Home Blog Page 30

பகல் நேர நெல்லை – செங்கோட்டை ரயில் நேரம் மாற்றம்

railway news - 2026
#image_title

நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரயில் வழித்தட பயணிகளுக்கு வசதிக்காக ஜனவரி 1 முதல் புதிய கால அட்டவணைப்படி பகல் நேர திருநெல்வேலி செங்கோட்டை ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை – செங்கோட்டை வழித்தடத்தில் தினமும் இயக்கப்படும் பயணிகள் ரயில்களின் நேரத்தில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 01.01.2026 முதல் இந்த புதிய நேர அட்டவணை அமலுக்கு வருகிறது. இந்த மாற்றம் நெல்லை – தென்காசி வழித்தடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பெரும் பயன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

புதிய நேர அட்டவணைப்படி, நெல்லை ஜங்ஷனில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், மாலை 4.45 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது. இந்த நேர மாற்றம் காரணமாக, செங்கோட்டை மற்றும் இடைநிலையங்களுக்கு பயணம் செய்யும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக வசதியைப் பெறுகின்றனர். நீண்ட காலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சந்தித்து வந்த சிரமங்களுக்கு இந்த நேர மாற்றம் ஒரு சிறந்த தீர்வாக அமைந்துள்ளது.

மேலும், இரணியல், நாகர்கோவில், வள்ளியூர் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் – திருச்சி (22628) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை ஜங்ஷனுக்கு மதியம் 2.20 மணிக்கு வந்து சேர்வதால், அந்த ரயிலில் வரும் பயணிகள் நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரயிலுக்கு எளிதாக மாற்றிச் செல்ல முடிகிறது. இதனால் நீண்ட நேரக் காத்திருப்பு இல்லாமல் பயணம் சாத்தியமாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இந்த நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரயில், நெல்லை – தென்காசி வழித்தட மக்களுக்கு வாரம் மூன்று முறை இயக்கப்படும் செங்கோட்டை – தாம்பரம் ‘சிலம்பு’ எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிறந்த இணைப்பை வழங்குகிறது. இந்த இணைப்பின் மூலம் பயணிகள் சங்கரன்கோவில், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு எளிதாகப் பயணம் செய்ய முடிகிறது.

முன்னதாக இந்த வழித்தட மக்களுக்கு நேரடி மற்றும் வசதியான ரயில் இணைப்புகள் குறைவாக இருந்த நிலையில், தற்போது செய்யப்பட்ட இந்த நேர மாற்றம் பயண நேரத்தை குறைப்பதோடு, மாற்றுப் போக்குவரத்து தேவையையும் பெருமளவில் குறைக்கிறது.

குறிப்பாக கிராமப்புற மற்றும் சிறுநகர மக்களுக்கு இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும். மொத்தத்தில், நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரயிலின் இந்த நேர மாற்றமும், அதனுடன் கிடைத்துள்ள முக்கிய ரயில் இணைப்புகளும் தென் தமிழக ரயில் பயண வசதிகளை மேம்படுத்தும் ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.

முடுவார்பட்டி ஸ்ரீ வேலவன் திருக்கோவில் மார்கழி உத்ஸவ விழா!

vilakku pooja at madurai alankanallur - 2026

முடுவார்பட்டி ஸ்ரீ வேலவன் திருக்கோவில் மார்கழி உத்ஸவ விழா!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி அம்மை, தெய்வானை அம்மை, உடனாகிய ஸ்ரீ வேலவன் திருக்கோவிலில் மார்கழி மாத உற்சவ விழா நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடைபெற்ற உற்சவ விழாவில் முதல் நாளில் பக்தர்கள் வக்கீல் ஊத்துக்கு சென்று தீர்த்தமாடி வருதல், அன்று இரவு உலக மக்கள் நன்மைக்காக வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தென்காசி மாவட்டம் சுரண்டை சத்யா செல்வின் குழுவினரின் கிராமிய வில்லிசை கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இரண்டாம் நாளில் முருகப்பெருமான் பூப்பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அன்று இரவு வள்ளி திருமணம் நாடகம் நடந்தது. பின்னர் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட அன்னதான விழா நடந்தது. பின்னர் பழனிமலை முருகனை காண 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை நிகழ்வு நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை முடுவார்பட்டி வேலவன் திருப்பணி குழு மற்றும் பழனி பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.

திருவோண நட்சத்திரம் சிறப்பு பூஜை!

மதுரை அண்ணாநகர் வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில்,
திருவோண நட்சத்திரம் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் நிர்வாகம் சார்பில், லட்சுமி ஹயக்கீரிவருக்கு அர்ச்சணை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறன் செய்து இருந்தனர்.

ஐயப்பன் ஆலய மகா கும்பாபிஷேகம்

மதுரை உசிலம்பட்டி அருகே, புதியதாக கட்டப்பட்ட அருள்மிகு ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டியபட்டி கணவாய் மலை அடிவாரத்தில் பழமையான அருள்மிகு கணவாய் ஐயப்பன் திருக்கோவில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமத்துடன் தொடங்கி, முதல் கால யாகசாலை பூஜை மற்றும் இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து , கணவாய் ஐயப்பன் திருக்கோவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார் ஹரிஹரன் தலைமையில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அங்குள்ள கன்னி மூல கணபதி மற்றும் சிவன், முருகன் ஆகிய சிலைகளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு பூஜைகள்
நடைபெற்றது. இதில் , ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The Homecoming of the Rasika: Margazhi, Memory, and the Music That Called Them Back

ranjani gayathri1 - 2026

Narasimhan Vijayaraghavan

The mid-winter air of Chennai is expected to smell of jasmine, wet silk, and filter coffee. This Margazhi, however, it carried something heavier—a quiet dread. For weeks, the great sabhas stood like emptied temples after a festival aborted midway. The silences were not restful; they were accusatory.

Whispered theories circulated in canteens and corridors: had the rasika moved on? Had the long apprenticeship of listening finally yielded to distraction, convenience, and screens? Was the Mahotsav itself becoming a relic, fondly remembered but no longer lived?

Then, at precisely eighteen hundred hours on the twenty-fifth of December, at Narada Gana Sabha, the spell broke. The emptiness did not merely dissolve—it was overwhelmed. Review of the concert could wait. What mattered first was the unmistakable sound of return.

For nearly a decade, the sixteenth hour on the twenty-fifth of December had been a fixed star in the Margazhi firmament. At four in the afternoon, year after year, Ranjani and Gayathri—RaGa to rasikas—took the stage at The Music Academy before a sell-out crowd that treated that slot as sacrosanct.

The Academy, long regarded as the elitist preserve of Carnatic orthodoxy, yielded effortlessly to their presence. Aisles filled, stairways were claimed, and even the edge of the dais became fair game. That certainty, however, ended in rupture.

In the 2024–25 season, RaGa chose to step away. Their boycott of the Academy was neither theatrical nor impulsive. It was a deliberate act of principle—to uphold the values that have made Carnatic music what it is at its core: a divine, inward, bhakti-driven experience, not a negotiable cultural commodity.

Predictably, the choice unsettled the ecosystem. The gesture was variously labelled arrogance, obstinacy, courage, or defiance. Yet what many mistook for abandonment was, in fact, leadership. In a cultural horizon accustomed to quiet compliance, RaGa demonstrated—without slogan or sermon—that conviction still had a spine. They did not merely wear the mantle of musicianship; they wore the pants.

This season, the answer came not as a hashtag or viral clip, but as bodies—thousands of them—queuing, jostling, negotiating space with the old choreography of devotion. The turnstiles groaned. The ticket counter was irrelevant.

Balconies were staked out with handbags and handkerchiefs, those quiet insignia of veteran rasikas. Extra chairs appeared like emergency rations. Even the ground floor, priced beyond nostalgia, was a heaving ocean of heads. This was not attendance; it was allegiance. The prodigal rasika had come home.

In an age that tempts music into T20 bursts and algorithmic approval, this gathering affirmed something older and sterner: that the rasika still recognises conviction. Mastery alone no longer suffices; it must be accompanied by moral temperature. The audience did not merely come for raga and tala—they came to stand with musicians whose choices mirrored their own unease with inherited hierarchies.

When the curtain rose, the artistes were not isolated beneath lights; they were held. The crowd on the dais formed a human rampart, shielding them from the ghosts of institutional seasons past. Every alapana crackled with shared intent.

Every thani avarthanam was met not with polite approval but with thunder. Power had shifted. Fame, it seemed, was no longer dispensed solely by entrenched gatekeepers but forged anew in the furnace of collective belief.

That evening, the music was luminous—but it was the second miracle. The first was witnessing a community rediscover its pulse, reclaiming Margazhi not as a schedule, but as a shared inheritance. The rasika had not vanished. They had merely been waiting—for a reason to return, and for music worthy of calling them home.

அச்சன்கோயிலில் தேரோட்டம் கோலாகலம்; திரளான பக்தர்கள் தரிசனம்!

achankoil ther function1 - 2026

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படை வீடு கோவில்களில் முக்கிய கோவிலாக அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் மகோத்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கோயில் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது ‌

கேரள மாநிலம் அச்சன்கோவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் திருக்கோவிலில், மண்டல பூஜையையொட்டி மகோத்சவ திருவிழா டிச 17ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில், மேல்சாந்தி அனீஸ் நம்பூதிரி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினார். இதனைத் தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கின.

1001147259 - 2026

திருவிழாவின் முதல் ஐந்து நாட்களில் பிரதானமாக உற்சவபலி நடைபெற்றது. ஆறாம் மற்றும் ஏழாம் நாள்களில் கருப்பன் துள்ளல் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது. எட்டாம் திருநாளில் எட்டாம் பூராம் நிகழ்வும் நடைபெற்றது.

ஒன்பதாம் திருநாளான இன்று டிசம்பர் 25 கேரளத்தில் எங்கும் இல்லாத வகையில் பிரசித்தி பெற்ற தேரோட்டம் நடைபெற்றது. கேரளாவில் இரு கோவில்களில் மட்டுமே தேரோட்டம் நடைபெறும் ஒன்று பாலக்காடு கல்பாத்தி விசுவநாதர் கோயில் இரண்டாவது அச்சன்கோவில் ஆகும்.

இந்த ஆண்டு அச்சன்கோவில் நடந்த தேரோட்டத் திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தமிழகம் கேரளாவில் இருந்து பங்கேற்றது குறிப்பிடத் தக்கது. பத்தாம் நாள் விழாவில் வெள்ளி கிழமை முக்கிய விழாவான ஆராட்டு திருவிழா நடைபெறும்.

தொடர்ந்து டிசம்பர் 27 அன்று மதியம் மண்டல பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு ஆன்மிக மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று, பக்தர்களை பரவசப்படுத்தியது.

The Paternal Paradox: A Review in Chromatic Contradictions

margazhi mahotsav - 2026

Narasimhan Vijayaraghavan

It is 13.22 PM. December, 25th, 2025. Thursday. Venue: R R Sabha, Mylapore. Auspices: Brahma Gana Sabha.

It is not every season that young rookies get to perform on stages of major Sabhas.

The atmosphere carried that unmistakable Margazhi electricity—part incense, part expectation, part silent prayer that at least the front rows would be occupied. Under the benevolent umbrella of Brahma Gana Sabha, the young vocal duo took the stage, supported with quiet assurance by Madhumitha Doraiswamy on the violin and Rishi Manoharan on the mridangam, both well aware that afternoon concerts are less about applause and more about faith.

They opened with Eka Dantham in Bilahari, a buoyant homage to Muthuswamy Dikshitar in his 250th birth anniversary year. Bilahari did what it does best—smiled reassuringly—even as the reviewer slipped into a philosophical emergency. What does one do when the pen in one’s hand shares both lineage and lunch table with the voices on stage?

Music criticism, tradition insists, has a Lakshmana rekha. One may father a musician, encourage them, finance them, even panic discreetly on their behalf. But the moment one reviews them, criticism risks becoming autobiography.

To review one’s own daughters’ concert is parental courage masquerading as detachment. If generous, it is nepotism; if severe, it is courage admired only by those not invited home thereafter. Subtlety, that elusive madhyama mārga, rarely survives blood relations. Music demands ruthless honesty; parenthood thrives on selective deafness.

History offers little comfort. Paternal commentary has oscillated between terrifying severity and indulgent advocacy. These are cautionary tales, not templates. Mercifully, this afternoon required neither. When the duo rendered Parthasarathy Nannu Palimpara in Madhyamavathi, the choice felt geographically apt—a gentle salute to Triplicane, once enfolded within Mylapore’s cultural embrace.

As for the turnout, let us be charitable. The hall was… spacious. It would have taken a RaGa to fill it. Get it? Margazhi, however, is forgiving; empty chairs have heard great music before.

Full disclosure, then: the performers were Bhargavi and Ranganayaki, and the reviewer their father. In the Chennai season, even the most improbable family arrangements eventually find their rhythmic resolution—usually in Ādi tāla.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்த… சிறப்பு முகாம்!

election voting - 2026

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும்
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு
வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் 19.12.2025 முதல் 18.01.2026 வரை நடைபெறும்.

ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள குடிமக்கள்
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும்
27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை), 03.01.2026
(சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில்
பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம்-6 ஐ உறுதிமொழி படிவத்துடன் (Declaration Form) சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள
எந்தவொரு வாக்காளரும், முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை
தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்க கோரவோ படிவம்-7
மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி மாற்றுதல் / ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை
திருத்தம் செய்ய / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) மாற்றம் செய்ய

/ மாற்றுத் திறனாளி (PwDs) வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்கள் சீராக நடைபெறவும், இச்செயல் திட்டம் பயனுள்ளதாக
அமல்படுத்தப்படவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலக்கியச்சாரல் புத்தாண்டு பொங்கல் இதழ் வெளியீடு

ilakkiya charal event - 2026

இலக்கியச் சாரல் அமைப்பானது கவிமாமணி இளையவன் அவர்களால் தொடங்கப்பட்டு இலக்கியச் சாரல் இதழ் 25 ஆண்டுகளாய் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. முதலில் செய்தி மடலாக வெளியிடப்பட்டு பின் வந்த வருடங்களில் இதழாக வந்துக் கொண்டிருக்கிறது.

அண்மையில் இலக்கியச் சாரலின் புத்தாண்டு – பொங்கல் இதழ், இலக்கியச் சாரலின் துணை இதழான ‘சாரல்’ – ஆங்கில ஏடு மற்றும் இலக்கியச் சாரல் செய்திமடல் தொகுப்பினை (2000 – 2001) நிறுவனர் கவிமாமணி இளையவன், சென்னை காந்தி மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

இலக்கியச் சாரலின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் இலக்கியச் சாரலின் காவியக் கன்றுகள் என நான்கு தலைமுறையின் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். காவியக் கன்றின் உறுப்பினர்களும் நான்காம் வகுப்பு மாணவிகளான இமிழிசை காத்யாயினி, தன் இனிய குரலால் கடவுள் வாழ்த்து பாடினார் மற்றும் திவான்ஷி, வேலு நாச்சியாரைப் பற்றி உரையாற்றினார். யூ.கே.ஜி படிக்கும் க்ருத்விக், ஐந்து திருக்குறளை சொன்னார்.

இலக்கியச் சாரல் நிறுவனர் இளையவன், மூத்த உறுப்பினர்கள் சுந்தர மகாலிங்கம், நல்லப்பெருமாள், விஜயலெக்ஷ்மி நாராயணன் ஆகியோர் தங்கள் உரையினால் உறுப்பினர்களுக்கு வழிகாட்டினர்.

ரெ. முரளி, (ஆசிரியர், இலக்கியச் சாரல்), நாகராஜன், முன்னாள் தலைவர், எஸ். நாராயணன், டாக்டர் பிரதீபா மஹாலெக்ஷ்மி, தி. கோவிந்தராஜன், திருமதி சத்தியப்ரியா, ஜெயஸ்ரீ சாரி, ஆசிரியர், சாரல், கம்பதாசன் கோகுல் ராம், பரமேஸ்வரி, ராஜேஸ்வரி காசிநாதன், எஸ். சூர்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

‘கனமான’ அமெரிக்க செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை!

bluebird satelite launched by isro - 2026

‘கனமான’ அமெரிக்க செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. அமெரிக்க செயற்கைக்கோள் ‘ புளூபேர்ட்’ இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை அடுத்து இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் – இஸ்ரோவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.54க்கு எல்.வி.எம் . , 3 ராக்கெட் வாயிலாக , புளூபேர்ட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்

இந்த ‘ புளூபேர்ட்’ செயற்கைக்கோளை அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம் தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கி இருக்கிறது . இதன் எடை 6500 கிலோ. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை பாரதத்தின் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ இன்று வெற்றிகரமாக  விண்ணில் செலுத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது . ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் பகுதியாக இது வெற்றிகரமாக ஏவப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார். 

இது குறித்து அறிக்கை வெளியிட்ட பிரதமர் மோடி, வணிக ரீதியில் ராக்கெட்டுகளை ஏவுவதில் , உலக சந்தையில் முக்கிய இடத்தை இந்தியா பிடித்துள்ளது . வளர்ச்சி அடைந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பாகும் . நமது கடின உழைப்பாளி விண்வெளி விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள் . விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

இந்திய இளைஞர்களால் இயக்கப்படும் நமது விண்வெளித் திட்டம் மிகவும் மேம்பட்டதாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மாறி வருகிறது . எல் . வி . எம் . , மூன்று ராக்கெட் வாயிலாக செயல்திறனை வெளிப்படுத்துவது வாயிலாக , ககன்யான் போன்ற எதிர்காலப் பணிகளுக்கான அடித்தளங்களை வலுப்படுத்துகிறோம் . வணிக ஏவுதள சேவைகளை விரிவுபடுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், 

இந்திய விண்வெளித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்… 

இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோளான அமெரிக்காவின் விண்கலமான ப்ளூபேர்ட் பிளாக்-2 ஐ அதன் நோக்கம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய LVM3-M6 ஏவுதல், இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 

இது இந்தியாவின் கனரக-தூக்கும் ஏவுதள திறனை வலுப்படுத்துகிறது மற்றும் உலகளாவிய வணிக ஏவுதள சந்தையில் நமது வளர்ந்து வரும் பங்கை வலுப்படுத்துகிறது. இது ஒரு ஆத்மநிர்பர் (தன்னம்பிக்கை) பாரதத்தை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பாகும். நமது கடின உழைப்பாளி விண்வெளி விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.  விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து உயர்ந்து வருகிறது! – என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதிகை, கொல்லம், மயிலாடுதுறை ரயில்கள் நேரம் மாற்றம்!

railway news - 2026
#image_title

கொல்லம் மயிலாடுதுறை பொதிகை ரயில்களின் நேரம் மாறுகிறது. ரயில்கள் இனி முன்னதாகவே சென்று சேரும் வகையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொல்லம் ரயில் நேரம் மாற்றம்

கொல்லத்தில் இருந்து தாம்பரம் செல்லும் கொல்லம் ரயில் வரும் 01/01/26 முதல் கால அட்டவணை மாற்றம் அமலுக்கு வர உள்ளது . அதாவது1 மணி நேரம் 25 நிமிடங்கள் முன்பாக தாம்பரம் செல்கிறது. இதுபோல் மயிலாடுதுறை செங்கோட்டை ரயில் நேரமும் மாறுகிறது.

வண்டி எண் 16102 கொல்லத்தில் இருந்து தாம்பரம் தினசரி விரைவு ரயில் உள்ளது
கொல்லம்:4:00pm
குந்தாரா:4:06pm
கொட்டாரக்கரை:4:15pm
அவனீஸ்வரம்:4:28pm
புனலூர்:4:55pm
தென்மலை:5:43pm
ஆரையன்காவு:6:13pm
செங்கோட்டை:7:10pm
தென்காசி:7:28pm
கடையநல்லூர்:7:43pm
சங்கரன்கோவில் :8:08pm ராஜபாளையம்:8:33pm
ஸ்ரீவில்லிபுத்தூர்:8:48pm
சிவகாசி:9:03pm
விருதுநகர்:9:43pm
மதுரை:10:25pm பதிலாக 01/01/26 முதல் 10:30pm
திண்டுக்கல்:11:25pm பதிலாக 01/01/26 முதல் 11:35pm
திருச்சிராப்பள்ளி:1:45Am பதிலாக 01/01/26 முதல் 12:50Am
விருத்தாசலம்:3:33Am பதிலாக 01/01/26 முதல் 2:24Am
உளுந்தூர்பேட்டை:3:49Am பதிலாக வரும் 01/01/26 முதல் 2:39Am
விழுப்புரம்:4:40Am பதிலாக வரும் 01/01/26 முதல் 3:08Am
செங்கல்பட்டு:6:28Am பதிலாக வரும் 01/01/26 முதல் 4:48Am
தாம்பரம்:7:30Am பதிலாக வரும் 01/01/26 முதல் 6:05Am அதாவது1 மணி நேரம் 25 நிமிடங்கள் முன்பாக தாம்பரம் செல்கிறது

குறிப்பு ( இந்த ரயில் 19/06/25 முதல் 03/2/26 வரை சென்னை எழும்பூர்க்கு வராது அதற்கு மாற்றாக தாம்பரத்தில் தான் வந்து சேரும் தாம்பரத்தில் இருந்து சென்னை எழும்பூர்க்கு ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை ரயில் நேரம் மாற்றம்

இதுபோல் மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை விரைவு ரயில் 01/01/26 முதல் நேர மாற்றம் அமலுக்கு வருகிறது

வரும் 01/01/26 முதல் வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை தினசரி விரைவு ரயில் உள்ளது

மயிலாடுதுறை :12:10pm பதிலாக 12:35pm புறப்படும்
குத்தாலம் :12:47pm ஆடுதுறை : 12:57pm
கும்பகோணம் :1:06pm
பாபநாசம் : 1:17pm
தஞ்சாவூர் :1:39pm
பூதலூர் : 1:57pm
திருவெறும்புர் :2:13pm
மஞ்சதிடல் :2:19pm
திருச்சிராப்பள்ளி :2:40pm
மணப்பாறை :3:00pm
வையம்பட்டி :3:24pm
வடமதுரை : 3:39pm
திண்டுக்கல் : 3:57pm
கொடைக்கானல் ரோடு :4:16pm
மதுரை :5:10pm
திருப்பரங்குன்றம்: 5:26pm
திருமங்கலம் :5:35pm
கள்ளிக்குடி :5:44pm
விருதுநகர் : 6:03pm
திருத்தங்கல்: 6:22pm
சிவகாசி :6:29pm
ஶ்ரீவில்லிபுத்தூர்:6:44pm
இராசபாளையம்:6:59pm
சங்கரன்கோவில் :7:29pm
பாம்புக்கோவில்சந்தை:7:41pm
கடையநல்லூர்:7:52pm
தென்காசி :8:09pm
செங்கோட்டை :8:55pm க்கு சென்றடையும் .

இதுபோல் செங்கோட்டை மயிலாடுதுறை ரயில் நெல்லை செங்கோட்டை ரயில் உட்பட பல்வேறு ரயில்கள் நேரம் மாற்றப்பட்டு உள்ளது .

பொதிகை இனி மாலை 6.45க்கு பதில் 6.50க்கு புறப்பட்டு 20நிமிடம் முன்னதாக சென்னை எழும்பூர் செல்லும் .

Empty Rāgas, Full Canteens: The Great Sabha Vanishing Act of 2025–26

margazhi mahotsav - 2026

          Narasimhan Vijayaraghavan

The thinning of audiences in the 2025–26 season is not a quirk of calendar but a structural malaise. Free afternoon concerts were once crowded proving grounds for artistes on the cusp, with halls that quietly drained at dusk as ticketed celebrity evenings began—a ritual that signified abundance.

This year, the chairs stay vacant regardless of hour. The paradox deepens when one recalls that the supply of trained musicians has never been richer: millennials and Gen Z artistes, global pedagogy, and technical polish aplenty. Yet demand appears anaemic.

One explanation is saturation. Too many Sabhas, too many concerts, compressed into too few weeks, competing for the same finite pool of listeners. Scarcity once created pilgrimage; excess now breeds indifference.

Another shift is behavioural. Rasikas have not vanished; they have dispersed. Social media is awash with images of packed venues elsewhere, suggesting attendance has become selective and episodic—driven by buzz rather than habit.

Most curious is the failure of live streaming. Offers found no takers, despite an obvious constituency: homebound listeners and the elderly, long assumed to crave access without travel. Streaming fell between stools—neither the gravitas of the hall nor the intimacy of private listening—an idea right in theory, wrong in execution.

One can almost hear Subbudu sharpening his pen. He might have remarked that when music multiplies faster than listening, halls will echo, artistes will perspire, and only the sambar will enjoy standing ovations.

The canteens thrive because food adapts faster than institutions. Until concerts do the same—spread across the year, reimagined in form, and freed from seasonal congestion—the music will endure, but the halls may not.