Home Blog Page 26

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

delhi terror attack plotted1 - 2026

— ராம் மாதவ்
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

தில்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு நடந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. அதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள் , எண்ணற்றோர் காயமடைந்தனர். அது அதிர்வலைகளை எழுப்பியது. குறிப்பாக பரீதாபாத்தில் உள்ள அல் – பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் முசம்மில் அகமது கனே / கணாய் என்பவருடனும் அவரது கூட்டாளிகளுடனும் தொடர்புடைய இடங்களில் ஹரியானா , ஜம்மு – காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து நடத்திய தேர்தல் வேட்டை தாக்குதலின் ஆழத்தை காட்டியது. காவல்துறையினர் ஏராளமான வெடிபொருள்களை கைப்பற்றினர். அவை நாடு முழுக்கவும் தொடர் குண்டு தாக்குதலை நடத்த தேவையான அளவுக்கு இருந்தது.

தாக்குதலுக்கு பிறகு மத்திய அமைச்சரவையை கூட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அமைச்சரவை அந்த தாக்குதலை, ‘இந்த கொடூரமான பயங்கரவாத செயலை தேச விரோத சக்திகள் செய்துள்ளன’ என்று கண்டனம் செய்தது. தேசிய புலனாய்வு முகமை (என் ஐ ஏ ) இந்த விசாரணையில் ஈடுபட்டது. இந்த தாக்குதலை, பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஸ் இ மொஹமத் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ‘ஒயிட் காலர்’ குழுவினரால் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல், என்றது என் ஐ ஏ.

உடனே குற்றச்சாட்டுகளும் பதில் குற்றச்சாட்டுகளும் என்று விவாதம் தொடங்கியது. ஆனால், இப்போது ஒரு மாதம் கழிந்து விட்ட நிலையில், விவாதங்களில் சூடு ஆறிய நிலையில், அந்த தாக்குதலை பற்றி அலசி ஆராய வேண்டியுள்ளது. மும்பாயைச் சேர்ந்த ஒசாமா ராவல் என்பவர் மில்லி கிரானிக்கல் என்ற பத்திரிக்கையில் எழுதி உள்ள கட்டுரையை சுய பரிசோதனை செய்வதாக உள்ளது.

அதில் அவர் , அந்த சம்பவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மாறாக வழக்கம் போல் ‘நம் பொதுவெளியில் பரவிக் கிடக்கும் அறிவு சார் நேர்மையற்று’ செயல்படக்கூடாது என்று சாடியுள்ளார். அதுமட்டுமின்றி, இப்போது நடக்கும் விவாதங்கள் ‘மையமாக உள்ள உண்மையை தவிர்ப்பதாக – அதாவது இதை செய்தவர் ஒரு கருத்தியலால் உந்தப்பட்டு தானே தன்னார்வத்துடன் இதை செய்ததாக கூறியுள்ளதை பலரும் எதிர்கொள்ள மறுக்கிறார்கள்’ என்று தன் கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.

இரண்டு முக்கிய பாடங்களை அந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒன்று, கல்வியும் பொருளாதார மேம்பாடும் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான தீர்வு என்ற மாயை. தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபி ஒரு மருத்துவர். சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரும் மருத்துவர்கள். மற்றொருவர் ட்ரோன்களை பயன்படுத்தவும் அதை மாற்றி அமைக்கவும் தெரிந்த தொழில்நுட்ப வல்லுனர்.

உலகம் முழுவதும் பார்த்தால் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பலரும் மிகவும் படித்தவர். ஒசாமா பின் லேடன் ஒரு இன்ஜினியர். அவரது சகாவான ஐமன் அல் ஜவாஹிரி ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர். 9/11 (அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல்) தாக்குதலை தலைமை ஏற்று நடத்திய விமான கடத்தல்காரரான முஹம்மது அட்டா ஒரு என்ஜினியர். அவர் ஜெர்மனியில் படித்தவர்.

இந்திய பயங்கரவாதிகளில் ரியாஸ் பட்கல் ஒரு இன்ஜினியர். கோரக்நாதர் கோயிலை 2022 இல் தாக்கிய அகமது அப்பாசி ஐ.ஐ.டி இல் படித்தவர். எனவே முக்கியமான பாடம் என்னவென்றால், கட்டுரையில் ஒசாமா ராவத் கூறியுள்ளதை போல், ‘தீவிரவாதம் வறுமையால் வருவது அல்ல. அது நம்பிக்கை பெற்று வளர்த்த குழந்தை.’

அடுத்ததாக, இது போன்ற தீவிர நம்பிக்கைகள் மத கருத்தியலில் இருந்தே பிறக்கின்றன என்ற இரண்டாவது நெருடலான உண்மைக்கு இட்டுச் செல்கிறது. உமர் நபி பதிவு செய்துள்ள காணொளி ஒன்றில் , உலகம் ‘தற்கொலை தாக்குதல்’ என்று கருதுவது தவறு உண்மையில் அது ஒரு ‘தியாக செயல்’ . இதுபோன்ற செயல்கள் இஸ்லாமிய மரபில் உள்ளன. இதற்கு இஸ்லாமிய மதத்தில் அனுமதி உண்டு, என்று பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்தமாக மதத்தைச் சார்ந்த அனைவரையும் பயங்கரவாதிகள் என்று கூறுவது தவறு. ஆனால் நெருடலாக இருக்கிறது என்பதற்காக உண்மையை போர்வையிட்டு மறைக்க முடியாது. இந்த இடத்தில் தான் முஸ்லிம் அறிஞர்கள், படித்தவர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. ‘இஸ்லாத்துக்கு ஆபத்து’ என்ற ஏமாற்றுப் பிரச்சாரத்தின் மூலம் பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்தும் போக்கிற்கு எதிராக முஸ்லிம் சமுதாயத்திற்குள் இருந்து குரல்கள் எழும்பி வருகின்றன. வெளிப்படையான கண்டனங்கள் வலுவாக மேலெழுந்து வருகின்றன.

அண்மையில் சிட்டிசன்ஸ் ஃபார் பெட்டர்னிட்டி என்ற அமைப்பைச் சார்ந்த நஜீப் ஜங் , எஸ் ஒய் குரேஷி, லெப் – ஜெனரல் ஜமீர் உதின் ஷா போன்ற பிரபலங்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ‘இந்த பயங்கரவாத தாக்குதல் நம் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜும்மா மசூதியின் இமாமாகவும் அனைத்திந்திய மஜ்லீஸ் – இ – இத்தேஹாதுல் முஸ்லிமின் (ஏ ஐ எம் ஐ எம்) தலைவராகவும் இருக்கின்ற அசாதுதீன் ஓவைசி, ஜமாத் இ இஸ்லாமி மற்றும் ஜமாத் உலாமா இ ஹிந்த் அமைப்பின் தலைவர்களும் மற்றும் பலரும் உமர் நபியின் செயலை கண்டனம் செய்ததுடன் அவர் காணொளியில் பதிவிட்டுள்ள கருத்து இஸ்லாத்துக்கு எதிரானது என்றும் கூறியுள்ளனர்.

உலகளவில், பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்துக்களை சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம் வேர்ல்ட் லீக்கின் பொதுச்செயலாளராக இருக்கும் முகமது அல் இஷா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள நஹ்த்லதுல் உலமா (என் யூ) வின் தலைவராக உள்ள யஹ்யா சோலில் ஸ்டாக்ப் என்ற தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த இரண்டு தலைவர்களும் டில்லி வெடிகுண்டு தாக்குதலை கண்டனம் செய்துள்ளனர்.

அல் இஷா தில்லி தாக்குதலை ‘கொடூர செயல்’ என்றும் இது போன்ற பயங்கரவாத செயல்கள் அனைத்தையும் இஸ்லாம் உறுதியாக எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார். என் யூ வின் தலைவர் இந்தியாவும் இந்தோனேசியாவும் நல்லுறவு கொண்டுள்ளதாகவும் ‘பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றுபட்டுள்ளதாகவும்’ சொல்லி உள்ளார்.

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, ‘நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்’ என்பதற்கும் ‘நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா’ என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது. மதக் கோட்பாடுகளை சீர்திருத்தம் செய்து மறு சீரமைப்பது பற்றி கவனம் செலுத்துவது தான் முதிர்ச்சியான அணுகுமுறை ஆகும்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

கட்டுரையாளர் இந்தியா பவுண்டேசனின் தலைவராக உள்ளார். பாஜக தேசிய தலைவர்களில் ஒருவர்

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

aryankavu darma sastha - 2026

திருமணத் தடை நீக்கும் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் செவ்வாய் கிழமை திருவாபரண வரவேற்பு ஊர்வலம்; சுவாமிக்கு திருபாவரணம் அணிவித்து சிறப்பு வழிபாடு; புதன் கிழமை முதல் திருக்கல்யாண உற்சவம் துவங்கி நடைபெறும்.

திருமணத் தடை இருப்பவர்கள் கேரள மாநிலம், ஆரியங்காவு என்னும் இடத்தில் அமைந்திருக்கும் சாஸ்தாவான ஐயப்பனை வந்து வழிபட்டுத் திருமணத் தடை நீங்கப் பெறுவதாக வரை ஐதீகம் உள்ளது.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஆரியங்காவு என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில் சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தினராகக் காட்சி தருகிறார். திருமணத் தடை இருப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டுத் திருமணத் தடை நீங்கப் பெறலாம்.

பரசுராமர் தான் தோற்றுவித்த கேரளாவின் பாதுகாப்புக்காகவும், செழிப்புக்காகவும் கடலோரங்களில் பத்ரகாளியம்மன் கோவில்களையும், மலைப்பகுதிகளில் சாஸ்தா கோவில்களையும் நிறுவினார் என்று சொல்லப்படுகிறது. பரசுராமர் மலைப்பகுதிகளில் குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில், சபரிமலை, காந்தமலை (பொன்னம்பல மேடு) ஆகிய ஐந்து இடங்களில் சாஸ்தாவிற்கான கோவில்களை நிறுவியிருக்கிறார். அவற்றில் ஆரியங்காவு சாஸ்தா கோவிலும் ஒன்றாக இருக்கிறது என்று தல வரலாறு கூறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போன்று, இந்தக் கோவிலில் இருக்கும் ஐயப்பன் மதகஜவாகனரூபனாக காட்சி தருகிறார். இங்கிருக்கும் ஐயப்பனுக்குத் திருமணம் நடந்தது பற்றி சுவையான கதை ஒன்று இருக்கிறது. மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிரா வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜாவின் அரண்மனைக்குத் தேவையான துணிகளை நெசவு செய்து கொண்டு போய் விற்பனை செய்து வந்தனர்.

aryankavu ayyappan sastha - 2026

அப்படிச் சென்ற வணிகர்களில் ஒருவர், ஒரு முறை தனது மகள் புஷ்கலையையும் உடன் அழைத்துக் கொண்டு திருவிதாங்கூர் சென்றார். அவருக்கு மகள் புஷ்கலையைக் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்வது மிகவும் கடினமாக இருந்தது.

அவர்கள் இருவரும் ஆரியங்காவு கணவாய்ப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
புஷ்கலை அதற்குள்ளாகவே மிகவும் களைத்துப் போயிருந்தார். இனி அவளை திருவிதாங்கூருக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று நினைத்த அந்த வணிகர், அங்கிருந்த சாஸ்தா கோவிலின் தலைமை அர்ச்சகரைச் சந்தித்து, தான் திருவிதாங்கூர் சென்று திரும்பி வரும் வரை, தனது மகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி ஒப்படைத்துச் சென்றார்.

சாஸ்தா கோவிலின் தலைமை அர்ச்சகரின் வீட்டில் தங்கிய புஷ்கலை, சாஸ்தா கோவிலுக்குத் தேவையான சில பணிகளைச் செய்து வந்தார். நாளடைவில், அவளது மனத்தில் அந்தக் கோவிலில் இருக்கும் சாஸ்தாவையேத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியது.

இந்நிலையில், புஷ்கலையின் தந்தை திருவிதாங்கூர் சென்று துணிகளை விற்பனை செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில் அவரை, மதம் பிடித்த யானை ஒன்று விரட்டத் தொடங்கியது. அதனைக் கண்டு பயந்த அவர் வேகமாக ஓடத் தொடங்கினார்.

அப்போது அங்கு வந்த ஒரு இளைஞன், அந்த மத யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான். தன்னைக் காப்பாற்றிய இளைஞனுக்கு நன்றி தெரிவித்த அவர், அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமென்று கேட்டார். அந்த இளைஞன், ‘உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தாருங்கள்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான். அதன் பிறகு, வணிகர் ஆரியங்காவு வந்து சேர்ந்தார்.

ஆரியங்காவிலுள்ள சாஸ்தா கோவிலுக்குச் சென்ற வணிகருக்கு, கோவில் கருவறையிலிருந்த சாஸ்தாவின் உருவம், காட்டில் மதயானையிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய இளைஞரின் உருவமாகத் தெரிந்தது. தனது மகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியே சாஸ்தா, காட்டிற்குள் மதம் பிடித்த யானையைக் கொண்டு, நம்மை ஓடச் செய்து, காப்பாற்றியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டார்.

அதன் பிறகு வணிகர், அந்தக் கோவில் அர்ச்சகரிடம் காட்டில் நடந்த கதையைச் சொல்லித் தன் மகள் புஷ்கலையை சாஸ்தாவிற்குத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாகச் சொன்னார். அர்ச்சகரும், கோவில் உயர் அதிகாரிகளுக்கு அந்தத் தகவலைத் தெரிவித்து வரச் செய்தார். வணிகரும், தனது ஊரான மதுரையிலிருந்து தனது உறவினர்களை வரச் செய்தார்.

அதன் பிறகு, சாஸ்தாவிற்கும் புஷ்கலைக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையை மனைவியாக ஏற்றுத் தன்னுடன் ஆட்கொண்டார் என்று இக்கோவிலில் ஐயப்பன், புஷ்கலை திருமணம் நடந்த கதை மரபு வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது.
புஷ்கலையுடன் ஆரியங்காவு ஐயப்பன்

கோவில் அமைப்பு : கேரளக் கட்டுமான அமைப்புடன் அமைந்த இக்கோவில் கருவறையில், ஐயப்பன் வலது காலைக் கீழே ஊன்றியும், இடது காலைச் சிறிது உயர்த்தியும் வைத்து அமர்ந்த நிலையில் அரசர் தோற்றத்தில் இருக்கிறார். இவருக்கு வலது புறம் சிவபெருமான் லிங்க வடிவிலும், இடதுபுறம் புஷ்கலை நின்ற நிலையிலும் இருக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில், நாகராஜர், கணபதி, வலியக்கடுத்தா கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் ஆகியோரும் துணைக் கடவுள்களாக இருக்கின்றனர்.

வழிபாடுகள் : இங்கு ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஐயப்பன் மண்டல வழிபாட்டு நாட்களில், சபரிமலையில் நடக்கும் நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

இங்கு ஆண்டுதோறும், மலையாள நாட்காட்டியின்படி, தனு (மார்கழி) மாதத்தில் ஐயப்பன் – புஷ்கலை திருமண விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் முதல் நாளில் பாண்டியன் முடிப்பு எனப்படும் நிச்சயதார்த்த நிகழ்வும், தாலிப்பொலி ஊர்வலம் எனும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வும், சமபந்தி விருந்தும் மிகச் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன.

திருமணத்தடை இருப்பவர்கள், இங்கிருக்கும் சாஸ்தாவை வழிபட்டு வேண்டினால், அவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடை பெறும் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம் : கேரள மாநிலம், கொல்லம் நகரில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவிலும், புனலூர் நகரில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் ஆரியங்காவு உள்ளது. இங்கு செல்ல மேற்கண்ட ஊர்களில் இருந்து ஏராளமான பஸ் வசதி இருக்கிறது.

பிரசித்தி பெற்ற காரியங்கள் ஐயப்பன் கோவிலில் செவ்வாய்க்கிழமை கிருபாபுரணம் புனலூர் கரூரில் இருந்து எடுத்துவரப்பட்டு ஊர்வலமாக ஆரியங்காவு ஐயப்பன் கோவில் கொண்டுவரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

மறுநாள் புதன்கிழமை முதல் பிரசித்தி பெற்ற ஆரியங்காவு ஐயப்பன் கோவில் திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக துவங்கும். வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

ஆவுடையார்கோவில் திருவாசகம் பிறந்த இடத்தில் சிறப்பு அபிஷேகம்!

avudaiyarkoil kurunthmoolam abishekam - 2026

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் ஆத்மநாத சுவாமி கோயிலில் ஐந்தாம் சோமவார விழாவை முன்னிட்டு பல்லாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் பிரசித்தி பெற்ற, திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான, திருவாசகம் பிறந்த, ஆத்மநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும் சோமவார சங்காபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி 24 ஆவது குருமகா சன்னிதானம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைபடி நடந்த சோமவார விழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள விநாயகர், சுப்பிரமணியர், குதிரைச்சாமி, ஆத்மநாதர், யோகாம்பிகா, ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து நிறைவாக திருவாசகம் பிறந்த இடமான குருந்தமூலம் முன்பாக ஹோமம் செய்து சங்காபிஷேகம் குருந்த மூலத்திற்கு செய்து தங்க கவசம் சாற்றி தீப ஆராதனை நடந்தது.

இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி கோயில் கண்காணிப்பாளர் கதிரேசன் செய்தார்.

அச்சங்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டலபூஜை நாளை தொடக்கம்!

achankoil therottam rathothsavam - 2026

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா இந்த ஆண்டு மார்கழி 2, டிச 17ல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10, நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

முன்னதாக அச்சன்கோவில் தர்மசாஸ்தாவுக்கு விலைமதிப்பற்ற தங்க ஆபரணங்கள் டிச. 16ல் புனலூரில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அச்சன்கோவில் தர்மசாஸ்தாவுக்கு அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில் தமிழக–கேரள பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு பல்வேறு நேர்ச்சை செலுத்தி தரிசனம் செய்து வழிபாடு நடத்துவர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஆண்டுக்கான விழா டிசம்பர் 17ல் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும். இந்த விழாவிற்காக ஐயப்பனுக்கு விலை மதிப்பற்ற தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்படுவது வழக்கம்.

அச்சன்கோவில் திருவாபரண ஊர்வலம் என்பது, அச்சன்கோவில் ஐயப்பன் கோவில் ஆண்டு திருவிழாவின் (மகோற்சவ விழா) முக்கிய நிகழ்வாகும்; இந்த விழா கேரள பாரம்பரியத்தில், திருவாபரணப் பெட்டி (ஐயப்பனின் நகைகள்) கேரளாவின் புனலூர், ஆரியங்காவு வழியாகத் தமிழ்நாட்டின் செங்கோட்டை, தென்காசி போன்ற பகுதிகளை அடைந்து, சிறப்பு வரவேற்புகளுக்குப் பின் அச்சன்கோவிலுக்குத் திரும்பும் ஊர்வலம் ஆகும், இது தனுர் மாதத்தில் நடைபெறும் நிகழ்வாகும்.

பொதுவாக கார்த்திகை கடைசி நாள் 30ஆம் தேதியாக இருக்கும் போது அன்று அல்லது கார்த்திகை 29நாளில் முடிந்தால் தனுர் மாதத்தில் முதல் நாள் நடைபெறும் ஆண்டு விழாவின்போது இந்த ஊர்வலம் நடைபெறும். கேரளாவிலிருந்து தொடங்கி, புனலூர், ஆரியங்காவு வழியாக வந்து, செங்கோட்டை, தென்காசி போன்ற தமிழ்நாட்டு நகரங்களுக்கு வரும். தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவிலில் வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கமாகும்.

இந்த ஆண்டு இந்த விழா நாளை டிச 16ல் நடைபெறும். டிச 17ல் காலை 9 மணிக்கு தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு உற்சவம் துவங்கி நடைபெறும்.சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில் அர்ச்சகர்கள் கொடியை ஏற்றி சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறும்‌ நாராயண பாராயணம் நடைபெறும்.

25–ந் தேதி தேரோட்டம் திருவிழா வருகிற 26–ந் தேதி யாட்டு உற்சவம் நடைபெறுகிறது. 25–ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.27ல் மண்டல பூஜை நடைபெறும்.18–ந் தேதி முதல் 24–ந் தேதி வரை கருப்பன் துள்ளல் நடக்கிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கொத்தலு: இராஜபாளையம் ராஜூக்களின் பாரம்பரியம்!

kothalu rajapalayam rajus - 2026

இராஜபாளையம் ராஜுக்களின் ‘கொத்தலு’

  • ஸ்ரீமதி ப்ரஸன்னா

டிச. 14 ஞாயிறு அன்று, இராஜபாளையத்தில் எங்கள் பகுதியில் ‘கொத்தலு’ சிறப்பாக நடைபெற்றது. நகர் பெண்கள் ஒன்றுகூடி ஒவ்வொரு இல்லங்களுக்கும் சென்று  சாமைக்கதிரை வைத்து வழிபட்டு, பிரஸாதம் ஸ்வீகரித்து வந்தது அழகான அனுபவம். தானியங்கள் தந்த பூமிக்கும், தானியங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் இந்த நிகழ்வு ஆத்மார்த்தமாகவும், அன்பை பலப்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது கூடுதல் சிறப்பு. 

அதென்ன கொத்தலு என்பவர்களுக்காக, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பாலு சரவண கார்த்திக் எழுதிய பதிவு… 

கொத்தலு

நேற்று (14/012/2025) இராஜபாளையம் ராஜூக்கள்  சமுதாயத்தில் நடந்த அற்புதமான ஒரு நிகழ்வு. அவர்களின் சமுதாய பெரியோர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த நிகழ்வு இன்று வரை நடந்து வருவது ஹிந்து சமுதாயம் எவ்வளவு பலம் என உணர‌ வைத்துள்ளது. 

ஒவ்வொரு சாதி தலைவர்களும் இது போல பின்பற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது, அதுவும் இந்த காலகட்டத்தில் மிக அவசியம் கூட! 

கொத்தலு என்கின்ற‌ பெயரில் ஒவ்வொரு மூன்று வருடமோ அல்லது ஐந்து வருடமோ ஒருமுறை அவர்கள் இல்லங்களில் புதிய நெற்கதிர்கள் நிறைந்த செடிகளை வீட்டிலே வைத்து கடவுள்களை அலங்காரம் செய்து தீபம் ஏற்றி ஏதாவது ஒரு இனிப்பு வைக்கின்றனர். இந்த நெற்கதிர்கள் அடங்கிய கட்டை அவர்களின் கோட்டை (சாவடி) யே வழங்குகின்றது‌ என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள்‌ சமுதாயத்தில் யார் வேண்டுமானாலும் எவர் இல்லத்திற்கும் செல்லலாம், ஆனால் கையில் இன்னொரு நெற் கதிர்கள்‌ நிறைந்த கட்டோடு செல்ல வேண்டும், அந்த கட்டை எந்த இல்லத்திற்கு செய்கிறோமோ அங்கே வைத்து விட்டு அங்கிருக்கும் கட்டில் சில நெற்கதிர்களை எடுக்க வேண்டும் 

சரி இல்லம் தேடி வருகின்றர்களை வெறும் கையோடு அனுப்பி விட முடியுமா, அது நமது பண்பு இல்லையே, அதனால் அவர்கள்‌ சக்திக்கு ஏற்றார் போல் பலகாரங்களோ அல்லது பாயசமோ செய்து வைக்கின்றார்கள், யாரும் யாரையும் கேட்க தேவையில்லை, அருகிலே இருக்கும் டம்ளர் இருக்கும்  நாமே ஊற்றி அருந்தி விட்டு செல்லலாம்‌.

கையில் கொண்டு வந்த நெற் கதிர்களை ஏற்றப்பட்ட தீபத்தின் கீழ் வைத்து விட்டு  அவர்கள் இல்லத்திலிருக்கும் நெற்கதிர்களை எடுத்து அடுத்த இல்லத்திற்கு சென்று கையில் கொண்டு வந்த நெற் கதிர்களை அங்கு வைத்து சாமி கும்பிட்டு மீண்டும் அந்த வீட்டின் நெற்கதிர்களை எடுத்து அடுத்த வீட்டிற்கு செல்கிறார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் பத்து இல்லங்களுக்காவது செல்கிறார்கள், இந்த சடங்கை இன்று வரை‌ பின்பற்றுவது தான் சிறப்பே, ஒரே‌ சமுதாயத்திற்குள்‌ எதிரிகளாக யாரும் இருக்க கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாட்டை அவர்களின்‌ முன்னோர்கள்‌ ஏற்படுத்தியுள்ளனர் என்றே‌ நினைக்கிறேன்.

இது மிகப்பெரிய செயின் லிங்க் (Chain Link) இது சாமி கும்பிட மட்டும் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவில்லை, தங்களின் சமுதாயத்திற்குள்‌ எவருக்கும் மனக்கசப்பு கூடாது என்றும், ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாட்டினை அவர்களின் முன்னோர்கள் செய்துள்ளனர். நேற்று சத்தமே இல்லாமல் நடந்த மிகப்பெரிய நிகழ்வு இந்த கொத்தலு நிகழ்வு, ஒவ்வொரு‌ சமுதாயமும் பின்பற்ற வேண்டியது, ஆனால் வேறு வேறு விஷயங்களை மையப்படுத்தி தங்கள்‌ சமுதாயத்தை பலப்படுத்தலாம் அதிலுள்ள பெரியோர்கள். 

ஏனென்றால் சாதி  ஒற்றுமையே ஹிந்து தர்மத்தின் பலம் என்பதை நாம் உணர வேண்டும். கொத்தலு நிகழ்வு போல நாம் சார்ந்த சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்த வேறு‌ வேறு நிகழ்வு மூலமாக பலப்படுத்தலாம். இப்படி நாம் சார்ந்திருக்கும் சமுதாயத்திலே இது போல சமுதாய ஒற்றுமைக்காக ஏதாவது நிகழ்வு நடத்துகிறோமா‌ என்பதையும் சொல்லலாம்! 

வாழ்க கொத்தலு பூஜை

“கொத்தலு” பற்றி இராஜுக்களின் குலவிளக்கு, பிதாமகர், அமரர் பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்களால் 1955-ல் எழுதப்பட்ட “இளமை நினைவுகள்” என்ற தனது சுயசரித்திர நூலில் குறிப்பிடுவதாவது…

“கொத்தலு” – எங்கள் புதுமை

“நாங்கள் உற்சாகத்துடன் கழிக்கும் நாள் வேறொன்றும் உண்டு. அது ஆண்டுக்கு ஒரு முறை “கொத்தலு” என்ற புதுமைக் கொண்டாட்டம் ஆகும். ஊரில் உள்ள சிறுவர் முதல் பெரியவர் வரை, குறிப்பாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள்.

அது எப்படியென்றால், நல்ல நாள் பார்த்து, அன்றைய தினம் சாமைக் கதிர்களை அறுவடை செய்து, வீட்டுக்குக் கொண்டு வருவார்கள் விவசாயிகள். யாராவது ஒருவருக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரணத்தில் விளைந்த சாமைப் பயிரை ‘ஊர்ப் பொது விலைக்கு’ வாங்குவார்கள். அடுத்த நல்ல தினத்தில், ஓர் இடத்தில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள்.

அவரவர் பங்கை, அவரவர் தலைமேல் தாங்கி வீடுகளுக்கு எடுத்துச் சென்று, அங்கே தயாராக வைக்கப்பட்டிருக்கும் பொங்கல் பானைகளில், அப்போது கொண்டு வந்த சாமைக் கதிர்களை தானியத்தைத் தெளித்து, கடவுளை கும்பிட்டு, பொங்கி வைத்த சாதத்தைச் சாப்பிட்டு இன்புறுவர்.

இதில் விஷேசமென்னவென்றால், புதிதாய் விளைந்த கதிர்களைத் தலை மீது தாங்கிக்கொண்டு வருவதுதான். விவசாயத்தை மேற்கொண்டவர்களுக்கும், மற்றவர்களுக்கும் தானியம் புனிதமல்லவா! தானிய லட்சுமியல்லவா!
இத்தகைய தானியத்தை, அதிலும், வருஷ பலன்களில் முதன் முதலாக விளைந்து வரும் உணவு தானியத்தை, அவ்வளவு விஷேசத்துடனும், குதூகலத்துடனும் தலைமேற்கொள்வது, பொருள் பொதிந்த ‘புதுமை’ விழாக்கொண்டாட்டம்தானே!”

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டதில் 16 பேர் உயிரிழப்பு!

australia gun shoot - 2026

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத மதத்தினரின் ‘ ஹனுக்கா’ எனும் பண்டிக்கை கொண்டாட்டம் நடந்த பகுதியில் திடீரெனப் புகுந்த பயங்கரவாதிகள் இருவர் கண்மூடித்தனமாக சுட்டதில், பதினாறு பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளில் ஒருவன் கொல்லப்பட்ட நிலையில் மற்றொருவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரையில் யூத பண்டிகைக்காக, ஞாயிற்றுக் கிழமை மாலை நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது திடீரென அங்கே வந்த இரண்டு பேர் பொதுமக்களைக் குறி வைத்து துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டனர்.  இச்சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்ததாக முதல் கட்டத் தகவல் வெளியானது. இதனை போலீசாரும் உறுதி செய்தனர். மேலும் 29 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிகழ்விடத்துக்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒருவன் கொல்லப்பட்ட நிலையில், மற்றொருவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மேலும் அங்கே அருகே இருந்த கார் ஒன்றின் அருகில் ஐஇடி வகை வெடிகுண்டு கண்டுடெடுக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களே அதைக் கொண்டு வந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய  இருவரில் ஒருவன் நவீத் அக்ரம்(24) என அடையாளம் காணப்பட்டது. அவனது டிரைவிங் லைசென்ஸ் மூலம் போலீசார் அடையாளம் கண்டுபிடித்ததாகக் கூறினர்.  போனிரிக் பகுதியில் உள்ள அவனது வீட்டை கண்டுபிடித்துள்ள போலீசார், அங்கு சோதனை செய்தனர். 

ஆஸ்திரேலிய பிரதமர் அதிர்ச்சி:

இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்ட அறிக்கையில், “போலீசாரும், அவசரகால மீட்புப் படையினரும் மக்களைக் காப்பாற்ற பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். போலீசாருடன் பேசியுள்ளேன். அவர்கள் கூறும் அறிவுரையை மக்கள் கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ஒருவர் ரத்தம் வழிய நின்றபடி ஒரு வீடியோ பதிவு எடுத்து சமூகத் தளங்களில் பதிவேற்றியுள்ளார். அவர் அளித்த தகவலில், எனக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தம் கசிகிறது. தாக்குதல் நடந்த போது எனது குடும்பமும் அங்கு இருந்தது. என்ன நடந்தது என தெரிவதற்குள் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து விட்டது. ஆஸ்திரேலியாவில் இதுபோன்று நடக்கும் என நான் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இவர், கடந்த 2023 அக்.7ல் இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தப்பியவர்.

பயங்கரவாதியை சுற்றி வளைத்த பழ வியாபாரி

பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூடு நடந்த போது அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடினர். வாகனங்கள், கட்டடங்களுக்குப் பின் பதுங்கினர். போலீஸாரும் செய்வதறியாமல் திணறினர். ஓரிரண்டு பெண் காவலர்கள் தங்கள் கைகளைத் தூக்கி சரண் அடைந்ததையும் சிசிடிவி கேமிராக்கள் காட்டிக் கொடுத்தன. அப்போது, துப்பாக்கிச்சூடு நடத்தியவரை பின்புறமாக மெதுவாக ஓடிச் சென்று, அவரை மடக்கிப் பிடித்து, கையைத் தட்டி துப்பாக்கியைப் பறித்த அங்கிருந்த பழ வியாபாரி, அவரை நிலைகுலையச் செய்து, அதுவரை துப்பாக்கியைத் தூக்கியிருக்காத நிலையிலும், பயங்கரவாதியின் துப்பாக்கியைக் கொண்டு அவரை நோக்கிச் சுட்டிருக்கிறார். அப்போது இன்னொரு பயங்கரவாதி பாதசாரிகள் செல்லும் பாலத்தில் இருந்து சுட்டதில் பழ வியாபாரி காயம் அடைந்துள்ளார். 

பாரதப் பிரதமர் மோடி கண்டனம்

இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி உடனடியாக தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.  இந்திய மக்கள் சார்பில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும், இந்த துயரமான தருணத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் தான் இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக தனது கடும் கண்டனங்களை அறிக்கை வாயிலாக வெளியிட்டார். நியூசிலாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “மூன்று மாதங்களுக்கு முன்பு , ‘உங்களது கொள்கை, யூத எதிர்ப்பு என்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது’ எனத் தெரிவித்திருந்தேன் . யூத எதிர்ப்புக் கொள்கை என்பது புற்றுநோய் போன்றது. தலைவர்கள் மௌனமாக இருந்து நடவடிக்கை எடுக்காத போது உலகம் முழுவதும் பரவும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

முன்னதாக, ஹமாஸ் – இஸ்ரேல் மோதலின் போது, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஆஸ்திரேலியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

பதினாறு பேர் படுகொலையில் பாகிஸ்தானியர்!

ஆஸ்திரேலியாவில் பதினாறு பேரை சுட்டுக்கொன்ற இருவரும் பாகிஸ்தானியர்களே என்று அங்கே மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்களில் தந்தை பெயர் சஜித் அக்ரம். மகன் பெயர் நவீத் அக்ரம் (24). போலீஸ் சுட்டதில் தந்தை உயிரிழந்துள்ளார். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் பாகிஸ்தானில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்துள்ளனர். எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது

இந்நிலையில், பாகிஸ்தான் குறித்து இந்தியா கூறிவரும் குற்றச்சாட்டு மீண்டும் உண்மையாகியுள்ளது.   எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் தாயகமாக பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகிறது . உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் பயங்கரவாத சம்பவங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுவது தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது. இதற்கு, பாகிஸ்தான் அரசும், ராணுவமும் நேரடியாக பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதே முக்கியக் காரணம். மேலும், நன்கு படித்த நவீத் அக்ரம் போன்றோர் இப்படி துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு பயங்கரவாதச் செயகளில் ஈடுபடுவது பாகிஸ்தானின் வொய்ட்காலர் டெரரிஸம் குறித்து இந்தியா குறிப்பிடுவதை உண்மையாக்கி இருக்கிறது.

அட இவரா..? பாஜக.,வின் தேசிய செயல் தலைவர் அறிவிப்பு!

bjp nitin nabin sinha - 2026

பாஜவின் தேசிய செயல் தலைவராக பீஹார் மாநில அமைச்சர் நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்

45 வயதான பீஹார் மாநிலத்தின் இளம் தலைவரான நிதின் நபின் சின்ஹா, பாஜக.,வின் தேசிய செயல் தலைவராக அறிவிக்கப் பட்டுள்ளார். தமிழகம், கேரளம், மேற்குவங்க தேர்தல்களுக்குப் பிறகு தேசிய தலைவராக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக.,வின் தேசியத் தலைவராக 2020 பிப்ரவரியில்  ஜே.பி. நட்டா பொறுப்பேற்றார். அக்கட்சி விதிகளின்படி தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்தான். அப்போது அடுத்து வந்த மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஜே.பி.நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அந்தத் தேர்தலில் பாஜக., தலைமையிலான தே.ஜ.கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. 

தொடர்ந்து கட்சிக்கான புதிய தேசியத் தலைவர் நியமனம் குறித்து பிரதமர் மோடி மத்திய அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில் , பாஜக.,வின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் சின்ஹா தற்போது நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளிவந்துள்ளது. பீஹாரைச் சேர்ந்த இவர் பாஜக., மூத்த தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகன்.  பங்கிப்பூர் சட்டசபைத் தொகுதியில் இருந்து தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். நிதின் நபின் பாட்னாவில் பிறந்தவர்.

பிகாரின் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ள நிதின் நபின், வலுவான ஆர்.எஸ்.எஸ். பின்னணி உடையவர்.

பிகார் அரசியலில் பாஜகவின் கூர்மையான வியூக வகுப்பாளராகவும் அறியப்படுகிறார். பான்கிபூர் நகரத் தொகுதியில் 2010, 2015, 2020 மற்றும் 2025 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் இளைஞர் அணித் தலைவராகவும் நிதின் நபின் பொறுப்பு வகித்துள்ளார்.

ஊடகங்கள் இவராக இருக்குமோ அவராக இருக்குமோ என ஊகங்களாக சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், நிதின் நபின்  என்ற இந்தப் பட்டியலிலேயே இல்லாத ஒருவரை, எவரும் நினைத்திராத வகையில்  செயல் தலைவராக அறிவித்திருக்கிறது பாஜக.,!

திருப்பங்கள் நிறைந்த திரைப்படம் – திருப்பரங்குன்றம்; ஜெயிக்கப் போவது யாரு?

thiruparankundram arunachalam - 2026

முந்தாநாள் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடினார். அரசியல் சீன் போட்டுக் கொண்டிருந்தவர், சினிமா சீனிலேயே சிக்கிக் கொண்டார். தமிழகமே சினிமாவில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதால், நாமும் அதையே உதாரணமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. மக்களின் சினி மாமோகம் அப்படி.

அண்மைய திமுக., அரசின் நடவடிக்கைகள் எனக்கு அவர் நடித்த அருணாசலம் படத்தையே நினைவூட்டியது.

அருணாசலம் எனும் அருணையின் கிரியில் தீபம் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரம், அருணாசலத்தில் வெளிச்சம் மங்கி திருப்பரங்குன்றம் தீபத்தின் பிரகாசம் அன்பர்களின் உள்ளங்களில் ஏற்றுக் கொண்டிருந்தது. காரணம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கார்த்திகை தீப நாளின் மாலை 6 மணி நிகழ்வுகள்! அவை அந்த அருணாசலத்தையே நினைவூட்டின.

முப்பது கோடி ரூபாய் ஒரு மாதத்தில் செலவழிக்க வேண்டும். அதற்கு சில நிபந்தனைகள். சொந்தமாக சொத்து வாங்கி இருக்கக் கூடாது. கைவசம் எதுவும் மிஞ்சி இருக்கக் கூடாது. சவாலில் வென்றால் மூவாயிரம் கோடி ரூபாய் சொத்து கிடைக்கும். இந்த நாடகத்தனங்களை பெரும்பாலும் நாம் எல்லோருமே பார்த்து ரசித்திருப்போம். இந்தத் தலைமுறையும் கூட டிவி,க்களின் புண்ணியத்தில் பார்த்திருக்கக் கூடும். அந்த விறு விறு காட்சிகள், எதிரணி செய்யும் தகிடுதத்தங்கள், அரசியல் கட்சி தொடங்கி ரஜினி தரப்பு செய்யும் கோமாளித்தனங்கள், திருப்பங்கள் காட்டும் காட்சிகளின் போதான பின்னணி இசை எல்லாம்தான்…

அதுவும் அந்தக் கடைசி நிமிடக் காட்சி. 12 மணியை நெருங்கும் போது… நொடிக்கு நொடி … ரம்பா வந்து உண்மையைச் சொல்ல அப்போது கையில் மீதம் வந்த ஒரு லட்சத்து சொச்சம் பணத்தை இந்தா பிடி உன் சம்பளம் என்று கொடுத்து வவுச்சரில் கையெழுத்து வாங்கி சமர்ப்பித்து, அப்பாடா என்று ரஜினி மூச்சு விடும்போது பார்ப்பவர்களுக்கும் முகத்தில் நிம்மதி தெரியும் வகையில் ஒன்றிப் போய் விடுவார்கள்…

அதே அதே சினிமாத்தனத்தைத்தான் அன்றைய நாளிலும் காண நேர்ந்தது. 6 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னது. அதை ஏற்ற விடாமல் செய்வோம் என அரசு கங்கணம் கட்டிக் கொண்டது. சொத்துகளை ஆட்டையப் போடும் ரகுவரன் அணியின் சாகசம் போல், கோயில் சொத்துகளை ஆட்டையப் போடும் திமுக.,! அதற்கு எத்தனை அடியாட்கள்..!? பிரதானமானது கறுப்பு சிகப்புச் சீருடை போட்டுக் கொண்டிருக்க வேண்டியவர்கள் மக்களின் கண்களை மறைக்கும் வகையில் காக்கிச் சீருடையில் முன் நின்றார்கள். சட்டத்தைப் பராமரிப்பது நீதிமன்றம். சட்டத்தை இயற்றுவது சட்டமன்றம். இயற்றுபவனைக் காட்டிலும் பராமரிப்பவனுக்கே பொறுப்பு அதிகம். பராமரிப்பவனின் சொல்லைத்தான் அதன் பாதுகாவலர் கேட்டிருக்க வேண்டும். நிற்க…

நான் மஞ்சரியின் இதழாசிரியராக இருந்த போது, வெளிநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள் பொன்மொழிகளை ஃபில்லர் எனும் வகையில் பக்கங்களில் கட்டுரைகளின் மீதமிருக்கும் இடத்தில் போட்டு நிரப்புவேன். அப்படி ஒரு தத்துவம் – அது பெர்னாட்ஷா அல்லது யாரோ ஒருவர்… பெயர் நினைவில்லை.

குடியாட்சியில் பல முட்டாள்கள் (திருடர்கள்) சேர்ந்து ஒருவனைத் தேர்வு செய்கிறார்கள்..
முடியாட்சியில் அந்த முட்டாளே (திருடனே) அதிகாரத்தில் வந்து அமர்ந்து கொள்கிறான் – என்பதாக இருக்கும். இதில் அடைப்புக்குறிக்குள் இருக்கும் சொல்லுக்கான தகுதியில் இருக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள், எத்தகைய நாடகத்தனங்களைச் செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

6 மணிக்குள் விளக்கு ஏற்ற விடாமல் செய்கிறேன் பார் என்பதில் உறுதியாக இருந்ததால் தான், ஒரு அடியாள் துறைத் தலைவர், உனக்கு விளக்கு ஏத்த முடிஞ்சதா? விளக்கு ஏத்த வக்கில்ல வந்து பேசுறான் பாரு என்று கேட்டது…

கொடுத்த உத்தரவுக்குக் கட்டுப்படாமல் அதை நான் அப்பீல் செய்வேன், இதை நிறைவேற்ற முடியாது என்று, எவர் அந்த உத்தரவை செயல்படுத்த வேண்டுமோ அவரே அடங்கமறு அத்துமீறுத்தனமாய்ச் சொல்வது…

வேண்டுமென்றே இழுத்தடித்து, இந்த வருடமும் விளக்கு ஏற்றாமல் கடந்து போய் விட்டால், அதைக் காரணம் காட்டியே ’மதரீதியாக’ வாக்களிப்பவர்களிடம் உனக்கு சாதகமாக நடந்து கொண்டேன் பார்த்தாயா! நான் தான் உன் காவலன் – என்று காட்டி வாக்குகளைப் பெற முயற்சி செய்வது. அதைத்தான் ஒருவன் சூப்பர் முதல்வரே என்று சிலாகித்துப் பேசி அந்த வீடியோவையும் சமூகத் தளங்களில் பரப்பியிருப்பது.

திருமாவளவன் சொன்ன… மோடி வெறுப்பை கட்டமைத்திருக்கிறோம் என்பது போல், ஆன்மிக ஹிந்துக்கள், பாஜக.,வைக் காட்டியே முஸ்லிம்களிடம் வெறுப்பைக் கட்டமைத்திருக்கிறார்கள். அதைக் காரணம் காட்டியே வாக்கு அறுவடையை நிகழ்த்துகிறார்கள். ஆனால் அவர்கள் செயலால் ஒரு சமூகத்தின் வெறுப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகிறோமே என்ற எண்ணம் இன்னொரு தரப்பாருக்கு ஏற்படாமல் போகிறது. அது ஏற்பட்டிருந்தால், ஒற்றுமையாக இருப்போம், எங்களிடம் பிரிவினை எடுபடாது என்று இத்தகையவர்களை புறக்கணித்திருப்பார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் வேண்டுமென்றே தவறாக மனுத் தாக்கல் செய்து, அசிங்கப்பட்டாலும் சரி, கால நீட்டிப்பு பெற்று, காலத்தைக் கடத்தி காரியம் சாதிப்பது…

அடடே எத்தனை சினிமாத் தனங்கள். ஆனால் இந்த முறை வெற்றி பெற்றதென்னவோ அருணாச்சலம் – ரஜினி அல்ல, வில்லன் ரகுவரன் வகையறாக்கள் தான். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துகளை அடையப்போவதும் அவர்கள்தான்! நாம் சினிமாவில் மட்டுமே ரஜினியின் புன்னகை முகத்தைப் பார்த்து ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டும்! சினிமா வேறு நிஜம் வேறு என்று சொல்லிக் கொள்வோம்; ஆனால் சினிமா சீன்கள் தான் நிஜத்தில் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை நம்ப மறுக்காமல்!

காரணம், அந்த இயக்கம் வளர்ந்ததே நாடகத்தை மூலதனமாய்க் கொண்டுதானே! பின் சினிமா, டிவி என்று வளர்ந்தது, இப்போது சமூக ஊடகங்களில் பரவலாகியிருக்கிறது! நம் சினிமாவை நிஜத்தில் இருந்து பிரித்து சினிமா மோக வலையில் இருந்து மீளாதவரையில், விஜய் வகையறாக்கள் இந்தக் காட்சிகளைத் தொடரவே செய்வார்கள்! அறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் நேர்மைக்கும் மதிப்பளிக்காத சமுகம் சீரழிவதை, கண்முன்னே கண்டு நெஞ்சம் விம்மி பாரதியைப் போல் பாட்டுப் புலம்பல்களால் காயத்தின் ரணத்தை காற்றாட்டிக் கொள்ள வேண்டியதுதான்!

***
நேற்று மாலை சென்னை ஃப்ரன்ட்ஸ் ஃபோரத்தின் ஜூம் மீட்டிங் வாயிலாக ‘ஊடக அறம்’ குறித்துப் பேச ஒரு வாய்ப்பு அமைந்தது. தர்மம் தான் நம்மை இயக்குவது. அறம் – அறநெறி இன்றி நம்மை வழிநடத்த இவ்வுலகில் வேறேதுமில்லை என்பதால், அனுபவங்களின் ஊடாக, ஊடக நெறியை அடியேன் கற்றதும், இன்று காண்பதும் குறித்துப் பேசினேன்.

பல தகவல்கள். முத்தாய்ப்பாக அமைந்தது விவகாரம் ஆக்கப்பட்ட திருப்பரங்குன்றம் விவகாரம்! அப்போது பேசியதன் நீட்சியே மேலே இக்கருத்தை எழுதத் தூண்டியது. இதனை கார்த்திகையில் கார்த்திகை நாளன்றே எழுதியிருக்கலாம். ஆனால், நலமின்மை, மனமின்மை, நேரமின்மை, ஆர்வமின்மை என பல இன்மைகளால் இப்பக்கம் வராமல் தவிர்த்து இனிமைகளில் போக்கினேன். ஆக… ஆக… இன்மையே இனிமை!

அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்

From Kalyani to Kootu: Subbudu Takes on the Canteen Concert!

0
margazhi mahotsav - 2026

Narasimhan Vijayaraghavan

As veteran singer S. Sowmya breaks into Nannu Vidachi—Tyagaraja’s Reethi Gowla classic—I scan across the hall, compelled to indulge in number-crunching for want of better engagement. There are seventy-three in the hall, including the balcony. Give or take five, plus ten coming and going. Today is Sunday, mind you, and other sabhas are yet to go live. Where are the rasikas? What inspiration can a performer possibly draw when singing to chairs?

Instead of seeking to review the katcheri—which I may be incompetent to, yet have always dared to—the alternative is to review the cuisine in the canteen, Subbudu-style. Why not, I wondered, as she briskly launched into Bantureethi Kolu in Hamsanadam (my raga detection is Jack-and-Jill memory based, I concede), to keep myself engaged, as I am always prone to in such katcheris. And when there are sites willing to carry such “inane” pieces, indulgence comes easy, you see.

And yet, to speak of Margazhi Mahotsav today feels strangely anachronistic. A Sunday afternoon, no traffic snarls, no competing marquee concerts, and still the hall yawns. The season that once overflowed into pavements now echoes in auditoria. Perhaps the rasika has not disappeared; he has merely retreated. He sits at home, veshti loosened, coffee within arm’s reach, remote control in hand, sampling live streams the way one once sampled kutcheris by hopping sabhas. Comfort has triumphed over commitment.

So I wandered into the canteen, that eternal second venue of Carnatic life, where attendance never quite dips. A poor man’s Kasi halwa, rava dosa, and filter coffee combo stared back at me—modest, dependable, and reassuringly present. If the hall had empty seats, the canteen had occupied stools. The rasika, it seemed, had voted with his feet, if not with his ears.

I entered with the same trepidation with which one approaches a much-advertised prodigy. The menu promised abundance, but one has learnt to distrust promise in Margazhi. The dosa arrived crisp and punctual—unlike audiences. The halwa tried to be grander than it needed to be, much like sabha brochures. The sambar was over-eager, pressing itself upon the senses when restraint would have served better. One wondered whether balance, that elusive grail in music and cooking alike, had quietly exited the building.

Filter coffee, at least, did not disappoint. Strong, unsentimental, and utterly indifferent to turnout figures, it did its job. As I stood there, glass in hand, it struck me that the canteen had grasped a truth the sabhas seem to have missed: you must go where the rasika is. If he prefers his Margazhi at home—streamed, paused, replayed—perhaps that is where the season now truly lives. The music still flows, the kalyanis still bloom; only the address has changed.

A Symphony of Saris and Sambars: Chennai’s Margazhi Grand Spectacle

0
bharatiya vidya bhavan hall mylapore - 2026

Narasimhan Vijayaraghavan

It is Narada Gana Sabha Isai Natya Nataka Vizha 2025 Inauguration Day on 13th Dec, 2025 at 17.30 hrs. Well, typically the hall is half filled with well wishers. A search for the canteen leads to the basement, newly commissioned this year. The offerings, one trusts, remain a familiar mix of old favourites and cautious novelties. As one waits, thoughts meander across several terrains, demanding to be woven into this piece.

Between November 2024 and January 2025, the familiar alchemy unfolded once again in the humid, jasmine-scented neighbourhoods of Mylapore and T. Nagar. Chennai’s Margazhi Mahotsav returned in all its excessive, exhilarating glory. What is casually called a festival is, in truth, a cultural phenomenon—simultaneous, sprawling, unapologetically intense—where music is not scheduled around life, but life around music.

At least a dozen major sabhas anchored the season: Bharatiya Vidya Bhavan from November 22 to December 12, the Music Academy’s formidable 98th Annual Conference and Concerts, and the bustling circuits of Krishna Gana Sabha, Bharat Kalachar, Parthasarathy Swami Sabha and Sri Thyaga Brahma Gana Sabha. Alongside them thrived Charsur, Naada Inbam, Sunaadalahari and others. All told, some 10 to 13 sabhas functioned in parallel, creating an overlapping soundscape that left rasikas spoilt, exhausted and grateful in equal measure.

It is fashionable to grumble that sabhas ought to stagger performances across the year, instead of compressing everything into Margazhi. The idea is elegant, even idealistic. Yet it is utterly impractical. Margazhi has become sacred time—ritualised, anticipated, magnetic. The very simultaneity that appears chaotic is its defining strength. It is this concentrated abundance that has earned Chennai its recognition as a UNESCO Creative City for music. To dilute Margazhi would be to misunderstand its soul. Better to surrender to it, as generations have, beginning each dawn at 03.30 a.m., when Margazhi itself announces the day with devotion rather than alarm clocks.

Even conservative arithmetic astonishes. With each sabha hosting 30 to 100 concerts over six weeks—many far more—the season easily accounted for 600 to 900 performances, with broader estimates placing the total near 1,500. Each concert brought together five to eight performers: vocalists, violinists, mandolin and flute players, percussionists of every stripe. Across the season, between 4,000 and 7,000 artistes likely appeared on stage, excluding the steadfast tambura artistes whose quiet constancy undergirded it all.

Audiences were no less prolific. Halls seating 300 filled and refilled several times a day. Even allowing for repeat attendance, an estimated 150,000 to 300,000 rasikas passed through the season, numbers swelling during Christmas and the New Year, when devotion and vacation converged.

No Margazhi account is complete without the canteens. In 2024–25, whispers suggested food revenues outpaced ticket sales. With dozens to nearly 200 dishes on offer—idlis, vadas, sambars of every temperament, biryanis, sweets and indomitable filter coffee—the season doubled as a culinary carnival. Veteran caterers, including Mountbatten Mani Iyer Catering, fed tens of thousands daily.

As November 2025 to January 2026 approaches, expectations rise further: 800 to 1,200 concerts, 5,000 to 8,000 performers, and audiences possibly exceeding 300,000. Margazhi remains Chennai’s great annual surrender—to sound, taste, memory and repetition. Let it unfold as it always has. Some traditions are not meant to be optimised, only lived.