உடனே திருமணம் செய்து வைக்க மறுப்பு; மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

suicide
suicide

மதுரை உத்தங்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை : கடைக்காரர் கைது

மதுரை மே 1உத்தங்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரரை போலீசார் கைது செய்தனர் .

மதுரை உத்தங்குடி மெயின் ரோடு அம்மச்சியாபுரத்தில்தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கே.புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அந்தக் கடையிலிருந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பதுக்கி வைத்திருந்த 85 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் சுந்தரராஜனை கைது செய்தனர்.


மதுரை திருப்பாலையில் உடனடியாக திருமணம் செய்துவைக்க மறுத்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை!

மதுரை மே 1 திருப்பாலைபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு உடனடியாக பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்ததால் மனமுடைந்தவர்வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை கண்ணணேந்தலை சேர்ந்தவர் காளிமுத்து மகன் அருண்பாண்டி 26.இவர் தனக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோரை வற்புறுத்தி வந்தார்.

இதற்கு காலதாமதம் ஆனதால் மனமுடைந்த அருண்பாண்டி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்துஅவருடைய பாட்டி திருப்பாலை போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


முன்விரோதத்தில் நடந்து சென்றவரை வழிமறித்து தாக்குதல்? ஒருவர் கைது

மதுரை மே 1: முன்விரோதம் காரணமாக நடந்து சென்றவரை வழிமறித்து தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை திருப்பாலை மேல தெருவை சேர்ந்தவர் பாலாஜி 47. இவருக்கும் திருப்பாலை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த காசிதவம் 44 என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கண்ணன் நகர் பகுதியில் நடந்து சென்ற பாலாஜியை வழிமறித்த காசி தவம் அவரை அவரை அவதூறாக பேசியதோடு மட்டுமல்லாமல் இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார் .

இந்த சம்பவம் குறித்து பாலாஜி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காசிதவத்தை கைது செய்தனர்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories