ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
From the ethereal banks of a timeless Kaveri, the Trinity looks down upon the neon-lit sprawl of the modern Sabha.
Tyagaraja, whose life-breath was a rhythmic prayer to Rama, stands with his tambura stilled in shock. Beside him, Muthuswamy Dikshitar, the architect of majestic sound-temples, gazes at the hollowed halls, while Syama Sastri, the master of intricate grace, sighs into the cosmic void.
“Where is the congregation of the soul?” Tyagaraja whispers, his voice trembling. “We offered these kirtanas as ladders to the infinite, not as background noise for a digital age. I see our verses sung with surgical precision, yet the chairs are but wooden ghosts. Has the rasika found a new god in the glowing screen?”
Dikshitar watches a young virtuoso singing to a mere dozen souls—hardly twice the number of performers on stage. “Our nectar is now a viral commodity,” he murmurs. “They ‘approve’ of our ragas from the din of a pub or the comfort of a couch, drowning out the sacred madhyamam with the clink of glass. Is the sanctity of the Sannidhi truly traded for the convenience of the app?”
Syama Sastri leans forward in anguish. “The youth possess the skill but lack the presence. They seek the ‘like’ but forget the ananda of a shared breath.
” Together, they watch the dark December clouds, wondering if their immortality is being preserved in a digital tomb—vast, accessible, and heartbreakingly cold.
மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில், இருப்பதால் மலைமீது செல்லவோ எந்த நிகழ்வும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என இந்து அமைப்புகள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் மலை மீது தர்கா சார்பாக சந்தனக்கூடு நிகழ்வு நடைபபெறும் நிலையில் மீண்டும் எழும் சர்ச்சைகள் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் சந்தனக்கூடு மற்றும் கல்லத்தி மரம் தொடர்பாக புகார் மனு அளித்துள்ளனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பாலமுருகன் மற்றும் சோலை கண்ணன் கூறுகையில்:
திருப்பரங்குன்றம் மலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் தர்கா சார்பாக சந்தனக்கூடு நிகழ்வின்போது கொடியேற்றப் படுவதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடி ஏற்றி வந்த நிலையில் சகோதரத்துவ நல்லெண்ணத்தில் தாங்கள் அனுமதித்ததாகவும் தற்போது நூறாண்டு காலமாக இந்த மலை பிரச்சனை நடைபெற்று வருகிறது.
மேலும், மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதால் மலை மீது யாருக்கும் அனுமதி இல்லை என்று மறுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வருகின்ற 21ஆம் தேதி சந்தனக்கூடு விழாவின்போது, மலை மீது கொடியேற்றவோ வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என்றும், மேலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் தர்கா சார்பாக முன்பு ஏற்றப்பட்டுள்ள பழைய கொடியை அகற்ற வேண்டும் என்றும், அதை மீறி அவர்களுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் எங்களுக்கு மலை மீது தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏற்கனவே சமணர் படுகைகள் பகுதியில் தர்கா நிர்வாகிகள் தான் பச்சை நிற பெயிண்டை ஊற்றினர் . இந்த நிலையில் கொடியேற்ற அனுமதித்தால், கோயிலுக்கு சொந்தமான இடத்தையும் அனுபவ பாத்தியம் என்கிற பெயரில் ஆக்கிரமிக்க முயல்வார்கள் என்பதால் மலை மீது சந்தனக்கூடு நிகழ்ச்சிக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என்றும், அப்படி அனுமதிக்கும் பட்சத்தில் இந்துக்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது சந்தனக்கூடு தொடர்பாக திருப்பரங்குன்றம் பகுதியில் புகார் மனுக்கள் வந்துள்ளதால், திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது .
கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை இந்த வருடத்தின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாநகராட்சி மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று வருடத்தின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.
மார்கழி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, அரிசி மாவு, சந்தனம், மஞ்சள், பன்னீர், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது .
அதனைத் தொடர்ந்து வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்ட நந்தி எம்பெருமானுக்கு மலரும் மாலைகள், பல்வேறு வண்ண பூக்கள், எலுமிச்சை, தாமரை உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி, மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
இதில் இந்த வருடத்தின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
செங்கோட்டையில் தமிழக பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பில் மகளிருக்கு தொழில் உபகரண பொருட்கள் வழங்கல்.
செங்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார்நாகேந்திரன் ஆலோசனையின்படியும் தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி வழிகாட்டுதலின் படியும் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் நயினார் பாலாஜி அறிவுறுத்தலின் படியும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் துறையில் முன்னேறும் வகையில் அவர்கள் தொழில் செய்வதற்கு ஏதுவான தொழில் உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு செங்கோட்டை நகர தலைவர் முத்துமாரியப்பன் தலைமைதாங்கினார். விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் செந்தமிழ்செல்வன் நகர பார்வையாளர் கருப்பசாமி மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
நகரச் செயலாளர் லக்ஷ்மணன் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து பயனாளிகளுக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில பொறுப்பாளர் பொன்னுலிங்கம்(எ)சுதன் தொழில் உபகரணப்பொருட்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் நகரத் துணைத்தலைவர்கள் புதியவன், ஆறுமுகம், சுந்தரம் ஐடி விங் நகரதலைவர் செல்வகுமார் சக்தி கேந்திர பொறுப்பாளர் காளி தொழில்துறை பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகர ஆன்மீக பிரிவு தலைவர் மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார்.
One walked into the hall and was greeted not by silence but by absence. A vast, upholstered Sahara stretched before the stage. Rasikas were so few that one needed binoculars, not for artistic appreciation but to confirm that another human being did, in fact, exist somewhere in Row Z.
What has become of Margazhi magic, one wondered. As the vocalist embarked upon an earnest alapana, the arithmetic was cruel: eighteen rasikas breathing, and the first ten prestigious rows populated entirely by chairs—plush, obedient, and showing far more attendance discipline than the living. Somewhere between the tara sthayi and the coffee interval, the mind wandered, as all bored minds do, into fantasy. Suppose this were not a mere mortal singing. Suppose this were AI. Suppose Subbudu were reviewing it.
As an AI buff, the temptation was irresistible. Imagine a concert where technology, drunk on its own cleverness, assembled the Avengers of Carnatic music: Ariyakudi, GNB, Viswanatha Iyer, MS Subbulakshmi, MLV, DK Pattammal—every golden oldie polished, licensed, and rolled out live on stage. No glitches. No raga lapses. Grammar perfect. Memory infinite. The organisers would call it historic. Subbudu would call it fraudulent.
Let us be clear. Subbudu did not spare flesh and blood; why would he spare silicon? He would have begun politely. “A respectable attempt,” he might say, before sharpening the knife. Ariyakudi’s kacheri paddhati, he would sniff, sounded more like a railway timetable generated by a clerk who had never missed a train but had also never felt joy. GNB’s brigas, though dazzling, would be dismissed as gymnastic displays by a machine that mistook velocity for vidwat. Viswanatha Iyer’s fire? Reduced to central heating—efficient, uniform, and utterly uninspiring.
And the ladies? Heaven help them. A digital MS singing Kurai Onrum Illai would be described as an audio PowerPoint: every note present, every bhava absent. MLV’s sparkle would be faulted for excessive wattage and insufficient warmth. DK Pattammal’s grandeur, Subbudu would complain, sounded like authority without austerity—an IAS officer without field posting. Two sangatis too smooth, one pause too calculated, and the review would be complete. Perfection, in Subbudu’s universe, was merely a more irritating form of incompetence.
The organisers, meanwhile, would beam. “No shruti slips!” they would proclaim. Precisely the problem, Subbudu would retort. Music without the possibility of failure is not music; it is clerical work. Ariyakudi’s genius lay in judgement, not predictability. GNB lived on the edge. MS surrendered to something larger than herself. AI, poor thing, can only retrieve, never risk.
And then comes the most damning question, which Subbudu would ask with surgical cruelty: if even immortals, resurrected and singing flawlessly, cannot fill the hall, what exactly is AI saving? The audience remains sparse, the applause dutiful, the canteen overflowing. Coffee still enjoys greater patronage than Kambhoji.
Subbudu would end, as he always did, by twisting the knife gently. The concert was historic. The execution impeccable. The experience unforgettable—for all the wrong reasons. Until AI learns not just to sing but to provoke, offend, surprise, and occasionally fail, it will remain what it already is: a very clever machine performing for empty chairs, while the rasikas queue faithfully for vadai.
And somewhere, one suspects, Subbudu would smile—because even AI, it turns out,however tonal perfect, is not beyond criticism.And perfection itself is the cause!
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படைவீடு கோவில்களில் மிக முக்கியஸ்தலமாக விளங்கும் அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் இன்று ஆராட்டு உற்சவம் சொர்ண கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கெடுத்து பகவான் அருள் பெற்றுச் சென்றனர் வரும் 25ஆம் தேதி இக்கோவிலில் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டமும் 26 ஆம் தேதி ஆராட்டு உற்சவமும் 27ஆம் தேதி மண்டல பூஜை நிறைவு விழாவும் விமர்சையாக நடைபெறும்.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் போல் ஐயப்பனுக்கு படைவீடு கோவில்கள் உள்ளன குளத்துப்புழாவில் பாலகனாகவும் ஆரியங்காவில் இளைஞனாகவும் அச்சன்கோவிலில் அரசனாகவும் எரிமேலியில் சாந்தரூபமாகவும் சபரிமலையில் சன்னியாசியாகவும் காந்த மலையில் முற்றும் துறந்து ஜோதி ரூபமாக அருள் பாலிக்கிறார் .
இதில் முக்கிய கோவிலாக அச்சன்கோவில் விளங்குகிறது சபரிமலை ஐயப்பனுக்கு ஆராட்டு உற்சவம் பத்து நாள் நடைபெறுவது போல் அச்சன்கோவில் தர்ம சாஸ்தாவுக்கும் பத்து நாட்கள் பாராட்டு உற்சவம் மண்டல காலத்தில் நடைபெறும் இது போல் சபரிமலை ஐயப்பனுக்கு சொர்ண கொடி மரம் திருபாகரணங்கள் உள்ளது போல் அச்சன்கோவில் அரசனுக்கும் சொர்ண கொடி மரம் விலைமதிப்பிட முடியாத திருபாகரணங்கள் பல உள்ளது ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை துவங்கிய கார்த்திகை 1-ஆம் தேதியிலிருந்து 30ஆம் நாள் கோவிலுக்கு திருபாவாரணங்கள் புனலூரில் இருந்து கொண்டுவரப்படும்.
மறுநாள் 31 ஆம் நாள் முதல் சொர்ண கொடி மரத்தில் கொடியேற்றும் வைபோகம் அதி விமர்சையாக நடத்தப்பட்டு பத்து நாள் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும்.
இன்று புதன்கிழமை காலை மூலவர் அச்சன் கோவில் தர்மசாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நடத்தி தங்க திருபாகரணங்கள் அணிவித்து கோவில் முன்பு உள்ள சொர்ண கொடி மரத்தில் கோவில் வேத பண்டிதர்கள் தந்திரி ஆகியோர் வேத பாராயணம் முறைப்படி சொர்ண கொடி மரத்தில் புதிய கொடி பட்டம் கொண்டு கொடியேற்றி வைத்தனர் இந்த விழாவில் தமிழகம் கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கெடுத்து பகவான் ஐயப்பனின் அருள் பெற்றனர் தினமும் திருவிழா நாட்களில் பகலில் சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனைகளும் இரவு வீதி உலாவும் கருப்பசாமி ஆட்டமும் விமர்சையாக நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 24ஆம் தேதி எட்டாம் பூராம் நிகழ்வும் 25 ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறும் கேரளாவில் இரண்டு கோவில்களில் மட்டுமே திருத்தேரோட்டம் நடைபெறும் அதில் ஒன்று கல்பாத்தி மற்றொன்று அச்சன்கோவில் ஆகும் அச்சன்கோயில் தர்ம சாஸ்தாவுக்கு தேரோட்டத்திற்கு என தற்போது புதிதாக தேர் செய்யப்பட்டுள்ளது
தேரோட்டத்திற்கு மறுநாள் அச்சன்கோவில் பம்பா நதியில் பகவான் ஐயப்பனுக்கு ஆராட்டு நடத்தி பத்து நாள் உற்சவம் நடைபெறும் மறுநாள் 27 ஆம் தேதி மண்டல பூஜை நிறைவு விழா வழிபாடு நிறைவடையும் விழா ஏற்பாடுகளை அச்சன்கோவில் தேவஸ்தானமும் அச்சன்கோவில் நிர்வாக கமிட்டியும் செய்து வருகின்றனர்
அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தாவ் கோயில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒரு கோட்டையைக் கட்டி, அச்சன்கோவில் நதிக்கு ஒரு புனித நதி என்ற பட்டத்தை வழங்கிய ஒரு கோயிலாகும், மேலும் எந்த விஷத்தையும் குடிக்க வரும் பக்தர்களுக்கு நேரத்திற்காக காத்திருக்காமல் அதன் கதவுகளைத் திறந்து, அவர்களுக்கு தரிசனம் மற்றும் நிர்விருத்தியின் அருளை வழங்குகிறது.
அச்சன்கோவில் மலைகளை முத்தமிட்டுத் தடவும் மருதன் சனீஸ்வரன், பிரமிப்பில் இருக்கும் எந்த பக்தரையும் குளிர்வித்து, கடந்து செல்லும்போது, அந்தக் காற்றிலும் சாஸ்தாவின் இருப்பைக் காணலாம்.
அச்சன்கோவில் என்பது சாஸ்தாவை அறிந்து அனுபவிப்பது பற்றியது. இந்தக் கோயிலுக்கு ஒரு முறையாவது சென்ற எவருக்கும் இதன் அர்த்தம் தெரியும். கொல்லம் மாவட்டத்தின் பத்தனபுரம் தாலுகாவில் உள்ள தென்மலை பஞ்சாயத்தில் உள்ள அச்சன்கோவில் கிராமத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
பரசுராமரால் உருவாக்கப்பட்ட ஐந்து சாஸ்தா கோயில்களில் அச்சன்கோவிலும் ஒன்று. இந்த ஐந்து சாஸ்தா கோயில்களும் சாஸ்தாவின் வாழ்க்கையின் ஐந்து நிலைகளைக் குறிக்கின்றன என்று நம்பப்படுகிறது.
அவர் குளத்துப்புழாவில் ஒரு சிறுவனாகவும், ஆரியங்காவில் ஒரு டீனேஜராகவும், அச்சன்கோவிலில் ஒரு இல்லத்தரசியாகவும், சபரிமலையில் ஒரு முதியவராகவும், பொன்னம்பலமேட்டில் உள்ள காந்தமலையில் ஒரு தெய்வீக மனிதராகவும் ஆட்சி செய்கிறார்.
இமயமலையில் உள்ள கிருஷ்ணசிலா பாறையில் கட்டப்பட்ட அச்சன்கோவில் தெய்வம், இடது மற்றும் வலதுபுறத்தில் பூர்ணா மற்றும் புஷ்கலா தெய்வங்களுடன் அரச தோரணையில் வசிக்கிறார். பூர்ணா மற்றும் புஷ்கலா ஆகியோர் சாஸ்தா மன்னரின் தோழிகள் என்று நம்பப்படுகிறது. பூர்ணா அறிவின் சின்னமாகவும், புஷ்கலா செல்வத்தின் சின்னமாகவும் உள்ளது.
இந்த கோயில் விஷ சிகிச்சைக்கு பிரபலமானது. நவீன மருத்துவம் கூட இந்த அபூர்வத்திற்கு முன் தலைவணங்குவது எவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. இது மிகவும் கடுமையான விஷமாக இருந்தாலும், அச்சன்கோவில் சாஸ்தாவுக்கு முன் சிகிச்சையும் முக்தியும் உள்ளது. எந்த நேரத்திலும் விஷம் சாப்பிட வரும் எவருக்கும் கோயில் திறக்கும். அதனால்தான் இங்கே இரண்டு மேல்சாந்திகள் இருக்கிறார்கள்.
விஷம் சாப்பிட்டவர் நிற்கும் நேரத்தில், மேல்சாந்திகள் சாஸ்தாவின் வலது உள்ளங்கையில் வைத்திருந்த சந்தனத்தையும், வலது சங்கில் உள்ள புனித நீரையும் பரிமாறவும் காயத்தில் பூசவும் கொடுப்பார்கள். பின்னர், பஜனைகளைப் பாட வேண்டும். இந்த வழியில் சாஸ்தாவில் தஞ்சமடைந்து முக்தி அடைந்தவர்கள் பலர் உள்ளனர்.
இன்றும் கூட, இந்த நீர் மற்றும் சந்தனத்தின் பின்னால் உள்ள ரகசிய மூலப்பொருள் தெரியவில்லை. அச்சன்கோவிலில் உள்ள அசல் கோயில் மட்டுமே பரசுராமர் கோயிலில் உள்ளது. மலையாள ஆண்டு 1035 இல் ஏற்பட்ட தீ விபத்தில் கோயில் முற்றிலுமாக எரிந்தாலும், அசல் சிலை சேதமடையவில்லை. அச்சன்கோவிலில் உள்ள சாஸ்தரைப் பார்க்க பதினெட்டு படிகள் ஏற வேண்டும். தமிழ்நாட்டின் கட்டிடக்கலை நேர்த்தியையும் கோயில் கட்டுமான மாதிரியையும் அச்சன்கோவிலில் காணலாம். கோயில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு குழுவினரால் கட்டப்பட்டது.
அச்சன்கோவிலில் உள்ள சாஸ்தாவின் திருவாபரணத்தில் உள்ள தங்கவலுக்கும் ஒரு சிறந்த கதை சொல்ல வேண்டும். இந்த தங்கவல், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பஞ்சசாஸ்தா கோயில்களில் ஒன்றான காந்தமாலாவைச் சேர்ந்த ஒரு பழங்குடியினரால் அச்சன்கோவில் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இன்றும் கூட, இந்த வாளின் எடை துல்லியமாக அளவிடப்பட்டு பதிவு செய்யப்படவில்லை.
சாஸ்தாவின் தங்கவல் உட்பட திருவாபரணம் புனலூர் புதியடம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலின் பலகை அறையில் வைக்கப்பட்டுள்ளது. சாஸ்தா கோயிலில் திருவாபரணம் வைப்பதன் மூலம் தனு மாதத்தின் முதல் நாள் முதல் பத்தாம் நாள் வரை மண்டல பூஜை நடத்தப்படுகிறது.
அந்தக் காலகட்டத்தில், காந்தமாலாவில் சாஸ்தா வாளை ஏந்திச் செல்வதைக் காணும்போது, பஞ்சசாஸ்தா கோயில்களில் இரண்டு இடங்களில் அதைப் பார்க்கும் புண்ணியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கல்பாத்தி மற்றும் அச்சன்கோவிலில் மட்டுமே ரதோத்சவம் நடைபெறும். அச்சன்கோவிலில் நடைபெறும் ரதோத்சவ மஹோத்சவம் மிகவும் பிரபலமானது. மகரத்தின் ரேவதி நாளில் நடைபெறும் பிரதிஷ்டை நாளும் ஒரு முக்கிய கொண்டாட்டமாகும்.
விருச்சிக மாதத்தில் கார்த்திகை நாளில் நடைபெறும் சொக்கனேவெட்டு, மண்டல காலத்தில் 41 நாள் காளமெழுதும் பாட்டு என அச்சன்கோவிலில் பல விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் உள்ளன. இங்கு, கவினுக்கு அருகில் ஒரு சுயம்பு நாகம்பி சிலையையும் காணலாம்.
அச்சன்கோவிலில் சாஸ்தாவைப் பற்றி குறிப்பிடும்போது, அருகிலுள்ள கருப்ப சுவாமி கோயிலைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஐயப்ப பரிவாரங்களாக இருந்த கருப்ப சுவாமியும், அவரது மனைவி கருப்பாயி அம்மாவும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
சாஸ்தாவும் கருப்ப சுவாமியும் நேருக்கு நேர் அமர்ந்துள்ளனர். மகிஷியைக் கொன்ற பிறகு ஐயப்பனின் நண்பர் வாவர் சோர்வடைந்தபோது, அவர் ஓய்வெடுக்கப் போகிறார் என்றும், ஐயப்பனுக்கு உதவ சிவபெருமான் உக்ரமூர்த்தி வடிவில் கருப்ப சுவாமியாக அவதரித்தார் என்றும் நம்பப்படுகிறது. சாஸ்தாவுக்கு இதுபோன்ற பல துணை தெய்வங்கள் இங்கே உள்ளன.
பல நூற்றாண்டுகள் பழமையான இந்த சாஸ்தா கோயில் பக்தர்களிடம் ஏற்படுத்திய நம்பிக்கை ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜனநாயகத்தின் புதிய சகாப்தத்திலும் அச்சன்கோவில் நாட்டைக் காத்து வருகிறது
குருவாயூரப்பன் கோயிலில் இன்று மார்கழி முதல் புதன் கிழமையை யொட்டி குசேலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ணன், குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாளாதலால் அன்று பக்தர்கள், இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றை கொண்டு வந்து குருவாயூரப்பனை வணங்கி சிறப்பு வழிபாடு நடத்தினர்.இன்று கோயிலில் பக்தர்கள் படிக்கணக்கில் அவல் தானம் செய்துவருகின்றனர்.குருவாயூர் கிருஷ்ணனுக்கு சிறப்பு நிவேதனம் செய்து பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றன.
குசேலர், கிருஷ்ணனை தரிசிக்க ஆவலுடன் , அவல் கொண்டு சென்ற நாள் , மார்கழி மாதம் முதல் புதன் கிழமை. அதனால் , இன்றும் குருவாயூரி்ல் , மார்கழி முதல் புதன் கிழமையை , குசேலர் தினமாக கொண்டாடுகின்றனர். பக்தர்களும் , குருவாயூரப்பனுக்கு அவல் கொண்டு வந்து காணிக்கையாக தருவர். இதனால் தங்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணன் அருள் புரிந்து அவரவர் வீட்டுக்கு சுபிக்ஷம் வந்து சேரும் என்பது நம்பிக்கையாகும்
சாந்தீபனிமுனிவரின் ஆசிரமத்தில் நீங்கள் குரு குலவாசமிருந்த போது குசேலர் என்ற அந்தணரும் மிகுந்த பண்போடு இல்லறத்தைக் காத்துக்கொண்டே, பொருளின் மீது ஆசையில்லாமல் உமது அருளின் மீது மட்டும் நாட்டமுடையவராக இருந்தாரல்லவா?
(நம்பூதிரியின் இந்த வினாவுக்கு குருவாயூரப்பன் தலையாட்டி ஒப்பு தலைத் தெரிவித்தார்.
ஹே குருவாயூரப்பா, உமது அருளை வியந்து கொண்டே குசேலர் ரத்னமயமான மாளிகையில் வசிக்கத் தொடங்கினாலும், உன்னை என்றும் மறந்தாரில்லை. அவர் செல்வத்தில் பற்றில்லாமல் பக்தியின் பயனாக முக்தியடைந்தார். இவ்வாறு பக்தர்களின் கஷ்டத்தைப் போக்குவதில் வல்லவரான நீர், எனது துன்பத்தையும் போக்கி அருள வேண்டும். இந்த குசேல சரித்திரத்தை படித்தால் செல்வம் பெருகும்.
குசேலர் தின நாளான இன்று ஒரு கோவணம் அளவிற்கு ஒரு சிறிய சிவப்பு வஸ்திரத்தை மடித்து வைத்து , அதில் அவல், வெல்லம் வைத்து படைத்து, இந்த கதையைப் படித்து, பிறகு சிவப்பு வஸ்திரத்தை சிறிது சிறிதாக கிழித்து அந்த அவலையும் வெல்லத்தையும் அவற்றில் வைத்து (சிறிய மூட்டையைப் போல்) கட்டி அனைவருக்கும் விநியோகம் செய்தால் பக்தர்களுடைய விருப்பத்தை அந்த குருவாயூரப்பன் நிச்சயம் நிறைவேற்றுவான். அது சரி, அதென்ன சிவப்பு வஸ்திரம்? அதுவும் கண்ணனின் கௌபீனமா? இதைப்பற்றிய குருவாயூரப்பனின் லீலைகளில் ஒன்றான கதையை தெரிந்து கொள்வோமா?முன்னொரு சமயம் ஒரு வயதான மூதாட்டி இருந்தாள். அவள் குருவாயூர்க் கண்ணனின் தீவிர பக்தை. அவள்,ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் குருவாயூரப்பனின் ஸன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்து, மனமுருக வழிபடுவது வழக்கம்.
ஒரு நாள் “சீவேலி” தரிசனம் முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பெருங்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நாட்களில் சாலை விளக்குகள் கிடையாது. இருட்டில் வழி தவறிவிட்டது. மிகுந்த கவலையோடு, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தாள். அப்போது, ஒரு சிறிய பையன் அவள் முன் தோன்றி, “ பாட்டி, கவலைப் படாதீர்கள்,உங்களை நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்” என்று சொன்னான். மழையில் இருவரும் தெப்பமாக நனைந்து விட்டனர். பேசிக் கொண்டே பாட்டியின் வீட்டை அடைந்தார்கள். வீட்டை அடைந்ததும் அந்த சிறுவனுக்கு நன்றி சொல்லி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டாள். அதற்கு அவன் ‘கோபாலன்’ என்று சொன்னான்.
மூதாட்டி, “ நீ செய்திருக்கும் உதவிக்கு உனக்கு ஏதாவது நான் தர வேண்டும், என்ன வேண்டும்? கேள்” என்று சொன்னாள். அவனும், “ மழையில் என் துணி நனைந்துவிட்டது. எனக்கு உம்முடைய புடவையிலிருந்து ஒரு கௌபீனம் தாருங்கள் போதும்” என்று கூறினான். அவள் சுற்றிப் பார்த்த பொழுது ஒரு சிவப்புப் புடவை இருந்தது. அதிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கிழித்து அவனிடம் கொடுத்தாள். அவனும் பெற்றுக் கொண்டு சென்றான்.
அடுத்த நாள் காலை, நிர்மால்ய தரிசனத்திற்காக ஸன்னிதியின் கதவைத் திறந்தபோது, மூர்த்திக்கு சிவப்பு வர்ணக் கௌபீனம் கட்டியிருப்பதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். முதல் நாள் நன்கு அலங்காரம் செய்யப்பட்ட கண்ணன் இப்போது எப்படி கௌபீனத்தோடு காட்சி அளிக்கிறான்? என்று ஆச்சர்யமடைந்தனர். கண்ணனின் திவ்ய மேனி அனைவரையும் மயக்கும் வண்ணம் இருந்தது. வழக்கம்போல் தரிசனத்திற்காக வந்திருந்த மூதாட்டியும் மகிழ்ந்து அனைவரிடமும் முந்தைய நாள் நடந்தவற்றைச் சொன்னாள். தன்னுடைய சிறிது கிழிந்த புடவையையும் காண்பித்தாள்.
அதன் கிழிந்த பகுதி, குருவாயூரப்பனின் கௌபீனமாக இருப்பதைக் கண்ட அனைவரும் வியந்தனர். மூதாட்டி, இந்த தெய்வீக நாடகத்தையும், குருவாயூரப்பன் தனக்கு அனுக்ரஹம் செய்ததையும் எண்ணியெண்ணி ஆனந்தித்தாள். அன்று முதல் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இரவில் சிவப்புக் கௌபீனம் சாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இன்று குசேலர் தினத்தை ஒட்டி கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் கோவில்களிலும் தங்கள் வீடுகளிலும் அவல் நிவேத்திய பிரசாதம் செய்து அவல் பாயாசம் அவல் பொங்கல் செய்து பக்தர்களுக்கு வழங்கி வழிபாடுகள் நடத்தினர்.
அம்பலப்புலா ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் ஆரண்மூழா பார்த்தசாரதி கோவில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமி கோவில் உள்ள கிறிஸ்னசுவாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் இன்று குசேலர் தின சிறப்பு வழிபாடு சிறப்பு நிவேதிய பிரசாதமும் செய்து படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது
சென்னை விமான நிலையம் அருகில் ஹஜ் விடுதி அமைத்து தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் தமிழக அரசை கண்டிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் இதனை அறிவித்தபோதே இந்து முன்னணி சார்பில் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டோம்.
2012 ஆண்டு செப்டம்பர் 15 முதல் 18 வரை சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையை இஸ்லாமிய அமைப்புகள் ஸ்தம்பிக்க வைத்தன. தடை செய்யப்பட்ட அமெரிக்க சினிமாவை கண்டிப்பதாக இந்த ஆபத்தான செயல் அரங்கேற்றப்பட்டதை நினைவு கூர்கிறோம்.
சென்னை – சூளை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஹஜ் இல்லம் கட்டப்பட்டது. அதிலிருந்து அந்த சாலை வழியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சாமி ஊர்வலம் தடுக்கப்படுகிறது.
தற்போது ஹஜ் விடுதி கட்டப்படும் இடமானது பிற்பட்ட சமூக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட அரசின் இடம். இந்த இடத்தில் பிற்பட்டோர் சமூக மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்ளலாம். இந்துக்களுக்காக இருந்த இடத்தை முஸ்லிம்களுக்கு வாரித்தருவது கண்டிக்கத்தக்கது.
மேலும் ஹஜ் விடுதி என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. முஸ்லிம் குழுக்களின் நிர்வாகத்தில் பெரும்பாலும் இருக்கிறது. இந்த இடத்தில் பல மர்ம நபர்கள் மற்றும் தேச விரோத சதிகள் நடக்க ஏதுவாக அமைந்த உதாரணங்கள் உள்ளது என்பதை எச்சரிக்கிறோம்.
சர்வதேச, உள்நாட்டு சென்னை விமான நிலையம், தென் தமிழகத்திற்கு செல்வதற்கான சாலை மார்க்கம், ரயில் தடம் மற்றும் உள்ளூர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் என இவை அனைத்தும் உள்ளது இப்பகுதி.
இவை தவிர இராணுவ மையம் மற்றும் முக்கிய அலுவலகங்கள் இங்கு தான் உள்ளன.
இத்தகைய பாதுகாப்பான, முக்கியமான இடத்தில் ஹஜ் விடுதி அமைப்பது, நாளை இஸ்லாமிய அமைப்புகள் நினைத்தால் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் சீர்குலைத்து விடும் அபாயம் உள்ளதை உளவுத்துறை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் அண்ணா சாலையில் செய்ததுபோல ஸ்தம்பிக்க வைக்கும் அச்சுறுத்தல் உள்ளது.
இதனையெல்லாம் புறந்தள்ளி இஸ்லாமிய அமைப்புகளின் சதிக்கு தமிழக முதல்வர் உடந்தையாக செயல்படுகிறாரா என்ற சந்தேகம் வருகிறது. திமுகவிற்கு சிறுபான்மையினர் ஓட்டு வங்கி தான் கண்களுக்கு தெரிகிறது. அதன் காரணமாக தான் கோவை கோட்டை மேடு ஈஸ்வரன் கோவில் அருகில் நடந்த தற்கொலை கார் குண்டு வெடிப்பை சிலிண்டர் விபத்து என திசைத்திருப்ப முதலில் முனைந்தது என்பதை மக்கள் மறக்க வேண்டாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, தமிழகத்தின் நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 50 கி.மீ.க்கும் ஒரு மசூதி மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய விளம்பரம் செய்து இருந்தது. இத்தகைய நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் ஏற்படும் அபாயத்தை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் நீதிமன்ற தீர்ப்பை, சட்டத்தை, புலனாய்வு அதிகாரிகள் குறிப்பை ஏற்க மறுத்து சர்வாதிகாரியாக செயல்படுவது பகிரங்கமாக தெரிகிறது. அதற்கு உதாரணம் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற மறுத்த காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடு ஆகும்.
நங்கநல்லூர் ஹஜ் விடுதி தேசத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஆகும்.
எனவே நங்கநல்லூரில் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டிய ஹஜ் விடுதி அமைவதற்கு இராணுவ அமைச்சகம், தேசிய புலனாய்வு அமைப்பு, விமான போக்குவரத்து ஆணையம், இரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆகியன ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும்.
இதனை தடுத்து நிறுத்த சட்டரீதியிலான முயற்சிகளை இந்து முன்னணி முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்தகைய ஆபத்துகளை தாண்டி தமிழக முதல்வருக்கு 2026 தேர்தல் தான் கண்களுக்கு தெரியும் என்பது தமிழகத்தின் துரதிர்ஷ்டமாகும்.
எனவே மிக அமைதியாக வாழும் நங்கநல்லூர், வேளச்சேரி, பழவந்தாங்கல், ஆதம்பாக்கம் உட்பட அப்பகுதி மக்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்பட இருக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலை மனதில் கொண்டு ஹஜ் விடுதி திட்டத்தை தமிழக அரசு கைவிட ஓங்கி குரல் கொடுத்து எதிர்ப்பு தெரிவிக்க முன்வருமாறு இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்
பாரதிய ஜனதா கட்சியின் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மாநாடு & தேர்தல் பயிலரங்கம் தரகம்பட்டி ஶ்ரீ செந்தில்முருகன் மஹாலில் நடைபெற்றது.
பா.ஜ.க கரூர் மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளரும் பா.ஜ.க கரூர் மாவட்ட செயலாளருமான காவேரி மோகன்ராஜ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக நாமக்கல் கரூர் க்ளெஸ்ட்டர் இணை பொறுப்பாளரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவருமான N.P.சத்தியமூர்த்தி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் பொறுப்பாளரும் பா.ஜ.க கரூர் மாவட்ட துணை தலைவருமான P.R.ஆறுமுகம், சட்டமன்ற பொறுப்பாளர் N.முருகானந்தம் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மண்டல் தலைவர்கள் ஸ்ரீவிகான் ரமேஷ், கோபிநாத், சுரேஷ், பாலுச்சாமி, சிந்தியா, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசுகையில் “கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் யாரை தேசிய ஜனநாயக கூட்டணி கை காட்டுகிறதோ அவரை வெற்றிபெற செய்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க செய்யும் செயலை 100% பாரதிய ஜனதா கட்சி செய்யும்.
மேலும் கிராமப் பகுதிகள் நிறைந்த இந்த தொகுதியில் அதிக அளவில் கஞ்சா/போதை உண்டாக்கும் பொருட்கள் விற்பனை தாராளமாக நடக்கிறது இது இளைய சமுதாயத்தினை பெரிதும் பாதிக்கிறது,
அரசு ஊழியர்கள் பலர் பொதுமக்களிடம் கையூட்டு பெற்று கைதாவது அடிக்கடி நடக்கிறது இவைகள் இனிவரும் காலங்களில் நடக்காமல் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் தவறினால் பாரதிய ஜனதா கட்சி மக்களுக்காக போராடும் என்று சூளுரைத்தார்.
மாவட்ட செயலாளர் காவேரி மோகன்ராஜ் பேசுகையில், இந்த சிறப்பு வாய்ந்த தொகுதி நிர்வாகிகள் மாநாட்டில் மாவட்ட தலைவர் அவர்கள் கூறியது போல் தொகுதியில் உள்ள 260 கிளைகளையும் வலுப்படுத்தி அனைவரும் இணைந்து இந்த தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியினை மாவட்ட தலைவர் கையில் கொடுக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும், அடுத்த 4 மாதங்கள் சட்டமன்றத்தில் உள்ள நம் அனைவரும் ஊழலில் ஊறிய இந்த திராவிட மாடல் ஆட்சியினை ஒழித்து பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் நல்லாட்சி தமிழகத்தில் மலர களப்பணி ஆற்ற வேண்டும் என்று கூறினார்.
மாநாட்டில் 1)பொண்ணனை ஏரி சிறப்பு திட்டத்தினை உடனடியாக வகுத்து அதனை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் 2)தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்காகவும்-இந்த போலி சமூக நீதி / திராவிட மாடல் அரசின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தமிழகத்தினை மீட்க கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் – என்ற இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நடந்து முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் தங்களது கிளைகளில் 100 வாக்குகளுக்கு மேல் பெற்றுக்கொடுத்த கிளை தலைவர்கள் அந்தந்த கிளைகளின் மண்டல் தலைவர்கள் மற்றும் கிருஷ்ணராயபுரம் பார் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்றுள்ள வழக்கறிஞர் வடிவேல் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நன்றி கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற தொகுதிக்குற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மாணிக்கம்மாள், கற்பக வள்ளி, முருகானந்தம், ரெங்கநாதன், யுவராஜ், இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜதுரை, மாவட்ட இளைஞரணி துணை தலைவர் குமரேசன் விவசாய அணி மாவட்ட துணை தலைவர்கள் கலா மணி வேல்முருகன், செந்தில்குமார், மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், அணி பிரிவு மாவட்ட நிர்வாகிகள், கிளை தலைவர்கள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், BLA-2 பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி 41வது நாள் மண்டல பூஜை நிறைவு வழிபாடு நடைபெற உள்ள நிலையில் சுவாமி ஐயப்பனுக்கு அன்று அறிவிக்கப்படும் தங்க அங்கி டிசம்பர் 23 ஆம் தேதி ஆரண்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து சபரிமலை போல் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் தங்க அங்கி ஊர்வலம் புறப்படும்.
27 ஆம் தேதி மண்டல பூஜைக்காக 26 ஆம் தேதி சபரிமலையை அடையும். அன்று மாலை தீபாராதனையின் போது சுவாமிக்கு தங்கி அணிவிக்கப்பட்டு பூஜை வழிபாடு நடைபெறும். 27ஆம் தேதி மண்டல பூஜையின் போதும் சுவாமிக்கு இந்த தங்கி அணிவித்து பூஜை வழிபாடு நடைபெறும்.
மண்டல பூஜைக்காக சபரிமலையில் ஐயப்பனுக்கு வழங்கப்பட வேண்டிய தங்க அங்கியை சுமந்து செல்லும் ரத ஊர்வலம் டிசம்பர் 23 ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்படும்.
டிசம்பர் 26 ஆம் தேதி மாலை தீபாராதனைக்கு முன் சபரிமலை சன்னிதானத்தை அடையும். டிசம்பர் 23 ஆம் தேதி காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை ஆரன்முலா கோயில் முற்றத்தில் தங்க அங்கியைக் காண பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மண்டல பூஜைக்காக ஐயப்பனுக்கு அர்ப்பணிப்பதற்காக தங்க அங்கியை 421 பவுன் எடையில் திருவிதாங்கூர் மகாராஜா ஐயப்பனுக்கு வழங்கினார்.
தங்க அங்கி:
டிசம்பர் 23: ஆரன்முலா பார்த்தசாரதி கோயில் (தொடங்குகிறது) காலை 7 மணிக்கு. மூர்த்தித்த கணபதி கோயில் காலை 7.15 மணிக்கு. காலை 7.30 மணி புன்னம்தோட்டம் தேவி கோவில். காலை 7.45 சவுட்டுக்குளம் மகாதேவர் கோவில். காலை 8 மணி திருவஞ்சம்காவு தேவி கோவில். காலை 8.30 மணி நெடும்பிராயர் தேவலச்சேரி தேவி கோவில். காலை 9.30 நெடும்பிராயர் சந்திப்பு.
காலை 10 மணி கோழஞ்சேரி டவுன். காலை 10.10 மணி கோழஞ்சேரி ஸ்ரீ முருக காந்தி மண்டபம், 10.20 மணி திருவாபரணம்பாத ஐயப்ப மண்டபம் கல்லூரி சந்திப்பு. காலை 10.30 மணி கோழஞ்சேரி பாம்படிமோன் ஐயப்பன் கோவில். காலை 11 மணி கரம்வெளி. காலை 11.15 இளந்தூர் எடத்தாவளம். காலை 11.20 இளந்தூர் ஸ்ரீ பகவதிக்குன்னு தேவி கோவில்.
காலை 11.30 இளந்தூர் கணபதி கோவில். காலை 11.45 இலந்தூர் காலனி சந்திப்பு. மதியம் 12.30 இலந்தூர் நாராயணமங்கலம். மதியம் 2 மணி ஆயத்தில் மலைநாடா சந்திப்பு. மதியம் 2.30 மணிக்கு ஆயத்தில் குடும்ப யோகா மந்திர். பிற்பகல் 2.40 ஆயத்தில் குருமந்திர சந்திப்பு. பிற்பகல் 2.50 மெழுவேலி ஆனந்தபூதேஸ்வரம் ஆலயம்.
மாலை 3.15 இலவும்திட்டா தேவி கோவில். மாலை 3.45 இலவும்திட்டா மலநாடா. மாலை 4.30 மணி முட்டத்துகோணம் எஸ்என்டிபி மன்றம். மாலை 5.30 மணி கைதவன தேவி கோவில். மாலை 6 மணி பிரக்காணம் எடநாடு பகவதி கோவில். மாலை 6.30 மணி செக்கனல். இரவு 7 மணி ஒப்பமன் சந்திப்பு. இரவு 8 மணி ஓமல்லூர் ஸ்ரீ ரக்தகண்டசுவாமி கோவில் (இரவு ஓய்வு).
டிசம்பர் 24ம் தேதி ஓமல்லூர் ஸ்ரீ ரக்தகண்ட சுவாமி கோவில் (தொடக்கம்) காலை 8 மணிக்கு. காலை 9 மணிக்கு கொடுந்தறை சுப்ரமணிய சுவாமி கோவில். காலை 10 மணிக்கு ஆழூர் சந்திப்பு. காலை 10.45 மணிக்கு பத்தனம்திட்டா ஊரம்மன் கோவில். காலை 11 மணிக்கு பத்தனம்திட்டா சாஸ்தக்ஷேத்திரம். காலை 11.30 மணிக்கு கரிம்பனக்கல் தேவி கோவில்.
12 மணிக்கு சாரதாமடம் முண்டுகோட்டக்கல் எஸ்என்டிபி மந்திர்.பிற்பகல் 1 மணிக்கு விஎஸ்எஸ் எண் 78 கிளை கடம்மனிட்டா. கடம்மணித்த பகவதி கோவில் மதியம் 1 மணிக்கு (மதிய உணவு, ஓய்வு). பிற்பகல் 2.15 மணிக்கு கடம்மனிட்டா ரிஷிகேஷ் கோயில். மதியம் 2.30 மணிக்கு கொட்டப்பாறை கல்லெலிமுக்கு. மதியம் 2.45 மணிக்கு பேழும்காடு எஸ்என்டிபி மன்றம். 3.15 மணிக்கு மேக்கொழூர் கோவில்.
மைலப்பிர பகவதி கோவில் 3.45. 4.15 மணிக்கு கும்பழா சந்திப்பு. 4.30 மணிக்கு பாலமட்டூர் அம்பலமூக்கு. 4.45 மணிக்கு புலிமூக்கு. வெட்டூர் ஸ்ரீ மகாவிஷ்ணு கோயில் கோபுரப்பட்டி 5.30. இளகொல்லூர் மகாதேவர் கோவில் 6.15. 7.15 மணிக்கு சித்தூர் முக்கு. 7.45க்கு கொன்னி டவுன். கொன்னி சிறக்கால் கோயில் 8. கொன்னி முரிங்கமங்கலம் கோயில் 8.30 (இரவு உணவு, ஓய்வு).
டிசம்பர் 25ம் தேதி கொன்னி முரிங்கமங்கலம் கோயில் காலை 7.30 மணிக்கு (தொடக்கம்). சித்தூர் மகாதேவர் கோவில் 8. அட்டகாசம் 8.30. வெட்டூர் கோயில் காலை 9. 10.30 மணிக்கு மயிலாடும்பாறை, 11 மணிக்கு கோட்டமூக்கு. மலையாலப்புழா கோயிலுக்கு காலை 12 மணி.
மாலை 1 மணிக்கு மலையாளப்புழா தாழம். 1.15 மணி முதல் மன்னார்குளஞ்சி. தொட்டமொங்காவு கோயிலுக்கு அதிகாலை 3 மணி. 3.30 மணி ரன்னி ராமாபுரம் கோயிலுக்கு (உணவு, ஓய்வு). காலை 5.30 மணி எடக்குளம் சாஸ்தக்ஷேத்திரம். காலை 6.30 மணிக்கு வடசேரிக்கரை செருகாவு. மாலை 7 மணி வடசேரிக்கரை பிரயார் மகாவிஷ்ணு கோவில். மாலை 7.45 மணிக்கு மாடம்மன் கோயிலுக்கு. இரவு 8.30 மணிக்கு பெருநாடு சாஸ்தா கோயிலுக்கு (இரவு உணவு, ஓய்வு).
டிசம்பர் 26 ஆம் தேதி காலை 8 மணிக்கு பெருநாடு சாஸ்தா கோயிலுக்கு (தொடக்கம்). காலை 9 மணிக்கு லஹா சத்திரத்திற்கு. காலை 10 மணிக்கு பிளாப்பள்ளிக்கு. காலை 11 மணிக்கு நிலக்கல் கோயிலுக்கு. மதியம் 1 மணிக்கு சாலக்காயம். மதியம் 1.30 மணிக்கு பம்பா (ஓய்வு). பிற்பகல் 3 மணிக்கு பம்பாவிலிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு சரம்குத்தியை அடைவோம்.
இங்கிருந்து, சடங்குகளுடன் வரவேற்கப்பட்டு, சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்லப்படுவோம். 18வது படியில் ஏறி சோபனத்தை அடையும் போது, தந்திரியும் மேல்சாந்தியும் எங்களை வரவேற்று ஐயப்பன் சிலைக்கு தங்க அங்கி வைப்பார்கள். மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
27 ஆம் தேதி நண்பகல் 1 மணிக்கு மண்டல பூஜையில் தங்க அங்கி சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்து மண்டல அபிஷேக நிறைவு பூஜை வழிபாடு விமர்சையாக நடைபெறும் அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.