டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி 41வது நாள் மண்டல பூஜை நிறைவு வழிபாடு நடைபெற உள்ள நிலையில் சுவாமி ஐயப்பனுக்கு அன்று அணிவிக்கப்படும் தங்க அங்கி இன்று டிசம்பர் 23 ஆம் தேதி ஆரண்முழா பார்த்த சாரதி கோயிலில் இருந்து சபரிமலை போல் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.
27 ஆம் தேதி மண்டல பூஜைக்காக 26 ஆம் தேதி சபரிமலையை அடையும். அன்று மாலை தீபாராதனையின் போது சுவாமிக்கு தங்கி அணிவிக்கப்பட்டு பூஜை வழிபாடு நடைபெறும் 27ஆம் தேதி மண்டல பூஜை இன் போதும் சுவாமிக்கு இந்த தங்கி அணிவித்து பூஜை வழிபாடு நடைபெறும்
மண்டல பூஜைக்காக சபரிமலையில் ஐயப்பனுக்கு வழங்கப்பட வேண்டிய தங்க அங்கியை சுமந்து செல்லும் ரத ஊர்வலம் டிசம்பர் 23 ஆம் தேதி இன்று ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. டிசம்பர் 26 ஆம் தேதி மாலை தீபாராதனைக்கு முன் சபரிமலை சன்னிதானத்தை அடையும். டிசம்பர் 23 ஆம் தேதி காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை ஆரன்முலா கோயில் முற்றத்தில் தங்க அங்கியைக் காண பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.திரளானழர்கள் தரிசனம் செய்தனர்.மண்டல பூஜைக்காக ஐயப்பனுக்கு அர்ப்பணிப்பதற்காக தங்க அங்கியை 421 பவுன் எடையில் திருவிதாங்கூர் மகாராஜா ஐயப்பனுக்கு வழங்கினார்.
தங்க அங்கி டிசம்பர் 23: ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் தொடங்குகியது
பல்வேறு ஊர்களில் ரத ஊர்வலம் சென்று வரும் டிச 26 மதியம் 1.30 மணிக்கு பம்பா வந்தடையும் .பிற்பகல் 3 மணிக்கு பம்பாவிலிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு சரம்குத்தியை அடையும் .இங்கிருந்து, சடங்குகளுடன் வரவேற்கப்பட்டு, சன்னிதானத்திற்கு தங்க அங்கி அழைத்துச் செல்லப்படும் 18வது படியில் ஏறி சோபனத்தை அடையும் போது, தந்திரியும் மேல்சாந்தியும் வரவேற்று ஐயப்பன் சிலைக்கு தங்க அங்கி வைப்பார்கள். மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
27 ஆம் தேதி நண்பகல் 1 மணிக்கு மண்டல பூஜையில் தங்க அங்கி சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்து மண்டல அபிஷேக நிறைவு பூஜை வழிபாடு விமர்சையாக நடைபெறும் அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்காங்கி ஆரம்பம் பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.
பூபாரம் தீர்க்க வந்தவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. அதன் விளைவு மகாபாரதப்போர். இந்த ஸ்லோகம் ஒரு அதிசய உருவகத்தின் மூலம் அதை வர்ணிக்கிறது.
இந்த யுத்தம் ஒரு ரத்த ஆறாக வர்ணிக்கப்படுகிறது. இதில் பீஷ்மரும் துரோணரும் கரைகள். கரைகளைப் போல் வெள்ளத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்கின்றனர். இவர்களைத் தாண்டி அந்த நதியினுள் யாரும் புக முடியாது. வெளியே வரவும் முடியாது. ஜெயத்ரதன் கௌரவரின் ஒரே சஹோதரி துச்சலையின் கணவன். இவன்தான் அபிமன்யுவின் வதத்திற்கு மூல காரணம். அவனை நதியின் நீர் என்று கூறுகிறார்.
சகுனி நீலோத்பலம் என அழைக்கப்படும் நீலத்தாமரை. பார்ப்பதற்கு சாதாணமானவன் ஆனால் உள்ளே விஷத்தன்மை உடையவன். நீல நிறம் விஷத்தைக் குறிக்கும். சல்லியன் முதலை. நீரில் முதலை எவ்வளவு வலிமையானது என நாம் அனைவரும் அறிவோம்.
கிருபர் நதியின் வேகம். ஆங்கிலத்தில் இதனை viscous flow என்பார்கள். நதியில் மூழ்கி, மீண்டும் எழும்போது சிறிது தூரம் தள்ளி நாம் எழுவோம். ஹரித்வார் படித்துறையில் கங்கை நதி வேகமாக ஓடுவதால் நாம் பிடித்துக்கொண்டு மூழ்குவதற்காக சங்கிலிகள் கரையருகில் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதனைப் போலவே கிருபரும் தன்னுடன் பொரில் ஈடுபடுபவர்களை இழுத்துக்கொண்டு சென்று அழித்து விடுவார் என்பதற்காக இந்த உருவகம். கர்ணன் அந்த நதியின் அலை. அலையடிக்கும்போது மக்கள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் உயிரிழப்பார்கள்.
அதுபோல கர்ணன் போரிடும்போது பலர் உயிரிழப்பர் என்பதை இந்த உருவகம் சுட்டிக்காட்டுகிறது. அஸ்வத்தாமன் விகர்ணன் போன்றவர்கள் சுறாமீன்கள் போன்றவர்கள்.
துரியோதனன் நீர்ச்சுழலுக்கு ஒப்பானவன் ஏனென்றால் அவன்தான் எல்லோரையும் தன்னுள் இழுத்துக்கொண்டு அழிக்கிறான்.
அப்படிப்பட்ட இந்த யுத்தம் என்கிற ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.
பலர் துறவிகளிடம் சென்று, அல்லது மகான்களிடம் சென்று, “ஐயா, வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து நாம் எப்போது விடுபடுவோம்?” என்று கேட்பார்கள். அவர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக துறவி இந்த ஸ்லோகத்தை கூறுவார்.
வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான மங்களகரமான தருணம் ஒவ்வொரு தனிநபரின் கைகளிலும் உள்ளது. நீங்கள் நித்திய ஒழுக்கத்தில் நம்பிக்கையைப் பெறும்போது, ஆன்மீக ஒழுக்கத்தின் கட்டளைகளை நீங்கள் செயல்படுத்தும்போது, மனம் சமநிலைக்கு கொண்டு வரப்படும்போது, அது ஆத்மாவில் நிலையாக நிலைநிறுத்தப்படும்போது, அந்த நொடியே மனிதன் விடுதலை பெற்று ஜீவன்முக்தனாக மாறுகிறான்.
ஜீவன் முக்தி என்பது ஒரு ஆன்மீக நிலை. ஒரு மனிதன் இந்த நிலையை அடையும்போது, அவன் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுகிறான். ஆதிசங்கரர் தாம் இயற்றிய பஜகோவிந்தத்தில்
என்று கூறுகிறார். இந்த வரிகள், நல்லோர் சகவாசத்தால் பற்றின்மை உண்டாகும், அதன் பிறகு மனத்தெளிவு கிடைக்கும், அதன் பிறகு நிலையான உண்மை புலப்படும், அதுவே ஜீவன் முக்திக்கு இட்டுச் செல்லும் என்பதைக் குறிக்கிறது.
இப்போது, விடுதலைக்கு அல்லது ஜீவன் முக்திக்கு வழிவகுக்கும் அந்த நடைமுறை என்ன? ஆசைகளை கைவிட வேண்டும். ஜஹதி என்பதற்குப் பதிலாக பிரஜஹதி என்ற வலுவான சொல்லை இறைவன் பயன்படுத்துகிறார். இதன் மூலம் ஆசைகளை முழுமையாகக் கைவிட வேண்டும்.
சில ஆசைகளை மட்டுமல்ல, அனைத்து ஆசைகளையும், மனதின் உள் இடைவெளிகளில் சிறிதும் எச்சத்தை விட்டுவிடாமல். இது தவிர்க்க முடியாத மற்றும் உலகளாவிய சட்டம். வேறு வழியில்லை. மனதின் குழியில் ஆசையின் மிகச்சிறிய விதை விடப்பட்டாலும், அது முளைத்து, அறியாமலேயே வளரும், மேலும் தேடுபவர் சுய நிலையிலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் மாயையின் சேற்றில் மூழ்கும் ஆபத்து எப்போதும் உள்ளது.
அதைத்தான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. எல்லா ஆசைகளையும் ஓரளவுக்குக் கைவிடுவது அல்லது சில ஆசைகளை மட்டும் முற்றிலுமாக கைவிடுவது போதாது. எல்லா ஆசைகளையும் என்றென்றும் முற்றிலுமாகத் துறக்க வேண்டும்.
ஆசைகளைத் துறக்க முறைப்படி வாழவேண்டும். அதாவது அட்டாங்கயோக முறையான இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றைக் கடைபிடித்து வாழவேண்டும்.
அட்டாங்கயோக முறை
இயமம்
இவற்றில், இயமம் என்பது வாழ்வியல் சார்ந்த நல்லொழுக்கத்தைக் குறிக்கும். நாள்தோறும் இறைவனை வணங்குதல், உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல், உண்மையைக் (சத்தியம்) கடைபிடித்தல், கொல்லாமை, புலன் அடக்கம், ஆசை இல்லாமை ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்தலே இயமம் எனும் முதற்படி நிலையாகும்.
சகல மக்களும் அநுசரிக்க வேண்டிய சாதாரண அறங்களில் முதலாவது அன்பு அதாவது பிற உயிர்களை துன்புறுத்தாமல் இருத்தல். அடுத்தது உண்மையையே பேசுதல் அல்லது சத்தியம் பேசுதல். சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இருப்பது. மனதில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே பொய்மை எனப்படும் அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லியிருக்கிறார்கள். மனத்தில் உள்ளதை வெளியிட்டுச் சொல்வதற்கென்றே இறைவன் மனிதனுக்குப் பேசும் சக்தியைத் தந்திருக்கிறார்.
சத்தியத்தின் விளக்கம்
முழுமையான, பிறருக்குத் துன்பம் தராத வாழ்க்கைக்கு, அதாவது அகிம்சைக்கு நமது நீதி இலக்கியங்களில் சில விலக்குகள் இருக்கின்றன. அறத்தினைக் காப்பதற்காக போர் புரியும் போதும், வேறு சில சமயங்களின் போதும் அகிம்சைக்கு விலக்குத் தரப்பட்டிருக்கிறது. ஆனால் சத்தியத்துக்கு இவ்விதமாக விலக்கே இருக்க முடியாது. ஆனால் சத்தியத்துக்கும் வேறொரு விதத்தில் விலக்கு இருக்கிறது.
எடுத்துக்காட்டாக ஊரிலே பலவிதமான அயோக்கியர்கள் இருக்கிறார்கள். அதைப் பார்த்து ஒருவருடைய மனசு கொதிக்கிறது. அவர் இந்தத் தப்பையெல்லாம் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார். ‘அவன் அந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான். இவன் இந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இவருக்கு வாக்கும் மனசும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இவர் அப்படிச் சொல்வதால் இவருக்கோ மக்களுக்கோ பிரயோஜனமில்லை. தப்புச் செய்கிறவர்களுக்கும் பிரயோஜனமில்லை. இப்படி வீணாக வாக்கும் மனசும் ஒன்றுபட்டிருப்பதை சத்தியம் என்று சொல்வதற்கில்லை.
ஒருவன் மனசில் கெட்ட எண்ணங்கள் எழுகின்றன. அதை அவன் அப்படியே வாக்கிலே வெளியிடுகிறான். அது சத்தியமாகிவிடுமா? ஆகாது. ஆகவே சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமில்ல. நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம். மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக சத்தியத்துக்கு ஒரு வரையறையை பெரியோர் வகுத்திருக்கின்றனர்.
ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கூட கடுமையாகச் சொன்னால் அதை யாறும் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு பலனில்லாமல் போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது. நல்லதாகாவும் இருக்க வேண்டும். அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.
‘சத்தியத்தைச் சொல், பிரியமானதைச் சொல். சத்தியத்தைப் பிரியமாக சொல்ல முடியவில்லை என்றால், அப்போது அப்படிப்பட்ட சத்தியத்தையும் சொல்லாதே. கேட்கப் பிரியமானாலும், அசத்தியத்தைச் சொல்லாதே,’ என்பது பெரியோர் வாக்கு. ஆசையும் கோபமும் உள்ள மனசிலிருந்து இப்படிப்பட்ட பிரியமான, நன்மையான வாக்கு வராது. நன்மையை உண்டாக்கும் சத்திய வாக்கு வரவேண்டுமானால், அதற்கு அடிப்படையாக ஆசை கோபமற்ற நல்ல மனம் வேண்டும்.
சத்தியத்திலேயே ஒருவன் நிலைத்து நின்று விட்டால் அதற்கு ஓர் விளைவு உண்டு – அதாவது அந்த சத்தியசந்தனுக்குத் தெரியாமலேயே ஒரு விளைவு உண்டாகும். அது என்னவெனில், ஒருவன் சத்தியமே பேசிப் பேசி பழகிவிட்டால் கடைசியில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகிவிடும். இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லவே மாட்டான். ஆனால், அறியாமையாலோ தவறிப்போயோ அவன் ஒரு விஷயத்தைத் தப்பாகச் சொல்லி விட்டாலும், அந்தத் தப்பே நிஜ வாழ்க்கையில் சத்தியமாக நடந்துவிடும். அபிராமி பட்டரின் கதை இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
நியமம்
நியமம் என்பது ஒழுக்கத்தின் மூலம் ஆத்ம சுத்தத்தை அடைவது ஆகும். இது கிரியை எனப்படும். தினசரி குளித்தல், சுத்தமான ஆடை அணிதல், நம் சுற்றுப்புரத்தைத் தூய்மையாக வைத்தல், நல்ல உணவுப் பழக்கத்தைக் கொண்டிருத்தல் ஆகியவை இதனுள் அடங்கும்.
ஆசனம்
இது உடற்பயிற்சி நிலைகளைக் குறிக்கும். அதாவது யோகாசன முறைகளைக் குறிப்பிடும். பிராணயாமம் என்பது மூச்சினைக் கட்டுக்குள் கொணரும் பயிற்சி முறைகளாகும். மூச்சை கட்டுப்படுத்துதல் அல்லது நெறிப்படுத்தல் என்றும் இதனைக் கொள்ளலாம். பிரத்தியாகாரம், புலனடக்கத்தைக் குறிக்கின்றது. உள்ளத்தை கண்டபடி அலையவிடாமல் தடுத்து காத்தல் பிரத்தியாகாரமாகும். தாரணை மன ஒருமைப்பாட்டைக் குறிக்கின்றது. தியானம் என்பது இறைவனை உணரும் நிலையாகும். ஒன்றையே நினைத்து எண்ண உருவாக்கத்தை கட்டுப்படுத்தல் என இதனைக் கூறலாம். இறைவனுக்குச் சமனான பேரின்ப நிலையை அடவைவதை சமாதி எனக் குறிப்பிடுகிறோம்.
இயமம் என்பதற்கு கட்டுப்பாடு என்று பொருள் கொள்ளலாம். யோக நெறியில் ஈடுபடுபவன் சுய கட்டுப்பாடுகளாகச் சில விதிகளை கடைபிடித்தல் வேண்டும். தன்னைக் கட்டுப்படுத்தி ஆளும் ஆற்றளுடையவனால்தான் மற்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும். இது தன்னாளுமைப் (Personality) பண்புகளில் ஒன்றாகும். உளத்திற்குத் தீயன செய்கின்ற செயல்களை விலக்குகின்றபோது அகத்தூய்மையைப் பெற முடிகின்றது. அகத்தூய்மை பெற்றவர்களால்தான் புறத்தூய்மையை எளிதில் பெற இயலும்.
நான் தினந்தோறும் குளித்து, தூய ஆடை உடுத்தி, இறைவனை வழிபட வேண்டும் என்பதற்காக எனது தந்தையார், எனக்குத் தந்த அறிவுரை இது.
சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும் 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும். அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.
சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு இந்த ஆண்டு மண்டல பூஜையின் முகூர்த்தம் 27 ஆம் தேதி காலை 10.10 முதல் 11.30 மணிக்குள் இருக்கும் என்று கூறினார்.
பூஜையுடன் தொடர்புடைய தீபாராதனை காலை 11.30 மணிக்கு நிறைவடையும். மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்ப சுவாமி மீது வைக்கப்படும் தங்க அங்கியை சுமந்து செல்லும் ரத ஊர்வலம் 23 ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆரன்முள பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படும்.
தீபாராதனைக்கு முன்னதாக மாலையில் சபரிமலை சன்னிதானத்தை அடையும். ஐயப்பன் சிலை மீது தங்க அங்கி வைக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும். 27 ஆம் தேதி மதியம் தங்க அங்கி வைக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும். பின்னர், 27 ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோயில் மூடப்படும். மகரவிளக்கு விழாவிற்காக 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் மீண்டும் திறக்கப்படும் என்று தந்திரி தெரிவித்தார்.
மண்டல பூஜைக்காக திருவிதாங்கூர் மகாராஜா ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அர்ப்பணிக்கப்பட்டது. டிசம்பர் 23 ஆம் தேதி காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை ஆரன்முளா கோயில் முற்றத்தில் தங்க அங்கியைக் காண பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாவது சபரிமலைக்கு பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு சிறப்பு பாசம் ஏதும் வழங்கப்படவில்லை தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் இந்த வழி பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் காலை 7 மணி முதல் பகல் ஒரு மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் சொல்ல முடியும்.
அதற்குப் பிறகு பெருவழி பாதையில் செல்வதற்கு அனுமதி இல்லை இது போல் சத்தரம் பாதை வழியாக தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது வழக்கம் போல் செயல்படுகிறது என தெரிவித்தார்
சபரிமலையில் தற்போது பெரும் கூட்டம் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் திருவாங்கூர் தேவசம்போர்டு செய்து கொடுத்துள்ளது
On the twenty-first evening of December 2025, the venerable halls of Narada Gana Sabha were not merely filled with sound; they were suffused with meaning. At a time when murmurs of thinning audiences have accompanied the Margazhi season like an unwanted sruti, the Trichur Brothers presided over a gathering where empty seats were conspicuous by their absence. Sir Neville Cardus would have smiled—his irreverent insistence on “rears to be seated” was amply satisfied. What unfolded was not just a concert, but a collective immersion.
The evening opened with Saint Tyagaraja’s “Teliyaleru Rama” in Dhenuka, a gentle admonition that ritual without inward devotion is but an empty shell. That philosophical overture yielded seamlessly to the assured gait of “Paripalaya Mam” in Reethi Gowla, rendered with muscular clarity and unflagging momentum. The brothers’ music carried the stamp of lineage—robust, unsentimental, and nourishing—leaving the audience willingly tethered to its rhythmic pulse.
A tender Hemavathi alapana followed, honeyed yet uncloying, setting the stage for Muthuswamy Dikshitar’s “Kanthimathim.” In this, Dikshitar’s 250th birth year—curiously coinciding with the 250th year of American independence—the Guruguha mudra emerged with sculpted precision. The ensuing swara exchanges sparkled with abundance, a cascade of melodic confections tossed back and forth like a lavish platter of halvas, provoking spontaneous applause that rippled through the hall.
A subtle assertion lay beneath the surface. After a stirring Nrusimha-themed piece in Mohanam, the brothers spoke of the inseparability of sahityam and bhakti—a quiet but firm rejoinder to last season’s controversies. Yet the evening’s true summit arrived with the Ragam Tanam Pallavi, anchored in the uncompromising line:
“Pengalai Kaapathu Kadamaiada: Nam Bharatha Naatin Dharmamada.”
As these words unfurled, the hall seemed to contract into stillness. Ahead of me sat a young girl—a special child—her world often governed by silences others scarcely notice. As the pallavi gathered force, tears traced their way down her face, unbidden and pure. Her parents watched, equally undone. In that instant, the music ceased to be art and became invocation. A 150-minute vigil found its meaning in a child’s wordless response. Technique bowed to truth. The divine, briefly, felt within reach.
இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரளத்தின் பாரம்பரிய உணவாக மதியம் சத்யா பரிமாறத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மதிய புதிய அன்னதானத்தை வாழையிலையில் பரிமாறினால் நன்றாக இருக்கும் என பக்தர்கள் பெரியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சபரிமலையில் மதிய அன்னதானத்தின் ஒரு பகுதியாக, சபரிமலை யாத்ரீகர்களுக்கு கேரள சத்யா பரிமாறப்படுகிறது. இந்த சாதத்தில் பருப்பு நெய் சாம்பார், ரசம், அவியல், ஊறுகாய், தோரன், பப்படம் மற்றும் பாயசம் போன்ற உணவுகள் பரிமாறப்படுகின்றன. அவியல் மற்றும் தோரன் ஒவ்வொரு நாளும் மாறும். மோர், ரசம் அல்லது புளிசேரி என ஒரு உணவு பதார்த்தம் பரிமாறப்படும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான பாயசம் பரிமாறப்படும்.
வரும் நாட்களில், கேரள சத்யா மாற்று நாட்களில் வழங்கப்படும். மதியம் 12 மணிக்கு, தேவஸ்வம் நிர்வாக அதிகாரி ஓ.ஜி. பிஜு தீபம் ஏற்றி, ஐயப்பனுக்கு சத்யா வழங்கினார். பின்னர், அன்னதானத்திற்காக காத்திருந்த பக்தர்களுக்கு சத்யா பரிமாறப்பட்டது. சத்யாவுக்கு எஃகு தட்டுகள் மற்றும் எஃகு கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
தொழில்நுட்ப வசதிகளை தயார் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் சத்யா தாமதமானது என்றும், அன்னதானத்தின் இறைவனான அய்யப்பனின் ஆசியுடன், அடுத்தடுத்த நாட்களிலும் சத்யா பரிமாற முடியும் என்று நம்புவதாகவும் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கேரளாவிற்கு வரும் பக்தர்களுக்கு மலையாள சத்யாவின் சுவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பக்தர்களுக்கு சத்யா பரிமாற முடிவு எடுக்கப்பட்டது. பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் நண்பகலில் ஐயாயிரம் பேர் அன்னதானத்தில் பங்கேற்கின்றனர். ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சத்யாவும் தயாரிக்கப்படுகிறது. மாற்று நாட்களில் பக்தர்களுக்கு சத்யாவும் புலாவும் மாறி மாறி வழங்கப்படும். சன்னிதானம் சிறப்பு அதிகாரி பி. பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்
பகவத்கீதை பற்றி எனக்கு என்ன தெரியும்? பகவத்கீதை பற்றி எழுதும் அளவிற்கு நான் தகுதியானவனா? இந்தக் கேள்விகள் எப்போதும் என்னைத் துளைத்துக்கொண்டிருக்கும். நான் பள்ளிச் சிறுவனாக இருக்கும்போது என் தந்தையார் மறைந்த வைத்தீஸ்வரன் அவர்கள் இரண்டு பகவத்கீதை ஸ்லோகங்களை வீட்டில் அடிக்கடி சொல்லிகொண்டிருப்பார்.
அவர் சமஸ்கிருதம் படித்தவர். பகவத்கீதையைப் படித்தவர். மயிலாடுதுறை அருகே உள்ள செம்பொனார்கோவில் இரயில்வே ஸ்டேஷனில் உதவி இரயில்வே நிலைய அதிகாரியாகப் பணியாற்றியவர்.
இப்போது அந்தப் பாதையில் இரயில் ஓடவில்லை. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இண்டர்மீடியட் வரை படித்தவர். அவரது திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்த அவருக்கு, எனக்கு கிடைத்த அளவிற்குகூட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அவர் சொல்லிக்கொண்டிருந்த அந்த இரண்டு பகவத்கீதை ஸ்லோகங்களில் ஒன்று
பகவத்கீதை, இரண்டாம் அத்தியாயம், 55ஆவது ஸ்லோகம். ஸ்திதப்ரஜ்ஞன் என்பவன் யார் என்ற விளக்கம் சொல்லும் ஸ்லோகம்.
இதன் பொருள் என்னவென்றால் – பகவான் கூறுகிறார் – ஒரு மனிதன் மனதின் அனைத்து ஆசைகளையும் முற்றிலுமாகத் துறந்து, ஆத்மாவில் நிலைத்திருக்கும் தனது மனதை முழுமையாக திருப்திப்படுத்தும்போது, அவன் நிலையான ஞானமுள்ள மனிதன் என்று அறிவிக்கப்படுகிறான்.
அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது.
திரு அத்யயன உற்சவம் : மார்கழி மாதம் 05ம் தேதி இன்று 20-12-2025 முதல் மார்கழி மாதம் 25ம் தேதி 09-01-2026 வரை நடைபெறும்.முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி 30-12-2025 – பரமபத வாசல் திறப்பு காலை 05.30 மணி நடைபெறும்.ஸ்ரீ ஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் மார்கழி மாதம் 24ம் தேதி 08-01-2026 முதல் தை மாதம் 1-ம் தேதி 15-01-2026 வரை நடைபெறும்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்திப்பெற்ற பகல்பத்து உற்சவம் வெகு விமர்சையாக இன்று தொடங்கப்பட்டது. உற்சவத்தின் முதல் நிகழ்வாக பச்சைப் பரத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரம் தேரோட்டம் மிகப் பிரசித்திப்பெற்ற நிகழ்ச்சியாகும். அதற்கு அடுத்தப்படியாக மார்கழி திருவிழாவின் பகல்பத்து, இராப்பத்து, பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறும் மிக முக்கிய நிகழ்வுகளாகும்.
இந்நிலையில், மார்கழி உற்சவத்தையொட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல்பத்து நிகழ்ச்சி வழக்கமான உற்சாகத்துடன் இன்று தொடங்கப்பட்டது. பகல்பத்து நிகழ்ச்சியின், தொடக்கமாக பச்சைப் பரத்துதல் நிகழ்வு ஆண்டாள் கோயிலில் நடைபெற்றது.
சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் என்றழைக்கப்படும் ஆண்டாளை நந்தவனத்தில் இருந்து பெரியாழ்வார் எடுத்து வளர்த்தார் என்பது புராணம். அந்த வழித்தோன்றலில் வந்த பெரியாழ்வாரின் சந்ததியினர் இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் பகல்பத்து உற்சவம் தொடங்கும் நாளன்று ஆண்டாள், தன்னை எடுத்து வளர்த்த தந்தை பெரியாழ்வாரின் வீட்டுக்கு ரெங்கமன்னாருடன் வருகைத்தந்து சீர் வாங்கிச் செல்வது வழக்கம்.
அவ்வாறு ரெங்கமன்னாருடன், ஆண்டாள் பல்லக்கில் வரும்போது உற்சவர்களின் பார்வைபடும்படி பச்சைக் காய்கறிகளைப் பரப்பி வைத்தால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் எப்போதும் பசி, பட்டினியின்றி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார்கள் என்பது ஐதிகம்.
இவ்வாறு பரப்பி வைக்கப்படிருக்கும் பச்சை காய்கறிகளை ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் பார்த்தப்பின்பு அதனை பக்தர்கள் தங்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்றால் தங்களின் வீடுகளிலும் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, மார்கழி உற்சவத்தில் ஆண்டாள் கோயிலில் மட்டுமே நடைபெறும் இந்த பச்சைப் பரத்தல் நிகழ்ச்சியைக்காண தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வருகை தருவார்கள்.
அதன்படி இன்று நடைபெற்ற பச்சைப்பரத்தல் நிகழ்ச்சிக்காகப் பல்வேறு மாவட்டத்திலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் ஆண்டாள், ரெங்கமன்னரை மனமுருக தரிசித்து வழிபட்டனர். தரிசனத்துக்குப் பின்னர் பச்சைப் பரத்தலுக்காகப் பரப்பி வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை பக்தர்கள் ஆர்வமுடன் தங்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
பெருமாளின் முகம் காண நாணி, சங்கைப் பார்த்தே பாடிய ஆண்டாள்; மார்கழியும் திருப்பாவையும்!
பகல்பத்து உற்சவம் இன்று தொடங்கியதையடுத்து ஆண்டாள் கோயிலில் தேதி எண்ணெய்காப்பு உற்சவம் நடைபெறுகிறது. பகல்பத்து, இராப்பத்து நிகழ்வாக கொண்டாடப்படும் 20 நாள் உற்சவத்தின் ஒவ்வொரு நாள் விழாவுக்கும் ஆண்டாள் – ரெங்கமன்னர் சாமி சிலைகள் திருக்கோயில் தங்கப் பல்லக்கில் புறப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.
30-12-2025 அன்று பரமபத வாசல் திறப்பு காலை 05.30 மணி நடைபெறும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு ஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவே இராப்பத்து வைபவமும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
In the sandalwood-laced stillness of Narada Gana Sabha, where December evenings once swelled with anticipatory murmurs and rustling silks, this Margazhi has arrived with a quieter cadence.
On Saturday, 20 December 2025, at four in the afternoon, the hall listened attentively to Dushyanth Sridhar—BITS Pilani alumnus, best-selling author, director of dance productions, and a globally followed exponent of Sanātana Dharma whose upanyāsams on the Rāmāyaṇam and Mahābhārata have long bridged tradition and modernity. Few contemporary speakers command his reach or rhetorical assurance.
It was therefore ironic that he had earlier, with disarming courtesy, contested my lament on dwindling rasikas, offering his humble opinion that post-pandemic turnouts were buoyant, even furnishing photographs of full houses. One acknowledged that experience can differ, and wished him well. Exceptions, after all, do exist.
Yet the hall that evening spoke its own arithmetic. The balcony—sustained by daily-ticket rasikas and of relatively modest capacity—was reasonably full, a familiar and comforting sight.
The ground floor, however, with its far greater seating capacity and once the true barometer of Sabha vitality, remained conspicuously under-occupied. This was no fleeting impression. Quiet conversations with the canteen staff, those unacknowledged auditors of cultural footfall, confirmed that this was symptomatic of the season rather than an anomaly of the evening.
If the turnout felt ‘high’ to the speaker, that would indeed be a different matter. But the hall was nowhere near the fullness it once routinely achieved, especially on a weekend at a major Sabha. Numbers, stripped of nostalgia, remain stubbornly factual. One rests one’s case there.
இது நம் பண்டைய பாரதத்தின் ஆழ்ந்த நம்பிக்கை. மிகப் பழமையான நூல்களில் குறிப்பிடப்படுவது. அதன்படி, மோட்சத் தலங்களான ஏழு நகரங்களில் முதலாவது அயோத்தி! அயோத்தி என்றாலே யுத்தம் இல்லாதது, அல்லது யுத்தங்களைக் கடந்தது என்று பொருள். அயோத்தி என்றாலே, ராமன், ராமாயணம், இக்ஷ்வாகு வம்சம் இவை நம் நினைவுக்கு வரும். வானுலகில் இருந்து பூமிக்கு எடுத்துவரப்பட்ட புண்ணிய மண் என்று அயோத்திக்கு சிறப்பு உண்டு. ஆனால் அந்த அயோத்திதான் இந்தக் கலியுகத்தில் பெரும் யுத்தங்களையும் சந்தித்தது. இன்று நாம் காணும் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீராமரின் ஆலயம் உருவானதன் பின்னணியில் மிகப் பெரும் போராட்ட வரலாறே புதைந்திருக்கிறது.
ஸ்ரீராம ஜன்ம பூமியில் சுமார் 500 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் தற்போது ஆலயம் அமைந்து, கடந்த 2024 ஜன.22ல் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அதன் பின்னும் ஆலயம் தொடர்ந்து திட்டமிடப்பட்ட வகையில் கட்டடப் பணிகள் பூர்த்தியாகி, கடந்த 2025 நவ. 25 அன்று, துவஜாரோஹணம் எனும் கொடியேற்ற நிகழ்வும் நடைபெற்றது. இதன் மூலம், ஆலயம் முழுவதும் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பாளர்கள் ஒரே நாளில் வாள் முனையில் பலரை ஈவு இரக்கமின்றிக் கொன்று, பலரைத் தங்களின் அடிமைகளாக்கிக் கொண்டனர். ஆனால் தங்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடியோர் அதேபோன்ற உயிர்க் கொலை நிகழாவண்ணம் தங்கள் உயிர்களையும் வாழ்க்கையையும் தியாகம் செய்து போராட்டங்கள் பல நடத்தி, இறுதியில் சட்டப் போராட்டத்தின் மூலம் நியாயத்தை மீட்டெடுத்தனர். சத்தியம் ஒரு நாள் உறுதியாக வெல்லும்; ஆனால் அதற்கு வெகு காலம் பிடிக்கும் என்பது அயோத்தி விஷயத்திலும் உண்மையானது.
உலக வரலாற்றிலேயே ஒரு இனம் தனது வழிபாட்டு உரிமையையும் கலாச்சாரத் தொன்மையையும் பாதுகாக்க எப்படிப்பட்ட நீண்ட நெடிய போராட்டத்தை மேற்கொண்டது என்பதற்கான ஒரே உதாரணம் அயோத்தி மட்டுமே! உலகின் மற்ற பண்டைய நாகரிகங்கள் எல்லாம் இத்தகைய காட்டுமிராண்டித்தன ஆக்கிரமிப்பாளர்களின் வன்முறை வெறியாட்டத்துக்கு உயிரிழந்து உருக்குலைந்து போய்விட்ட நிலையில், அயோத்தி எனும் அடையாளம் இன்றும் உயிர்ப்புடன் திகழ்கிறது என்றால், அதன் காரணம் ‘தியாகம்’ என்பதே!
இந்தத் தியாகப் போராட்டத்துக்கு நீதி எப்படிக் கிடைத்தது?
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலம் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டலாம். அதே நேரம், முஸ்லிம்களுக்குத் தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றது உச்ச நீதிமன்றம்! அவ்வகையில், சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டது உச்ச நீதிமன்றம்.
1528: பாபரின் படைத்தளபதி மிர் பாகியால் ராமர் கோவில் இடிக்கப்பட்டு அதன் மேல் பாபர் மசூதி கட்டப்பட்டது. அப்போது உயிர்த் தியாகம் செய்தோர் எண்ணற்றோர். தொடர்ந்து மன்னர்கள் தலைமையிலும் குழுவாகவும் மீட்புப் போர்கள் தொடர்ந்தன.
1857: முதல் சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர்கள் இணைந்து, முகலாய அரசர் பகதூர் ஷா தலைமையில் பொது எதிரியாக ஆங்கிலேயருடன் போராடினர். அப்போது ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட, ராமஜன்ம பூமியை ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்க தீர்மானித்தனர். ஹிந்துக்கள் சார்பில் ராமசந்திரதாஸும் முஸ்லிம்கள் தரப்பில் அமீர் அலியும் சமாதான ஒப்பந்தம் செய்தனர். ஆனால் பிரிவினையை ஏற்படுத்த இருவரையும் கைதுசெய்து ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர்.
1885: மசூதி – ராமஜன்ம பூமி இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பக் கோரி பைசாபாத் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபிர்தாஸ் மனு அளித்தார். மனு தள்ளுபடியானது.
1949: ராமஜன்ம பூமி மைய மண்டபத்தில் ராமர், சீதா, லட்சுமணர் சிலைகள் வைக்கப்பட்டன.
1950: ராமர் சிலைகளை வழிபட அனுமதி கோரி பைசாபாத் நீதிமன்றத்தில் கோபால் சிம்லா விஷாரத் மனு அளித்தார். பரமஹன்ஸ ராமசந்திர தாஸ் அங்கே வழிபாடு நடத்த மனு அளித்தார்.
1959: சர்ச்சை இடத்துக்கு உரிமை கோரி நிர்மோகி அகாரா சார்பில் மனு தாக்கலானது. உ.பி., சன்னி வக்பு வாரியமும் அந்த இடத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்தது.
1961 டிச.18 : 12 ஆண்டுகளில் நீர்த்துப்போக வேண்டிய வழக்கில், சரியாக ஒரு தினம் முன் சன்னி வக்ப் போர்டு தன்னை ஒரு வாதியாக இணைத்துக் கொண்டது. ராம்லல்லா சார்பில் அந்த இடத்துக்கு உரிமை கோரி தேவகி நந்த அகர்வால் வழக்கு தொடுத்தார்.
1980: பிரயாகையில் கூடிய விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத பொதுக் குழு, அயோத்தி பிரச்சினையைக் கையில் எடுத்தது.
1984: நாடு முழுதும் கவனத்தை ஈர்க்க போரட்டங்கள் நடந்தன. மக்களிடம் கொண்டு செல்ல ராமர் ரத யாத்திரை, ராம ஜோதி யாத்திரை, பாதுகை யாத்திரைகள் நடந்தன.
1986, பிப்.1: சர்ச்சை இடத்தில் வழிபாடு நடத்த உள்ளூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
1989, ஆக.14: சர்ச்சை இடத்தில் முன்பு இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பாஜக., 89 உறுப்பினர்களுடன் வி.பி.சிங் அரசை வெளியில் இருந்து ஆதரித்தது. உ.பி.யில் முலாயம் சிங் யாதவும், பீகாரில் லாலு பிரசாத் யாதவும் முதல்வர் ஆனார்கள்.
அயோத்தியில் ஆலயம் அமையக் கோரி, குஜராத்தின் சோம்நாத்திலிருந்து அயோத்தி நோக்கி 12 மாநிலங்கள் வழியாக ரத யாத்திரை மேற்கொண்டார் எல்.கே.அத்வானி. மக்கள் ஆதரவு பெருகியது. அவர் பீகாரின் சமஸ்திபூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அயோத்தி நோக்கிச் சென்ற லட்சக் கணக்கான கரசேவகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. எனினும் கரசேவைக்கு குறித்த நாளில், லட்சக்கணக்கான கரசேவகர்கள் அயோத்தியில் குவிந்தனர். குறித்த நேரத்தில் சர்ச்சைக் கட்டடத்தின் மேலேறி காவிக் கொடியை நட்டனர். மசூதியின் அடையாளத்துடன் திகழ்ந்த மூன்று கும்பங்கள் சிதைக்கப்பட்டன. அப்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ராம பக்தர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
1992, டிச.6: சர்ச்சை இடத்தில் மீண்டும் கரசேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டிச.2ல் அயோத்தி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிமன்றம் வேண்டுமென்றே தீர்ப்பைத் தள்ளி வைக்க, கோபமுற்ற கரசேவகர்கள் மசூதியை இடித்துத் தள்ளினர். காலை 11 மணிக்குத் தொடங்கிய ஆவேசப் போராட்டத்தில், ஆயுதம் ஏதுமின்றி கட்டடம் நிர்மூலமாக்கப்பட்டது. கரசேவகர்களால் பூஜிக்கப்பட்ட செங்கற்கள் கொண்டு, தற்காலிக கட்டடம் கட்டப்பட்டு, அதில் ராம்லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்டார். அப்போது உ.பி.யில் ஆட்சியில் இருந்த கல்யாண் சிங் தலைமையிலான பாஜக., அரசு கலைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
1993, ஏப்.3: சர்ச்சை இடத்தைக் கைப்பற்ற அயோத்யா சட்டம் உருவாக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்மாயில் பரூக்கி உள்பட அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர்.
1994, அக்.24: பரூக்கி தொடர்ந்த வழக்கில், மசூதி இஸ்லாத்தின் ஒரு பகுதி அல்ல என்று தீர்ப்பானது.
2002, ஏப்: சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது.
2003, மே 13: அஸ்லாம் தொடர்ந்த வழக்கில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எவ்வித மத நடவடிக்கைகளும் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
2010, செப் 30: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா மூவரும் 2:1 என்ற அளவில் பிரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது
2011, மே 9: அயோத்தி நில வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
2017, மார்ச் 21: இவ்வழக்கில் அனைத்துத் தரப்பிலும் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணலாம் என பரிந்துரைக்கப்பட்டது.
2017, ஆக.7: 1994ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீரப்பை எதிர்த்துத் தாக்கலான மனுவை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
2018, பிப்.8: அயோத்தி வழக்கில் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்கியது.
2018, ஜூலை 20: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
2018, செப்.27: மசூதி இஸ்லாத்தின் ஒரு பகுதி அல்ல என ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மறுப்பு தெரிவித்தது. அக்.29 முதல் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் எனத் தெரிவித்தது.
2018, அக்.29: ஜனவரி முதல் வாரத்திலிருந்து உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். அந்த அமர்வு விசாரணையை முடிவு செய்யும் என்றது நீதிமன்றம்.
2018, டிச.24: 2019, ஜன.4ல் இருந்து மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும் என உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.
2019, ஜன.4: எந்த அமர்வு விசாரிக்கும் என்பது குறித்து ஜன.10ல் அறிவிக்கப்படும் என்றது உச்ச நீதிமன்றம்.
2019, ஜன.8: மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க அமைத்தது.
2019, ஜன.10: வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகிக்கொள்வதாக அறிவித்ததால், ஜன.29க்கு ஒத்திவைக்கப்பட்டது.
2019, ஜன.25: புதிய அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்ஏ.நசீர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.
2019, ஜன.29: உண்மையான உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை திரும்ப அளிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அனுமதி கோரியது.
2019, பிப்.26: சமரசப் பேச்சுக்கு பரிந்துரைப்பது குறித்து மார்ச் 5ல் முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
2019, மார்ச் 8: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்எம் கலிபுல்லா தலைமையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் பஞ்சு ஆகியோர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் சமரசக் குழுவாக அமைத்தது.
2019, ஏப்.9: உண்மையான நில உரிமையாளர்களிடம் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மத்திய அரசின் மனுவுக்கு எதிராக நிர்மோகா அஹாரா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
2019, மே 9 : சமரசக் குழுவினர் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர்.
2019, ஜூலை 11: சமரசப் பேச்சின் நிலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் அறிக்கை கேட்டது.
2019, ஜூலை 18: சமரசப் பேச்சு தொடரலாம்; ஆக.1-ல் அறிக்கை தாக்கல் செய்க என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
2019, ஆக.1: சமரசக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது.
2019, ஆக.2: ஆக.6 முதல் தினமும் விசாரணை நடக்கும் என்றது உச்ச நீதிமன்றம். அதன்படி விசாரணை தொடர்ந்தது.
2019, அக். 4: அக்.17க்குள் விசாரணை முடிக்கப்படும். நவ.17க்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றது உச்ச நீதிமன்றம்.
2019, நவ. 9: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், நிலம் மத்திய அரசின் பொறுப்பில் இருக்கும். முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் தனியாக மசூதி கட்ட உ.பி. அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நெடிய சட்டப் போராட்டத்தின் மூலம், அயோத்தி கோயில் பூமி பூஜை கடந்த 2020 ஆக.5ல் நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை 2020 மார்ச்சில் கட்டுமானத்தைத் தொடங்கியது. கோவிட் போன்ற தொற்று தடைகள் அகல, விஷ்வ ஹிந்து பரிஷத் ‘விஜய மஹாமந்த்ர ஜப அனுஷ்டானத்துக்கு’ ஏற்பாடு செய்தது. 2024 ஜன.22 அன்று, அயோத்தி ராமர் கோவிலின் கர்ப்பகிரகத்தில் ராமர் விக்ரஹப் பிரதிஷ்டை நடக்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அதன்படி வெகு விமர்சையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கலந்து கொள்ள, அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.
ஸ்ரீராமபிரானுக்கும் நம் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பும் உண்டு. இந்த மண்ணில் தான் ஸ்ரீராமன் தன் பாதம் தோய நடந்தான். அதன் பின் இந்த மண்ணில் ராமனுக்காக ஆண்டாண்டு காலமாய் ஆலயங்கள் பல அமைந்தன. சங்க காலப் புலவர்களும் அப்போது மக்கள் மத்தியில் நிலவி வந்த ராம காதையைத் தம் பாடல்களில் பதிவு செய்தனர். பின்னாளில் எழுந்த பக்தி இயக்கத்தில் ஆழ்வார்களால் ராமன் பெரிதும் கொண்டாடப்பட்டான். ராமனுக்காக எழுந்த அறநெறிக் காவியமாக தமிழின் கவிச் சிறப்புடன் கம்பன் ராமாயணம் செய்தான். ராம நாடகக் கீர்த்தனைகள் என அருணாசலக் கவிராயர் பாடல்கள் புனைந்தார்.
இப்படியெல்லாம் ராமனுக்காக வாழ்நாளில் தொண்டு செய்த தமிழர்களில் பின்னாளில் தலையாய தொண்டு செய்தவர் ஆனார் மூத்த வழக்குரைஞர் பராசரன். ராமன் ஆலயம் அமைவதற்காகத் தன் தள்ளாத வயதிலும் உச்ச நீதிமன்றத்தில் போராடி, வாதாடி வெற்றித் தீர்ப்பை பெற்றுத் தந்தவர் அவர். 94 வயதிலும் தள்ளாத நிலையிலும், அவர் வாதாடிய நேரத்தில், “நீங்கள் அமர்ந்தே வாதாடலாம்” என்று நீதிபதி சொன்னபோதும், “இதை என் ராமனுக்காகச் செய்கிறேன். அதனால் அமர்ந்து வாதிட மாட்டேன்” என்று சொல்லி, பல மணி நேரம் நின்றே வாதாடி வெற்றி பெற்றுத் தந்தார். ஆலயம் அமையவும், ஆலய கட்டுமானப் பணிகளுக்கும் அதிகபட்ச நன்கொடைகளை தமிழகம் அளித்தது.
ராமர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழை அளிக்க வீடுதோறும் சென்ற ஸ்வயம்சேவகர்களுக்கு பல சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள். ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். கும்பாபிஷேக அழைப்பிதழைக் கூட ஒவ்வொருவரும் தங்கள் காலணிகளை கழற்றிவிட்டு, பயபக்தியுடன் பெற்று கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். ராமன் ஆலயத்துக்காக தமிழகத்தின் ஏக்கம் எத்தகையது என்பதை அந்த அனுபவக் கதைகள் உணர்த்தின. என்னதான் திராவிடமும் நாத்திகமும் வேற்று மதத்தினரும் தமிழகத்தில் ராமனுக்கு எதிராகப் பேசி வந்தாலும், மக்களின் உணர்வுகளில், மரபணுக்களில் ராம பக்தி இருப்பதை அந்நேரம் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. ஆலய பிராணப் பிரதிஷ்டை தினத்தில், தங்கள் வீட்டு வாசலில் அலங்கரித்து, கோலமிட்டு, விளக்கேற்றி,, ராம நாமத்தை ஜபித்தார்கள். இவையெல்லாம் அந்த வெற்றிச் சரித்திரத்தின் பலன்களாக இந்தத் தலைமுறையில் நாம் பார்க்கிறோம். அந்த வகையில் நாம் புண்ணியம் செய்தவர்களே!