Home Blog Page 5979

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
குமரிக் கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைகொண்டுள்ளதால் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 

 

17 வயதான பள்ளி மாணவியை கற்பழித்த 17 வயது சிறுவன் கைது

 
17 வயதான பள்ளி மாணவியை 17 வயது சிறுவன் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பஞ்சாப் மாநிலம் பதாலா நகரில் உள்ள காந்தி முகாம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி பள்ளிக்கு வெளியே பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியை சந்தித்துள்ளார். சிறிது நேரம் பேசிய அவர் மாணவியை அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் சிறுவன் வாக்குறுதி அளித்து தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
 
சிறுமி அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் வைத்து சிறுவன் அந்த சிறுமியை கற்பழிப்பு செய்துள்ளார். சிறுமி நேற்று முன்தினம் தான் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் சிறுவன் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
 
நடைபெற்ற சம்பவம் குறித்து சிறுவனின் தாய்க்கு தெரியும் என்றும், அறைக்குள் தாங்கள் சென்றபோது அவர் தான் வெளியே பூட்டியதாகவும் 17 வயது பள்ளி சிறுமி தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனை நேற்று கைது செய்தனர். ஆனால் அவரின் தாய் தலைமறைவாகிவிட்டார். 17 வயது மைனர் சிறுமியை மைனர் ஒருவர் கற்பழிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

ஓடும் ரயிலில் ரிமோர்ட் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி

 
ரயில்வே தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டை, ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தின் மாஸ்டாங்கில், வெடிக்க செய்தில் ஓடும் ரயிலில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
 
 
வெடிகுண்டு தாக்குதல் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து, நடத்தப்பட்டு உள்ளது. ரயில் ராவல்பிண்டியில் இருந்து குவெட்டா வழியாக சென்றபோது, வெடிகுண்டு வெடித்தது.
 
காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் மோசமான நிலையில் உள்ளனர். ரயில் தண்டவாளம் சேதம் அடைந்து உள்ளது.
 
பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவத் தாக்குதலை தொடர்ந்து மாஸ்டாங் மாவட்டம் பயங்கரவாதிகளின் ஊடுருவும் மையப்பகுதியாக இருந்து வருகிறது.
 
ஏற்கனவே ஜாபர் எக்ஸ்பிரஸ் இதுபோன்ற தாக்குதல்களை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

டெல்லியில் ப.சிதம்பரம், தங்கபாலு சந்திப்பு: இளங்கோவன் மீது ராகுல் காந்தியுடன் புகார்?

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை அவரது வீட்டில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்கபாலு, ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினர். சந்திப்பின்போது,தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மூத்த தலைவர்களை மதிக்காமல், தன்னிச்சையாக செயல்படுவதாக ராகுலிடம் அவர்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இளங்கோவனை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ராகுல் காந்தி வீட்டில் நடந்த சந்திப்பின்போது, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமார், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் கோபிநாத், மாநில துணைத் தலைவர் எச்.வசந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்ததாக தெரிகிறது.

டாஸ்மாக்கை மூடசொல்வது தேச துரோகமும், பிரிவினைவாதமா.? : விஜயகாந்த் கேள்வி

டாஸ்மாக்கை மூடவேண்டுமென்று விழிப்புணர்வு பாடல் பாடியதில் தேச துரோகமும், பிரிவினைவாதமும் எங்கிருந்து வருகிறது என்று கூறி, “மூடு டாஸ்மாக்கை மூடு” பாடலை பாடிய கோவனை விடுதலை செய்யக்கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெரும்பாலான தமிழக மக்களின் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடிய காந்தியவாதி சசிபெருமாள் போராட்ட களத்திலேயே உயிரிழந்தார். அதன்பின் தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்கின்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளும் போராட்டம் நடத்தின.

மேலும் தமிழகம் முழுவதும் இருக்கின்ற பல்வேறு அமைப்புகள் மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுபட்டன. மக்கள் கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த சிவதாஸ் (எ) கோவன் “மூடு டாஸ்மாக்கை கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த சிவதாஸ் (எ) கோவன் “மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலை பாடியுள்ளார். அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி மக்களிடத்தில் வரவேற்பு பெற்று விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியது. அதை பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக அரசு அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டையும், பிரிவினைவாத குற்றச்சாட்டையும் கூறி கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மதுவை ஒழிக்கவேண்டும் என்று ஜனநாயக ரீதியில் பிரச்சாரம் செய்ததற்கே தமிழ்நாட்டில் இந்த நிலை. தேமுதிக சார்பில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நடைபெற்ற “மனித சங்கிலி” போராட்டத்திற்கு கூட அதிமுக அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு கொடுத்துள்ள கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்தையும் அடக்குமுறையால் நசுக்கி, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல் அதிமுக ஆட்சியில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. டாஸ்மாக்கை மூடவேண்டுமென்று விழிப்புணர்வு பாடல் பாடியதில் தேச துரோகமும், பிரிவினைவாதமும் எங்கிருந்து வருகிறது.

இதுபோன்று மக்கள் விழிப்புணர்வுக்காகவும், நன்மைக்காகவும் செய்யப்படும் செயல்களை, அதிமுக அரசு பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் முடக்காமல், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். தமிழக அரசுக்கு மதுவை விற்பதற்கு எப்படி உரிமை உள்ளதோ, அதுபோல மதுவை வேண்டாம் என்று சொல்வதற்கு தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது.

எனவே கைது செய்யப்பட்டுள்ள மக்கள் கலை, இலக்கிய கழகத்தின் கோவன்மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, சிறையிலிருந்து அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

டாஸ்மாக்கை மூடசொல்வது தேச துரோகமும், பிரிவினைவாதமா.? : விஜயகாந்த் கேள்வி

டாஸ்மாக்கை மூடவேண்டுமென்று விழிப்புணர்வு பாடல் பாடியதில் தேச துரோகமும், பிரிவினைவாதமும் எங்கிருந்து வருகிறது என்று கூறி, “மூடு டாஸ்மாக்கை மூடு” பாடலை பாடிய கோவனை விடுதலை செய்யக்கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
பெரும்பாலான தமிழக மக்களின் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடிய காந்தியவாதி சசிபெருமாள் போராட்ட களத்திலேயே உயிரிழந்தார்.
 
அதன்பின் தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்கின்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளும் போராட்டம் நடத்தின.
 
மேலும் தமிழகம் முழுவதும் இருக்கின்ற பல்வேறு அமைப்புகள் மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுபட்டன. மக்கள் கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த சிவதாஸ் (எ) கோவன் “மூடு டாஸ்மாக்கை
 
கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த சிவதாஸ் (எ) கோவன் “மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலை பாடியுள்ளார்.
 
அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி மக்களிடத்தில் வரவேற்பு பெற்று விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியது.
 
அதை பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக அரசு அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டையும், பிரிவினைவாத குற்றச்சாட்டையும் கூறி கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
மதுவை ஒழிக்கவேண்டும் என்று ஜனநாயக ரீதியில் பிரச்சாரம் செய்ததற்கே தமிழ்நாட்டில் இந்த நிலை. தேமுதிக சார்பில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நடைபெற்ற “மனித சங்கிலி” போராட்டத்திற்கு கூட அதிமுக அரசு அனுமதி அளிக்கவில்லை.
 
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு கொடுத்துள்ள கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்தையும் அடக்குமுறையால் நசுக்கி, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல் அதிமுக ஆட்சியில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
 
டாஸ்மாக்கை மூடவேண்டுமென்று விழிப்புணர்வு பாடல் பாடியதில் தேச துரோகமும், பிரிவினைவாதமும் எங்கிருந்து வருகிறது.
 
இதுபோன்று மக்கள் விழிப்புணர்வுக்காகவும், நன்மைக்காகவும் செய்யப்படும் செயல்களை, அதிமுக அரசு பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் முடக்காமல், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
 
தமிழக அரசுக்கு மதுவை விற்பதற்கு எப்படி உரிமை உள்ளதோ, அதுபோல மதுவை வேண்டாம் என்று சொல்வதற்கு தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது.
 
எனவே கைது செய்யப்பட்டுள்ள மக்கள் கலை, இலக்கிய கழகத்தின் கோவன்மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, சிறையிலிருந்து அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

டெல்லியில் ராகுல் காந்தியிடம் இளங்கோவன் மீது ப.சிதம்பரம், தங்கபாலு புகார்?

 
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை அவரது வீட்டில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்கபாலு, ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினர்.
 
சந்திப்பின்போது,தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மூத்த தலைவர்களை மதிக்காமல், தன்னிச்சையாக செயல்படுவதாக ராகுலிடம் அவர்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இளங்கோவனை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
 
ராகுல் காந்தி வீட்டில் நடந்த சந்திப்பின்போது, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமார், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் கோபிநாத், மாநில துணைத் தலைவர் எச்.வசந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்ததாக தெரிகிறது.
 

 

நீதிமன்றங்களில் 2.6 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை : குடியரசுத் தலைவர் வருத்தம்

 
 
புது தில்லி உயர் நீதிமன்றத்தின் பொன் விழாக் கொண்டாடங்களின் தொடக்க நிகழ்ச்சி, தில்லி விஞ்ஞான் பவனில் 31-10-2015 நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கீழமை நீதிமன்றங்களில் 2.6 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளது வருந்தத்தக்கது என்று தெரிவித்தார்.
 
மேலும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
 
நீதிபதிகள் நியமன முறை எதுவாக இருந்தாலும், அது வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும், நன்கு வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்; நீதிபதிகள் நியமன நடைமுறையில் யாரும் தலையிட முடியாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். மேலும், காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்ள, நீதித் துறை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
 
 
ஜனநாயகத்தின் முக்கியத் தூணாக விளங்கும் நீதித் துறையின் தன்னாட்சி அதிகாரம், ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகவும் திகழ்கிறது. நீதிபதிகள் நியமன முறை எதுவாக இருந்தாலும், அது வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும், நன்கு வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். மேலும், நீதிபதிகள் நியமன நடைமுறையில் யாரும் தலையிட முடியாது. அதேசமயம், சுய பரிசோதனை மற்றும் தன்னார்வத் திருத்தங்கள் மூலம், நீதித் துறை காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
வழக்குகளுக்கு விரைவான தீர்வு: உச்ச நீதிமன்றத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 40 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
 
இதேபோல், கீழமை நீதிமன்றங்களில் 2.6 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளது வருந்தத்தக்க விஷயமாகும்.
 
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவாகத் தீர்வு காணும் வகையில், நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்பட வேண்டியது அவசியமாகும். மேலும், நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி தேவைப்படுகிறது. நீதி வழங்கும் முறை, பொருளாதார ரீதியில் அனைவருக்கும் பொருந்தக்கூடியதாகவும், எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டியதும் முக்கியமாகும்.
பன்முகத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்: நாட்டில் ஜனநாயகம் செழித்து வளர ஒருமைப்பாடும், சகிப்புத்தன்மையும் முக்கியக் காரணிகளாக உள்ளன. இந்தியாவின் பழைமையான நாகரிகத்தில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது உயர்வான பண்புக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.
 
பன்முகத்தன்மை நமது ஒட்டுமொத்த பலமாகத் திகழ்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், இதனை பிரதிபலிப்பதை நாம் அறிய முடியும். பல்வேறு காலகட்டங்களில் பல சோதனைகளைக் கடந்து வந்துள்ள பன்முகத்தன்மை எனும் நமது தனிச்சிறப்பை, எந்த விலை கொடுத்தேனும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும் என்றார் பிரணாப் முகர்ஜி.
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த, தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய முறையை ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தின் பொன் விழா நிகழ்ச்சியில், நீதிபதிகள் நியமன முறை தொடர்பாக, பிரணாப் முகர்ஜி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ரோகிணி, தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மனைவியுடன் உல்லாசமாக இருந்த தந்தையை கொலை செய்த மகன் கைது

 
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையிலுள்ள மேல்க்கனிநாடு, புதுவளவு பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கராசு (வயது-52) . இவரது மனைவி கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.அவரது மகன் அசோகன் (வயது-32). அவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டாரஸ் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.
 
கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ரேவதி (வயது-22) என்ற பெண்ணுக்கும் அசோகனுக்கும், இடையே திருமணம் நடைபெற்றது. திருமணமான பிறகு அசோகன் தனது மனைவியுடன் தந்தை வசிக்கும் வீட்டிலேயே கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். இவர்களுக்கு மனோபாலா (5), துளசிபாலா (4) என 2 மகன்கள் உள்ளனர்.
 
அசோகன் லாரி டிரைவர் என்பதால் தொடர்ந்து இருபது நாள், ஒரு மாதம் என வெளியூருக்கு சென்று விடுவார். இந்த நிலையில் மாமனார் தங்கராசுக்கும், மருமகள் ரேவதிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் அரசல் புரசலாக ஊருக்குள் பரவியது. இது பற்றி உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் அசோகனிடம் மனைவியின் நடத்தை குறித்து கூறியுள்ளனர்.
 
இதனால், அவமானமடைந்த அசோகன் மனைவி மற்றும் தந்தை இருவரையும் கண்டித்துள்ளார். தங்களுக்குள் தவறான தொர்பில்லை இருவரும் மறுத்துள்ளனர். ஆனாலும்,
 
இந்நிலையில், மனைவியையும் தந்தையயும், கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட அசோகன், நேற்று காலை லாரி நிறுவனத்தின் உரிமையாளர் கல்கத்தாவுக்கு லாரியை எடுத்துக்கொண்டு போகவேண்டும் உடனே வா என்று சொல்வது போல வேறு ஒரு நபரிடமிருந்து தனது கைப்சிக்கு தகவல் வருவது போல ஏற்பாடு செய்து, தனது மனைவி மற்றும் வீட்டிலுள்ளவர்களுக்கு சொல்லிவிட்டு நாமக்கல் சென்றுள்ளார்.
 
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரேவதியும் தங்கராசுவும், வீட்டிற்குள் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, வேலைக்கு செல்வது போல் சென்றிருந்த அசோகன் திடீரென வீட்டுக்குள் நுழைந்தார். அங்கு தந்தையுடன் மனைவி உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர். மனைவி மற்றும் தந்தை தங்கராசுவுடன் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த அசோகன் வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து வந்து தங்கராசுவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில், மண்டை இரண்டாக பிளந்த நிலையில் வீட்டில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேய தங்கராசு பரிதாபமாக இறந்தார்.
 
புதுவளவு பகுதி மக்கள் வீட்டின் முன்பு கூடினர். இந்த சம்பவம் குறித்து வாழவந்திநாடு காவல் துறையி்னருக்கு தகவல் கிடைத்தது. மேலும் மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீப்போல பரவியது. தகவல் அறிந்ததும் காவல் துறையி்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கராசு உடலை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது. அசோகன் தன் தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு போலீசாரிடம் சரணடைந்தார்.

 

நலத்திட்ட உதவி வழங்கும் போது பயனாளிக்கு அடி கொடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்

 
 
சேலம் மாவட்டத்தில் நேரு கலையரங்கில் அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் போது, புகைப்படம் எடுக்க கேமராவை பார்க்காத அதிமுக கட்சியின் உறுப்பினரும், நலிந்த தொழிலாருமான ஒருவரின் தலையில் சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
 
அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
31-10-2015 இன்று காலை நடைபெற்றது. இதில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சுந்தரம், பன்னீர்செல்வம், காமராஜ், அமைச்சர்கள் பழனிப்பயன், தங்கமணி, எடப்படி பழனிச்சாமி, வீரமணி, கோவை மாவட்ட சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி, மேயர் சவுண்டப்பன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறையில் உள்ள நலிந்த மூத்த தொழிலாளர்கள் 14 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.14 லட்சம் வழங்கப்பட்டது.
 
நலிந்த தொழிலாளர் ஒருவரை மேடைக்கு வரவழைத்து உதவித்தொகை வழங்கப்பட்டது. அப்போது அவர் புகைப்படம் எடுக்க கேமராவை பார்க்கவில்லையாம். அதனால் அவருக்கு பின்னால் இருந்த சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி அவரை தலையில் அடித்து கேமராவை பார்க்கும்படி கூறியுள்ளார்.
 
இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாக
பரவி வருகிறது.சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அதிமுக கட்சியின் உறுப்பினரும் நலிந்த நலிந்த தொழிலாருமான ஒருவரை சட்டமன்ற உறுப்பினர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும், ஏற்படுத்தியுள்ளது.