Home Blog Page 5976

பாகிஸ்தான் ஏஜெண்டு ஷாருக்கான் : சாத்வி பிராச்சி

 
சர்ச்சைக்குரிய கருத்துக்களை அடிக்கடி கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டதாக பலரால்
கூறப்படுபவர் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி
 
சகிப்புத்தன்மை குறித்த அவர் கூறிய கருத்திற்காக, அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை பாகிஸ்தானிற்கு நாடு கடத்த வேண்டும். மத்திய அரசு அவருக்கு வழங்கியுள்ள பத்மஸ்ரீ விருதை, ஷாரூக் கான் திருப்பியளிக்க வேண்டும் என்று சாத்வி தற்போது கூறியுள்ளார்.
 
மேலும் சாத்வி பிராச்சிதான், ஷாருக்கான் கான், சல்மான் கான், அமீர்கான் ஆகியோர் நடித்த படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் முன்பு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
முன் கதை:-
 
மும்பையில் 50-வது பிறந்த நாளை ஷாருக்கான் நேற்று கொண்டாடினார். அப்போது இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; இங்கே கருத்து சுதந்திரம் உண்டு. நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது கவலை அளிக்கிறது. இந்நிலை தொடருமேயானால், முன்னணி நாடாக இந்தியா உருவாவதற்கு பெரும் தடைக்கற்களாக இருக்கும் என கூறி இருந்தார்.

ஈச்சம்பாடி, கோமுகி அணைகளை நாளை திறந்துவிட ஜெயலலிதா உத்தரவு

சென்னை:

10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் நாளை முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:

தர்மபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அதனை ஏற்று, ஈச்சம்பாடி அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் நாளை முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள 6,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும்;

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

அந்த வேண்டுகோளினை ஏற்று, கோமுகி அணையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர ராமதாஸ் கோரிக்கை

சென்னை:

ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாக, நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

2016 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளன. உச்சநீதிமன்றத் தடையால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் தமிழக மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.

ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் ஏறுதழுவல் போட்டி தமிழர்களின், குறிப்பாக மதுரை உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய மாவட்ட மக்களின் வீரத்துடன் சம்பந்தப்பட்டதாகும். கடந்த 8 ஆண்டுகளாகவே இப்போட்டிக்கு பல்வேறு தரப்பிலிருந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்ட போதிலும், அவற்றை சமாளித்து போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்தது. அத்தடையை நீக்க அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காததால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியவில்லை. இதனால் தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர். பல நூற்றாண்டுகளாக தமிழர் திருநாளையொட்டி பரபரப்பாக காணப்பட்ட பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட நகரங்களின் வாடிவாசல்கள் மட்டுமின்றி, அப்பகுதி மக்களின் முகங்களும் கடந்த ஆண்டு தான் முதல்முறையாக களையிழந்தன.

ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் திருநாள் இந்த ஆண்டுடன் முடிந்த கதையாக இருக்கட்டும்… வரும் ஆண்டில் வழக்கம் போல ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் குரலாக உள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதால் அதை இரு வழிகளில் மட்டுமே நீக்க முடியும். அவற்றின் முதலாவது உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து தடையை அகற்றுவதாகும். இரண்டாவது நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதன்மூலம் இப்போது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது மட்டுமின்றி, எதிர்காலத்திலும் இந்த போட்டிகளை நடத்த எந்த வகையிலும் சட்ட சிக்கல் ஏற்படாமல் தடுப்பது ஆகும். ஆனால், இந்த இரு வழிகளில் எந்த வழியிலும் ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த பொங்கல் திருநாளுக்கு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாததற்கு காரணம் தமிழக அரசு தானே தவிர வேறு யாரும் இல்லை. 2014 ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்து உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வைத்திருக்க வேண்டும். ஆனால், பெயரளவில் சீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசு, அதை விரைவாக விசாரிக்கும்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் முறையிடவில்லை. அதனால் தான் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு சாதகமாக எந்தவித தீர்ப்பையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கவில்லை.

காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை மத்திய அரசு இன்னும் நீக்காத நிலையில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இவ்வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்தாலும் சாதகமான பலன் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. இத்தகைய சூழலில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதன் மூலம் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த முடியும். பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த யோசனையை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்தேகரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால், தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை; எந்த வகையிலும் அழுத்தம் தரவில்லை.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 26 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தக் கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே சட்டத் திருத்தத்தை மேற்கொண்டால் மட்டுமே வரும் ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியும். பொங்கல் திருநாளுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதுதொடர்பாக தெளிவான உத்தரவாதம் அளிக்கப்பட்டால் தான் பொதுமக்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஜல்லிக்கட்டுக்கு தயாராக முடியும். எனவே, இது தொடர்பான உத்தரவாதத்தை அளிப்பதுடன், வரும் கூட்டத்தொடரில் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளி தாவூத்க்கு பாகிஸ்தான் ராணுவ பாதுகாப்பு

 
 
சோட்டா ராஜன் கைது செய்யப்பட்தை தொடர்ந்து தொடர் குண்டுவெடிப்பு உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளி தாவூத் இப்ராகிமுக்கு அளித்து வரும் பாதுகாப்பை பாகிஸ்தான் பலமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
 
தாவூத் இப்ராகிம் குறித்து சோட்டா ராஜனுக்கு பல தகவல்கள் தெரியும் என்பதால் தாவூத் குறித்த அனைத்து விவரங்களையும் அவர் சிபிஐயிடம் கூறி விடுவார் என்பதால் முன்னெச்சரிக்கையாக தாவூத்துக்கு அளித்து வரும் பாதுகாப்பை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அதிகரித்துள்ளதாக பரவலாக சொல்லப்படுகிறது.
 
1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளி தாவூத் இப்ராகிம். கட்த 20 வருடத்திற்கும் மேலாக இவர் பாகிஸ்தானில் அந்த நாட்டு அரசின் ஆதரவுடனும், ஐஎஸ்ஐ உளவு அமைப்பு மற்றும் ராணுவத்தின் பாதுகாப்புடனும் வசித்து வருகிறார்.
 
இஸ்லாமாபாத், கராச்சி என பல இடங்களில் மாறி மாறி வசித்து வரும் தாவூத் இப்ராகிம் தற்போது கராச்சியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
 
தாவூத்வசித்து வரும் அவரது கராச்சி வீட்டுக்கு வெளியே கமாண்டோப் படையினரை பாதுகாப்புக்காக தற்போது குவித்து வைத்துள்ளதாம் பாகிஸ்தான் ராணுவம். இந்த கமாண்டோக்கள் அனைவரும் ராணுவக் கமாண்டோக்கள் ஆவர்.
 
இந்த நிலையில் தாவூத்தின் முன்னாள் கூட்டாளியும், தாவூத் குறித்து நன்கு அறிந்தவருமான சோட்டா ராஜன் சில நாட்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் பாலி தீவில் வைத்து சிக்கினார்.
 
சோட்டா ராஜன் கைது தாவூத்துக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. காரணம், தாவூத் நெட்வொர்க் குறித்து பல முக்கிய விவரங்கள் சோட்டா ராஜனுக்குத் தெரியாமல் அவர் மூலமாக தாவூத் நெட்வொர்க்கை இந்தியா தகர்க்கும் என்ற அச்சம் பாகிஸ்தானில் எழுந்துள்ளது.
 
மேலும் சோட்டா ராஜன் மூலம் பெறும் தகவல்களை வைத்து தன்னை கொல்லவோ அல்லது அதிரடியாக உயிரோடு பிடிக்கவோ இந்திய உளவுத்துறை முயலலாம் என்ற அச்சமும் தாவூத்துக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே அச்சத்தில்தான் பாகிஸ்தான் ராணுவமும் உள்ளது. பாகிஸ்தான் ராணுவம். தாவூத் கராச்சியில் பாதுகாப்புடன் வசித்து வருவதை சோட்டா ராஜனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
எனவே தாவூத் இப்ராகிமுக்கு அளித்து வரும் பாதுகாப்பை பாகிஸ்தான் பலமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுவது என்பது குறிப்பிடத்தக்கது
 

 

ஸ்டாலின் மட்டுமே தி.மு.க.வின் அடுத்த தலைவர் பதவிக்கு தகுதியானவர் : மு.கருணாநிதி

 
 
தி.மு.க.வின் அடுத்த தலைவர் பதவிக்கு தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினே தகுதியானவர் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்து செய்தியாளர்களிடம் உள்ளார்.
 
மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதாவது மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் ‘நமக்கு நாமே’ ரோடு–ஷோ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மக்கள் அவருக்கு ஏகோபித்த அன்பும், ஆதரவும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் நமக்கு நாமே பயணம் முடிந்ததும் ஸ்டாலின் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசுவார். ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன நடந்தது என்பதை என்னிடம் முழு விபரமாக கூறுவார். அவர் சொல்வதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
 
2016 சட்டசபை தேர்தலில் 2ஜி விவகாரம் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 2ஜி ஒதுக்கீடு வருவாய் இழப்பு வழக்கு விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பால் தி.மு.க. பாதிப்பு அடையாது என்று உறுதியாக நம்புகிறேன்.
 
தி.மு.க.வில் எனக்கு அடுத்து தலைமை பொறுப்புக்கு வருவது யார் என்று அடிக்கடி பேசப்படுகிறது. தி.மு.கழகம் ஜனநாயக இயக்கமாகும். இங்கு பெரும்பாலானவர்களின் கருத்துக்கு ஏற்பவே முடிவுகள் எடுக்கப்படுகிறது. நான் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுத்து அறிவிப்பது இல்லை. கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளையே அறிவிக்கிறேன்.
 
தற்போதைய சூழ்நிலையில் நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கூட தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்தான் கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியானவர். இந்த வெளிப்படையான உண்மை மக்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும்” என்று கருணாநிதி கூறினார்.

விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என போலி வீடியோ வெளியிட்ட ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்

 
 
 
 
விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என போலி வீடியோ ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வெளியிட்டதாக ரஷியா விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதுதொடர்பாக, பேட்டியளித்த ரஷ்ய விமானப்படையின் முன்னாள் கமாண்டரான ஸ்டீவ் சட்விக் ஓபே கூறியாதாவது :-
 
எகிப்து நாட்டின் ஷரம் எல் ஷேக் நகரில் இருந்து 224 பேருடன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு புறப்பட்டு சென்ற மெட்ரோஜெட் ஏர்லைன்ஸ் விமானம் (ஏ–321 ஏர் பஸ்), சினாய் தீபகற்பத்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நெகேல் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் 224 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் தெரிவித்து வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது.
 
ஐ.எஸ். அமைப்பிடம் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் கிடையாது. மேலும் அந்த வீடியோவில் காணப்படுவது ஏர்பஸ் ரக விமானமே அல்ல. அது 33 ஆயிரம் அடியில் பறக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோவும் அல்ல என கூறினார். இந்த வீடியோ ஆதாரம் போலியானது மட்டுமல்ல, நகைப்புக்குரியதும்கூட என ரஷியா விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

 

தமிழகத்தில் மாநகராட்சியை கண்டித்து நாளை பா.ஜ.க. முற்றுகை போராட்டம்: தமிழிசை சவுந்தரராஜன்

 
தமிழகத்தில் மாநகராட்சியை கண்டித்து நாளை பா.ஜ.க.வின ர் முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக சென்னை தியாகராயநகரில் உள்ள மாநில தலைமையகமான கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
 
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியிருக்கிறது. சென்னை மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மாநகராட்சி நிர்வாகம் செயலிழந்துவிட்டது. டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் பரவிவருகின்றன. ஆனால், அதுபற்றிய தகவல் மறைக்கப்படுகிறது. டெங்கு நோய் பற்றிய தகவல்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இதுபற்றி மாநகராட்சி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
 
டெங்கு நோய் பரவுவதை தடுக்க மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. உயிரிழப்புகளை தடுக்க எந்த வகையில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளன. இதை கண்டிக்கும் வகையில், வரும் 4-ந்தேதி (நாளை) காலை 11 மணிக்கு ரிப்பன் கட்டிடம் முன்பு பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் போராட்டம் நடத்தியிருக்கிறார். பாடகர் கோவனை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இவர்கள் கட்சியை சேர்ந்த தலைவரை யாராவது கேவலமாக சித்தரித்து பாடியிருந்தால் இப்படித்தான் விடுதலை செய்யக் கூறுவார்களா?.
 
தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளுக்கும் மாற்று பா.ஜ.க. தான். மக்கள் நல கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாக இன்று மாறியிருக்கிறது. அதில் சில எழுத்துகள் தான் மாறியிருக்கிறது என்றாலும், தமிழகத்தின் தலை எழுத்தை அவர்களால் மாற்ற முடியாது. முதலில் இந்த கூட்டணி தேர்தல் வரை தொடருமா? என்பதே சந்தேகம் தான்.
 
பா.ஜ.க.வை எங்கள் கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என்று வைகோ கூறியிருக்கிறார். நாங்களே அவர்களை விரும்பவில்லை. பிரதமர் நரேந்திரமோடியின் நல்ல திட்டங்கள் தமிழகத்தை வந்தடைய தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
 
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதை மக்கள் நம்ப தயாராக இல்லை. பா.ஜ.க. கூட்டணியைத்தான் மக்கள் நம்புகிறார்கள் என தமிழிசை சவுந்தரராஜன், கூறினார்.
 

 

அதற்கு நான் பொறுப்பல்ல… கொம்பன் இயக்குனரின் அவசர எச்சரிக்கை!

images cinema actors komban - 2026

கொம்பன் படத்தை இயக்குனர் முத்தையா தற்போ விஷாலை வைத்து மருது என்ற படத்தை இயக்க தயாராகி வருகிறார். இவர் பெயரில் தொடர்பு கொண்டு சினிமா வாய்ப்பு தருவதாக யாரேனும் கூறினால் தயவு செய்து அதை நம்ப வேண்டாம் என்று அவசர அவசரமாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நான் பேஸ்புக், டுவிட்டர் போன்ற எந்தவிதமான சமூக வலைதளங்களை இதுவரை பயன்படுத்தியதில்லை. எனது பெயரில் சிலர் சமூக வலைதளங்களில் பொய்யான கணக்குகளை தொடங்கி அதில் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளனர்.

அதே போன்று எனது பெயரில் தொடர்பு கொண்டு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி மோசடி செய்வது போன்ற தகவல்கள் என்னிடம் வருகிறது. அதனால் தயவு செய்து என்னை யாரும் நேரில் சந்திக்காமல் எனது பெயரில் வரும் எந்த ஒரு பொய்யான தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம். அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துகொள்கிறேன்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிஸ்டு கால்

 

‘தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்தா எடுப்பது இல்லை’ என்பது சிலரது கொள்கை. அது என்ன கொள்கையோ தெரியவில்லை.

விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் நண்பனைப் பற்றி தகவல் வரலாம். ”ஏம்ப்பா, இந்த நம்பரைக் கொஞ்சம் போட்டுத் தர்றியா?” என இரவல் செல்போன் வாங்கி உறவினர் ஒருவர் பேசலாம். புதிய வாய்ப்பு ஒன்றுக்கான அழைப்பாக இருக்கலாம்.

ஆனால், ”நம்பர் தெரிந்தால்தான் நம்புவேன்” என்பவர்கள் கஸ்டமர் கேர் அழைப்புகளை வெளிநாட்டு நம்பர் என நினைத்து, பதறி எடுப்பதைப் பார்த்தால், ஒரே சிப்புச் சிப்பா வருது!

– பாரதி தம்பி (மிஸ்டு கால்: 

பன்றிகளின் வளர்ப்பும் பராமரிப்பு முறைகளும் 

இனப்பெருக்கப் பராமரிப்புகள்

  1. பன்றிகளின் இனவிருத்தித் திறன் அதிகம். அதற்கேற்ப ஆண்டுக்கு இரு முறை குட்டி ஈனுமாறு அதனை முறையாகப் பராமரித்தல் வேண்டும்.
  2. ஒவ்வொரு 10 பெண் பன்றிக்கு 1 ஆண் பன்றி என்ற விகிதத்தில் பராமரித்தல் நலம்.
  3. சரியான சினைத்தருணத்தில் இனக்கலப்புச் செய்தல் அவசியம்.

சினையான பன்றிகளின் பராமரிப்பு

குட்டி ஈனுவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே சினைப் பன்றிக்கு தனிக்கவனம் செலுத்தவேண்டும். நல்ல தீனி, சுத்தமான நீர், தூய்மையான இடத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். குட்டி ஈனும் கொட்டிலை 3-4 நாட்கள் முன்னரே கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும். பின் குட்டி ஈனும் போது சரியான படுக்கைவசதி இருக்குமாறு அமைத்து வைத்தல் வேண்டும்.

பன்றிக்குட்டிகள்

  1. பன்றிக்குட்டிகள்  நசுங்கினால் இருக்கும் கம்பியமைப்பை ஏற்படுத்தி வைக்கலாம்.
  2. கூரிய கத்திக் கொண்டு தொப்புள் கொடியை நறுக்கிய உடனே நோய்த் தொற்கு ஏற்படாமல் இருக்க டிங்சர் (அ) அயோடினைத் தடவவேண்டும்.
  3. முதல் 6-8 வாரங்கள் தாய்ப்பால் அருந்தச் செய்யவேண்டும்.
  4. குடடிகளை முதல் இரண்டு மாதங்கள் எந்த ஒரு தட்பவெப்பநிலை பாதிப்புக்கும் உள்ளாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  5. கோரைப்புற்களை நீக்கிவிடவேண்டும். அப்போதுதான் தாய்ப்பன்றியின் காம்புகள் காயம் படாமல் தடுக்க முடியும்.
  6. முறையான தடுப்பூசி அட்டவணைப்படி குட்டியிலிருந்தே தடுப்பூசிகளை முறையாகப் போட்டு வந்தால் எந்த ஒரு நோய்த் தொற்றும் ஏற்படாமல் இருக்க உதவும்.
  7. இரத்தச் சோகை ஏற்படுவதைத் தடுக்க சரியான அளவு இரும்புச் சத்துத் தாதுக்களை அளித்தல் அவசியம்.
  8. விற்பனைக்கு அல்லது இறைச்சிக்காக வெட்டுமிடத்திற்கு அனுப்புமுன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும்.
  9. இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தாத ஆண் குட்டிகளை காயடித்தல் செய்து (3-4 வாரங்களில்) விடுவதால் இதன் இறைச்சியின் தரம் அதிகரிப்பதுடன் கெட்ட வாடை அடிக்காமல் இருக்க உதவும்.
  10. பாலூட்டும் பன்றிக்குத் தேவைப்படும் அளவு அடர் மற்றும்  கலப்புத் தீவனங்களை முறையாக அளித்தால் மட்டுமே நல்ல பால் சுரப்பு இருக்கும்.

Pig_carePiglets
பன்றிக்குட்டிகள்

பெண் பன்றிகள் பராமரிப்பு

  1. பெண் பன்றிகளை பிறந்ததிலிருந்தே நல்ல தீனி மற்றும் பராமரிப்புடன் வளர்த்துவரவேண்டும். அப்போது தான் அவை ஈனும் குட்டிகள் ஆரோக்கியமான நல்ல எடை தருபவையாக இருத்தல் வேண்டும்.
  2. குட்டி ஈனும் கொட்டிலை 2 சதவிகிதம் பினைல் களிம்பு கொண்டு சுத்தப்படுத்தி ஒரு வாரம் முன்பே தயார் செய்யவேண்டும்.
  3. குட்டி ஈனுவதற்கு சற்று முன்னரும் 2-3 வாரத்திற்கு முன்பு ஒரு முறையும் சினைப் பன்றிக்கு குடற்புழு நீக்க மருந்து அளித்தல் அவசியம்.
  4. புற ஒட்டுண்ணித் தாக்குதலைக் குறைக்க 1 சதவிகிதம் மாலத்தியான் / சையத்தியான், பட்டாக்ஸ் 0.05 சதவிகிதம் கலந்த கரைசலை தெளிக்கவேண்டும். இக்கரைசல் கொண்டு அடிப்பகுதி, பக்கங்கள் மற்றும் பன்றியின் மடியினை நன்கு தேய்த்துக் கழுவுதல் வேண்டும். மேலும் அழுக்கு, ஒட்டுண்ணி முட்டைகள், நோய்க்கிருமிகள்  ஏதேனும் இருக்க வாய்ப்புள்ளதால் குட்டி ஈனும் கொட்டிலுக்கு பன்றியை அனுப்பு முன் சோப்புக் கொண்டு தேய்த்துக் கழுவுதல் நலம்.
  5. 10 நாட்களுக்கு முன்பே குட்டி ஈனும் கொட்டிலுக்கு அனுப்பி விடலாம்.
  6. நறுக்கிய வைக்கோலை படுக்கை வசதிக்காக 3 நாட்களுக்கு முன்பே தயாரித்து வைத்தல் வேண்டும்.
  7. பன்றியின் காம்பு அழுத்திப் பார்த்தால் மிக மென்மையாக பால் சுரந்து காணப்படும். இது குட்டி ஈனப்போவதன் அறிகுறியாகும்.
  8. குட்டி ஈனுதலின் போது எல்லாக் குட்டிகளையும் ஈனுவதற்கு 2-6 மணி நேரம் தேவைப்படும். சில சமயம் 20 மணி நேரம்கூட ஆகலாம். எனினும் எல்லாக் குட்டிகளையும் ஈனும் வரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளவேண்டும்.
  9. குட்டிகளை வைக்கோல் / துணி வைத்து மூக்கினருகே மூச்சுவிட எளிதாகுமாறு துடைத்துவிடவேண்டும். நன்கு ஆரோக்கியமான குட்டிகள் 10-30 நிமிடத்தில் பாலூட்டிவிடும். சிறிய தெரியாத குட்டிகளுக்குக் காம்பை வாயில் வைத்து ஊட்டப் பழக்கவேண்டும்.
  10. இறந்து போன குட்டிகள், நஞ்சுக்கொடி, படுக்கை அமைப்பு போன்றவற்றை குட்டி போட்ட பின் சிறிது நேரத்தில் அப்புறப்படுத்தி புதைத்து விடுதல் வேண்டும்.
  11. 50 கிராம் இரும்புச்சத்து (இம்ப்பெரான் 1 மிலி) அளவு கொடுத்து குட்டிகளுக்கு இரத்தச்சோகை வராமல் தடுக்கலாம்.
  12. கொட்டில் எப்போது சுத்தமாக, மிதமான வெப்பநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். புறஊதாக்கதிர் விளக்கு அல்லது மின்சார விளக்கு கொண்டு சிறிது வெப்பமான சூழ்நிலையை (குளிர் காலங்களில்) உருவாக்கலாம். இதனால் குட்டிகள் கடுங்குளிரிலிருந்து சிறிது தப்பித்துக் கொள்ளும்.

இனச்சேர்க்கை மற்றும் பராமரிப்பு

பெண் பன்றியானது ஒவ்வொரு 21 நாட்களுக்கு ஒரு முறை சினைக்கு வரும். நல்ல பராமரிப்பும் தீவனமும் பன்றிகள் சினைக்கு வருவதைத் துரிதப்படுத்துவதோடு அதிக எடையுள்ள குட்டிகளை ஈனுகின்றன. பயறு வகைகள், தானியங்களோடு, கழிவு கொழுப்பு நீக்கப்பட்ட கால்நடைகளின் பால், மோர் போன்றவற்றை இனக்கலப்பு செய்வதற்கு 2-3 வாரங்களுக்கு முன்பிருந்து கொடுத்து வந்தால் பன்றியின் எடையானது 200-300 கிராம் கூடும்.

Pig_matting
இனச்சேர்க்கை

சராசரி சினைப்பருவ காலம் 112-115 நாட்கள் அதே போல்  சராசரியாக ஒரு ஈற்றில் 8-10 குட்டிக்ள வரை ஈனும். நன்கு பராமரிக்கப் பட்டிருந்தால் வயது முதிர்ந்த பன்றிகள் கூட நல்ல எடையுடன் நிறைய குட்டிகள் ஈனும்.

குட்டி ஈனும் சமயத்தில் கவனிக்க வேண்டியவை

சினையான பன்றிகளை குட்டி ஈனுவதற்கு 3-4 நாட்கள் முன்பு குட்டி ஈனும் கொட்டிலுக்கு அனுப்பிவிட வேண்டும். அப்போது தான் அது அப்புதிய சூழ்நிலைக்குப் பழகுவதோடு அது விரும்பிய படி தனிமையில் இருக்க முடியும்.

மேலும் இந்தக் கொட்டில் நல்ல வெளிச்சத்துடன், காற்றோட்டமும் கொண்டு சுத்தமாக இருத்தல் வேண்டும். குட்டி ஈனும் போது தேவைப்பட்டால் மட்டுமே பன்றிக்கு உதவவேண்டும். குட்டிகள் பிறந்தவுடன் அவற்றை துணி / வைக்கோல் கொண்டு துடைத்துப் பின் வெதுவெதுப்பான் வெப்பநிலையுடன் கூடிய படுக்கையை அவைகளுக்கு அமைத்துத்  தருதல் வேண்டும்.

  1. ஒரு தாய்ப்பன்றியானது 8 வார இளங்குட்டி ஈன்ற காலங்களில் 150-200 கிலோகிராம் பால் கறக்கும். இதன் பால் மாட்டின் பாலை விட அதிக அடர்த்தியாக இருப்பதால் இதற்கு தீவனமும் அதிகம் தேவைப்படுகிறது. ஒரு பன்றிக்கு 1.5 கிலோகிராமும் குட்டி ஒன்றிற்கு அரை கிலோ என்ற வீதம் 5-6 கிலோகிராம் நாளொன்றுக்குத் தேவைப்படும். குதிரை மசால், வேலி மசால், முயல் மசால், சூடான் புல், சிவப்புக் குளோவர் போன்றவை பன்றிக்கு மிகச்சிறந்த பசும்புல் தீவனங்கள் ஆகும்.
  2. குட்டிகளைத் தாய்ப்பன்றியிடமிருந்து பிரித்த பின்வு பன்றிக்குத் கொடுக்கும் தீவன அளவை குறிப்பாக அடர் தீவனத்தை சற்றுக் குறைக்கவேண்டும். இது பால் மடியில் சுரந்து வீணாவதைக் குறைக்க உதவும்.

 

ஆண்பன்றிப் பராமரிப்பு முறைகள்

  1. ஆண்பன்றிகள் தனித்தனிக் கொட்டிலில் பராமரிக்கப்படவேண்டும். தீனி மிகையாகவோ, குறைந்து விடாமலோ இல்லாமல் சரியான அளவு கொடுக்கவேண்டும். ஆண் பன்றியானது அளவான எடையோடு, அதிகக் கொழுப்பின்றி இருத்தல் வேண்டும். கலப்புச் சேர்க்கை இல்லாத சமயங்களில் நிறையப் புற்களும் பயறு வகைப் புற்களும், அடர் தீவனம் 2 கிலோ என்ற அளவிலும் கொடுக்கப்படவேண்டும். கலப்பு காலம் தொடங்கும் போது இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்து 0.5 கிலோ அதிகமாகக் கொடுக்கலாம்.
  2. இனக்கலப்புக்கு பயன்படுத்தும் கிடாப்பன்றியின் வயது குறைந்தது 9 மாதமாவது இருக்கவேண்டும். இளம் கிடாவானது ஒரு பருவத்திற்கு 15-20 பன்றிகளுடனும், முதிர்ந்த கிடா 25-45 பன்றிகளுடனும் கலப்புச் செய்யலாம்.
  3. இனக்கலப்பு முடிந்த பிறகே தீவனம் அளிக்கவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பெட்டைப்பன்றியுடன் மட்டுமே இனக்கலப்பிற்கு அனுமதிக்கப்படவேண்டும்.
  4. ஆண் பன்றிக் கொட்டில் சுத்தமான தண்ணீர் வழங்கப்பட்டிருக்கவேண்டும். பன்றியை நன்கு கழுவித் தூய்மையாக வைத்திருக்கவேண்டும். இளம் கிடாக்களை வயது முதிர்ந்த பெட்டைப் பன்றிகளோடு கலப்புச் செய்யலாம்.
  5. அவ்வப்போது கால் நகங்களை வெட்டிவிடுதல் நல்லது. புதிதாக வாங்கப்பட்ட கிடாக்களைத் தனியே வைத்து 2 வாரங்கள் பராமரிக்கவேண்டும். இவ்வாறு செய்யும் போது அவைகளுக்கு ஏதேனும் நோய் தொற்று இருந்தால் இது பண்ணையில் உள்ள பிற பன்றிகளுக்குப் பரவாமல் தடுக்க இயலும்.

புதிதாகப் பிறந்த குட்டிகள் பராமரிப்பு

  1. பிறந்த உடன் 8-10 முறை ஒரே நாளில் பாலூட்டப்பழக்கவேண்டும்.

Pig_piglets_feeding
பிறந்த குட்டிகள் பாலூட்டம்.

  1. குட்டி ஈன்றவுடன் அதன் நாசித்துவாரத்தை துணிகொண்டு துடைத்து நல்ல படுக்கை அமைப்பை ஏற்படுத்தி குட்டிகளைக் வெதுவெதுப்பான வெப்பநிலையில் இருக்குமாறு செய்யவேண்டும்.
  2. பிறந்த குட்டிகளுக்கு கோரைப்புற்களை நீக்கிவிடவேண்டும்.
  3. குட்டிகளுக்கு இரத்தசோகை ஏற்படாமல் இருக்க காப்பர். இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்த தீனியளித்தல் அவசியம்.
  4. குட்டிகள் தீவிர முறையில் வளர்க்கப்படுவதால் இயற்கையாக மண்தரையில் வளர்க்கப்படும் போது கிடைக்கக்கூடிய தாதுச்சத்துக்கள் கிடைப்பதில்லை.
  5. இவற்றைத் தடுக்க பன்றிக்குட்டிகளை மண் தரையில் மேயவும், இரும்புச்சத்து, தாமிரச்சத்து மாத்திரைகளைக் கொடுத்தும், தாயின் மடியில் இரும்பு சல்பேட், தாமிர சல்பேட் அடங்கிய மருந்துகளைத் தடவலாம் அல்லது வெளியில் கிடைக்கும் இரும்பு – டெக்ஸ்ட்ரான் ஊசிகளைப் போடுவதன் மூலமும் தேவையான சத்துக்கள் கிடைக்கச் செய்யலாம்.
  6. குட்டிகள் முதல் இரண்டு மூன்று வாரங்களுக்கு உலர் தீனிகள் மட்டுமே எடுக்கும். பின்பு இரண்டு வாரங்கள் கழித்து தாயுடன் சேர்ந்து பிற தீவனங்களை உண்ணத் தொடங்கும் அப்போது அது உட்கொள்ளும் அளவு,  அதிக சத்துள்ள தீவனங்களை அளித்தால் மட்டுமே குட்டிகள் அதிக எடையுடன் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வெறும் தாய்ப்பன்றியின் பால் மட்டும் குட்டிகளின் விரைவான வளர்ச்சிக்கு உதவாது. கீழ்க்கண்ட கலவைகளைக் கொண்டே குட்டிகளின் சத்துணவு தயாரிக்கப்படுகிறது.
கலவைகள்பாகங்கள்
சிவப்புச்சோளம்65
கரும்புச் சக்கை / தோகை5
கோதுமை தவிடு10
மீன் கழிவு5
தாதுக்கலவை1
எதிர்ப்பொருட்கள்
ஜிஎன்சி14

பன்றிக்குட்டிகளைப் பிரித்தல்

  1. 7,8 வது வாரங்களில் குட்டிகள் தாயிடமிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்டு விடவேண்டும். ஓரிரு வாரங்கள் முன்பிருந்தே தாய்ப்ன்றியை சிறிது நேரம் தனித்து அடைத்து வைத்துப் பழக்கவேண்டும். குட்டிகளைப் பிரித்த பின்பு தாய்ப்பன்றிக்குக் கொடுக்கும் தீவன அளவை சற்றுக் குறைத்துக் கொள்ளலாம்.

ஊட்டச்சத்துக்கள்

பன்றிப் பண்ணையில் பன்றியின் இனம், வயது, உடல் எடை போன்ற காரணிகளைப் பொறுத்து, ஊட்டச்சத்துக்களின் அளவு வேறுபடும். ஊட்டச்சத்து தேவையின்படி பன்றிகள் 11 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பன்றிக்குட்டிகள்:

  1. பிறந்தகுட்டிகள் (2-5 கிலோகிராம்)
  2. வளரும் குட்டிகள் (11-23 கிலோகிராம்)

சந்தைக்கு வளர்க்கப்படும் பன்றிகள்:

  1. வளரும் பன்றிகள் (23-57 கிகி)
  2. வளர்ந்த பன்றிகள் (57-91 கிகி)

ஆண்பன்றி:

  1. ஆண்பன்றி (பொலிகிடா)

பெண் பன்றிகள்:

  1. பருவமடைந்த பெண் பன்றி
  2. பருவமடைந்து சினைக்குத் தயாராக இருக்கும் பெண் பன்றி
  3. சினைப்பன்றி
  4. குட்டி ஈனப்போகும் பன்றிகள்
  5. பாலூட்டும் பன்றிகள்

கழிவுகளை அகற்றுதல்:

உலர்ந்த கட்டியான கழிவுகளை காலை மற்றும் மாலை வேளைகளில் உரம் சேகரிக்கும் குழியில் போட்டு விடலாம். சிறுநீர், பன்றி கழுவும் நீர் போன்றவை கீழே ஏதேனும் தொட்டியில் சென்று விழுமாறு கொட்டகையை அமைத்திருத்தல் வேண்டும்.

ஒருங்கிணைப்பு

பன்றிப் பண்ணையுடன் சாண எரிவாயு தயாரிப்பு அமைப்பையும் நிறுவினால் பண்ணைக்கும், வீட்டுத்தேவைக்கும் தேவையான எரிவாயுவைத்  தயாரித்துக்கொள்ள முடியும். மேலும் இது தவிர மீன் வளர்ப்பும் இதனுடன் ஒருங்கிணைத்துச் செய்யலாம். பன்றிக்கழிவுகள் வயலுக்க சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுகின்றது.

பன்றியின் தினசரிக் கழிவில் கிடைக்கும் உர அளவு (தோராயமாக)

வயது (வாரங்களில்)
உடல் எடை (கிலோகிராமில்)திட மற்றும் திரவக் கழிவு (லிட்டரில்)
12141.5
20453.5
28807.0
பெண் பன்றிகள் கழிவு14.0

டாக்டர். பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை

COURTESY & SOURCE : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதளம்