
சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.
பஞ்சாபில் 7 கிராமங்களில் சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானதையடுத்து, சீக்கியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பேபால் கலன் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் பலியான கோட்காபுராவைச் சேர்ந்த குர்ஜீத் சிங் குடும்பத்தினரை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், பஞ்சாபில் நெருக்கடியான சூழல் நிலவுகிறது, விவசாயிகள் பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். போதைப் பொருள் புழக்கமும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது என்று கூறினார்.


