March 17, 2025, 7:53 PM
29.8 C
Chennai

ராகுல் காந்தி சாமியாராகி விட்டால் நாட்டுக்கு நல்லது : பொன்.ராதாகிருஷ்ணன்

கரூர் அருகே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, ராகுல் காந்தி சாமியார் ஆகிவிட்டால் நாட்டுக்கு நல்லது என்றார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரும்பபட்டி பகுதியில் அனைவருக்கும் நல வாழ்வுமைய்யம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இந்த மையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நலவாழ்வு மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்., மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துதுறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு கட்டிடங்களில் ஒன்றை மத்திய அமைச்சரும் மற்றொன்றை தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து சுகாதார மைய்ய வளாகத்தில் இருவரும் மரக்கன்றுளை நட்டு வைத்து நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம், கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தொடர்ந்து பா.ஜ.க., திமுக கூட்டணி குறித்து கூறி வருகின்றாரே என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி குறித்து பேச இது உகந்த நேரமல்ல என்றும்., தேர்தல் நெருங்கி வரும் போது தான் இது குறித்து பேசுவார்கள் என்றும் கூறினார். மேலும், தம்பிதுரை நாடளுமன்றத்தின் துணை சபாநாயகர்., நல்ல மனிதர்., அவர் ஒரு கருத்து கூறுகிறார் எனபதற்காக நான் எதிர் கருத்து கூறுவது நன்றாக இருக்காது என்றார்.

Mee too மீ டூ விவகாரம் குறித்த கேள்விக்கு அது முறையான செயலாக இருக்காது என்றும் இது நமது வீட்டு பெண்களை நாம் இழிவு படுத்துவதற்கு சமம். இது ஏற்று கொள்ள முடியாது என்றார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி சமீப காலமாக காவி உடை தரித்து கோவில்களுக்கு சென்று வருகிறார். அவர் சாமியாராகி விடுவார் போலிருக்கிறதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு., அவர் சாமியார் ஆனால் நாட்டுக்கு நல்லது என்றார்.

அண்மையில் திருச்சி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விமான நிலையத்தின் சுற்று சுவரை இடித்து கொண்டு சென்ற விவகாரம் குறித்த கேள்விக்கு., ஒரு விதத்தில் பயணிகளை பத்திரமாக மும்பையில் கொண்டுசென்று இறக்கி விட்டுள்ளார் விமானி. அதனால் அவரை பாராட்டுகிறேன். என்றாலும் நடந்த சம்பவம் குறித்துவிசாரனை நடத்தப்பட வேண்டும் என்றார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

பஞ்சாங்கம் மார்ச் 17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மார்ச்-16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

பஞ்சாங்கம் மார்ச் 17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மார்ச்-16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஊடகவாதிகளே… திருந்துங்கள் இல்லையேல் திருத்தப்படுவீர்கள்!

ஊடகவாதிகளே ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையில் உங்களைப்போல தரமற்ற மனிதர்களால் தான் தேசத்தை அரிக்கும் புற்றுநோய் போல மாறி வருகிறது

தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை!

தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை

Entertainment News

Popular Categories