Home Blog Page 215

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 டெஸ்ட் சீரிஸ் … முற்றிலும் இலவசம்!

1794051 tnpsc - 2026

சென்னை அசோக் நகரில் இலவசமாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 பயிற்சி.. (கிராஷ் கோர்ஸ்)

அசோக் நகர் ஆஞ்சநேயர் பக்தசபா அறக்கட்டளை சார்பில் “குரு விருக்ஷா ஐஏஎஸ் அகடமி” அசோக் நகரில் துவங்கப்படுகிறது. இங்கு டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படும்.

பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இணைந்து பயனடையலாம்.

முற்றிலும் இலவசமாக பயிற்சி, மாதிரி தேர்வு முதலானவை சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு வழங்கப்படும்.

இதில் சேர்வதற்கு தகுதி தேர்வு, நேர்முக தேர்வு ஆகியவை வாயிலாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஒரு பேட்ச் சில் 40 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட இருப்பதால் கீழ்க் கண்ட இணையதளத்தில் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

200 கேள்விகள்
மொத்த தேர்வு- 27
முழு மாதிரி தேர்வு-3
மொத்த கேள்விகள்- 5400

28.04.24 முதல் தேர்வு ஆரம்பம் ஆகும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 25-4-2024

மேலும் விவரங்களுக்கு..
தொடர்பு தொலைபேசி எண்: 9363923451

இப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் இதில் பதிவு செய்து கொள்வோம்:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe011crg65fJdBWjGacsc4X2HDNy7Ehou3huAryiY4RfvwE8A/viewform?usp=pp_url

ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்!

IMG 20240415 WA00121 - 2026
#image_title

சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவில் பங்குனி திருவிழா 7ம் நாள் திருவிழாவாக திருக்கல்யாண வைபவம் நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு வடக்கு ரதவீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும்பெண்கள் சீர்வரிசை எடுத்து பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் நான்குரதவீதியில் வலம் வந்து கோவில் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து மாப்பிள்ளை, பெண் அழைப்பு, மாலை மாற்றும் வைபவம் ,ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் அர்ச்சகர் சாரதி மற்றும் பட்டர்கள் யாகவேள்விநடத்தினர்

இதைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது திருமாங்கல்யம் மற்றும் பிரசாதம் உள்ள தாம்பூலப்பை மற்றும் அன்னதானம் வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.இரவு வண்ண கோரதத்தில் திருமணக் கோலத்தில் மின் அலங்காரத்தில் பவனி வருவார்.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் அறங்காவலர் குழு தலைவர் எஸ் எஸ் ராஜாங்கம் அறங்காவலர்கள் எம் எஸ் பாண்டியன் பெரியசாமி ஆண்டியப்பன் மங்கையர்க்கரசி செயல் அலுவலர் சுதா கோவில் பணியாளர் முரளிதரன் உபயதாரர் சௌந்தரிஅம்மாள், லலிதாசங்கரன், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

IPL 2024: தலை காட்டிய ‘தல’! 20 ரன் வித்தியாசத்தில் சென்னை வெற்றி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இருபத்திநான்காம் நாள்

ஐபிஎல் 2024 – 14.04.2024 

இரண்டு ஆட்டங்கள்

இன்று ஞாயிற்றுகிழமை ஆதலால் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் கொல்கொத்தாவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக  நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. 

கொல்கொத்தா vs லக்னோ

லக்னோ அணியை (161/7, நிக்கோலஸ் பூரன் 45, கே.எல். ராகுல் 39, ஸ்டார்க் 3/28) கொல்கொத்தா அணி (15.4 ஓவரில் 162/2, பில் சால்ட் 89*, ஷ்ரேயாஸ் ஐயர் 38*, மொஹிஷின் கான் 2/29) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று கொல்கொத்தாவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. லக்னோ அணியில் இன்று மூன்று மாற்றங்கள்; ஷமர் ஜோசப், தீபக் ஹூடா, மொஹிஷின் கான் ஆகியோர் நவீன் உல் ஹக், தேவதத் படிக்கல், அர்ஷத் கான் ஆகியோருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டனர். அணியின் தொடக்க வீரர் க்விண்டன் டி காக் இரண்டாவது ஓவரில் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரன் (45 ரன்), ராகுல் (39 ரன்), ஆயுஷ் பதோனி (29 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 161 ரன் எடுத்தது.

162 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரேன் (6 ரன்) 2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அங்கிரிஷ் ரகுவன்ஷி (7 ரன்) நான்காவது ஓவரில் அவுட்டானார்.  மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆடி 89 ரன் அடித்தார். அதில் 14 ஃபோர்கள் மற்றும் 3 சிக்சர்கள். அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் அவருடன் இணைந்து விளையாடி, இறுதி வரை அவரும் ஆட்டமிழக்காமல் இருந்து 38 ரன் அடித்தார். இதனால் கொல்கொத்தா அணி 15.4 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து வெற்றியைப் பெற்றது.

கொல்கொத்தா அணியின் பில் சால்ட் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

மும்பை vs சென்னை

சென்னை அணி (206/4, ருதுராஜ் கெய்க்வாட் 69, ஷிவம் துபே 66*, தோனி 20*, ஹார்திக் பாண்ட்யா 2/43) மும்பை அணியை (186/6, ரோஹித் ஷர்மா 105*, திலக் வர்மா 31, இஷான் கிஷன் 23, பதிரனா 4/28) 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இரண்டாவது ஆட்டம் மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே சென்னை அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரராக ருதுராஜுக்குப் பதிலாக அஜிங்க்யா ரஹானே இறங்கினர். ஆனால் அவர் இரண்டாவது ஓவரில் 5 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா எட்டாவது ஓவரில் 21 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ரஹானே அவுட்டானபோது களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் (40 பந்துகளில் 69 ரன்) மற்றும் ஷிவம் துபே (38 பந்துகளில் ஆடமிழக்காமல் 66 ரன்) இருவரும் வேகமாக ரன் சேர்த்தனர். கடைசி நான்கு பந்துகள் ஆடிய மஹேந்திர சிங் தோனி தொடர்ந்து மூன்று சிக்சர்கள் அடித்து மைதானத்தில் ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். சென்னை அணி 20 ஓவர்களில் நாலு விக்கட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

207 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த மும்பை அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் 15 பந்துகளில் 23 ரன் அடித்து 7.1ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் இரண்டாவது பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரோஹித் ஷர்மா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 105 ரன் எடுத்தார். ஹார்திக் பாண்ட்யா (2 ரன்), ரொமாரியோ ஷெப்பேர்ட் (1 ரன்), டிம் டேவிட் (13 ரன்) ஆகியொர் இன்று சோபிக்கவில்லை. திலக் வர்மா (31 ரன்) ரோஹித் ஷர்மாவுக்கு சிறிது நேரம் ஜோடியாக ஆடினார். இருப்பினும் மும்பை அணியால் 20 ஓவருக்குள் இலக்கை அடைய முடியவில்லை. 20 ஓவரில் அந்த அணி 6 விக்கட் இழப்பிற்கு 186 ரன் மட்டுமே எடுத்து 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள், குறிப்பாக பதிரனா சிறப்பாக பந்து வீசினார்.

சென்னை அணியின் மதீஷா பதிரனா சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை பெங்களூருவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம்     

14.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 651100.767
கொல்கொத்தா54181.688
சென்னை64280.726
ஹைதராபாத்53260.344
லக்னோ63360.038
குஜராத்6336-0.637
பஞ்சாப்6234-0.218
மும்பை6244-0.234
டெல்லி6244-0.975
பெங்களூரு6152-1.124

IPL 2024: கடைசி பந்தில் சிக்ஸ்; த்ரில் வெற்றி!

ipl 2024 - 2026

இருபத்திமூன்றாம் நாள்

ஐபிஎல் 2024 – 13.04.2024 – முல்லன்பூர்

பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் அணியை (147/8, அஷுதோஷ் ஷர்மா 31, ஜித்தேஷ் ஷர்மா 29, லிவிங்க்ஸ்டோன் 21, ஆவேஷ் கான் 2/34, கேஷவ மஹராஜ் 2/23) ராஜஸ்தான் அணி (152/7, யஸஷ்வி ஜெய்ஸ்வால் 39, ஹெட்மேயர் 27, தனுஷ் கோடியான் 24, ரியன் பராக் 23, ரபாடா 2/25) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. பஞ்சாப் அணியில் இன்று ஷிகர் தவான் உடல்நலக் குறைவு காரணமாக விளையாடவில்லை. சாம் கரண் அணியின் தலைவராகச் செயல்பட்டார்.

தொடக்க வீரராக தவானுக்குப் பதிலாக அதர்வா தைய்தே இறங்கினார். தொடக்கம் முதலே பஞ்சாப் அணியின் மட்டையாளர்கள் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறினர். அதர்வா தைய்தே (15 ரன்), ஜானி பெயர்ஸ்டோ (15 ரன்), பிரப்சிம்ரன் சிங் (10 ரன்), சாம் கரன் (6 ரன்), ஷஷாங்க் சிங் (9 ரன்) எனப் பலர் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.

ஜித்தேஷ் ஷர்மா (29 ரன்), லிவிங்க்ஸ்டோன் (21 ரன்), அஷுதோஷ் ஷர்மா (31 ரன்) ஆகியோர் சற்று நிதானித்து ஆடியதால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 147 ரன் எடுத்தது.

148 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் தனுஷ் கோடியான் (24 ரன்) 8.2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யஸஷ்வி ஜெய்ஸ்வால் 12ஆவது ஓவர் வரை ஆடினார். 28 பந்துகளில் 39 ரன் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கம் தந்தார்.

அதன் பிறகு ராஜஸ்தான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடமுயன்று சம இடைவெளியில் விக்கட்டுகளை இழந்து வந்தனர். சஞ்சு சாம்சன் (18 ரன்), ரியன் பராக் (23 ரன்), துருவ் ஜுரல் (6 ரன்), போவல் (11 ரன்), கேசவ் மஹராஜ் (1 ரன்) என அந்த அணியின் பேட்டர்கள் இன்று சோபிக்கவில்லை.

கடைசியில் ஷிம்ரன் ஹெட்மேயர் 10 பந்துகளில் 27 ரன் அடித்து வெற்றியைத் தேடித்தந்தார். அதுவும் அவருடைய கடைசிப் பந்து சிக்சர் அனைவரின் இதயத்துடிப்பை ஒரு விநாடி நிறுத்தியது எனச் சொல்லலாம். எளிதாக வெல்ல வேண்டிய ஒரு ஆட்டத்தை கடைசி பந்துவரை இழுத்து ராஜஸ்தான் அணி 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

ஷிம்ரன் ஹெட்மேயர் தன்னுடைய சிறப்பான ஃபினிஷிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஞாயிற்றுகிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். முதல் ஆட்டம் கொல்கொத்தாவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும். இரண்டாவது ஆட்டம் மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும்.     

13.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 651100.767
கொல்கொத்தா43161.528
சென்னை53260.666
லக்னோ53260.436
ஹைதராபாத்53260.344
குஜராத்6336-0.637
மும்பை5234-0.073
பஞ்சாப்6234-0.218
டெல்லி6244-0.975
பெங்களூரு6152-1.124

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி: ராதிகா சரத்குமார்!

IMG 20240413 WA0034 1 - 2026
#image_title

பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டு ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி. பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் அருப்புக்கோட்டையில் விசைத்தறி இயக்கி வாக்கு சேகரிப்பு.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த காரில் சென்று ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரித்தார். அதன்படி அருப்புக்கோட்டை நகர் பகுதியில் காந்தி மைதானம், திருநகரம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், விவிஆர் காலனி, கலைஞர் நகர், நெசவாளர் காலனி, ராமலிங்க நகர், கோபாலபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.‌


தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த ராதிகா சரத்குமாருக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ராதிகா சரத்குமார்,

நான் கடந்த மூன்று வாரங்களாக பல குக் கிராமங்களுக்கு கூட சென்று வருகிறேன். என்னுடைய ஒரே கேள்வி 10 ஆண்டுகளாக இங்கு ஒரு எம்பி இருந்தார். அவர் இந்தத் தொகுதிக்கு ஏன் எதுவும் செய்யவில்லை. திருநகரம் பகுதியில் பிரச்சாரம் செய்த போது திடீரென காரில் இருந்து இறங்கி நெசவாளர் வீட்டுக்குள் சென்றார்.அங்கு விசைத்தறி நெசவாளர் இடம் குறைகளை கேட்டு அவர்களுடன் விசைத்தெரிய இயக்கி வாக்கு சேகரித்தார்.

அருப்புக்கோட்டையில் அதிக நெசவாளர் வாழும் பகுதி .தறியும், திரியும் தான் பிரதான தொழில் அந்தத் தொழிலை பாதுகாக்க முன்னாள் எம்பி எதுவும் செய்யவில்லை.


பாரத பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத ஆட்சி நடத்திக் கொண்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரம் உலகில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கண்டிப்பாக மூன்றாவது முறை ஆட்சி அமைப்பார். இங்கு நான் வெற்றி பெற்றால் இங்கு ஜவுளி பூங்காவை விரைவில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வேன்.

மாற்றம் வர வேண்டும் என்பதற்காக நீங்கள் தாமரைச்சினத்திற்கு வாக்களிக்க வேண்டும். மற்ற கட்சிகளில் அண்ணா திமுக, மற்றும் திமுக கட்சிகள் இடையே பிரதமர் வேட்பாளர் யார் என்று கூட கூற முடியாது. மத்திய அரசின் திட்டங்களை இங்கு கொண்டு வந்து சேர்ப்பதற்காக நல்ல பிரதிநிதியாக நான் இருப்பேன்.


அப்போது தங்கம் விலை கூடிக்கொண்டே இருக்கிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அது உலகச் சந்தையில் உள்ளது. விலை நிர்ணயம் நம் கையில் இல்லை.
மேலும் அப்போது அங்கிருந்த ஒரு மூதாட்டி முதலில் நீட் தேர்வு ரத்து செய்யுங்கள் என குரல் எழுப்பினர்.


உங்கள் மருத்துவருக்கு மருத்துவம் தெரியுமா, மருத்துவம் படிக்க தகுதி உள்ளதா என்பதற்காக வைக்கப்படும் தேர்வு, மருத்துவம் என்பது உயிரை காப்பாற்றக் கூடிய ஒரு தொழில் ஆனால் நீட் என்பது எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.‌ எத்தனை பேர் காசு கொடுத்து டாக்டராகிறார்கள் என தெரியுமா அதை தடுப்பதற்கு தான் நீட் தேர்வு என பேசினார்.

பிஜேபி வேட்பாளர் ராதிகா தேர்தல் பிரச்சாரத்தில் பிஜேபி மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், தொகுதி பொறுப்பாளர் வெற்றிவேல் ,மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவி ராஜலட்சுமி மற்றும் பிஜேபி நகர ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

IMG 20240413 WA0030 - 2026
#image_title

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது…

இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், அன்பு அண்ணன் திரு TTV தினகரன் அவர்களுக்கு, குக்கர் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தோம். செல்லுமிடமெங்கும், பொதுமக்கள் அளித்த எழுச்சி மிகுந்த வரவேற்பு, அண்ணன் அவர்களின் வெற்றி உறுதி என்பதை எடுத்துக் காட்டியது. அண்ணன் திரு TTV தினகரன் அவர்கள், ஏற்கனவே தேனி பாராளுமன்ற உறுப்பினராகச் செய்த பணிகள் மூலம் பெரிதும் பயனடைந்த தேனி பொதுமக்கள், மீண்டும் அண்ணன் அவர்களையே பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர்.

நாடு முழுவதும், 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்குத் துணையாக, தமிழகத்தின் தேனி தொகுதியிலிருந்தும், அண்ணன் திரு TTV தினகரன் அவர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்.

தமிழகத்தில் வெறும் 21 இடங்களில் போட்டியிடும் திமுக தலைவர் திரு.ஸ்டாலின், இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கூறுகிறார். திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து, தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல், தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு ஏற்படவிருக்கும் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்கவிருக்கும் தேர்தல். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், 35 மாதங்களாக வெறும் விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் திமுகவை, தமிழக அரசியலை விட்டு அப்புறப்படுத்தவிருக்கும் தேர்தல்.

அண்ணன் திரு TTV தினகரன் அவர்கள் வெற்றி பெற்றால், திரு. எடப்பாடி அவர்கள் தலைமையிலான அதிமுக காணாமல் போய்விடும் என்பது அவருக்குத் தெரியும். அதனால், அதிமுக திமுக இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் அண்ணனுக்கு எதிராக கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். ஆனால், உண்மையான அதிமுக தொண்டர்கள் அனைவரும் அண்ணன் திரு TTV தினகரன் அவர்கள் பக்கம்தான் என்பதை, ஜூன் 4 அன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள் உறுதி செய்யும்.

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி போல விளம்பரம் தேவையில்லாத ஆட்சி. மோடி வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் குழாயில் குடிநீர், நூறு நாள் வேலைத்திட்டத்தில் ரூ. 174 ஆக இருந்த ஊதியத்தை, ரூ. 324 ஆக உயர்த்தி, மக்களுக்கு ரூ.60,000 கோடி நிதி, விவசாயிகளுக்கு வருடம் ரூ. 6,000 என இதுவரை ரூ.30,000, பல ஆயிரம் கோடி முத்ரா கடனுதவி என சாமானிய மக்கள், விவசாயிகள், தாய்மார்கள், இளைஞர்கள் அனைவருக்குமான நல்லாட்சி நமது பாரதப் பிரதமர் அவர்களது ஆட்சி.

ஆனால், 2004 – 2014 திமுக காங்கிரஸ் பத்தாண்டு கால ஆட்சியில், தமிழகத்துக்கு துரோகத்தைத் தவிர எதுவும் கிடைக்கவில்லை. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தின் உயரத்தைக் குறைத்த துரோகம், கேரளாவில் இன்னொரு அணையைக் கட்ட அனுமதித்து செய்த துரோகம் என திமுக காங்கிரஸ் ஆட்சி செய்தவை பல. 2G ஊழல் வழக்கால் காங்கிரஸ் மிரட்டலுக்கு திமுக அமைதியாக இருந்து துரோகத்துக்குத் துணை போனது. அதுமட்டுமல்லாது, 2011 ஆம் ஆண்டு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை காங்கிரஸ் தடை செய்தது. நமது பிரதமர் மோடி அவர்கள்தான் ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறுவதை உறுதி செய்தார்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு, மாதம் ரூ.1,000 கொடுப்போம் என்று கூறியது. திமுக ஆட்சிக்கு வந்து 35 மாதங்கள் ஆகின்றன. இதுவரை, 35,000 ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லை. தேர்தலில் வாக்களிக்கப் பணம் கொடுக்க திமுக வந்தால், கஞ்சா விற்ற பணம் வேண்டாம் என்று மக்கள் கூற வேண்டும்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது நாட்டை வளமாக்க, வலுப்படுத்த, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்போது, அவற்றில், தேனியின் குரலும் ஒலிக்க, தேனி தொகுதி வளர்ச்சி பெற, அண்ணன் திரு TTV தினகரன் அவர்களை, குக்கர் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!

gnanananda swamigal - 2026

 

ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள்!

விழுப்புரம் அருகே திருக்கோயிலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பிரதான சாலையில், சுமார் 3 கி.மீ., தொலைவில் உள்ளது ஸ்ரீஞானானந்த தபோவனம். 50 வருடங்களுக்கு முன் இங்கே சமாதியில் அமர்ந்து, இன்றும் ஸ்தூல வடிவில் அன்பர்களுக்கு நல்வழி காட்டும் மகான் ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகளின் அருளாளயத்தை தரிசிக்கலாம்!  

இந்த ஸ்வாமிகள் வெகுகாலம் வாழ்ந்தவர் என்ற நம்பிக்கை அன்பர்களிடம் நிலவுகிறது. காரணம், பல்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றைத் தம்முடன் கொண்ட தொடர்புகளுடன் ஸ்வாமிகள் அவ்வப்போது சொல்லியிருக்கிறார். சுவாமிகளின் வயது, அவருடைய பூர்வாசிரமம், பிறந்த நட்சத்திரம் மாதம் இவை பற்றியெல்லாம் அறிந்து அவற்றைப் பதிவு செய்ய அதிகம் முயன்றார், ஸ்வாமிகளிடம் பேரன்பும் பக்தியும் கொண்டிருந்த, கலைமகள் இதழின் ஆசிரியராக இருந்த வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன். ஆனால் அவருக்கு ஸ்வாமிகள் நேரடியாக எந்த பதிலையும் தரவில்லை. மரம் பழுத்து கனிகள் நன்றாக இருக்கும் போது, அந்தக் கனிகளைப் பறித்து உண்ணுவதுதான் அறிவுடைமை. அதை விடுத்து, மரத்தை நட்டவன் யார், தண்ணீர் எப்படி கிடைத்தது, அதன் காலம் வயது என்ன இப்படியெல்லாமா ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்? என்று பதில் கேள்வி கேட்பாராம்.  அதனால் கி.வா.ஜ., முயற்சிகள் பல செய்தும் பலன் கிட்டவில்லை. எனினும் பல்வேறு கட்டங்களில் அன்பர்களிடம் பேச்சுவாக்கில் ஸ்வாமிகள் சொன்ன செய்திகளை வைத்து, ஸ்ரீஞானானந்த கிரி ஸ்வாமிகளின் ஜன்ம நட்சத்திரம் தை கிருத்திகை என்றும், ஸ்வாமியின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றும் ஒருவாறு ஊகித்தறிந்தார்கள். 

ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள், கர்நாடகத்தில் உள்ள மங்களாபுரியில் அவதரித்து மிகச் சிறு வயதிலேயே துறவறத்தில் நாட்டம் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி இமய மலை நோக்கிச் சென்றார். அங்கே, ஆதிசங்கரர் நிறுவிய ஜோதிர் மடத்தின் பீடாதிபதியாகிய பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீ சிவரத்னகிரி ஸ்வாமிகளால் ஆட்கொள்ளப்பட்டார். அவரிடம் சந்யாச தீட்சை பெற்று, இமயத்தின் மடியில் தவமியற்றி வந்தார்.  தனது குருவின் மஹாசமாதிக்குப்பின் அடுத்த பீடாதிபதி குறித்த சர்ச்சைகள் ஏற்பட்ட போது, தன் குருநாதரில்லாத இடத்தில் தாம் இருக்கக் கூடாது என்று மனம் கசந்தது. உடனே அந்த  பீடத்தைத் துறந்து இமயமலையின் பனிக்குகைகளில் நெடுங்காலம் கடுந்தவமியற்றினார். 

பின்னர், நேபாளம், பர்மா, இலங்கை முதலிய அண்டை நாடுகளிலும், பாரதத்தின் பல பகுதிகளிலும், பாதயாத்திரையாக சஞ்சாரம் செய்து, துறவு வாழ்க்கையை நியமப்படி கடைப்பிடித்தார். இறுதியில் கடந்த நூற்றாண்டில் சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி கிராமத்திலும், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் வியாக்ரபாதரும் மற்ற சித்தர்களும் வாழ்ந்த புராதனமான சித்தலிங்கமடம் என்ற தலத்திலும், தங்கி தவ வாழ்க்கையை மேற்கொண்டு, அன்பர்களுக்கு அருளாட்சி புரிந்தார்.  

பின்னர், திருக்கோவிலூரில் மத்வ  சம்பிரதாயஸ்தர்களால் ஆராதிக்கப்படும் ஸ்ரீ ரகோத்தம ஸ்வாமிகளின் மூல பிருந்தாவனத்துக்கு அருகில், சித்தர்கள் பலர் வாழ்ந்து அருளாசி வழங்கி அடங்கிய தட்சிண பினாகினி என்னும் தென்பெண்ணை நதியின் வடகரையில், மார்க்கண்டேயரைப் பெற்ற மிருகண்டு முனிவரின் தவச்சாலையாய் விளங்கிய புனிதமான இடத்தில், ஸ்ரீ ஞானானந்த தபோவனம் என்னும் அத்யாத்ம வித்யாலயமாகிய ஆஸ்ரமத்தை நிறுவினார் ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள்.

அதன் பின்னர், ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள் பாமர மக்களும் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு உய்ய தமது ஆஸ்ரமத்திலேயே, ஸ்ரீ ஞானகணேசர், ஞானஸ்கந்தர், ஞானாம்பிகை. ஞானபுரீஸ்வரர், ஞானமஹாலக்ஷ்மி. ஞான வேணுகோபால ஸ்வாமி, ஞான ஆஞ்சனேயர், ஞானதுர்க்கை. நவக்ரஹ மூர்த்திகள், ஞானபைரவர், சண்டிகேஸ்வரர், ஞானநடராஜர் முதலான மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து ஆலயம் சிறப்புறத் திகழ வழி செய்தார்.  

தபோவனத்தில் இருந்தபடி அருளாட்சி புரிந்த மகான் ஸ்ரீஞானானந்தரை பக்தர்கள் பெருமளவில் அணுகினார்கள். அவர்களுக்கு எளிய  வகையில், புரிந்த மொழியில் உபதேசம் செய்து, நல்வழிப் படுத்தினார். அவரது பத்து கட்டளைகள் மிகவும் சிறப்பானதாக இன்றளவும் போற்றப்படுகின்றது. சுறுசுறுப்பாயிரு ஆனால் படபடப்பாயிராதே; பொறுமையாயிரு சோம்பலாயிராதே; சிக்கனமாயிரு கருமியாயிராதே; அன்பாயிரு அடிமையாயிராதே; இரக்கங்காட்டு ஏமாந்து போகாதே; கொடையாளியாயிரு ஓட்டாண்டியாய் விடாதே; வீரனாயிரு போக்கிரியாயிராதே; இல்லறத்தை நடத்து காமவெறியனாயிராதே; பற்றற்றிரு காட்டுக்குப் போய்விடாதே; நல்லோரை நாடு அல்லோரை வெறுக்காதே! – என்ற அவரது உபதேசங்கள்  அவரது எளிமையான உபதேச வழிகளைக் காட்டும். 

குழந்தைகள் மீது பேரன்பு கொண்டவர் ஸ்ரீ ஞானானந்தர். குழந்தைகளுடன் விளையாடி, அவர்களுக்குத் தன் கருணைப் பார்வையைப் பொழிந்தவர். அவரை பெரியோர்களும் மகான்களும் கூட  ’தாத்தா ஸ்வாமி’ என்றே அழைத்தார்கள். தபோவனத்திலேயே ஒரு தவச்சாலை அமைத்து, சீடர்களையும் உருவாக்கி நல்வழி காட்டினார். ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகளுக்கு அனுக்கிரகம் செய்து நாம சங்கீர்த்தனத்தை உலகெங்கும் பரப்பியதில் ஸ்வாமியின் பங்கு அளப்பரியது. 

தனது இடைவிடாத ஆழ்ந்த தவத்தால் அகில உலகையும் பாவனமாக்கி அனுக்ரஹித்த ஆனந்த ஞானப்பழமான ஸ்வாமிகள், 1974 ஜனவரி மாதம், அகண்ட பரவெளியிலே கலந்தார். அதற்கு முன்பே தாம் சூட்சும வடிவில் அமரப் போகும் அருளாளயத்தை  வடிவமைத்துக் கொடுத்து, அங்கேயே சந்நிதி கொண்டார். அதுபோல் அன்பர்களுக்காக தம்மைப் போல் ஒரு சிலா விக்ரஹம் பிரதிஷ்டை செய்து, அதனைத் தானான திருமேனி என்று ஸ்ரீராமானுஜர் அருளியதைப் போல் அன்பர்க்கு அருளி, தம் தெய்வப் பேரருளை அன்பர்க்கு நீங்காது இருக்க அனுமதித்தார். அன்று போல் இன்றும் அவரது தெய்வீக அருள் தங்களுக்கு வழிகாட்டுவதை அன்பர்கள் உணர்ந்து  தபோவனம் வந்து தியானித்து, பாத பூஜை செய்து, தரிசித்து மகிழ்கின்றார்கள்.  

இத்தகைய தபோவனத்தில், ஸத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்திகளுக்கும், ஸத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள் அதிஷ்டான அருளாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ ஞானமஹாலிங்கத்திற்கும், மணிமண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஸத்குருநாதரின் சந்நிதிக்கும்,  ராஜகோபுரத்திற்கும்,  ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி  2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு  நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்

கலவரக்காரர்கள் யார் என்பது உங்க மனசாட்சிக்கு தெரியும் முதல்வர் ஸ்டாலின்!

hindumunnani - 2026

தமிழக முதல்வரே உங்களுடைய மனசாட்சிக்கு தெரியும் யார் கலவரக்காரர்கள் என்று ..! அதனால் திசை திருப்பியது போதும் என்று, இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாஜக போன்ற கட்சிகளை கோவையில் அனுமதித்தால் அமைதி இருக்காது , தொழில் வளம் பெருகாது, வளர்ச்சி குறைந்திடும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
பாஜகவை குற்றம் சொல்ல மக்களை நோக்கி விரலை நீட்டும் போது மற்ற மூன்று விரல்கள் தன்னைத் தான் காட்டுகிறது என்பதை முதல்வர் உணரவில்லை போலும்.

திமுக ஆட்சியில் குண்டு வெடிப்பு எப்படி நடந்தது, எதனால் நடந்தது என்பதனை மக்களுக்கு தெரியாமல் திசை திருப்ப திமுக எப்படி எல்லாம் நாடகமாடியது என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுபடுத்த தேவையில்லை.

கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்த சில நாட்களில் பிரபல நடிகர் ரஜினிகாந்த் அவர்களை உண்மைக்கு புறம்பாக பேச வைத்தது திமுக தலைவர் கருணாநிதி தானே.! சமீபத்தில் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நடந்த தற்கொலை வெடி குண்டு தாக்குதலை கார் சிலிண்டர் வெடிப்பு என காவல்துறை தலைவரைக் கொண்டே உண்மையை மறைத்து மக்களை திசைதிருப்ப முயற்சி செய்தது திமுக அரசு தானே.!

கோவை குண்டு வெடிப்பு பயங்கரவாத குற்றவாளிகளை விடுதலை செய்தது திமுக தானே.!
அதில் விடுவிக்க முடியாத தொடர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட கொடூர குற்றவாளிகளை விடுவிக்க நீதிபதியை கொண்டு குழு அமைத்துள்ளதும் திமுக தானே.!
கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானியை விடுதலை செய்து அரசு மரியாதையுடன் கேரளா வரை கொண்டு விட்டது திமுக அரசு தானே.!

ஆனால் அடுத்த மாதமே நடந்த பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானியை கைது செய்து கர்நாடக சிறையில் அடைத்தது கர்நாடக காங்கிரஸ் அரசு. அப்படியானால் திமுக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மதானியை விடுதலை செய்ததால் பெங்களூரில் தாக்குதல் நடத்த துணை போனது என சொல்லலாம் தானே.

கோவையில் இதுவரை நடைபெற்ற அனைத்து பயங்கரவாத செயல்களும் திமுக ஆட்சியாளர்களுக்கு தெரிந்தே நடந்தது என்பது தான் அப்பட்டமான உண்மை தானே.!

அதே பயங்கரவாத குற்றவாளிகளை விடுதலை செய்ய திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்ததை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். இந்து விரோத பாசிஸ திமுக இந்துக்களுக்கும் மக்களுக்கும் எவ்வளவு துரோகம் செய்தாலும் இலவசத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்கலாம் என்ற எண்ணம் தானே தொடர்ந்து பயங்கரவாத ஆதரவு மனநிலையை திமுகவிற்கு ஏற்படுத்துகிறது. இந்த முறை மக்கள் முடிவெடுத்து விட்டனர்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தானே சட்டம் ஒழுங்கு இருக்கிறது. அதனால் தமிழக முதல்வர் இதுபோன்ற குற்றச்சாட்டு வைத்திட அவசியமே இல்லையே.!

கோவை மட்டும் அல்ல கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஒவ்வொரு இஸ்லாமிய பயங்கரவாத செயலுக்கும் பின்னால் திமுகவின் ஆதரவும் பாதுகாப்பும் இருக்கிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகின்றனர் மக்கள். காரணம் கர்நாடக மாநிலம் ஆனாலும் இலங்கை ஆனாலும் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதும் பாதுகாப்பாக பதுங்கி இருப்பதும் தமிழகத்தில் தான் என்பதை பத்திரிக்கை செய்திகள் வாயிலாக அறிகிறோம்..

இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது திமுக அரசு மென்மையான போக்கை கடைபிடிக்கிறது என்பது ஊரறிந்த உலகறிந்த உண்மை. இதில் வேறு கட்சிகளை திமுக தலைவர் குற்றம்சாட்டுவது பிரச்சினையை திசை திருப்ப தான் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்வர்.

தேர்தல் என்பது அரசியல் ஆளுமையை மக்கள் புரிந்து வாக்களிப்பது. நமது ஓட்டு உரிமையை சரியாக பயன்படுத்தி தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் யார் தேவையோ அவர்களை தேர்ந்தெடுக்க கிடைக்கும் வாய்ப்பு.

அது மட்டுமல்ல தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை உணர்ந்து அதற்கு தக்க பதிலடி தரவும் வாக்கு ஓர் ஆயுதம். அதனை தவறாது தமிழக மக்கள் பயன்படுத்திட இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

IPL 2024: அதிரடி காட்டிய தில்லி அணி

ipl 2024 - 2026

இருபத்தியிரண்டாம் நாள்
ஐபிஎல் 2024 – 12.04.2024 – மும்பை
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்         

லக்னோ அணியை (167/7, ஆயுஷ் பதோனி 55*, கே.எல். ராகுல் 39, அர்ஷத் கான் 20, டி காக் பிருத்வி ஷா 3219, குல்தீப் யாதவ் 3/20, கலீல் அகமது 2/41) டெல்லி அணி (170/4, ஜேக் ஃப்ரேசர் மெகுர்க் 55, ரிஷப் பந்த் 41, ரவி பிஷ்னோய் 2/25) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று லக்னோவில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. லக்ணோ அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான குவிண்டன் டி காக் (13 பந்துகளில் 19 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான கே.எல். ராகுல் 9.3 ஓவர் வரை விளையாடி 39 ரன்கள் (22 பந்துகள் 5 ஃபோர், 1 சிக்சர்) சேர்த்தார். இவரைத் தவிர படிக்கல் (3 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (8 ரன்), நிக்கோலஸ் பூரன் (பூஜ்யம், கோல்டன் டக்), இம்பேக்ட் பிளேயராக வந்த தீபக் ஹூடா (10 ரன்), க்ருணால் பாண்ட்யா (3 ரன்) ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை.

ஆயினும் ஆயுஷ் பதோனி (35 பந்துகளில் 55 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் அர்ஷத் கான் (16 பந்துகளில் 20 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 167 ரன் எடுத்தது. டெல்லி அணியின் குல்தீப் யாதவ் 20 ரன் கொடுத்து 35 விக்கட் எடுத்தார். 

          168 ரன் என்ற இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த டெல்லி அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் (8 ரன்) 3.4ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா ஏழாவது ஓவரை ஆடினார். 22 பந்துகளில் 32 ரன் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கம் தந்தார்.

22 வயதான் ஆஸ்திரேலிய வீரர், இன்று ஐபிஎல்லில் முதல் ஆட்டம் ஆடுகின்ற ஜேக் ஃப்ரேசர் மெகுர்க் இன்று சிறப்பாக ஆடினார். அவர் 35 பந்துகளில், 4 ஃபோர், 2 சிக்சர்களுடன் 55 ரன் அடித்தார். அணித்தலைவர் ரிஷப் பந்த் 24 பந்துகளில் 41 ரன் அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

மீதமுள்ள பனிகளைச் செவ்வனச் செய்து ஸ்டப்ஸும் (15 ரன்) ஷாய் ஹோப்பும் (11 ரன்) 18.1 ஓவரில் 170 ரன் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். 

          மும்பை அணியின் குல்தீப் யாதவ் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

நாளை முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.  

12.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்54180.871
கொல்கொத்தா43161.528
சென்னை53260.666
லக்னோ53260.436
ஹைதராபாத்53260.344
குஜராத்6336-0.637
மும்பை52340.073
பஞ்சாப்5234-0.196
டெல்லி6244-1.124
பெங்களூரு6152-1.124

கோவையில், ஊடகத்தினருடன் வழக்கம்போல் ‘தில்’லுடன் மல்லுக்கட்டிய அண்ணாமலை!

annamalai in covai const - 2026
#image_title

கோவையில் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பில், இன்று வழக்கம்போல் ஊடகத்தினருடன் மல்லுக்கட்டும் விதத்தில் கார சார விவாதம் நடந்தது. பெட்ரோல் டீசல் விலை, தேர்தலை முன்னிட்டு ரூ.2 குறைக்கப்பட்டதா என செய்தியாளர் ஒருவர் கேட்க, அதை அடுத்து அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அண்ணாமலை.

முன்னதாக, கோவையில் இந்தியன் தொழில் முனைவோர் கூட்டத்தில் ‘கோயம்புத்தூரின் தேவைகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசினார். அப்போது, அடுத்த 25 ஆண்டுகளை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார். நான் வேட்பாளர்களை எதிர்த்து நிற்கவில்லை; மாற்றத்திற்காக தேர்தலில் நிற்கிறேன். நான் வெற்றி பெற்று கோவை தொகுதி எம்.பி.,யாக மட்டும் நாடாளுமன்றத்துக்கு செல்லப் போவதில்லை. ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான தேவைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்று குறிப்பிட்டார்.

இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்ற தேர்தல் ஆணையம் விதிமுறை வகுத்த நிலையில், நேற்று இரவு 10.30க்கு மேல் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்ட திமுக.,வினருக்கும், பாஜக.,வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் திமுக.,வினர் 7 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் தேர்தல் விதிமீறி பிரசாரம் மேற்கொண்டதாக அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து கோவை பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இரவு 10 மணிக்கு மேல் மைக் பயன்படுத்தாமல் மக்களை சந்திக்கலாம். 10 மணிக்கு மேல் மக்களை வேட்பாளர்கள் சந்திக்கக்கூடாது என எங்கும் சொல்லவில்லை. மக்களின் அன்பினால் தாமதம் ஆவது, தேர்தல் பிரசாரத்தில் சகஜம் தான்.

பாஜகவினரை திமுகவினர் தள்ளிவிட்டதால் தான் கைகலப்பு ஏற்பட்டது. காவல்துறை அனுமதியோடு தான் கூட்டம் நடைபெற்றது. சில காரணங்களால் தாமதமானது. பாரதிய ஜனதா பிரசாரத்திற்கு ஆர்வமாக வந்து மக்கள் காத்திருக்கிறார்கள்.

அரசியல் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மோடி 3வது முறையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் நான் மைக்கில் பேசிய வீடியோ இருந்தால் வெளியிடுங்கள். தேர்தல் விதிகளை நான் நன்கு அறிவேன். தேர்தல் விதிகளை மீறவில்லை என்றார் அண்ணாமலை.

பின்னர், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், கோவையில் நேற்றிரவு 10 மணிக்கு மேல் விதிமீறி பிரசாரம் செய்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ”இரவு 10 மணிக்கு மேல் மக்களை சந்திக்க வேட்பாளர்களுக்கு உரிமை உள்ளது. 10 மணிக்கு மேல் மைக்கில் தான் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணைய விதி கூறுகிறது. நான் மைக்கை வைத்து பிரசாரம் செய்யும் வீடியோ இருந்தால் காட்டுங்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலையிடம் வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்கள் மாறி மாறி கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை, ”திமுக சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் என்னாச்சு என ஸ்டாலின், உதயநிதியிடம் போய் கேட்டீர்களா? அண்ணாமலைக்கு ஒரு மாதிரியும், ஆளும் கட்சிக்கு ஒரு மாதிரியும் பத்திரிகையாளர்கள் நடந்து கொள்கிறீர்கள். அறத்துடன் நடந்து கொள்ளுங்கள்” என்றார்.

பெட்ரோல் விலை குறித்த கேள்வி எழுந்தபோது அண்ணாமலை இந்தக் கேள்வியை ஸ்டாலினிடம் எழுப்புங்கள். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்புங்கள் என்றார். இதனையடுத்து பத்திரிகையாளர்கள் அண்ணாமலையுடன் வழக்கம்போல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.