Home Blog Page 5983

நெல்லை மாவட்டத்தில் லாரி – பஸ் மோதல்: 4 பேர் பலி, 15பேர் காயம்

 நெல்லை வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதியதில் பஸ் டிரைவர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 15 பேர் காயமடைந்தனர்.

நெல்லை மாவட்டத்திலிருந்து நாகர்கோவிலுக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

வள்ளியூர் அருகே கோவநேரி பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற லாரி மீது பஸ் மோதியது. காயமடைந்தவர்கள் அப்பகுதின்அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கற்பழித்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை: மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

மும்பையில் மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மும்பையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த எஸ்தர் அனுசுயா (23), கடந்த ஜனவரி மாதம் அவரது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்குச் சென்றுவிட்டு ரயிலில் மும்பை குர்லா ரயில் நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து அவர் அந்தேரி செல்ல வேண்டும்.

அப்போது அங்கு காரில் வந்த சந்திரபன் சனாப் ரூ.300 அளித்தால் அந்தேரியில் இறக்கிவிடுவதாகக் கூறினார். எஸ்தர் அனுசுயா அந்தக் காரில் ஏறிச் சென்றுள்ளார். ஆனால், பந்தூப் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அனுசுயாவை கற்பழித்து அவரை கொலை செய்து முட்புதரில் வீசினார்.

இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று வழக்கை விசாரித்த நீதிபதி, சந்திரபன் சனாப் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று தண்டனை விவரம் வெளியிடப்பட்டது. இந்த வழக்கு அரிதினும் அரிதானது என்பதால் குற்றவாளியை சாகும் வரை தூக்கிலிடுமாறு உத்தரவிடுவதாக நீதிபதி விருஷாலி ஜோஷி கூறினார்.

தீர்ப்பு வெளியானதும் நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுத கற்பழித்து கொலை செய்த குற்றவாளிசந்திரபன், என் மீது தவறாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. நான் செய்யாத குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டிருக்கிறேன். என் மகளை நான் பார்க்க வேண்டும். இனி நான் என்ன செய்யப்போகிறேன் என்றார்.

குற்றவாளிக்கு மரண தண்டனை தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக பாதிக்கப்பட்ட அனுசுயாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்

தமிழகத்தில் அ.தி.மு.க அல்லது அ.தி.மு.க. ஆட்சியில் மது விற்பனையை ஊக்குவிக்கப்படுத்துவதே முக்கியமான பணி : ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அ.தி.மு.க, அல்லது அ.தி.மு.க. ஆட்சியில் மது விற்பனையை ஊக்குவிக்கப்படுத்துவதே முக்கியமான பணி : ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும், மது விற்பனை ஊக்குவிக்கப்படுகிறதே தவிர சிறிதும் கட்டுப்படுத்தப்படவில்லை என்பது தான் உண்மை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது :-

தமிழகத்தில் 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. போதைக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அரசு கூறியிருக்கிறது.

மது அருந்துவதால் ஏற்படும் தீமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு ஆணையிடக்கோரி வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தான் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று சட்டத்தில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காலம் காலமாக இந்த விதி காற்றில் பறக்க விடப்படுகிறது. இவ்விதியை கண்டிப்புடன் கடைபிடிக்க அரசுக்கு ஆணையிடக் கோரி வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் ஏற்கனவே ஒரு வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கு விசாரணையின் போது, 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை அரசு மிகத் தீவிரமாக செயல்படுத்தும்; இதற்கான அறிவிப்பு பலகை அனைத்து மதுக்கடைகளிலும் அமைக்கப்படும்; தேவைப் பட்டால் மது வாங்க வருபவர்களின் வயதை சரி பார்க்க பிறப்புச் சான்றிதழ் கூட கோரப்படும் என்று தமிழக அரசின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை.

21 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும் தான் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற விதி தமிழகத்தில் கடைபிடிக்கப்படவில்லை என்பதற்கு ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும். 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருவாரூர் மாவட்டம் விளமல் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் மதுக்கடையில் பீர் வாங்கி அதை இடுப்பில் செருகி சென்ற போது பாட்டில் வெடித்து உயிரிழந்தான். அதே ஆண்டு ஜூலை மாதம், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அரசு பள்ளி ஒன்றின் மாணவர்கள், வகுப்பில் இருந்த பெஞ்சை உடைத்து அதன் பாகங்களை விற்று கிடைத்த பணத்தைக் கொண்டு மது வாங்கி அருந்தியதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியரே அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார். அண்மைக் கால உதாரணத்தைக் கூற வேண்டுமானால், கடந்த ஜுலை 08 ஆம் தேதி கோவையில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி மது குடித்து விட்டு சாலையில் தகராறு செய்தது நாடு முழுவதும் தலைப்புச் செய்தியானது. இந்த 3 நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் 21 வயதுக்கும் குறைவானவர்கள் தான். அவர்களுக்கு எந்த அடிப்படையில் மது விற்பனை செய்யப்பட்டது என்பதை தமிழக அரசால் விளக்க முடியுமா? இதுபோன்று ஓராயிரம் உதாரணங்களைக் கூற முடியும்.

அதேபோல், தமிழகத்தில் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்ச்சி பிரச்சாரத்திற்காக கடந்த சில ஆண்டுகளில் தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதும், நடப்பாண்டில் இது ரூ. 3 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதும் உண்மை தான். ஆனால், இதைக் கொண்டு எந்த விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்படுவதில்லை. உண்மையில், மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது என்பது தான் உண்மை.

தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும், அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி மது விற்பனை ஊக்குவிக்கப்படுகிறதே தவிர சிறிதும் கட்டுப்படுத்தப்படவில்லை என்பது தான் உண்மை.

தமிழ்நாட்டில் மதுப்பழக்கத்தின் தீமைகளை கட்டுப்படுத்த முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது மட்டும் தான் ஒரே தீர்வாகும். ஆனால், மதுவை நம்பி ஆட்சி நடத்தும் அ.தி.மு.க. அரசு நிச்சயமாக மது விலக்கை நடைமுறைப் படுத்தாது. அதேநேரத்தில், 2016ம் ஆண்டு பா.ம.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மருத்துவர் அன்புமணி இடும் முதல் கையெழுத்து முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாகத் தான் இருக்கும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

பல நூறு கோடிக்கு 11 திரையரங்குகளை வாங்கி குவித்த சசிகலா : கருணாநிதி

 

சென்னையில் பல நூறு கோடி செலவில் 11 திரையரங்குகளை சசிகலா வாங்கி குவித்திருப்பதாக திமு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது பற்றி தனது முகனூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கருணாநிதி “சென்னையில் உள்ள “போரம் மால்”, மற்றும் “சத்தியம் திரையரங்கு வளாகம்” போன்றவற்றையும் வாங்குவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருப்பதாகவும், அதன்உரிமையாளர்கள் அவற்றை விற்பதற்குத் தயங்குவதாகவும் செய்திகள் வந்து கொண்டு உள்ளன.

சென்னை வேளச்சேரியில் “பீனிக்ஸ் மால்” என்று ஒரு வணிக வளாகம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வளாகம் ஜன.2013ல் தொடங்கப்பட்டது. இந்த வளாகம் மும்பையைச் சேர்ந்த பீனிக்ஸ் மில்ஸ் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்தோடு சேர்ந்து தொடங்கப்பட்டது. இந்த வளாகத்தில் “லுாக்ஸ்” சினிமா என்ற பெயரில் மொத்தம் 11 தியேட்டர்கள் கட்டப்பட்டன.

வணிக வளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டாலும், இதில் உள்ள தியேட்டர்கள் மட்டும் மார்ச் 2014ல் தான் தொடங்கப்பட்டன. சென்னையில் வணிக வளாகத்தைக் கட்டியவர்களுக்கு தியேட்டரை மட்டும் உடனடியாக கட்டத் தெரியாதா? ஒரு ஆண்டு தாமதம் ஏன்? ஏன் என்றால் சென்னை மாநகரக் காவல்துறையும் இதர அமைப்புகளும், உள்நோக்கத்தோடு இந்த தியேட்டர்களைத் திறக்கத் தேவையான சான்றிதழ்களுடன் அனுமதி தரவில்லை.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பல பினாமி நிறுவனங்கள் இருந்தன என்பது நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பிலேயே சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. ஹாட்வீல்ஸ் இஞ்சினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அத்தகைய பினாமி நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனத்தின் பெயரை “ஜாஸ்” சினிமா நிறுவனம் என்று மாற்றி, சத்தியம் சினிமா நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் மதிப்புடைய பதினோறு திரையரங்குகளை, ஜெயலலிதாவுடனேயே இருந்து வரும் சசிகலாவும், இளவரசியும், அவரது உறவினர் பெயரிலே வலியுறுத்தியும், மிரட்டியும் வாங்கியிருக்கின்ற செய்தி இன்று வீதிக்கு வந்து விட்டது.

மேலும் இந்தக் குழுவினர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள “போரம் மால்”, மற்றும் “சத்தியம் திரையரங்கு வளாகம்” போன்றவற்றையும் வாங்குவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருப்பதாகவும், அதன் உரிமையாளர்கள் அவற்றை விற்பதற்குத் தயங்குவதாகவும் செய்திகள் வந்து கொண்டு உள்ளன.

முன்பு தமிழகமெங்கும் ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தவர்கள் இப்போது திரைப்பட உலகத்தை வாங்குவதற்குத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயல்களில் இறங்கியிருக்கிறார்கள்.

தான் வாழ்வதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தான் என்று கட்சியின் உடன்பிறப்புகளுக்கு “நீலிக் கண்ணீர்” கடிதம் எழுதிய ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் எப்படி யெல்லாம் சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கி விட்டன.

முன்பு தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தவர்கள் இப்போது திரைப்பட உலகத்தை வாங்குவதற்குத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயல்களில் இறங்கியிருக்கிறார்கள். இவ்வாறு கோடிக்கணக்கிலே இந்தச் சொத்துக்களை வாங்குவதற்கு பின்னால் இருந்து முதலீடு செய்பவர்கள் யார்? அவர்களுக்கும், இவர்களுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கொள்முதல் எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் நடக்குமா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் தமிழக மக்கள் மனதில் எழாமல் இருக்குமா?

இந்தப் புதிய சொத்துக் குவிப்பைப் பார்க்கும் போது “ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது” என்று திமு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார் குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கான் தனது இரண்டாவது மனைவியையும் திருமணமான 10 மாதங்களில் விவாகரத்து செய்கிறார்

கிரிக்கெட் முன்னாள் வீரரும் பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான, இம்ரான் கானும் அவரது மனைவி, ரெஹாம் கானும் விவாகரத்துக் கோரியிருக்கிறார்கள்.

இம்ரானின் அதிகாரபூர்வ முகனூல் பக்கங்களில் அவரது கட்சியின் பேச்சாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர்கள் சுமார் 10 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கானுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை என்று பாகிஸ்தான் மீடியாக்களில் கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்தன. ஆனால் அவற்றை இம்ரான் மறுத்து வந்தார். முன்னதாக இம்ரான் தனது முதல் மனைவி ஜெமிமாவை 2004ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அவர்கள் இருவரும் ஒன்பது ஆண்டுகளாக கணவன், மனைவியாக இருந்தனர்.

ரெஹாம் கானும் தனது ட்விட்டர் கணக்கில் தாங்கள் பிரிந்துபோக முடிவு செய்ததை உறுதிப்படுத்தினார்.
ஜனவரி மாதத்தில்தான் இந்த இருவரும் இம்ரான் கானின் வீட்டில் திருமணம் செய்து கொண்டனர்.

ஊடகங்கள் இந்த விஷயத்தில் அனுமானரீதியிலான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று அவரது கட்சிக்காகப் பேசவல்ல நயீம் உல் ஹக் கூறினார்.

இது குறித்து இனி மேலதிகத் தகவல்கள் தரப்படாது என்றும் அவர் முகனூல் பக்கங்களில் கூறினார்.

இதை தனது ட்விட்டர் கணக்கில் எதிரொலித்த இம்ரான் கான், ” இது எனக்கும், ரெஹாமுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் வலியைத்தரும் காலகட்டம். எங்களது அந்தரங்க விஷயங்கள் குறித்து மரியாதை காட்டுமாறு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார்.

 

டெல்லியில் வசிக்கும் சோனியா காந்தி பிஹாரியா? பஹாரியா? : முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி கேள்வி

 பீகார் சட்டசபை தேர்தலில் நான்காம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் சமீபத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், ‘நீங்கள் ‘பிஹாரிக்கு’பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் வாக்களிக்க விரும்புகிறீர்களா? அல்லது, ‘பஹாரிக்கு’ வெளிநபர் வாக்களிக்கப் போகிறீர்களா? என்று மக்களைப் பார்த்து கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், பீகாரில் முன்னாள் முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவின் சொந்த மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க.வின் உச்சகட்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நிதிஷ் குமாரின் கருத்துக்கு சரியான பதிலடி தந்துள்ளார்.

‘இந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ள ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள்தான் கடந்த 60 ஆண்டுகளாக பீகாரில் ஆட்சி செய்துள்ளன. ஆனால், இந்த மாநிலத்துக்கு என்ன செய்தோம்? என்று அவர்களால் சொல்ல இயலவில்லை.

நிதிஷ் குமார் என்னை வெளிநபர் (‘பிஹாரி’) என்கிறார். இந்தியாவின் ஒரு சக்திவாய்ந்த உறுப்பாக இருக்கும் பீகாரை சேர்ந்த மக்கள் என்னை பிரதமராக்க வாக்களித்துள்ளனர். இந்த நிலையில் நான் எப்படி வெளிநபராவேன்? நான் என்ன பாகிஸ்தான் பிரதமரா? வங்காளதேசத்தின் பிரதமரா? அல்லது, இலங்கையின் பிரதமரா?

டெல்லியில் வசிக்கும் சோனியா வெளிநபர் என்று நிதிஷ் குமார் அழைப்பாரா? சோனியா காந்தி பிஹாரியா? பஹாரியா? என்பதை நிதிஷ் முதலில் விளக்க வேண்டும். தங்களது சாதனைகளைப் பற்றி சரியான விளக்கம் அளிக்க முடியாதவர்கள் இதைப்போன்ற விளையாட்டுகளின் மூலம் மக்களை திசைதிருப்ப முயற்சித்து வருகின்றனர்’ என மோடி கூறியுள்ளார்.

 

ரூ.16 கோடி வைப்புத்தொகை செலவில் நவம்பர் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் உயர்நீதிமன்றத்துக்கு மத்திய படை பாதுகாப்பு

 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பாதுகாப்பை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை அல்லது அதுபோன்ற ஓர் அமைப்பிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இரு நீதிமன்றங்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்கப்படுவதால் மத்திய படை பாதுகாப்பு அவசியமில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சுதந்திரமான ஒரு அமைப்பைக் கொண்டு உயர்நீதிமன்றத்துக்கு தற்காலிகமாக பாதுகாப்பு வழங்குவது அவசியம். அதன்மூலம், சுமுகமான பணிச்சூழல் உருவாகும். அதே வேளையில், தமிழக காவல்துறையினரை விலக்கிக் கொள்ள வேண்டாம் என்று கூறி, வழக்கை ஒத்தி வைத்தனர்.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் மத்திய படை பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்று தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

அடுத்த 6 மாதத்துக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கும். இதற்காக மத்திய அரசு கோரிய வைப்புத்தொகையான 16 கோடி ரூபாயை 7 நாட்களுக்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கூறிய நீதிபதிகள், டெல்லி, அலகாபாத் உயர்நீதிமன்றங்களில் இதுபோன்ற மத்திய படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக கூறினர்.

மைனர் பெண்ணை கடத்தி, திருமணம் செய்த கட்டுமானத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: ரூ. 1 லட்சம் அபராதம்

 ஈரோடு மாவட்டத்தில் 17 வயது மைனர் பெண்ணை கடத்தி மைசூரில் திருமணம் செய்துகொண்டவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், அருகே உள்ள சென்னிமலை பகுதியை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி சுரேஷ்(23). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை கடத்திச் சென்று மைசூரில் திருமணம் செய்துள்ளார்.

அதன் பின்னர், வேலூர் மாவட்டத்துக்கு திரும்பிவந்து அங்கு அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர், பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்த சுரேஷை கைது செய்ய வேண்டும் என காவல் துறையில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வேலூருக்கு சென்று அவரை கைதுசெய்த காவல் துறையினர், அந்தப் பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சுரேஷ் மீது ஆள்கடத்தல் மற்றும் மைனர் பெண்ணை ஏமாற்றி, திருமணம் செய்தது, சிறுமியருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் .

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தநிலையில் அந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி திருநாவுக்கரசு, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், சிறுமியை கடத்திய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் மற்றும் மைனர் பெண்ணை திருமணம் செய்தமைக்காக 2 ஆண்டுகள் என 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் இந்த ஆயுள் தண்டனையுடன் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார்.

டாஸ்மாக்குக்கு எதிராக பாடல் : மூடு டாஸ்மாக்கை மூடு பாடலுக்காக பாடகர் கோவன் கைது

 

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சமூக பிரச்சினைகளை வலியுறுத்தி வீதி நாடகங்களையும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பினர்.

 இந்த அமைப்பை சேர்ந்த பொறுப்பாளரும் பாடகருமான கோவன்(51) ‘‘மூடு டாஸ்மாக்கை மூடு’’ என்ற தலைப்பில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக பாடல் ஒன்றை எழுதி அதனை ஆடியோ மற்றும் வீடியோவாக தயாரித்து அமைப்பின் பெயரில் வெளியிட்டு இருந்தார் .

‘‘ஊருக்கு ஊரு சாராயம்… தள்ளாடுது தமிழகம்’’ என்று தொடங்கும் பாடல் வீடியோவில் டாஸ்மாக் மதுவுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.அ ந்த பாடல் வீடியோ வாட்ஸ்–அப், யூ.டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது.

இதை தொடர்ந்து 124ஏ (தேச துரோகம்), 153 (2 பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல்), 505(1) (குற்றம் செய்ய தூண்டுதல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் கோவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து இன்று அதிகாலையில் சென்னை காவல் துறையினர்திருச்சிக்கு விரைந்து சென்றனர்.

திருச்சி உறையூர் அருகே உள்ள மேல பாண்ட மங்கலம் அரவானூரில் கோவனை, அவரது வீட்டில் வைத்து பாடகர் கோவன் கைது செய்தனர். பின்னர் அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்

மக்கள் கலை இயக்கிய கழகம் அமைப்பை சேர்ந்தவர்கள் பாடகர் கோவன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து காவல் ஆணையர் அலுவலகம் முன்பு உதவி ஆணையர் அய்யப்பன், ஆய்வாளர் பிரபு ஆகியோர் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் பாடகர் கோவனை பார்ப்பதற்காக வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன், அந்த அமைப்பின் நிர்வாகிகளுடன் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார். கோவனை பார்ப்பதற்காக சென்ற அவர் திரும்பி வந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

திருச்சியில் இருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் பிடித்து வரப்பட்டுள்ள பாடகர் கோவன் எங்கு இருக்கிறான் என்பதை காவல் துறையினர் இதுவரை கூறவில்லை.

இன்று காலையில் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தால் அவரை பார்க்கலாம் என்று ஆய்வாளர் மெல்வின் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக இங்கு வந்தோம். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. பாடகர் கோவனை சந்தித்தும் பேச முடியவில்லை. உயர் அதிகாரிகள் யாரையும் சந்திக்க முடியவில்லை.

எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளோம். அது இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆலோசித்து வருகிறோம் என வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் கூறினார்.

 

ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் கைது

 ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தலைமையாசிரியரை மேற்கு வங்காளம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் கல்னா என்ற இடத்தில் இருந்து பர்த்வான் நோக்கி ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் மித்தாபுக்கூர் பகுதியில் வசிக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி நேற்று பிற்பகல் தனது தாயாருடன் பயணம் செய்தார்.

உட்கார சீட் கிடைக்காததால் அந்த மாணவி ஓரிடத்திலும், தாயார் மற்றொரு இடத்திலும் உட்கார்ந்து கொண்டனர். இந்நிலையில் அந்த சிறுமி அசந்து உறங்கி விட்டாள். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் தூக்கம் கலைந்து எழுந்த மாணவி, பயத்தில் அலறி கூச்சலிட்டாள்.சிறுமியின் அலறல் கேட்ட தாயாரும், மற்ற பயணிகளும் அந்த காம கொடூரனுக்கு தர்மஅடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து பிடிபட்ட நபரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் பினாய் தாஸ் என்றும் மேமாரி பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.தலைமையாசிரியர் மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.