December 6, 2025, 6:00 AM
23.8 C
Chennai

‘கிரிமினல் லாயர்ஸ்’?! தில்லியில் போலீஸார் – வக்கீல்கள் மோதல்; பதற்றம்!

tis hazari police lawyers - 2025

தில்லியில் உள்ள தீஸ் ஹசாரி, நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதனால் ஏராளமான பொது மக்கள் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நவ.2 சனிக்கிழமை இன்று நீதிமன்ற வளாகத்தில் தில்லி போலீஸார் மற்றும் வக்கீ்ல்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசாரின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் காயமடைந்த வழக்கறிஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் கூறப் படுகிறது. இந்த மோதல் சம்பவத்தால் தில்லி தீஸ் ஹசாரி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வாகன நிறுத்தம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது என்று கூறப் படுகிறது. இந்தச் சம்பவத்தில் இரு வழக்கறிஞர்கள் காயம் அடைந்து, செண்ட் ஸ்டீபன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

இந்த தகராறின் காரணம் குறித்து பேசிய டிஸ் ஹசாரி பார் அசோசியேஷனின் அலுவலக பொறுப்பாளர் ஜெய் பிஸ்வால், “ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வருகையில் அந்த வாகனத்தின் மீது ஒரு போலீஸ் வாகனம் மோதியது. வழக்கறிஞர் இந்த விவகாரத்தை எதிர்கொண்டபோது தகராறு வெடித்தது. அப்போது காவல்துறையினர் 6 பேர் அவரை உள்ளே அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். மக்கள் இதைப் பார்த்து போலீஸை அழைத்தனர்.

“எஸ்.எச்.ஓ மற்றும் உள்ளூர் போலீசார் உள்ளே வந்தனர். அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் உயர் நீதிமன்றத்துக்கு தகவல் அளித்தோம். 6 நீதிபதிகளுடன் ஒரு குழு அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் அங்கிருந்து சென்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்,” என்று கூறினார் பிஸ்வால்.

தில்லியின் பார் கவுன்சில் “வக்கீல்கள் மீது போலீஸார் நடத்திய மிருகத்தனமான தாக்குதலை” கண்டனம் செய்தது.

இந்நிலையில், வக்கீல்கள் திங்களன்று மாவட்ட நீதிமன்றங்களில் பணியை முற்றிலுமாக புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories