February 13, 2025, 12:32 PM
30.8 C
Chennai

‘கிரிமினல் லாயர்ஸ்’?! தில்லியில் போலீஸார் – வக்கீல்கள் மோதல்; பதற்றம்!

தில்லியில் உள்ள தீஸ் ஹசாரி, நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதனால் ஏராளமான பொது மக்கள் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நவ.2 சனிக்கிழமை இன்று நீதிமன்ற வளாகத்தில் தில்லி போலீஸார் மற்றும் வக்கீ்ல்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசாரின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் காயமடைந்த வழக்கறிஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் கூறப் படுகிறது. இந்த மோதல் சம்பவத்தால் தில்லி தீஸ் ஹசாரி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வாகன நிறுத்தம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது என்று கூறப் படுகிறது. இந்தச் சம்பவத்தில் இரு வழக்கறிஞர்கள் காயம் அடைந்து, செண்ட் ஸ்டீபன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

இந்த தகராறின் காரணம் குறித்து பேசிய டிஸ் ஹசாரி பார் அசோசியேஷனின் அலுவலக பொறுப்பாளர் ஜெய் பிஸ்வால், “ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வருகையில் அந்த வாகனத்தின் மீது ஒரு போலீஸ் வாகனம் மோதியது. வழக்கறிஞர் இந்த விவகாரத்தை எதிர்கொண்டபோது தகராறு வெடித்தது. அப்போது காவல்துறையினர் 6 பேர் அவரை உள்ளே அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். மக்கள் இதைப் பார்த்து போலீஸை அழைத்தனர்.

“எஸ்.எச்.ஓ மற்றும் உள்ளூர் போலீசார் உள்ளே வந்தனர். அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் உயர் நீதிமன்றத்துக்கு தகவல் அளித்தோம். 6 நீதிபதிகளுடன் ஒரு குழு அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் அங்கிருந்து சென்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்,” என்று கூறினார் பிஸ்வால்.

தில்லியின் பார் கவுன்சில் “வக்கீல்கள் மீது போலீஸார் நடத்திய மிருகத்தனமான தாக்குதலை” கண்டனம் செய்தது.

இந்நிலையில், வக்கீல்கள் திங்களன்று மாவட்ட நீதிமன்றங்களில் பணியை முற்றிலுமாக புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories