கோயில் காணிக்கைத் தங்கத்தை உருக்கக் கூடாது: இந்து முன்னணி தீர்மானம்!

hindu munnani nellai meeting1
hindu munnani nellai meeting1

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் அடங்கிய, இந்து முன்னணி நெல்லை கோட்ட பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டி ஜெய்ஸ்ரீ திருமண மண்டபத்தில் 10.10.2021 ஞாயிறு இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

கோட்டத் தலைவர் T.தங்கமனோகர் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் பெ.சக்திவேலன், M.சீனிவாசன் (கோவில்பட்டி நகர தலைவர்) முன்னிலை வகிக்க, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். கம்மவார் சமுதாய சங்க தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் திருவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக, நா.முருகானந்தம் (மாநில பொதுச் செயலாளர்), டாக்டர் த.அரசுராஜா (மாநில பொதுச்செயலாளர்), வி.பி.ஜெயக்குமார் (மாநில துணைத் தலைவர்), கே.கே. பொன்னையா (மாநில இணை அமைப்பாளர்), கா.குற்றாலநாதன் (மாநில செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி நகர செயலாளர் S.வெங்கடேசன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களை சார்ந்த மாவட்ட , ஒன்றிய , நகர இந்துமுன்னணி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் முன்னணி , வழக்கறிஞர் முன்னணி , ஆட்டோ தொழிலாளர் முன்னணி , இந்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

hindu munnani nellai meeting2
hindu munnani nellai meeting2

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) பக்தர்கள் கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்த தங்கத்தை இந்து சமய அறநிலையத்துறை உருக்க கூடாது. அது ஊழலுக்கு வழிவகுக்கும் திட்டமாகும் எனவே இத்திட்டத்தை கைவிட தமிழக அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது

2) கன்னியாகுமரி மாவட்டம் தாய்தமிழகத்துடன் இணைய போராடிய அய்யா தாணுலிங்கநாடார் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினமான நவம்பர் 1ஆம் தேதி அரசு விழா எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது

3 )1982-ஆம் ஆண்டு குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்பட்ட மண்டைக்காடு கலவரத்தில் காணாமல் போன 14 ஹிந்துக்கள் 40 வருடங்களுக்கு மேலாகியும் கிடைக்காத நிலையில் அவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து அவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது

4 ) நெல்லை மாநகரம் பழைய பேட்டையில் 250 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் இந்துக்களின் நிலங்களை தற்போது வக்பு வாரிய நிலம் என கூறி முஸ்லிம்கள் அபகரிக்க முயற்சி செய்கின்றனர் . பத்திரப் பதிவுத் துறையும் மின்சார வாரியமும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பத்திரப் பதிவையும் புதிய மின் இணைப்பையும் நிறுத்தியுள்ளது கண்டனத்துக்குரியதாகும் பழையபடி பத்திரப்பதிவு மின் இணைப்பும் தொடர வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது

5) தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணிகளை காரணம் காட்டி பல இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு வருவது வேதனைக்குரியதாகும் ஆலயங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி அதன் பின்னர் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது

6) திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா வள்ளியூர் சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சர்ச் நிர்வாகம் ஆக்கிரமித்து கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறது . மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் அந்த சர்ச் கட்டுமானங்களை அகற்றி அங்கு முருகன் கோவிலுக்கு அன்னதான கூடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது

7)தூத்துக்குடி மாவட்டம் சுதந்திர போராட்ட வீரர்கள் தளபதி பிள்ளை மதுரகவி பாஸ்கரதாஸ் ஆகியோரது நினைவிடங்களை பராமரித்து அவர்களுக்கு அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories