மதுரை

வைரலகும் மணப்பெண் -கல்யாணம் ஆனா மறுநாளே போராட வந்த மணப்பெண்

வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் மட்டும் முதலில் ஒரு தகவல் மட்டும் வருகிறது ,அந்த தகவல் என்னவென்றால் தூத்துக்குடி மக்கள் நலனுக்காக புதுப்பெண் போராட்டம் ,திருமணம் ஆனா மறுநாளே மக்களுக்காக களமிறங்கினார் ,நாம்...

ஆன்மிக ‘பெரியார்’ வேசம் கட்டிய ரஜினி

ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் விதவிதமாக பேனர்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆன்மீக பெரியாரே எனக் கூறி ரஜினியின் ஆதரவாளர்கள் பேனர் வைத்துள்ளனர்.

பெண்களே உஷார்..! காதலுக்காக மதம் மாறி குடும்பம் நடத்தினால்…? அன்வர்ராஜா மகன் நாசர் விவகாரம்!

இந்த நிலையில் இன்று காரைக்குடியில் குறிப்பிட்ட ஜமாத்தாரிடம் அழுது புலம்பி கதறி கண்ணீர்விட்டு சுவரில் முட்டி மோதி பள்ளிவாசலில் அமர்ந்து போராடினார். அவரது நிலை கண்டு மனம் இரங்கிய ஜமாத்தார், இன்று நடைபெறவிருந்த நாசரின் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

அன்வர் ராஜா மகன் திருமணம்: அழுது தீர்த்த அபலைப் பெண்ணால் ஜமாத் நிறுத்தி வைப்பு!

ஒரு முடிவுக்கு வராத நிலையில், காரைக்குடியில் எந்த பள்ளிவாசலிலும் நாசருக்கு திருமணத்தை நடத்தி வைப்பதில்லை என்று ஜமாத் முடிவு செய்தது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராம ரதத்தை அடுத்து தமிழகத்தைக் கலக்கும் தமிழ்க் கடவுள் முருகனின் ’வேல் ரதங்கள்’

யாத்திரையின் நிறைவாக மார்ச் 29-ஆம் தேதி வியாழன் மாலை 5 மணிக்கு மதுரையில் வேல் சங்கம மாநாடு நடைபெற உள்ளது. தங்கள் பகுதியில் பூஜையில் வைத்த வேலையும் அலங்கரித்து எடுத்து வர வேண்டுகிறோம் என்று அழைப்பு விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள்.

பழனியில் தொடங்கியது பங்குனி உத்திர விழா

பழநி: பழநி பங்குனி உத்திர விழா சனிக்கிழமை இன்று மார்ச் 24 துவங்கியது. இன்று முதல் ஏப்.2ஆம் தேதி வரை பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுகிறது.
- 2026

ராமசாமியை திருமணம் செய்ய சசிகலா புஷ்பாவுக்கு நீதிமன்றம் தடை

சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்வதற்கு மதுரை குடும்பநல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா தொடர்ந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

சசிகலா புஷ்பா திருமண சர்ச்சை: மனைவி புகாரில் ராமசாமி மீது வழக்குப் பதிவு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி, திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படும் ராமசாமி மீது அவரது மனைவி அளித்த  புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! புரளி கிளப்பிய திருச்சி இளைஞர் கைது!

இதன் பின்னர், மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, அந்த நபர் திருச்சி பூவலூரைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அந்த நபரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

குரங்கணி தீ விபத்து: உயிரிழப்பு 20 ஆக உயர்வு

தேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இன்று மதுரையில் உள்ள தனியார் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு பெண்கள் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

36 ஆயிரம் கோயில்களில் உள்ள கடைகள்: உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

இந்த மனுக்களை எடுத்துக் கொண்ட நீதிபதி சுப்பிரமணியம், அவற்றைத் தள்ளுபடி செய்தார். மேலும், கோயில் வளாகத்தில் தொடர்ந்து கடைகளை நடத்த வேண்டும் என்று கேட்க எந்த சட்ட உரிமையும் இல்லை என்று கூறினார்.

மாற்றுப் பாதையில் செல்ல முயற்சி: ரதயாத்திரையை தடுத்த போலீஸார்!

திட்டமிடப் படாத புதிய பாதையில் சென்றால் பிரச்னை ஏற்படலாம் என்று எடுத்துக் கூறியதை அடுத்து, காவல்துறை கூறிய கிழக்கு கடற்கரை சாலையில், தூத்துக்குடி நோக்கி ரத யாத்திரையை தொடர்ந்து செல்லுமாறு பாஜக., நிர்வாகிகள் ரதயாத்திரையில் வந்தவர்களிடம் பேசினர். இதை அடுத்து போலீஸார் திட்டமிட்ட பாதையில் ரதம் புறப்பட்டுச் சென்றது.
- 2026

Recent articles