இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்
சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்
சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
விக்கிரமங்கலம் அருகே வடகாடுபட்டியில் கஞ்சா போதையில் இளைஞர்கள் பெண்ணை தாக்கும் வீடியோ வைரல் ஆனது.
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே வடகாடு பட்டியில், மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக கிடைப்பதால் அதனை அருந்தும் இளைஞர்கள் அந்தப் பகுதியில் வருவோர் போவோரை கத்தி கட்டை கம்பியால் தாக்கி வருகின்றனர். மேலும், தகாத வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனராம்.
தடை செய்யப்பட்ட கஞ்சா, போதை பொருட்கள் சில இளைஞர்கள் மூலமாக அனைவருக்கும் சர்வசாதார்ணமாக கிடைத்து வருகின்றது. இதனால், அப்பகுதி இளைஞர்கள் சீர்கெட்டு வருகின்றனர். இதனால், காடுப்பட்டி, விக்கிரமங்கலம் மக்கள் எப்போதும் பீதியில் இருந்து வருகின்றனராம்.
இது போன்ற சம்பவங்கள் நீடித்தால், பல இளைஞர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகவும், உயிர் பலிகள் கூட ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக அப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும், போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை செய்து, விக்கிரமங்கலம் காடுபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா போதை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.
நேற்று இரவு போதையில் இளைஞர்கள் பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது. தாக்குதலுக்கு ஆளான பெண் படுகாயத்துடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே மாவட்ட எஸ்பி தீவிர விசாரணையில் ஈடுபட்டு போதை வஸ்துகளை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, இப்பகுதி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
மஹாராஷ்டிராவில் அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒரு எதிர்கட்சி தலைவரே ஆளும் பாஜ, வில் இணைந்து துணை முதல்வர் பதவியை பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 30 எம்எல்ஏ.,க்கள் அரசுக்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை அஜித் பவார் ஆளுநரிடம் வழங்கினார். 9 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதை அடுத்து, மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உள்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். துணை முதல்வர் பதவியை பாஜக.,வின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் அஜித் பவார் பகிர்ந்து கொள்கிறார்.
முன்னதாக, அண்மையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேலை அக்கட்சித் தலைவர் சரத்பவார் அறிவித்தார். அப்போது அஜித் பவாருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இதனால் அஜித்பவார் அதிருப்தியில் இருந்து வந்தார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் தீவிரமாக நடந்து வந்தது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார், தனது ஆதரவு 26 எம்எல்ஏ.,க்களுடன் ஆளும் பாஜக., கூட்டணியில் இணைந்தார். தனது ஆதரவு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அஜித்பவார் ஆளுநரை சந்தித்தார்.
ஆளுநர் மாளிகையில் அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார். தொடர்ந்து அவரது ஆதரவு 8 எம்எல்ஏக்களும் அமைச்சராக பதவியேற்றனர். அதிதி தட்கரே, சகன் புஜ்பால், தனஞ்செய் முன்டே, திலீல் வால்சே பாட்டீல், அனில் பாட்டீல் உள்ளிட்டவர்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அஜித் பவாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்ற உறுதியான தகவல் இல்லை. 40 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சியில், மொத்தம் 53 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
அஜித் பவார் துணை முதல்வராகப் பதவி ஏற்பது இது 3 வது முறை. முன்னதாக, கடந்த 2019 ம் ஆண்டு பாஜ,வின் பட்னாவிசுடன் இணைந்து அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து 8 மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்த அவர், மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே இணைந்தார். பிறகு, உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்த போதும், அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
எவ்வித முன் அறிவிப்புமின்றி, திடீரென நிகழ்ந்த இந்த அரசியல் மாற்றம் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் பவாரின் இந்த முடிவுக்குக் காரணமாக அண்மையில் நடந்த பீகார் கூட்டத்தைக் கை காட்டுகின்றனர்.
அண்மையில் பீகாரில் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்து மேடையை பகிர்ந்து கொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் முடிவு குறித்து பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். அஜித் பவாருடன் ராஜ்பவனுக்கு வந்த எம்எல்ஏ.,க்கள் இந்த அதிருப்தியை வெளியிட்டதாகத் தெரிகிறது. சரத் பவாரின் இந்த நடவடிக்கை ஒருதலைப்பட்சமாக பார்க்கப்பட்டு அக்கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தியின் தலைமைப் பிரச்னை, கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியது. சரத் பவார் போன்ற மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியின் தலைமையில் பணியாற்றத் தயாராக இருப்பதை அஜித் பவார் மற்றும் சகன் புஜ்பால் உள்ளிட்ட தலைவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையாம்.
பாட்னாவில் ராகுல் காந்தியுடன் சரத் பவார் இருந்தது, அஜித் பவாருக்கு தனது கட்சி சகாக்களைப் பிரிந்து செல்லும்படி செய்ய ஒரு வாய்ப்பை வழங்கியது. 54 என்சிபி எம்எல்ஏ.,க்களில் கணிசமான பெரும்பான்மையான 40 பேர் இப்போது அஜித் பவாரின் முடிவை ஆதரிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல்: வார விடுமுறையை யொட்டி கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். இதனால் 5 கி.மீ. தூரத்துக்கு மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வார விடுமுறையை யொட்டி, கொடைக்கானலுக்கு நேற்று அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் படையெடுத்தனர்.
ஒரே நேரத்தில் அதிக அளவில் வாகனங்கள் வந்ததால் வெள்ளி நீர்வீழ்ச்சி, செண்பகனூர், சீனிவாசபுரம், உகார்த்தே நகர், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், வாகனங்கள் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. கொடைக்கானல் மலையில், விடுமுறை வந்தால் பயணிகள் படையெடுப்பு வழக்கமாக உள்ளது.
மேலும், சுற்றுலா தலமாக இருப்பதாலும், சீதோஷ்ண நிலை குளிராக காணப்படுவதாலும் கோடைக்காலங்களில் பயணிகள் இங்கு குவியத் தொடங்கியுள்ளனர்!
மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள பேரையூரைச் சேர்ந்த போஸ் என்பவரின் மகன் செல்வராஜ் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பேரையூர் மங்கல்ரேவ் விளக்கிலிருந்து அவரது ஆம்னி வாகனத்தில் மாட்டுத்தாவணி நோக்கி மீன் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது , செல்வராஜ் தன் ஆம்னி வாகனத்தின் கேஸ் இல்லாததால் பசுமலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் கேஸ் நிரப்புவதற்காக வந்துள்ளார்.
கேஸ் நிரப்பிய பின்னர் ஆம்னி நான்கு சக்கர வாகனம் இயங்காததால், தனது ஆம்னி காரில் சிறிது பெட்ரோல் நிரப்பினால் இயங்கும் என, அறிந்த செல்வராஜ் பெட்ரோல் நிரப்பும் இடத்திற்கு ஆம்னி காரை தள்ளிக் கொண்டு வந்துள்ளார்.
அப்போது, திடீரென ஆம்னி காரின் அடியிலிருந்து தீ பிடிக்க தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜ் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள், உடனடியாக தீயை அணைக்க முயற்சி ஈடுபட்டனர்.
ஆனால், தீயானது கார் முழுவதுமாக பரவத் தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உடனடியாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு துறையினருக்கு மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த, திருப்பரங்குன்றம் தீயணைப்பு துறையினர் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் ஆன துரிதமாக செயல்பட்டு தீயை முழுவதுமாக அணைத்தனர். இதனால் , மிகப்பெரிய பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப் பட்டது.
இச்சம்பவம் குறித்து, திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில்.
இன்று ஆனி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர். அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்தனர். வழக்கமாக காலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப் படுவார்கள்.
இன்று காலை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், அதிகாலையில் சூரிய வெளிச்சம் நன்றாக இருந்ததாலும், காலை 6 மணியிலிருந்தே பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இன்று சனி கிழமை வளர்பிறை பிரதோஷம் என்பதால், சதுரகிரிமலையில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.
பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமி மற்றும் சந்தனமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரமகாலிங்கம் சுவாமியை ஏராளமான பக்தர்கள் கண்குளிர தரிசனம் செய்தனர்.
சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடப் போவதாகவும், இந்த ப்ரைம் பேண்ட் அலைவரிசையில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளை எல்லாம் இனி சென்னை பண்பலை அலைவரிசைக்கு மாற்ற உள்ளதாகவும், சென்னை பண்பலை ரெயின்போ அலைவரிசை நிகழ்ச்சிகளை முற்றிலும் நிறுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது. இது வானொலி நேயர்கள் மட்டுமல்லாது சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது; நிகழ்ச்சிகளின் தரத்தை கூட்ட வேண்டும் என்று பாமக., தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்திந்திய வானொலி- கொல்கத்தா வானொலியில் முதன்மை அலைவரிசை ஜூன் 30-ஆம் நாள் நள்ளிரவுடன் மூடப்பட்டிருக்கிறது. கொல்கத்தா முதன்மை அலைவரிசையில் இதுவரை ஒலிபரப்பப்பட்டுவந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரெயின்போ பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்படும் என்றும், ரெயின்போ பண்பலைவரிசை இனி செயல்படாது என்றும், அதில் மணிக்கு ஒருமுறை ஒலிபரப்பப்பட்டு வந்த செய்திகள் இனி ஒலிபரப்பாகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் மேற்கு வங்க வானொலி நேயர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இதைவிட அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால், சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசை சேவை எந்த நேரமும் நிறுத்தப்படக்கூடும்; அதில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் ரெயின்போ பண்பலையில் ஒலிபரப்படும்; பண்பலை நிகழ்ச்சிகள் இனி ஒலிபரப்பாகாது என்பது தான்.
சென்னை-ஏ என்றழைக்கப்படும் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டால், அது சென்னை வானொலி நிலைய நேயர்களுக்கு பேரிழப்பாக அமைந்து விடும். தனித்துவமான அதன் நிகழ்ச்சிகளைக் கேட்பதற்காக லட்சக்கணக்கான நேயர்கள் உள்ளனர். தமிழ்ப் பண்பாடு, கலைகள் ஆகியவற்றின் தூதராகவும் இந்த அலைவரிசை திகழ்கிறது.
இதுவரை 300 கி.மீ சுற்றளவில் கேட்கப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சிகளை ரெயின்போ பண்பலையில் ஒலிபரப்பும் போது, அதிகபட்சமாக 50 கி.மீ சுற்றளவில் உள்ளவர்கள் மட்டும்தான் கேட்க முடியும். இதனால் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்து விடும்.
சென்னை வானொலியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை-ஏ, சென்னை-பி, விவிதபாரதி வர்த்தக ஒலிபரப்பு, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சிற்றலை ஒலிபரப்பு, ரெயின்போ பண்பலை, கோல்டு பண்பலை ஆகிய 6 அலைவரிசைகள் ஒலிபரப்பாகி வந்தன. இவற்றில் சிற்றலை ஒலிபரப்பும், சென்னை-பி அலைவரிசையும் கடந்த இரு ஆண்டுகளில் மூடப்பட்டு விட்டன. சென்னை-ஏ அலைவரிசை கடந்த ஆண்டு ஜனவரி 31-ஆம் நாளுடன் மூடப்படவிருந்தது. ஆனால், அப்போதே நாம் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இப்போது சென்னை ஏ அலைவரிசையை மூட மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. அவ்வாறு மூடப்பட்டால் நேயர்களுக்கு தரமான நிகழ்ச்சிகள் கிடைக்காது என்பது ஒருபுறமிருக்க, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், பொறியாளர்கள் என ஏராளமானோர் வேலையிழப்பார்கள். அது தவிர்க்கப்பட வேண்டும்.
பிரசார்பாரதியின் செலவுகளைக் குறைப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. பிரசார்பாரதியின் தலைமைப் பொறுப்பில் வானொலி, தொலைக்காட்சி குறித்த அனுபவம் இல்லாத இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்படுவது தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். வருவாயை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே எந்த நிறுவனத்தையும் இலாபத்தில் இயக்க முடியுமே தவிர, செலவுகளை குறைப்பதால் அல்ல என்பதை பிரசார்பாரதி நிர்வாகம் உணர வேண்டும். நிகழ்ச்சிகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்தி வானொலிகளின் வருவாயை அதிகரிக்கச் செய்ய வேண்டும். சென்னை – ஏ அலைவரிசை உள்ளிட்ட அகில இந்திய வானொலியின் எந்த அலைவரிசையையும் மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்… என்ற கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.
உண்மையில் சென்னை வானொலி நிலையத்துக்கு என ஒரு பெரிய பாரம்பரியமும் வரலாறும் இருக்கிறது. உலகில் உள்ள பழம்பெரும் வானொலி நிலையங்களில் சென்னை வானொலி நிலையமும் ஒன்று. இது இன்னும் சில ஆண்டுகளில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. கடந்த 1924-ம் ஆண்டு எழும்பூர் ஹாலோவே கார்டனில், மெடராஸ் பிரெசிடென்சி ரேடியோ கிளப் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போது இந்த அமைப்புக்குத் தலைவராக இருந்தவர் சி. வி. கிருஷ்ணசுவாமி செட்டி 40 வாட ஒலிபரப்பு திறனுள்ள ஒரு கருவி மூலம் வானொலி ஒலிபரப்பு ஆரம்பமானது. பின்னாளில் இது 200 வாட திறனுள்ள ஒரு ஒலிபரப்புக் கருவி மூலம் செயல்படத் தொடங்கியது பிற்காலங்களில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, இந்த அமைப்பு மூடப்பட்டது. மேலும், அந்த வானொலி ஒலிபரப்புக் கருவியையும் சென்னை மாநகராட்சிக்குக் கொடுத்துவிட்டார்கள்.
1930-ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது. அந்தக் காலங்களில் வானொலி கேட்பதற்கு பொது இடங்களில் ரேடியோ பொருத்தப்பட்டிருக்கும் அதைக் கேடக மக்கள் குடியிருப்பார்கள், கூடியிருப்பார்கள்.
இறுதியில் இந்த சேவையானது 1938ல் அனைத்திந்திய வானொலி நிலையத்தால் ஏற்று நடத்தப் பட்டது. எழும்பூர் மார்ஷல் தெருவில அமைந்திருந்த வானொலி நிலையத்தின் முதல் இயக்குநராக விக்டர் பரஞ்சோதி நியமிக்கப்பட்டார சென்னை வானொலி சென்னை ஒன்று மற்றும் சென்னை இரண்டு என்ற இரண்டு அலைவரிசையில் இயக்கப்பட்டது. கடைசியாக 1954-ம் ஆண்டு தற்போதுள்ள காமராஜர் சாலைக்கு மாற்றப்பட்டது. அப்படிப் பார்க்கும் போது, தற்போதுள்ள வானொலி அலுவலகத்துக்கு வயது 70.
இப்படிப்பட்ட பழமையும் பெருமையும் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருக்கும் சென்னை அகில இந்திய வானொலி, ஆறு அலைவரிசைகளுடன் மிகப் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சென்னை ரெயின்போ மற்றும் கோல்டு பண்பலை அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கேட்பதற்கென்றே நேயர் வட்டம் தனியாக உள்ளது. அதுபோல் சென்னை ஏ பிரதான அலைவரிசை நிகழ்ச்சிகளை கேட்பதற்கும் சென்னையை விட்டு வெளியில் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக அளவிலான நேயர்கள் உள்ளனர்.
ஏற்கனவே சென்னை பி, சிற்றலை வரிசைகளில் ஒலிபரப்பை நிறுத்திவிட்ட சூழலில் சென்னை பிரதான அலைவரிசையும் கைவைக்கப்படுவது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தவிர்க்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்நிலையில் செலவைக் குறைப்பது மற்றும் வருவாயை பெருக்குவது என்பது குறித்து வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் கூறிய போது… வானொலி நிகழ்ச்சிகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்த வேண்டும் என்று சொல்லும் போது, அங்கு தான் பிரச்னை வருகிறது. ஏனென்றால் இப்பொழுது வானொலி இயங்குவது நிகழ்ச்சிக்காக என்பதை விட அங்கு 400 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கிற பொறியாளர்களுக்காகத்தான் என்பதே கசப்பான உண்மை. நிகழ்ச்சி தயாரிப்புத் துறையில் இருக்க வேண்டிய பணியாளர்களில் வெறும் 20% பேர்தான் தற்போது தயாரிப்புத் துறையில் இருக்கிறார்கள். அதுவும் பணி ஓய்வு பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இசைத் துறையிலோ கேட்கவே வேண்டாம். வெகு சொற்பம். முன்பு இருந்ததில் 10 சதவிகிதம் பேர் இப்போது இருந்தாலே அதிகம். இதில் வானொலி அலைவரிசை தொடர்ந்து நடத்தப்பட்டால் பயன் பெறுவது 400 சதவீதத்திற்கும் மேல் அதிகமாக உள்ள பொறியாளர்கள் தான். சொல்லப்போனால் பல நிகழ்ச்சிப் பொறுப்பு இடங்களையும், ஒரு சில நிர்வாக இடங்களையும்கூட அவர்கள் தான் மேற்பார்வை இட்டுக் கொண்டிருக்கிறார்கள்ம் இவ்வாறு அதிக அளவில் இருப்பதால்! நிகழ்ச்சித் தயாரிப்பில் கூடுதல் பணியாளர்கள், தயாரிப்பில் கவனம், அதற்கான செலவுகளைக் கொடுத்து, விளம்பர வருவாயைப் பெருக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். முன்பு போல் இப்போது நிகழ்ச்சித் தயாரிப்பு அதிகளவில் இல்லை என்றால் காரணம் அதுதான்… என்றார் வருத்தத்துடன்!
சொல்லப்போனால் இப்போது சீன வானொலி மூலமாக தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது எனலாம். தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள சீன தமிழ் வானொலிக்கு நெடுங்காலமாகவே இங்கே நேயர்களை திரட்டி ஆதரவாளர்களாக மாற்றி வைத்துள்ளார்கள். இது காஷ்மீர் மற்றும் நேபாளம் சீனாவை ஒட்டிய வடக்கு மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பிரச்சனையாகவே உருவெடுத்துள்ளது. தமிழகத்தையும் தமிழ் நேயர்களையும் குறி வைத்துதான் இலங்கை வானொலியை தூசு தட்டும் வேலையில் சீனா ஈடுபட்டது என்பது ஒரு குற்றச்சாட்டு. இத்தகைய பின்னணியில் தமிழ் ஒளிபரப்பான சென்னை வானொலியின் பிரதான ஒலிபரப்பை, அதாவது 300 கிலோ மீட்டர் எல்லைக்கும் அதிக அளவிலான பரப்பளவில் உள்ள ஒலிபரப்பைக் கைவிடுதல் என்பது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருத இடம் உள்ளது. இதை மத்திய அரசின் ஒலிபரப்புத் துறை கவனத்தில் வைத்து மேற்கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்!
கொரோனா, அப்படி இப்படி என்று மூச்சுவிட்டு… வெகு நாட்களுக்குப் பிறகுதான்… மெரினா கடற்கரைக்கு காரில் சென்றிருந்தேன்.
அதிகபட்சம் ஒன்றரை மணி நேரம் பார்க்கிங் செய்திருப்போம். காரை எடுக்கும் போது ஒரு பையன் யூனிபார்ம் டாக் எல்லாம் போட்டுகொண்டு வந்து ஸ்மார்ட் பார்க்கிங் 100 ரூபாய் என்றான்.
ஸ்மார்ட் பார்க்கிங் – சனிக் கிழமை என்பதால் 100, மற்ற நாள் என்றால் 60 என்றான். ரசீது கொடு என்று கேட்ட போது எஸ் எம் எஸ் வரும் என்றான்… ஏதோ வந்தது போல இருந்தது. ஆனால் கட்டணம் குறித்த மெசேஜ் எதுவும் போனில் இல்லை.
என்னவோ பிராடு பண்றான் என்று மட்டும் தோன்றியது. சரி எதற்கு தகராறு என்று நினைத்து, கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து கூகிளில் போட்டு தேடிப் பார்த்தால் 1 மணி நேரத்திற்கு காருக்கு 20 ரூபாய் தான் என்று செய்திகள் காட்டுகிறது.
11 மணிக்கு மேல்உங்கள் கார் புக்கிங் குளோஸ்டு என்று மெசேஜ் வருகிறது. பணம் பெற்று கொண்டதற்கான மெசேஜ் ஒன்றும் வரவில்லை.
உண்மையில் மெரினாவில் கார் பார்க்கிங் கட்டணம் என்ன? ஏமாற்றுகிறார்களா? பார்க்கிங் பணம் கட்டியதை ஏமாறாமல் ரசீதை சரி பார்க்க என்ன வழி? யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும்.
சென்னை அரசு ஓய்வூதியர்கள் நேர்காணல் தொடர்பான புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஓய்வூதியர்கள் நேர்காணலை எளிமையாக்க, புதிய நடைமுறையை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி, நேர்காணல் மாதத்தை தெரிந்து கொள்ள https://www.karuvoolam.tn.gov.in/ta/web/tnta/home என்ற இணையதனத்தின் முகப்பு திரையில், ஓய்வூதியர் நேர்காணல் என்ற இணைப்பை, கிளிக் செய்து, தங்கள் ஓய்வூதிய ஆணை எண், ஆதார் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். பின் தங்கள் பெயர், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், நேர்காணல் மாதம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பு:
ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும்.
கொரோனா பெறும் தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ம் ஆண்டிற்கான நேர்காணல் தற்காலிகமாக நடைபெறாத நிலையில் தற்போது அரசாணை நிலை எண்: 138 நிதி (ஓய்வூதியம்)த் துறை நாள் 20-06-2022 ன் படி ஓய்வூதியர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப பின்வரும் ஏதேனும் ஒரு முறையை பின்பற்றி இவ்வாண்டிற்கான (2022-23) நேர்காணல் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1 ஜீவன் பிரமான் இணையதள மின்னணு வாழ்நாள் சான்றிறழ்
தமிழ் நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும் இடர்ப்பாடுகனைத் தவிர்க்கும் பொருட்டு ஜீவன் பிரமான் இணைய தனம் மூலமாக ஓய்வூதியர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு சேவை முறையை பின்பற்றி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அ) இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70/- கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்
ஆ) அரசு இ.சேவா மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர் குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
இ) ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி (Biometric Device) பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
ஈ) கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இல்லாமல் ஜீவன் பிரமான் முகம் பதிவு செயலி பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள் அளிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்:
1) ஆதார் எண் 2) PPO.No 3) வங்கி கணக்கு எண் 4) ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்
2) வாழ்நாள் சான்றிதழ் படிவத்தினை மூலம் உரிய அலுவலரிடம் கையொப்பம் பெற்று தபால் மூலம் அனுப்புதல்
ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றினை (Life Certificate) www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கீழ்க்காணும் ஏதேனும் ஓர் அலுவலரிடம் கையொப்பம் பெற்று தபால் மூலமாக தொடர்புடைய கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது)
வட்டாட்சியர் / துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.
வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள்: மேற்கண்ட இணையதள முகவரியிலிருந்து வாழ்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அலுவலர் / மாஜிஸ்ரேட் நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்நாள் சான்று (Life Certificate). பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பலாம்.
மேலும் ஓவ்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்குச் சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம்
ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணலில் எதும் குறைபாடுகள் இருப்பின் தொடர்புடைய மாவட்டக் கருவூல அலுவலர் மண்டல இணை இயக்குநர் அல்லது சென்னை கருவூல கணக்குத்துறை ஆணையரகத்திற்கு தொலைபேசி மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம்
தமிழ்நாடு மின்வாரியம், ரயில்வே, அஞ்சல்துறை தொழிலாளர் வைப்பு நிதித்திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள் உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களில் ரூபாய் நோட்டு பரிவர்த்தனைக்கு பதில் ‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனையை அதிகரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தாளம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி வீரபிரம்மம் கூறியதாவது…
திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களில் சேவை டிக்கெட் பிரசாதம், அகர் பத்திகள், பஞ்சகவ்ய பொருட்கள், டைரி, காலண்டர்கள் வாங்கும் பக்தர்களின் வசதிக்காக, ‘போன் பே. ஜி பே, கியூஆர் கோடு ஸ்கேனர், டெபிட் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பணம் செலுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவஸ்தானத்துடன் இணைந்த கோவில்களில் பக்நர்களுக்கு பணப் பரிவர்த்தனைக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளம், ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் மூலமாகவும் திருப்பதி ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் பக்தர்கள் அதிகம் செல்லும் முக்கிய இடங்களில் தேவஸ்தான கோவில்கள் பற்றி தெரிவிக்க தகவல் பலகைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதனால் பக்தர்கள் எளிதாக கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய முடியும்… என்றும் கூறினார்.
இதனிடையே சென்னையிலிருந்து திருப்பதிக்கு அதிக அளவிலான பக்தர்கள் சென்று வருவதால் தற்போது கவனமாகியுள்ள வந்தே பாரத் ரயில்களை சென்னையிலிருந்து திருப்பதிக்கு இயக்குவதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது சென்னை திருப்பதி ரயில் பாதையில் 130 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்ல முடியும் என்பதால் வந்தே பாரத் செயல்களை இயக்குவதற்கு பரிந்துரைத்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் தளம் உலகம் முழுதும் திடீரென முடங்கியது. இதனால் உலகளவில் ட்விட்டரில் தகவல்களை அனுப்ப முடியாமலும் பெற முடியாமலும் கோடிக்கணக்கானோர் தவித்தனர்.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கோளாறை சரி செய்யும் நடவடிக்கையில் ட்விட்டர் நிறுவனம் இறங்கியுள்ளது. இதனிடையே, ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டார். அதில், அளவுக்கதிகமான டேடா பகிர்வு மற்றும் கையாள்தலில் ஏற்பட்டுள்ள நிலையால் சில கட்டுப்பாடுகளை தற்காலிகமாக விதிக்க வேண்டியுள்ளது. இதன்படி ,
அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பதிவுளை மட்டுமே பார்வையிடலாம்.
அங்கீகரிக்கப்படாத கணக்குகளில் நாள் ஒன்றுக்கு 600 பதிவுளை மட்டுமே பார்வையிடலாம்.
அங்கீகரிக்கப்படாத புதிய பயனாளர்கள் தினசரி 300 பதிவுகளை மட்டுமே பார்வையிட முடியும்… என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் பயனர்களின் டேடா பகிர்வுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிகிறது.
இதனிடையே எலான் மஸ்க் அறிவிப்புக்கு ட்விட்டர் பதிவுகளில் கேலியும் கிண்டலும் தூள் பறக்கிறது. சிலர் ட்விட்டர் சமாதியாகிவிட்டதாக கருத்து தெரிவித்து படங்களை வெளியிட்டுள்ளனர். டிவிட்டர் பறவை மெதுவாக பறந்து பறந்து அப்படியே குளத்து நீரில் விழுவது போல் படங்கள் பகிரப்பட்டுள்ளன.
எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்குவதற்கு முன் பேச்சுரிமை எழுத்துரிமை என்பதெல்லாம் குறித்து குறிப்பிட்டு இருந்தார். ட்விட்டர் களம் பேச்சுரிமைக்கான கருத்தை வெளிப்படுத்தும் உரிமைக்கான தளமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் 600, 6000 என்றெல்லாம் பார்ப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அதையும் கேலி செய்து சிலர் கருத்துள்ளனர்.
— Un hombre cualquiera ✠ (@CualquieraOnvre) July 1, 2023
மருத்துவர் மருந்து சீட்டு எழுதிக் கொடுப்பது போல் காலை மதியம் இரவு என மூன்று வேலைக்கும் இத்தனை இத்தனை ட்வீட்களை பார்க்கலாம் என ஒருவர் கேலி செய்துள்ளார்.
— Chemical Brother 👌 (@chemicalbrodar) July 1, 2023
இன்னும் எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை பதவியில் இருந்து விலகலாமா என்று கேட்டு பதிவிட்டு இருந்ததை இப்போது எடுத்து போட்டு தாங்கள் அதற்காகவே காத்திருப்பதாக கிண்டல் செய்திருக்கிறார்கள்.