ஸ்கூலில் இருந்து வரும் அண்ணனை வரவேற்கும் அன்புத்தம்பி!

brothers 1 - 2026

குழந்தைகளின் பாசத்தை பார்த்து சமூக வலைதளங்களில் நெகிழ்வான பதிவுகள் பரவலாக பதியப்பட்டு வருகிறது.

பள்ளியில் இருந்து வரும் அண்ணனை எதிர்பார்த்து காத்திருக்கும் தம்பியின் வீடியோ இது. வைரலாகி வரும் வீடியோவில், பள்ளிப் பேருந்துக்காக சாலையில் காத்து நிற்கும் சிறுவன் பரபரப்புடன் காத்துக் கொண்டிருக்கிறான்.

தொலைவில் பள்ளிப் பேருந்து வருவதை பார்த்தவுடனேயே, குழந்தை மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது. அந்த குதூகலம், தம்பியின் பாசத்தை காட்டுவதாக இருப்பதால், பார்ப்பவர் எல்லாம் தொடர்ந்து இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

பள்ளிப் பேருந்தை தூரத்திலிருந்து பார்த்தவுடன் அந்தச் சிறுவன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்ததைக் காணலாம். பள்ளிப் பேருந்து அவன் அருகில் வர, அவனது மகிழ்ச்சி மேலும் மேலும் அதிகரிக்கிறது.

பேருந்து வந்து நின்றவுடன் அவனது மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரித்தது. ஜன்னலோர இருக்கையில் அண்ணன் அமர்ந்திருப்பதைப் பார்த்து, உலகத்தில் உள்ள சந்தோஷம் எல்லாம் கிடைத்துவிட்டதைப் போல் ரியாக்ட் செய்யும் குழந்தையின் முகபாவங்கள் அற்புதமாய் இருக்கிறது.

தம்பியின் பாசத்துக்கு உரிய அண்ணன், பேருந்தில் இருந்து இறங்கியதும் ஓடி வந்து தம்பியை கட்டிப் பிடிக்கிறான்.

தம்பியை அண்ணன் தட்டிக்கொடுத்தால், சுட்டித் தம்பியும் அண்ணனின் முதுகில் தட்டிக் கொடுக்கிறான். சிவப்பு உடை போட்ட பாசக்கார தம்பியின் பாசம் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அட்டகாசமான பாசம் என்று சிலர் பதிவிட்டால், அன்புக்கு அண்ணன், ஆசைக்கு தம்பி என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் இந்த வீடியோவை மிக ரசித்து பகிர்ந்து கொண்டதால், இந்த வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவின் கமெண்ட் பகுதி முழுவதுமே மகிழ்ச்சியை காட்டும் எமோஜிகளால் நிரம்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories