Home Blog Page 5631

திகாரில் தினகரனைச் சந்தித்த நடராஜன்: கலக்கத்தில் எடப்பாடி

 

புது தில்லி:
திகார் சிறையில் டி.டி.வி.தினகரனைச் சந்தித்துப் பேசிய எம்.நடராஜன் அவருக்கு அளித்த முக்கிய வாக்குறுதியால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலக்கத்தில் உள்ளாராம்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனை சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, இருவரும் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர் என்று தெரிகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வட்டாsasikala natarajan - 2026ரம் தீவிர ஆலோசனையில் இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

முன்னர் ஓ.பன்னீர்செல்வம், அடுத்து எடப்பாடி பழனிச்சாமி என்று, சசிகலா குடும்ப வட்டாரத்தால் தமிழகத்தில் நிலையற்ற ஆட்சி நிலவுவதாக பொதுமக்களிடையே வலுவான கருத்து நிலவுகிறது.

ரஜினியின் ‘காலா’ குறித்து இயக்குனர் விளக்கம்!

kala rajinis new film - 2026

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு காலா. இது குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.

கபாலியை அடுத்து ரஜினிகாந்தை வைத்து பா. ரஞ்சித் இயக்கும் படத்திற்கு காலா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் ட்விட்டர் மூலம் இன்று காலை அறிவித்தார். தலைப்பைக் கேட்டு ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், பலரும் அது என்ன காலா என்று கேட்டு வருகின்றனர்.

இதனால், காலா என்பதற்கான பொருளை பா. ரஞ்சித் விளக்கியுள்ளார். நீதியும் நேர்மையும் கொண்ட தமிழ் அரசர் கரிகாலனைக் குறிப்பதுதான் காலா. திருநெல்வேலி பகுதியில் சிறு தெய்வ கடவுள் ‘காலா’. மும்பையில் செட்டிலான நெல்லை மக்களின் வாழ்க்கைதான் காலா படம் என்று ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.

காலா படக்குழு ஏற்கெனவே மும்பைக்குக் கிளம்பிவிட்டது. வரும் 28ஆம் தேதி படப்பிடிப்பு துவங்குகிறது. அன்றைய படப்பிடிப்பில் ரஜினியும் கலந்து கொள்கிறார். அவர் மூன்று வாரங்கள் மும்பையில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். படப்பிடிப்பின் பெரும்பகுதி தாராவி பகுதியில் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் ஒரு ‘மரணக் கிணறு’: உஸ்மா

lady returned pakistan - 2026

புது தில்லி:

பாகிஸ்தான் ஒரு மரணக் கிணறு என்று வர்ணித்துள்ளார், பாகிஸ்தானில் இருந்து நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடத்தி இந்தியா மீண்ட பெண் உஸ்மா.

பாகிஸ்தானுக்குச் செல்வது சுலபம், ஆனால் அங்கிருந்து திரும்புவது மிகக் கடினம். பாகிஸ்தான் ஒரு மரணக் கிணறு. பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணமானாலும், திருமணத்துக்குப் பின்னர் அங்குச் செல்பவர்கள் அழுதுகொண்டுதான் உள்ளனர் என்று கூறியுள்ளார் உஸ்மா.

இதனிடையே உஸ்மா இங்கு நம்மிடையே இருப்பதற்குக் காரணம், பாகிஸ்தானின் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களுடனான ஒத்துழைப்புதான். இந்தப் பெண்ணுக்காக வாதாடிய வழக்குரைஞர் ஷானவாஸ் நூனைப் பாராட்டுகிறேன். அவர் தனது மகளைப் போல் நினைத்து இந்தப் பெண்ணுக்காக வாதாடினார் என்று கூறியுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

முன்னதாக இன்று காலை வாகா எல்லை வழியாக இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தபோது, இந்திய மண்ணை விழுந்து தொட்டு கும்பிட்டு உள்ளே வந்தார் உஸ்மா. இவர் அண்மையில் பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் ஒருவர் தன்னை திருமணம் செய்ய முயன்றதாகக் கூறி இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். தூதரகத்தின் சார்பில், சட்டப் போராட்டம் நடத்தி அவர் இன்று இந்தியா திரும்பினார்.

 

முன்னதாக வந்த செய்தி …

துப்பாக்கி முனையில் பாகிஸ்தானில் திருமணம்: ரண வேதனையில் இந்தியா திரும்பிய பெண் சுஷ்மாவுக்கு நன்றி!

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை ( பகுதி – 9 )

varadharajaperumal - 2026

தீப ப்ரகாசன் .. இன்றும் காஞ்சியில் திருத்தண்கா என்று கொண்டாடப்படும் திவ்ய தேசத்து எம்பெருமான்… குளிர்ச்சியையுடைய சோலைகளுடன் கூடிய இடமாதலால் அப்பெயர் ! வேதாந்த தேசிகன் அவதரித்த க்ஷேத்ரம் இது !!

சம்பராஸுரன் , இருட்டினைக் கொண்டு வேள்வியைக் கெடுக்க முற்பட , பிரமனாலே ப்ரார்த்திக்கப்பட்ட எம்பெருமான் ஒரு பேரொளியாகத் தோன்றி , காரிருளை விரட்டி, அனைவரையும் ரக்ஷித்தான்..

ஒளியாக வந்து ரக்ஷித்த பெருமானின் பெருங்கருணையை பிரமன் முதலான அனைவரும் கொண்டாடினர் !

“ப்ரகாசிதம் ஜகத்ஸர்வம் யத் தீபாபேன விஷ்ணுநா | தஸ்மாத் தீப ப்ரகாசாக்யாம் லபதே புருஷோத்தம : ” என்கிறது புராணம்..

தன்னுடைய ஒப்பற்ற ஒளியினாலே உலகனைத்தையும் ப்ரகாசிக்கச் செய்தவன் ஆனமையால் இவன் தீப ப்ரகாசன் என்று பெயர் பெற்றானாம் !

பகவான் ஒரு மிகப் பெரிய தீப்பந்தம் போன்ற வடிவு கொண்டிருந்தாலும் , யாக சாலைக்கோ, பிரமன் தொடக்கமானவர்களுக்கோ எந்த இன்னலும் தராமல், எதனையும் எரித்துச் சாம்பலாக்காமல் ஒளி மட்டும் தருபவன் ஆனானாம் ..

“ந ததாஹ ததா சாலாம் ததத்புதமிவாபவத் ”
என்று புராணம் விவரிக்கிறது !!

எம்பெருமானுடைய தேஜஸ்ஸு , ஒளியிற் சிறந்த மற்ற எல்லா பதார்த்தங்களையும் ( பொருள்களையும் ) வெல்ல வல்லது !

அவனுக்கு முன்னே சூரியனோ, சந்திரனோ, மின்னல்களோ, நக்ஷத்ரக் கூட்டங்களோ அல்லது அக்னி தான் ஒளிவிடக் கூடுமா ?!

ஒளியை உடையவன் என்பதனாலுமன்றோ அவன் ” தேவன் ” எனப்படுகின்றான் !

கீதாசார்யனான கண்ணனும் ” திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா | யதி பாஸ்ஸத்ருசீ ஸா ஸ்யாத் பாஸஸ்தஸ்ய மஹாத்மந : ” என்றான் !!

( கணக்கற்ற ஸூர்யர்கள், ஒரே சமயத்தில் , ஆகாயத்தில் தோன்றினால் அவைகள் அந்த மஹாபுருஷனுடைய ஒளிக்கு ஒப்பாகக் கூடும் )

உபனிஷத்தும் அவனை பாரூப : ( ஒளிமயமாயிருப்பவன் ) என்கிறது !!

“கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியன் ” என்றும் ” சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு ” என்றும் ஆழ்வார்கள் இறைவனைப் போற்றுகின்றனர் !!

விளக்கொளி என்றும் தீபப்ரகாசன் என்றும் போற்றப்படுகின்ற இவ்வெம்பெருமானின் பெருமைகளை ” சரணாகதி தீபிகையின் ” வாயிலாக வெளியிடுகின்றார் தேசிகன் ..

சோதி வெள்ளமாய்த் தோன்றிய இறைவனை , பல வகைகளில் துதித்தான் பிரமன்.. அவனுடைய தோத்திரங்களால் மகிழ்ந்த பகவானும் பிரமனுக்கு நல் ஆசிகளை வழங்கினான் !! அஸுரர்களின் திட்டம் தவிடு பொடியானது.

பல முறை தோற்றாலும் அஸுரர்கள் திரும்பத் திரும்ப வரத் தானே செய்வர்கள் ..வேறோர் வகையில் வேள்விக்கு பங்கம் விளைவிக்க பிரயத்னம் செய்தார்கள்..

யாக சாலைக்குப் பெருங்கூட்டமாகப் படையெடுத்து அனைத்தையும் நொடிப்பொழுதில் அழித்திட எண்ணங்கொண்டு அஸுரர்கள் திரும்பவும் திரண்டனர் !!

தீபப்ரகாசன் தோன்றித் துயர் தீர்த்திருக்க , ஈதென்ன மீண்டும் பிரச்சினை என்று பிரமன் அஞ்சினாலும், அவனுடைய இறை நம்பிக்கை அவனைத் தேற்றியது !

பெரும்படையுடன் ஓடி வரும் அஸுரர் குழாம் கண்டு பிரமன் தன்னுள் சொல்லிக் கொண்டது இது தான்..

இதுவும் கடந்து போகும் .. அவனருளால்..

அப்பொழுது யாகசாலையிலிருந்து பெருத்த சப்தத்துடன் ஏதோவொன்று மேலே கிளம்பியது !

என்ன அது ??

அடுத்த பகுதியில் …

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

ரஜினி தொடங்கினாரோ இல்லையோ… குஷ்புவும் தமிழிசையும் ‘போரை’த் தொடங்கிவிட்டனர்!

kushboo tamilisai - 2026

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் தான் அறிவித்த போரினைத் தொடங்கும் முன்பே, அரசியல்வாதிகள் மத்தியில் போர் தொடங்கிவிட்டது. போர் வரும்போது பார்க்கலாம் என்று ரஜினி அறிவித்தாலும் அறிவித்தார்… அதற்குள் மற்றவர்கள் அவரை வைத்து போரை நடத்தி வருகின்றனர்.

ரஜினிகாந்த்தை பாஜக.,வில் இணைய அழைப்பு விடுப்பது, கெஞ்சுவது போல் உள்ளது என நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு டுவிட்டரில் கருத்து பதிவிட்டார்.

இதனால் ஆவேசமடைந்த தமிழிசை, நல்லவர்களை வரவேற்பது கெஞ்சுவது போன்றதல்ல. திமுகவில் இருந்து விரட்டப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தீர்கள். கட்சி விட்டு கட்சி தாவுவது குஷ்புக்கு வாடிக்கை என்றார் டுவிட்டரில்!

அதற்கு ரீடுவிட்டிய குஷ்பு, திமுகவில் இருந்து வெளியேறியதற்கான காரணம் தனக்கு மட்டுமே தெரியும். திமுகவில் இருந்து தான் வெளியேறி 6 மாதங்களுக்கு பிறகே காங்கிரஸில் இணைந்தேன். ஆனால் காங்கிரஸில் இருந்து வெளியேறுவோரை அன்றைய தினமே பாஜக தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்கிறது என்று குஷ்பு பதிலடி கொடுத்தார்.

இப்படியாக டுவிட்டர் யுத்த களத்தில் வார்த்தைப் போரை நடத்தி வருகிறார்கள் தமிழிசையும் குஷ்புவும்! இரண்டு தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இப்படி பேசிய கட்சிகளாக வார்த்தைப் போரை டுவிட்டரில் நிகழ்த்தி வருவதைக் கண்டு பலரும் ஆச்சரியப்பட்டனர். இந்நிலையில்,

துப்பாக்கி முனையில் பாகிஸ்தானில் திருமணம்: ரண வேதனையில் இந்தியா திரும்பிய பெண் சுஷ்மாவுக்கு நன்றி!

lady returned pakistan - 2026

புது தில்லி:
துப்பாக்கி முனையில் பாகிஸ்தானியருடன் திருமணம் நடைபெற்ற இந்தியப் பெண், தான் ரண வேதனை அனுபவித்த பின்னர் இந்தியா திரும்ப பெரும் உதவிகளைச் செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தில்லியைச் சேர்ந்த இளம் பெண் டாக்டர் உஸ்மா (20), பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்தவர் தாகிர் அலியை மலேசியாவில் வைத்து சந்தித்தார். அப்போது இருவரும் காதல் வயப்பட்டனர். பின்னர், கடந்த 1–ஆம் தேதி, உஸ்மா, வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குச் சென்றார். பாகிஸ்தான் சென்ற பின்னர்தான், தாகிர் அலியின் உண்மைப் பின்னணி அவருக்குத் தெரியவந்தது. இந்நிலையில் அவர் நாடு திரும்ப எண்ணினார். ஆனால், கடந்த 3–ஆம் தேதி, தாகிர் அலிக்கும் உஸ்மாவுக்கும் துப்பாக்கி முனையில் திருமணம் நடந்ததாம். பின் 5–ஆம் தேதி உஸ்மா இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். தாகிர் அலி தூதரகத்தை அணுகிய போது, உஸ்மா இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல விரும்புவதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.

இதையடுத்து தாகிர் அலிக்கு எதிராக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் உஸ்மா புகார் அளித்ததுடன், நீதிபதி முன்னிலையில் வாக்குமூலமும் கொடுத்தார். தாகிர் அலி ஏற்கெனவே திருமணமாகி 4 குழந்தைகள் தனக்கு இருப்பதை மறைத்துவிட்டார் என்றும், துப்பாக்கி முனையில் மிரட்டி வலுக்கட்டாயமாக தன்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததாகவும் உஸ்மா கூறினார். வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம், இளம் பெண் உஸ்மாவை இந்தியா அனுப்ப நேற்று அனுமதி அளித்தது. அத்துடன், வாகா எல்லை வழியாக உஸ்மா செல்லும் போது அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட உஸ்மா, அட்டாரி – வாகா எல்லை வழியாக இன்று இந்தியா வந்தார். போலீஸ் பாதுகாப்புடன் வந்த அவர், எல்லையில் இந்திய மண்ணைத் தொட்டுக் கும்பிட்டார். அவரது கண்கள் கலங்கி உணர்ச்சிப் பிழம்பாக இருந்தார். அதன் பின்னரே அவர் இந்தியாவுக்குள் காலடி வைத்தார். அவரை இந்திய பகுதியில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படையினர் வரவேற்றனர்.

இந்நிலையில், உஸ்மாவின் சகோதரர் வாசிம் அகமது இது குறித்துக் கூறியபோது, “நாங்கள் எதிர்பார்த்ததை விடவும், அரசு எங்களுக்கு உதவி செய்துள்ளது; உஸ்மாவை இந்திய தூதரகம் முழு கவனத்துடன் பார்த்துக் கொண்டது; உஸ்மா நாடு திரும்ப உதவி செய்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை” என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து, தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உஸ்மாவை வரவேற்றும், அவர் எதிர்கொண்ட சிரமங்களுக்கு வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

மோடியைச் சந்தித்தது ஏன்?: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

edappadi modi 1 - 2026

சென்னை:

பிரதமர் மோடியுடன் அரசியல் ரீதியாக பேசவில்லை. தமிழகத்தின் திட்டங்கள் குறித்து கோரிக்கை விடுத்துள்ளேன் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

தில்லியில் பிரதமர் மோடியை, முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசினார். இதன் பிறகு முதல்வர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

சென்னையில் டிசம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன்.

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத்தை திறக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

பிரதமர் மோடியிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை.

இலங்கைக் கடற்படை கைது செய்த 11 மீனவர்கள், 135 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தேன்..

கேரள அரசு பவானி ஆற்றில் அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளேன்.

தமிழக அரசுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.

குடிமராமத்துபணிக்கு ரூ.500கோடி நிதியை மானியமாக வழங்க கோரிக்கை விடுத்தேன்.

நீட் தேர்வில் அரசு கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளேன்

பிரதமருடன் அரசியல் ரீதியான எந்த விவாதமும் நடைபெறவில்லை.

தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தர நிதி ஒதுக்க வேண்டும்.

தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம். காவிரி நதிநீர் முறைபடுத்தும் குழு அமைக்க வேண்டும்.

பம்பா, அச்சன்கோயில் ஆற்றின் உபரி நீரை தமிழகத்திற்கு தர வேண்டும்.

மின்சாரம் தயாரிக்க வேண்டும் என கேரளாவை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்

மத்திய அரசு திட்டங்களை நிறைவேற்றியதற்காக வழங்க வேண்டி நிலுவை தொகை ரூ.17 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளேன்.

அரசு ரீதியாக தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.

திருமலையில் தரிசனத்துக்கு மூத்த குடிமக்களுக்கான சலுகைகள்!

tirupathi - 2026

திருப்பதி:

வயதில் மூத்த குடிமக்களையும்கூட ஜருகண்டி ஜருகண்டி என்று  சொல்லித் தள்ளிவிட்டுக் கொண்டிருந்த திருப்பதி கோவில் பாதுகாவலர்கள், இனி அப்படி   யாரைத் தள்ளுவது என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.

திருமலை திருப்பதியில் ஸ்வாமி தரிசனத்துக்கு மூத்த குடிமக்களுக்கு என்று சில சலுகைகளை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப் படுத்தியுள்ளது. தற்போது, மூத்த குடிமக்கள் சிரமம் இன்றி திருப்பதியில் ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதற்கு சில நிபந்தனைகள் உண்டு.  65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்கிறார்கள்.

நிபந்தனைகள்.

1) ஆதார் அட்டை அவசியம்.

2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்

3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் வந்து நின்று, தகவல் தெரிவிக்க வேண்டும்.

4) .காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.

5) .நாளும் 700 பேருக்கும் அனுமதி உண்டு.

6.) உதவி செய்ய உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அட்டை வைத்திருத்தல் அவசியம்.

7) .காலை உணவு, பால் இலவசம்.

8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.

9) ஒருமுறை சென்றவந்த பிறகு 3 மாதம் கழித்த பிறகே மீண்டும் அவர்களுக்கு  மூத்த குடிமக்களுக்கான சலுகையுடன் கூடிய தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

10) இவை அனைத்தும் இலவச சேவையாகும்.

 

திருப்பதி திருமலையில் தங்குவதற்கு விடுதிப் பட்டியல்

tirupathi - 2026

திருமலை திருப்பதியில் தங்குவதற்கான விடுதிப் பட்டியல் இது.

TTD இல் ஒரு அறை கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

MUTT (TIRUMALA)

மூல் மட் மின்: 0877-2277499.

புஷ்பா மாண்டபம் ப: 0877-2277301.

ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.

உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.

ஸ்ரீ திருமல காஷி மட் Ph-0877-2277316.

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் Ph-0877-2277302.

ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா

விவேர்டினினி சபை Ph: 0877-2277282.

ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் மின்: 0877-2277370.

ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.

ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.

உடுப்பி மட் Ph-0877-2277305.

ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் ப: 0877-2277826.

ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.

ஸ்ரீ திருப்பதி ஸ்ரீமன்னாரயன ராமானுஜா

ஜீயர் மட் பி: 0877-2277301.

ஸ்ரீ சிருங்கரி சரத மடம் Ph: 0877-2277269,2279435.

ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.

ஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316

உடிபி மட் பி: 0877 222 77305

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் பீ: 0877 222 77301)

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் ப., 0877 222 77370)

ஸ்ரீ வல்லபச்சரிய மடம் தொலைபேசி: 222 77317

மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிரிந்தாவனம் ப: 0877 222 77302

ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி: 0877 222 77436

ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி ஆதித்யான் ஆஷ்ரம் ப. 0877 222 77826

ஸ்ரீ வைகநாத ஆசிரமம்: 0877 222 77282

ஸ்ரீ அஹோபில மட் பட்: 0877-2279440

ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் பி: 0877 222 77269

ஸ்ரீ வைசராஜர் மடம்

மோதிலால் பன்சிலால் தர்மசலா ஃபீ: 0877 222 77445

ஹோட்டல் நரிலமா சௌல்ட்ரி பி: 0877 222 77784

ஸ்ரீ சீனிவாச சால்ட்ரி டி: 0877 222 77883

ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின்: 0877 222 77240

கர்நாடகா விருந்தினர் மாளிகை பி: 0877 222 77238

தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம் அறநெறிகள் பி: 0877 222 77245

ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம் ப: 0877 222 79435

ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் ப: 0877-2220015

ரசிகர்களுக்கு ரஜினி புது எச்சரிக்கை அறிவிப்பு!

rajinikanth3 e1495268829894 - 2026

சென்னை:

நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்கள் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றத்தினருக்கு விதித்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு கடிதம் தற்போது உலா வருகிறது. அதில், கட்டுப்பாடு, ஒழுக்கம், நற்பெயருக்கு களங்கம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

rajinikanth letter - 2026

ரஜினி ரசிகர் மன்றத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நடக்கும் உறுப்பினர்களை நீக்க தலைமைமன்ற நிர்வாகி சுதாகருக்கு அதிகாரம் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ரஜினி.