Home Blog Page 78

கல்லூரி மாணவர் சேர்க்கை மீண்டும் தொடங்கும்!

annamalai university - 2026

💥 மாணவர்களின் நலன் கருதி மீண்டும் 30.05.2025-இல் தொடங்கும் மாணவர் சேர்க்கை தொடங்கும்!

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது? – முழுவிவரம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு 7.05.2025 தொடங்கி 27.05.2025-இல் முடிவடைவதால் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் 30.05.2025-இல் தொடங்கும் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு 7.05.2025 அன்று தொடங்கியது. இன்றுடன் (27.05.2025) முடிவடைவதால் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் 30.05.2025 அன்று தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2025-26-கல்வியாண்டிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 07.05.2025 அன்று முதல் 27.05.2025 வரை, www.tngasa.in என்ற இணையதள வாயிலாக பெறப்பட்டது. இதுவரை 2,25,705 விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 1.08,619 மாணவிகள். 76,065 மாணவர்கள் மற்றும் 78 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,84,762 மாணாக்கர்கள் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

சிறப்புப் பிரிவு மாணாக்கர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 29.05.2025 அன்று கல்லூரிகளில் வெளியிடப்படும். பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் 30.05.2025 அன்று கல்லூரிகளில் வெளியிடப்படும். கல்லூரித் தகவல் பலகைகளில் தரவரிசைப் பட்டியல்கள் ஒட்டப்பட்டு, கல்லூரி இணைய தளங்களிலும் வெளியிடப்படும். மேலும், 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மற்றும் பொது கலந்தாய்விற்கான தகவல்கள், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மாணாக்கர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலிருந்து தெரிவிக்கப்படும்.

27.05.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய மாணாக்கர்கள் மற்றும் துணைத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் 30.05.2025 அன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு 30.06.2025-இல் துவங்கும்

29.05.2025 சிறப்புப் பிரிவு மாணாக்கர்களுக்கான தர வரிசைப் பட்டியல் கல்லூரிகளின் இணைய தளங்களிலும், கல்லூரி தகவல் பலகைகளிலும் வெளியிடப்படும்.

30.05.2025 பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளின் இணைய தளங்களிலும். கல்லூரி தகவல் பலகைகளிலும் வெளியிடப்படும்.

02.06.2025 & 03.06.2025 சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு (மாற்றுத் திறனாளிகள் / விளையாட்டு வீரர்கள் / முன்னாள் இராணுவத்தினர் /அந்தமான், நிகோபார் தமிழ் மாணாக்கர்கள் / தேசிய மாணவர் படை/ பாதுகாப்புப் படைவீரர்கள்)

04.06.2025 முதல் 14.06.2025 வரை பொதுக் கலந்தாய்வு / தொடர் கலந்தாய்வு மற்றும் மாணாக்கர் சேர்க்கை

30.06.2025 முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் துவங்கும் நாள்

IPL 2025: முடிவுக்கு வந்த லீக் சுற்று!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – 27.05.2025 லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

நேற்று ஜெய்ப்பூரில் நடந்த மும்பை இந்தியன்ஸ் (184/7) vs பஞ்சாப் கிங்க்ஸ் (187/3) ஆட்டத்தில் பஞ்சாப் அணி வென்றதாலும் இன்று லக்னோவில் நடந்த லக்னோ (227/3) vs பெங்களூரு (230/4) அணிகளின் ஆட்டத்தில் பெங்களூரு அணி வென்றதாலும் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் பஞ்சாப் (19 புள்ளிகள் ரன்ரேட் 0.372), பெங்களூரு (19 புள்ளிகள், ரன்ரேட் 0.301), குஜராத் (18 புள்ளிகள்), மும்பை (16 புள்ளிகள்) ஆகிய அணிகள் முறையே வந்துள்ளன.

இதன்படி 29.05.2025 அன்று பஞ்சாப் முல்லன்பூரில் நடைபெறும் தேர்வுப்பொட்டி ஒன்றில் பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோத உள்ளன. 30.05.2025 அன்று முல்லன்பூரில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் விலக்கும் போட்டியில் குஜராத்தும் மும்பை அனிகள் மோதவுள்ளன.

இதன் பின்னர் தேர்வுப்போட்டி-2 ஜூன் 1ஆம் தேதியும் இறுதிப்பொட்டி ஜூன் 3ஆம் தேதியும் நடைபெறும். இவை இரண்டும் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளன.

இன்று நடந்த பெங்களூரு-லக்னோ போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணிக்கு ரிஷப் பந்த் 118 ரன்கள் சேர்த்தார். இதற்கு முன்னர் 133 ஆட்டங்களில் அவர் அடித்த மொத்த ரன்னைவிட இது அதிகம். இது ஒரு மகிழ்ச்சியான விஷயம்.

இரண்டாவதாக பெங்களூரு அணி ஆடியபோது இன்று அணித்தலைவராக இருந்த ஜிதேஷ் ஷர்மா (33 பந்துகளில் 85 ரன்) அடித்தார்.


நேற்று நடந்த மும்பை (184/7), பஞ்சாப் (187/3) ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் பிரியான்ஷ் ஆர்யா 67 ரன்களும் ஜோஷ் இங்கிலீஷ் 73 ரன் களும் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

ரூ.500 நோட்டை ஒழித்தால்… லஞ்சம் முறைகேடு குறையுமா?

write thoughts - 2026
#image_title

ரூ.500 நோட்டுகளை நிறுத்துவது ஊழலை ஒரு அளவுக்கு குறைக்க மட்டுமே உதவலாம், ஆனால் இந்த நடவடிக்கையால் முழுமையாக ஒழிக்க முடியாது என்பதை 2016-ல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தபோது, கருப்புப் பணத்தை குறைப்பதற்கு முயற்சி செய்யப்பட்டது. ஆனால், அது எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்கவில்லை என்பது நிதர்சனம்.

இது ஊழலை ஒரு பகுதியாக குறைக்கலாம், ஆனால் முழுமையாக ஒழிக்க உறுதியளிக்க முடியாது, ஏனெனில் ஊழல் என்பது நோட்டு மதிப்பை மட்டும் சார்ந்து இல்லாமல், அமைப்பு ரீதியிலான பிரச்சனைகளையும் உள்ளடக்கியது.

காரணங்கள்: கருப்புபணம், மற்றும் ஊழல் பணத்தை வெள்ளையாக்க பல மாற்றுவழிகள் உறுப்பாக தங்கத்தில் முதலீடு, ரியல் எஸ்டேட்டில் முதலீடு, சினிமா முதலீடு, வெளிநாடு வங்கிகளில் முதலீடு, புதிய டிஜிட்டல் முறையில் மின்னணு மோசடி, கிரிப்டோ கரன்சி போன்றவை மூலம் அதை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சந்திரபாபு நாயுடு டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை. இது பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க உதவும், இதனால் ஊழல் தொடர்பான பண பரிமாற்றங்கள் குறையலாம். ஆனால் முழுவதும் கட்டுபடுத்த முடியாது.

நிதி அமைச்சகத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் போலி ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை 317% அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கை போலி நோட்டுகளைக் கட்டுப்படுத்தலாம் அதன் மூலம் போலி நோட்டுகள் புழக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.

பெரிய மதிப்பு நோட்டுகள் அரசியல் நிதியுதவி மற்றும் லஞ்சத்திற்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவற்றை நிறுத்துவதற்கும் இத்தகைய நடவடிக்கை கை கொடுக்கலாம். ஆனால் இதன் மூலம் ஊழல் முற்றிலும் ஒழியாது ஊழல் என்பது நோட்டு மதிப்பை மட்டும் சார்ந்து இல்லை. அரசியல், நிர்வாக, மற்றும் சமூக அமைப்புகளில் உள்ள குறைபாடுகள் ஊழலை தொடர வைக்கின்றன.
பணமதிப்பிழப்பு இவற்றை முழுமையாக தீர்க்காது. என்பது ஆய்வுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ரூ.500 நோட்டுகள் நிறுத்தப்பட்டாலும், மற்ற மதிப்பு நோட்டுகள் (எ.கா., ரூ.100, ரூ.200) போலியாக உருவாக்கப்படலாம், இது பிரச்சனையை மாற்றி உருவாக்கும்.

இந்தியாவில் டிஜிட்டல் நாணயத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு (இணைய இணைப்பு, ஸ்மார்ட்போன் பயன்பாடு) இன்னும் முழுமையாக வளரவில்லை, குறிப்பாக கிராமப்புறங்களில். இது நடைமுறை சவால்களை உருவாக்கலாம். எனவே டிஜிட்டல் பண பரிவர்த்தனை உடனடியாக அமல் படுத்தினால் அதில்

சிறு வணிகர்கள், விவசாயிகள், மற்றும் கூலித்தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக பணப்புழக்கம் அதிகம் உள்ள கிராம சந்தை பொருளாதாரத்தில். சாமானிய மக்களுக்கு சிரமம்

இந்தியாவில் இன்னும் பலர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை முழுமையாக பயன்படுத்தவில்லை, குறிப்பாக கிராமப்புறங்களில். ரூ.500 நோட்டு நிறுத்தப்பட்டால், அவர்கள் பண பரிவர்த்தனைகளுக்கு மாற்று வழிகளை கண்டறிய வேண்டியிருக்கும், இது சிரமத்தை ஏற்படுத்தும்.

எனவே முழுமையாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை அமல் படுத்தினால் மட்டுமே இது சாத்தியம்.

தேனூர் கிராமத்தினருக்கு பழைய வழக்கப்படி மரியாதை கோரி ஆர்பாட்டம்!

IMG 20250527 WA0009 - 2026

மதுரை சித்திரை திருவிழாவில் தேனூர் கிராமத்தினருக்கு பழைய வழக்கப்படி மரியாதை தராததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை சித்திரைத் திருவிழா சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் அதனை மதுரைக்கு மாற்றினார்

அப்போது தேனூர் கிராமத்தினருக்கு சித்திரை திருவிழாவில் உரிய மரியாதை தரப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், மரியாதை வழங்கப்பட்டது. தற்போது நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில்,
தேனூர் கிராமத்தினருக்கு உரிய மரியாதை தரப்படவில்லை.

இதனைக் கண்டித்து, சமயநல்லூரில் அரசு பள்ளி எதிரே தேனூர் கிராமத்தினர் மற்றும் அரசியல் சமூக அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். இந்து சமய அறநிலைய துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


இனிவரும் காலங்களில், இது போன்று தவறுகள் நடைபெறா வண்ணம் தேனூர் கிராமத்தினருக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஜீவ சமாதியில் வைகாசி அமாவாசை சிறப்பு பூஜை

IMG 20250527 WA0008 - 2026

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் சொக்கையா சாமி ஜீவசமாதியில், மாதாந்திர வைகாசி அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.

இந்த பூஜையையொட்டி, மதியம் 12 மணிக்கு விநாயகர் முருகன் சொக்கையா சுவாமி ஆகியோருக்கு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகளுடன் சிறப்பு அலங்காரமும் பூஜையும் செய்யப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதான கூடத்தில் அன்னதான வழங்கப்பட்டது.

இது ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி மடத்தின் நிர்வாக தலைவர் கே. மணிகண்டன் தலைமையில்
நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

கோவையில் எய்ம்ஸ்: அப்பட்டமான அரசியல்!

mkstalin - 2026
  • சிஎம். மகாதேவன்

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். யார் இந்த கோரிக்கையை வைத்தார்கள் என்று தெரியவில்லை. கோவைக்கு எதற்காக எய்ம்ஸ் என்பதும் புரியவில்லை.

தமிழகத்துக்கு முதன்முதலில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டபோது, அதற்கான இடமாக கோவை அருகே பெருந்துறை தான் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது. பெருந்துறையில் ஏற்கனவே இ எஸ் ஐ மருத்துவமனை இருக்கிறது, மேலும் பெருந்துறை ரயில் மூலம் சுலபமாக சென்றடைய முடியும் என்பதால் முதல் தேர்வாக இருந்தது.

ஆனால் கொங்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை லாபி, பெருந்துறையில் எய்ம்ஸ் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. கோவை Education Hub மட்டுமல்ல, மருத்துவத்திலும் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் இன்று உலகத்தரமான சிகிச்சை அளித்து வருகிறது. கோவை தனியார் மருத்துவமனைகள் கடந்த 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு எய்ம்ஸ் வந்தால் அவர்களது வளர்ச்சி மற்றும் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் தான், முதலில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் இடம் மாற்றம் செய்யப்பட்டது என்பது அப்பட்டமான உண்மை. தமிழத்திற்கான எய்ம்ஸ் தாமதமாவதற்கு காரணங்களில் இதுவும் ஒன்று.

தற்போது மீண்டும் கோவையில் எய்ம்ஸ் என்று கேட்க ஆரம்பித்ததற்கு பின்னால் திமுகவின் அரசியல் மட்டுமே உள்ளது.

கொங்கு பகுதியில் அதிமுக + பாஜக கூட்டணியை திமுகவால் வீழ்த்த முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அதிமுக, பாஜக இரு கட்சிகளுக்கும் செக் வைக்கும் வகையில் கோவையில் எய்ம்ஸ் என்ற கோஷத்தை கையில் எடுத்திருக்கிறது திமுக. இப்போது கோரிக்கை வைத்தாலும் அடுத்த பட்ஜெட்டில் தான் அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை என்றால் கோவையை புறக்கணிக்கிறது பாஜக எனும் பிரச்சாரத்தை, கொங்கு பகுதியில் முன்னெடுக்க மட்டுமே இந்த கோரிக்கை பயன்படும்.

மேலும் கோவையில் எய்ம்ஸ் என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி தனியார் மருத்துவமனைகளில் வசூலில் ஈடுபட திமுகவுக்கு உதவும்.

உண்மையில் தமிழகத்திற்கு இரண்டாவது எய்ம்ஸ் என்பதே சரியான கோரிக்கை. எந்த இடத்தில எய்ம்ஸ் வர வேண்டும் என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய முடியும். அப்படி இருக்கும் போது எந்தவித ஆய்வும் இல்லாமல், கொங்கு பகுதியில் இருந்து எந்தவித கோரிக்கையும் இல்லாமல் கோவையை தேர்ந்தெடுக்க காரணமே இல்லை.

தமிழகத்தின் இரண்டாவது எய்ம்ஸ் வடமாவட்டங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் அமைவதே பொருத்தமானதாக இருக்கும். அல்லது ராமநாதபுரம், தூத்துக்குடி பகுதிகளில் அமைக்கலாம்.

கோவை அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவை இஎஸ்ஐ மருத்துவமனைகள் சிறந்த உள்கட்டமைப்புகள் கொண்டவை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அது போக இங்கு ஏராளமான தனியார் மருத்துவமனைகள் இருக்கின்றன. அனைத்திலும் மாநில மற்றும் மத்திய அரசு வழங்கும் இன்சூரன்ஸ் திட்டங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது மருத்துவத்துறையில் தன்னிகரற்ற வளர்ச்சி பெற்றிருக்கும் கோவைக்கு எய்ம்ஸ் தேவையில்லை என்பதே என் கருத்து.

அடுத்த ஒரு வருடத்திற்கு இதை வைத்து அரசியல் செய்வதற்காக திமுக இது போன்ற கோரிக்கைகளை முன்னெடுப்பது அபத்தமான அரசியல்.

Beware of these fake AI videos: looting Indian’s money by how to know!

0
IMG 20250526 WA0004 - 2026

Caution to the public.These are some videos in circulation to usurp the money of the gullible. Understand that there is no free money and never it will be. As per the videos everyone will receive lakhs of rupees. Just think who will give that money? Be careful and cautious.Don’t believe such schemes.

https://www.facebook.com/share/1Dku9nmrAa/?mibextid=wwXIfr

https://www.facebook.com/share/1AqsvF1FAv/?mibextid=wwXIfr

These videos are in viral and in extensive circulation.

In a similar way about 6 months ago Karan Johar interviewed Hindi actress Kirti Sanon who made huge money in a short span of time.

In programme Kirti Sanon demonstrated it in front of hundreds of audience. She asked Karan Johar to open an account with a particular link she provided to him.

The amount was same ₹21000.
In few hours Karan Johar account showed profit. However within 24 hours the said video was removed by Karan Johar. Kirti Sanon’s pages, mobile were not reachable.

Again this scheme has propped up.
That too with finance minister Nirmala ji, Narayana Murthy and Sundar Pichai.

There are more videos by prominent personalities.

I suspect using AI it is an attack by China on India. A social unrest is brewing not to culminate in riots and accusations of the present central government and its leaders.

A toolkit seems to have been unleashed by the anti nationals, Chinese sponsored foot soldiers in India especially after the Operation Sindoor humiliation for China and even the USA whose pride of defence superiority is proved as scrap.

Almost all the supporters of Pakistan are fuming and are clueless as to what to do, how the future will unfold, how regain their reputation, credibility and reliability of their weapons and systems even outside the defence equivalents.

This propaganda must end soon before causing serious damage and erode the pride and image of India both abroad and within the country.

  • N. Rangarajan, Mumbai.

ஸ்ரீவிலி – மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தினசரி டிரெக்கிங்!

889520 sathuragiri - 2026

ஸ்ரீவிலி -மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தினசரி டிரெக்கிங்..

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தினசரி டிரெக்கிங் செல்ல அனுமதி அளித்திருப்பதால் இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதிகளில் 40 இடங்களில் டிரெக்கிங் செல்ல மாநில அரசு முதன்முறையாக அனுமதி அளித்தது. இதையடுத்து இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்ட வனப்பகுதிகளில் டிரெக்கிங் செல்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, செண்பகத்தோப்பு பகுதியில் இருந்து வத்திராயிருப்பு, புதுப்பட்டி வரை அடர்த்தியான வனப்பகுதியில் டிரெக்கிங் சென்றனர்.

இதில், ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிலையில், கோடைகாலம் தொடங்கியதால், வனப்பகுதியில் தீ பிடிக்கும் வாய்ப்பு இருந்ததால், ஏப்.15ம் தேதி வரை டிரெக்கிங் செல்ல தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது.

இந்த நிலையில், மீண்டும் டிரெக்கிங் செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, செண்பகத்தோப்பு வனப்பகுதியில் இருந்து வத்திராயிருப்பு, புதுப்பட்டி வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் டிரெக்கிங் செல்கின்றனர்.

இது குறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘இதுவரை சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் ட்ரெக்கிங் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது தினமும் டிரெக்கிங் செல்லலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

டிரெக்கிங் செல்ல விரும்புவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். இந்த திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், தற்போது நபர் ஒருவருக்கு ரூ.1,200 மட்டுமே ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது.

டிரெக்கிங்கை பொறுத்தவரை தொடக்கத்தில் ரூ.2500ம், பின்னர் ரூ.1700ம் வாங்கப்பட்டது. தற்போது ரூ.1200 ஆக குறைத்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.

IPL 2025: தோனி- சென்னை அணியின் மிக மோசமான நிலை!

ipl 2025 games - 2026


ஐ.பி.எல் 2025 – 24.05.2025 இரண்டு ஆட்டங்கள் 

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சென்னை vs குஜராத்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி (230/5, டிவால்ட் ப்ருவிஸ் 57, தேவன் கான்வே 52, உர்வில் படேல் 37, ஆயுஷ் மஹத்ரே 34, ரவீந்த ஜதேஜா 21, ஷிவம் துபே 17, பிரசித் கிருஷ்ணா 2/22, சாய் கிஷோர், ரஷீத் கான், ஷாருக் கான் தலா ஒரு விக்கட்), குஜராத் டைடன்ஸ் அணியை (18.3 ஓவர்களில் 147, சாய் சுதர்ஷன் 41, அர்ஷத் கான் 20, ஷாருக் கான் 19, அன்ஷுல் காம்போஜ் 3/13, நூர் அகமது 3/21, ஜதேஜா 2/17, கலீல் அகமது, பதிரனா தலா ஒரு விக்கட்) 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஆயுஷ் மஹத்ரே (17 பந்துகளில் 34 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் மற்றொரு தொடக்க வீரரான தேவன் கான்வே (35 பந்துகளில் 52 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் மூன்றாவதாகக் களமிறங்கிய உர்வில் படேல் (19 பந்துகளில் 37 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து முதல் 10 ஓவர்களில் 107 ரன் எடுக்க உதவினர். அவர்களுக்குப் பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே (8 பந்துகளில் 17 ரன், 2 சிக்சர்) விரைவில் ஆட்டமிழந்துவிட்டார். அடுத்து களமிறங்கிய டிவால்ட் ப்ருவிஸ் (23 பந்துகளில் 57 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்), ரவீந்தர் ஜதேஜா (18 பந்துகளில் 21 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஆகியோர் அதிரடியாக ஆடி சென்னை அணியின் ஸ்கோரை 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 230 என்ற அளவிற்கு உயர்த்தினர். 

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி பவர்பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 35 ரன் எடுத்தது. அன்ஷுல் காம்போஜ் 2 விக்கட்டுகளையும் கலீல் அகமது ஒரு விக்கட்டையும் எடுத்தார். சென்னை வித்தியாசமாக முதல் ஓவரை ரவீந்தர் ஜதேஜாவைக்கொண்டு வீசியது.  முதல் ஐந்து மட்டையாளர்களில் சாய் சுதர்ஷன் (28 பந்துகளில் 41 ரன், 6 ஃபோர்) மட்டும் சிறப்பாக ஆடினார். பிற வீரர்களான ஷுப்மன் கில் (9 பந்துகளில் 13 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஜாஸ் பட்லர் (7 பந்துகளில் 5 ரன்), ரூதர்ஃபோர்ட் (4 பந்துகளில் பூஜ்யம் ரன்), ஷாருக் கான் (15 பந்துகளில் 19 ரன், 2 சிக்சர்), ராகுல் திவாத்தியா (10 பந்துகளில் 14 ரன், 1 ஃபோர்), ரஷீத் கான் (8 பந்துகளில் 14 ரன், 1 ஃபோர்) ஆகியோர் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும்  இழந்து 147 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 83 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்ஷுல் காம்போஜ் மற்றும் நூர் அகமது இருவரும் தலா மூன்று விக்கட்டுகள் எடுத்தனர். ஜதேஜா இரண்டு விக்கட்டுகள் எடுத்தார். 

சென்னை அணியின் டிவால்ட் ப்ருவிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்தத் தோல்வியால் குஜராத் அணியின் முதலிடத்திற்கு சிக்க்சல் வந்துள்ளது. அது 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருக்கிறது ஆனால் அடுத்துவரும் இரண்டு ஆட்டங்களில் பஞ்சாப் மற்றும் பெநளூரு அணி வெற்றிபெற்றல் 19 புள்ளிகளுடன் முதலிடத்திற்குப் போட்டியிடும். ஒருவேளை  மும்பை-பஞ்சாப் ஆட்டத்தில் மும்பை வெற்றிபெற்றால் முதலிரண்டு இடத்திற்குச் செல்லும்; ஒருவேளை பஞ்சாப் அந்த அணி வெற்றி பெற்றால் 18 புள்ளிகள் மற்றும் நல்ல ரன் ரேட்டுடன் குஜராத் அணியை விட முன்னிடத்தைப் பெறும்.

ஹைதராபாத் vs கொல்கொத்தா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (278/3, ஹென்றி கிளாசன் 105, ட்ராவிஸ் ஹெட் 76, அபிஷேக் ஷர்மா 32, இஷான் கிஷன் 29, அனிகேத் வர்மா 12, சுனில் நரேன் 2/42, வைபவ் அரோரா 1/39), கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை (18.4 ஓவர்களில் 168,  மணீஷ் பாண்டே 37, ஹர்ஷித் ராணா 34, சுனில் நரேன் 31, அஜிங்க்யா ரஹானே 15,  உனத்கட் 3/24, ஈஷன் மலிங்கா 3/31, ஹர்ஷ் துபே 3/34) 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே பிளேஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. கொல்கொத்தா அணியும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால்கூட பிளேஆஃப் செல்ல முடியாது. எனவே ஒரு முக்கியத்துவம் இல்லாத இந்த ஆட்டத்தை சன்ரைசர்ஸ் அணியின் மட்டையாளர்கள் தடாலடியாக ஆடி ரசிகர்களுக்கு விருந்தளித்தார்கள். கொல்கொத்தா அணி மட்டையாளர்கள் 22 ஃபோர் மற்றும் 19 சிக்சர்கள் அடித்தார்கள். கிளாசன் 39 பந்துகளில் 105 ரன் அடித்தார். 20 ஓவர் முடிவில் அந்த அணி 3 விக்கட் இழப்பிற்கு 278 ரன் அடித்தது.

இந்த மிகக் கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய கொல்கொத்தா அணி பல தவறுகள் செய்தது. அதிரடி மட்டையாளர்கள் பலரைக் கொண்ட கொல்கொத்தா அணியில் ஒருவர் கூட இன்று எரிமலையாய் வெடிக்கவில்லை. இதனால் 18.4 ஓவர்களில் 168 ரன்னிற்கு அனைத்து விக்கட்டைகளையும் இழந்தது. இதனால் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

பள்ளிவாசல் பகுதி வழியாக ‘தேசியக்கொடி ஊர்வலம்’ செல்ல போலீஸ் தடை!

IMG 20250526 WA0005 - 2026

மதுரை திருப்பரங்குன்றத்தில் பாஜகவினர் மூவண்ண கொடியுடன் செந்துர் யாத்திரை – வேலூர் இப்ராஹிம் பங்கேற்பு‌- பள்ளிவாசல் வழியாக பேரணி செல்ல காவல்துறையினர் அனுமதி மறுப்பு:

மதுரை:பள்ளிவாசல் பகுதியில் தடுப்பு . 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிப்பயணம் மூவரண தேசியக்கொடி யாத்திரை மதுரை பாஜக மேற்கு மண்டலம் சார்பில் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கியது.

ஜிஎஸ்டி சாலை வழியாக 16ஆம் கால் மண்டபம் மேலரத , வீதி ,கீழாத வீதி வழியாக மீண்டும் 16ஆம் கால் மண்டபத்தில் யாத்திரையை நிறைவு செய்தனர்.திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து பள்ளிவாசல் இருக்கும் பெரிய ரத வீதியில் பாஜகவினரின் யாத்திரைக்கு காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .

இந்த யாத்திரை பேரணியில், பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொள்ள வந்தடைந்தார்.பாஜக வினர் தடையை மீறி பள்ளிவாசல் பகுதியில் செல்லாமல் இருக்க இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

மேலும் ,வேலூர் இப்ராஹிம் தடையை மீறி பள்ளிவாசல் பகுதியில் சென்றால் போலீசார் கைது செய்யவும் தயாராக இருந்தனர். இந்நிலையில், பாஜகவினர் பேருந்து நிலையத்திலிருந்து பெரிய ரதவீதி கீழ ரதவீதி மேல ரத வீதி வழியாக மண்டபத்தை அடைந்து அமைதியாக சிந்தூர் யாத்திரை முடித்தனர்.