சுபாஷிதம்: நேரத்தின் அருமை!

Published:

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

32. நேரத்தின் அருமை!

செய்யுள்:

காவ்ய சாஸ்த்ர வினோதேன காலோகச்சதி தீமதாம்|
வ்ஸனேன ச மூர்காணாம் நித்ரயா கலஹேன வா ||

— ஹிதோபதேசம்.

பொருள்:

காவியங்களையும் சாஸ்திரங்களையும் படிப்பதில் நேரத்தைச் செலவிட்டு மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பர் அறிவாளிகள். மூர்க்கர்கள் தீய பழக்க வழக்கங்களிலும் தூக்கத்திலும் சண்டை சச்சரவு களிலும் காலத்தைக் கழிப்பர்.

விளக்கம்:

காலட்சேபம் என்ற சொல்லை நாம் அடிக்கடி கேட்கிறோம். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக நேரத்தைச் செலவிடுவர். அறிவுடையோர் எவ்விதம் காலம் கழிப்பர்? முட்டாள்கள் எவ்விதம் பொழுது போக்குவர் என்பதை விளக்கும் ஸ்லோகம் இது. நல்ல பொழுதுபோக்கு என்றால் என்ன?

நேரத்தை வீண் பொழுது போக்காமல் ஞானம் பெறுவதையே இலக்காகக் கொண்டு நல்ல இலக்கியங்களைப் படிப்பதில் மகிழ்வார்கள் அறிவுடையவர்கள். நல்ல விஷயங்களைப் படித்தும் கேட்டும் சத்சங்கத்தில் ஈடுபடுவது அவர்களின் தினசரி பொழுதுபோக்கு.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

அதன் மூலம் நல்ல பண்பாடு வளர்ந்து வாழ்க்கை ஆனந்தமயமாகும். நேரத்தின் மதிப்பை அறியாமல் உண்பதும், உறங்குவதும், பிறரோடு கலகம் செய்வதும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதும், தீய பழக்கங்களுக்கு ஆளாவதுமாக பொழுதைப் போக்குவர் முட்டாள்கள்.

கடந்து போன காலம் திரும்ப வராது. அதனால் நேரத்தின் மதிப்பை அறிந்து நடந்து கொள்ள வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல நண்பர்களோடு பழக வேண்டும் என்பது இதன் உட்பொருள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img