சேதுலார ஸ்ருங்காரமு ஜேஸி ஜுதனு ஸ்ரீ ராம

சேதுலார ஸ்ருங்காரமு ஜேஸி ஜுதனு ஸ்ரீ ராம

(ஸ்ரீராமனைக் கண்குளிர அலங்கரித்து மகிழவே இந்தக் கைகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்று தியாகராஜர் சொல்கிறார்-அம்பாளுக்குக் குங்கும அர்ச்சனை செய்வதை விட இந்தக் கைகளுக்குப் பெரும் பேறு என்ன இருக்கிறது?–பெரியவா).

தொடர்ந்து நான்கு சஹஸ்ரநாம பூஜை குங்குமத்தால் செய்த பெரியவாளின், வலக்கை விரல் வீங்கினாற் போல காணப்பட்டுதும், தொண்டர் மலரினால் அர்ச்சனை செய்ய வேண்டிக் கொண்டதற்கும், -பெரியவாளின் பதில் மேலே)(பெரியவாளின் பூஜையும்-இசை ஞானமும்)தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.குடந்தைக்கு அருகில் கல்லூர் என்ற கிராமம். 1939-ஆம் ஆண்டு நவராத்திரி பூஜைகள் முடிந்தபிறகு இந்தக் கிராமத்தில் முகாமிட்டிருந்தார்கள் ஸ்ரீசுவாமிகள். அருணோதயத்தில் தொடங்கிய பூஜை மதியம் ஒரு மணியளவில்தான் நிறைவுற்றது.மாலையில்
அந்த ஊர்க் கோயிலுக்குச் சென்றார்கள்..ஸ்ரீசுவாமிகளின் அணுக்கத் தொண்டர் ஒருவர் பக்கத்தில் சென்று கொண்டிருந்தார்.சுவாமிகளின் வலக்கை ஆள்காட்டி விரலும்,கட்டை விரலும் சிறிது வீங்கினாற்போல் சிவந்திருப்பதை அந்த அன்பர் கண்டார்.சுவாமிகளிடம் எப்படிக் கேட்பது என்று புரியாமல் தொடர்ந்தார்.தம் வலக்கை விரல்களையே கவனித்துச் செல்லும் தொண்டரை, “என்ன அப்படிப் பார்க்கிறாய்?” என்று ஸ்வாமிகள் வினவினார்கள்.”மன்னிக்க வேண்டும், தங்கள் கை விரல்கள் சற்று வீங்கினாற் போல் காண்கிறது.காலையில் நான்கு சகஸ்ரநாமங்கள் குங்கும அர்ச்சனை செய்ததால் இருக்கலாம். கொஞ்சம் தேங்காயெண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும். மேலும் மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது” என்றார் தொண்டர்.”அப்படியா?” என்று தம் கையைப் பார்த்து முறுவல் பூத்த ஸ்ரீசுவாமிகள் உடனே மெல்லிய தொனியில் கரகரகப்ரியா ராகத்தில், ‘சேதுலார ஸ்ருங்காரமு.. ஜேஸி ஜூதனு ஸ்ரீராம..’ என்ற கீர்த்தனையைப் பாடிக்கொண்டே வந்தார்கள்.பாடல் முடிந்ததும், “இது யார் செய்த கீர்த்தனை தெரியுமா?” என்று கேட்டார்கள்.”தெரியவில்லை” என்று தலையாட்டினார் தொண்டர்.”தியாகராஜ சுவாமிகள் பாடியது. ‘ஸ்ரீராமனைக் கண்குளிர அலங்கரித்து மகிழவே இந்தக் கைகள் படைக்கப்பட்டிருக்கின்றன’ என்பது
கீர்த்தனையின் பொருள்.அம்பாளுக்குக் குங்கும அர்ச்சனை செய்வதைவிட இந்தக் கைகளுக்குப் பெரும் பேறு என்ன இருக்கிறது? இரண்டு விரல்களாலும் அழுத்தமாக எடுத்து ஜகன்மாதாவின் திருவடியில் அர்ச்சித்தால்தான் பலன் உண்டு. அப்படி இல்லாமல் பாதி தரையிலும் பாதி அம்பாள் பாதத்திலும் விழுமாறா அர்ச்சனை செய்வது?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories