சோளிங்கர் கோயிலில் பூஜையை தடுத்த கிறிப்டோ ‘கிறிஸ்துவ ஊழிய’ஸ்தருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

sholingertemple pooja - 2026

அறநிலையத்துறையில் உள்ள கிரிப்டோ கிறிஸ்தவ ஊழியர் ஒருவரால் சோளிங்கர் கோயிலில் வழக்கமான பூஜை நடத்தப்படாமல் நிறுத்தப் பட்டது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் வழக்கமாக நடைபெறும் திருவோணத் திருமஞ்சனம் நடத்தப்படாமல் தடுக்கப்பட்டது பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் வரும் மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெருமளவில் கூடும் காய்கறி சந்தை பள்ளி மைதானங்களிலும் பேருந்து நிலையங்களிலும் நடந்து வருகின்றன. மளிகைக் கடைகள் உட்பட மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான அங்காடிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்கள் மால்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதே போல் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற இந்த விஷயத்தில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இருப்பினும் கோவில்களில் வழக்கமாக நடைபெற வேண்டிய பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை அந்தந்த ஆலயங்களில் அர்ச்சகர்கள் மட்டும் சென்று நடத்த நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி அர்ச்சகர்கள் மட்டும் ஆலயங்களுக்குச் சென்று பூஜைகளை நடத்தி வருகின்றனர். பக்தர்களுக்கு கோயில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

108 வைணவ திவ்ய தலங்களில் ஒன்றான திரு கடிகாசலம் என்ற அழைக்கப்படும் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அறநிலையத்துறை வழிகாட்டுதலில் வழக்கமான பூஜைகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை அர்ச்சகர்கள் சென்று நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

இந்நிலையில் கோயிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் ஆதி கேசவப் பெருமாளுக்கு ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறும் சிறப்பு திருமஞ்சனம் கடந்த 16ஆம் தேதி வந்த திருவோண நட்சத்திர நாளில் நடத்தப் படவில்லை. அதுபோல மறுநாள் காலை 17ஆம் தேதி மூலவர் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி அமிர்தவல்லி தாயாருக்கு நடைபெற வேண்டிய திருமஞ்சனமும் நடைபெறவில்லை.

இது குறித்த தகவல் வெளியானதும், அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் உதவி ஆணையரிடம் புகார் அளித்தனர். இதை அடுத்து காலை நடைபெற வேண்டிய திருமஞ்சனம் மதியம் 12 மணிக்குப் பிறகு நடைபெற்றது. ஆயினும் திருவோண திருமஞ்சனம் நடத்தப் படாமல் போனது பக்தர்களுக்கு பெரும் மனவேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் கோயிலில் முறைப்படி நடத்தப்பட வேண்டிய பூஜைகளை நிறுத்திய நிர்வாக பொறுப்பில் இருந்த கிளார்க் அந்தோணி என்கிற நரசிங்க ராஜன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதோடு அவரை வேறு துறைக்கு மாற்ற வேண்டும் அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் இருப்பதால் இதுபோன்று வேண்டுமென்றே பூஜைகளை நடத்தாமல் செய்கின்றனர் என்று புகார் தெரிவித்தனர்

ஆலயத்தில் பணிபுரியும் ராஜா ஸ்வாமிகள் இது குறித்து தெரிவித்த போது, உதவி ஆணையர் மோகனசுந்தரத்திடம் புகார் அளித்தோம். ஆனால் அவரோ பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறாரே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்து சமய அறநிலையத்துறை இது போன்ற வேற்று மதத்தைப் பின்பற்றும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவர்கள் ஆலய நிர்வாகத்தில் இருந்து கொண்டு ஆலய வழிபாட்டைத் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறினார். இதுபோல், தொட்டயாசார்ய ஸ்வாமிகளின் வழி சீடர்களும் கோரிக்கை விடுத்தனர்.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

சமூக தளங்களில் இந்த விவகாரம் பெரிதும் விவாதிக்கப் பட்டது. பிரபல உபந்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணனும் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தார்…

அடியேனும் ஸ்வாமி தொட்டையாசார்யர் சிஷ்யன். திருவோணத்தன்று கேசவப் பெருமாள் திருமஞ்ஜனம் நிறுத்தப்பட்டது தவறு. காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆசார்ய ஸ்வாமிகள் எடுத்துச் சொல்லி வெள்ளிக்கிழமை பெரிய மலையிலும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) சின்ன மலையிலும் திருமஞ்ஜனம் நடந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories