திருப்பதி: சிறப்பு தரிசனம் ஆன்லைன் டிக்கெட் தொடக்கம்!

thirupathi 2
thirupathi 2

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.. குறிப்பாக அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது..

அந்த வகையில் திருப்பதி கோயிலில் இலவச தரிசனம் நிறுத்தப்பட்டது.. எனினும் தொற்று பாதிப்பு குறைந்ததால், கடந்த மாதம் முதல் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசனத்திற்கு தேவஸ்தான நிர்வாகம் அனுமதி வழங்கியது..

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு டிக்கெட்டுகளை தற்போது ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்.. ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு ஒரு நபருக்கு 300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்..

நவம்பர் மாத ஒதுக்கீட்டு சர்வ தரிசனம் டிக்கெட்டுகளின் ஆன்லைன் முன்பதிவு இன்று (அக்டோபர் 23) காலை 9 மணி முதல் தொடங்கும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

இருப்பினும், டிசம்பர் 8 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்களுக்கு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன..

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல உங்கள் டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள் இதோ:

  1. tiruupatibalaji.ap.gov.in என்ற திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ TTD வலைத்தளத்திற்குச் செல்லவும்.
  2. காலை 9 மணிக்குப் பிறகு டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்
  3. முன்பதிவு திறந்தவுடன், “சிறப்பு நுழைவு தரிசன (ரூ .300) டிக்கெட்டுகளை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும் (Please click here to book Special Entry Darshan (Rs.300) tickets)” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் கிளிக் செய்யவும்.
  4. தேவையான விவரங்களை பூர்த்தி செய்து கட்டணத்தை செலுத்தவும்.
  5. அதன் பிறகு உங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்

இதனிடையே திருப்பதியில் கோவிட் -19 வழிகாட்டுதல்களுடன் தரிசனம் நடைபெறுகிறது.. மேலும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்கள் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு செல்பவர்களுக்கு மட்டுமே திருப்பதி கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்..
இந்த சான்றிதழ் தரிசனம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

ஒரு நாளைக்கு 30,000க்கும் குறைவான பக்தர்கள் திருப்பதிக்கு செல்கின்றனர். கொரோனா தொற்றுநோய்க்கு முன்பு, திருமலையில் சராசரியாக பக்தர்கள் ஒரு நாளில் சுமார் 70,000-80,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories