருளில் ஏதாவது ஒரு மாற்றம் அல்லது குளறுபடிகள் அல்லது குழப்பங்களை ஏற்படுத்தி சாதாரண பணியாளர்கள் இந்த மென்பொருளை பயன்படுத்த இயலாத நிலையில் உருவாக்கி வைத்துள்ளனர். இது பல பண முறைகேடுகள் நடைபெற வழிவகுக்கும்.
இதை கருவூல கணக்குத் துறை ஆணையர் கவனித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இன்று (09.02.2026) முதல் ஆட்டத்தில் கொல்கொத்தா, ஈடங்கார்டன்ஸ் மைதானத்தில் காலை 1100 மணிக்கு இத்தாலி ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் ஓமன், ஜிம்பாபே அணிகள் மதியம் 0300 மணிக்கு கொழும்புவில் மோதுகின்றன. மூன்றாவது ஆட்டத்தில், அகமதாபாத்தில் கனடா, தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன.
200க்கும் அதிகமான ஸ்கோர் அடித்த ஸ்காட்லாந்து அணி
பூவாதலையா வென்ற இத்தாலி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் ஸ்காட்லாந்து அணி முதலில் மட்டையாடவந்தது. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுகள் இழப்பிற்கு 207 ரன் எடுத்தது. அந்த அணியின் ஜியார்ஜ் முன்சே (84 ரன்), மைக்கேல் ஜோன்ஸ் (37 ரன்), ப்ராண்டன் மெக்முல்லன் (41 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இரண்டாவதாக ஆடிய இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் பென் மெனேண்டி (52 ரன்), ஹாரி மெனேண்டி (37 ரன்), ஜே ஜே ஸ்மட்ஸ் (22 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இருப்பினும் ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தோல்வியுற்றனர். ஸ்காட்லாந்து அணி இந்த உலகக் கோப்பையின் அதிக பட்ச டீம் ஸ்கோரான 207 ரன் எடுத்து சாதனை புரிந்தது.
ஜிம்பாபே அபார வெற்றி
இரண்டாவது ஆட்டம் கொழும்புவில் மதியம் 0300 மணிக்குத் தொடங்கியது. பூவாதலையா வென்ற ஜிம்பாபே அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் ஓமன் அணி மட்டையாட வந்தது. ஓமன் அணியில் மூன்று பேட்டரிகள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர் அடித்தனர். சூஃபியான் மகமூது (25 ரன்), வினாயக் ஷுக்லா (28 ரன்), நதீம் கான் (20 ரன்) ஆகியோர் அந்த மூன்று பேட்டர்கள். ஜிம்பாபே அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ரிச்சர்ட் நகரவா மற்றும் முசராபானி இருவரும் தலா நாலு விக்கட் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய ஜிம்பாபே அணி 13.3 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 106 ரன் எடுத்து அபாரவெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா கனடா அணியை அடித்து நொறுக்கியது
மூன்றாவது ஆட்டம் அகமதாபாத்தில் மாலை 0700 மணிக்குத் தொடங்கியது. பூவாதலையா வென்ற கனடா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் தென் ஆப்பிரிக்க அணி முதலில் மட்டையாட வந்தது. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு அந்த அணி 213 ரன் எடுத்தது. இதனால் காலையில் ஸ்காட்லாந்து அணி செய்த சாதனையை முறியடித்தது.
தென் ஆப்பிரிக்க அணியின் ஐய்டன் மர்க்ரம் (59 ரன்), க்விண்டன் டி காக் (25), ரிக்கில்டன் (33 ரன்), டேவிட் மில்லர் (39 ரன்), ஸ்டப்ஸ் (34 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இரண்டாவதாக ஆடிய கனடா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 156 ரன் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியின் நவனீத் டலிவால் (64 ரன்), ஹர்ஷ் தாக்கர் (33 ரன்) சிறப்பாக ஆடினர். மற்றவர்கள் இன்று ஜொலிக்கவில்லை. தென் ஆப்பிரிக்கவின் லுங்கி நிகிடி 4 விக்கட்டுகளும், மார்கோ யான்சென் 2 விக்கட்டுகளையும் எடுத்தனர். இவ்வாறு தென் ஆப்பிரிக்க அணி எளிதாக வென்றது.
நாளை (10.02.2026) முதல் ஆட்டம் டெல்லியில் காலை 1100 மணிக்கு நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும். இரண்டாவது ஆட்டம் மாலை 0300 மணிக்கு சென்னையில் நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. மூன்றாவது ஆட்டம் மாலை 0700 மணிக்கு பாகிஸ்தான் அமெரிக்க அணிகளுக்கிடையே நடைபெறும்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும் வகையில், பிப்.05 அன்று, பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய சக்தி வாய்ந்த உரையில், நல்லாட்சி, வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ந்த பாரதம் குறித்த தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை எடுத்துரைத்தார். நாடாளுமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், இந்தியாவின் எதிர்காலத்திற்கான வலுவான தலைமைத்துவத்தையும் உறுதியான வழிகாட்டுதலையும் பிரதிபலிக்கிறது.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இப்போதெல்லாம், பார்த்தீர்களென்றால், காங்கிரசின் நமது நண்பர்களுக்கு, என் மீது சிறப்பான அன்பு பெருக்கெடுக்கிறது. அது விசேஷமான அன்பாகும். இன்று எனக்கு, பொறுப்பு கிடைத்திருப்பதால் மட்டுமல்ல பொறுப்பில் இல்லையென்றாலும் கூட, தேசத்திற்காகவே வாழ்வது என்பதை கற்றிருக்கிறோம்.
நாங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் களத்தை பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு ஒரு ஆற்றல் அளித்து வருகிறோம். இது ஒரு தரப்பிலே, தேசத்தின் இளைஞர்களுக்கு வலுவான ஒரு களத்தை அமைக்கும் போது, இந்த காங்கிரஸ், மோதிக்குக் கல்லறை தோண்டும் பணியில் மும்முரமாக இருக்கிறது. அது மட்டுமா, கடைவிரித்து அன்பை விற்பவர்கள், மோதிக்குக் கல்லறை தோண்டும் கோஷத்தை எழுப்புகின்றார்கள். இது என்னமாதிரியான அன்பை விற்கும் கடை, இங்கே தேசத்தின் ஒரு குடிமகனுக்கு கல்லறை தோண்டும் கனவு காணப்படுகிறது?
எந்த அரசியல் சட்டத்தில் இந்தப் பாடத்தை இவர்கள் படித்தார்கள், இதிலே தேசத்தின் ஒரு குடிமகனுடைய கல்லறை தோண்டுவது பற்றி எழுதப் பட்டிருக்கிறது? அரசியல்சட்டத்தின் அவமதிப்பு இல்லையா இது? மனித சமூகத்தின் அவமரியாதை இல்லையா இது? அதாவது ஒருவருடைய, பொதுவாழ்வினுடைய, கண்ணியத்தின் அவமதிப்பு இல்லையா இது? அவர்களுக்கு இது பற்றி எந்த வருத்தமும் கிடையாது. இதன்பிறகு அவர்கள் என்ன விளக்கம் அளிப்பார்கள் தெரியுமா? பிரதம மந்திரி மாநிலங்களவையிலும் அழுது கொண்டிருந்தார் என்பார்கள். இந்த மாதிரியான கேவலமான கலாச்சாரத்திலே ஊறித்திளைத்து வளர்ந்தவர்கள் இவர்கள்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, எனக்கு இது ஒன்றும், எனக்கு இது பழகிப் போன ஒன்று தான். இரண்டாயிரத்தி, இரண்டிலிருந்து, எப்போது அவர்கள், எதிர்த்தரப்பில் இருந்ததிலிருந்தே, மேலும் 2004இலே அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே, மேலும் 2014இலே நான் இங்கே ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே, கடந்த 25 ஆண்டுகளாகவே, பாராளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடரிலும் கூட, மோதி பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருக்கவில்லை. ஒரு கூட்டத்தொடரிலும் கூட, அதிலே, இந்த அவையிலே மோதியைத் திட்டித்தீர்க்காமல் இவர்கள் ஓய்ந்ததே கிடையாது. 25 ஆண்டுகள்!!! ஒருவர் என்னிடம் மோதிஜி உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் பற்றிக் கேட்டார். நான் தினமும் 2 கிலோ வசவுகளை உண்கிறேன் என்றேன்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இவர்கள் மோதிக்கு ஏன் கல்லறை தோண்ட விரும்புகிறார்கள்? இது வெறும் கோஷமல்ல. இவர்களுக்கு உள்ளே இருக்கும் வெறுப்பின் பிரதிபிம்பமாகும். அதன் வெளிப்பாடாகும். அது ஏன் இருக்கிறது என்றால், நாங்கள், 370 என்ற சுவரைத் தகர்த்துவிட்டோம். அதனால் தான், மோதிக்குக் கல்லறை தோண்ட விரும்புகிறார்கள். நாங்கள், வடகிழக்கிலே, குண்டுகள் துப்பாக்கிகள், பயங்கரவாதத்தின் நிழல் படிந்து இருந்ததே, அந்த வடகிழக்கிலே அமைதி-வளர்ச்சியின் பாதையைக் கடைப்பிடித்தோம். ஆகையால் தான், மோதிக்குக் கல்லறை தோண்டுவது பற்றி சிந்திக்கிறார்கள்.
பாகிஸ்தானி தீவிரவாதிகளுக்கு அவர்கள் வீடுகளில் புகுந்து பதிலடி கொடுக்கிறோம். ஆகையால்தான், மோதிக்குக் கல்லறை தோண்டுவது பற்றிப் பேசுகிறார்கள். ஆப்பரேஷன் சிந்தூரை நடத்துகிறோம். இது அவர்களுக்கு வலிக்கிறது. ஆகையால் தான், இவர்கள் மோதிக்குக் கல்லறை தோண்ட நினைக்கிறார்கள். மாவோவாத பயங்கரவாதத்திலிருந்து, தேசத்துக்கு விடுதலை அளிக்கவேண்டி, தைரியமாகச் செயல்படுகிறோம்.
ஆகையாலே, மோதிக்குக் கல்லறை தோண்டத் துடிக்கிறீர்களா? மேலும், நேருஜி தேசத்திற்கு எதிராக, மிகப்பெரிய, அநியாயம் செய்திருந்தார். சிந்துநதிநீர் ஒப்பந்தம் விஷயத்திலே. அந்த சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை, நாங்கள் வீசியெறிந்து விட்டோம். என்ன இதற்காகவா, இதற்காகவா நீங்கள் மோதிக்குக் கல்லறை தோண்டும் கோஷம் எழுப்புகிறீர்களா?
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, காங்கிரசின் பிரச்சனையே வேறு. இவர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை, இந்த மோதி இந்த அளவுக்கு எப்படி வர முடிந்தது? இவர்களுடைய பரிதவிப்பு மேலும்மேலும் அதிகரித்து வருகிறது. அட வந்தது தான் வந்தார், ஏன் இன்னும் அங்கேயே இருக்கிறார்? ஆகையால் தான், இந்த கோஷம். அவர்களிடம் ஒரே ஒரு பாதை தான் மிச்சமிருக்கிறது மோதிக்குக் கல்லறை தோண்டுவது.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இவர்கள் தெரிந்தே செய்கிறார்கள். இவர்களுக்கு ஜனநாயகம், அரசியல்சட்டம் எல்லாம் ஒரு பொருட்டல்ல. இந்த பிரதம மந்திரி பதவி அவர்களின் குடும்பச் சொத்து என்பது அவர்களுடைய எண்ணம். அதிலே வேறுயாரும் அமரமுடியாது. இவர்களுக்குள்ளே இருக்கும் காழ்ப்பு அன்பை விற்கும் கடையிலே நிரம்பியிருக்கும் நெருப்பு இருக்கிறதில்லையா, அதனுடைய விளைவு தான் இது. ஆகையினால் தான், ஏன் யாரோ அமர்ந்திருக்கிறார்கள்? நம்முடைய பாட்டன் சொத்தில்லையா? ஆகையால் தான், மோதிக்குக் கல்லறை தோண்டுகிறீர்களா? கோஷத்தை அவர்கள், ஆவேசமாக எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, காங்கிரசின் அரசகுடும்பத்துக்கு, தேசம் பல பத்தாண்டுகள்வரை சந்தர்ப்பம் அளித்திருக்கிறது. உங்களுக்குக் கொடுக்காமலில்லை. தேசம் உங்களிடமும் கூட, தன்னுடைய எதிர்காலத்தை ஒப்படைத்திருந்தது. ஆனால் நீங்களோ, ஏழ்மையை அகற்றுவோம் என்ற கோஷத்தை எழுப்பினீர்கள், குழப்பி விட்டீர்கள். செங்கோட்டையிலிருந்து, காங்கிரசின் ஒரு பிரதமரின் உரையிலே கூட, ஏழ்மையை அகற்றுவோம் கோஷம் எழுப்பப்படாமல் இருந்ததில்லை.
ஆனால் எந்த ஒரு பிரதமரும் ஏழ்மையை அகற்ற என்ன செய்தார்கள், அது ஒருமுறை கூட கூறப்படவில்லை. கோஷம் வெறும் வெற்று கோஷம் மட்டுமே. ஆனால், மோதி மேற்கொண்ட பாதை, ஏழைகளுக்கு அதிகாரப்பகிர்வு. ஏழைகளுக்கு அதிகாரமளித்தல். மேலும், நான் என் தேசத்தின் ஏழைகளுக்கு தலைவணங்குகிறேன். அவர்கள் தாம், தேசத்தின் திட்டங்களை, புரிந்து கொண்டார்கள் ஏற்றுக் கொண்டார்கள், அதோடு தங்கள் வல்லமையை அதிகரிக்க முயன்றார்கள். நான் தேசத்தின் ஏழைகளுக்குப் பரணி பாடுகிறேன்.
அவர்கள் எங்களுடைய கொள்கைகளின் மீது நம்பிக்கை கொண்டு, எங்களுடைய நோக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, அவர்களும் கூட, தங்களையே அர்ப்பணிப்பதிலே எந்தக் குறையையும் வைக்கவில்லை. மேலும் 25 கோடி என்னுடைய ஏழைக்குடும்பச் சகோதரர்கள், ஏழ்மையைத் தோற்கடித்தார்கள். அவர்கள் தாங்களே, ஏழ்மையிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். நான் அவர்களுக்குத் தலைவணங்குகிறேன். என்னுடைய 25 கோடி நாட்டுமக்கள், ஏமாற்றத்திலே இருந்தவர்கள், தொலைவிலே ஒரு நம்பிக்கைக்கீற்றுத் தெரிந்தது, எழுந்து நின்றார்கள். மேலும் இன்று, எங்களோடு இணைந்து பயணிக்கிறார்கள்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, 2014க்கு முன்பாக, இவர்கள் அமலாக்கம் பற்றிப் பேசி வந்தார்கள். நம்முடைய நாட்டிலே, பல்லாயிரம் நபர்கள், ரயில்வே கிராசிங்கிலே இறந்து போனார்கள். பள்ளிக்கூடப் பேருந்து, ரயில்வே கிராசிங்கில் செல்கிறது, 20-30 பள்ளிக் குழந்தைகள் இறக்கும் செய்திகள் வந்தன. ஆளில்லா ரயில் கிராசிங். இது ஒன்றும் செய்ய முடியாத அளவுக்குப் பெரிய வேலையில்லை. இந்த வேலையையும் நான் வந்து செய்ய வேண்டியுருந்தது. மேலும் நாங்கள், அனைத்து ஆளில்லா ரயில் கிராசிங்குகளையும் மூடி விட்டோம். இலட்சக்கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். ஆகையினாலே, ஆகையாலே மோதிக்குக் கல்லறை தோண்ட விரும்புகிறார்கள்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, 2014க்கு முன்பாக, தேசத்திலே 18,000த்திற்கும் மேற்பட்ட கிராமங்களிலே, மின்சாரம் என்பதற்குப் பொருள்கூடத் தெரியாது. மின்சாரத்துக்கு கம்பிகள் உண்டு பல்பு உண்டு, அதில் இருக்கும் ஃபிலமண்ட் ஒளிவிடும் என்பது பற்றி அவர்களுக்கு சுத்தமாகத் தெரியாது. 18,000 கிராமங்கள், 2014ற்குப் பிறகு, நாட்டுமக்கள் எங்களுக்குப் பொறுப்பினைக் கொடுத்த போது, மின்சாரம் என்றால் என்ன என்பதே அறிந்திராத மின்சாரம் என்ற சொல்லைக்கூட அறியாத அந்த 18,000 கிராமங்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கு மின்சாரத்தைக் கொண்டு சேர்த்தோமே, அதற்காகவா, ஆகையால் தான் மோதிக்குக் கல்லறை தோண்டுவதைத் தவிர வேறு வழியேதும் உங்களுக்குத் தெரியவில்லை.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, அப்படியும் ஒரு காலம் இருந்தது, தேசத்தில் மீண்டும் மீண்டும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன, ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இருந்தன, எல்லைப்புறங்களின் நிலைமை பற்றி அறிக்கைகள் வெளியாகின, தோட்டாக்கள் குண்டுகள் இல்லை, புல்லட்ப்ரூஃப் ஜாக்கட்டுகள் இல்லை, உறைபனியிலே நிற்க வேண்டியிருக்கிறது, ஆனால் காலில் அணிந்து கொள்ள காலணிகள் தேவை அவைகூட நம்மிடம் இல்லை. இப்படிப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருந்தன.
நாங்கள், நாட்டின் இராணுவ வீரர்களுக்கு கஜானாவைத் திறந்து விட்டோம். தேசத்தின் இராணுவத்தினருக்கு என்ன தேவையோ அதை அளிக்க உறுதி பூண்டோம். ஆகையினால் தான், ஆகையால் வேறு எந்த வழியும் மிச்சமில்லை என்று நினைத்து, அடுத்து, மோதிக்குக் கல்லறையைத் தோண்டலாம், இந்த மீதமிருக்கும் பாதையில் செல்கிறார்கள்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, ஒருமுறை உத்திர பிரதேசத்தின் தற்போதைய முதலமைச்சர், நாடாளுமன்றத்திலே, உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே அழுது விட்டார். மூளைக்காய்ச்சல் காரணமாக, குழந்தைகள், கணக்கேயில்லாத குழந்தைகள் இறந்து கொண்டிருந்தன. இவர்களுக்கு இது தோன்றவே இல்லை, இந்த மூளைக்காய்ச்சலிலிருந்து, நிவாரணம் பெற முடியும் என்ற விஷயம்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, கண்களின் நோயான ட்ராகோமா, மக்கள் பிரச்சனைக்கு ஆளானார்கள் கண்பார்வை இழந்தார்கள். ஆனால் விஞ்ஞானம் முன்னேறியிருந்தது குணமாக்குதல் சாத்தியம். ஆனால் அவர்களால் செய்ய முடியவில்லை. நாங்கள் மூளைக்காய்ச்சலிலிருந்தும் நிவாரணம் அளித்தோம், ட்ராகோமாவிலிருந்து மக்களுக்கு குணமளித்து அவர்கள் பார்வையைக் காத்தோம். இவைதாம் வெற்றிகள், இவைதாம் புரிந்துணர்வோடு செயல்படுதல். சமுதாயத்திற்காக உயிர்வாழ்தல் என்ற உறுதிப்பாடு இது.
கணம்தோறும், இதயத்தூறும், சமூகத்திற்காகவே வாழ்ந்து மடியும் உணர்வு, தாகம், அது அவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. அதனால் தான், மோதிக்காக கல்லறை தோண்டுகிறார்கள். இந்த மந்திரத்தின் துணையோடு பயணிக்கிறார்கள். இந்தக் கனவைக் கண்டுகொண்டு செல்கிறார்கள். ஆனால் பேச்சு என்னமோ ஜனநாயகம் பற்றியிருக்கும். அன்பை விற்கும் கடைக்கு, விளம்பரப் பதாகை கழுத்தில். பொதுவாழ்க்கையிலே இப்படியா நடந்து கொள்வது?
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இவர்களுடைய அரசாங்கம், ரிமோட்டில் இயங்கியது. என்னுடைய அரசாங்கமும் ரிமோட்டிலே இயங்குகிறது. 140 கோடி நாட்டுமக்கள் என்னுடைய ரிமோட்டுகள். 140 கோடி நாட்டுமக்களின் கனவுகள், 140 கோடி நாட்டுமக்களின் எதிர்பார்ப்புகள், தேசத்தின் இளைஞர்களின் உறுதிப்பாடுகள், இவற்றுக்காக நாங்கள் உயிர் வாழ்கிறோம். இவர்களுக்காக அரசாங்கம் நடத்துகிறோம். அதிகாரம் எங்களுக்கு சுகத்துக்கான பாதையல்ல. அதிகாரம் எங்களுக்கு சேவை செய்யும் வழி. முத்ரா திட்டத்தால், கோடானுகோடி பேருக்கு ஆதாயம் கிடைத்திருக்கிறது.
சுயவேலைவாய்ப்புக்கு பலமளித்திருக்கிறது. காங்கிரஸ் என்றைக்குமே, ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தியதே இல்லை. இருந்த கொஞ்சநஞ்ச ஸ்டார்ட் அப்புகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. இவர்களுடைய நிலைமை மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, தங்கள் வீட்டின் ஸ்டார்ட் அப்பைக்கூட, இவர்களால் தூக்கிவிட முடியவில்லை. ஆனால் எங்கள் ஆட்சியிலே இன்று, 2 இலட்சத்திற்கும் அதிகமான ஸ்டார்ட் அப்புகள் இருக்கின்றன.
எப்போது வெற்றி மீது வெற்றிகள், சாமான்ய மக்களுக்குப் புலப்படும் போது, இந்தநிலையில் பாருங்கள், இவர்களிடம் ஒரேபாதை தான் மிஞ்சியிருக்கிறது, மோதிக்கு நாங்கள் கல்லறை தோண்டுவோம். ஆனால், அந்தக்காலத்தை நினைத்துப் பாருங்கள், பிஎஸ் என் எல் தொடர்பாக துணுக்குகள் பேசப்பட்டன. கேலிச்சித்திரங்கள் போடப்பட்டன. ஆனால் இன்று, சுதேசி 4ஜி அமைப்பை, நாங்கள் எழுப்பியிருக்கிறோம்.
5ஜியை உலகிலேயே மிக விரைவாக அமல்செய்யும் பணியை நாங்கள் செய்திருக்கிறோம். தகவல் தொலைதொடர்பின் புதிய தலைமுறை, புதிய தொழில்நுட்பம், புதிய எண்ணப்பாடு, இவற்றை நாங்கள் மேம்படுத்தினோம். ஆகையினால் தான், வலி, நாக்கில் வெளிப்படுகிறது, மோதிக்கு நாங்கள் கல்லறை தோண்டுவோம்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, ஏழைகளின் சேவை, இது எங்களுடைய பெரும்பேறாகும். 4 கோடி ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் அளிப்பது, இதை வாழ்வின் பெருநிம்மதியாக நினைக்கிறேன். மின்சாரம்…. குடிநீர்….. எரிவாயு சிலிண்டர், கழிப்பறை வசதி, எனக்கு, என்ன படுகிறதென்றால் ஆம், இறைவன் எனக்கு, சரியான திசையில் பணியாற்றும் உத்வேகத்தை அளித்திருக்கிறான். முதன்முறையாக ஒரு கிராமத்துப் பெண் பெருமையோடு கூறுகிறார் ஆம், நான் லட்சாதிபதி தீதி ஆகியிருக்கிறேன். அதற்கு இன்னொருவர் கூறுகிறார், இந்த ஆண்டுக்குள்ளாக நானும் இலட்சாதிபதி தீதியாகி விடுவேன். யார் ஆகிவிட்டாரோ அவரிடம் கேட்டால், இல்லை ஐயா நான் அடுத்து கோடீஸ்வரி ஆவதில் ஈடுபட்டிருக்கிறேன்.
இது இந்த எண்ணத்தின் மாற்றம் தன்னம்பிக்கை அதிகரிப்பு இது தான் முக்கியம். இப்படியாக, கோடானுகோடி நாட்டுமக்களின் நல்லாசிகள் எந்த மனிதனிடம் இருக்கின்றனவோ, கோடானுகோடி தாய்மார்கள் சகோதரிகள் என்ற பாதுகாப்பு கவசம் இருக்கும் போது, எத்தனை கோஷங்களை வேண்டுமானாலும் எழுப்புங்கள், கல்லறையை உங்களால் தோண்ட முடியாது, இந்த தேசத்தின் சக்தி, ஆசிகள் வடிவிலான கவசம், தாய்மார்கள் சகோதரிகளிடம் என் பொருட்டு இருக்கும் உணர்வு, இந்த அர்ப்பணிப்பு உணர்வோடு, தாய்மார்கள் சகோதரிகளுக்குச் சேவை செய்வதில் ஈடுபட்டிருக்கிறேன். யாருமே மதிக்காத அந்த மனிதர்களுக்கு, மோதி பூஜை செய்கிறேன். வணங்குகிறேன். அவர்களின் இந்த ஆசி தான், இவர்களை முள்ளாய் குத்துகிறது, கல்லறை தோண்டச் செய்கிறது.
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி இரண்டாம் நாள் – சிறிய அணிகள் சிறப்பான ஆட்டம்
இன்று (08.02.2026) ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிகள் சென்னையில் காலை 1100 மணிக்கும் இங்கிலாந்து நேபாள அணிகள் மும்பையில் மதியம் 0300 மணிக்கும் கடைசி ஆட்டத்தில் இலங்கை அயர்லாந்து அணிகள் இரவு 0700 மணிக்கும் விளையாடின.
நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி
சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் பூவா தலையா வென்று ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது. அந்த அணியின் குல்பதன் நயிப் 63 ரன் எடுத்தார். இரண்டாவதாக ஆடிய நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 183 ரன் அடித்து வெற்றி பெற்றது. அந்த அணியின் டிம் செய்ஃபெர்ட் 65 ரன்னும் கிளன் பிலிப்ஸ் 42 ரன்னும் அடித்தனர்.
நேபாள அணியின் சிறப்பான ஆட்டம்
மும்பையில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் பூவா தலையா வென்று இங்கிலாந்து அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 184 ரன் எடுத்தது. ஜாகப் பெத்தேல் (55 ரன்), ஹாரி ப்ரூக் (53 ரன்), வில் ஜேக்ஸ் (ஆட்டமிழக்காமல் 39 ரன்) சிறப்பாக ஆடினர். இரண்டாவதாக ஆடிய நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 180 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. கடைசி ஓவரில் 10 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி இரண்டு பந்துகளில் 7 ரன் எடுக்கவேண்டிய நிலை; ஆட்டத்தை இந்த அளவிற்கு கொண்டு சென்றதற்காக நேபாள அணி பாராட்டப்படவேண்டும்.
அயர்லாந்து அணியின் சிறப்பான ஆட்டம்
இலங்கை கொழும்புவில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் பூவா தலையா வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. இதனால் இலங்கை அணி முதலில் மட்டையாட வந்தது. 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 163 ரன் எடுத்தது. குசால் மெண்டிஸ் (56 ரன்), கமிந்து மெண்டிஸ் (44 ரன்) இருவரும் சிறப்பாக ஆடினார்கள். இரண்டாவதாக ஆடிய அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 143 ரன் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோஸ் அடேர் (34 ரன்), ஹாரி டெக்டர் (40 ரன்), லார்கன் டக்கர் (21 ரன்) சிறப்பாக ஆடினர். ஒன்பதாவது ஓவர் முதல் 17ஆவது ஓவர் வரை அயர்லாந்து இந்த ஆட்டத்தை வென்றுவிடு என்றே தோன்றியது. ஆனால் இலங்கை அணியின் அனுபவம் வாய்ந்த வீரர்களால் வெற்றி சாத்தியமானது.
நாளை (09.02.2026) முதல் ஆட்டத்தில் கொழும்புவில் காலை 1100 மணிக்கு இத்தாலி ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் ஓமன், ஜிம்பாபே அணிகள் மதியம் 0300 மணிக்கு கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. மூன்றாவது ஆட்டத்தில், அகமதாபாத்தில் கனடா, தென் ஆப்பிரிக்கா அனிகள் விளையாடுகின்றன.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும் வகையில், பிப்.05 அன்று, பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய சக்தி வாய்ந்த உரையில், நல்லாட்சி, வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ந்த பாரதம் குறித்த தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை எடுத்துரைத்தார். நாடாளுமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், இந்தியாவின் எதிர்காலத்திற்கான வலுவான தலைமைத்துவத்தையும் உறுதியான வழிகாட்டுதலையும் பிரதிபலிக்கிறது.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இந்த மன்றத்தின் உயர்வான அவை, ஒருவகையிலே மாநிலங்களின் பிரதிநிதியாக விளங்குகிறது. இன்று நடந்த விவாதங்களை, நுணுக்கமாக, நான் பார்த்தபோது, இதன் நிலை இன்னும் சற்று உயர்வாக இருக்க வேண்டும் என்று என் மனம் அவாவியது. அவர்கள் தரப்பில் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், அவர்கள் பல ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் இருந்தவர்கள். அவர்கள் தரப்பில் விவாதங்ளின் தரம் இன்னும்கூட அதிகம் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இந்த வாய்ப்பையும் தவற விட்டார்கள். தேசம் இனி அவர்கள் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, நான் நேற்று ஒரு, மாண்புமிகு உறுப்பினர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் தன்னை அரசர் என்று அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர். ஆனால், அவர், பொருளாதார, சீரற்றத்தன்மை பற்றி விவாதம் செய்தார். சொல்லுங்கள். தன்னை அரசராகவே கருதுபவர், அவர் பொருளாதார சமச்சீரற்ற நிலை பற்றி பேசினால், என்ன துரதிர்ஷ்டம், இப்படிப்பட்ட நாட்களையும் தேசம் காண வேண்டியிருக்கிறதே?
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, நம்முடைய டிஎம்சியின் நண்பர்கள் நிறைய விஷயங்களைச் சொன்னார்கள். சற்று நீங்களே உங்களை, கண்ணாடியிலே பார்த்துக் கொள்ளுங்கள். கருணையே இல்லாத அரசாங்கம், அராஜகத்துக்கு எத்தனை அளவுருக்கள் இருக்குமோ, அந்த எல்லா அளவுருக்களிலும், புதியபுதிய சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே நீங்களா உபதேசம் செய்கிறீர்கள்? எந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்? இப்படிப்பட்ட அரக்கத்தனமான அரசாங்கத்தால், அங்கே இருப்போரின் எதிர்காலம், இருளிலே மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அதிகார சுகத்தைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் நீங்களா, இங்கே உபதேசம் செய்கிறீர்கள்? ஊடுறுவல்.
உலகின் எத்தனையோ வளமையான நாடாக இருந்தாலும், தங்கள் நாட்டிலிருந்து, குடிமக்கள் அல்லாதவர்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய நாட்டிலே ஊடுறுவியிருப்பவர்களைக் காப்பாற்ற, நீதிமன்றங்களின் மீது அழுத்தம் அளிக்கப்படுகிறதே!! என்னுடைய தேசத்தின் இளைஞர்கள் எப்படி இப்படிப்பட்டவர்களை மன்னிப்பார்கள்? இவர்கள் ஊடுறுவல்காரர்களைக் காப்பாற்றுவதிலே முனைப்போடு இருக்கிறார்கள்!! இந்த ஊடுறுவல்காரர்கள், என்னுடைய தேசத்தின் இளைஞர்களின் உரிமைகளைக் களவாடுகிறார்கள். அவர்களுடைய வாழ்வாதாரத்தைத் திருடுகிறார்கள். பழங்குடி மக்களின் நிலத்தைக் கவர்கிறார்கள். பெண்கள் சகோதரிகளின் வாழ்க்கையை அபாயம் சூழத் தொடங்கியிருக்கிறது. ஆனால் இவர்களைப் பொறுத்தவரையில், பெண்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டால் அது பாட்டுக்கு நடக்கட்டும். அரசு இயந்திரங்கள் இதிலே ஒன்றும் செய்யாது.
இவர்களா நமக்கு இங்கே உபதேசம் செய்கிறார்கள்? இப்படிப்பட்ட கவலைதரும் அனைத்து விஷயங்களிலும், கண்ணை மூடிக்கொண்டு இருப்பவர்கள் தாம் இவர்கள். மதிப்புமிக்க இன்னுமொரு உறுப்பினர், நிறைய பேசிக் கொண்டிருந்தார். இவருடைய ஒட்டுமொத்த அரசும் சாராயத்தில் மூழ்கிப் போயிருக்கிறது. இவருடைய கண்ணாடி மாளிகை, வீடுகள்தோறும் வெறுப்பின் காரணமாகி இருக்கிறது. அவர்களுக்கு ஒருவேளை கருப்பு என்ற சொல் பிடிக்கலாம். ஒவ்வொருவருக்கும் கடந்த காலம் என்று உண்டல்லவா? கருப்புப் பொருட்களுடன் அவர்களுக்கு என்ன பழைய உறவு இருந்தது?
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இப்படிப்பட்ட அனைத்து நண்பர்களிடமும், நான் கண்டிப்பாக ஒன்றைக் கூறுகிறேன். நீங்கள் எத்தனை தான் உலகை ஏமாற்றினாலும். நீங்கள், எத்தனை தான் உலகை ஏமாற்றினாலும். கண்ணாடியைப் பார்த்துவிட்டால், அப்போது உங்கள் உண்மையை, எங்கே மறைப்பீர்கள்? காங்கிரஸாகட்டும், டிஎம்சியாகட்டும், டிஎம்கேயாகட்டும், இடதுசாரியாகட்டும், இவர்கள் பல பத்தாண்டுகளாக, மத்தியிலே அதிகாரத்திலே இருந்திருக்கிறாரகள். அதிகாரத்தில் பங்கு வகித்திருக்கிறார்கள்.
மாநிலங்களிலும் கூட ஆட்சி நடத்த அவர்களுக்குச் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், அவர்களுடைய அடையாளம் என்னவாக இருந்தது? இன்று ஒப்பந்தம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம், நம்மால் பெருமையாகச் சொல்ல முடிகிறது. அப்போது ஒப்பந்தம் பற்றிப் பேசினால் போஃபோர்ஸ் ஒப்பந்தம் என்றானது. இந்த டீல்கள் தாம் நடந்தன. அவர்கள் தங்கள் பைகளை ரொப்பிக் கொள்ளும் வேலையைச் செய்தார்கள். குடிமக்களின் வாழ்க்கையிலே மாற்றங்கள் ஏற்படுத்துவது, அவர்களின் முதன்மையாக இருக்கவில்லை.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, நேற்று அவையில் நடந்த சம்பவம், இதே அவையின் ஒரு மதிப்பிற்குரிய உறுப்பினர், காங்கிரசினுடைய, வஞ்சகமான புத்தியுடைய…. அருவருப்பான குணமுடைய, இளவரசன், அவரை துரோகி என்று சொல்லி விட்டாரே!? அகங்காரம் எந்த அளவுக்கு, வானை எட்டும் வகையில் வளர்ந்திருக்கிறது!! மேலும், காங்கிரசை விட்டு எத்தனையோர் பேர் வெளியேறி இருக்கின்றார்கள். அது எத்தனை துண்டுகள் ஆகியிருக்கிறது? பலர் வேறு கட்சிகளுக்குச் சென்றிருக்கிறார்கள்.
மற்ற யாரையும் துரோகி என்று கூறியிருக்க மாட்டாரே? ஆனால், நேற்று அவரை ஏன் துரோகி என்றார் தெரியுமா? ஏனென்றால் அவர் சீக்கியர். இது சீக்கியர்களுக்கு அவமானம். இது குருமார்களின் அவமானம். மேலும் காங்கிரசினுடைய, ஒவ்வொரு அணுவிலும் சீக்கியர் மீதான வெறுப்பு இருக்கிறதே, அதனுடைய ஒரு….. வெளிப்பாடு தான். அவர் இதே அவையின் மதிப்பிற்குரிய உறுப்பினர். ஆனால் இளவரசுக்கோ, கொஞ்சமும் பொருட்டல்ல. இல்லையென்றால் இன்று எழுந்து நின்று கூறியிருக்கலாமே.
நேற்று நடந்தவை, இதே அவையினுடைய, உறுப்பினருடைய கண்ணியத்துக்கு, உகந்ததாக இல்லை, அதற்கு வருந்துகிறேன், என்று ஓரிரு வார்த்தைகள் சொல்லியிருக்கலாமே!! ஆனால், சீக்கியர்களுக்கு எதிராக அவர் மனதில் படிந்திருக்கும் வெறுப்புணர்வு, இதன் காரணமாகவே, அப்படி நடந்து கொண்டார். மேலும் அவருடைய குடும்பம், தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவர் உறுப்பினர். அவர் தன்னுடைய அரசியல் கொள்கைகளை மாற்றிக் கொண்டார் என்பதற்காக துரோகி என்றா அழைப்பீர்கள்? மேலும் இந்த துரோகி என்ற சொல் லேசான சொல் அல்ல. என்னுடைய நாட்டுமக்களை ஒருவர் துரோகி என்று அழைப்பதை, எப்படி தேசம் பொறுத்துக் கொள்ள முடியும்? அதுவும் அவர் ஒரு சீக்கியர் என்பதால் துரோகி என்று அழைப்பீர்களா? மிகவும் அவமானகரமான விஷயம். இப்படிப்பட்டவர்கள், காங்கிரசை முட்டுசந்தில் தானே கொண்டு நிறுத்துவார்கள் ?
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கடைசி நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஞாயிறு இன்று குரூப் -2 , குரூப் -2ஏ தேர்வுகள் நடைபெற இருந்தன. உதவி ஆய்வாளர், சார்பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக இருக்கும் 828 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற இருந்தது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த சூழலில், இன்று சென்னையில் சில இடங்களில் தேர்வு மையங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டன . இதனால் குளறுபடி ஏற்பட்டது. தேர்வு எழுத வந்தவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் அறிவித்தார். இதனால் தேர்வு எழுத ஆர்வத்துடன் வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், கடைசி நேரம் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்தனர். இதற்கு அரசியல் மட்டத்தில் பெரும் விமர்சனம் எழுந்தது.
இளைஞர் வாழ்வை வஞ்சிக்கும் திமுக.,
டிஎன்பிஎஸ்சி தேர்வைக்கூட நடத்த முடியாத அவலத்தில் திமுக அரசு..!லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சித்து வாழ்வை அழிக்கும் திமுக அரசு.. என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று நடைபெறவிருந்த நிலையில் திமுக அரசின் நிர்வாக குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதாகவும், சில தேர்வு மையங்களில் தேர்வர்களின் எண் இடம்பெறவில்லை என புகார் எழுந்துள்ளது.சில இடங்களில் வினாத்தாள் வரவில்லை. பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட காரணத்தினால், தேர்வர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. திமுக அரசின் அலட்சியத்தால் தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அலைக்கழித்து, தவிக்க வைத்துள்ள
TNPSC நிர்வாகத்திற்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.அரசு பணியிடங்களுக்கான தேர்வைக் கூட நடத்த முடியாத லட்சணத்தில் தான் டிஎன்பிஎஸ்சி நிர்வாகமும், போலி திராவிட மாடல் திமுக அரசும் இருக்கிறது. திமுக அரசின் அலங்கோல ஆட்சியை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது இந்த நிகழ்வு. அரசு பணியில் சேரும் தமிழக இளைஞர்களின் கனவை கலைத்து, பணம் பறித்து, லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் திமுக மன்னர் குடும்பமும் திமுக அமைச்சர்களும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக இளைஞர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அலங்கோல ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போலி திராவிட மாடல் திமுக அரசுக்கு தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள். – என்று குறிப்பிட்டார்.
திமுக அரசின் திட்டமிட்ட சதி?
பாஜக., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் அரசு செய்த குளறுபடிகளின் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நம்மை கொதிப்படையச் செய்கின்றன. ஆளும் அரசின் நிர்வாகத் தோல்விக்கு நமது இளைஞர்களின் பலமாத உழைப்பு வீணாவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அரியணை ஏறியதும் 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணிகளை வழங்குவோம் எனப் போலி வாக்குறுதி அளித்த திமுகவின் ஆட்சியில் அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகள் முறையாக நடத்தப்படுவதில்லை என்பதையும், கமிஷன் அடிப்படையில் தான் அரசுப் பதவிகள் வழங்கப்படுகின்றன என்பதையும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் வெறும் 9 ஆயிரம் தேர்வாளர்கள் பங்குபெறும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளில் இத்தனை குளறுபடிகள் நடப்பது பலவித சந்தேகங்களை எழுப்புகிறது.
உண்மையிலேயே அரசுத் தேர்வுகளில் இம்மாதிரியான குழப்பங்கள் எதேச்சையாக நடைபெற்றனவா? அல்லது தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்ற அரசின் திட்டமிட்ட சதியா? என்பதை ஆதாரங்களுடன் பொதுமக்களிடம் விளக்க வேண்டியது முதல்வர் ஸ்டாலினின் தார்மீகப் பொறுப்பு – என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்!
இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் திமுக அரசு செய்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
அரசுப் பணிகளுக்காக, பல ஆண்டு காலம் கடுமையாக தங்கள் உழைப்பைக் கொடுத்து, தேர்வு மையங்களுக்குச் சென்ற இளைஞர்களின் கனவு பறிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டு காலம் இல்லாத இந்தக் குளறுபடி, லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கும் வரலாறு கொண்ட திமுக அமைச்சர்களால் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
லஞ்சம் ஊழல் நிறைந்த, நிர்வாகத் திறனற்ற கையாலாகாத அரசை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழக இளைஞர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். – என்று, பாஜக., தலைவர்களில் ஒருவரான கு. அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மாடல் அரசால் மாணவர் வாழ்க்கை கேள்விக்குறி
மீண்டும் மீண்டும் மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் திராவிட மாடல் அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக, இந்து இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் C.P. சண்முகம் அறிக்கை வெளியிட்டார். அதில்,
இன்று தமிழகமெங்கும் நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் துவங்கிய நிலையில் சென்னையில் பிரசிடென்சி நந்தனம் மற்றும் வைஷ்ணவ் தேர்வு மையங்களில் குளறுபடிகள் ஏற்பட்டதாகக்கூறி ஒட்டுமொத்த தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
பல்லாயிரக்கணக்கானோர் இரவு பகல் பாராமல் ஆண்டு கணக்கில் இதற்காக படித்து தேர்வு மையத்தில் வந்து அமர்ந்தபின் தேர்வு ரத்து என்று கூறுவது இளைஞர்களது மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது மட்டுமல்லாமல் நம்பிக்கையற்ற தன்மையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மூன்று மையங்களில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக ஒட்டுமொத்தமாக தேர்வு ரத்து செய்திருப்பதை பார்க்கும் போது, இதில் டெக்னிக்கல் பிரச்சனைதான் ஏற்பட்டுள்ளதா? அல்லது வினாத்தாள் முன்கூட்டியே கசிவது அல்லது சதி ஏதாவது நடந்திருக்கிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதுபோல் குளறுபடிகள் நடப்பது இது முதல் முறையல்ல, கடந்த முறை குரூப் 4 தேர்வு நடைபெற்ற போது வினா தாள்கள் முறையான பாதுகாப்பின்றி பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டதை நாம் அறிவோம்.
ஒரு தேர்வினை ரத்து செய்வதென்பது ஏதோ ஒரு நாள் நிகழ்வை ரத்து செய்தது போல் கிடையாது. அத்தேர்விற்கான தயாரிப்புகளை கடந்த ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக மாணவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் தேர்விற்காக அவர்கள் கட்டும் கட்டணமும் தேர்வு எழுதுவதற்காக அவர்கள் பயணம் செய்து செலவிடும் கட்டணங்களும் பல குடும்பங்களின் ஒரு சில நாள் வாழ்வாதாரத்தையே மாற்றும் அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என்பதை ஆளும் திமுக அரசுக்கு நினைவூட்ட கடமை பட்டிருக்கிறோம்.
மேலும் இது போல் தேர்வுகளை ரத்து செய்யும்போது மாணவர்களின் மனநிலையையும் இது பெரிய அளவில் பாதிக்கும். இது மாணவர்களின் கனவுகளை சிதைக்கும் செயலாகும்.
எனவே தமிழக அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதோடு,இன்று நடைபெற்ற இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து இளைஞர் முன்னணி தமிழக அரசினை வலியுறுத்துகிறது… – என்று குறிப்பிட்டார்.
வரலாற்றிலேயே முதல் முறை…
TNPSC Group 2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை… திமுக ஆட்சியில் ‘நிர்வாகம்’ என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. – என்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக அரசுக்குதுப்பு இல்லை!
அடிப்படை ஏற்பாடுகளைக் கூட செய்யாததால் டி.என்.பி.எஸ்.சி தொகுதி 2 தேர்வுகள் ரத்து: போட்டித்தேர்வை நடத்தக் கூட திமுக அரசுக்கு துப்பு இல்லை! என்று பாமக., தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மிகச்சாதாரணமான ஒரு போட்டித் தேர்வைக் கூட குளறுபடிகள் இல்லாமல் நடத்துவதற்கு முடியாத நிலையில் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த குளறுபடிகளுக்கு இளநிலை அதிகாரிகளை பலிகடா ஆக்குவதை விடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் உயர்பொறுப்பில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்று குறிப்பிட்டுள்ளார்
காந்தி ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினார்; நேரு அதிகாரத்தை அடைய பிரிவினைக்கு தயாரானார்!
— ராம் மாதவ் தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்
கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரைக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் (பவன் கேரா) இந்தியன் எக்ஸ்பிரஸில் எதிர்வினை ஆற்றியுள்ளார். என் வாதங்களை திசை திருப்பி திருகலாக்கும் வீண் முயற்சி அது.
நாதுராம் கோட்சே காந்தியை கொன்றது தவறு. அது மட்டுமல்ல அதற்கு அவன் முன்வைத்த காரணங்களும் தவறு என்று நான் எழுதியிருந்தேன்.
1947 இல் இந்திய பிரிவினைக்கு காந்தி தான் காரணமென கோட்சே நினைத்தான். காந்தியை விட மிக அதிக காரணம் காங்கிரஸ் உயர்த்தி பிடிக்கும் ஜவஹர்லால் நேரு போன்றவர்களே என்று என் கட்டுரையில் வாதிட்டிருந்தேன். செய்தி தொடர்பாளரின் கட்டுரை காங்கிரஸ் கட்சியின் விரக்தியை காட்டுகிறது. ஆத்திரத்தில் அவர் சுழற்றிய சாட்டை அவரையே அடித்திருக்கிறது.
பிரிவினையை தடுக்க காந்தி இறுதிவரை முயன்றார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அந்த சோதனையான காலகட்டத்தில் எப்பாடுபட்டாவது அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற துடித்தார் நேரு.
நேருவின் கபட வேடத்தை முதலில் அம்பலப்படுத்தியவர் சுபாஷ் சந்திர போஸ். 1939 மார்ச்சில் அவர் எழுதிய வெளிப்படையான கடிதத்தில், நேருவின் தவறான அரசியல் நடவடிக்கைகளையும் கொள்கை தெளிவின்மையையும் கபட தன்மையையும் விமர்சித்திருந்தார். அதற்கு கடிதம் மூலம் பதிலளித்த நேரு, போஸ் சுட்டிக்காட்டிய தன்னுடைய குறைபாடுகளை ஒப்புக்கொண்டார். ஆனால் காந்தியுடன் தனக்குள்ள உறவு கெடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்ததாக வலியுறுத்தி இருந்தார்.
காந்தியிடம் இருந்த விசுவாசம் கொள்கை சார்ந்தது அல்ல. மாறாக காங்கிரஸ் கட்சியில் தான் உயர்வதற்கு காந்தியின் ஆதரவு அவசியம் என்று நேரு நம்பியதை அந்த கடிதம் காட்டுகிறது.
1942 இல் வார்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், ‘ ஜவஹர்லாலை என்னுடைய வாரிசாக கருத வேண்டும். நான் இப்போது செய்வதை நான் போன பிறகு அவர் தொடர்ந்து செய்வார். அப்போது என்னுடைய மொழியிலேயே அவர் பேசுவார்’, என்று காந்தி அறிவித்தார்.
ஆனால் வெகு விரைவிலேயே நேரு தன்னுடைய ஆதரவை விரும்புகிறாரே தவிர தன்னுடைய சிந்தனையை முன்னெடுக்க விரும்பவில்லை என்பதை காந்தி புரிந்து கொண்டார். இந்த பரிதாபத்தை 1945 இல் அவர்கள் இருவரிடையே நடந்த கருத்து, கடித பரிமாற்றத்தில் தெரிந்து கொள்ளலாம்.
காந்தி எழுதிய கடிதத்தில், இருவருக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு ‘அடிப்படையானது’ என்றால் ‘பொதுமக்களுக்கு அது பற்றி தெரிய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த நேரு, காந்தியின் ஹிந்து ஸ்வராஜ்யா கருத்துக்கள் ‘நடைமுறைக்கு பொருந்தாது’ என்றும் அதை காங்கிரஸ் ‘என்றும் பரிசீலனை செய்யவில்லை’ என்பது மட்டுமல்ல ‘ஏற்றுக்கொள்ளவும் இல்லை’ என்று எழுதினார். இந்த விஷயத்தை விடுதலை பெற்ற பிறகு நாடே தீர்மானிக்க விட்டுவிடலாம், என்று அந்த கடிதத்தில் சொல்லி விவாதத்தை தவிர்த்து விட்டார்.
நேருவின் நோக்கம் தெளிவாக இருந்தது. மக்கள் தன்னை காந்தியின் அரசியல் வாரிசாக நம்ப வேண்டும். அதேவேளையில் தான் அவரது கொள்கை வாரிசு அல்ல என்ற உண்மையை தெளிவு படுத்தாமல் மூடி மறைத்து விட்டார்.
பிறகு பிரிவினை சவால் வந்தது. அதை தவிர்க்க காந்தி உறுதி பூண்டார். ஆனால் நேருவும் மற்றவர்களும் அப்படியில்லை. 1946 கேபினட் மிஷன் திட்டம் போன்ற வாய்ப்புகள் வந்தன. அந்த திட்டத்தின்படி வட மேற்கில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகள், இந்து பெரும்பான்மை உள்ள பகுதிகள், வங்காளம் அஸ்ஸாம் பகுதிகள் என மூன்று பிரிவுகளாக மாகாணங்களை பிரிக்கலாம். மத்திய அரசிடம் இராணுவம், அயலுறவு , தொலைதொடர்பு என்ற துறைகள் மட்டும் இருக்கும் என்று சொல்லப்பட்டது.
இது மத ரீதியான பிரிவினை என்று காந்தி எதிர்த்தார். ஆனால் காங்கிரஸ் செயற்குழு இதை ஏற்றுக் கொண்டது. தேசப் பிரிவினையை இது தவிர்க்கும் என்றது.
ஆனால் நேரு தன்னிச்சையாக செய்தியாளர்கள் கூட்டத்தை கூட்டினார். அதில், ‘பலவீனமான மத்திய அரசை காங்கிரஸ் விரும்பவில்லை. அது மட்டும் அல்ல இது அணி பிரிப்பதாக உள்ளது’, என்றார். ஆரம்பத்தில் இருந்தே இந்த திட்டம் ஜின்னாவுக்கு பிடிக்கவில்லை. செய்தியாளர் கூட்டத்தில் நேரு சொன்னதையே சாக்கிட்டு ஜின்னா இந்த திட்டத்திலிருந்து விலகினார்.
அதன் பிறகு ஜூன் 3 ம் தேதி திட்டம் என்ற பிரிவினை திட்டம் வந்தது. நேருவும் அவரது சகாக்களும் அவசர அவசரமாக அதை ஆதரித்தனர். அதனால் காந்தி தலையிட்டு அதிருப்தியாளர்களை சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.
காந்தி நாட்டை பிரிக்காமல் ஒன்றாக வைத்திருக்கும் நோக்கில் செயல்பட்டார். ஆனால் பிரிவினை ஏற்பட்டாலும் பரவாயில்லை பதவி அதிகாரம் வந்தால் போதும் என்ற நோக்கத்தில் நேரு செயல்பட்டார். இதைதான் நான் போன வாரம் எழுதிய கட்டுரையில் விளக்கியிருந்தேன்.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையாளர் : இந்தியா பவுண்டேசனின் தலைவர். பாஜகவில் இருக்கிறார்.
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி முதல் நாள் – இந்திய அபார வெற்றி
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை என்பது ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் பத்தாவது பதிப்பாகும், இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இலங்கை கிரிக்கெட் ஆகியவற்றால் இணைந்து பிப்ரவரி 7, 2026 முதல் மார்ச் 8, 2026 வரை நடத்தப்படுகிறது. இலங்கை இதற்கு முன்பு 2012இல் போட்டியை நடத்தியது மற்றும் 2016இல் இந்தியா நடத்தியது. இந்தியாவில் ஐந்து இடங்களிலும் இலங்கையில் மூன்று இடங்களிலும் மொத்தம் இருபது அணிகள் 55 போட்டிகளில் போட்டியிடுகின்றன.
இந்தப் போட்டியில் இருபது அணிகள் போட்டியிடுகின்றன, இதில் இரண்டு போட்டியை நடத்தும் அணிகளான இந்தியா மற்றும் இலங்கை அணிகள். முந்தைய பதிப்பின் முதல் ஏழு அணிகளில் ஆறு, டி20ஐ அணி தரவரிசையில் ஏற்கனவே தகுதி பெறாத நான்கு உயர் தரவரிசை அணிகள் மற்றும் பிராந்திய தகுதிச் சுற்றுகள் மூலம் தீர்மானிக்கப்படும் எட்டு அணிகள் அடங்கும். இத்தாலி முதல் முறையாக ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. முந்தைய பதிப்பை வென்ற இந்தியா நடப்பு சாம்பியன் ஆகும்.
ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐ.சி.சி) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் டி20 உலகக் கோப்பையாகும். இது முதன்முதலில் 2007இல் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. 2024இல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற ஒன்பதாவது பதிப்பில் 20 அணிகள் போட்டியிட்டன, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இந்தியா வென்றது.
இந்தப் போட்டியின் வடிவம் முந்தைய பதிப்பைப் போலவே இருக்கும். தகுதி பெறும் 20 அணிகள் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குழு நிலையில், ஒவ்வொரு அணியும் குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை ரவுண்ட்-ராபின் வடிவத்தில் விளையாடும், மேலும் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 8 நிலைக்கு முன்னேறும். அங்கு அணிகள் தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக வைக்கப்படும். போட்டிக்கு முன்னதாக, ஐசிசி டி20 தரவரிசையின் அடிப்படையில் எட்டு தரவரிசைப்படுத்தப்பட்ட அணிகளை ஐசிசி அறிவித்தது. அவை குழு நிலையில் அவர்களின் நிலையைப் பொருட்படுத்தாமல் சூப்பர் 8 கட்டத்தில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடங்களில் வைக்கப்படும். ஒரு தரவரிசைப்படுத்தப்படாத அணி ஒரு தரவரிசைப்படுத்தப்பட்ட அணியின் இழப்பில் தகுதி பெற்றால், அது தங்கள் குழுவிலிருந்து தகுதி பெறத் தவறிய தொடர்புடைய தரவரிசைப்படுத்தப்பட்ட அணியின் நிலையை எடுக்கும். சூப்பர் 8 கட்டத்தில், ஒவ்வொரு அணியும் குழுவில் உள்ள மற்ற ஒவ்வொரு அணியுடனும் ஒரு முறை விளையாடும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் நாக் அவுட் நிலைக்கு முன்னேறும், இதில் இரண்டு அரையிறுதிகள் உள்ளன, அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
A, B, C, D என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள குழுக்களில் இடம் பெறும் அணிகள் பின்வருமஆறு.
குழு A – இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா
குழு B – ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமான்
குழு C – இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து, நேபாளம், இத்தாலி
குழு D – நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
07.02.2026 – இன்றைய ஆட்டங்கள்
டி20 உலகக் கோப்பையின் ஆட்டங்கள் இன்று தொடங்கின. முதல் ஆட்டம் இலங்கையில் கொழும்புவில் காலை 1100 மணிக்குத் தொடங்கியது. இதில் பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. முதலில் ஆடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் ஏழு விக்கட்டுகள் இழப்பிற்கு 147 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் ஏழு விக்கட் இழப்பிற்கு 148 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இரண்டாவது ஆட்டம் கொல்கொத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும் ஸ்காட்லாந்து அணிக்கும் இடையில் நடைபெற்றது. ஸ்காட்லாந்து அணி போட்டியில் இருந்து விலகிய வங்கதேச அணிக்குப் பதிலாக விளையாடுகிறது. முதலில் ஆடிய மே. இ. தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய ஸ்காட்லாந்து அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 147 ரன் எடுத்தது. இதனால் மே.இ.தீவுகள் அணி 35 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மூன்றாவது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா, அமெரிக்கா அணிகளுக்கிடையே நந்தது. முதலில் ஆடிய இந்திய 20 ஓவர்களில் 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 161 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 132 ரன் எடுத்து தோல்வியுற்றது. இந்திய அணியின் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 84 ரன்கள் அடித்தார். அதற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நீண்டநாட்களுக்குப் பின்னர் ஆடிய முகம்மது சிராஜ் மூன்று விக்கட்டுகள் எடுத்தார்.
நாளை (08.02.2026) ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்து அணைகள் சென்னையில் காலை 1100 மணிக்கு ஆடுகின்றன. இங்கிலாந்து நேபாள அணிகள் மும்பையில் மதியம் 0300 மணிக்கு விளையாடுகின்றன. கடைசி ஆட்டத்தில் இலங்கை அயர்லாந்து அணிகள் இரவு 0700 மணிக்கு விளையாடுகின்றன.