பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
மீனாட்சி திருக்கல்யாணம், வைகையில் கள்ளழகர் இறங்குதல் என மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!
மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் வைகையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுகளை, திருவிழாவின் மினியேச்சர் போல தத்ரூபமாக செய்து அசத்தியுள்ளனர் மாணவர்கள்.
மதுரை கோவில் பாப்பாகுடி மகரிஷி பள்ளியில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து முழு சித்திரைத் திருவிழாவையும் மீட்டுருவாக்கம் செய்தனர். மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள் சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய அங்கமாக இருக்கின்றன. இந்த நிகழ்வுகளை மாணவர்கள் தத்ரூபமாகச் செய்து காட்டினர்.
இதற்காக தங்க குதிரை போல தயார் செய்யப்பட்ட வாகனத்தில், கள்ளழகர் வேடமணிந்த மாணவர் ஒருவர் அமர்ந்து கொண்டார். அவரோடு, கோயில் பட்டாச்சாரியார் வேடம் அடைந்த மாணவரும் ஏறிக்கொண்டார். எதிர் சேவையை நினைவுபடுத்தும் விதமாக, சீர்பாத தூக்கிகள் போல தலையில் பாகை கட்டிய 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளி வளாகத்திற்கு வெளியே கள்ளழகரை ஊர்வலமாக அழைத்துச் சென்று வந்தனர்.
கள்ளழகருக்கு முன்பாக கருப்பசாமி வேடமிட்ட மாணவர்கள் அறிவாள் ஏந்தி ஆடியபடி சென்றனர். மேலும் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் மற்றும் ஊழியர்கள் காய்கறி, தேங்காய், பூ, பழம் மற்றும் மாலை தட்டுகளை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். நாம சின்னம் போட்ட மயிலிறகு விசிறிகளையும் எடுத்து வந்து கூட்டத்தின் நடுவே விசிறி விட்டனர்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக, விளையாட்டு மைதானத்தின் நடுவில் செயற்கைக் குளமும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் கள்ளழகர் இறங்க மாணவர்கள் தங்களிடமிருந்த தண்ணீர் துப்பாக்கியால் தண்ணீர் பீச்சி அடித்து கொண்டாடினர்.
இதனை பார்ப்பதற்கு சித்திரை திருவிழா மறுபடியும் நடப்பது போன்று இருந்தது. முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.
திருவிழாவில் பள்ளி மாணவர்களால், சிறு கடைகள் வைக்கப்பட்டு அதனால் கிடைத்த பணம் பெற்றோர் அற்ற குழந்தைகள் மற்றும் காப்பகத்தில் இருக்கும் முதியவர்களுக்கு வழங்கப்பட்டது.
பள்ளித் தலைவர் வடிவேலு, முதல்வர் ஹேமா கண்ணன் தலைமையில் கலை மற்றும் கலாச்சார துறை ஆசிரியர்கள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
2009, பிப்.18ம் தேதி எனது ப்ளாக்கில் நான் எழுதிய ஒரு செய்திக் கட்டுரை இது.
அன்று, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அந்நாளில் நான் விகடனில் பணியில் இருந்தேன்.அதனால்… ம்… புனைபெயர்தான்! ஜூ.வி.யில் கழுகார் பிரபலம் என்பதால், போட்டிக்கு நானும் ‘ஸம்பாதி’ என்ற கழுகின் பெயரிலான கழுகாரை என் ஒரிஜினல் பேரில் இல்லாத ‘எதிரொலிகள்’ என்ற ப்ளாக்கில் போட்டு எழுதினேன். சம்பாதி என்றால், சம்பாதித்தல் ஆகிவிடும் என்பதால், ஸம்பாதி-யென எழுதினேன். யதேச்சையாக இப்போது அந்த வாசகங்கள் படிக்க நேர்ந்தது.
அன்றே நான், மோடியைப் போன்ற ஒரு நபர் மத்தியில் ஆளக் கூடாதா என்ற தீவிர ஏக்கத்தினை வெளிப்படுத்தி, கட்டுரையினை இப்படி முடித்திருந்தேன்.
//(கடைசியில் சொல்ல வந்ததைச் சொல்லி ஒருவாறு விடை பெற்றார். ஆனால், அவருடைய பல ஐடியாக்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை மட்டுமல்ல, வெற்றிகரமானவையும் கூட! மோடியைப் போல் மத்தியிலும் ஒரு சிறந்த நிர்வாகி அமையவேண்டும்… அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும். நம் நாட்டை முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்லும் அந்த நிர்வாகி யார்!?)
– ஸம்பாதி //
மோடியைப் போல்… நம் நாட்டை முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்லும் அந்த நிர்வாகி – மோடியே தான்! என்பதை இந்தப் பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் என் டைரியைத் திருப்பிப் பார்க்கும் போது பளிச்செனக் கண்ணில் பட்டு, நீர்த் திவலைகள் விழித்திரையை மறைத்தன.
முழு நீளக் கட்டுரையையும் தருகிறேன். 15 வருடம் கழித்து இப்போது படித்தாலும், அன்றே – தெய்வத் தமிழராகிய நாம் மோடியை எவ்வாறு பார்த்தோம், புரிந்து கொண்டோம் என்பதற்கான அத்தாட்சியாகவே இது மனத்தில் பட்டது.
ஒரு மேலாண்மைப் படிப்பு மாணவனான நான், அதை ஒட்டியே அன்றே நரேந்திர மோடியிடம் கண்ட மேலாண்மைப் பண்புகள் – என்று குறிப்பிட்டு, அவர் பேசியதன் கருப் பொருளை, கண்டு கேட்டு வியந்த வித்தகப் பேச்சை இப்படியாகப் பதிவு செய்திருந்தேன்…
விருப்பமுள்ள அன்பர்கள் பதிவின் நீளம் பார்க்காமல் படித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம்!
அன்பன், செங்கோட்டை ஸ்ரீராம்
நரேந்திர மோடியிடம் நான் கண்ட மேலாண்மைப் பண்புகள்:
பிப்.16 திங்கள்கிழமை மாலை 6 மணி. நாரத கான சபா அரங்கம் நிரம்பியிருந்தது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தன் கல்விச் சிந்தனைகள் பற்றி எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் கல்வியே கற்பகத்தரு நூலின் வெளியீட்டு விழா நிகழ்வு அது.
நிகழ்ச்சித் தொகுப்பு வழக்குரைஞர் சுமதி. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அவ்வை நடராஜன், நல்லி குப்புசாமி செட்டியார், பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ், சோ ராமசாமி ஆகியோர். அவ்வை நடராஜன் எப்போதுமே தமிழில் வெளுத்து வாங்குவார். அன்று நரேந்திர மோடிக்குப் புரியவேண்டும் என்று எண்ணினாரோ என்னவோ, தமிழிலும் பின்னர் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் கலக்கினார். நிறுத்தி நிதானமாக தெளிவாகப் பேசுவது அவருடைய சிறப்பு.
நூல் வெளியீட்டு நிகழ்வுகளில் நல்லி குப்புசாமி செட்டியாரைப் பார்த்திருக்கிறேன். புத்தகம் பற்றியே பெரும்பாலும் பேசுவார். இந்த நிகழ்ச்சியிலும் அப்படியே பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், நூலை விட்டுவிட்டு, அவருடைய பிஸினெஸ் நூலைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். ஒரு ஆச்சரியம் & மோடிக்காக அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் வர்த்தகர்கள் பயன்படுத்தும் சாதாரண இந்தியில் அசாதாரணமாகப் பேசினார். சூரத் பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் மில் அதிபர்கள் மற்றும் சூரத் துணிகளின் மேன்மையைப் பற்றி ஒரு துணி வியாபாரி என்ற வகையில் பேசிச் சென்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய நரேந்திர மோடி, இவருடைய இந்தப் பேச்சுக்கு ஒரு சபாஷ் போட்டார். காரணம், தான் ஒரு பக்கா பிஸினஸ் மேன்ஒ என்றும், தன் மாநில டெக்ஸ்டைல் பற்றி அவர் மார்க்கெட்டிங் செய்ததற்கு நன்றி என்றும் குறிப்பிட்டார்.பெரும்பாலான மேடைகளில் முக்கியப் பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு கொடுத்து கௌரவிப்பார்கள். அப்படிச் செய்யும்போது பெரும்பாலானவர்கள் அந்தப் பொன்னாடையை அப்படியே கசக்கி சுருட்டி அல்லது ஏனோதானோவென்று வைத்துக் கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியில் நான் ஒன்றை கவனித்தேன். நல்லி தனக்குப் போடப்பட்ட பொன்னாடையை எவ்வித கூச்சமோ சங்கடமோ இல்லாமல், விரித்து, நன்கு உதறி, கலைக்கப்பட்ட மடிப்பிலேயே எந்தவித தொய்வும் இல்லாமல் மடித்து, எப்படி முதலில் கொண்டுவந்தார்களோ அப்படி மடிப்புக் குலையாமல் வைத்துக் கொண்டார். பழக்க தோஷம் என்பார்கள் சிலர். எனக்குப் பட்டது, தொழில் தர்மம்; திருந்தச் செய்யும் நேர்த்தி. வெற்றியாளனுக்குத் தேவையான பண்பு இது என்று எண்ணினேன்.
பி.எஸ்.ராகவன், நரேந்திர மோடியைப் பற்றி ஒரு விமர்சகர் எப்படி எழுதியிருந்தார் என்றும், பின்னர் அவரை நேரில் சந்தித்த போது, அவருடைய மனம் எப்படி மாறியது என்றும், அணுகுவதற்கு மிக எளியவர் என்பதை விளக்கி, குஜராத்தில் அவரை கடவுளுக்கு ஒப்பாக வணங்குகிறார்கள் சாமானியர்கள் என்றும் குறிப்பிட்டு அமர்ந்தார். மோடி உங்களால் முடியும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அவர் குஜராத்தோடு நின்றுவிடக்கூடாது, இந்தியா முழுமைக்கும் சென்றுவர வேண்டும் என்றார் உணர்ச்சிவயப்பட்டு…
சோ ராமசாமி பேசிய போது சில சலசலப்பு ஏற்பட்டதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. அப்போது நிகழ்ச்சியில், பத்திரிகையாளர் இருக்கைக்குப் பின்புறம் அமர்ந்திருந்த சிலர்( எனக்குப் பின் வரிசையில் அமர்ந்திருந்த சிலர்…) எழுந்து நின்று கூச்சல் போட்டனர். நாளிதழ்களில் வெறும் சலசலப்பு என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்கள்.
உண்மையில் அரங்கினுள் என்னதான் நடந்தது?
எப்போதுமே நக்கல் பேச்சோடு தொடங்கும் சோ வின் பேச்சு, அன்றும் நக்கலோடுதான் தொடங்கியது. ஹிந்தியில் பேசிய நல்லியை கொஞ்சம் நக்கலடித்தார்… என்ன, நல்லி ரெண்டு மூணு வார்த்தைதான் திரும்பத்திரும்பச் சொன்னார். கர்ணா, முசே, அச்சா, பஹுத் இப்படி… இதை என்னாலும்தான் பேச முடியும். (இப்படிச் சொன்னபோது பார்வையாளர்கள் கைதட்டினர், விசில் அடித்தனர்). ஆனால், அவரைப் போல் முடியாது. அவர் பிஸினஸ் விஷயமாக பலரைப் பார்க்கிறவர். அவருக்கு பல மொழிகள் தெரிந்திருக்கலாம். எனக்கு அப்படி அல்ல, அதனால் தமிழிலும் ஆங்கிலத்திலுமே பேசுகிறேன். என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்.மோடியை தமிழர்களுக்கு அதிகம் தன் பத்திரிகை மூலம் தெரியவைத்து, அவரை ஒரு சூப்பர் ஸ்டார் அளவுக்கு உயர்த்தியதாக முன்னர் குறிப்பிட்ட ஒருவரின் பேச்சை அப்படியே சொல்லி, தான் ஒன்றும் மோடியை சூப்பர் ஸ்டாராக மாற்றவில்லை என்றும், சூப்பர் ஸ்டாரைத்தான் மோடியாக மாற்ற முயல்வதாகவும் சொன்னபோது பலத்த கைதட்டல்கள்.
இப்படி, மோடியைப் பற்றியும், அல்லயன்ஸ்ஸின் பதிப்புத் திறன் பற்றியும் பேசிக்கொண்டு வந்தவர், இந்த நூல் தமிழில் வந்திருப்பது மிகவும் பொருத்தமானது. காரணம், இப்போது, பா.ஜ.கவுக்கு வேறு விடுதலைப்புலிகள் பேரில் புதிய பாசம் வந்திருக்கிறது… என்றார்.
சோவின் இந்த நக்கலுக்கு, பா.ஜ.தொண்டர்கள் தரப்பில் சலசலப்பு எழுந்தது. இலங்கைப் பிரச்னையை இங்கே பேசக்கூடாது என்று ஒரு சாரார். தமிழில் பேசு என்று ஒரு சாரார். நமது கட்சிக் கொள்கைக்கே முரணாகப் பேசுகிறார், கேட்டுக்கொண்டு சும்மா இருப்பதா என்று ஒருசிலர்… (இந்த நிகழ்ச்சி ஏதோ பா.ஜ.கட்சிக் கூட்டம் என்று நினைத்துவிட்டார்கள் போலும்!)… இந்த நிலையில் தங்கள் கட்சிக்காரர்களை சமாதானம் செய்ய பா.ஜ.க மாநிலத் தலைவர் இல.கணேசனும், தேசியச் செயலர் சு.திருநாவுக்கரசும் முன்னிருக்கையில் இருந்து எழுந்து வந்து, அரங்கு மத்திக்கு வந்தனர். ஒருவாறு கூட்டம் சலசலப்பு அடங்கியது. சோ பேசிக்கொண்டே இருந்தார். இலங்கையில் சண்டையை நிறுத்து என்று நாம் எப்படி கோரமுடியும். அது அவர்கள் உள்நாட்டு விவகாரம். நம் நாட்டில் காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை கூடாது என்று பாகிஸ்தானோ மற்ற நாடுகளோ சொன்னால் நாம் சும்மாயிருப்போமா? நமக்கு ஒரு நியாயம் அவர்களுக்கு ஒரு நியாயமா என்று பேசிக்கொண்டே சென்றார்.அவ்வளவுதான், சோவின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு அலை இன்னும் அதிகமானது. அதுவரை மரியாதையுடன் ங்கஒ போட்டு கூச்சல் போட்டவர்கள், இப்போது ஒருமைக்கு மாறினார்கள். இலங்கைப் பிரச்னையை காஷ்மீரோடு ஒப்பிடாதே… இத்தோடு பேச்சை நிறுத்து… அங்கே தினம் தினம் அப்பாவித் தமிழன் குண்டடிபட்டு சாகிறான். அவனும் சொகுசாக வாழும் காஷ்மீர் பயங்கரவாதியும் ஒன்றா? அடிப்படை தெரியாமல் இப்படி பேசாதே! என்று கோஷம் வலுத்தது.
ஆனாலும் சோ விடுவதாயில்லை. நீங்கள் என்னதான் எதிர்த்தாலும் நான் அப்படித்தான் பேசுவேன். இந்த கோஷத்துக்கெல்லாம் பயப்பட மாட்டேன். இதை இலங்கையின் வன்னி பகுதியில்கூட போய் நின்று இதையேதான் சொல்வேன். இதற்காக நான் பயப்படவில்லை… விடுதலைப்புலிகள் எதிர்ப்பில் ஜெயலலிதாதான் சரியான நபர். அவர் அன்றும் இன்றும் ஒரே முடிவில் உறுதியோடு இருக்கிறார்… இப்படிப் பேசிய போது, பார்வையாளர்கள் சிலர், ஜெயலலிதா ஒழிக!ஒ என்று எழுந்து நின்று கோஷம் போட, நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, ஒரு பக்கா அரசியல் கூட்டமாக களம் மாறிப்போனது. ஒருவாறு சோ பேச்சை நிறுத்திக் கொண்டு அமர்ந்துவிட்டார்.
(அவர் இப்படி எத்தனையோ எதிர்ப்புகளை சந்தித்தவர்தான். அவருக்கு இது ஒன்றும் புதிதில்லை. ஆனால் புதிது எதுவென்றால், பா.ஜ. தரப்பில் கட்சித் தொண்டர்கள் இடையில் எழுந்து எதிர்ப்பு கோஷம் போடுவது! ஒருமையில் திட்டுவது. பா.ஜ. கட்சியினருக்கு இப்போது புது நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். அவர்களிடம் இருந்து தொற்றிக்கொண்டிருக்கும் பழக்கமாக இருக்கலாம். ஆனால் உண்மையில், இவர்கள் சொல்வதுபோல், இலங்கைப் பிரச்னைக்கும் காஷ்மீர் பிரச்னைக்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. இரண்டுக்கும் முடிச்சு போடுவது தவறு என்றே மனதில் படுகிறது. இலங்கை குறித்து பேச நமக்கு உரிமை உண்டு; ஆனால், காஷ்மீரில் கைவைக்க பாகிஸ்தானுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்ற எண்ணம் எனக்கு. இது குறித்து நிறைய தகவல்களை சேகரித்து பின்னர் பிளாக்கில் இட எண்ணம் உண்டு).
பின்னர் பேசிய நரேந்திர மோடி, தன் மாநிலத்தை எவ்வாறு சூப்பர் பவர் மாநிலமாக மாற்றிக் காட்டியிருக்கிறேன் என்று பெருமிதம் பொங்கச் சொன்னார். அவருடைய பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மேலாண்மைத் துறை மாணவன் என்ற முறையில், அவருடைய மேலாண்மை உத்திகளை கவனிப்பதிலேயே இருந்தேன். இதயம் தொட்ட அவருடைய பேச்சிலிருந்து சில பகுதிகள்…நான் குஜராத் மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அந்த மகிழ்ச்சி எனக்கு இரண்டு நாட்கள் நீடித்திருந்தது. பாராட்டுகள் என்ன, மாலை மரியாதைகள் என்ன…. கனவுலகில் மிதக்கும் மகிழ்ச்சி. எல்லாம் இரண்டு நாட்கள்தான்! மூன்றாவது நாள் நான் நாற்காலியில் அமர்ந்து முதல் கோப்பைப் பார்த்தவுடனேயே எல்லாம் பொசுக்கெனப் போய்விட்டது. தேசிய அளவில் பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் மாநிலங்களின் வரிசையில் குஜராத் 20வது இடத்தில் இருந்தது. இந்த அறிக்கை என்னை இரவு முழுதும் தூங்க விடவில்லை. மோடி ஏதாவது செய் என்று என் உள்மனம் எனக்குக் கட்டளை இட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு முடிவு எடுத்தேன். இது போன்ற மேடைகளில் எனக்கு வரும் பரிசுப் பொருள்கள் இத்யாதிகளை அப்படியே அரசுக் கருவூலத்தில் சேர்த்து விடுவது; அதை ஏலம் விட்டு வரும் பணத்தில் சுயமாக கல்விக்கு என்று செலவழிப்பது…. ஆச்சர்யம், ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட இருபது கோடி ரூபாய் சேர்ந்தது. அதை பெண் குழந்தைகளின் கல்விக்காகவே செலவழித்தேன்.
கிராமப் புறங்களில் குழந்தைகள் பள்ளியிலிருந்து இடை நிற்றல் சதவீதம் அதிகமாக இருந்தது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்கினர். இந்நிலையில் அரசாங்க அதிகாரிகளுடன் நானும் ஜூன் 16,17,18 தேதிகளில் ஒவ்வொரு வருடமும் மூன்று நாட்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று மக்களுடன் நேருக்கு நேர் பேசி, அவர்களுடன் தங்கி, அவர்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் என்று கோரிக்கை விடுத்தேன். இந்தச் செயல் இப்போதும் நடைபெற்று வருகிறது. இதனால், 100 சதவீதம் பேரும் இன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். 42 சதவீதமாக இருந்த பள்ளி இடைநிற்றல் இப்போது 2 சதவீதமாக உள்ளது. இந்த வருடத்துக்குள் அது 0% ஆக நிச்சயம் மாறும்.
(மோடி பெண் குழந்தைகள் கல்வி விஷயத்தில் காட்டிய அக்கறை போன்று அவருடைய ஆசிரியர்கள் மீதும் காட்டியிருக்கிறார் என்பதை அவருடைய பேச்சு வெளிப்படுத்தியது. கல்வி கற்பித்த ஆசிரியர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்காவிட்டால், கற்ற கல்வியை எவ்விதத்திலும் பின்னாளில் பயன்படுத்த முடியாமல் போய்விடும்.)
செப்.5 ஆசிரியர் தினமென்று, முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரால் நாம் கடைப்பிடிக்கிறோம். அந்நாளில் நான் என் ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்ய எண்ணினேன். எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் எல்லோரையும் பட்டியலிட்டு அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று தகவல் சேகரித்து, அவர்களை வீட்டுக்கு அழைத்து வணங்கினேன். 33 ஆசிரியர்கள்… அவர்களில் ஒருவருக்கு வயது 95.
இப்படிப் பேசியவர், வழக்கம்போல் குஜராத் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ளதையும், 24 மணி நேரமும் தங்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதையும் குறிப்பிட்டு, மாணவர்களின் படிப்புக்கு முக்கியத் தேவை இது என்றும் குறிப்பிட்டார். எங்கெல்லாமோ அலைந்து திரிந்து தண்ணீர் கொண்டுவர சிரமப்பட்ட காலம் போய், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்திருப்பதாகச் சொல்லி, இப்படிச் செய்தாலே ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட முடியும் என்று குறிப்பிட்டார்.
(அதாவது, மாநிலத்துக்கான வளர்ச்சிப் பணிகளைத் திறம்படச் செய்துவிட்டு பின்னர் ஓட்டு கேட்டு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது மறைமுகச் செய்தி).
மேலும், தகவல் தொழில்நுட்பம் என்றாலே, பெங்களூரும் ஹைதராபாத்தும்தான் பேர் வாங்கியிருகிறது; ஆனால், குஜராத்தில் உள்ள கிராமங்களில்கூட பரவலாக பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்பட்டு, எல்லா பள்ளிகளும் அகண்ட அலைவரிசை இணைப்பு மூலம் தொடர்புபடுத்தப் பட்டுள்ளது என்றார். வரும் 20ம் தேதி, குஜராத்தின் கிராமப் பள்ளி மாணவர்களுடன் செயற்கைக்கோள் வழி உரையாடப் போகிறாராம். இப்படி பிராட்பேண்ட் வசதி இருப்பதால், கல்வி வளர்ச்சி நூறு சதவீதம் சாத்தியம் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப வளர்ச்சி, பிராட்பேண்ட் கனெக்டிவிட்டி போன்றவை பற்றி குறிப்பிடும்போது, இது மிகவும் முக்கியம். அரசு அலுவலகங்கள் பிராட்பேண்ட் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், நிர்வாகம் தூய்மையாகவும் நேர்மையாகவும் நடக்க வாய்ப்பாக உள்ளது. இப்போதெல்லாம், அரசாங்க அலுவலகங்களுக்கு மனு கொடுக்கவோ படிவங்கள் வாங்கவோ அல்லது வேறு வேலையாக வருபவர்கள், அரசு அலுவலர்களால் லேசாக அலட்சியப்படுத்தப் படுவதாக உணர்ந்தாலே, சரி விடுங்க; நான் ஆன் லைனில் போய்க்கறேன் என்று பளிச்சென்று சொல்லி விடுவார்கள். இது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை என்றார். குஜராத்தின் பொருளாதார மாநாடுகள் பற்றியும், அயல்நாட்டு முதலீட்டாளர்களை குஜராத்தின் பக்கம் திருப்பி, எப்படி அன்னிய முதலீடு அதிகளவில் குஜராத்தில் குவிய வைத்துள்ளோம் என்பதையும் சுவாரஸ்யமாகச் சொன்னார்.
முக்கியமாக, சென்னையில் நடந்த பொருளாதார மாநாட்டைப் பற்றிய விவரம் பெரும்பாலும் யாருக்கும் தெரியாமல் போனதையும், முக்கியமான ஒரு மாநாட்டுக்குக் கொடுக்கும் மதிப்பு தமிழகத்தில் இவ்வளவுதானா என்பது தொனிக்கும் வகையிலும் பேசினார். இதில் நிறைய உண்மை உள்ளது.
கோர்ட்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைப் பற்றிப் பேசியபோது, தாமதிக்கப்பட்ட நீதி, தடுக்கப்பட்ட நீதி என்பார்கள். இதன்மூலம் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இதற்கு முடிவு கட்ட ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நீதிபதிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தேன். முதலாவது, தயவுசெய்து உங்களுடைய பத்து நாள் விடுமுறையை ஆறு நாள்களாகக் குறைத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது, நீதிமன்றங்கள் காலை 11 மணிக்கு பதிலாக 10.30க்கு தொடங்குமாறு ஏற்பாடு செய்யுங்கள். மூன்றாவது, மாலை நேர கோர்ட்டுக்கு வழி ஏற்படுத்துங்கள். இதன் மூலம், சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்கள் முதல், பகலில் கஷ்டப்பட்டு வேலை செய்யும் சாமானியர்கள் மாலை நேரங்களில் வழக்குகளை அணுக ஏதுவாக இருக்கும் என்றேன். இந்த ஐடியா நன்றாகவே பலனளித்தது. நீதிபதிகளின் ஒத்துழைப்பில், கிட்டத்தட்ட ஒரு கோடி வழக்குகள் தேக்கம் என்ற நிலையிலிருந்து 20 லட்சம் வழக்குகளாகக் குறைந்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் அது ஜீரோ என்ற நிலைக்கு நிச்சயம் மாறும்.
மூன்றாவது முறையாக முதல்வராக இருக்கும் என் மேல், நிர்வாக ரீதியாக எந்தக் குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகள் சொல்லவில்லை. அது தொடர்பான எந்த வழக்குகளும் போடப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், கேரளாவின் கம்யூனிஸ அரசாங்கத்தின் உறுப்பினர் என் நிர்வாகத்தைப் பாராட்டிப் பேசினார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது ரெட் தாலிபானிஸம் என்ற புதிய கொள்கை இங்கு பரவுவதையே காட்டுகிறது. ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. கேரள அரசால் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு, அது சிறப்பாக இயங்குகிறது என்று தெரியவந்தபோது, அதை நாமும் பின்பற்றினால் என்ன என்று எங்கள் மாநிலத்திலிருந்து இரண்டு இளம் அதிகாரிகளை அனுப்பி திட்டத்தை ஆய்வு செய்து நான் என் மாநிலத்தில் அமல்படுத்தினேன். நமக்கு நாட்டின் நலன்தான் முக்கியமே தவிர, அரசியல் காழ்ப்பு கூடாது. அரசியல் தீண்டாமை பெருகி வருவது கவலை அளிக்கிறது. நாடு முன்னேற அரசியல் தீண்டாமை கூடாது. தத்துவங்கள் ஒவ்வொருவருக்கிடையீல் வேறாக இருக்கலாம். ஆனால், அடிப்படை மாண்புகளை விட்டுவிட்டால், நாடு எப்படி முன்னேறும். நான் குஜராத்தை மட்டும் முன்னேறச் செய்ய நினைக்கவில்லை; குஜராத் உருவத்தில் இந்த நாட்டின் முன்னேற்றம் குறித்தே சிந்திக்கிறேன்
.முன்னர் பேசியவர்கள் ஒபாமா பற்றி குறிப்பிட்டார்கள். எங்கே நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் இருந்தும் நாம் எடுத்துக்கொள்ள ஒரு செய்தி உண்டு. அமெரிக்க மக்கள் நமக்கு ஒரு நல்ல பாதையை காட்டியிருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியிருப்பதுதான். ஜார்ஜ் புஷ், ஜூனியர் புஷ், கிளிண்டன் பின் அவர் பின்வாசல் வழியே இப்போதும் நுழையப் பார்த்தார். ஆனால், மக்கள் தடுத்து நிறுத்தி, ஒபாமாவை முன்னிறுத்தி வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இது நமக்கு அவர்கள் காட்டிய பாடம். மத்தியிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக கட்சிகளின் ஆட்சி வரவேண்டும். பா.ஜ.க அப்படிப்பட்ட ஒரு கட்சி என்பதால், அதற்கு ஆதரவு பெருக வேண்டும்…
(கடைசியில் சொல்ல வந்ததைச் சொல்லி ஒருவாறு விடை பெற்றார். ஆனால், அவருடைய பல ஐடியாக்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை மட்டுமல்ல, வெற்றிகரமானவையும்கூட! மோடியைப் போல் மத்தியிலும் ஒரு சிறந்த நிர்வாகி அமையவேண்டும்… அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும். நம் நாட்டை முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்லும் அந்த நிர்வாகி யார்!?)
கொல்கொத்தா அணியை (261/6, பில் சால்ட் 75, சுனில் நரேன் 71, வெங்கடேஷ் ஐயர் 39, ஆண்ட்ரு ரசல் 24, ஷ்ரேயாஸ் ஐயர் 28, அர்ஷதீப் சிங் 2/45) பஞ்சாப் அணி (262/2, ஜானி பெயிர்ஸ்டோ 108*, பிரப்சிம்ரன் சிங் 54, ரிலீ ரோஸ்கோ 26, ஷஷாங்க் சிங் 68*) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே கொல்கொத்தா அணி மட்டையாட வந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான பில் சால்ட் (37 பந்துகளில் 75 ரன், 6 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் சுனில் நரேன் (32 பந்துகளில் 71 ரன், 9 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். சுனில் நரேன் 10.2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். பில் சால்ட் 12.3 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அச்சமயத்தில் அணியின் ஸ்கோர் 163/2. அவருக்குப் பின்னர் ஆடவந்த வெங்கடேஷ் ஐயர் (23 பந்துகளில் 39 ரன்), ஆண்ட்ரு ரசல் (12 பந்துகளில் 24 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ஷ்ரேயாஸ் ஐயர் (10 பந்துகளில் 28 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஷ்ரேயாசுக்குப் பின்னர் ஆடவந்த ரிங்கு சிங் 4 பந்துகளில் 5 ரன் அடித்தார். அதன் பின்னர் ரமன்தீப் சிங் 3 பந்துகளில் 6 ரன் அடித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கொத்தா அணி 6 விக்கட் இழப்பிற்கு 261 ரன் எடுத்திருந்தது. கொல்கொத்தா மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச் ஐ.பி. எல் ஸ்கோர் இதுவாகும்.
262 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான பிரப்சிம்ரன் சிங் (20 பந்துகளில் 54 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்) ஆறாவது ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜானி பெயர்ஸ்டோ (48 பந்துகளில் 108 ரன், 8 ஃபோர், 9 சிக்சர்)இறுதி வரை ஆடி வெற்றிக்கு வழிவகுத்தார்.
அவருடன் ரிலீ ரோஸ்கோ (16 பந்துகளில் 26 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ஷஷாங்க் சிங் (28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 68 ரன், 2 ஃபோர், 8 சிக்சர்) இணைந்து ஆடி 18.4 ஓவரில் வேற்றிக்குத் தேவையான 262 ரன்னை எடுத்தனர்.
இதனால் பஞ்சாப் அணி ஒரு அதிக பட்ச ஸ்கோரை சேஸ் செயது 8 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பஞ்சாப் அணியின் ஜானி பெயர்ஸ்டோ தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.
இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும்.
திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
1) 2.5.24 முதல் வண்டி எண் 06877 தினமும் விழுப்புரத்தில் மாலை 6.25 க்கு புறப்படும் ரயில் மயிலாடுதுறை, பேரளம் பூந்தோட்டம் நன்னிலம் வழியாக இரவு 10:45 மணிக்கு திருவாரூர் வந்து சேரும்.
2) 03-5-24 முதல் வண்டி எண் 06690 தினமும் காலை 5 10 மணிக்கு திருவாரூரில் புறப்பட்டு விழுப்புரம் 9. 15 மணிக்கு சென்றடையும். இது பல்லவனுக்கு இணைப்பாக அமையக்கூடும்.
3) 02-5-24 முதல் இரவு 8:25 மணிக்கு திருச்சியில் புறப்படும் வண்டி எண் 06876 தஞ்சாவூர் சாலியமங்கலம் நீடாமங்கலம் கொரடாச்சேரி வழியாக திருவாரூருக்கு இரவு 11:05க்கு வந்து சேரும்.
4) 03.5.24 முதல் தினமும் காலை 4.45 க்கு திருவாரூரில் புறப்பட்டு திருச்சிக்கு 7:00 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் திருச்சியில் புறப்படும் இன்டர்சிட்டி ரயிலுக்கு இணைப்பாக அமையக்கூடும்.
5)3.5.24 முதல் வ. எண் 06627 அகஸ்தியன் பள்ளியில் காலை 5.55 மணிக்கு புறப்பட்டு வேதாரண்யம், தோப்புத்துறை, நெய் விளக்கு, கரியாப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல் வழியாக திருவாரூர் 7.55 மணிக்கு வந்தடையும்.
6) 03.5.24 முதல் வண்டி எண் 06630 திருவாரூரில் இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு அகஸ்தியன் பள்ளிக்கு இரவு 9.30 சென்றடையும்.
7) வண்டி எண் 06851 திருவாரூரில் காலை 08.30க்கு கிளம்பி பட்டுக்கோட்டை 10.05 மணிக்கு சென்றடையும்.
8) மாலை 5. 15 மணிக்கு பட்டுக்கோட்டையில் கிளம்பி (வண்டி எண் 06852 ) திருவாரூருக்கு மாலை 06.55 மணிக்கு வரும்.
9) வ.எண் 06197 திருவாரூரில் காலை 06.20 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு 9 35 மணிக்கு சேரும்.
10) மறு மார்க்கத்தில் மாலை 6 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்டு இரவு 9:25 மணிக்கு திருவாரூர் வந்து சேரும்.
திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனமான அபய் பக்சந்த் சாஜேத் மற்றும் அருண் குமார் அகர்வால் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 வாக்குச்சாவடிகளில் மட்டுமே தேர்தல் ஆணையம் EVM வாக்குகளை VVPAT மூலம் சரிபார்க்கும் நடைமுறைக்கு பதிலாக, அனைத்து VVPAT களும் சரிபார்க்கப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
‘தெளிவற்ற மற்றும் ஆதாரமற்ற’ அடிப்படையில் EVMகள் மற்றும் VVPAT களின் செயல்பாட்டில் சந்தேகத்தை ஏற்படுத்தும் மற்றொரு முயற்சி இது என்று தேர்தல் ஆணையம் இந்த மனுக்களை எதிர்த்தது.
கூடுதலாக, அனைத்து VVPAT காகித சீட்டுகளையும் கைகளால் முறையாக எண்ணுவது, பரிந்துரைக்கப்பட்டபடி, உழைப்பு மற்றும் நேரத்தைச் செலவழிக்கும், ஆனால் ‘மனிதப் பிழை’ மற்றும் ‘சிரமத்திற்கு’ வாய்ப்புள்ளது என்று வாதிடப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையத்தின் பதிலில், EVMகள் சேதப்படுத்த முடியாதவை என்றும், மனுதாரர்கள் கூறியது போல் வாக்காளர்களுக்கு அத்தகைய அடிப்படை உரிமை இல்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) இன்று, உச்ச நீதிமன்றம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இவிஎம்கள்) தரவுகளை வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தாள், தணிக்கை (விவிபிஏடி) பதிவுகளுடன் 100% குறுக்கு சரிபார்ப்பு கோரும் மனுக்களை தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்குகள் ஏப்ரல் 18 ஆம் தேதி உத்தரவுக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், தேர்தல் ஆணையத்திடம் இருந்து சில தொழில்நுட்ப விளக்கங்களை பெஞ்ச் விரும்பியதால் ஏப்ரல் 24 ஆம் தேதி விசாரிப்பதற்காக, மீண்டும் பட்டியலிடப்பட்டது. அளிக்கப்பட்ட பதில்களை கருத்தில் கொண்டு, இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இவ்விவகாரத்தில் இரு நீதிபதிகளும் தனித்தனியாக, ஆனால் இணக்கமான தீர்ப்புகளை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்புகளின் முடிவைக் குறிப்பிட்டு, நீதிபதி கன்னா நீதிமன்றத்தில் வாக்குச் சீட்டு முறைக்கே திரும்புதல், முழுமையான EVM-VVPAT சரிபார்ப்பு, வாக்குப்பெட்டியில் வைக்க வாக்காளர்களுக்கு VVPAT சீட்டுகளை வழங்குவதற்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று கூறினார். “நடைமுறையில் உள்ள நெறிமுறை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பதிவில் உள்ள தரவு ஆகியவற்றை ஏற்றுக் கொண்ட பிறகு, மனுவில் கோரிய அனைத்தையும் நாங்கள் நிராகரித்துள்ளோம்” என்று நீதிபதி கன்னா கூறினார்.
முன்னதாக, இது தொடர்பில் இரண்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இருப்பினும், பின்வரும் 2 வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன:
(1) 01.05.2024 அன்று அல்லது அதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட VVPAT இல் சின்னத்தை ஏற்றும் செயல்முறை முடிந்ததும், சின்னம் ஏற்றுதல் அலகு (SLU) சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் முத்திரையிட்டு கையெழுத்திட வேண்டும். SLUகள் அடங்கிய சீல் செய்யப்பட்ட கன்டெய்னர்கள், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு EVMகளுடன் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் போலவே அவை திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு கையாளப்பட வேண்டும்.
(2) 5% EVMகளில் உள்ள காலியான நினைவக செமிகண்ட்ரோலர், அதாவது கண்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் மற்றும் VVPAT என, நாடாளுமன்றத் தொகுதியின் சட்டமன்றப் பிரிவுக்கு, EVM தயாரிப்பாளர்களின் பொறியாளர்கள் குழுவால் சரிபார்க்கப்படும்.
அதிக வாக்களிக்கப்பட்ட வேட்பாளருக்கு பின் 2 மற்றும் 3 இடங்களில் உள்ள வேட்பாளர்கள் எழுத்துப்பூர்வ கோரிக்கையின் பேரில் முடிவுகளை வெளியிடவும். அத்தகைய வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் வாக்குச் சாவடி அல்லது வரிசை எண் மூலம் EVMகளை அடையாளம் காண வேண்டும். அனைத்து வேட்பாளர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் சரிபார்ப்பின் போது உடனிருக்க உரிமை உள்ளது.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் அத்தகைய கோரிக்கை வந்தால் ஏற்கப்பட வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரி, பொறியாளர்கள் குழுவுடன் கலந்தாலோசித்து, காலியான நினைவக மைக்ரோகண்ட்ரோலரின் நம்பகத்தன்மை மற்றும் அப்படியே இருப்பதை சான்றளிக்க வேண்டும். சரிபார்ப்பு செயல்முறை நடத்தப்பட்ட பிறகு, கூறப்பட்ட சரிபார்ப்புக்கான உண்மையான செலவு அல்லது செலவுகள் ECI ஆல் அறிவிக்கப்படும், மேலும் அந்த கோரிக்கையை முன்வைக்கும் வேட்பாளர் அதற்கான கட்டணத்தை செலுத்துவார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு கண்டறியப்பட்டால், செலவுகள் திரும்பப் பெறப்படும்.
நீதிபதி கன்னா மேலும், வாக்குச் சீட்டுகளை எண்ணும் மின்னணு இயந்திரம் மற்றும் சின்னத்துடன் ஒவ்வொரு கட்சிக்கும் பார்கோடு இருக்க முடியுமா என்ற பரிந்துரையை ஆய்வு செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டார்.
நீதிபதி தத்தா, தனது தீர்ப்பின் கூடுதல் விஷயங்களைக் குறிப்பிட்டு, ஒரு அமைப்பை கண்மூடித்தனமாக நம்புவது தேவையற்ற சந்தேகத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறினார். “அதற்கு பதிலாக, அமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த ஆதாரம் மற்றும் காரணத்தால் வழிநடத்தப்படும் ஒரு முக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும்…” என்றார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் 2 ஆம் கட்ட வாக்குப் பதிவின் தொடக்கத்தில் தீர்ப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
“மக்களே! மறக்காம என் மறைவுக்கு வந்துருங்க!” – மல்லிகார்ஜுன் கார்கே வினோத அழைப்பு!
— ஆர். வி. ஆர்
காதுகுத்தல், கல்யாணம், கிருஹப் பிரவேசம் என்று உங்களுக்குத் தெரிந்தவர்களை நீங்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பீர்கள். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு யாரும் வழங்காத அழைப்பை, ஒரு அரசியல் தலைவர் சமீபத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் விடுத்திருக்கிறார். அவர்தான் மல்லிகார்ஜுன் கார்கே. அவர் கட்சிதான் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கும் காங்கிரஸ் கட்சி.
சமீபத்தில் கர்நாடக மாநிலம், கலபுர்கி லோக் சபா தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்துவந்தார் கார்கே. அப்போது மேடையில் நின்று மக்களை நோக்கி, “நீங்கள் என் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்கிறீர்களோ இல்லையோ, எனது இறுதி ஊர்வலத்துக்கு வந்து விடுங்கள்” என்று தத்தக்கா பித்தக்கா என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசினார்.
ஒருவேளை கலபுர்கியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெயிக்க வாய்ப்பில்லை என்று கார்கே நினைத்திருக்கலாம். அதற்காக, இப்படி உணர்ச்சி பூர்வமாக – அதுவும் இறப்பு நிகழ்ச்சி என்றெல்லாம் – பேசினால் மக்கள் பரிதாபத்தில் உருகி சற்று அதிகமானவர்கள் தனது கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப் போடுவார்கள், காங்கிரஸ் கட்சி அங்கு ஜெயிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். எதுவானாலும் இது வடிகட்டின அசட்டுப் பேச்சு.
ஒரு வருடம் முன்பு திமுக மாநில அமைச்சர் துரை முருகன், முதல்வர் ஸ்டாலினை அருகில் வைத்துக்கொண்டு, “நான் மறைந்த பிறகு, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என்று எழுதுங்கள்” என்று பேசி, கட்சியிலுள்ள மற்ற தலைவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ஸ்டண்ட் அடித்தார். அதை மனதில் வைத்து, ‘இப்போது அரசியலில் பல தலைவர்களும் மலிவாகப் பேசுகிறார்கள். மல்லிகார்ஜுன் கார்கேயின் பேச்சும் அது மாதிரித்தான்’ என்று நாம் சாதாரணமாக நினைக்கும் விஷயமில்லை இது.
துரைமுருகன் பேசியது, அக்மார்க் திமுக பாணி. இது போன்ற பேச்சு, இந்த அளவிலான மற்ற செயல்கள், திமுக-வுக்கே உரித்தானது.
சுமார் 71 ஆண்டுகளுக்கு முன்பாக, திமுக-வின் மு. கருணாநிதி ஒரு காரியம் செய்தார். அப்போது திமுக நடத்திய ஒரு போராட்டத்தின் பகுதியாக, திருச்சிக்கு அருகில் ‘டால்மியாபுரம்’ என்றிருந்த ஒரு ரயில் நிலையத்தின் பெயரை ‘கல்லக்குடி’ என்று பெயர் மாற்றக் கோரியது அக்கட்சி. அந்த சமயத்தில், அந்த ஊர் ரயில் நிலையத்திற்குள் கட்சிக்காரர்களுடன் சென்று ரயில் தண்டவாளத்தில் படுத்து, அங்கிருந்து கிளம்பவிருந்த ரயில் புறப்படாமல் ஸ்டண்ட் செய்தார் கருணாநிதி – என்ன இருந்தாலும் ரயில் தன் மீது ஏறாது என்ற நிச்சயத்தில். கருணாநிதிக்கு அப்போது வயது 29. இதனால் அரசியலில் சில படிகள் முன்னேறினார் கருணாநிதி.
சமீபத்தில் தனது 84-வது வயதில், துரை முருகன் தன்னால் முடிந்த ஸ்டண்டைத் தன் ‘கல்லறைப் பேச்சு’ மூலமாகவே செய்துவிட்டார் – திமுக வழியில். ஆனால் மல்லிகார்ஜுன் கார்கே பிதற்றியது, தலை சிறந்த காங்கிரஸ் முன்னோடிகளிடம் அவர் கற்ற பாடத்தினால் அல்ல.
திமுக அன்றுபோல் இன்றும் மலிவான பேச்சு, கண்ணியம் குறைந்த செயல்கள், ஸ்டண்ட் நடவடிக்கைகள், என்றுதான் அரசியல் செய்கிறது. ஆனால் திறமைக்கும் கண்ணியத்திற்கும் பொதுவாழ்வில் அர்ப்பணிப்புக்கும் ஒரு காலத்தில் பெயர்போன காங்கிரஸ் கட்சி, இன்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் தலைமையில், எல்லா வகையிலும் தாழ்வுற்று நிற்கிறது. இந்தப் பெரும் சோகத்தின் ஒரு அடையாளம், காங்கிரஸ் கட்சியின் பொம்மைத் தலைவராக (‘பிரஸிடெண்ட்’ என்று) பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன் கார்கேயும் அவரது பேச்சும் செயல்களும்.
திமுக தலைவர் கருணாநிதி, தன் கட்சிக்குள் தனது மகன் மு. க. ஸ்டாலினை உயர்த்திவிட, ஸ்டாலினுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பொறுமையாகச் செயல்பட்டு வந்தார். எதிர்பார்த்தபடி அதைக் கட்சியில் அனைவரும் ஏற்றனர். இப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தனது மகன் உதயநிதி ஸ்டாலினை எப்படி வேகவேகமாகக் கட்சிக்குள் முன்நிறுத்துகிறார், ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் எப்படி அசாத்தியமாகத் தொழில் செய்கிறார், கட்சிக்குள் இருக்கும் மற்ற தலைவர்கள் அந்த இருவரை எப்படி விழுந்து விழுந்து வரவேற்கிறார்கள், வணங்குகிறார்கள், என்பதும் வெளிப்படை.
காங்கிரஸ் கட்சி இப்போது கௌரவம் இழந்து சீரழிந்து விட்ட நிலையில், அதன் தலைவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமது பேச்சில் திமுக மாதிரி கட்சிகளின் பாணியைக் காப்பி அடிக்கிறார்கள். இதில் ஸ்டாலினோடு போட்டிபோட்டு அவரை மிஞ்சுகிறார் ராகுல் காந்தி. அதே பொறுப்பற்ற வகையில், ஆனால் ராகுலை மிஞ்சி விடாமல், கலபுர்கியில் பேசி இருக்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே.
சரி, மல்லிகார்ஜுன் கார்கே இப்படி உணர்ச்சி பூர்வமாகப் பிதற்றுவதற்கு ஏன் கலபுர்கி லோக் சபா தொகுதியைத் தேர்ந்தெடுத்தார்? மனிதர் காரண காரியமாகத் தான், திடீரென உணர்ச்சியில் உருகித் தனது கடைசிப் பயணத்துக்குக் கலபுர்கி மக்களைக் கண்ணில் நீர் மல்க அழைத்துவிட்டார். இதில் திமுக-வின் சாயல் பெரிதும் உண்டு. கலபுர்கி தொகுதியில் காங்கிரஸ் நிறுத்தி இருக்கும் வேட்பாளர் வேறு யாருமல்ல, அவர் மல்லிகார்ஜுன் கார்கேயின் மாப்பிள்ளைதான்!
அடுத்த படியாக, தமிழகத்தில் நோஞ்சானாய் இருக்கும் தமது கட்சியைப் பெரிதாய் வளர்க்க, தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் பேச்சிலும் செயலிலும் என்ன புதுமையைக் கடைப் பிடிப்பார்களோ? மேல்மட்டத்தில் காங்கிரஸ் இப்போது கெட்ட கேட்டில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இனி எப்படியெல்லாம் திமுக வழியில் செல்வார்களோ, அவர்களுக்கு மல்லிகார்ஜுன் கார்கேயின் பேச்சு எப்படி உதாரணமாகத் திகழுமோ, என்றெல்லாம் யாராவது கணிக்க முடியுமா?
Author: R Veera Raghavan, Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com
17 ஆம் நூற்றாண்டின் சம்ஸ்கிருதக் கவிகளிலே தன்னிகரற்று விளங்கியவர் நீலகண்ட தீட்சிதர். அவர் பன்முக வித்தகராக வாழ்ந்தார். பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.
ஏறக்குறைய கி.பி.1582 ஆம் ஆண்டில் நீலகண்ட தீக்ஷிதர் பிறந்தார். அவருக்கு முன்னும் பின்னும் ஐந்து தலைமுறைகளுக்கு புகழோடு விளங்கிய ஒரு குடும்பத்தில் அவர் பிறந்தார். தனது வம்சாவளியை அவருடைய நூலான கங்காவதரணம் என்ற காவியத்தில் அவர் இப்படி எழுதியிருக்கிறார்.
“பரத்வாஜர் என்று மூவுலகிலும் புகழ்பெற்ற ஒரு மகரிஷி உண்டு. அவருடைய சொல்லைக் கேட்டு, ராமன் காட்டில் திரிந்து கொண்டிருப்பதை நிறுத்தினான். அவருடைய வம்சத்தில், பாற்கடலிலிருந்து நிலா தோன்றியது போல், முதலாம் அப்பய்ய தீக்ஷிதர் தோன்றினார். அவர் பெரும் சிவபக்தர். அவரது தம்பி ஆச்சான் தீக்ஷிதர். அவரும் தமையனைப் போலவே எல்லாம் கற்றறிந்தவர். அவருடைய பிள்ளை நாராயண அத்வரி. அவருக்கு அன்பினால் இணைந்த ஐந்து புதல்வர்கள். அவர்கள் தாயின் கருவில் இருக்கும்போதே சிவபக்தியை சொத்தாகப் பெற்றவர்கள். அவர்களுள் தாய் பூமிதேவிக்கு இரண்டாவதாகப் பிறந்த மகன் நான்.”
அவரது முன்னோர்கள் பலரும் அரசர்களால் மதித்துப் போற்றப்பட்டவர்கள். அப்பய்ய தீக்ஷிதரின் தாத்தா ஆசார்ய தீக்ஷிதர் விஜய நகரம் கிருஷ்ண தேவராயரின் அவையை அலங்கரித்தவர். அப்பய்ய தீக்ஷிதர் வேலூர், பெனுகொண்டா மன்னர்களால் கொண்டாடப்பட்டவர். மிக உயர்ந்த நூறு நூல்களுக்கும் அதிகமாக எழுதியவர் அப்பய்ய தீக்ஷிதர். எழுபத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்த அவரைக் கனகாபிஷேகம் செய்து மன்னர் கௌரவித்ததாகவும், அவர் சிதம்பரத்தில் முக்தியடைந்ததாகவும் வரலாறு. அவரது ஆதரவில் வளர்ந்தவர் நீலகண்டன்.
கோவிந்த தீக்ஷிதரின் புதல்வரும் சதுர் தண்டிப்ரகாசிகா நூலின் ஆசிரியருமான வேங்கட மகியிடம் அவர் கல்வி கற்றார். கிருஷ்ணானந்த யதி, கீர்வாணேந்த்ர சரஸ்வதி, தந்தையான நாராயணாத்வரி முதலியவர்களிடம் சாஸ்திரங்களையும், குறிப்பாக அத்வைதத்தையும் கற்றுத் தேர்ந்தார். அவரது பன்னிரெண்டாவது வயதில் அப்பய்ய தீக்ஷிதர் காலமானார். பெரிய தாத்தாவின் சொத்தாக தேவி மகாத்மியத்தையும் ரகுவம்சத்தையும் பெற்றுக் கொண்ட அவரை, “நீ தேவியின் அருளால் மகாகவியாவாய்’ என அப்பய்ய தீக்ஷிதர் ஆசிர்வதித்தாராம்.
பின்னாளில் சுமார் முப்பதாண்டுகள் நீலகண்ட தீக்ஷிதர் மதுரையரசர் திருமலைநாயக்கனது அமைச்சராக இருந்தார். அது பற்றிய சுவையான வரலாறு உண்டு. மதுரையில் ஆற்று மணலில் தீக்ஷிதர் தேவி மகாத்மியப் பிரவசனங்கள் செய்து வந்தார். அதை மறைந்திருந்து கேட்டு அதனால் பெரிதும் கவரப்பட்ட திருமலை நாயக்கன் ஒரு புலவர் சபையைக் கூட்டி ஒரு போட்டி வைத்தவன். அதில் கேட்கப்பட்ட கேள்வி காக்கைக்குக் காகம் என்று எப்படிப் பெயர் வந்தது என்பதாகும். அவ்வளவு பெரிய சபையில் ஒரே நிசப்தம். பதில் சொல்ல யாரும் முன்வரவில்லை.
சபையைக் கலைக்க வேண்டியது தான் என்று அரசன் நினைத்த நேரத்தில் ஒருவர் எழுந்தார். ஒரு விளக்கமும் அளித்தார். இந்திரகுமாரன் ஜயந்தன் காக்கையுருவில் சீதையின் மார்பைக் கொத்திய போது ராமன் வெகுண்டான். ஆனால் சீதை ஜயந்தனை பொறுமையாய் மன்னிக்க, ராமனும் தன் கருணையால் அவனை மன்னித்தான். அதைக் கண்டு சுற்றியிருந்த காகங்கள் “”இவ்வுலகில் பொறுமை, மன்னிக்கும் இயல்பு இவற்றில் சீதையை ஒத்தவள் யார்?
( கா). இவ்வுலகில் தயையில் ராமனை ஒத்தவன் யார்? (: க)? என்று “காக’ என்று குரலெழுப்பி ஆர்ப்பரி த்தன. அதனால் “காக” என்ற பெயர் வந்தது. (யார் என்பதற்கு “கா’ என்பது பெண்பால் சொல், “க’ என்பது ஆண்பால் சொல் சம்ஸ்கிருதத்தில்). அப்படி விளக்கமளித்தவர் நீலகண்ட தீக்ஷிதர். அவரை உடனேயே தனது மந்திரியாக்கினான் திருமலை நாயக்கன்.
மதுரையின் அமைச்சராக நீலகண்ட தீக்ஷிதர் நல்ல பல சீர்திருத்தங்களைச் செய்தார். மீனாக்ஷியம்மன் கோவிலில் செய்யப்பட வேண்டிய தினசரி பூஜை பல்வேறு உற்சவங்கள் முதலியவற்றை நிர்ணயம் செய்து ஒழுங்குபடுத்தினார். நிர்வாக அலுவல்களுக்கு நடுவில் ஏராளமான நூல்களை எழுதினார். தான் கற்ற கல்வியை பிறருக்கும் போதித்து ஒரு நல்ல சிஷ்ய பரம்பரையை உருவாக்கினார்.
கடைசியில் ஒரு நாள் அரசுப் பணியும் சலித்தது. இறையருளிலே திளைக்க விரும்பிய அவர் பட்டம் பதவிகளைத் துறந்து விட்டு, திருநெல்வேலிக்கருகில் தாம்பிரவருணியின் கரையிலமைந்த பாலாமடை கிராமத்தில் துறவியாகத் தனது எஞ்சிய நாட்களைக் கழித்து இறைவனடி சேர்ந்தார். அவர் மதுரையை விட்டுஅகன்றது பற்றியும் ஒரு கதை உண்டு.
மதுரைக் கோவிலின் புதுமண்டபம் 1626 முதல் 1633 வரை திருமலை நாயக்கனால் கட்டப்பட்டது. அங்கே ஒரு தூணில் திருமலை நாயக்கன் தன் ஏழு பத்தினிகளுடன் இருக்கும் பெரிய சிற்பம் உள்ளது. சுந்தரமூர்த்தி ஆசாரி என்ற தலைமைச் சிற்பிக்கு ஒரு சோதனை ஏற்பட்டது.
பட்டமகிஷியின் சிலையைச் செய்யும்போது, இடது துடையில் சில்லுப் பெயர்ந்து விட்டது. மீண்டும் புதிதாகச் செய்தான், மீண்டும் அதே இடத்தில் சில்லுப் பெயர்ந்தது. அப்போது அப்பணியை மேற்பார்வை பார்க்க அங்கு வந்த தீக்ஷிதர் விஷயத்தைக் கேட்டு, சற்றே கண்மூடி யோசித்துவிட்டு, “”அதை அப்படியே விட்டுவிடு. மீண்டும் செய்து பயனில்லை. ஏனெனில் அந்த இடத்தில் மகாரா ணிக்கு ஒரு பெரிய மச்சம் இருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போனார்.
ஆசாரியும் அதை அப்படியே விட்டு விட்டான். பின்னால் அங்கு வந்த அரசன் நடந்ததைக் கேள்விப்பட்டான். தன் தே வியின் துடையில் மச்சமிருப்பது தெரிந்த அவனுக்கு சந்தேகம் பிறந்தது. அதுவே பெருங்கோபமாக மாறியது. அரண்மனை சென்றதும் தீக்ஷிதரை அழைத்து வரச் சொல்லி அதிகாரியை அனுப்பினான். தீக்ஷிதர் அப்போது அம்பாளது பூஜையில் இருந்தார்.
அரசன் ஆளனுப்பியது அவருக்குப் புதிய அனுபவம். உடனே கண்மூடி தியானித்தார். அரசனின் மடமை அவருக்குப் புரிந்தது. உடனே கையில் ஏற்றியிருந்த கற்பூரத்தை அம்பிகைக்குக் காட்டிவிட்டு அதனாலேயே தன் கண்களையும் அவித்துக் கொண்டார்.
“அரசன் அளிக்கவிருந்த தண்டனையைத் தானே விதித்துக் கொண்டதாகச் சொல்’ என்று அதிகாரியைத் திருப்பியனுப்பினார். பிறகு அம்பிகையைத் தன் உள்ளமுருக்கும் பாடல்களால் துதிக்கத் தொடங்கினார். பாடல்கள் முடிவதற்குள் அவரது கண்பார்வை மீண்டது.
நடந்ததையறிந்த திருமலை நாயக்கன் ஓடோடி வந்து தீக்ஷிதரிடம் மன்னிப்பு வேண்டினான். அரசனை பெருந்தன்மையுடன் மன்னித்த தீக்ஷிதர் தன் பதவியை உடனே துறந்து பாலாமடை சென்றார். திருமலை நாயக்கன் பாலாமடை கிராமத்தை அவருக்கே வழங்கினான். அதற்கு நீலகண்ட ஸமுத்ரம் என்ற பெயரும் வழங்கலாயிற்று. அப்போது தீக்ஷிதர் பாடிய பாடல்களே “ஆனந்த ஸாகரஸ்தவம்.’
நீலகண்ட தீக்ஷிதரின் மிகப் பிரசித்தி பெற்ற காவியம் சிவலீலார்ணவம். சிவ லீலைகளாகிய பெருங்கடல் என்று பொருள்.
ஹாலாஸ்ய மகாத்ம்யத்தையட்டி சிவனது 64 லீலைகளும் பேசப்படும் நூல். 22 காண்டங்களில் இரண்டாயிரத்துக்கு இரண்டு பாடல்கள் குறைவாக இயற்றப்பட்ட மகாகாவியம். 1907 ஆம் ஆண்டு முதன் முதலாக மகாமகோபாத்யாய தருவை கணபதி சாஸ்திரிகளால் திருவனந்தபுரத்தில் அச்சிடப்பட்டது.
மதுரை மீனாக்ஷி பிறப்பு, வளர்ப்பு, ஆட்சி, திக்விஜயம், சுந்தரேச்வரருடன் திருமணம், திருவாதவூரர் கதை, ஈசன் நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, அரிமர்தன பாண்டியனிடம் பிரம்படி பட்டது, நக்கீரர் அகந்தை அடக்கியது, கூன் பாண்டியன் நோய் நீக்கியது, சம்பந்தரும் சமணரும், அனல் வாதம், புனல் வாதம், பிறகு வந்த பாண்டிய மன்னர்களுக்கு அருளிய செயல்கள் அனைத்தும் கொண்ட காவியம்.
எட்டு காண்டங்கள் கொண்ட “கங்காவதரணம்’ (கங்கை கீழிறங்கியது) பகீரதன் கதை. “நீலகண்ட விஜய சம்பு’ திருப்பாற்கடலைக் கடைந்த நிகழ்ச்சியும், பிரபஞ்சத்தைக் காக்க சிவன் ஆலகால விஷத்தைக் குடித்து நீலகண்டனாக ஆன கதை உரை நடையும், பாடலும் கலந்த சம்பு இலக்கியம்.
“நள சரித நாடகம்’ 6 வது அங்கத்தோடு நின்று விடுகிறது. “கலி விடம்பனம்’ என்ற 102 பாடல்களைக் கொண்ட நூல் கலியுகத்தின் தீய பழக்க வழக்கங்களைக் காட்டும் நையாண்டிப் பாடல்கள். பர்த்ரு ஹரியின் நீதி சதகத்தைப் போலமைந்த 105 பாடல்களமைந்த “சபாரஞ்ஜன’. ஒன்றைச் சொல்லி ஆனால் உள்ளே ஆழ்ந்த வேறு பொருள் உள்ள “அன்யபதேச சதகம்’ என்ற 101 பாடல்கள். “ஆனந்த ஸாகரஸ்தவ’ காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அம்பாளைப் பற்றிப் பாடிய 108 பாடல்கள்.
பர்த்ருஹரியைப் போல 101 பாடல்களில் ஒரு “வைராக்ய சதகம்.’ வாழ்க்கையை அனுபவித்து அதன் இன்ப துன்பங்களைக் கண்டு களைத்து, அமைதியை விரும்பும் ஒரு முதிய உள்ளத்தின் “சாந்தி விலாசம்’ என்ற சிந்தனைகள். “சிவோத் கர்ஷ மஞ்சரி’, “சிவ தத்வ ரஹஸ்ய’, “சண்டி ரஹஸ்ய’, “குரு தத்வ மாலிகா’, “ஸெளபாக்ய சந்த்ராதபா’ என்ற சாக்த மத விளக்கம்…
இப்படி மேலும் பல நூல்கள். சிவனைப் பற்றியே பாடிய அவர், கண்ணனது குழந்தைப் பருவம் பற்றிய “முகுந்த விலாசம்’ என்ற நூலையும், “ரகு வீரஸ்தவ’ அல்லது “ராமாயண ஸாரஸங்க்ரஹ’ என்று ராமன் மேல் 33 பாடல்களையும் பாடியிருக்கிறார்.
அவரது கரைகாணாக் கல்வித் தேர்ச்சியும், கவிதைத் திறனும், அனுபவ அறிவும் ஒருங்கே துலங்கும் அவரது பாடல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
மாறிவரும் பருவங்களைப் பற்றிப் பேசுமிடத்தில் ஒரு பேருண்மையைக் காட்டுகிறார். சில பருவங்களில் சில பூக்கள் கிடைப்பதில்லை. அதனால் என்ன? வேறு பூக்கள் உண்டே.
போதவிழ் தாமரை இல்லையெனில் புதிய தாழம் பூஇலையோ? சோதியாம் நிலவு இல்லையெனில் சுந்தர மன்மதன் இங்கிலையோ? ஏதும் அன்னங்கள் இல்லையெனில் எழில்மிகு மயில்கள் இங்கிலையோ ஏதோ ஒரு பொருள் இல்லையென ஏங்கித் தவிப்பது எதற்காக?
கவிதைக்கு மக்களிடையே ஆதரவு இல்லையென்பது அவரது மனக்குறை. அவர் சொல்லுகிறார்:
“வீணை இசையை எழுப்புகிறது; அங்ஙனமே தான் குழலும். குழந்தைகளும் ஊமைகளும் கூட அந்த இசையைக் கேட்கிறார்கள். ஆனால் கவிதையைக் கேட்பதற்கோ அதன் இனிமையைச் சுவைப்பதற்கோ ஓரிருவர் இருக்கலாம்; அல்லாது இல்லாமலும் இருக்கலாம்.”
அந்தக் கவிதையும் துஷ்பிரயோகம் ஆகிறது என்று அங்கலாய்க்கிறார். “சொன்னால் விரோதம் ஆயினும் சொல்லுவன்’ என்று நம்மாழ்வார் சொன்னபடி மானிடரைப் புகழ்ந்து பாடாதே என்றும், கொடுப்பவனின் குறைகளையும் கவி காட்டுவதில்லை என்றும் கூறுகிறார்:
கவிதை யென்பது கலைகளின் சிகரம் கவிதா தேவியின் கருணைப்ரசாதம் மனிதரைப் புகழ்ந்து பாடுவதாலே மாண்பு குறைந்து மதிப்பை இழக்கும். அனைவர் விருப்பமும் அள்ளியே தந்திடும் அற்புதக் காமதேவனுவாம் பசுவை ஏரில் பூட்டி உழுவதை ஒக்கும். கொடுப்பவர் குறைகளைக் கவியும் கூறான். கார் மேகத்தைக் கருதிப் பார்த்தால் நீரைப் பொழியும் என்பத னாலதன் கருமைக் குறையைப் பேசுவார் யாருளர்? தாம்ரவருணி ஆற்றைப் பற்றி புலமை நிறைந்த ஒரு கற்பனை.
“தாம்ரபர்ணி கடலில் கலக்குமிடத்தில் கடல் அலைகளால் முத்துக்கள் வாரி இறைக்கப்படுகின்றன. அகஸ்திய கோத்திரத்தில் பிறந்தவள் என்ற மரியாதையுடன் கடலரசன் புஷ்பங்களை வாரி இறைத்து தாம்ரபர்ணியை எதிர்கொண்டு அழைத்துச் செல்வது போலிருக்கிறது இது.”
கலி விடம்பன நூலில் கலிகாலத்தில் கூட்டத்தில் வேண்டிய குணங்கள் என்று கிண்டலாக அவர் எழுதுகிறார்:
“கூட்டத்தில் வேண்டிய குணங்கள் குருட்டு தைரியம், வெட்கமின்மை, எதிரியிடம் அலட்சியம், இகழ்ச்சிப் பார்வை, கேலி செய்தல், கூச்சலிடுவது. எதிரி சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதோ, புரிந்து கொள்வதோ கூடாது. எதிரி சாதுவாக இருந்தால், தன் கட்சி ஜயித்து விட்டதாகக் கத்தவேண்டும். எதிராளி படித்தவனாக இருந்தால், அவன் பாரபட்சமாகப் பேசுவதாகக் குற்றம் சாட்ட வேண்டும். மன்னனைப் (பதவியில் இருப்பவரை) புகழவேண்டும்.”
இன்றைய அரசியல்வாதிகளையும் அவர்களை அண்டிப் பிழைக்கும் “ஜால்ரா’க்களையும் பற்றிய உண்மையான கேலிச் சித்திரம், ஆனால் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது.
ஆனந்த ஸாகரஸ்தவத்தில் பக்திப் பரவசத்தோடு தேவியைப் பாடுகிறார். அர்த்தநாரி வடிவத்தைப் பற்றிப் பேசும் போது சமத்காரமாகக் கேள்வி எழுப்புகிறார்:
“”நெற்றியின் மத்தியில் உள்ள கண்ணால் மன்மதனை எரித்ததில் சிவனுக்குப் பாதிப்பங்கு தான் உண்டு. அக்கீர்த்தியை அவர் முழுதும் எடுத்துக் கொண்டார். போனால் போகட்டும். ஆனால் இடது காலால் உதைத்து யமனை வென்றதில் அவருக்கு என்ன சம்பந்தம்?”
“சாந்தி விலாச’த்திலே நம்மை சிந்திக்க வைக்கிறார் ஒரு பாடலில்:
அகண்ட கடலை அகத்தியர் குடித்தார் விசுவா மித்ரரோ விச்வமே படைத்தார் அவரது அஸ்திரம் அனைத்தையும் தனது பிரும்ம தண்டத்தால் பிளந்தார் வசிஷ்டர் ஆற்றலில் தவத்தில் அவர்க்கிணை உண்டோ? ஆயினும் ஒருநாள் அவர்களும் மறைந்தனர் காலத்தின் பிடியில் கருகி மடிந்தனர். சகத்துள நாமோ சாச்வதமென்று எண்ணி யிருத்தல் எத்தனை மடமை? புத்தியின் துணையால், புலன் வசப்பட்ட மனத்தை விட்டு மாட்சிமை பெறுவோம்.
இறுதியில் சரணாகதியே வழியென்று தேர்கிறார். அம்பிகையோடு தொடர்பில்லாத எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்குகிறார்.
ஆனந்த ஸாகரஸ்தவத்தில் அவரது பாடல்களில் இந்த மன நிலையைக் காண்கிறோம்:
உனக்கொரு கோவில் இல்லாத ஊரில் இருக்க நான்விரும்பேன்: உன்னைப் பற்றிப் பேசாத உயர்ந்த வித்தை நான்வேண்டேன்: உந்தன் பொன்னடி போற்றாத ஒருவம் சத்தை நான்வேண்டேன்: உன்னைப் பற்றிய நினைவில்லா ஒருவாழ்க் கையையும் நான்வேண்டேன்.
பேயாய் உழலும் சிறுமனத்தின் பிதற்றல் எதையும் கேளாது தாயாம் சக்தித் தாளினிலே தள்ளுவாய் வாழ்க்கைச் சுமையெல்லாம். சேயாம் உனக்குப் பிறவிக்கடல் சிறியதோர் குட்டையாய் ஆகிவிடும். நீயும் எளிதில் அதைத் தாண்டி நிர்மல சுகத்தைப் பெற்றிடலாம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பிரசித்தி பெற்ற சிவன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது.
சிவகாசியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவன் கோவில் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததும், புராண சிறப்பு மிக்க இந்த சிவன் கோவிலில், கடந்த ஒரு வருடமாக புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி, ஸ்ரீவிசாலாட்சி அம்மன், ஸ்ரீநடராஜர், பைரவர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சந்நதிகளும் முழுமையாக, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து மகா கும்பாபிஷேக பணிகள் துவங்கியது. கடந்த 5 நாட்களாக மகா யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.
இன்று அதிகாலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு இடங்களிலிருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், சிவச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி சந்நதி, ஸ்ரீவிசாலாட்சி அம்மன் சந்நதி, பரிவார தெய்வங்களின் சந்நதிகள் மற்றும் கோவில் நுழைவு வாயில் கோபுரங்களில் உள்ள கலசங்களில் சிவச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாாரப் பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சிவகாசி நகரின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
சுமார் 22 மாதங்களாக ஏற்ற இறக்கமின்றி, ஒரே விலையில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 14 அன்று, மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.2 அளவில் குறைப்பதாக அறிவித்தது.
அதன் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி…
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1.88 குறைந்து, ரூ.100.72க்கு விற்பனை செய்யப் படுகிறது.
ஒரு லிட்டர் டீசல் ரூ.1.90 குறைந்து, ரூ.92.34க்கு விற்பனை செய்யப் படுகிறது.
இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. .
சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இந்த விலையில் இருந்து லிட்டருக்கு 50 காசுகள் வரை மாற்றம் இருக்கும் .
இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு இந்தியா தன் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதல் சம்பவத்துக்கு பிறகு சீனா எல்லை பகுதிகளில் புதிய சாலை, பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் படங்கள் வெளியாகி வருகின்றன.
In a significant development, 🇨🇳 road has breached the border at Aghil Pass (4805 m) and entered the lower Shaksgam valley of Kashmir, 🇮🇳 with the road-head now less than 30 miles from 🇮🇳 Siachen
This permanently answers the question of Shaksgam for 🇮🇳
இந்நிலையில் காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைக்கு அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா புதிதாக சாலை அமைத்து வருகிறது. இதுதொடர்பாக அந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு சியாச்சின் அருகே இதே இடத்தில் சாலை இல்லாத நிலையில் இப்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டிருப்பது படங்களில் காணப்படுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த சாலை அமைந்துள்ளது. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தை சீனாவின் சின்ஜியாங் உடன் இணைக்கவே இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த சாலை இந்திய கட்டுப்பாட்டில் இருந்து 50 கிலோ மீட்டருக்கு வடக்கே சியாச்சின் பனிப்பாறையில் உள்ள இந்திரா கர்னல் அருகே அமைந்திருப்பதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மார்ச் மாதம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 முறை இந்த இடத்தை பார்வையிட்டிருந்தார். இந்நிலையில் சீனாவின் புதிய சாலை பணிகள் குறித்த படங்கள் வலைதளங்களில் வெளியாகி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சாலை முற்றிலும் சட்ட விரோதமானது என்றும், இந்தியா இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பில், தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு அம்சமாக, சியாச்சின் பனிப்பாறைக்கு அருகில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா ஒரு சாலையை உருவாக்குகிறது – இது உலகின் மிக உயர்ந்த போர்க்களம் என்று செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றன.
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் (PoK) ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் உள்ள சாலை 1963 இல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சீனாவின் ஜின்ஜியாங்கில் G219 நெடுஞ்சாலையின் விரிவாக்கத்திலிருந்து தொடங்கி, ஒரு இடத்தில் மலைகளில் மறைகிறது (படம்: 36.114783°, 76.670) இந்தியாவின் வடக்குப் புள்ளியில் இருந்து சுமார் 50 கிமீ வடக்கே, சியாச்சின் பனிப்பாறையில் உள்ள இந்திரா கர்னல் என்ற இந்தப் பகுதியை- மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மார்ச் முதல் இரண்டு முறை பார்வையிட்டார்.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் கொடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை மதிப்பாய்வு செய்ததில், சாலையின் அடிப்படை பாதை கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை
சீன சாலை (படம்) அகில் கணவாய் வழியாக செல்கிறது, இது 1947 க்கு முன் திபெத்துடன் இந்தியாவின் எல்லையாக இருந்தது.
இந்த சாலை டிரான்ஸ்-காரகோரம் பாதையில் உள்ளது – வரலாற்று ரீதியாக காஷ்மீரின் ஒரு பகுதி மற்றும் இந்தியாவால் உரிமை கோரப்படுகிறது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு மத்திய அரசால் வெளியிடப்பட்ட சமீபத்திய அதிகாரப்பூர்வ வரைபடத்தில், இந்தப் பகுதி இந்தியப் பகுதி எனத் தொடர்கிறது.
சுமார் 5,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் பகுதி, 1947 போரில் பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டு, 1963 இல் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு எல்லை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது – இது இந்தியாவால் அங்கீகரிக்கப்படவில்லை.
ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் இந்தப் பகுதியில் இருக்கும் நிலையில் எந்த மாற்றமும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகும் என்று இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் நீண்ட காலமாக வாதிட்டு வருகின்றனர். மேலும் இதுபோன்ற உள்கட்டமைப்புத் திட்டங்கள் இந்த மலைப் பகுதியில் இருக்கும் பாதுகாப்புச் சூழலை அச்சுறுத்தும் என்ற கவலையும் உள்ளது.
2021 ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணம் முசாஃபராபாத் மற்றும் முஸ்டாக் பாஸுடன் இணைக்கும் புதிய சாலைக்கான திட்டங்களை அறிவித்தது, இது ஷக்ஸ்காம் பள்ளத்தாக்குடன் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. செய்தியின்படி, இது சின்ஜியாங்கில் உள்ள யார்கண்டுடன் இணைக்கப்படும் – சீனாவின் தேசிய நெடுஞ்சாலை G219 உடன் இணைக்க ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு வழியாக சாலை செல்லக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புதிய சாலை
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சுமார் 4,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. எவ்வாறாயினும், லெப்டினன்ட் ஜெனரல் ஷர்மா போன்ற பலர், ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் உள்ள சீன சாலைகள், கில்கிட் பால்டிஸ்தானில் இருந்து சின்ஜியாங்கிற்கு வெட்டப்பட்டதாகக் கூறப்படும் கனிமங்களை, குறிப்பாக யுரேனியத்தை கொண்டு செல்வதற்காக இருக்கலாம் என்று நம்புகின்றனர். ஆயினும்கூட, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் படைகளால் “இராணுவ சூழ்ச்சிகளுக்கு” இந்த சாலைகளை பயன்படுத்துவதற்கு எதிராக தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்துகிறார்.
கடந்த காலத்தில் சீன ஆட்சியாளர்கள் அங்கீகரித்திருந்த திபெத்துடன் காஷ்மீரின் எல்லையாக வரலாற்று ரீதியாக பணியாற்றிய அகில் பாஸில் உள்ள பகுதிக்குள் சாலை நுழைகிறது. 1962 போருக்கு முன்னர் சீனாவுடனான எல்லைப் பேச்சுவார்த்தைகளின் போது அதன் கூற்றை ஆதரித்து இந்தியத் தரப்பு வழங்கிய பேச்சுவார்த்தையில் அகில் கணவாய் மற்றும் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இருந்தது.
“இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரைபடங்கள், 1907 ஆம் ஆண்டு இம்பீரியல் கெசட்டியர் ஆஃப் இந்தியா பதிப்பில் இணைக்கப்பட்டவை மற்றும் சர்வே ஆஃப் இந்தியாவால் வெளியிடப்பட்ட அரசியல் வரைபடங்கள் ஆகியவை இந்தியப் பகுதியில் இந்தப் பகுதியைக் காட்டியது” என்று அப்போதைய MEA இயக்குநர் தலைமையிலான இந்தியத் தரப்பு தெரிவித்தது. ஜூன் 1960 இல் பெய்ஜிங்கில் உள்ள சீனாவின் வெளியுறவு அலுவலகத்தில் ஜே.எஸ்.மேத்தா இதனை வலியுறுத்திக் கூறினார்.
“1917, 1919 மற்றும் 1923 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ சீன வரைபடங்கள் இந்த பகுதியை இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டுகின்றன” என்று பிரபல திபெட்டாலஜிஸ்ட் கிளாட் ஆர்பியின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட வெளியுறவு அமைச்சகத்தின் காப்பகம் கூறுகிறது.
அரசாங்கத்தின் நிலைப்பாடு
நாடாளுமன்றத்தில், ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கை ஒரு பகுதியாக இந்தியா கருதும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு-காஷ்மீரின் (PoK) அனைத்து பகுதிகளையும் திரும்பப் பெறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அரசாங்கம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
“ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தைப் பற்றி நான் அவையில் கூறும்போது, PoK மற்றும் அக்சாய் சின் இரண்டும் நாட்டின் ஒரு பகுதியாகும் என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். ஜம்மு-காஷ்மீரின் எல்லைகள் நமது அரசியலமைப்பிலும், ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் PoK மற்றும் அக்சாய் சின் ஆகியவை நம் பகுதியில் அடங்கும்” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா 2019ல் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். “இதற்காக என் உயிரைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்,” என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
எல்லைப் பகுதிகளில் இருதரப்பு புரிதல்
பல பத்தாண்டுகளாக நீடித்த கட்டுப்பாடு இருந்தபோதிலும், அப்பகுதியின் சீன ஆக்கிரமிப்பு அரசியல் சட்டபூர்வமான தன்மையைக் கொண்டிருக்கவில்லை. சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 1963 எல்லை ஒப்பந்தத்தின் பிரிவு 6, காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்படும் வரை – சீனாவுக்கு தற்காலிக கட்டுப்பாட்டை மட்டுமே வழங்குகிறது.
“பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்ட பிறகு, தற்போதைய ஒப்பந்தத்தை மாற்றவும், சம்பந்தப்பட்ட இறையாண்மை அதிகாரம், சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்துடன், எல்லையில், முறையான எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.” என்று அது கூறுகிறது.
1972 சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) பாகிஸ்தானுடனான இந்தியாவின் பகுதி நிர்வகிக்கப்பட்டாலும், ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு குறித்து சீன அதிகாரிகளுடன் அத்தகைய ஒப்பந்தம் எதுவும் இல்லை.
இந்திய எதிர்ப்புகள்
சீனா 2017 மற்றும் 2018 க்கு இடையில் காரகோரம் கணவாய்க்கு மேற்கே ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் ஒரு மெட்டல் சாலையை அமைத்தது. பள்ளத்தாக்கில் சீன இராணுவ உள்கட்டமைப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. இது 2020 இல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களைத் தொடர்ந்து 2022 இல் எல்லைப் பேச்சுவார்த்தையின் போது இந்திய இராணுவ அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு, அக்சாய் சின் பீடபூமியை தனது அதிகாரப்பூர்வ பிரதேசமாகக் காட்டியதற்காக இந்தியாவும் பெய்ஜிங்குடன் கடுமையான இராஜதந்திர எதிர்ப்புகளை தெரிவித்தன. 2015 ஆம் ஆண்டில், வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் 46 பில்லியன் டாலர் முதலீடு செய்வதற்கான சீனத் திட்டங்களுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறினார்.