கே.டி.ராஜேந்திர பால ாஜி மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார்
தென்னிந்திய லாரி உ ரிமையாளர்கள் சங்க வேலைநிறுத்தம் தொடரும்: சண்முகப்பா அறிவிப்பு
எஸ்.பி.ஐ-யின் துணை வ ங்கிகளில் பணி புரிந்த 2,800 ஊழியர்கள் வி.ஆர்.எஸ் பெற முடிவு
நாட்டின் வளர்ச்சிக்கான கற்களை எடுத்துக் கொடுங்கள்: காஷ்மீர் இளைஞர்களுக்கு மோடி அழைப்பு
போராட்டம் போதும்; நாட்டின் வளர்ச்சிக்கு உதவுங்கள்: காஷ்மீர் இளைஞர்களுக்கு மோடி அறைகூவல்
உதம்பூர்: ”போராட்டத்தில் ஈடுபடும் ஜம்மு – காஷ்மீர் இளைஞர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும். கற்கள் மூலம் வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க முன் வாருங்கள்” என, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், ஜம்மு – ஸ்ரீநகரை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, நாட்டிலேயே முதலாவது மற்றும் ஆசியாவிலேயே மிக நீளமான செனானி – நாசரி சுரங்க சாலையை, பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதன் பின்னர், அந்தச் சாலையில் பயணம் செய்த அவர் உதம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது,
கடந்த 40 ஆண்டுகளாக, இந்த மாநிலத்தில் பலர் ரத்தம் சிந்தியுள்ளனர். அதனால் யாருக்கும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. அந்த நேரத்தில் சுற்றுலா வளர்ச்சியில் ஈடுபட்டிருந்தால், உலகின் மிகச் சிறந்த சுற்றுலா மையமாக ஜம்மு – காஷ்மீர் உருவாகியிருக்கும். நாட்டின் மற்றும் ஜம்மு – காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், சர்வதேச தரத்துடன் இந்த சுரங்க சாலை அமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கான இந்த திட்டப் பணியில் ஈடுபட்ட காஷ்மீர் இளைஞர்களைப் பாராட்டுகிறேன்.
ஒரு பக்கம் இளைஞர்கள் கற்களால் வளர்ச்சிப் பணியில் ஈடுபடும் அதே நேரத்தில் சில அப்பாவி இளைஞர்கள், சிலரின் தவறான துாண்டுதலால், கற்களை வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தங்கள் நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியாதவர்களின் தவறான துாண்டுதலில், காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம். கற்களை வீசித் தாக்குதல் நடத்துவதை நிறுத்தி, மாநிலத்தின், நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும். இளைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சியைக் காண முடியாது.
‘காஷ்மீரம், ஜனநாயகம், மனித நேயம்’ ஆகியவை ஒன்றுக்கு ஒன்றுக்கு இணைந்ததாக இருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். அந்த கோஷத்தின்படி, மாநிலத்தின் வளர்ச்சி என்ற ஒரே குறிக்கோளுடன் நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். வளர்ச்சியின் மூலமே, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும். இந்த சுரங்க சாலை, மாநிலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது. அதாவது, இதுவரை தங்கள் பொருட்களை வெளியே கொண்டு செல்ல முடியாமல் தவித்து வந்த ஜம்மு – காஷ்மீர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை, இந்த சுரங்க சாலை உயர்த்த உள்ளது.
இது வெறும் ஒரு வளர்ச்சி திட்டம் மட்டுமல்ல. இது ஒரு துவக்கத்தின் ஆரம்பம்தான். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், மேலும், ஒன்பது சுரங்க சாலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்… என்று பேசினார் மோடி.
இந்த விழாவில், மாநில ஆளுநர் என்.என்.வோரா, முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் பண விநியோக முறைகேடு: உயரதிகாரிகள் இன்று ஆலோசனை
புது தில்லி:
ஆர்.கே. நகர் தொகுதியில், பண விநியோகம் தாராளமாக நடைபெறுவது குறித்தும் முறைகேடுகள் குறித்தும், அங்கு நடைபெறும் இடைத்தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் உயரதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் இன்று ஏற்பாடு செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக அம்மா கட்சி சார்பில் தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன், சிபிம் சார்பில் லோகநாதன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தீபா, பாஜக சார்பில் கங்கை அமரன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் தொகுதியில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. கரகாட்டம், குத்தாட்டம், ஆடல், பாடல், ரெக்கார்ட் டான்ஸ் என களைகட்டியுள்ள இத் தொகுதியில், பணப்பட்டுவாடாவும் அதிகரித்துள்ளது. தங்கள் கட்சி வேட்பாளர் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று பதற்றத்தில் பண விநியோகம், பொட்டிக்கடைகளிலும் மளிகைக் கடைகள் மூலமாகவும் கூட நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருமானவரித்துறை இயக்குநர், உள்துறைச் செயலாளர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தில்லியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கும் இந்தக் கூட்டத்தில் ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா பிரச்னை முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
செல்பி எடுக்க முயன ்றவரை குதிரை கடித்துக் குதறியதால் பரபரப்பு
பாதுகாப்பு ரேடார் வடிவமைத்த நெல்லை விஞ்ஞானிக்கு அக்னி விருது
திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரை சேர்ந்தவர் ஞானமிக்கேல் பிரகாசம். இவர், பெங்களூருவில் உள்ள டிஆர்ஓவில் எலக்ட்ரானிக்ஸ் ரேடார் மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பில் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். இவரது தலைமையிலான குழுவினர், 5 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்பிற்கான ரேடார் வடிமைத்து வந்தனர். இதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு ரேடார் ஒப்படைக்கப்பட்டது. இதனை பாதுகாப்புத்துறை சோதனை செய்து அதன் சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரித்தது. இந்திய தொழில்நுட்பத்தில், இந்தியாவிலேயே வடிவமைத்து மேம்படுத்தப்பட்ட ஆரூத்ரா என்ற இந்த ரேடார் கடந்த குடியரசு தினத்தன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் டெல்லியில் நடந்த விழாவில், நாட்டின் பாதுகாப்பிற்கான ரேடாரை வடிவமைத்த ஞானமிக்கேல் பிரகாசத்திற்கு அக்னி விருதை மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி வழங்கி பாராட்டினார். இந்த ரேடார் மூலம், இந்தியாவிற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அன்னியச்செலாவணி மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்னி விருது பெற்ற ஞானமிக்கேல் பிரகாசம், கீழப்பாவூர் ஆர்சி துவக்க பள்ளியில் ஆரம்பக்கல்வியும், பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி வரை தமிழ் வழியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது ரேடார் ஆராய்ச்சி துறையில் 30க்கும் மேற்பட்ட உலகளாவிய ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியுள்ளார். சிஸ்டம் ஜெனரேட்டர் என்ற நூலை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். இவரது ஆராய்ச்சி முடிவுகள் நாட்டின் பாதுகாப்புத்துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

