January 19, 2025, 8:11 AM
23.5 C
Chennai

விடுமுறை நாட்களிலும் புறநகர் விரைவு ரயில் கோரி போராட்டம்: தாம்பரத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: விடுமுறை நாட்களிலும் விரைவு மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரி, தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே திங்கள் முதல் வெள்ளி வரை, புறநகர் மின்சார விரைவு ரயில்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் இயக்கப் படுகின்றன. திருமால்பூரில் இருந்து கடற்கரை வரை செல்லும் விரைவு ரயில், காலை நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெருங்களத்தூர், தாம்பரம், கிண்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இதனால், பணிக்குச் செல்வோர் உள்பட பலரும் விரைவில் சென்றுவிடலாம்.

பொதுவாக செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் விரைவு ரயில்கள், தாம்பரம் – கடற்கரை இடையேதான் விரைவு ரயில்களாகச் செல்லும். இந்த ரயில்கள், தாம்பரம், குரோம்பேட்டை, கிண்டி, மாம்பலம், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

இதனால் இந்த ரயிலில் பயணிப்பவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக சென்று விட முடியும். இந்த விரைவு மின்சார ரயில்களை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண மின்சார ரயில்களாக மாற்றி இயக்குகிறது ரயில்வே நிர்வாகம்.

ALSO READ:  தினகரன், சசிகலா, ஓபிஎஸ்., இணைந்தால் மீண்டும் குழப்பமே வரும்: ராஜன் செல்லப்பா!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாம்பரத்தில், பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவு மின்சார ரயிலை சாதாரண ரயிலாக இயக்குவதால் தாங்கள் அலுவலகம் செல்ல தாமதமாவதாகக் கூறி இரண்டு ரயில்களை அவர்கள் சிறை பிடித்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரயில் பாதையை மறித்து போராட்டம் நடத்தியதால் தாம்பரம் – கடற்கரை இடையிலான வழியில் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் பின்னர் அங்கு வந்த ரயில்வே துறை உயரதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டு செங்கல்பட்டு – கடற்கரை இடையே மின்சார ரயில் போக்குவரத்து சீரானது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.