சுபாஷிதம்: எது நல்ல தானம்!?

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

subhashitam_1-5
subhashitam_1-5

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

97. எது நல்ல தானம்?  

ஸ்லோகம்:

சதாம் தனம் சாதுபிரேவ புஜ்யதேதுராத்மபிர்துஸ்சரிதாத்மனாம் தனம் |
சுகாதயஸ்சூதபலானி புஜ்ஜதே பவந்தி நிம்பா: கலு காகபோஜனா: ||

பொருள்: 

நல்லவர்களின் செல்வம் சத்புருஷர்களுக்கு உதவுகிறது. தீயவர்களின் செல்வம் தீய வழியில் செல்வோருக்கு உதவுகிறது. எது எவ்வாறாயினும் மாம்பழங்களை கிளிகள் தின்னும். வேப்பம்பழங்கள் காகங்கள் தின்னும்.

விளக்கம்: 

சமுதாயத்தில் நற்செயல்களுக்கு உதவுவோர் இருப்பார்கள். அதற்கு மாறாக அதர்மச் செயல்களுக்கு மட்டுமே செல்வத்தை பகிர்பவர்களும்   இருப்பார்கள். அது அவரவர் மன நிலையை வெளிப்படுத்துகிறது.

கோயில் கட்டுவது போன்ற நற்காரியங்களுக்கு நல்லோர் நன்கொடை அளிப்பர்.  நாட்டின் நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடிய, மத மாற்றங்களை ஊக்குவிக்கும் அமைப்புகளிலும் அழிவுச் செயல்களிலும் ஈடுபடுவோருக்கு நல்லோர் உதவி புரிய மாட்டார்கள்.

தேசத் துரோக செயல்களுக்கும் சமுதாய எதிர்ப்பு செயல்களுக்கும் தீயவர்களின் செல்வம் உதவி புரியும். இவர்கள் எப்போதுமே சமுதாய நலனுக்காக பைசா கூட செலவு செய்ய மாட்டார்கள். அவரவர்களின் பண்பாட்டைப் பொறுத்து அவரவர்களின் நடத்தை இருக்கும். இந்த உண்மையை எடுத்துரைக்கும் இந்த ஸ்லோகத்தில் பழங்களையும் பறவைகளையும் குறைத்து மதிப்பிடுவது கவியின் உத்தேசம் அல்ல. 

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

இது ஒரு சமத்காரமான உவமேயம் மட்டுமே.
ஏரி, குளங்களை வெட்டுவது, மரம் நடுவது போன்ற நற்செயல் செய்வோரின் புகழ் நெடுங்காலம் நீடித்திருக்கும். குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டுபவர்களையும் மரங்களை வெட்டியெறிபவர்களையும் இயற்கை கட்டாயம் தண்டிக்கும்.

Related articles

Recent articles

spot_img