நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்! சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை!

nia-national-investigation-agency
nia-national-investigation-agency

பயங்கரவாத வழக்கு விசாரணைகளை தீவிரப்படுத்த சென்னையில் NIA அமைப்புக்கு புதிய அலுவலகம் திறக்கப்படுகிறது. இதற்கென அதிகாரிகளும் நியமிக்கப்படுகின்றனர்

தமிழகத்தில் சில ஆண்டுகளாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களையும் என்.ஐ.ஏ., என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் கைது செய்து வருகின்றனர்

இந்து இயக்க பிரமுகர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு மதுரையில் அத்வானியை கொல்ல பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளையும் என்ஐஏ அமைப்பினர் திறம்பட கையாண்டு குற்றவாளிகளை கைது செய்தனர். இருப்பினும் இதுகுறித்த வழக்கு விசாரணையை கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டுவரும் என்ஐஏ அதிகாரிகளே நடத்தி வந்தனர். இதனால் காலதாமதம் ஏற்பட்டு வழக்கு விசாரணைகளில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் சென்னையில் தேசிய புலனாய்வு பிரிவு கிளை அலுவலகத்தை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் நீண்ட நாட்களாகவே திட்டமிட்டு வந்தது … அதற்கான அனுமதியை உள்துறை தற்போது வழங்கியுள்ளது. இதையடுத்து சென்னையில் விரைவில் என்ஐஏ அலுவலகம் அமைகிறது

சென்னை கிண்டியில் தற்போது என் ஐ ஏ அலுவலகம் தற்காலிகமாக ஒரு சில அதிகாரிகளுடன் செயல்பட்டு வருகிறது அங்கேயே புதிய கிளை அலுவலகம் தொடங்கப் பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான கட்டடங்களில் புதிய அலுவலகம் அமைய உள்ளது. இதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள என்ஐஏ அதிகாரிகளின் இரண்டு குழுக்கள் சென்னையில் முகாமிட்டு உள்ளது

சென்னையில் அமைக்கப்படும் என்ஐஏ கிளை அலுவலகத்தில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு உள்பட 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர் சென்னையில் புதிய அலுவலகம் அமைக்கப்பட்ட பிறகு என்ஐஏ விசாரணை தற்போது நடை பெறுவதை காட்டிலும் விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

nia
nia

இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை, இம்பால், ராஞ்சி ஆகிய 3 இடங்களில் புதிதாக என் ஐ ஏ கிளைகள் அமைப்பதற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது இது இந்த பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உடனடியாக விசாரணையை துரிதப்படுத்தவும் உதவியாக இருக்கும்

தற்போது என்ஐஏ அலுவலகத்திற்கு ஒன்பது கிளைகள் உள்ளன. கௌஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னௌ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகிய இடங்களில் என் அலுவலகத்துக்கு கிளைகள் உள்ளன. இதன் தலைமையகம் புதுதில்லியில் செயல்பட்டு வருகிறது தற்போது புதிதாக மூன்று கிளைகள் திறப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த அமைப்புக்கு 12 இடங்களில் கிளைகள் இருக்கும்!

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories