அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன.
உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன.
உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக வங்கக் கடலில் ரூ.80 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று திமுக., அரசு அறிவித்தது. தற்போது நினைவுச் சின்னம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் 2.21 ஏக்கரில் நினைவிடம் கட்டும் பணி தற்போது 39 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. இந்த நினைவிடம் வரும் ஆக. 7ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே ரூ. 80 லட்சம் செலவில் கருணாநிதி அருங்காட்சியம் அமையவுள்ளதாம். இதற்கான வேலை நடந்து வரும் நிலையில், பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் நினைவிடத் திறப்புக்குப் பிறகும் பணிகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் 134 அடி உயரத்துக்கு ரூ.80 கோடி செலவில் பேனா சினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து இந்தப் பகுதிக்குச் செல்வதற்காக 360 மீட்டர் நீளத்துக்கு பாலம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், இந்தப் பாலத்தின் கட்டுமான பணிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும். இதை நேரடியாக பொதுப்பணித்துறையே மேற்கொள்வதா அல்லது தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்வதா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அரசின் சலுகைகள், சிறப்பு நலத்திட்டங்கள், உதவிகள் எல்லாம் ஜாதியின் பெயரில் அமையலாம் (இடப் பங்கீடு, நலத்திட்டங்கள்);
வர்க்கத்தின் பெயரில் (வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு சலுகைகள், நலத்திட்ட உதவிகள்) அமையலாம்;
இட அமைப்பின் அடிப்படையில் அமையலாம்; கிராமப்புறத்தினருக்கு சலுகைகள், நலத்திட்ட்டஙள் உருவாக்கப்படலாம்;
பாலின அடிப்படையிலும் அமையலாம்.
ஆனால், மதத்தின் பெயரில் அதிலும் சிறுபான்மை என்ற சலுகை மிக மிகத் தவறு.
இஸ்லாமும் கிறிஸ்தவமும் மன்னர் பரம்பரைகள். இந்து மன்னர்களிடமிருந்து ஆட்சி உரிமை, சொத்துகள் எல்லாம் பறிக்கப்பட்டன. இந்து கோவில்களின் சுதந்தரம் பறிக்கப்பட்டது.
ஆனால், கிறிஸ்தவ மன்னர்களான பிரிட்டிஷார் நாட்டைத் தமது பிரதிநிதிகள் வசம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். எனவே, அவர்கள் இல்லையே தவிர அவர்களுடைய காலனிய ஆட்சியும் நிர்வாக அமைப்பும்தான் தொடர்கிறது.
இஸ்லாமிய மன்னர்கள் பிரிட்டிஷாரால் ஒடுக்கப்பட்டுவிட்டதால் இந்திய சுதந்தரத்தின்போது இஸ்லாமிய மன்னர்கள் சொற்பம் தான் இருந்தனர். ஆனால் இஸ்லாமியர்களின் நிரந்தர ஒரே மன்னரான அல்லா-நபியின் அதிகாரம் குறையவில்லை. மசூதிகள் தனி அரசாக, தனி சொத்துரிமையுடன் நீடிக்கவே செய்கின்றன.
பிரிட்டிஷார்களின் காலத்தில் சர்சுகளிடம் கொடுக்கப்பட்ட சொத்து, உணர்ச்சிவசப்பட்டுச் சொல்வதானால், இந்திய அரசிடம் இருக்கும் சொத்தைவிட மிக அதிகம்.
எனவே, சுதந்தரம் என்ற பெயரில் நடந்த ஆட்சி/அதிகார மாற்றத்தில் இந்து மன்னர்களும் இந்து வழிபாட்டு மையங்களும் தான் செல்வாக்கு/சுதந்தரம் இழந்தன. ஒழிக்கப்பட்டுவருகின்றன.
பொது மத உரிமைச் சட்டம் இதை மாற்றி அமைக்கவேண்டும்.
அனைத்து மத அமைப்புகளும் ஒரேவிதமாக நடத்தப்படவேண்டும். கோவில்களைப் போல் மசூதியும் சர்ச்சும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்லவேண்டும். அல்லது மசூதி, சர்ச் போல் இந்து கோவில்களுக்கு சுதந்தரம் தரப்படவேண்டும்.
சிறுபான்மை நிறுவனங்களுக்கு அவர்களுடைய கலாசாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள பெரும்பான்மை சமூகம் உதவவேண்டும் என்பது நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படவேண்டிய செயல். சிறுபான்மை அமைப்புகள் அதற்கு நன்றியுடன் நடந்துகொள்ளவேண்டும். பெரும்பான்மையின் கலாசாரம், மதம், மதிப்பீடுகள் இவற்றை அழிக்க முற்படக்கூடாது.
பசியாக இருப்பவருக்கு உணவு கொடுப்பது அன்பினால் தான்.. ஆனால், உண்ட வீட்டில் ரெண்டகம் செய்யக்கூடாது.
பாபர் அல்ல; ராமரே என் மரியாதைக்குரியவர் என்று சொல்லவேண்டும். ஒளரங்க ஜீபும் திப்புவும் அல்ல; சத்ரபதி சிவாஜியும் ராஜராஜசோழனே எம் மன்னர் என்று சொல்லவேண்டும்.
மத நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்று சொல்லி, மதத்தின் பெயரில் சலுகை தருவது மிக மிகத் தவறு. நீச்சல் குளம் இருக்கும் வீடுகள் கூட குறைவுதான். அவர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு நாங்கள் சிறுபான்மையினர். எங்களுக்கு சலுகை கொடுங்கள், தனி சட்டம் கொடுங்கள் என்று கேட்டால் எவ்வளவு அபத்தமாக அராஜகமாக இருக்கும். கிறிஸ்தவ இஸ்லாமிய நிறுவனங்கள் எல்லாம் சிறுபான்மை என்று சொல்லி சலுகை கேட்பது அப்படியான அராஜகம் தான்.
வேலூர் கிறிஸ்தவ கல்லூரியில் இந்து பட்டியல் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு தரமாட்டேன். மதம் மாறினால்தான் தருவேன்; அதுவும் உயர் ஜாதி கிறிஸ்தவருக்கு மட்டுமே தருவேன் என்பது சமூக நீதிக்கு எதிரான அராஜகம்.
கிறிஸ்தவ நிறுவனங்கள் சலுகை கேட்பதுகூட பெரிய விஷயம் இல்லை. அவர்கள் விஷயத்தில் அவர்கள் தந்திரமாக இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். அதை பெரும்பான்மை சமூகம் எதனால் கொடுக்கிறது என்பதுதான் புரியவில்லை. அதிலும் தமது சகோதரர்களுக்கு இல்லாத உரிமைகளை அள்ளிக் கொடுப்பதென்பது அசட்டுத்தனம். நல்லவராக இருக்கலாம். ரொம்ப நல்லவராக இருக்கக்கூடாது.
தமிழில் திருவள்ளுவர் மட்டுமல்ல; பாத்திரமறிந்து பிச்சையிடு என்று சொன்னவளும் இருக்கிறாள்.
அடுத்ததாக, மதத்தின் பெயரில் சலுகை தரப்படுவது குடிமகன்களுடைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே சிறுபான்மைகள். உலக அளவில் அவர்களே வல்லாதிக்க சக்திகள்.
அதோடு, இந்தியாவிலும் அரசியல், கல்விப்புல, சமூக, ஊடக அதிகாரங்களில் உச்சத்தில் இருக்கின்றன.
இஸ்லாமும் கிறிஸ்தவமும் விற்பதும் ஒருவகை போதைப் பொருள்தான். தன்னைத் தவிர பிறரை அழிக்க நினைக்கும் ஒரு மதம் நல்வழிப்படுத்தும் அமுதம் அல்ல. ஏற்றி சம நிலை பிறழச் செய்யும் அபின் தான்.
இந்துக்களை மதம் மாற்றுவதையே முழு நேரத்தொழிலாகக் கொண்டிருக்கும் அமைப்புகள் அவை. அப்படியான கிறிஸ்தவ இஸ்லாமிய மத நிறுவனங்களுக்குச் சலுகை என்பது திருடர்களுக்கு தங்கப் பதக்கங்கள் தருவதைப் போன்றது.
நாம் என்னதான் உண்மைகளைச் சொன்னாலும் ஜாதிக் கொடுமையினால்தான் மதம் மாறினார்கள் என்று புதிய ஏற்பாட்டு வசனங்களைத்தான் சொல்வார்கள்.
மனு ஸ்மிருதிதான் இந்த தேசத்தை ஆண்டது என்றே பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்…
அது மட்டுமே உலகில் பிறப்பின் அடிப்படையில் சமூகத்தைப் பிரித்தது என்றே வைத்துக்கொள்வோம்.
ஆனால், இன்றைக்கு நம் தேசம் அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் ஆளப்படுகிறது. அதை எழுதிய 80% பிராமண உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் தலைவராக பாபா சாஹேப் இருந்திருக்கிறார். அனைவரையும் சமமாக மதிக்கும் ஸ்மிருதி விதிமுறைகளைத்தான் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி வகுத்திருக்கிறார்கள்.
அதில் ஜாதிக்கொடுமைக்கு இடம் இல்லை.
திருமா போன்ற சர்ச் பெல் பாய்ஸ் இன்றும் சனாதன ஆட்சிதான் நடக்கிறது என்று சொல்வதன் முக்கிய காரணம் அப்போதுதான் மத மாற்ற வேலைகளைத் தொடர, தார்மிக நியாயம் கிடைக்கும். அரசியல் சாசனம் எழுதி அண்ணல் அம்பேத்கர் வாழ்க… சமத்துவம் மலரச் செய்த ஈ.வெ.ரா வாழ்க என்று முழங்கியபடியே சனாதன ஆட்சிதான் நடப்பதாகவும் புலம்புவது அதனால்தான்.
இப்போது சனாதன ஆட்சிதான் நடக்கிறதென்றால் அம்பேத்கரும் ஈ.வெ.ராவும்தான் சனாதனவாதிகள் (கடவுளே என்னைக் காப்பாற்று)
அம்பேத்கர், ஈ.வெ.ராவின் வழிகாட்டுதலின்படித்தான் ஆட்சி நடக்கிறதென்றால் சனாதன ஆட்சி இல்லை.
இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும்.
தேச அளவில் காங்கிரஸும் மாநில அளவில் திராவிட இயக்கமும் தான் இத்தனை காலம் ஆட்சிசெய்துள்ளன. அவர்கள் காலத்தில் நியமிக்கப்பட்ட அதிகார வர்க்கம்தான் இப்போதும் அதிகாரத்தில் இருக்கின்றன.
அப்படியென்றால் ஜாதிக் கொடுமையைக் காரணம் காட்டி இன்றும் ஏன் மத மாற்றம் நடக்கிறது?
சுமார், 100 ஆண்டுகாலம் செல்வாக்குடனும் 70 ஆண்டுகாலம் அரசியல் செல்வாக்குடனும் இருந்த பின்னரும் ஜாதிக் கொடுமையை நீக்க முடியவில்லையென்றால் காங்கிரஸும் திராவிட இயக்கமும் இத்தனை ஆண்டுகளில் என்னதான் செய்திருக்கிறார்கள்?
சுமார் ஐம்பது ஆண்டுகளாக இந்துக்களின் அரசியல் பேரியக்கமான பாஜக சமூக, பொருளாதார, அரசியல் செல்வக்குடன் முன்னிலைக்கு வந்துவிட்டிருக்கிறது.
அவர்களும் அரசியல் சாசனத்தின் படிதான் ஆட்சி செய்கிறார்கள். பகவத் கீதையைவிட அரசியல் சாசனமே உயர்ந்தது என்று சொல்லும் அளவுக்கு அதை மதிக்கிறார்கள்.
அப்படியென்றால் இன்னும் ஏன் மத மாற்றம் நடக்கிறது?
இதைவிட இவர்களிடம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி: இப்போதுதான் ஜாதிக் கொடுமைகளில்லையே. தாய் மதத்துக்குத் திரும்பி வாருங்கள் என்று ஏன் பேச ஆரம்பிக்கவில்லை?
பெரு வெள்ளக்காலத்தில் நிவாரண முகாம்களுக்குச் சென்று தங்கிக் கொள்ளலாம். மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்ததும் சொந்த வீடுகளுக்குத் திரும்பத்தானே வேண்டும் (புரிவதற்காகச் சொல்லப்படும் உவமை மட்டுமே).
அப்படி அவர்களைத் திரும்பச் செய்ய என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?
சிறுபான்மைகளுக்கு சலுகை என்பது பெரும்பான்மைகளை சிறுபான்மை பக்கம் நகரத்தானே வைக்கும்.
அப்படியே சிறுபான்மைச் சலுகை தரவேண்டுமென்றால் பெரும்பான்மையாக ஆகும் முயற்சிகளை நிறுத்தவேண்டும். சிறுபான்மைச் சலுகை வேண்டுமென்றால் மத மாற்றப் பணிகளை நிறுத்தவேண்டும். பாகிஸ்தானின் படையில் வேலை செய்வேன். இந்திய அரசு சம்பளம் தரவேண்டும் என்று சொல்வதைப் போன்ற அராஜகம் இது.
ஏழைகளுக்கு சலுகை என்பதற்காக ஒருவர் தன்னை ஏழை என்று சொல்லிக் கொள்வதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
ஜாதிச் சலுகை கிடைக்க பொய்யாக சான்றிதழில் இந்துவாகக் காட்டிக் கொள்ளும் க்ரிப்டோ நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன?
இன்றும் ஒருவர் மதம் மாறுகிறார் என்றால் ஜாதிக் கொடுமையினால்தான் மாறுகிறேன் என்று கலெக்டரிடம் அல்லது திமுக அறிவாலயத்தில் அல்லது கமலலயத்தில் சாட்சியம் கொடுக்கவேண்டும்.
சொல்ல விரும்புவது மிகவும் எளியது: மதம் சார்ந்து மக்கள் அனைவரையும் சமமாக நடத்தவேண்டும். மதம் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே மாதிரியாக நடத்தவேண்டும்.
பொது சிவில் சட்டமானது திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை, தத்தெடுத்தல் போன்ற தனிநபர்/குடும்ப விஷயங்களில் மட்டுமே சமத்துவத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறது.
உண்மையில் சமத்துவ மறுப்பு என்பது வேறு இடத்தில் வெகு வேகமாக வெகு வெளிப்படையாக நடந்து வருகிறது. சிறுபான்மை மத உரிமை என்ற பெயரில் அது சட்டபூர்வ அங்கீகாரத்துடன் மூர்க்கத்தனமாக நடந்துவருகிறது.
முதலில் தடுக்கப்படவேண்டியது அதுதான்.
முழு சமத்துவம் கொண்டுவரப்படவேண்டிய இடமும் அதுதான்.
வர்க்கம், ஜாதி, இடம், ஒரு எல்லை வரை பாலினம் இவற்றின் அடிப்படையில் மட்டுமே பாகுபடு அதுவும் நலத்திட்ட நோக்கில் பார்க்கப்படலாம்.
மதம் சார்ந்து சிறுபான்மைகளுக்குத் தரப்படும் சலுகைகள், நலத்திட்டங்கள், அதீத உரிமைகள் எல்லாம் உடனே தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
உண்மையான சமத்துவத்தை மலரச் செய்யும் சட்டத்தையும் இயற்றுங்கள் ஏகாத்ம மானவவாதிகளே
பொது சிவில் சட்டம் என்பது அந்த திசையை நோக்கிய முதல் காலடியாக இருக்கட்டும். ஒன் ஸ்டெப் அட் அ டைம் என்பது சரிதான். ஆனால், அடுத்த காலடி உடனே எடுத்து வைக்கப்படவும் வேண்டும். இல்லையென்றால் நொண்டியடிப்பதுபோல் ஆகிவிடும்.
ஆன்லைன் ரம்மி தொடர்பான வெற்று விளம்பர அறிவிப்பு வேண்டாம் முதல்வரே, சரியாக நடவடிக்கை எடுங்கள் என்று குறிப்பிட்டு, தென்காசி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள ஆன்லைன் ரம்மி மரணத்திற்கு வருத்தம் தெரிவித்து அண்ணாமலை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாஜக., தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை….
தென்காசி சங்கரன்கோவில் அருகே, மாரிசெல்வம் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைய விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த, தமிழ்நாடு இணைய விளையாட்டு ஆணையம் ஒன்றை உருவாக்கவிருப்பதாகவும், அதன் தலைவராக, தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்குக் குறையாத பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரியும், ஐஜி அந்தஸ்துக்குக் குறையாத பதவியிலிருந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, சிறந்த உளவியலாளர் உட்பட ஐந்து பேர் கொண்ட ஆணையம் உருவாக்க இருப்பதாகவும் திமுக அரசு கூறியிருந்தது. ஆனால், இரண்டு மாதங்கள் கடந்தும், அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
பிரச்சினைகளுக்கான உண்மையான தீர்வுகளைப் பற்றிச் சிந்திக்காமல், கண்துடைப்புக்காக அறிவிப்புகள் வெளியிட்டு விட்டு, அதன் பின்னர், தங்கள் தோல்வியை மறைக்க, மக்களைத் திசைதிருப்பும் நாடகத்தைத்தான் ஆட்சிக்கு வந்தது முதல் அரங்கேற்றி வருகிறது இந்தத் திறனற்ற திமுக அரசு.
அவசரச் சட்டம் கொண்டு வந்தும், அதனை முழுமையாக நிறைவேற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுக்காததால், மீண்டும் ஒரு உயிர் பலியாகியிருக்கிறது.
வெறும் விளம்பரத்துக்காக அறிவிப்புகள் வெளியிடாமல், இனியாவது தீர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
செந்தில் பாலாஜிக்கான நீதிமன்றக் காவல் வரும் ஜூலை 12ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. அமலாக்கத்துறையினர் இதுவரை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த இயலவில்லை என்பதும், இதய நோய் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் தற்போதைக்கு விசாரணை எதுவும் நடத்த இயலாத சூழல் இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவல் இன்று மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திமுக., அரசு செந்தில் பாலாஜியை பல்வேறு வழிகளில் பாதுகாத்து வரும் நிலையில், அமலாக்கத்துறை விசாரணை சரியான முறையில் நடக்குமா என்ற கேள்வி அரசியல் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் எழுந்துள்ளது. எனவே, செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
முன்னர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது. காரணம், அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். இதனால் சரியான முறையில் வழக்கு நடைபெறாது என காரணம் சொல்லப்பட்டது. வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என அப்போது வழக்குத் தொடர்ந்தவர் திமுக.,வின் மூத்த தலைவரான மறைந்த அன்பழகன்.
இதை இப்போது பாஜக., பின்பற்ற வேண்டும் என்று கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன. செந்தில் பாலாஜி குறித்த வழக்கு தமிழக நீதிமன்றத்தில் நடைபெற்றால், அதை தடுக்க திமுக., அரசு மற்றும் அதிகாரிகள் தரப்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், திமுக.,வினர் போராட்டங்களில் ஈடுபடுவர், இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் காரணம் கூறப்படுகிறது மேலும், கரூரில் சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக.,வினர் தாக்கியபோது, தமிழக போலீஸார் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை என்பதால், தமிழக போலீஸாரை நம்பி மத்திய விசாரணை அமைப்புகள் இனி சோதனைகளில் ஈடுபட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இத்தகைய காரணங்களைச் சொல்லி, அமலாக்கத்துறை அல்லது தனி நபர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜி கைது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, அவர் சட்டப்படிதான் கைது செய்யப்பட்டார் என்று அமலாக்கத்துறை வாதிட்டது. ஜூன் 13ல் நடந்த சோதனையில் அவர் உடன் இருந்தார். அவரை சட்டவிரோதமாக சிறைபிடிக்கவில்லை. சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார் என்று, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் கூறியது.
அப்போது, சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், மேகலா கூடுதலாக தாக்கல் செய்த மனுவில் கூறியது… கைது உத்தரவில் இருந்து செந்தில்பாலாஜியை விடுவிக்க வேண்டும். நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை முறையாக பரிசீலனை செய்யவில்லை. மனுவை முறையாக பரிசீலனை செய்யாமல் நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. செந்தில்பாலாஜிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என பாஜக., மாநில தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். 2022 ஆகஸ்ட் முதல் செந்தில்பாலாஜிக்கு எதிராக அவர் பேசி வருகிறார்… என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மேகலா தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாகக் கைது செய்யவில்லை. சம்மனை பெற செந்தில்பாலாஜி மறுத்தார். அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக கைது செய்தோம். கைது குறித்து குறுஞ்செய்தி, இமெயில் மூலம் அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜூன் 13ல் நடந்த சோதனையில் அவர் உடன் இருந்தார். அவரை சட்டவிரோதமாக சிறைபிடிக்கவில்லை. சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் செந்தில் பாலாஜியை இதுவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. வருங்காலத்தில் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும். செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்துள்ளார் என்பதற்கு காரணங்கள் உள்ளன. பெருந்தொகை டெபாசிட் செய்யப்பட்டது பற்றி எந்த விளக்கமும் செந்தில் பாலாஜி தரப்பில் அளிக்கப் படவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி பார்த்து வந்த இரு இலாகாக்களை வேறு இரு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக மாற்றப்பட்டதும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டதும் சர்ச்சையானது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா, ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் எங்கே தெரிவித்தார்? அவர் அமைச்சராக நீடிக்க வேண்டும் எனக் கோரி ஆளுநருக்கு முதல்வர் கடிதம் எழுதினாரா? அப்படியெனில் அந்தக் கடிதத்தை தாக்கல் செய்யுங்கள்’ எனக் கூறி வழக்கு விசாரணையை ஜூலை- 7 க்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒழுக்கத்தையும் தர்மத்தையும் மகா பெரியவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் பேச்சு…
மதுரை: ஒழுக்கத்தையும் தர்மத்தையும் மகா பெரியவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் பேசினார்.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் சிறப்பு ஆன்மீக நிகழ்ச்சி மதுரை எஸ் எஸ் காலனி எம்.ஆர்.பி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் பி. மணிகண்டன் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது….
நம்பிக்கையின் வித்துதான் ஆன்மீகம். இதை ரமணர் ராமானுஜர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தர் பரப்பினார்கள்.இவர்கள் விட்ட பணியை தொடர்ந்தவர் ஸ்ரீ மகா பெரியவர். வழிபாட்டில் பேதம் பார்க்காதீர்கள் நீங்கள் வணங்கும் எல்லா கடவுளும் பவர்ஃபுல்தான். ஒவ்வொருவரும் சமய சின்னங்களை பூசுவதற்கு தயக்கம் காட்டக்கூடாது.
இந்தியாவை வல்லரசோடு நல் லரசாக வழி நடத்தும் பாரதப் பிரதமர் மோடியின் செயல்கள் பாராட்டக்கூடியது. அடுத்த தலைமுறை வாசிப்பதையும் நேசிப்பதையும் தமிழக தலைமை செயலாளர் இறையன்புவிடம் கற்றுக் கொள்ள வேண்டும். மனிதநேயத்தை கலாமிடம் ஒழுக்கத்தை தர்மத்தை ஸ்ரீ மகா பெரியவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
மனதை இதயத்தை ஈரம் ஆக்கி உள்ளத்தையும் இல்லத்தையும் வசப்படுத்தினால் நாளை பாரதம் நல்அரசு ஆகும். இவ்வாறு பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் பேசினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே பழமையான மரம் விழுந்து நிழற்குடை சேதம் – நல்வாய்ப்பாக காயமின்றி தப்பிய பக்தர்கள்.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருவார்கள் இந்த நிலையில், கோவிலை சுற்றிலும் பக்தர்கள் செல்லும் பகுதியில் நிழற்குடை அமைக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் நடந்துசென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில், இன்று மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் மாலை முதல் பலத்த காற்று வீசிவரும் நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் அம்மன் சன்னதி அருகே நின்றுகொண்டிருந்த பழமையான வேப்பமரம் திடிரென முறிந்து நிழற்குடை மீது விழுந்தது.
அப்போது, நல்வாய்ப்பாக நிழற்குடையின் கீழ் இருந்த பக்தர்கள் எவ்வித காயமும் இன்றி தப்பினர். மரம் விழுந்தததில் நிழற்குடை சேதமடைந்தது இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்புத்துறையினர் உடனடியாக மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மீனாட்சியம்மன் கோவில் அம்மன் சன்னதி அருகே திடீரென மரம் முறிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை: மதுரை மாவட்டம் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான விரிவான வரைவு திட்ட அறிக்கை குறித்த ஆலோனைக்கூட்டம், அரசு முதன்மைச் செயலாளர் ஃசென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , அரசு முதன்மைச் செயலாளர் ஃ சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் , தலைமையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான விரிவான வரைவு திட்ட அறிக்கை குறித்த ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அரசு முதன்மைச் செயலாளர் ஃ சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தாவது:-
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான விரிவான வரைவு திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான வரைவு திட்ட அறிக்கை நிறைவுபெறும் நிலையில் உள்ளது. மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் விரிவான அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் 32 கிலோ மீட்டர் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில்இ 5 கி.மி சுரங்கபாதை ரயில் வழித்தடம்இ 27 கி.மீ மேல்மட்ட ரயில் வழித்தடம் ஆகும்.
அதேபோல, 27 ரயில் நிறுத்தங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3 ரயில் நிறுத்தங்கள் சுரங்கபாதை ரயில் நிறுத்தங்களாக அமையும். அவை நகரின் மையப்பகுதிகளான மதுரை ரயில் நிலையம் – பெரியார் பேருந்து நிலையம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் அமையும்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பகுதியில் ஆவணி மூல வீதி அல்லது மாசி வீதி பகுதியில் மெட்ரோ ரயில் நிறுத்தம் அமைப்பது என, திட்டமிட்டுள்ளோம். மெட்ரோ ரயில் வழிப்பாதை அமைக்கும் பணிகளால் கோவில் தேரோட்டத்தில் பாதிப்பு இருக்காது.
மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையே இதுவரையிலும் விரைவாக தயாரிக்கப்பட்ட அறிக்கை ஆகும். கோவை மதுரை ஆகிய இரு மெட்ரோ திட்ட அறிக்கைகளும் வரும் ஜூலை 15-ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப் படவுள்ளது.
திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின்பு போதிய நிதி ஆதாரம் பெறப்பட்டு திட்டப்பணிகள் தொடங்கும் என, அரசு முதன்மைச் செயலாளர் ஃ சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.
முன்னதாக, அரசு முதன்மைச் செயலாளர் ஃ சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தொடர்பாக, அருள்மிகு மினாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், தல்லாகுளம் பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா மாநகராட்சி ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் சென்னை மெட்ரோ இரயில் திட்ட இயக்குநர் த.அர்ஜீனன் , முதன்மைப் பொது மேலாளர்கள் (கட்டிடக்கலை) ரேகா பிரகாஷ், லிவிங்ஸ்டன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
வீட்டு வைத்தியத்தில், வெந்தயத்துக்கு தனியிடம் உண்டு. வெந்தயம் சமையலில் பலவாறாக பயன்படுத்தப் படுகிறது. உடலாகிய இக்காயத்தை சிறப்பாக வைத்திருக்க வெந்தயம் உதவுகிறதே!
பலர் வீட்டில் இரவில் ஊற வைத்த வெந்தயத்தை மறுநாள் காலை வெறும் வயிற்றில் மென்று விழுங்குவதைச் சொல்லியிருப்பார்கள். சிலர் அப்படியே விழுங்குவதும் வழக்கம். சிலர் வெந்தயத்தை ஊற வைக்காமல் காலையில் வெறும் வயிற்றில், ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் பருகி விழுங்கி விடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள் .
வெந்தயத்தை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதை நேரடியாகவும் மறைமுகமாகவும் சமையல் பொருள்களில் சேர்த்து பயன்படுத்துகிறோம். இந்திய சமையலில் இன்றியமையாத ஐட்டம் வெந்தயம்.
நாம் மூலிகைகளில் பயன்படுத்தக்கூடிய வெந்தயத்தை உணவுப்பொருள்களில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இரவில் வெந்தயயத்தை ஊற வைத்து, மறு நாள் காலை அதை அந்த நீருடன் அருந்தி வருவதால்…
► உடலில் அமிலத்தன்மைகளை சரி செய்ய உதவுகிறது.
► நெஞ்செரிச்சல் சரி ஆகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது.
► நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
► உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியடையச் செய்கிறது.
► மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பிரச்னைகளை குணமாக்குகிறது.
► உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.
► பக்கவாதம், அசிடிட்டி உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கிறது.
► பெண்களுக்கு மாதவிடாய் வலியைப் போக்க உதவுகிறது.
► ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. “
வெந்தயம் அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறையத் தொடங்கும்.
அதிகமாக வெந்தயம் சாப்பிட்டு வந்தால் சிலருக்கு வாந்தி, குமட்டல் ஏற்படும்.
சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் அதிக அளவில் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் சைனஸ் பிரச்சினையால் சளி இருமல் அதிகமாகும்.
காலை வெறும் வயிற்றில் இரவே ஊறவைத்த வெந்தயம் ஒரு டீஸ்பூன், சீரகம் இரண்டு சிட்டிகை மென்று சாப்பிட்டு அந்த நீரையும் பருகுவது நல்லது. சளி பிடிக்காது.
வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் இவை மூன்றையும் வறுத்து, நன்றாகப் பொடி செய்து, ஒன்றாக்கிக் கலந்த பொடியை ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் நீரில் கலந்து, ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் துணையாக இருக்கும்.
ஜூன் 27 நேற்று காலை 10 மணி அளவில் சின்னமனூர் கிழக்கு ஒன்றியம் எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், கால்நடை பராமரிப்பு துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் -தேனி இவர்கள் அனைவரும் இணைந்து பெயருக்கு சிறிய அளவில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை துவக்கி வைக்க வருகை தந்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் இராமகிருஷ்ணன் எம் எல் ஏ அவர்களை ஊர் பொதுமக்கள் 200 பேருக்கு மேல் கூடி சுற்றி வளைத்து எங்கள் ஊருக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து எந்த நிதியும் இதுவரை நீங்கள் ஒதுக்கீடு செய்யவில்லை.
நிதி ஒதுக்கீடு செய்யாத நீங்கள் எந்த முகத்தோடு எங்கள் ஊருக்கு வருகை தந்தீர்கள்.எங்கள் ஊருக்குள் நீங்கள் வர வேண்டாம் என்றும். பலமுறை தங்களிடம் மனு கொடுத்தும் தங்கள் வீட்டிற்கு வந்து மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத எம்எல்ஏ நீங்கள் எங்கள் ஊருக்கு நீங்கள் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்த பொழுது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களோடு வருகை தந்தவர் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் உடன் வருகை தந்த ஒருவர் பொதுமக்களை கோபமாக கடுமையான வார்த்தைகளால் திட்டிய காரணத்தால் அந்த பகுதி இளைஞர்கள் அவரோடு தள்ளுமுள்ளு செய்து செய்தனர்.
மேலும் கம்பம் சட்டமன்ற உறுப்பினரை சிறை வைத்து மண்டபத்தை பூட்டி கொண்டனர். பூட்டப்பட்ட மண்டபம் 20 நிமிடங்களுக்கு பின்னால் 15க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வந்திருந்து சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் அவர்களை மீட்டுச் சென்றனர் ஆனால் இந்த பகுதி இளைஞர்களுடைய மனக் கொதி நிலை இன்னும் மாறவில்லை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் சன்னதியில் ஆனி ஸ்வாதி விழாவில் முக்கிய நிகழ்வாக செப்பு தேரோட்டம் இன்று நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் சன்னதியில் ஆனி ஸ்வாதி திருவிழா உற்சவம் கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு மண்டபங்களில், பல்வேறு வாகனங்களில் பெரியாழ்வார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி, வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக செப்பு தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக சுவாமி பெரியாழ்வார் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க செப்பு தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி சுவாதி உற்ஸவ செப்பு தேரோட்டம் இன்று காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு செப்பு தேருக்கு பெரியாழ்வார் எழுந்தருளினார்.
அங்கு சிறப்பு பூஜைகளை அனிரூத் பட்டர் செய்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் 7:15 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா, கோபாலா கோசத்திற்கு மத்தியில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கோயில் யானை ஜெயமால்யதா முன்செல்ல, நான்கு ரத வீதி சுற்றி வந்து சுமார் ஒரு மணி நேரத்தில் தேர் நிலையம் அடைந்தது. விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, வேதபிரான் சுதர்சன், ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ், மணியம் கோபி மற்றும் கோயில் பட்டர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். டவுண் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி திருநாளான நாளை சாற்றுமுறை நடைபெறுகிறது. இதே செப்புத் தேரோட்டம் பங்குனி மாதத்திலும் நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியார் – சுவாமி ரெங்கமன்னார் திருக்கல்யாணம் பங்குனி உத்திரம் நட்சத்திரத்தில்தான் நடைபெற்றது. இந்நாளில் இருவரும் காலையில் செப்புத்தேரில் வலம் வந்து, இரவில் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.