December 6, 2025, 9:16 AM
26.8 C
Chennai

சுபாஷிதம்: எது நல்ல தானம்!?

subhashitam_1-5
subhashitam_1-5

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

97. எது நல்ல தானம்?  

ஸ்லோகம்:

சதாம் தனம் சாதுபிரேவ புஜ்யதேதுராத்மபிர்துஸ்சரிதாத்மனாம் தனம் |
சுகாதயஸ்சூதபலானி புஜ்ஜதே பவந்தி நிம்பா: கலு காகபோஜனா: ||

பொருள்: 

நல்லவர்களின் செல்வம் சத்புருஷர்களுக்கு உதவுகிறது. தீயவர்களின் செல்வம் தீய வழியில் செல்வோருக்கு உதவுகிறது. எது எவ்வாறாயினும் மாம்பழங்களை கிளிகள் தின்னும். வேப்பம்பழங்கள் காகங்கள் தின்னும்.

விளக்கம்: 

சமுதாயத்தில் நற்செயல்களுக்கு உதவுவோர் இருப்பார்கள். அதற்கு மாறாக அதர்மச் செயல்களுக்கு மட்டுமே செல்வத்தை பகிர்பவர்களும்   இருப்பார்கள். அது அவரவர் மன நிலையை வெளிப்படுத்துகிறது.

கோயில் கட்டுவது போன்ற நற்காரியங்களுக்கு நல்லோர் நன்கொடை அளிப்பர்.  நாட்டின் நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடிய, மத மாற்றங்களை ஊக்குவிக்கும் அமைப்புகளிலும் அழிவுச் செயல்களிலும் ஈடுபடுவோருக்கு நல்லோர் உதவி புரிய மாட்டார்கள்.

தேசத் துரோக செயல்களுக்கும் சமுதாய எதிர்ப்பு செயல்களுக்கும் தீயவர்களின் செல்வம் உதவி புரியும். இவர்கள் எப்போதுமே சமுதாய நலனுக்காக பைசா கூட செலவு செய்ய மாட்டார்கள். அவரவர்களின் பண்பாட்டைப் பொறுத்து அவரவர்களின் நடத்தை இருக்கும். இந்த உண்மையை எடுத்துரைக்கும் இந்த ஸ்லோகத்தில் பழங்களையும் பறவைகளையும் குறைத்து மதிப்பிடுவது கவியின் உத்தேசம் அல்ல. 

இது ஒரு சமத்காரமான உவமேயம் மட்டுமே.
ஏரி, குளங்களை வெட்டுவது, மரம் நடுவது போன்ற நற்செயல் செய்வோரின் புகழ் நெடுங்காலம் நீடித்திருக்கும். குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டுபவர்களையும் மரங்களை வெட்டியெறிபவர்களையும் இயற்கை கட்டாயம் தண்டிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories