Home Blog Page 27

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம்.உயர் நீதி மன்றம் மதுரை கிளை-தீர்ப்பு…

1001171034 - 2026

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்துாண் தான்.தீபம் ஏற்றலாம்.என உயர் நீதி மன்றம் மதுரை கிளை செவ்வாய் கிழமை தீர்ப்பு வழங்கியது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண் தான். தீபம் ஏற்றலாம் என மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு இன்று பிறப்பித்தனர்.

திருப்பரங்குன்றம் மலை தர்காவில் நாளை சந்தனக்கூடு உருஸ் திருவிழா நடக்கிறது. இதில் ஆடு, கோழி பலியிடக் கூடாது. விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகள் விதித்து தனி நீதிபதி எஸ்.ஸ்ரீமதி ஜன 2ல் உத்தரவிட்டார். தர்கா நிர்வாகம் தரப்பு வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று முறையிட்டதாவது: சந்தனக்கூடு விழாவில் அதிகம் பேர் பங்கேற்பது வழக்கம்.50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது ஏற்புடையதல்ல. எங்கள் தரப்பில் போதிய விளக்கமளிக்க தனி நீதிபதி வாய்ப்பளிக்கவில்லை. 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார்.

நீதிபதிகள்: அவசர வழக்காக விசாரிக்க வாய்ப்பில்லை. ஆடு, கோழி பலியிடும் விவகாரம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது தர்கா தரப்பில் கோரப்படும் நிவாரணம் தொடர்பாக தீபத்துாண் வழக்கில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த அமர்வு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது. அதன் முடிவைப் பொறுத்து தர்கா நிர்வாகம் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் விசாரிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, இதே இரு நீதிபதிகள் அமர்வில் டிச18 ல் முடிந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை, 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் கூறியதாவது,திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு செல்லும். தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண் தான். அது கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றலாம். தீபத்துாண் தர்காவிற்கு சொந்தம் எனும் வாதம் சிறுபிள்ளைத்தனமானது. தீபம் ஏற்றுவது அமைதியை சீர்குலைக்கும் என்பது அபத்தமானது. தீபம் ஏற்ற வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை நியாயமானது. பொது அமைதிக்கு பிரச்சனை ஏற்படும் என அரசு காரணம் காட்டுவது ஏற்றத்தக்கதல்ல. அரசியல் காரணங்களை காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்பட கூடாது எனுவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பெயரில்,சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது” என்று திமுக அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழக மக்களின் ஆன்மீக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதல்வர் உட்பட திமுகவினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், திமுக அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுகவினர் செயல்பாடுகளை, நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கின்றனர். நாவடக்கம் இன்றித் திரியும் திமுகவினருக்கு, தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்.இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.

மராட்டி பத்திரிகையாளர் தினம்

maratti journalism day - 2026

ஜெயஸ்ரீ எம். சாரி

மஹாராஷ்டிர மாநிலத்தில்  ‘தர்பண்’ என்னும் நாளிதழை  வெளியிட்ட பால்சாஸ்திரி ஜாம்பேகர் அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 6-ஆம் தேதியை மராட்டி பத்திரிகையாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1812- ஆம் ஆண்டில் பிறந்த பால்சாஸ்திரி ஜாம்பேகர் தன்னுடைய 20-ஆவது வயதில் மராட்டியில் முதல் நாளிதழை ‘தர்பண்’ எனும் பெயரில் தொடங்கினார். தன்னுடைய 34 வயது வரையே வாழ்ந்த ஜாம்பேகர் தன் நாளிதழ் மூலமாக மக்களை ஆங்கில ஏகாதிபத்தை எதிர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கல்வி, வரலாறு, மக்களை நல்வழிப்படுத்துதல், சமூக சீர்திருத்தம், குழந்தைகள் கல்வி எனப் பல்வகைத் துறைகளில் தன் எழுத்துகளினால் சாதித்தார். அவரின் கோட்பாடுகள் இன்றும் மராட்டிய பத்திரிகை உலகில் ஒரு கருவூலமாக உள்ளது. மராட்டியை தாய்மொழியாகக் கொண்ட ஜாம்பேகர் சமஸ்கிருதம், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, பார்ஸி, ஃப்ரான்சு, கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளையும் அறிந்திருந்தார்.

ஜாம்பேகர் – மராட்டிய பத்திரிகைகளின் தந்தை அவர்களை இந்நாளில் வணங்குகிறேன்.

இன்று காலையில் எனக்கு வர்தா நகரில் இருக்கும் என் பத்திரிகையாள நண்பர் கைப்பேசியில் அழைத்து எனக்கும் மராட்டிய பத்திரிகையாளர் தினத்திற்கான வாழ்த்தினை தெரிவித்த போது மனதிற்கு நிறைவாய் இருந்தது.

உடனே, என் நினைவலை பின்னோக்கி சுழன்றது. நான் 2007 – ஆம் ஆண்டு  ‘தி ஹித்வாத்’ என்னும் ஆங்கில நாளிதழின் வர்தா அலுவலத்தில் மொழிபெயர்ப்பாளராய் சேர்ந்தேன். ஒரு நாளைக்கு குறைந்த பட்சமாக பத்து செய்திகளையாவது மராட்டியில், ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். 

வர்தா மாநிலத்தில் இருந்த கிட்டத்தட்ட 50 நிருபர்களிடமிருந்து செய்திகளை சேகரிக்கும் பணியும் இருந்தது. 

முன்னாள் ஜனாதிபதி பிரணப் முகர்ஜி அவர்களின் வர்தா விஜயத்தின் போது நேரிடையாக அவரது நிகழ்வில் செய்தி சேகரித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். 

ஒரு படிக்காத மேதையாய் இருந்தபோதிலும் திறமையாய் தன் கிராமத்தை நிர்வகித்த  பெண் ‘சர்பஞ்ச்’ ஒருவரைப் பற்றிய செய்தியைப் பிரசுரித்த போது அதற்காக எனக்கு பெரும் பாராட்டு கிடைத்தது. 

ஒருமுறை மகாத்மா காந்தியின் பெயரில் வர்தாவில் இயங்கும் பல்கலைகழகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு அசைவ உணவு பரிமாறப்பட்டதாக நான் கேள்விப்பட்டவுடன் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் கடிந்து கொண்டபோது அவர், தாங்கள் செய்த தவறுக்காக என்னிடம் மன்னிப்பு கோரினார். அந்தச் சம்பவத்திற்கு பிறகு, பல பத்திரிகையார்களுக்கு என் மேல் இன்னும் மரியாதை கூடியதாகச் சொன்னார்கள்.

வர்தாவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் ஆண்டு விழாவினை ஒவ்வொரு வருடமும் விவேகானந்தர் ஜெயந்தியில் இருந்து  கொண்டாடுவார்கள். அதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழச்சியை ஏற்பாடாகி இருந்தது. நான் எங்கள் நாளிதழ் சார்பில் அதில் கலந்துக் கொண்டேன். அச்சந்திப்பு முடிந்தது. அலுவலகம் வந்தேன். செய்தியை அனுப்பினேன். வீடும் வந்து சேர்ந்தேன். பிறகு, என் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டார்கள். “காலையில் நீங்கள் சென்ற கல்வி நிலையத்தின் தலைவர் பேசிகிறார், பேசுங்கள்,” என்றனர்.  அந்தத் தலைவரோ வணக்கம் எல்லாம் கூறிவிட்டு, “நாங்கள் கொடுத்த பரிசுப்பொருளை உங்களைத் தவிர மற்ற பத்திரிகையாளர்கள் வாங்கிக்கொண்டனர். நீங்கள் ஏன் மறுத்தீர்கள்?” – எனக் கேட்டார். “நீங்கள் எங்களை வரவேற்றபோதே பரிசுப்பொருளை கொடுத்திருந்தால் நான் வாங்கிக் கொண்டு இருப்பேன்.  நிகழ்ச்சியின் இறுதியில் நீங்கள் கொடுக்கும் பரிசுப்பொருளைப் பெற நான் காத்திருக்க என்னக்குரிய இன்றைய நேரம் காத்திருக்கவில்லை,” என்றேன், நான். அதன்பின்னர், அந்தக் கல்வி நிலையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின் முறையையே மாற்றி அமைத்ததாக இப்போதும் பலர் என்னிடம் கூறுகின்றனர்.

ஒருநாள் நான் அலுவகத்தில் இருந்த போது ஒருவர் அங்கு வந்து எங்கள் கல்வி நிறுவனம் கொடுத்த செய்தியை மொழிபெயர்த்தவர் யார், எனக் கேட்க என்னை அலுவலக வரவேற்பு அறைக்கு அழைத்தனர். நானும் வந்தேன். ‘நீங்கள் தான் செய்தியை தயாரித்தீர்களா? 

 செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பிரபல வல்லுநர் வர்தாவில் ஒரு வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசியதை நீங்கள் ஒருவர் தான் நேர்மறை வாக்கியங்களில் மாற்றியுள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்க சொன்னார்,” என்றார். எனக்கு அப்பொழுது தான் மூச்சே வந்தது. 

சி. ஐ. டி. யூ அமைப்பு எனக்கு கௌரவித்த போது அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அங்கு கூடியிருந்த ‘ஆஷா ஒர்க்கர்ஸ்’ என்று அழைக்கப்படும் ஊழியர்களிடம் என் பணியினைச் சுட்டிக்காட்டி இவரைப் போல ஆங்கில செய்தியாளர்களின் செயல்களினால் தான் மஹாராஷ்டிர அரசில் இருக்கும் வேற்று மொழி உயர் அதிகாரிகளுக்கு நம் கோரிக்கைகள் செல்கிறது,” என்று சொன்னது இன்றும் காதில் சுழல்கிறது.

நாக்பூரில் உலக பிரசித்திப் பெற்ற லதாமங்கேஷ்கர் அவர்களின் பெயரில் உள்ள கார்டனின் அவலநிலையைக் கோடிட்டு நான் செய்தியாக வெளியிட்டதும் ஒரு மறக்க முடியாத தருணம்.

இவ்வாறாக, மராட்டிய மண்ணில் பத்திரிகையாளராய் நான் பணியாற்றியது பசு மரத்தாணி போல உள்ளது.

பரமன் அளித்த பகவத் கீதை (10): மகாபாரதம் பற்றி வானவியல் சான்றுகள்

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 10மகாபாரதக் கதை

மகாபாரதம் பற்றி வானவியல் சான்றுகள்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

13 நாள்களில் இரண்டு கிரகணங்கள்

          மகாபாரதப் போர் நவம்பர் 22, 3067 கிமு அன்று தொடங்கியது. இது வானியல் ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது. மேலும் வானில் சில கோள்களின் அமைப்புகள் தன்னிச்சையாக நடப்பவை அல்ல. அல்லது ஒரு சில ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் நிகழக்கூடியவை அல்ல. அவை மிகவும் அரிதான நிகழ்பவை.

          மகாபாரதப் போருக்கு முன்னும் பின்னுமாக இரண்டு கிரகணங்கள் நடந்தன. ரோகிணி நட்சத்திரத்தில் சனி மற்றும் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய், கார்த்திகை நட்சத்திரத்தில், அதாவது விருச்சிக ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும்போது சந்திர கிரகணம் மற்றும் கேட்டை நட்சத்திரத்தில் அதாவது மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் போன்ற கிரக நிலைகள் மகாபாரதத்தியல் உத்யோக பர்வம் மற்றும் பீஷ்ம பர்வத்தில் காணக் கிடைக்கும் தகவல்கள் ஆகும்.

(1) அமாவாசை 19 வருடங்களுக்கு ஒருமுறை கேட்டையில் வருகிறது

(2) அவ்வாறு அமாவாசை கேட்டை நட்சத்திரத்தில் வரும்போது,  சூரிய கிரகணம் 340 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது.

(3) மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நடக்கும்போது ரோகிணியில் சனி கிரகம் இருப்பது 7000 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே ஏற்படுகிறது.

          ஆக, வானவியலில் அதைப் போன்ற விண்மீன் அமைப்பு மகாபாரதத்திற்குப் பிறகு ஏற்படவில்லை. எனவே தேதி – சரியான ஒன்று. மகாபாரதப் போர் நடந்த தேதி பிளனட்டோரியம் மென்பொருள்மூலம் நமக்குத் தெரிவது கிமு 3067ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22ஆம் நாள்.

குதிரைக் கதை

          பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் ஒரு  சந்தைக்குள் நுழைந்தான். அங்கே ஒரு அழகான குதிரையைப் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, “குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

குதிரையின் உரிமையாளரோ, “ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்” என்றார்.

சகாதேவன் உடனே, “சரி கேள்வியைச் சொல்லுங்கள்” என்றான்.

குதிரையின் உரிமையாளர், “நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள் – ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை. இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்” என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்துவிட்டான்.

          சற்று நேரத்தில்…. சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.

          குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். “ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.

          துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?” என்றார்.

நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

          அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

          “ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்?

          பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்” என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

          சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, “தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!” என்றார்.

          பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், “அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?” எனக் கேட்டார்.

          அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.

          அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள் எல்லாரும் திகைத்தார்கள்.

          “அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?” எனக் கேட்டார்கள்.

தர்மர் பதில் சொல்லத் தொடங்கினார்…

☸ “தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன.”

☸ அதை நினைத்துத்தான் நடுங்கினேன். “ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்” என்று விரிவாகக் கூறினார்.

☸ “உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி புருஷன்! அவன் கேட்ட முதல் கேள்வியில்

⚜பெரிய கிணறு என்பது பெற்றோர்கள்.

⚜ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள்.

☸ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது.

☸ ஆனால், அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.

☸ அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும்.

☸ ஆனால், நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

☸ அடுத்து மூன்றாவது கேள்வியில்,

பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும்.

☸ அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள்.

☸ மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத் தான் இருப்பார்கள்.

☸ இதைத்தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்.

🚨கலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் என்பது மகாபாரத காலத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

பரமன் அளித்த பகவத் கீதை (9): மகாபாரதம் பற்றி தமிழ் இலக்கியங்கள்

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 9மகாபாரதக் கதை

மகாபாரதம் பற்றி தமிழிலக்கியங்கள்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

மகாபாரதம் மிகவும் தொன்மையானது. கொடையில் சிறந்தவனை “கர்ணன்” என்றும் நீதிமானாக வாழ்பவனை “தருமன்” என்று அழைப்பது தமிழகத்தில் வழக்கம். எவரேனும் நீட்டி முழக்கிப் பேசினால் அவர் ‘பாரதம் படிக்கிறார்’ எனச் சொல்வது வழக்கம். மகாபாரதம் என்ற பெயரே மிக நீண்ட கதை என்று சொல்லத்தான் வந்தது.

மகாபாரதம் பற்றி தமிழிலக்கியத்தில் நிறைய குறிப்புகள் காணப்படுகின்றன.

அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம் தலைக் கொண்ட பொலம் பூந் தும்பை
ஈர்-ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
முரஞ்சியூர் முடிநாகராயர், புறநானூறு 2, 13-16

(சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்)

ஈர்-ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய,
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஆராச் செருவின் ஐவர் போல      
பெரும்பாணாற்றுப்படை(415-417)

நளபாகம், பீம பாகம்

கா எரியூட்டிய கவர் கணைத் தூணி
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருட்
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்  (238-241)

என வரும் சிறுபாணாற்றுப்படை அடிகளால் புலனாகின்றன.

கலித்தொகையில் உவமை வாயிலாகப் பாரதக் கதை நிகழ்ச்சிகள் பல காட்டப் பெற்றுள்ளன.

01. அரக்கு இல்லில் ஐவரைக் குடிபுகச் செய்து துரியோதனன் அதற்குத் தீயிட்டது

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
‘ஐவர்’ என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு, (25:1-4),

02. அந்தப் பேராபத்திலிருந்து வீமன் தன் கிளைஞரைக்காப்பாற்றியது

ஒளி உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல,  (25:5-8),

03. துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைப் பற்றியது, அவனது நெஞ்சத்தை வீமன் பிளந்தது

அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்! (101:18-20),

04. துரியோதனன் தொடையை வீமன் முறித்தது

மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், (52:2-3),
05. பாரதப் பொருகளம்

புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல் வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், (104:57-59),

முதலியவற்றைப் பற்றிய குறிப்புக்களைக் காணலாம்.

சிலப்பதிகாரத்தில், (1) ‘இலங்கையில் எழுந்த சமரமும், கடல்வணன் தேர் ஊர் செருவும், பாடி’ (26:238-239) என இராமாயண பாரதப் போர்கள் இரண்டும் சுட்டப்பெற்றுள்ளன. (2) பாரதப் போர் பதினெட்டு நாள் நடந்தமை குறித்தும் (27:7-10), (3) அப் போரில் சேரன் பெருஞ் சோறு அளித்தமை குறித்தும் (29:24), (4) கண்ணன் பாண்டவர்க்குத் தூது நடந்தமை குறித்தும் (17:34,37) குறிப்புகள் வந்துள்ளன.

விராடனது நகரில் விசயன் பேடியாக வாழ்ந்தமை பற்றி மணிமேகலையில் குறிப்பு உள்ளது (3:146-147).

பரமன் அளித்த பகவத் கீதை (8): மகாபாரதம் வரலாறா கதையா?

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 8மகாபாரதக் கதை

மகாபாரதம் வரலாறா கதையா? பகுதி 2

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

  • துரியோதனனால் உருவாக்கப்பட்ட அரக்கு மாளிகை, வாரணாவதம். வாரணாவதம் என்ற இடத்தில் துரியோதனன்  ஒரு அரக்கு மாளிகையை கட்டி பாண்டவர்களை கொல்ல முயற்சி செய்தான். இந்த இடம் தற்போது உத்தர பிரதேசத்தில் ‘பாப்பார்த்தில்’ அமைந்திருக்கிறது.
  • துருபத மன்னன் ஆட்சி புரிந்த பாஞ்சாலம். இங்கு தான் திரௌபதியும், துஷ்டதுய்மனும் தீயில் இருந்து பிறந்து இருக்கிறார்கள். இந்த இடம் இப்போது இமயமலைக்கும், சம்பா நதிக்கும் நடுவே அமைந்திருக்கிறது.
  • பீஷ்மர் தாகத்தை தணித்த நீரூற்று. குருஷேத்திரப் போர் முடிவில் பீஷ்மர் அம்பு படுக்கையில் விழுந்த போது அவரது தாகத்தை தணிக்க அர்ஜுனன், ஒரு நீரூற்று உருவாக்குவார். இது குருஷேத்திரத்தில் அமைந்திருக்கிறது. இந்த இடம் தற்போது  ‘பான் கங்கா‘ என்று அழைக்கப்படுகிறது.
  • ஜராசந்தன் ஆட்சி புரிந்த மகதம். இந்த ஜெராசந்தன் கம்சனின் மாமனார் ஆவார்.  இவருடைய இரண்டு மகள்கள் ஆன அஸ்தி மற்றும் பிரபந்தியா. கிருஷ்ணன் கம்சனை கொன்றதனால். தன்‌ இரண்டு மகள்களும் விதவை ஆனதால், கிருஷ்ணனுடைய மதுராவின் மீது பல முறை ஜராசந்தன் போர் தொடுத்தார். இவருக்காக தான் கிருஷ்ணன் மதுரா மக்களை காப்பாற்ற, துவாரகையை உருவாக்கினார். ஜராசந்தனை பீமன் கையால் கொல்ல வைப்பார். ஜராசந்தன் ஆட்சி புரிந்த மகதராஜ்யம் இப்போது “பீகாரில்” அமைந்திருக்கிறது.
  • மணிப்பூர் தேசம், தற்போதும் “மணிப்பூர்” என்றே அழைக்கப்படுகிறது. மணிப்பூர் அரசரின் பெண் சித்ராவை தான் அர்ஜுனன் திருமணம் செய்து கொள்வார். இவர்கள் இரண்டு பேரின் மகன் தான் பப்ருவஹன. பப்ருவாஹனன் மதுரையை ஆண்ட சித்ராங்கதை என்ற பெண் என்ற கதையும் கர்நாடகத்தில் வாழ்ந்த பெண் என்ற ஒரு கதையும் உள்ளது.
  • அடுத்ததாக ஜெயத்ரதன் ஆட்சி புரிந்த சிந்து தேசம், துரியோதனன் மற்றும் கௌரவர்களின் ஒரே தங்கையான துர்ச்சலையை, ஜெயத்ரதனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இந்த ஜெயத்ரதன் ஆட்சி புரிந்த சிந்து தேசம் இப்போது, ‘பஞ்சாப் மாநிலத்தில்’ அமைந்திருக்கிறது.
  • சிசுபாலன் ஆட்சி புரிந்த சேடி தேசம். சிசுபாலன் ஆட்சி புரிந்த சேடிதேசம். இப்போது, மத்திய பிரதேசத்தில் இருக்கிறது.
  • மகாபாரத போரில் பயன்படுத்திய பிரம்மாஸ்திரம் ஒரு நியூக்ளியர் வெப்பன்.
  • மாவீரன் கர்ணன் பயன்படுத்திய கவசத்தை வைத்து தான், இப்போது குண்டு துளைக்காத உடை-புல்லட் ப்ரூப் தயாரித்து இருக்கிறார்கள்.
  • மகாபாரதம் நடந்ததற்கான ஒரு மாபெரும் ஆதாரம், கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகை நகரம். இந்த துவாரகை நகரம், துவாபர யுக முடிவில் கடலுக்குள் மூழ்கியது என மகாபாரதத்தில்  கூறப்பட்டுள்ளது. அது உண்மைதான் நிரூபிக்கும் விதமாக, குஜராத் உள்ள கடலுக்கு அடியில் மறைந்து  இருக்கிற துவாரகை நகரத்தை பற்றி பல அறிஞர்களும் ஆராய்ச்சி மேற்கொண்டு இது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வாழ்ந்த இடமாக கூறுகிறார்கள்.

The Timeless Resonance of the Divine Nuptials

velukkudi krishnan upanyasam - 2026

           Narasimhan Vijayaraghavan

As the golden orb of the first sun of 2026 ascended, the venerable precincts of the Parthasarathy Swamy Sabha vibrated with a celestial resonance, marking a silver jubilee of spiritual stewardship by Sri Velukudi Krishnan. Against the grand backdrop of the sabha’s 125th year, the Srinivasa Kalyanam unfolded once more—a narrative as ancient as the hills of Tirumala, yet as refreshing as the morning dew.

This is the eternal paradox of the pravachanam: a story whose contours are fixed in the firmament of antiquity, yet whose retelling draws a burgeoning tide of humanity that overflows the mandapam. The allure lies not in the novelty of plot, but in the shimmering depth of its moral ocean.

Velukudi Swami, a man of profound intellectual pedigree who once navigated the rigorous corridors of commercial accounting before pivoting to inherit the mantle of his illustrious father, serves as a bridge between the temporal and the transcendent. His discourse is a masterclass in linguistic purity, a cascading torrent of chaste Tamil that eschews the colonial linguistic crutch, proving that the vernacular remains the most potent vessel for the sublime.

He addressed the burgeoning chasm of the modern age, where a disdainful GenZ often views heritage through a prism of skepticism. He implored the elders not to retreat into silence but to engage with the defiant queries of the young, drawing from the prescient wisdom of rishis who foresaw the spiritual dehydration of future epochs.

Yet, a melancholic shadow lingers over this vibrant assembly. While the masses lap up the ethical nuances and the lyrical beauty of the lecture, there exists a tragic inertia within the Hindu society. For many, these ethereal repeats have descended into a form of sophisticated infotainment—a transient emotional catharsis rather than a catalyst for systemic preservation.

The audience weeps at the beauty but remains paralyzed in the face of responsibility, moaning in a collective, dignified silence while the foundations of their legacy face a quiet, relentless challenge.

பரமன் அளித்த பகவத் கீதை (7): மகாபாரதம் வரலாறா கதையா?

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 7: மகாபாரதக் கதை

மகாபாரதம் வரலாறா கதையா?

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

மகாபாரதம்  உண்மையில்  நடந்ததா?  இல்லையா?

  • கிருஷ்ணரின் கதை உண்மையா?
  • அவருக்கு 16000 மனைவிகளா?
  • அர்ஜுனன் வந்தார்; கர்ணனை கொன்றார்?
  • காந்தாரிக்கு 100 குழந்தைகள் பிறந்ததா? அப்போது என்ன டெஸ்ட் டியூப் பேபி முறை இருந்ததா?
  • மகாபாரதப் போரில் ஒரு அம்பு அனைவரையும் அழிக்குமாம். அப்போது என்ன நியூக்ளியர் குண்டு இருந்ததா?
  • இதுக்கு எல்லாம் ஏதாவது ஆதாரம் இருக்கா? 

சிலருக்கு பல சந்தேகம் ஏற்படலாம்?

    மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாச காவியம் நம் மண்ணில் நடந்தது என்பதற்கான ஆதாரங்களாக மகாபாரதம் நடைபெற்ற இடங்கள் இப்போ எங்கே இருக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.  

  • அஸ்தினாபுரம் – உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ளது. பாண்டவர்களும் கௌரவர்களும் இங்கதான் வாழ்ந்து இருக்கிறார்கள். யுதிஷ்டிரர் தன் தம்பிகளை சூது விளையாட்டில் தோற்றதும். பாஞ்சாலியின் துயில் உரிய பட்டதும் இங்கு தான்.
  • மகாபாரத கதாநாயகன் கிருஷ்ணன் பிறந்த இடம்,  தன் தாய்மாமன் கம்ச மகாராஜாவை வதம் செய்து, ஆட்சி புரிந்த இடம் மதுரா. இப்பவும் அதே பெயரில் தான் அழைக்கப்படுகிறது. இது உத்திர பிரதேசம் மாநிலத்தில் தான் இந்த மதுராவும் அமைந்திருக்கிறது.
  • இந்த மதுரா, கிருஷ்ணனின் ஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இடத்தில், ஒரு பாதாள சிறையில் தான் கிருஷ்ணன் பிறந்திருக்கிறார். தற்போது அந்த இடத்தை கிருஷ்ணருக்காக கேசவ தேவ் என்ற கோவில் கட்டப்பட்டிருக்கிறது. யமுனை நதிக்கரை பக்கத்துல தான் மதுரா அமைந்திருக்கிறது.
  • அடுத்து கிருஷ்ணன் வளர்ந்து பல லீலைகளையும், சாகசங்களையும் புரிந்த கோகுலம். மதுராவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்திருக்கிறது.
  • அடுத்து கிருஷ்ணனின் பிருந்தாவனம், கிருஷ்ணன் தன் காதலி ராதா உடனும், கோபியர்களுடன் பல ராஜ லீலைகள் நடத்திய இடம் தான் பிருந்தாவனம். இந்த பிருந்தாவனம் உத்திரபிரதேசத்தில் இருக்கிறது.
  • இந்த பிருந்தாவனத்தில் உள்ள நிதிவன் காட்-இல் கிருஷ்ணனும் ராதையும் நடனம் ஆடி வருவதாக சொல்கிறார்கள். இது உண்மையா? இல்லையா? என்று சோதித்து பார்க்க இரவு நேரத்தில் நிதிவன் காட்டுக்கு சென்ற சிலர் தன் பார்வையையும், சுய நிலையையும் இழந்ததாக சொல்கிறார்கள்.
  • மாவீரன் கர்ணனுடைய அங்கதேசம், உத்திரபிரதேசம் கோண்டா மாவட்டத்தில் இருக்கிறது கர்ணன் ஆட்சி செய்த அங்கதேசம்.
  • பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே தர்மத்தை நிலை நாட்ட மாபெரும் மகா யுத்த போர் நடைபெற்ற குருஷேத்திரம். இப்போது “ஹரியானாவில்” இருக்கிறது. பல ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்ட இந்த குருஷேத்திர பூமியின் மண், இன்னும் இரத்த நிறத்தில் தான் காணப்படுகிறது.
  • விஸ்வகர்மாவை வரவழைத்து உருவாக்கப்பட்ட இந்திரப்பிரஸ்தம். இந்த இந்திரப்பிரஸ்தம் இருந்த இடத்தில் தான் ‘டெல்லி’ அமைந்திருக்கிறது.
  • சகுனி ஆட்சி புரிந்த காந்தார நாடு. காந்தாரி பிறந்த ஊர் காந்தாரம், சகுனி ஆட்சி புரிந்த காந்தார நாடு. இது இப்போது ‘டாக்ஸிலா’ என்று அழைக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது இந்த காந்தாரம்.

ஸ்ரீ அரவிந்தர் அமர்ந்த நாற்காலியை பாதுகாக்கும் அமித் ஷா

1723147 amith sha - 2026

பாரத உள்துறை அமைச்சர் அமித் ஷா வின் கொள்ளு தாத்தாவும் தாத்தாவும் பரோடா மன்னராட்சிக்கு உட்பட்ட மானசா பகுதியில் நகர தலைவர்களாக (அரசரின் பிரதிநிதிகளாக) இருந்தனர். அப்போது அவர்கள் வீட்டுக்கு ஸ்ரீ அரவிந்தர் வந்து தங்கி உள்ளார். அவர் வீற்றிருந்த நாற்காலியை அமித் ஷா இன்றும் மரியாதையுடன் பாதுகாத்து வருகிறார்.

மிகவும் முற்போக்கான சிந்தனையும் இந்தியாவின் எதிர்காலம் பற்றிய தெளிவான கண்ணோட்டமும் கொண்டவராக இருந்தார் பரோடா மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட். இவர்தான் பீம்ராவ் (டாக்டர்) அம்பேத்கரை அமெரிக்காவுக்கு படிக்க உதவி தொகை கொடுத்து அனுப்பியவர். இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவுடன் இவரிடம் அதிகாரியாக பணிபுரிந்தவர் ஸ்ரீ அரவிந்தர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது :

கெய்க்வாட் தனக்கு மிகவும் நம்பிக்கையான மூத்த அதிகாரிகளை குஜராத்தில் இருந்த பிற இளவரசர்கள், உயர் அதிகாரிகளிடம் அனுப்பி தான் மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் முற்போக்கான திட்டங்களை பற்றி எடுத்துரைப்பார்.

அப்படி மானசாவின் (இன்றைய காந்திநகர் மாவட்டத்தில் உள்ள பகுதி) நகர தலைவராக இருந்த என் கொள்ளு தாத்தாவிடம் பேச ஸ்ரீ அரவிந்தரை அனுப்பினார்.

ஸ்ரீ அரவிந்தர் எங்கள் இல்லத்தில் தங்கியிருந்து என் கொள்ளு தாத்தாவிடம் ஆட்சி மற்றும் நிர்வாகம் பற்றிய மகாராஜாவின் 19 அம்ச திட்டத்தை பற்றி எடுத்துக் கூறினார்.

‘அரசர் எப்போதும் செல்வாக்குள்ள தனி நபர்களின் நலனை விட பொது ஜனங்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்’ என ஸ்ரீ அரவிந்தர் எங்கள் குடும்ப மூத்தவர்களிடம் சொன்னதாக என் தாத்தா அடிக்கடி என்னிடம் கூறியுள்ளார். அவர் (ஸ்ரீ அரவிந்தர்) அமர்ந்திருந்த நாற்காலி எங்கள் வீட்டில் இன்னமும் உள்ளது.

அந்த நாற்காலியை காட்டி இதில் மிக உயர்ந்த மனிதர் ஒருவர் உட்கார்ந்து உள்ளார். எனவே இது பாதுகாக்க வேண்டுமென என்னிடம் தாத்தா கூறியுள்ளார். எனவே அதை நான் இன்றும் பாதுகாத்து வருகிறேன். அந்த நாற்காலி இன்னமும் உறுதியாக, நன்றாக உள்ளது’ என்று அமித்ஷா கூறியுள்ளார்.

ஜெனக நாராயணப் பெருமாள் கோயில் பரமபத வாசல் திறப்பு!

janaga narayana perumal temple vaikunta ekadasi - 2026

மதுரை, சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பரமபத வாசல் வழியாக பெருமாள் பொது மக்களுக்கு காட்சி அளித்தார் .

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அதிகாலை 5.20 மணியளவில் ஜெனக நாராயண பெருமாள் பரமபதவாசல் வழியாக பொதுமக்களுக்கு காட்சி அளித்தார் .

அப்போது, அங்கு கூறியிருந்த பக்தர்கள் பொதுமக்கள் நாராயணா ஓம் நமோ நாராயணா என கோசம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர் . தொடர்ந்து, கோவிலில் உள் பிரகாரத்தில் பெருமாள் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தீபாராதனை நடைபெற்றது.

செயல் அலுவலர் தாரணி ,பணியாளர் முரளிதரன், உபயதாரர் ஐயப்பன் ஏற்பாடுகளை செய்து இருந்தனர் . அர்ச்சகர் பார்த்தசாரதி தலைமையில் பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில், சோழவந்தான், குருவித்துறை, மன்னாடிமங்கலம், தென்கரை, முள்ளி ப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


போக்குவரத்து நெரிசலால் பக்தர்கள் அவதி!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளால் பக்தர்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கரும் சிரமம் அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக, சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் ஜெனக நாராயண பெருமாள் கோவில் ஐயப்பன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ள சோழவந்தானின் மையப்பகுதியில் தினசரி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது . கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலைத் துறை வருவாய்த்துறை பேரூராட்சி நிர்வாகம் மூலம் அகற்றப்பட்டது ஆனால், மீண்டும் ஒரு சில இடங்களில் பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ,வாகனங்கள் செல்ல முடியாத அளவில் சாலையின் மையப்பகுதி வரை ஆக்கிரமிப்புகள் உள்ளதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் . இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இந்தப் பகுதியில் உள்ள ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் காலை முதல் இரவு வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர் இதன் காரணமாக இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் இந்த பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதாக கூறுகின்றனர். வாகனங்களை மாற்று இடத்தில் நிறுத்துவதற்கு முன்னேற்பாடு செய்யாத நிலையில் காலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பகுதியில் தொடர்ச்சியாக இருந்து வரும் ஆக்கிரமிப்பு காரணமாகவும் பேருந்துகள் எதிரெதிரே செல்ல முடியாத அளவில் சாலை ஓரம் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஆகையால், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் பக்தர்கள் சிரமம் இன்றி கோவிலுக்கு வந்து செல்லும் வகையிலும் மாரியம்மன் மற்றும் ஜெனக நாராயண பெருமாள் கோவில் முன்பாக போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறையினர் பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொதிகை ரயில் நேர மாற்றம்; விருதுநகர் மாவட்ட மக்கள் அதிருப்தி!

railway news - 2026
#image_title

சென்னை -செங்கோட்டை பொதிகை அதிவேக ரயில் நேரம் மாற்றத்தால் விருதுநகர் மாவட்ட பயணிகள் அதிருப்தியில் உள்ளனர்

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் வரும் ஜனவரி 1 முதல் மாற்றப்படுகிறது . புதிய அட்டவணையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதில் விருதுநகர் தென்காசி மாவட்ட மக்களுக்கு பெரிதும் பலன் தரக்கூடிய சென்னை- செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் மீண்டும் அதிகாலை 3.30க்கு விருதுநகர் மாவட்டத்தில் நுழைவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சென்னை கொல்லம் விரைவு ரயில் நள்ளிரவில் விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு மணிக்கு வருவதால் ராஜபாளையத்தில் அதிகாலை 2மணிக்கு வருவதால் இந்த ரயிலால் வயதான பயணிகள் பெண்களுக்கு இதர பயணிகளுக்கு பயனில்லை என பொதிகையில் முன்பதிவு செய்து வரும் பயணிகளுக்கு தற்போது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்த ரயில் மாற்றம் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் பொதிகை ரயில் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் பகுதிக்கு வந்ததால் அப்போதைய சிவகாசி எம்பி ரவிச்சந்திரன் இந்த ரயிலின் நேரத்தை பெரும் போராடி மாற்றி காலையில் வருமாறு மாற்றியமைக்க பட்டது.

தற்போது இந்த ரயில் மீண்டும் ராஜபாளையத்திற்கு அதிகாலை நான்கு முப்பதுக்கு வருவதால் பயணிகள் பெரும் கவலையில் உள்ளனர்.

பொதிகை ரயில் நேரம் ஜனவரி 1 முதல் மாறுகிறது. அது அதிகாலை 4 மணிக்கு முன்பே வருகிறது. சிவகாசி மற்றும் விருதுநகர் மாவட்ட மக்களுக்கு இது உகந்த நேரம் அல்ல, ஏனெனில் முன்கூட்டியே புறப்பட வேண்டியுள்ளது மற்றும் சங்கடமான நேரத்தில் ரயிலில் இருந்து இறங்க வேண்டியுள்ளது. ஆட்டோ கட்டணங்களும் அதிகமாக உள்ளன.

தற்போது சிலம்பு ரயிலின் நேரம் விருதுநகர் மாவட்ட மக்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது, ஆனால் அது எல்லா நாட்களிலும் இயக்கப்படுவதில்லை. விருதுநகர் மாவட்டம் நான்காவது பணக்கார மாவட்டம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருகிறது,

மேலும் இது ஒரு வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மாவட்டமாகவும் உள்ளது. ஆனால் மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை விருதுநகர் மக்களை கோமாளிகளாக நினைக்கிறது.

இந்த அவல் நிலை நீங்க விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு தனி ரயில் மட்டுமே நிரந்தரத் தீர்வாகும். ராஜபாளையம் மதுரை சென்னை இடையே தினசரி சென்று வரக்கூடிய ஒரு ரயில் ஆண்டாள் பெயரில் இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நேரம் வரும் ஜனவரி 1 முதல் மாற்றப்படுகிறது. இனி புதிய நேரத்தில் புத்தாண்டில் ஓடும்.

இப்போது உள்ள நேரம் டிசம்பர் 31 வரை மட்டுமே தொடரும் கீழே கொடுக்க உள்ள நேரத்தில் தான் வரும் ஜனவரி 1 முதல் பொதிகை எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து செங்கோட்டை நோக்கி இயங்கவுள்ளது.

12661 || பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்: சென்னை எழும்பூர் -> செங்கோட்டை
அதிவிரைவு சேவை – தினசரி – 22 பெட்டிகள் கொண்ட வண்டி.

ஜன.1 முதல் மாற்றப்படும் நேரம்

07:35 PM : சென்னை எழும்பூர் (புறப்பாடு)
08:02 PM : தாம்பரம்
08:30 PM : செங்கல்பட்டு
10:20 PM : விழுப்புரம்
11:04 PM : விருதாச்சலம்
01:10 AM : திருச்சிராப்பள்ளி
02:10 AM : திண்டுக்கல்
03:10 AM : மதுரை
03:40 AM : விருதுநகர்
03:55 AM : திருத்தாங்கல்
04:05 AM : சிவகாசி
04:25 AM : ஸ்ரீவில்லிபுத்தூர்
04:40 AM : ராஜபாளையம்
05:10 AM : சங்கரன்கோவில்
05:25 AM : பாம்பு கோவில் சந்தை
05:40 AM : கடையநல்லூர்
06:00 AM : தென்காசி
06:40 AM : செங்கோட்டை (வருகை)

சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 31 வரை இரவு 08:10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07:25 மணிக்கு சென்று வரும் செங்கோட்டை பொதிகை சூப்பர் பாஸ்ட் இனி மேலே குறிப்பிடப்பட்டுள்ள புதிய நேரத்தில் இயங்கவுள்ளது! இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் ஜனவரி 1முதல் சென்னை எழும்பூர் முதல் பல ரயில் கள் புதிய நேரத்தில் இயங்கும் 12631 | சென்னை திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ்
இரவு 08:40 மணிக்கு பதில் இரவு 08:50

22675 || சென்னை திருச்சி சோழன் SF எக்ஸ்பிரஸ்
காலை 07:45 மணிக்கு பதில் காலை 08:00

16127 || சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ்
காலை 10:20 மணிக்கு பதில் காலை 10:40

12661 || சென்னை செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ்
இரவு 08:10 மணிக்கு பதில் இரவு 07:35

16751 || சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
இரவு 07:15 மணிக்கு பதில் இரவு 08:35

12693 || சென்னை தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ்
இரவு 07:30 மணிக்கு பதில் இரவு 07:15

12635 || சென்னை எழும்பூர் மதுரை வைகை எக்ஸ்பிரஸ்*
மதியம் 01:45 மணிக்கு பதில் மதியம் 01:15

20665 || திருநெல்வேலி வந்தே பாரத்*
பிற்பகல் 02:45 மணிக்கு பதில் மாலை 03:05

22661 || சென்னை இராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ்
மாலை 05:45 மணிக்கு பதில் மாலை 05:55

இவ்வாறு முதற்கட்டமாக மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை NTES செயலியில் அப்டேட் ஆகி உள்ளது . விரைவில் அனைத்து ரயில்கள் தொடர்பான தகவல்களும் அப்டேட் ஆகிவிடும் !

மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணையை NTES செயலியில் TRAIN SCHEDULE என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ரயில் என்னை பதிவு செய்து தேதியை ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு மாற்றினால் புதிய கால அட்டவணை காண்பிக்கும்.

ஏராளமான ரயில்களுக்கு நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது ! வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.