விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு வளையல் மஹோத்ஸவம்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

IMG 20191026 WA0070 - 2026

விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு வளையல் மஹோற்சவம்.

சகல சுகங்களையும் அருளும் விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் கொலு வீற்றிருக்கும் இந்த்ரகீலாத்ரி மலை வளையல் உற்சவத்திற்கு தயாராகி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கனக துர்க்கை அம்மனை மட்டுமின்றி ஆலய வளாகத்தையும் வளையல்களால் அழகாக அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம்.

இந்த மாதம் 29 ஆம் தேதி வளையல் உற்சவத்தை மிக வைபவமாக நடத்துவதற்கு ஆலய கமிட்டி ஏற்பாடு செய்து வருகிறது.

IMG 20191026 WA0072 - 2026

இந்திரகீலாத்ரி மலைமேல் கோயில் கொண்டுள்ள ஶ்ரீதுர்கா மல்லேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் இந்த மாதம் 29 ஆம் தேதி நடக்கவிருக்கும் வளையல் திருவிழாவில் அம்மனின் மூல விக்கிரகத்தை பலநிற வளையல்களால் அலங்காரம் செய்வார்கள்.

கனகதுர்காவின் சன்னிதியை மட்டுமின்றி ஆலயம் முழுவதும் வண்ண வண்ண வளையல்களால் கண்ணைக் கவரும் வகையில் அலங்கரித்து ஆனந்தம் அடைவர்.

IMG 20191026 WA0073 - 2026

2016 முதல் தொடங்கப்பட்ட இந்த விசேஷ பூஜை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

முதல் ஆண்டு ஐந்து லட்சம் வளையல்களோடு தொடங்கிய இந்த வளையல் திருவிழா இந்த வருடம் ஒரு கோடி வளையல்களைக் கொண்டு கொண்டாடப்படுகிறது.

தேவஸ்தானம் வளையல்களை வாங்குவதோடு பக்தர்களும் மிக அதிக அளவில் அம்மனுக்கு வளையல்களை வாங்கி சமர்ப்பிப்பார்கள்.

அதற்கென்று தேவஸ்தானம் தனி கொண்டர் திறந்துள்ளது.

IMG 20191026 WA0071 - 2026

பதினைந்தாம் நூற்றாண்டில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

விஜயநகர அரசர்கள் தங்க ஆபரணங்களோடு வளையல்களையும் சிறப்பாக அம்மனுக்கு சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

உற்சவம் நிறைவடைந்த பின்னர் அம்மனை அலங்கரித்த வளையல்களை பக்தர்களுக்கு பகிர்ந்து அளிப்பது வழக்கம்.

Related articles

Recent articles

spot_img