எப்ப பார்த்தாலும் தூங்கணும் போல தோணுதா?

sleep - 2026

சில நேரங்களில் அன்றைய நாள் முழுவதுமே ஒரே தூக்க கலக்கமாக தென்படும். காரணம் நீங்கள் சரியாக தூங்காமல் இருப்பது, சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது இது போன்ற காரணத்தால் ஹைப்பர்ஷோமினியா அல்லது தூக்கமின்மை பிரச்சினை ஏற்படலாம்.

அந்த நாள் முழுவதும் இப்படி ஒரே தூக்கமாக வருவது நமக்கு உடலளவிலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதனால் மன அழுத்தம், அனிஸ்சிட்டி, டென்ஷன் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

சில நேரங்களில் இந்த தூக்க பிரச்சினை மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட நேரிடலாம். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உணவு பிரச்சினைகள், நாள்பட்ட வலி, உடற்பயிற்சியில் ஒழுங்கின்மை, ஆல்கஹால், டயாபெட்டிக் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் போன்ற காரணத்தாலும் ஏற்படும்.

மதிய வேளையில் அதிகமாக உணவை எடுக்காதீர்கள், காலையிலும் மாலையிலும் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை தவிர்த்து நட்ஸ், பழங்கள், சாண்ட்விட்ச், பழ ஜூஸ்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதே மாதிரி தூங்க போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே சாப்பிட்டு விடுங்கள். அப்பொழுது தான் நிம்மதியாக உறங்க முடியும்.

தினமும் 30 நிமிடங்கள் என்று 5 தடவை நடங்கள். இது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கி விடும். மேலும் இரவு நேரத்திலும் நல்ல தூக்கம் வரும். வெளியில் இருந்து உடற்பயிற்சி செய்வது இன்னும் கூடுதல் பலனளிக்கும்.

காலையில் எழுந்ததும் பூங்காவில் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

கை, கால்களை நீட்டுதல் போன்ற உடற்பயிற்சி அந்த நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைக்க உதவும்.

மாலையில் ஏரோபிக் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். படுக்கைக்கு போவதற்கு முன் செய்வதை தவிருங்கள்.

மூச்சுப்பயிற்சி உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கும். யோகா பயிற்சி கூட நீங்கள் செய்யலாம்.

அரோமாதெரபி பகல் நேரங்களில் ஏற்படும் தூக்க கலக்கத்தை போக்க உதவியாக இருக்கும். எரிச்சல், குறைந்த ஆற்றல், சோர்வு மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளுக்கு இதன் மூலம் முடிவு கட்டலாம். ரோஸ்மேரி, துளசி மற்றும் புதினா ஆயில்கள் நமக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும்.

ஒரு துணி மீது உங்களுக்கு பிடித்த அரோமோ எண்ணெய்யை சில துளிகள் ஊற்றவும். அந்த நறுமணமே உங்களை காலையில் சுறுசுறுப்பாக எழ வைத்து விடும்.

அப்படி இல்லையென்றால் குளிக்கும் நீரில் சில துளிகள் இந்த எண்ணெய்யை கலந்து குளிக்கலாம்.

இந்த ஆயிலை ஆபிஸ் முழுவதும் பரப்பி நல்ல நறுமணத்தை நுகரச் செய்து உற்சாகமாக வேலை பார்க்கலாம்.

2014 ல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் படி ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நல்ல தூக்கத்தை தருகிறது என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம்மை கவனமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட வைக்கிறது.

சால்மன், ஏரி மீன்கள், மத்தி, மானேரெல் மற்றும் அல்பாகோரே டுனா போன்ற மீன்களை சாப்பிடலாம்.
வால்நட்ஸ் மற்றும் ஆளி விதைகள்
பீனாட் பட்டர்
கேனலோ ஆயில்
முட்டை
சோயா பீன்ஸ் மற்றும் சோயா பொருட்கள்.

தவிர்க்க வேண்டியது
உங்களுக்கு அதிகமான தூக்கத்தை தரக் கூடிய உணவுகளை முதலில் தவிர்ப்பது நல்லது. பாஸ்ட்ரி, பாஸ்தா, உருளைக்கிழங்கு, வெள்ளை அரிசி போன்றவை அதிக தூக்கத்தை வரவழைக்கும்.

காலையில் காபினேட்டேடு பானங்களை குடிப்பதை தவிருங்கள். இது முதலில் உங்களுக்கு உற்சாகத்தை வரவழைக்க கூடியதாக இருந்தாலும் பிறகு நாள் முழுவதும் தூக்கத்தை கொடுக்கும்.

பகல் நேரங்களில் ஆல்கஹால் பருகுவதை தவிருங்கள். பதப்படுத்தப்பட்ட மற்றும் வாட்டிய இறைச்சிகளை தவிருங்கள்.
காலை உணவில் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை எடுப்பதை தவிருங்கள்.

20 நிமிடங்களுக்கு உங்களுக்கு நீங்களே எனர்ஜி கொடுத்து கொள்ளுங்கள்

10 நிமிடங்களுக்கு உடம்பிற்கு மசாஜ் செய்யுங்கள். இது மன அழுத்தம், டென்ஷன் போன்றவற்றை குறைக்கும்.

நல்ல இசை கூட உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்

இஞ்சி, மிளகாய் போன்றவை தூக்க கலக்கத்தை போக்கி விடும்

நொறுக்கு தீனிகள், சேச்சுரேட்டேடு கொழுப்பு உணவுகள், சர்க்கரை போன்றவை நாள் முழுவதும் தூக்கத்தை ஏற்படுத்தும்.

தியானம் செய்து விட்டு படுக்கைக்கு செல்லலாம் தூக்கம் வருகின்ற சமயங்களில் 5 நிமிடங்கள் நடக்கலாம்.
வாயில் சுவிங்கம் மெல்லுவது கூட தூக்கத்தை வரவழைக்காது

வேலை செய்யும் போது கொஞ்சம் ஓய்வு கொண்டு உங்களை புத்துணர்வு ஆக்கி கொள்ளலாம்.

வேலை செய்யும் இடத்தை பார்ப்பதற்கு அழகாகவும் பிரைட்டாகவும் வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் தூக்கத்தை போக்கி விடும்.

அக்குபஞ்சர் போன்றவை தூக்க கலக்கத்தை போக்க உதவும்

மருத்துவரை அணுகாமல் எடுத்துக் கொண்டு இருக்கின்ற மாத்திரைகளை நிறுத்தாதீர்கள். ஏனெனில் அதன் விளைவாக கூட தூக்கத்தில் மாற்றம் ஏற்படலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories