December 5, 2025, 9:46 PM
26.6 C
Chennai

காஷ்மீர் விவகாரத்தில் ‘ரூட்’ மாறிய ராகுல்..! தலைவராக இல்லாமல்… எம்.பி., என்பதாலா?!

rahul modi - 2025

காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், பாகிஸ்தான் உட்பட எந்த நாடுகளும் இதில் தலையிட இடமில்லை என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் தனது டிவிட்டர் பதிவில் பதிவு செய்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுதான் என்பதை அவர் வெளிப்படையாகச் சொல்வதாக கருத்து தெரிவித்துள்ளனர் மற்ற காங்கிரஸ் தலைவர்கள். மேலும், ஜம்மு காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தானே காரணம் என்றும் அவர் கருத்துப் பதிவு செய்துள்ளார்.

ராகுல் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பல விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த வெளிநாடோ தலையிட அதிகாரம் இல்லை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்…

காஷ்மீரில் நடக்கும் வன்முறைகளை பாகிஸ்தானே தூண்டி விடுகிறது. மேலும் வன்முறையில் ஈடுபடுவோரை அது ஆதரிக்கவும் செய்கிறது. உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முக்கிய நாடாக இருக்கும் பாகிஸ்தான், காஷ்மீரிலும் வன்முறையை ஊக்குவிக்கிறது… என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பாகிஸ்தான் அதரவுக் கருத்துகளுடன், காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் காஷ்மீரில் பயங்கரவாதத்தை மோடி அரசு ஊக்குவிக்கிறது என குறிப்பிட்டிருந்த ராகுல், தற்போது வேறு மாதிரி கருத்து தெரிவித்திருக்கிறார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.
ஆனால் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு பிரச்னை; இதில் 3-வது நாடு தலையிட அனுமதி இல்லை என்று தெரிவித்தது.

ஆனால் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவரின் பேச்சு, காஷ்மீர் வெளிநாட்டு அமைப்புகளால், ஐ.நா.வால் கண்காணிக்கப் படும் பிரச்னை என்று கூறியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பாஜக., எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் காங்கிரஸ் திணறியது.

இந்நிலையில் தற்போது காஷ்மீர் பிரச்னை உள்நாட்டு விவகாரம் என்று ராகுல் தெளிவு படுத்தியிருக்கிறார். ஒருவேளை அவர் தலைவர் பதவியில் இல்லாமல், ஒரு எம்.பி., என்பதால் அவ்வாறு கூறியிருக்கிறாரோ என்று பலரும் ஆச்சரியப் படுகின்றனர். ஜெய்ராம் ரமேஷ், சசிதரூர், அபிஷேக் மனு சிங்வி வரிசையில் ராகுலும் சேர்ந்துவிட்டாரா என்றும் ஆச்சரியப் படுகின்றனர் நெட்டிசன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories