‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
‘மேலுக்கு பசுவைப் போலத் தோற்றமளித்தாலும் (பசுவைப் போல ‘அம்பா’ என்று கத்தினாலும்) உள்ளுக்குள் புலியைப் போன்ற கொடூர குணம் கொண்டிருப்பது’ என்ற பொருளில் இந்த நியாயத்தை எடுத்துக்காட்டுவார்கள்.
பொருள்: வெளியில் பசுவைப் போன்று அமைதியான முகத்தோடு சாது குணத்தைக் காட்டி, உள்ளே புலியின் கொடூரமான குணத்தை மறைத்திருப்பவரோடு நட்போ, பகையோ கூடாது. இரண்டுமே ஆபத்து.
நம்மிடம் யாராவது மிகப் பணிவோடு இருந்து, அதிகமாக நம்மைப் புகழ்ந்து, செயற்கையாக நடந்து கொண்டு, இனிமையாகப் பேசி, நட்பு பாராட்டினால், ஏதோ தீங்கு நடக்கப் போகிறது என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது இந்த நியாயம்.
மேலுக்கு சாதுவைப் போலவும், பரோபகாரியைப் போலவும் ரொம்ப நல்லவனாகவும் காட்டிக் கொள்வார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் அதற்கு மாறாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் வஞ்சிக்கும் எண்ணத்தோடு நண்பனாக நடிப்பார்கள். இது ‘கோமுக வ்யாக்ர நியாயம்’ காட்டும் பார்வை. அவர்களுடைய நைச்சியமான (நீச்சம்) பேச்சில் மயங்கி, அவர்களை நம்பி, அவர்களிடம் நெருங்கி, புலிக்கு பலி ஆவதோ, அல்லது புரிந்து கொண்டு தப்பி ஓடுவதோ நம் கையில் தான் இருக்கிறது. ஏமாற்றப்பட்டபின் வருந்தி என்ன பயன்? ஏன் இப்படி நடந்தது என்று அழுது என்ன பிரயோஜனம்?
மின்னுவதெல்லாம் பொன்னல்ல. வெள்ளையாக இருப்பதெல்லாம் பாலல்ல என்ற புரிதல் தேவை. விழிப்போடு இருக்க வேண்டும். இது இந்த நியாயம் புகட்டும் பாடம்.
புராணங்களில் புலிகள்:
மாய மான் வேடத்தில் வந்த மாரீசன் ராமனின் அம்புக்கு இரையானான். தெய்வ லீலையாக சீதாதேவி பேசிய கடுஞ்சொற்களைக் கேட்ட லட்சுமணன் அண்ணன் ஸ்ரீராமனைத் தேடிக் கொண்டு சென்றார். அந்த நேரத்தில் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தனியாக இருந்த சீதையை சிறைப்பிடிக்கும் நோக்கத்தில் ராவண அசுரன் பசுந்தோல் போர்த்திய புலியாக அவளைக் கவர்ந்து சென்றதை வால்மீகி மகரிஷி விளக்குகிறார்.
(வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், 46 வது சர்க்கம்)
பொருள்: ராவணன் மென்மையான காவி உடை, தலையில் சிகை, கையில் குடை, கால்களில் பாதணிகள், இடது தோளில் தொங்கிய தண்டம், கமண்டலம் ஆகியவற்றோடு சீதா தேவியை நெருங்கினான்.
“காஷாய தண்ட மாத்ரேண யதி: பூஜ்ய ந சம்சய:” என்பது உலகில் புழங்கும் வழக்கமான கூற்று. சாதுக்களின் அடையாளமான காஷாய உடையைப் பார்த்து சீதா தேவி ஏமாந்தாள். சுபமான வேடம் தரித்து வஞ்சிக்க வேண்டும் என்று வந்ததை வால்மீகி மகரிஷி, “த்ருணை: கூப இவாவ்ருத:” என்று குறிப்பிடுகிறார். ‘புல்லால் மூடப்பட்ட கிணறு போல’ என்று வஞ்சகத்தை வர்ணிக்கிறார்.
உண்மையில் புலி என்றுமே பசுவின் முகத்தை அணியாது. பசுவைப் போல ‘அம்பா’ என்று கத்தாது. பலவித முகமூடிகளை அணிவதும், வேடங்கள் தரிப்பதும், மோசங்கள் செய்வதும் மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான கலை. அப்படிப்பட்ட மனிதர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உபதேசமாக அளிப்பதே இந்த ‘கோமுக வயாக்ர’ நியாயத்தின் நோக்கம்.
வரலாற்றில் பசுந்தோல் போர்த்திய புலிகள்:
நாட்டுப் பிரிவினையின் போதும், ரஜாக்கர்களின் தாக்குதல் நேரத்திலும், காஷ்மீர் பண்டிதர்களைக் கொன்றழித்த வேளையிலும், பெங்கால் மற்றும் பஞ்சாப் பிரிவினைகளின் போதும் நேர்ந்த சோகக் கதைகள் இந்த நியாயத்தை நினைவூட்டுகின்றன.
அருகிலேயே வசித்து, கொடுக்கல் வாங்கல்ளில் ஈடுபட்டு, ‘அங்கிள் ஆன்ட்டி, சித்தப்பா, சித்தி, பாய் பெஹன்’ என்று அழைத்துக் கொண்டு பசுவைப் போல் நடித்த சில புலிகள் பாய்ந்தெழுந்து நம் கோவில்களையும், குருத்வாராக்களையும் இடித்து, விக்ரகங்களைப் பூஜிக்கும் ஹிந்துக்களின் மேல் பாய்ந்த பயங்கரமான கதைகளை சரித்திரம் கூறுகிறது. ‘காஃபீர்’ பெண்கள் யாரும் இந்தியாவுக்குச் செல்லமட்டாகள். அவர்களை நாங்கள் எடுத்துக் கொள்வோம். “காஃப்ரான் கட்னா அசி திகாலேங்கே” (காஃபீர்களா உங்களை நாங்கள் கத்தரித்துக் காட்டுவோம்), “கிசே மந்திர் விச் கண்ட்டி நஹி வஜ்ஜுகீ ஹூன்” (எந்தக் கோவிலும் இருக்காது. கோவிலில் மணி ஒலிக்காது) என்று மசூதிகளில் இருந்து கூச்சலிட்டுக் கொண்டு ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் கழுவில் ஏற்றினார்கள். பெண்களை கூட்டு வன்முறை செய்தனர். அவர்களை ஆடையின்றி ஊர்வலம் விட்டார்கள், (இன்றைய பாகிஸ்தானில் அண்மையில் நடந்த இதே போன்ற சோகக் கதையை நேரடியாகப் பார்த்த பிரபல வரலாற்று ஓவியர் கெ.சி.ஆர்யன் வரைந்த படத்தை இன்டர்நெட்டில் பார்க்கலாம். அதே போல் vashisharma.com ல் இருக்கும் நூல்களையும் சோதிக்கலாம். புலிக்கு பலியான பசுக்களைப் பற்றிய கதைகளைப் படித்து அழலாம்).
நிகழ்காலத்தில் பசுந்தோல் போர்த்திய புலிகள்:
அண்மைக் காலத்தில் இந்தியாவில் பல இடங்களில் இந்த ‘கோமுக வ்யாக்ர” கதைகள் நடப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதம் கொடுக்கும் ஆதரவால் பெற்ற கல்லூரி சீட், பைக், பணம் ஆகியவற்றின் மூலம் அப்பாவிகளான ஹிந்து பெண்களை காதல் என்ற பெயரில் வஞ்சித்து, அவர்களைத் துண்டுதுண்டாக வெட்டி வீசிய செய்திகள், பிள்ளை பெறும் இயந்திராமாகவோ, மனித வெடி குண்டாகவோ மாற்றிய சம்பவங்கள் இந்த ‘கோமுக வயாக்ர’ நியாயத்திற்கு எடுத்துக் காட்டுகள்.
தன்னை ஒரு ஹிந்துவாக அறிமுகம் செய்து கொண்டு, பெயர், வேடம் எல்லாம் மாற்றிக் கொண்டு ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் அக்கிரமங்கள் செய்து போலீசாருக்கு வசமாகச் சிக்கி தற்போது சிறையில் இருக்கும் ‘வ்யாக்ரம்’ இம்ரான் என்ற ஆட்டோ டிரைவரின் கதை அண்மையில் இந்தியா டிவிவில் ஒளிபரப்பானது. மதுரா, பிருந்தாவன், போன்ற புனிதத் தலங்களைச் சேர்ந்த மாணவிகளும், திருமணமான பெண்களும் ஒரு ‘கோமுக வ்யாக்ர’த்திற்கு பலியானார்கள். இதுவரை இருபத்து மூன்று ஹிந்து பெண்களை அனுபவித்ததாக வெட்கமின்றி அவன் கூறிக் கொண்டது கொடுமை. ஐம்பது ஹிந்து பெண்களை வலையில் சிக்க வைக்க வேண்டும் என்பது தன் லட்சியம் என்று இம்ரான் போலீசாரிடம் கூறினானாம்.
தேச முன்னேற்றத்திற்குத் தடை:
சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சமுதாய நலன் என்ற பெயரில் அக்கிரமங்களில் ஈடுபடும் பசுந்தோல் போர்த்திய புலிகளுக்கு நம் தேசத்தில் பஞ்சமே இல்லை. குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ் மாநிலங்களுக்கு நன்மை தரும் ‘சர்தார் சரோவர் டாம்’ கட்டமைப்பு தாமதமானதின் பின்னால் தேச விரோத இடது சாரியும் வெளிநாட்டு ஏஜெண்டுகளும் செய்த சதி உள்ளது. சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்று முழங்கி மேதாவிகள் இந்த ப்ராஜெக்டிற்கு தடை விளைவித்தார்கள். 1961ல் அஸ்திவாரம் போட்டு, 1987 ல் தொடங்கி, ஒருவழியாக 2017 ல் முழுமையடைந்தது. அதன் பின்னால் இருந்த புலிகளின் முகமூடி விலகியது. இப்படிப்பட்ட முயற்சிகளைக் கொண்டே தோரியம், தாமிரம் போன்ற கனிமங்களைத் தோண்டுவதிலும் தேசதுரோக இயக்கத்தினர் தடை ஏற்படுத்தினர்.
கிறிஸ்தவ சங்கங்களின் பெயரில் பத்திரிக்கையாளர்களைப் போலவும், மனித உரிமைப் பாதுகாவலர்களைப் போலவும் இந்த பசுந்தோல் போர்த்திய புலிகள் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்துகிறார்கள். ‘ஷாஹின்பாக்’ விவசாயிகள் போரரட்டத்தின் பின்னால் இருக்கும் சதி உலகம் அறிந்ததே.
எப்போதாவது மட்டுமே வாயைத் திறக்கும் அப்போதைய பிரதமர் திரு மன்மோகன் சிங் ஒரு கடினமான விமரிசனம் செய்தார். “உரிமைச் சங்கங்களின் பெயரிலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பின் பெயரிலும் நடைபெறும் போராட்டங்களின் பின்னால் தேச முன்னேற்றத்தைத் தடுக்கும் சதி உள்ளது” என்றார். இது ‘அட்சர சத்தியமான’ கூற்று.
மனதின் குரல் 124ஆம் பகுதி ஒலிபரப்பு நாள் : 27.07.2025 தமிழில் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம். கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் திவலைகள் தாண்டவமாடின. தேசமே பெருமிதத்தில் பொங்கியது. ஆகஸ்ட் மாதம் 2023ஆம் தேதியன்று சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் தேசத்தில் ஒரு புதிய, அலாதியான சூழல் நிலவியது எனக்கு நினைவிருக்கிறது. அறிவியல் பற்றியும், விண்வெளி குறித்தும் சிறார்கள் மனதிலே புதியதொரு ஆர்வம் துளிர்த்தது. நாங்களும் விண்வெளிக்குப் பயணிப்போம், நாங்களும் நிலவில் கால் பதிப்போம்-விண்வெளி விஞ்ஞானியாக ஆவோம் என்று இப்போதெல்லாம் சின்னச்சின்ன பிள்ளைகளும் கூறி வருகிறார்கள்.
நண்பர்களே, நீங்கள் INSPIRE-MANAK என்ற இயக்கத்தின் பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குழந்தைகளின் புதுமைகள் படைத்தல் திறனை மேம்படுத்தும் இயக்கம் இது. இதிலே அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் ஐந்து குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோவொரு புதிய கருத்தை முன்வைப்பார்கள். இந்த இயக்கத்தோடு இதுவரை இலட்சக்கணக்கான குழந்தைகள் இணைந்துவிட்டார்கள். மேலும் சந்திரயான் – 3க்கும் பிறகு இவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகிவிட்டது. தேசத்தில் விண்வெளித்துறையில் ஸ்டார்ட் அப்புகளும் விரைவுகதியில் அதிகரித்து வருகின்றன. ஐந்தாண்டுகள் முன்பாக 50ற்கும் குறைவான ஸ்டார்ட் அப்புகளே இருந்த நிலையில் இன்று, 200க்கும் மேற்பட்டவை இருக்கின்றன, விண்வெளித்துறையில் மட்டும். நண்பர்களே, அடுத்த மாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று தேசிய விண்வெளி தினம் வரவிருக்கிறது. நீங்கள் இதை எப்படிக் கொண்டாட இருக்கிறீர்கள் என்பது குறித்து எனக்கு நமோ செயலியில் கண்டிப்பாகச் செய்தி அனுப்புங்கள்.
நண்பர்களே, 21ஆம் நூற்றாண்டு பாரதத்தில் இன்று அறிவியல் ஒரு புதிய சக்தியோடு முன்னேறி வருகிறது. சில நாட்கள் முன்பாக நமது மாணவர்கள், சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்றார்கள். தேவேஷ் பங்கஜ், சந்தீப் குசி, தேவதத்த பிரியதர்ஷி, உஜ்வல் கேசரி ஆகிய நால்வரும் நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்கள். கணித உலகிலே பாரதம் தனது முத்திரையை மேலும் வளமாக்கியது. ஆஸ்ட்ரேலியாவிலே நடந்த சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் நமது மாணவர்கள் 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள்.
நண்பர்களே, அடுத்த மாதம் மும்பையிலே வானியல் மற்றும் வான் இயற்பியல் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதிலே 60க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள், விஞ்ஞானிகளும் வருவார்கள். இதுவரை நடந்ததிலேயே மிகப்பெரிய ஒலிம்பியாட் போட்டியாக இது இருக்கும். ஒருவகையிலே பார்த்தால், பாரதம் இப்போது ஒலிம்பிக் மற்றும் ஒலிம்பியாட் போட்டிகள், இரண்டிலுமே முன்னேறி வருகின்றது.
எனதருமை நாட்டுமக்களே, நம்மனைவரையும் பெருமையில் ஆழ்த்தவல்ல மேலும் ஒரு செய்தி யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வந்திருக்கிறது. யுனெஸ்கோ அமைப்பானது 12 மராட்டியக் கோட்டைகளுக்கு உலக மரபுச் சின்னங்களாக அங்கீகாரம் அளித்திருக்கிறது. இவற்றில் 11 கோட்டைகள் மஹாராஷ்டிரத்திலும், ஒரு கோட்டை தமிழ்நாட்டிலும் இருக்கின்றது. இந்தக் கோட்டைகள் வெறும் கட்டிடங்கள் அல்ல, இவை பாரதநாட்டின் ஆன்மா, பிரும்மாண்டமானவை, உயரமானவை, வெல்லக் கடினமானவை. ஒவ்வொரு கோட்டையின் வரலாற்றோடும் ஒருஒரு புத்தகமே அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு கல்லும் ஏதோ ஒரு வரலாற்று நிகழ்வுக்குச் சான்று பகர்கிறது. சல்ஹேர் கோட்டையில்தான் முகலாயர்களின் தோல்வி அரங்கேறியது. ஷிவனேரி, சத்ரபதி சிவாஜி மகராஜா பிறந்த இடம், எதிரிகளால் தகர்க்க முடியாத ஒன்று. காந்தேரிக்கோட்டை, கடலின் நடுவில் அமைக்கப்பட்ட அற்புதமான கோட்டை. எதிரிகள் அவரைத் தடுக்க நினைத்தாலும், சிவாஜி மஹராஜ், அசாத்தியமானவற்றையும் சாத்தியமாக்கிக் காட்டினார். பிரதாப்கட் கோட்டை, அஃப்ஸல் கான் வெற்றி கொள்ளப்பட்ட இடம், இந்த வெற்றிக் காதையின் எதிரொலி இன்றும்கூட கோட்டைச் சுவர்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. விஜய்துர்க், இதன் ரகசியச் சுரங்கங்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜின் தொலைநோக்கிற்குக் கட்டியம் கூறுகின்றன. நான் சில ஆண்டுகள் முன்பு ராய்கடைச் சுற்றிப் பார்த்தேன். சத்ரபதி சிவாஜி மஹராஜின் உருவச்சிலைக்கு முன்பாக பிரார்த்தனை செய்தேன். இந்த அனுபவம் என் வாழ்க்கை முழுவதும் எனக்குள்ளேயே இருக்கும்.
நண்பர்களே, தேசத்தின் இன்னும்பிற பகுதிகளிலும் கூட இப்படிப்பட்ட அற்புதமான கோட்டைகள் இருக்கின்றன, இவை தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கின்றன, மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், சுயமரியாதையை-சுயகௌரவத்தை என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை. இராஜஸ்தானத்தின் சித்தௌட்கட் கோட்டை, கும்பல்கட் கோட்டை, ரண்தம்பௌர் கோட்டை, ஆமேர் கோட்டை, ஜைசால்மேர் கோட்டை எல்லாம் உலகப் பிரசித்தி பெற்றவை. கர்நாடகத்தின் குல்பர்கா கோட்டையும் கூட மிகப்பெரியது. சித்ரதுர்க்கா கோட்டையின் பிரும்மாண்டம்….. உங்களுக்குள்ளே குதூகலத்தை நிரப்பிவிடும், அந்தக் காலத்தில் எப்படி நமது முன்னோர்கள் இப்படிப்பட்டக் கோடைகளை உருவாக்கினார்கள் என்று வியப்பில் ஆழ்த்தி விடும்.
நண்பர்களே, உத்தர பிரதேசத்தின் பாந்தாவில் இருப்பது காலிஞ்ஜர் கோட்டை. கஜினி முகமது பலமுறை இந்தக் கோட்டையின் மீது தாக்குதல் தொடுத்தாலும், ஒவ்வொரு முறையும் தோல்வியையே தழுவி இருக்கிறான். புந்தேல்கண்டிலே இப்படிப்பட்ட பல கோட்டைகள் இருக்கின்றன-குவாலியர், ஜான்சி, ததியா, அஜய்கட், கட்குண்டார், சந்தேரி எனப்பல. இந்தக் கோட்டைகள் வெறும் செங்கற்கள்-கற்களாலானவை மட்டுமல்ல, இவை நமது கலாச்சாரத்தின் அடையாளங்கள். நற்பண்புகள் மற்றும் சுயமரியாதை – இன்றும் கூட இந்தக் கோட்டைகளின் வானுயர் சுவர்களிலிருந்து இவை உற்றுப் பார்க்கின்றன. இந்தக் கோட்டைகளுக்குப் பயணம் மேற்கொள்ளுங்கள், நம்முடைய வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள், கௌரவத்தை உணர்ந்து பாருங்கள் என்று நான் நாட்டுமக்கள் அனைவரிடமும் வேண்டிக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, சற்றே கற்பனை செய்து பாருங்கள்!! விடியற்காலை வேளை, பிஹாரின் முஜஃப்ஃபர்புர் நகரம், 1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி, ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு நாற்சந்தியும், அனைத்து ஒலிகளும் ஊரும் அடங்கி, நிசப்தமாக இருந்தது. மக்களின் கண்களில் கண்ணீர், ஆனால் இதயங்களில் கனன்று கொண்டிருந்ததோ ஜுவாலை. மக்கள் சிறைச்சாலையைச் சூழ்ந்து விட்டார்கள், அங்கே 18 வயதேயான ஒரு இளைஞன், ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தனது தேசபக்தியை வெளிப்படுத்தியமைக்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருந்தான். சிறைக்குள்ளே, பரங்கி அதிகாரிகள், ஒரு இளைஞனைத் தூக்கிலிடும் முஸ்தீபுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இளைஞனின் முகத்திலே அச்சமேதும் இல்லை, மாறாக பெருமிதம் பொங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பெருமிதம், தேசத்திற்காக உயிர் துறப்போரிடத்தில் குடிகொண்டிருக்கும் பெருமிதம். அந்த வீரன், அந்த சாகஸம் நிரம்பிய இளைஞன்…… குதிராம் போஸ். வெறும் 18 வயதே நிரம்பிய அந்த இளைஞன் வெளிப்படுத்திய துணிச்சல், ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிப் போட்டது. “குதிராம் போஸ் தூக்குக்கயிற்றை நோக்கி நடந்த போது, அவருடைய முகத்திலே புன்முறுவல் பூத்திருந்தது”, என்று அப்போது செய்தித்தாள்கள் கூட எழுதின. இப்படிப்பட்ட கணக்கேயில்லாத உயிர்த்தியாகங்கள் புரிந்த பிறகு, பல நூற்றாண்டுக்காலத் தவத்திற்குப் பிறகு, நமக்குச் சுதந்திரம் கிடைத்தது. தேசப்பற்றாளர்கள் தங்கள் உதிரத்தால் சுதந்திரப் போராட்ட வயலில் பாசனம் செய்தார்கள்.
நண்பர்களே, ஆகஸ்ட் மாதம் புரட்சி மாதம் என்று அழைக்கப்படுவதற்கு மேலும் ஒரு காரணம் உண்டு. ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி லோக்மான்ய பால் கங்காதர் திலகரின் நினைவுநாளும் கூட. இந்த மாதத்திலேயே, ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று காந்தியடிகளின் தலைமையின் கீழ், வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் தான் ஆங்கிலேயர் ஆட்சியின் அஸ்திவாரத்தை ஆட்டி வைத்தது. பிறகு வருவது ஆகஸ்ட் 15, நமது சுதந்திரத் திருநாள், நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுபடுத்திக் கொள்வோம், அவர்களிடமிருந்து உள்ளெழுச்சி பெறுவோம்; ஆனால் நண்பர்களே, நமது சுதந்திரத்தோடு கூடவே, தேசப்பிரிவினையின் வலியும் துயரும் இணைந்தே இருக்கிறது. ஆகையால் தான் ஆகஸ்ட் 14ஆம் தேதியை தேசப்பிரிவினை பயங்கரத்தின் நினைவுநாள் என்ற வகையிலே நாம் கடைப்பிடிக்கிறோம். ஆகஸ்ட் மாதத்தின் ஒவ்வொரு நாளும், சும்மா ஒன்றும் வரவில்லை சுதந்திரம் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது. இந்தச் சுதந்திரத்தின் பின்னே இலட்சக்கணக்கான-கோடிக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தவம் இருக்கின்றது. நாம் இதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும், நமது உறுதிப்பாடுகள் மூலம் இதை மேலும் வலுவுடையதாக ஆக்க வேண்டும்.
என் கனிவான நாட்டுமக்களே, 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று மேலும் ஒரு புரட்சியின் தொடக்கம் ஏற்பட்டது. சுதேசி இயக்கமானது, உள்ளூர் உற்பத்திக்கு, குறிப்பாக கைத்தறிக்குப் புதிய உந்துசக்தியை அளித்தது. இந்த நினைவைப் போற்றும் வகையிலே தேசம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக கொண்டாடுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியோடு, தேசிய கைத்தறி தினமாக நாம் கொண்டாட ஆரம்பித்து பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. சுதந்திரப் போராட்டக் காலத்தில் நமது கதர்ப்பொருட்கள் எப்படி சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய பலத்தை அளித்தனவோ, அதே போல இன்றும் கூட, வளர்ச்சியடைந்த பாரதமாக ஆகும் திசையில் நாம் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கும் வேளையிலே, ஜவுளித்துறையானது தேசத்தின் பலமாக உருவாக்கம் பெற்று வருகின்றது. இந்தப் பத்தாண்டுகளிலே தேசத்தின் பல்வேறு இடங்களில் இந்தத் துறையோடு இணைந்த இலட்சக்கணக்கானவர்கள் தாம் வெற்றியின் பல படிகளைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். மஹாராஷ்டிரத்தின் பைட்டண் கிராமத்தின் கவிதா தவலே அவர்கள், முன்பெல்லாம் ஒரு சிறு அறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார், இடமோ, வசதிகளோ ஏதும் இருக்கவில்லை. அரசாங்க உதவி கிடைத்த பிறகு, இப்போது இவருடைய திறமைகள் சிறகு விரிக்கத் தொடங்கி விட்டன. இவர் மூன்று மடங்கு அதிகம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். ஒடீஷாவின் மயூர்பஞ்ஜிலும் இதே மாதிரியான வெற்றிக் கதை தான். இங்கே 650ற்கும் அதிகமான பழங்குடியினப் பெண்கள், சந்தாலீ புடவைகளுக்கு மீண்டும் உயிரூட்டி இருக்கிறார்கள். இப்போது இந்தப் பெண்கள், ஒவ்வோர் மாதமும் ஆயிரக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்கள். இவர்கள் வெறும் துணியை மட்டும் நெசவு செய்யவில்லை, தங்களுடைய அடையாளத்தையே நெய்கிறார்கள். பிஹாரின் நாலந்தாவைச் சேர்ந்த நவீன் குமார் அவர்களின் சாதனை உத்வேகம் அளிக்கவல்லது. இவருடைய குடும்பத்தார், பல தலைமுறைகளாக இந்தப் பணியோடு தொடர்புடையவர்கள். ஆனால் மிகவும் அருமையான விஷயம் என்னவென்றால், இவருடைய குடும்பத்தார் இப்போது இந்தத் துறையில் நவீனத்துவத்தையும் இணைத்திருக்கிறார்கள். இப்போது இவர்களுடைய குழந்தைகள் கைத்தறித் தொழில்நுட்பத்தைப் படிக்கிறார்கள். பெரிய ப்ராண்டுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த மாற்றம் ஏதோ ஒன்றிரண்டு குடும்பங்களில் மட்டுமல்ல, இது அக்கம்பக்கம் அநேக குடும்பங்களையும் முன்னேற்றிக் கொண்டிருக்கிறது.
நண்பர்களே, ஜவுளித்துறை, பாரதத்தின் ஒரு துறை மட்டுமல்ல, இது நமது கலாச்சாரப் பன்முகத்தன்மைக்கான எடுத்துக்காட்டு. இன்று ஜவுளித்துறை மற்றும் ஆயத்த ஆடைகள் சந்தை வெகு விரைவாக முன்னேறி வருகிறது, இந்த முன்னேற்றத்தின் மிக அழகான விஷயம் என்னவென்றால், கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், நகரங்களின் ஆடை வடிவமைப்பாளர்கள், மூத்த நெசவாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப்புகளைத் தொடங்கும் நமது இளைஞர்கள் என அனைவரும் இணைந்து இதை முன்னெடுத்துக் கொண்டு வருகிறார்கள். இன்று பாரதத்தில் 3000த்திற்கும் மேற்பட்ட ஜவுளித்துறை ஸ்டார்ட் அப்புகள் செயல்பட்டு வருகின்றன. பல ஸ்டார்ட் அப்புகள், பாரதத்தின் கைத்தறித் துணிகளின் அடையாளத்துக்கு, உலகளாவிய உயரங்களை அளித்திருக்கின்றன.
நண்பர்களே, 2047இன் வளர்ச்சியடைந்த பாரதத்தின் பாதை, தற்சார்பைக் கடந்து பயணிக்கிறது, உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் உணர்வுக்கு, தற்சார்பு பாரதம் தான் மிகப்பெரிய ஆதாரம். பாரதத்தில் தயாராகும் பொருட்களாக இருக்க வேண்டும், அவற்றை உருவாக்குவதில் நம்மவர்களின் வியர்வை சிந்தப்பட்டிருக்க வேண்டும், உள்ளூரிலேயே வாங்குங்கள், உள்ளூரிலேயே விற்பனை செய்யுங்கள். இதுவே நமது உளவுறுதிப்பாடாக இருக்க வேண்டும்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, பாரதத்தின் பன்முகத்தன்மையின் மிக அழகான காட்சியை நமது நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பாரம்பரியங்களில் காணலாம், இதன் அங்கம் தான் நமது பஜனைப் பாடல்களும், நமது கீர்த்தனங்களும். ஆனால் கீர்த்தனைப் பாடல்கள் வாயிலாக காட்டுத்தீ பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறித்து நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா? நீங்கள் ஒருவேளை நம்பாமல் போகலாம் ஆனால், ஓடிஷாவின் கியோஞ்ஜார் மாவட்டத்தில் ஒரு அற்புதமான செயல் நடந்தேறி வருகிறது. இங்கே ராதாகிருஷ்ண சங்கீர்த்தன மண்டலி என்ற பெயர்கொண்ட ஒரு குழு இருக்கிறது. பக்தியோடு கூடவே, இந்தக் குழுவானது, இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற மந்திரத்தையும் கூடவே சேர்த்து ஜபித்து வருகிறது. இந்த முன்னெடுப்புக்கான உத்வேகக் காரணியாக இருந்தவர் பிரமீலா பிரதான் அவர்கள். காடுகள் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பிற்காக இவர் பாரம்பரியமான பாடல்ளோடு புதிய சொற்களை இணைத்தார், புதிய செய்திகளை இழைத்தார். இவரது குழுவானது கிராமங்கள்தோறும் சென்றது. பாடல்கள் வாயிலாக காட்டுத்தீயால் எத்தனை அழிவு ஏற்படுகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைத்தார். இந்த எடுத்துக்காட்டு, நமது மக்கள் பாரம்பரியங்கள் என்னவோ கடந்த போன காலங்களின் எச்சங்கள் அல்ல, இவற்றிலே சமூகத்திற்கு நல்வழிகாட்டும் சக்தி இன்னமும் இன்றும் இருக்கின்றன என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
என் இனிமையான நாட்டுமக்களே, பாரதத்தின் கலாச்சாரத்தின் மிகப்பெரிய ஆதாரம் நமது பண்டிகைகளும், நமது பாரம்பரியங்களும் தான், ஆனால் நமது கலாச்சாரத்தின் உயிர்ப்புத்தன்மையுடைய மேலும் ஒரு பக்கம் இருக்கிறது – நமது நிகழ்காலம் மற்றும் நமது வரலாற்றை நாம் ஆவணப்படுத்திக்க் கொண்டே வரவேண்டும் என்பதுதான் அந்தப் பக்கம். பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகள் வடிவிலே பாதுகாக்கப்பட்டிருக்கும் ஞானம்தான் நமது மெய்யான சக்தியாகும். இந்த ஓலைச்சுவடிகளிலே விஞ்ஞானம் உள்ளது, சிகிச்சைமுறைகள் இருக்கின்றன, இசை இருக்கிறது, தத்துவம் உள்ளது, அனைத்திலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், மனித சமூகத்தின் எதிர்காலத்தை எப்படி ஒளிமயமானதாக ஆக்கமுடியும் என்பதைப் பற்றிய சிந்தனைதான் அது. நண்பர்களே, இப்படிப்பட்ட அசாதாரணமான ஞானத்தை, இந்த மரபினைப் போற்றிப் பாதுகாப்பதுதான் நமது மிகப்பெரிய பொறுப்பாகும். நமது தேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும், தங்களுடைய சாதனையாகவே ஆக்கியவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட கருத்தூக்கம் அளிக்கும் ஆளுமைகளில் ஒருவர் தான் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த மணிமாறன் அவர்கள். இன்றைய தலைமுறையினர் தமிழில் இருக்கும் ஓலைச்சுவடிகளைப் படிக்க கற்றுக் கொள்ளவில்லை என்றால், வருங்காலத் தலைமுறையினரின் காலத்தில் இந்த விலைமதிப்பில்லாத மரபுச்செல்வத்தை நாம் இழக்க நேரிடும் என்று அவர் கருதினார். ஆகையால் அவர் மாலைநேர வகுப்புகளைத் தொடங்கினார். அதிலே மாணவர்கள், வேலைபார்க்கும் இளைஞர்கள், ஆய்வாளர்கள் என பலர் அங்கே கற்கத் தொடங்கினார்கள். மணிமாறன் அவர்கள், தமிழ்ச் சுவடிகளை எவ்வாறு படிப்பது, புரிந்துகொள்வது என்பதன் விதிமுறைகள் பற்றிக் கற்பித்தார். இன்று பல முயற்சிகளுக்குப் பிறகு பல மாணவர்கள் இந்த வழிமுறையில் தேர்ச்சி பெற்று விட்டார்கள். சில மாணவர்கள், இந்தச் சுவடிகளின் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவமுறை மீதான ஆய்வுகளையும் மேற்கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். நண்பர்களே, இப்படிப்பட்ட முயற்சிகள் நாடெங்கிலும் நடைபெற்றால், நமது பண்டைய ஞானம் நான்கு சுவர்களுக்குள்ளே மட்டும் அடைந்து கிடக்காமல், புதிய தலைமுறையினருக்கு விழிப்பேற்படுத்தும் பணியை ஆற்றும் இல்லையா? இந்த எண்ணத்தால் உத்வேகம் அடைந்து, பாரத அரசு, இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்ட அறிக்கையில், ’ஞான பாரத இயக்கம்’ என்ற ஒரு வரலாற்று முன்னெடுப்பை அறிவித்திருக்கிறது. இந்த இயக்கத்தின்படி, பண்டைய சுவடிகள் டிஜிட்டல்மயமாக்கப்படும். பிறகு ஒரு தேசிய டிஜிட்டல் சேமிப்பகம் உருவாக்கப்பட்டு, உலகெங்கிலுமிருந்தும் மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் பாரதத்தின் ஞானப் பாரம்பரியத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள இயலும். நீங்களும் இப்படிப்பட்ட முயற்சியோடு இணைந்திருந்தாலோ, இணைய விரும்பினாலோ, மைகவ் அல்லது கலாச்சார அமைச்சகத்தைக் கண்டிப்பாகத் தொடர்பு கொள்ளுங்கள்; ஏனென்றால் இவை சுவடிகள் மட்டுமல்ல, இவை இனிவரும் சந்ததிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய பாரதத்தின் ஆன்மாவின் அத்தியாயங்கள்.
என் இதயம்நிறை நாட்டுமக்களே, உங்களிடம் எத்தனை வகையான புள்ளினங்கள் இருக்கின்றன என்று கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோமே, நீங்கள் என்ன கூறுவீர்கள்? தினமும் ஒரு 5-6 பறவைகளை என்னால் பார்க்க முடிகிறது, சிலவற்றை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது, சில பறவைகளைப் பற்றித் தெரியவில்லை. ஆனால், நமக்கு அக்கம்பக்கத்தில் இருக்கும் பறவையினங்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அண்மையில் இப்படிப்பட்ட ஒரு அருமையான முயற்சி, அசாமில் உள்ள காசிராங்கா தேசியப்பூங்காவில் நடந்தது. பொதுவாகப் பார்த்தால், இந்த இடம் காண்டாமிருகங்களுக்குப் பெயர் போனது என்றாலும் இந்த முறை இங்கே இருக்கும் புல்வெளியும், அதில் வசிக்கும் புள்ளினங்களும் தான் விவாதப் பொருளானது. இங்கே முதன்முறையாக புல்வெளிப் புள்ளினங்களின் கணக்கெடுப்பு நடந்தது. இந்தக் கணக்கெடுப்பு காரணமாக பறவைகளின் 40க்கும் மேற்பட்ட புள்ளின வகைகள் அடையாளம் கண்டறியப்பட்டன என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். இவற்றிலே மிக அரியவகைப் பறவைகளும் அடக்கம். இத்தனை பறவைகளை எப்படி அடையாளம் காண முடிந்தது என்ற வியப்பு உங்களுக்கு ஏற்படலாம். இங்கே தான் தொழில்நுட்பம் தன் வித்தையைக் காட்டியது. கணக்கெடுப்பில் ஈடுபட்ட குழுவானது, ஒலிகளைப் பதிவுசெய்யும் கருவியைப் பொருத்தியது. பிறகு, கணிப்பொறி வாயிலாக அந்த ஒலிகள் ஆய்ந்து அலசப்பட்டு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அந்த ஒலிகள் மூலம் மட்டுமே பறவைகள் அடையாளம் காணப்பட்டன, அதுவும் எந்தவொரு தொந்திரவும் கொடுக்காமலேயே. சிந்தித்துப் பாருங்கள்!! தொழில்நுட்பமும், புரிந்துணர்வும் ஒன்றிணைந்து செயல்படும்போது, இயற்கையைப் புரிந்து கொள்ளுதல் எத்தனை எளிதாகவும், ஆழமாகவும் ஆகிவிடுகிறது பாருங்கள்!! நாம் இத்தகைய முயற்சிகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும், அப்போது தான், நாம் நமது உயிரினப் பன்முகத்தன்மையை அடையாளம் காண முடிவதோடு, அடுத்த தலைமுறையையும் இதோடு இணைக்க இயலும்.
எனதருமை நாட்டுமக்களே, சில வேளைகளில் எங்கே மிக அதிகமான இருள் கவிந்திருக்கிறதோ, அங்கிருந்துதான் பேரொளி பீறிட்டுக் கொண்டு புறப்படும். இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுத் தான் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் காணப்படுகிறது. ஒரு காலத்தில், இந்தப் பகுதியில் மாவோவாதிகளின் வன்முறை நடைபெற்றுவந்தது. பாசியா வட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்கள் வெறிச்சோடிப் போகத் தொடங்கியிருந்தன, மக்கள் பீதியோடு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வேலைவாய்பிற்கான எந்த சாத்தியமும் தென்படாமல் இருந்தது, நிலங்கள் ஆளரவமற்றுப் போயின, இளைஞர்கள் புலம்பெயரத் தொடங்கினார்கள். ஆனால், மிகவும் அமைதியான, நிதானம் நிறைந்த மாற்றம் ஒன்றின் தொடக்கம் ஏற்பட்டது. ஓம்பிரகாஷ் சாஹு என்ற பெயர் கொண்ட இளைஞர் ஒருவர், வன்முறைப் பாதையைத் துறந்தார். இவர் மீன்வளர்ப்பினை மேற்கொண்டார். பிறகு தன்னைப் போன்ற இன்னம்பிற கூட்டாளிகளையும் இப்படிச் செய்ய ஊக்கப்படுத்தினார். இவருடைய இந்த முயற்சி பலனளிக்கத் தொடங்கியது. முன்னர் துப்பாக்கியைத் தாங்கியவர்கள் எல்லாம் இப்போதோ மீன்பிடி வலையைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நண்பர்களே, ஓம்பிரகாஷ் சாஹு அவர்களின் தொடக்கம் எளிதாக இருக்கவில்லை. எதிர்ப்பு இருந்தது, மிரட்டல்கள் விடப்பட்டன என்றாலும், அவரது நம்பிக்கை தகரவில்லை. பிரதம மந்திரி மீன்வளத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அவர்களுக்குப் புதிய பலம் கிடைத்தது. அரசிடமிருந்து பயிற்சி கிடைத்தது, குளங்களை அமைக்க உதவி கிடைத்தது, பார்த்துக் கொண்டே இருக்கும் நேரத்தில், கும்லாவில் மீன்பிடிப் புரட்சி உருவானது. இன்று பாசியா வட்டாரத்தின் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன்வளர்ப்போடு இணைந்திருக்கின்றன. ஒருகாலத்தில் நக்சல் அமைப்புக்களோடு இருந்தவர்கள் இப்போது, கிராமத்திலேயே கௌரவமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள், மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்து வருகிறார்கள். பாதை சரியாக இருந்தால், மனதில் நம்பிக்கை நிறைந்தால், மிகக்கடினமான சூழ்நிலைகளிலும் கூட வளர்ச்சியின் விளக்கு பிரகாசமாக ஒளிவிட்டெரியும் என்பதைத் தான் கும்லாவின் இந்தப் பயணம் நமக்குக் கற்பிக்கிறது.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, ஒலிம்பிக்ஸிற்குப் பிறகு மிகப்பெரிய விளையாட்டு ஏற்பாடு எது என்று உங்களுக்குத் தெரியுமா? ”உலகக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் விளையாட்டுக்கள்” என்பதுதான் விடை. உலகெங்கும் இருக்கும் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்போடு தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு இடையே நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் தாம் இவை. இந்த முறை இந்தப் போட்டிகள் அமெரிக்காவில் நடந்தன, இதிலே பாரதம் வரலாறு படைத்திருக்கிறது. பாரதம் கிட்டத்தட்ட 600 பதக்கங்களை வென்றது. பங்கெடுத்த 71 நாடுகளிலே நாம் முன்னணி மூன்று நாடுகளில் இடம் பிடித்தோம். இரவுபகலாக தேசத்தின் பொருட்டு சேவையாற்றுவோரின் கடின உழைப்பு பலனளித்தது. நமது இந்த நண்பர்கள் இப்போது விளையாட்டு மைதானத்திலும்கூட நாட்டின் பெயரை உயர்த்திப் பிடிக்கிறார்கள். நானும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களின் பயிற்றுநர் குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். 2029ஆம் ஆண்டு இந்த விளையாட்டுப் போட்டிகள் பாரதத்திலே நடைபெறும் என்ற சுவாரசியமான விஷயத்தையும் உங்களோடு பகிர்கிறேன் நண்பர்களே. உலகெங்கிலுமிருந்தும் விளையாட்டு வீரர்கள் பாரதம் வரும்போது நாம் நம் நாட்டிலே அவர்களை உபசரிப்போம், நமது விளையாட்டுக் கலாச்சாரத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்வோம்.
நண்பர்களே, கடந்த நாட்களிலே பல இளம் விளையாட்டு வீரர்களும் அவர்களின் பெற்றோரும் அனுப்பிய செய்தி என்னை வந்தடைந்தது. இதிலே கேலோ பாரத் 2025 வழிமுறையை மிகவும் பாராட்டி இருந்தார்கள். இந்தக் கொள்கையின் இலக்கு தெளிவாக ஒன்று தான் – பாரதம் விளையாட்டு உலகிலே சூப்பர் பவராக ஆக வேண்டும் என்பதுதான். கிராமங்கள், ஏழைகள், பெண்கள் தாம் இந்தக் கொள்கையின் முதன்மைகள். பள்ளிகள், கல்லூரிகள் ஆகியன இப்போது விளையாட்டுக்களை அன்றாட வாழ்க்கையின் அங்கமாக ஆக்கும். விளையாட்டுக்களோடு தொடர்புடைய ஸ்டார்ட் அப்புகள், அவை விளையாட்டுக்களின் மேலாண்மையோடு அல்லது தயாரிப்போடு தொடர்புடையதாக இருந்தாலும், அவர்களுக்கு அனைத்துவிதமான உதவிகளும் கிடைக்கும். தேசத்தின் இளைஞர்கள் சுயதயாரிப்பான ரேக்கட், மட்டை மற்றும் பந்தோடு விளையாடும்போது தற்சார்பு நோக்கிற்கு எந்த அளவுக்கு பலம் கிடைக்கும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள். நண்பர்களே, விளையாட்டுக்கள் குழுவுணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த உடலுறுதி, தன்னம்பிக்கை மற்றும் ஒரு பலமான பாரதத்தை நிர்மாணிக்கும் பாதையாகும். ஆகையால் நன்றாக விளையாடுங்கள், நன்றாக விளையாடுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, சிலருக்கு சில வேளைகளில் சில வேலைகள் சாத்தியமில்லாதவையாகத் தோன்றும். இது நடக்குமா என்ற நினைவு எழும். ஆனால், தேசம் ஒரே சிந்தனையில் ஒன்றுபட்டு நிற்கும் போது, சாத்தியமில்லாதவையும் சாத்தியப்படும். தூய்மை பாரதம் இயக்கம்தான் இதற்கான மிகச் சிறப்பான எடுத்துக்காட்டு. விரைவிலேயே இந்த இயக்கம் 11 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறது. இந்த 11 ஆண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிமளித்துவிட்டது. மக்கள் இதை தங்களுடைய கடமையாகவே கருதுகிறார்கள், இது தானே மெய்யான மக்கள் பங்கெடுப்பு.
நண்பர்களே, ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் தூய்மை ஆய்வு இந்த உணர்வை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டு தேசத்தின் 4500க்கும் மேற்பட்ட நகரங்களும், சிறுநகரங்களும் இதில் கலந்து கொண்டன. 15 கோடிக்கும் அதிகமானோர் இதிலே பங்கு பெற்றார்கள். இது சாதாரணமான எண்ணிக்கை அல்ல. இதுவே தூய்மை பாரதத்தின் குரல்.
நண்பர்களே, தூய்மை விஷயத்தில் நமது நகரங்களும், சிறுநகரங்களும் தங்கள் தேவைகள் மற்றும் சூழல் தொடர்பாக பல்வேறு வழிமுறைகளின்படி பணியாற்றி வருகின்றன. இவற்றின் தாக்கம் நகரங்களோடு மட்டும் நின்று போகவில்லை, தேசமெங்கும் இந்த வழிமுறைகளை தங்களுடையதாக்கிக் கொண்டிருக்கின்றது. உத்தராகண்டின் கீர்த்திநகரைச் சேர்ந்தவர்கள், மலைகளில் கழிவுப்பொருள் மேலாண்மைக்கான புதிய எடுத்துக்காட்டை அமைத்திருக்கிறார்கள். இது போலவே மங்களூருவிலே தொழில்நுட்பத்தின் துணையோடு உயிரிக் கழிவுப் பொருள் மேலாண்மை விஷயத்தில் பணிகள் நடந்து வருகின்றன. அருணாச்சலிலே ஒரு சிறிய நகரத்தின் பெயர் ரோயிங். ஒரு காலத்தில் இங்கிருக்கும் மக்களின் உடல்நலத்திற்கு கழிவுப் பொருள் மேலாண்மை மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருந்தது. இந்த மக்கள் பொறுப்பை ஏற்றார்கள், Green Roing முன்னெடுப்பைத் தொடக்கினார்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுப்பொருட்களைக் கொண்டு ஒரு பூங்காவையே உருவாக்கிவிட்டார்கள். இதைப் போன்றே கராடிலே, விஜயவாடாவிலே, நீர் மேலாண்மைக்கான பல உதாரணங்களைக் காண முடியும். அஹமதாபாதின் ஆற்றுக்கரையிலே உள்ள கட்டுமான அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்பணிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
நண்பர்களே, போபாலில் ஒரு குழுவின் பெயர் சகாராத்மக் சோச், அதாவது ஆக்கபூர்வமான சிந்தனை. இதிலே 200 பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தூய்மைப் பணியை மட்டும் மேற்கொள்வதில்லை, சிந்தனையையும் மாற்றுகிறார்கள். ஒன்றாக இணைந்து நகரின் 17 பூங்காக்களைத் தூய்மைப்படுத்துவது, துணிப்பைகளை விநியோகம் செய்வது என, இவர்களின் அனைத்துப் பணிகளிலும் ஒரு செய்தி இருக்கிறது. இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாகவே போபாலிலும் கூட இப்போது தூய்மைப்பணி ஆய்விலும் கணிசமான முன்னேற்றம் வந்திருக்கிறது. லக்னௌவின் கோமதி நதிக்குழு பற்றிப் பேசுவதும் அவசியமானது. பத்தாண்டுகளாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், சற்றும் சளைக்காமல், தடைப்படாமல் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சத்திஸ்கட்டின் பில்ஹாவின் எடுத்துக்காட்டும் அருமையானது. இங்கே பெண்களுக்கு கழிவுப்பொருள் மேலாண்மைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது, இவர்கள் ஒன்றிணைந்து நகரத்தின் தோற்றத்தையே மாற்றி விட்டார்கள். கோவாவின் பணஜி நகர்தரும் உதாரணமும் உத்வேகம் அளிக்கவல்லது. இங்கே குப்பைகள் 16 வகையாகப் பிரிக்கப்பட்டு, இதற்கான தலைமைப் பொறுப்பையும் பெண்களே ஏற்றிருக்கிறார்கள். பணஜிக்கு குடியரசுத் தலைவர் விருதும் கிடைத்திருக்கிறது. நாம் ஆண்டிலே ஒவ்வோர் நாளும் ஒவ்வொரு கணமும் தூய்மைக்கு முதன்மை அளிக்கும்போது, தேசத்தால் தூய்மையாக இருக்க இயலும்.
நண்பர்களே, மழைக்காலத் தூரல்களுக்கு இடையே, தேசம் மீண்டும் ஒருமுறை பண்டிகைகளின் வண்ணங்களால் வண்ணமயமாக இருக்கிறது. இன்று ஹரியாலி தீஜ் பண்டிகை, அடுத்து நாக பஞ்சமி, ரக்ஷா பந்தன், பிறகு ஜன்மாஷ்டமி….. நமது விஷமக்காரக் கண்ணன் அவதரித்த நாள் கொண்டாட்டம். இந்தத் திருநாட்கள் அனைத்திலும் நமது உணர்வுகள் கலந்திருக்கின்றன, இவை நம்மை இயற்கையோடு இணைத்து வைப்பதோடு, சமநிலை பற்றிய செய்தியையும் அளிக்கின்றன. உங்கள் அனைவருக்கும் இந்தப் புனிதமான திருநாட்களுக்கான ஏராளமான நல்வாழ்த்துக்கள். பிரியமான என் நண்பர்களே, உங்களுடைய அனுபவங்களையும், கருத்துக்களையும் எனக்குத் தொடர்ந்து அனுப்பி வாருங்கள். அடுத்த மாதம் மீண்டும் சந்திப்போம், நாட்டுமக்களின் மேலும் சில, புதிய சாதனைகள் மற்றும் உள்ளெழுச்சிகளை அறிந்துணர்வோம். உங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். பலப்பல நன்றிகள்.
சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் ஒரு சார்பாக நடந்து கொள்வதாக கூறி அவர் மீது சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து வாஞ்சிநாதன் என்ற வழக்கறிஞர் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கு மனு அளித்ததாகவும், ஆனால் தற்போது நீதியரசர் ஜி.ஆர் சுவாமிநாதன் அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் அந்த கடிதம் குறித்து கேள்வி கேட்பதாகவும், நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முனைவதாகவும், உச்சநீதி மன்றம் முடிவெடுக்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் முன்னாள் நீதிபதி கே.சந்துரு அவர்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த கடிதத்தில் திரு.சந்துரு அவர்கள் உட்பட எட்டு முன்னாள் நீதிபதிகளின் ஒப்புதலோடு இந்த கடிதம் அனுப்பப்படுவதாகவும், எழுத்து மூலமாக மற்றவர்கள் தனக்கு இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு அதிகாரம் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் குறிப்பிட்டிருந்த எட்டு பேரில் முன்னாள் நீதிபதி கே.கே.சசிதரன் அவர்கள் திரு.சந்துரு அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல தாம் எழுத்து மூலமாக எந்த அதிகாரத்தையம் யாருக்கும் அளிக்கவில்லை என்றும், இந்த விவகாரம் குறித்து தன்னிடம் யாரும் கலந்தாலோசிக்கவில்லை என்றும் திரு.சந்துரு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவாகரத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக தான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் சிறந்த நீதிபதிகளில் ஒருவர் ‘என்று சொல்லப்பட்ட’ திரு. சந்துரு அவர்களின் இந்த ‘போலி, பொய்’ அறிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. மற்றொரு நீதிபதியின் பெயரை தவறாக பயன்படுத்தும் அவசியமும், அவசரமும் அவருக்கு ஏன் ஏற்பட்டது என்பதை விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அவருக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்பில்லாத ஒருவரை தொடர்புபடுத்துகிற அழுத்தத்தை கொடுத்தது யார் என்கிற விவரங்களை திரு.சந்துரு அவர்கள் வெளியிடுவதோடு, முன்னாள் நீதிபதி கே.கே. சசிதரன் அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டதற்கு அவரிடத்திலும், நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களிடத்திலும் மன்னிப்பு கேட்பாரா?
மேலும், கடந்த மாதத்தில் நடைபெற்ற காவல் நிலைய ‘லாக்-அப்’ கொலைகளிலோ, கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்தோ எந்த கருத்தும் சொல்லாத நிலையில், இந்த விவகாரத்தில் முன்னாள்.நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் திரு.சந்துரு அவர்கள் கொண்டுள்ள அக்கறை வியப்பளிக்கிறது. அது ஒருபுறம் இருந்தாலும், உச்சநீதி மன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியதாக சொல்லப்படுகிற வாஞ்சிநாதன் என்கிற வழக்கறிஞரின் உள்நோக்கத்தை நாம் சந்தேகிக்க வேண்டிய கட்டாயம் பல்வேறு காரணங்களால் எழுகிறது.
கடந்த மாதம், மதுரை அவுட்-போஸ்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற ஒரு குறிப்பிட்ட கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை ‘பார்ப்பனீய’ என்ற ஜாதி குறியீட்டை சொல்லி வாஞ்சிநாதன் தடுத்து நிறுத்திய பின்னர், காவல் துறையினர் தலையிட்டு அவரை அப்புறப்படுத்தியது உண்மையா இல்லையா?
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஹிந்து நம்பிக்கைகளுக்கு எதிராக திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிடலாம் என வாஞ்சிநாதன் வாதிட்டது உண்மையா இல்லையா?
மதுரை ஆதீனம் விவகாரத்தில் மதுரை ஆதீனத்தை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வாஞ்சிநாதன் ஆதின மடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தது உண்மையா இல்லையா?
4.ஈஷா யோகா சத்குரு மீது ஆதாரமற்ற புகார்களை அடுக்கி மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில், வாஞ்சிநாதன் புகார் கொடுத்தது உண்மையா இல்லையா?
முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பார் கவுன்சிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டது உண்மையா இல்லையா?
மேலும், 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் விவகாரத்தில் 100வது நாள் போராட்டத்தில் வாஞ்சிநாதன் மீது சட்ட பிரிவு-147 (கலவரம் செய்யும் குற்றம்), சட்ட பிரிவு- 148 (சட்ட விரோதமான கூட்டத்தில் பயங்கரமான ஆயுதம் வைத்திருத்தல்), சட்ட பிரிவு -188 (ஒரு பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை பின்பற்றாதது), சட்ட பிரிவு 353 (பொது ஊழியரை அவரது சட்டப்பூர்வ கடமையை செய்யவிடாமல் தடுப்பது), சட்ட பிரிவு 506 (குற்றவியல் மிரட்டல்) உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு ஜூன் 20, 2018 அன்று கைது செய்யப்பட்டது உண்மையா இல்லையா?
(இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட வாஞ்சிநாதனுக்கு பின்னர் பிணை அளித்ததும் இதே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் தான், அதையும் உள்நோக்கத்தோடு தான் தீர்ப்பளித்தார் என்று சொல்வார்களா?)
இது போன்று ஹிந்து மதத்திற்கு எதிராக, அரசுக்கு எதிராக, மத நம்பிக்கைகளுக்கு எதிராக, பிராமண சமுதாயத்திற்கு எதிராக குறை சொல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், பிறப்பால் பிராமண சமுதாயத்தை சேர்ந்த நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை குறை சொல்வது வியப்பளிக்கவில்லை. ஆனால், பல்லாண்டு காலம் நீதிபதிகளாக வீற்றிருந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக, கொள்கைகளுக்கு எதிராக, கலாச்சாரத்திற்கு எதிராக, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக இருப்பவருக்கு ஆதரவாக செயல்படுவது தான் அதிர்ச்சியளிக்கிறது, வியப்பளிக்கிறது.
முன்னாள் நீதிபதி பரந்தாமன் அவர்களுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் எப்படி தீர்ப்பளிக்க வேண்டும், எப்படி செயல்படவேண்டும் என்றெல்லாம் வகுப்பு எடுத்தது அவரின் எண்ண ஓட்டத்தை, உள்நோக்கத்தை சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது. இந்த சந்தேகத்தை தவறான தகவலை வெளிப்படுத்திய கடிதம் திரு. சந்துரு அவர்களின் கடிதம் உறுதி செய்கிறது.
‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே” என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. இந்த விவகாரத்தில் திராவிடர் கழகத்தினர், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டோரின் புலம்பல்களை பார்க்கும் போது, ‘திராவிட மாடலின்’ ஒரு அங்கம் தான் இந்த விவகாரம் என்பது தெளிவாகிறது. நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் செயல்களை தொடர்புடையவர்கள் நிறுத்தி கொள்வது நல்லது!
நாளை திங்கட்கிழமை திருஆடிபூரம் நாளில் தேரில் பவனி வந்து தரிசனம் தரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம், மங்களப் பொருட்கள் மதுரை அழகர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தது.நாளை திங்கட்கிழமை ஒன்பதாம் திருநாளாம் . காலை 2:00 மணி க்கு ஏகாந்த திருமஞ்சனம் காலை புறப்பாடு: தனித்தனி தோளுக்கினியான்களில் காலை 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் கடக லக்னத்தில் திருத்தேர் எழுந்தருளலும் திருவாடிப்பூரத் தேரோட்டம் காலை 9.10 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுத்தலுடன் துவங்குகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழா 28ஆம் தேதி காலை சிறப்பாக நடைபெறுகிறது. முன்னதாக சனிக்கிழமை இரவு சயன கோலத்தில் ஆண்டாள் காட்சிதரும் நிகழ்வு கிருஷ்ணன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் மங்களப் பொருட்கள் பரிவர்த்தனை செய்யும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத்தன்று நடைபெறும் தேர் திருவிழாவின் போது ஆண்டாளுக்கு மரியாதையாக ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கள சீர்வரிசை பொருள்கள் கொண்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து மங்களப் பொருட்களை கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாக அதிகாரியும் இணை ஆணையுருயமான சிவ ராம்குமார் தலைமையில் குழுவினர் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் மாட வீதிகள் வழியே மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அதனை ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் சௌ.சக்கரையம்மாள் பெற்றுக் கொண்டார். அப்பொழுது ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாலை மதுரை அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் மரியாதைகளை கள்ளழகர் திருக்கோவில் அதிகாரிகள் கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.
நண்பர்களே, சிவதரிசனத்தால் அற்புதமான சக்தி….. இளையராஜா அவர்களின் இசை….. ஓதுவார்தம் மந்திர உச்சாடனம்… உண்மையிலேயே…. இந்த ஆன்மீக அனுபவம் என் ஆன்மாவை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டது.
நண்பர்களே, பவித்திரமான பருவமழைக்காலம்….. அதோடு கூட, பிருஹதேஸ்வரர் சிவாலய நிர்மாணம் தொடங்கி, ஓராயிரம் ஆண்டுகள் வரலாற்றுப்பூர்வமான சந்தர்ப்பம்…….. இப்படிப்பட்ட அற்புதமான வேளையிலே, சிவனவன் பிருஹதேஸ்வரனின் பாதாரவிந்தங்களிலே சிரம் தாழ்த்த, அவரை வழிபாடு செய்யக்கூடிய பெரும்பேறு எனக்குக் கிடைத்தது.
நான் இந்த சரித்திர பூர்வமான ஆலயத்திலே, 140 கோடி நாட்டுமக்களின் நலனுக்காகவும், பாரதநாட்டின் நிரந்தர வளர்ச்சிக்காகவும் என் வேண்டுதல்களை முன்வைத்தேன். என் விருப்பமெல்லாம் – இறைவன் சிவனாரின் நல்லாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்…….. நம: பார்வதி பதயே, ஹர ஹர மஹாதேவ!!
நண்பர்களே, சின்மயா மிஷனுடைய முயற்சிகள் காரணமாக, தமிழ் மொழியில் பகவத் கீதை இசைத் தொகுப்பை வெளியிடும் வாய்ப்பும் இங்கு கிடைத்தது. இந்த முயற்சியும் கூட, நமது பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் நமது மனவுறுதிக்கு, சக்திகூட்டுகிறது. இந்த முயற்சியோடு இணைந்திருக்கும் அனைவருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, சோழ அரசர்கள் தங்களுடைய அரசியல் மற்றும் வியாபாரத் தொடர்புகளின் விரிவாக்கத்தை, இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை செய்திருந்தார்கள். நான் நேற்றுத்தான் மாலத்தீவுகளிலிருந்து திரும்பி வந்தேன், இன்று தமிழ்நாட்டிலே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.
நண்பர்களே, சிவனை வழிபாடு செய்பவனும், சிவபெருமானிலேயே கலந்து விடுகிறான், அவரைப் போலவே அழிவற்றவனாகி விடுகிறான் என்று நமது சாத்திரங்கள் ஓங்கி உரைக்கின்றன. ஆகையால் தான் சிவபெருமானிடத்திலே ஆழ்ந்த பக்தி கொண்ட பாரதத்தின் சோழர்களின் பாரம்பரியமும் கூட இன்று அமரத்துவம் அடைந்து விட்டது.
இராஜராஜ சோழன்…….இராஜேந்திர சோழன்….. இந்தப் பெயர்கள், பாரதத்தின் அடையாளங்கள், கௌரவத்தின் இணைச்சொல். சோழப்பேரரசு…. சோழ சாம்ராஜ்ஜியத்தின் வரலாறு, மற்றும் பாரம்பரியம்….. இவை பாரதத்தின் மெய்யான வல்லமையின், இயலாற்றலின் பிரகடனம்.
பாரதத்தின் அந்தக் கனவு அளிக்கும் உத்வேகத்தால் உந்தப்பட்டு, இன்று நாம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகின்றோம். நான் இந்த உள்ளெழுச்சி காரணமாக, பெரும் பராக்கிரமன் இராஜேந்திர சோழனை வழுத்துகிறேன்.
கடந்த சில தினங்களில் நீங்கள் அனைவரும் ஆடி திருவாதிரை உற்சவத்தைக் கொண்டாடினீர்கள். இன்று அதன் நிறைவு, இந்த மகத்தான நிகழ்ச்சி வாயிலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் இதற்குத் தோள்கொடுத்த அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம், பாரதத்தின் பொற்காலங்களின் ஒன்றாக இருந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். இந்த காலகட்டம், அவர்களுடைய போர்த்திறன் – வலிமையால் அளக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் தாய் என்ற வகையிலேயும் கூட பாரதத்தின் பாரம்பரியத்தை, சோழ சாம்ராஜ்ஜியம் முன்னெடுத்துச் சென்றது. வரலாற்று ஆய்வாளர்கள், மக்களாட்சி என்றால், பிரிட்டனுடைய மேக்னா கார்டாவைப் பற்றிப் பேசத் தொடங்கி விடுவார்கள். ஆனால் பல நூற்றாண்டுகள் முன்பாகவே, சோழ சாம்ராஜ்ஜியத்தில் குடவோலை முறை வாயிலாக, ஜனநாயக வழிமுறைகள்படி, தேர்தல்கள் நடந்தன.
இன்று உலகெங்கிலும் நீர் மேலாண்மை, சூழலியல் பாதுகாப்பு ஆகியவை பற்றிய விவாதங்கள் நடக்கின்றன. நமது முன்னோர்களோ, மிகப் பழமையான காலத்திலேயே கூட இவற்றின் மகத்துவத்தை நன்கு அறிந்திருந்தார்கள். மற்ற இடங்களிலிருந்து தங்கம்-வெள்ளி அல்லது பசுக்களைக் கவர்ந்துவந்த பல அரசர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இராஜேந்திர சோழனுடைய அடையாளமோ, புனித கங்கை நீரைக் கொண்டு வந்ததோடு இருக்கிறது.
இராஜேந்திர சோழன் வடபாரதத்திலிருந்து புனித கங்கை நீரைக் கொண்டு வந்து, தெற்கிலே நிறுவினான். கங்கா ஜலம்யம் ஜயஸ்தம்பம். இந்த நீரைக் கொண்டு இங்கே சோழகங்க ஏரியிலே இட்டு நிரப்பினான். இது இன்று பொன்னேரி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
இராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தை நிர்மாணமும் செய்தான். இந்த ஆலயம், இன்றும்கூட, உலகின் ஒரு கட்டிடவியல் அற்புதமாகத் திகழ்கிறது. அன்னை காவிரி பெருகிப்பாயும் இந்த பூமியிலே, அன்னை கங்கைக்கு திருவிழா எடுக்கப்படுவது என்பதும் கூட, சோழ சாம்ராஜ்ஜியத்தின் நற்கொடையாகும்.
அந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பின்புலத்தின் நினைவிலே, மீண்டும் ஒருமுறை, கங்கை நீரை, காசியிலிருந்து இங்கே கொண்டு வந்திருப்பது எனக்கு மிகுந்த உவகையை அளிக்கிறது. தற்போது இங்கே நெறிப்படி அனுஷ்டானங்கள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. நான் காசியின் மக்கள் பிரதிநிதி, கங்கை அன்னையிடம் எனக்கு ஆன்மரீதியிலான அன்பு உள்ளது. சோழ அரசர்களின் இந்தச் செயல்…… அதோடு இணைந்த இந்த ஏற்பாடு….. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற பெருவேள்வியைப் போன்றது இது.
சகோதர சகோதரிகளே, சோழ அரசர்கள் பாரதத்தை கலாச்சார ஒற்றுமை என்ற இழைகொண்டு இணைத்தார்கள். இன்று நம்முடைய அரசாங்கம், சோழர்களுடைய இதே கருத்துக்களை-எண்ணங்களை முன்னெடுத்துச் செல்கின்றது. நாங்கள் காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற ஏற்பாடுகள் வாயிலாக, ஒற்றுமையின், ஒருமைப்பாட்டின் பல நூற்றாண்டுக்காலப் பழமையான கோட்பாடுகளை பலப்படுத்தி வருகின்றோம். கங்கைகொண்ட சோழபுரம் போன்ற தமிழகத்தின் பண்டைய ஆலயங்களையும் கூட இந்திய தொல்லியல் ஆய்வகம் வாயிலாக பரமரிக்கப்பட்டு வருகின்றன.
தேசத்தின் புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட போது, நமது சிவாதீனங்கள்-புனிதர்கள், அந்த நிகழ்ச்சியின் ஆன்மீகத் தலைமையை ஏற்றார்கள். தமிழ் கலாச்சாரத்தோடு இணைந்த புனிதமன செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. அந்தக் கணங்களை நான் இன்று நினைத்துப் பார்த்தால் கூட, என் நெஞ்சம் பெருமிதத்தில் பொங்குகிறது.
நண்பர்களே, நான் இப்போது தான் சிதம்பரம் நடராஜா ஆலயத்தின் சில தீக்ஷிதர்களைச் சந்தித்தேன். சிவபெருமான் நடராஜராக வழிபடக்கூடிய அந்த திவ்வியமான ஆலயத்தின் பவித்திரமான பிரசாதத்தை அவர்கள் எனக்கு அளித்தார்கள். நடராஜரின் இந்த சொரூபம், இது நமது தத்துவம், அறிவியல் வேர்கள் ஆகியவற்றின் அடையாளம்.
நடராஜ ஸ்வாமியின் இதே போன்ற ஆனந்த தாண்டவ மூர்த்தி, தில்லியின் பாரத் மண்டபத்தின் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கிறது. இதே பாரத் மண்டபத்தில், ஜி-20யின் போது, உலகெங்கிலுமிருந்தும் உலகமகா தலைவர்கள் எல்லாம் குழுமினார்கள்.
நமது சைவ பாரம்பரியம், பாரதத்தின் கலாச்சார நிர்மாணத்திலே மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியிருக்கிறது. சோழப் பேரரசர்கள், இந்த நிர்மாணத்தின் முக்கியமான சிற்பிகளாக விளங்கினார்கள். ஆகையால் தான் இன்றும் கூட சைவ பாரம்பரியத்தின் உயிர்ப்புடைய மையங்களில், தமிழ்நாடு மிகவும் முக்கியமானது.
பெருமைமிகு நாயன்மார் புனிதர்களின் சீர்மரபு…. அவர்கள் யாத்த பக்திக் காப்பியங்கள்…. தமிழ் இலக்கியம்……. நமது போற்றுதலுக்குரிய ஆதீனங்களின் பங்களிப்பு…… அவர்கள் சமூக மற்றும் ஆன்மீகக் களங்களில் ஒரு9 புதிய யுகத்திற்குப் பிறப்பளித்திருக்கிறார்கள்.
நண்பர்களே, இன்று உலகம் நிலையில்லாத்தன்மை, வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்றா பிரச்சனைகளில் உழன்று வரும் வேளையிலே….. சைவ சித்தாந்தம் நமக்கு தீர்வளிக்கும் பாதையைத் துலக்கிக் காட்டுகிறது.
நீங்கள் பாருங்கள்…… அன்பே சிவம் என்றார் சித்தர் திருமூலர். இன்று இந்தக் கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைப்பிடித்தால், பெரும்பாலான சங்கடங்கள் தாமாகவே தீர்ந்து போய்விடும். இந்த எண்ணத்தைத் தான் பாரதம் இன்று ஒரே உலக்ம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்றா வகையிலே முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
நண்பர்களே, இன்று பாரதம், வளர்ச்சியோடு கூடவே மரபும் என்ற மந்திரத்தை அட்யொற்றிப் பயணித்து வருகிறது. இன்றைய பாரதம், தனது வரலாற்றின் மீது பெருமிதம் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் நாம் தேசத்தின் பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் பணியில் மிகுந்த உருத்தோடும், கருத்தோடும் பணியாற்றி வருகின்றது. தேசத்தின் பண்டைய சிலைகள் மற்றும் கலைச்சின்னங்கள்…. இவை களவாடப்பட்டு, அயல்நாடுகளில் விற்கப்பட்டு விட்டன, இவற்றை நாங்கள் மீட்டெடுத்துக் கொண்டு வருகிறோம்.
2014ஆம் ஆண்டிற்குப் பிறகு, 600க்கும் அதிகமான தொன்மையான கலைப்படைப்புகள், உலகின் பல்வேறு தேசங்களிலிருந்தும் பாரதம் வந்தன. இவற்றில் 36 கலைப்பொருட்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இன்று நடராஜர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், நந்திகேஸ்வரர், உமா பரமேஸ்வரி, பார்வதி, சம்பந்தர்….. இப்படி பல மகத்துவம் வாய்ந்த பாரம்பரியங்கள், இப்போது இந்த பூமியிலே மீண்டும் அழகு சேர்த்து வருகின்றன.
நண்பர்களே, நமது மரபும், சைவ தத்துவத்தின் முத்திரையும், பாரதம் வரை மட்டுமோ, அல்லது இந்த பூமியுடனோ மட்டும் நின்று போய் விடவில்லை. பாரதம் நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் தேசம் ஆனது……….. அப்போது நாம் நிலவின் அந்த இடத்திற்கு சிவசக்தி என்று பெயரிட்டோம். நிலவின் அந்த முக்கியமான பாகம், இனி சிவசக்தி என்ற பெயரால் அடையாளம் காணப்படும்.
நண்பர்களே, எந்த பொருளாதார, போர்த்திற உன்னத உயரங்களை பாரதம் தொட்டதோ, அவை இன்றும்கூட நமது கருத்தூக்கங்கள். இராஜராஜ சோழன் ஒரு சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். இராஜேந்திர சோழன் இதை மேலும் உறுதிப்படுத்தினார்.
அவருடைய காலகட்டத்தில் பல்வேறு நிர்வாக மேம்பாடுகள் புரியப்பட்டன. அவர் உள்ளூர் நிர்வாக அமைப்பினை சக்தியுடையதாக ஆக்கினார். ஒரு பலமான நிதிவழிமுறையை அமல் செய்தார். வியாபார உயர்வு…. கடல்மார்க்கங்களின் பயன்பாடு…… கலை மற்றும் கலாச்சாரத்தின் பிரச்சாரம்…….. பாரதம் அனைத்துத் திசைகளிலும் விரைவாக முன்னேறிக் கொண்டிருந்தது.
நண்பர்களே, சோழ சாம்ராஜ்ஜியம், புதிய பாரதத்தின் நிர்மாணத்திற்கான, பழமையான சாலை வரைபடம் போன்றது. நாம் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க வேண்டுமென்றால், நாம் ஒற்றுமையின் மீது அழுத்தம் அளிக்க வேண்டும். நாம் நமது கடற்படையினை, நமது பாதுகாப்புப் படைகளை பலமுள்ளவையாக ஆக்க வேண்டும். நாம் புதிய சந்தர்ப்பங்களைத் தேடிக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் இவை அனைத்தோடு கூடவே, நமது விழுமியங்களையும் நன்கு பாதுகாத்துப் பேண வேண்டும். இன்று தேசம், இந்த உத்வேகத்தைத் தாங்கி முன்னேறி வருகின்றது என்பது எனக்கு பேருவகையை அளிக்கிறது.
நண்பர்களே, இன்றைய பாரதம், தனது பாதுகாப்பை அனைத்தையும்விடப் பெரியதாகக் கருதுகிறது. யாராவது பாரதத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீது தாக்குதல் தொடுத்தால், பாரதம் எப்படிப்பட்ட பதிலடியைக் கொடுக்கும் என்பதை, ஆப்பரேஷன் சிந்தூரின் போது உலகமே கவனித்தது. பாரதத்தின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் எந்தவொரு மறைவிடமும் பாதுகாப்பானது கிடையாது என்பதை ஆப்பரேஷன் சிந்தூர் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
நண்பர்களே, இராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணம் செய்தாலும், அதனுடைய கோபுரத்தை, தஞ்சாவூர் பிருஹதீஸ்வரர் ஆலய கோபுரத்தை விடக் குறைவானதாக வைத்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தனது தந்தையாரால் கட்டியெழுப்பப்பட்ட ஆலயத்தின் கோபுரத்தை அனைத்தையும் விட உயரமானதாக தக்கவைக்கவே அவர் விரும்பினார். தனது மகத்துவத்திற்கு இடையேயும் கூட, இராஜேந்திர சோழன் மிகுந்த பணிவை வெளிப்படுத்தினார்.
இன்றைய புதிய பாரதம், இதே உணர்வின் ஆதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாம் தொடர்ந்து பலமடைந்து கொண்டிருக்கிறோம் என்றாலும் கூட, நமது உணர்வுகள் உலகத்தின் நண்பனுடையவை, உலகநலனுக்கானவை.
நண்பர்களே, நம்முடைய பாரம்பரியத்தின் மீது பெருமித உணர்வை முன்னெடுக்கும் வேளையில், இன்று இங்கு மேலும் ஒரு உறுதிப்பாட்டை நான் எடுத்துக் கொள்கிறேன். வரவிருக்கும் காலத்தில் நாம் தமிழ்நாட்டிலே இராஜராஜ சோழன், அவருடைய மகனும், மகத்தன ஆட்சியாளருமான முதலாம் இராஜேந்திர சோழனுடைய பிரமாதமான உருவச்சிலையை நிர்மாணம் செய்வோம். இந்த உருவச்சிலைகள், நமது வரலாற்று விழிப்புணர்வின் நவீன கொடிமரங்களாகும்.
நண்பர்களே, இன்று டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவுதினம். வளர்ச்சியடைந்த பாரதத்திற்குத் தலைமை தாங்க, டாக்டர் கலம்….. சோழப் பேரரசர்களைப் போன்று, இலட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை. சக்தியும், பக்தியும் நிறைந்த இப்படிப்பட்ட இளைஞர்கள், 140 கோடி நாட்டுமக்களின் கனவுகளை நிறைவேற்றுவார்கள். நாமனைவரும் இணைந்து, ஒரே பாரதம், உன்னத பாரதத்திற்கான உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்வோம். இந்த உணர்வோடு கூடவே, மீண்டுமொருமுறை, இன்று இந்த வேளையிலே உங்களனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலப்பல நன்றிகள்.
வணக்கம். இன்று கார்கில் வெற்றித் திருநாள். நான் முதன்மையாக கார்கில் வீரர்களுக்குத் தலை வணங்குகிறேன், உயிர்த்தியாகிகளுக்கு என் சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்.
நண்பர்களே, நான்கு நாட்கள் அயல்நாடுகள் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு…… பகவான் இராமேஸ்வரனுடைய புனிதமான மண்ணில் நேரடியாக கால் பதிக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. அயல்நாடுகள் பயணத்தின் போது, பாரதம் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே வரலாற்றுப்பூர்வமான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
பாரதம் மீது உலகின் அதிகரித்துவரும் நம்பிக்கை, பாரதத்தின் புதிய தன்னம்பிக்கை ஆகியவற்றின் அடையாளம் இது. இந்த தன்னம்பிக்கையோடு நாம், வளர்ச்சியடைந்த பாரதத்தைப் படைப்போம்…… வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
இன்றும்கூட, பகவான் இராமேஸ்வரன், அறுபடைவீட்டின் இரண்டாம் படைவீடாம் திருச்செந்தி நகருறையும் செந்தூர் முருகன் ஆகிய தெய்வங்களின் நல்லாசியோடு, தூத்துக்குடியில் வளர்ச்சிப்பணிகளின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு தமிழ்நாட்டை வளர்ச்சியின் சிகரங்களுக்குக் கொண்டு செல்லும் குறிக்கோள் தொடங்கப்பட்டது…… தொடர்ந்து அதன் சாட்சியாக தூத்துக்குடி ஆகிக் கொண்டிருக்கிறது.
நண்பர்களே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் இங்கே வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வெளிப்புற துறைமுக சரக்குப்பெட்டி முனையத்திற்கான அடிக்கல் நாட்டினேன். பல நூற்றுக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள திட்டங்களை அப்போது தான் தொடக்கி வைத்தேன். செப்டம்பரிலே புதிய தூத்துக்குடி சர்வதேச சரக்குப்பெட்டி முனையத்தை குடிமக்களுக்கு அர்ப்பணித்து வைத்தேன்.
இன்று ஒரே முறையிலேயே, 4,800 கோடி ரூபாய் பெறுமானமுள்ள திட்டங்கள் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படவும் இருக்கின்றன, அடிக்கல் நாட்டப்படவும் இருக்கின்றன. இவற்றில் விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் ரயில்வே துறையின் திட்டங்களோடு, எரிசக்தித் துறைசார்ந்த முக்கியமான முன்னெடுப்புகள் இருக்கின்றன. நான் உங்கள் அனைவருக்கும், தமிழ்நாட்டின் மக்களுக்கும் இதன் பொருட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி…… இவை எந்த ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பு போன்றவை. இந்த பதினோரு ஆண்டுகளில், உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் துறைகளின் மீது நமது முனைப்பான கவனம் நமக்கு என்ன தெரிவிக்கிறது என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சி நமக்கு எத்தனை முதன்மையானது என்பதைத் தான். இன்றைய அனைத்துத் திட்டங்களும், இணைப்புத்திறன், மாசேற்படுத்தா எரிசக்தி மற்றும் புதிய வாய்ப்புகள் ஆகியவற்றின் மையப்புள்ளியாக, தூத்துக்குடியையும், தமிழ்நாட்டையும் உருவாக்கும்.
நண்பர்களே, தமிழ்நாடு மற்றும் தூத்துக்குடியின் மண்ணும், இங்கிருக்கும் மக்களும், பலநூற்றாண்டுக்காலமாக, பல நூற்றாண்டுகளாக தன்னிறைவான, சக்திபடைத்த பாரதத்திற்காகத் தங்களுடைய பங்களிப்பை அளித்து வந்திருக்கிறார்கள். இதே மண்ணில் தான் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களைப் போன்ற தொலைநோக்காளர்கள் தோன்றினார்கள். அடிமைப்பட்டிருந்த காலத்திலேயே கூட, கடல்வழி வாணிபத்தின் சக்தியைப் புரிந்தவர் அவர்….. ஆழ்கடல்களின் மீது சுதேசிக் கப்பலைச் செலுத்தி, ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டவர் வ.உ.சி அவர்கள்.
இந்த மண்ணில் தான், வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துக்கோன் போன்ற மாமனிதர்கள், சுதந்திரமான, வல்லமைமிகு பாரதம் படைக்கும் கனவைக் காணச் செய்தார்கள்.
சுப்பிரமணிய பாரதி போன்ற தேசியக்கவியும் கூட இங்கே அருகே தான் பிறந்தார். நீங்கள் அனைவரும் அறிவீர்கள்……. சுப்பிரமணிய பாரதிக்கு எத்தனை பலமான உறவு தூத்துக்குடியோடு இருக்கிறதோ, அதே அளவு பலமான உறவு என்னுடைய நாடாளுமன்றத் தொகுதியான காசியோடும் இருக்கிறது. காசி தமிழ் சங்கமம் போன்ற ஏற்பாடுகள் வாயிலாக நமது கலாச்சார மரபுகளை, நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்திக் கொண்டு வருகிறோம்.
நண்பர்களே, கடந்த ஆண்டு தான், நான் தூத்துக்குடியின் பிரபலமான முத்துக்களை, பில் கேட்ஸுக்கு பரிசாக அளித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவருக்கு அந்த நல்முத்துக்கள் மிகவும் பிடித்திருந்தது. நமது பாண்டிநாட்டு முத்துக்கள்….. ஒருகாலத்தில் உலகம் முழுவதிலும் பாரதத்தின் பொருளாதார சக்தியின் அடையாளமாக இருந்து வந்தது.
நண்பர்களே, இன்று நாம் நமது முயற்சிகளின் காரணமாக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கினை முன்னெடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம். பிரிட்டன் மற்றும் பாரதத்திற்கு இடையே நடந்த FTA, தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் கூட, இந்த தொலைநோக்கிற்கு வேகம் அளிக்கிறது.
இன்று பாரதத்தின் வளர்ச்சியிலே….. உலகம் தனது வளர்ச்சியைக் காண்கிறது. இந்த ஒப்பந்தமும் கூட, பாரதத்தின் பொருளாதாரத்திற்குப் புதிய பலத்தை அளிக்கும். இதனால், உலகத்தின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஆகும் நமது வேகம் இன்னும் விரைவாகும்.
நண்பர்களே, இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பிரிட்டனில் விற்பனையாகும் 99 சதவீத பாரதநாட்டுப் பொருட்களின் மீது எந்தவொரு வரியும் விதிக்கப்படாது. பிரிட்டனில் பாரதநாட்டுப் பொருட்கள் விலைமலிவானவையாக இருக்கும், அங்கே அவற்றுக்கான தேவை அதிகரிக்கும், அதே வேளையில் இங்கே பாரதத்திலே அந்தப் பொருட்களை உருவாக்க அதிக வாய்ப்புகள் உருவாகும்.
நண்பர்களே, பாரதம்-பிரிட்டன் நாடுகளின் தடையில்லா வணிக ஒப்பந்தம்….. நம் நாட்டு இளைஞர்களுக்கு, நமது சிறுகுறுநடுத்தரத் தொழில்துறைக்கு, நம்முடைய ஸ்டார்ட் அப்புகளுக்கு மிகுந்த ஆதாயத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இதனால் தொழில்துறையாகட்டும், நமது மீனவர்களாகட்டும், அல்லது ஆய்வுகள் மற்றும் புதுமைகள் படைத்தலாகட்டும், அனைவருக்கும் ஆதாயங்கள் ஏற்படும்.
நண்பர்களே, இன்று மேக் இன் இண்டியா, இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் மிஷன் மேனுஃபேக்சரிங், இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்துக்கும் பாரத அரசு அதிக வலு சேர்க்கிறது. ஆப்பரேஷன் சிந்தூரின் போது, இந்தியாவில் தயாரிப்போம் குறிக்கோளின் பலத்தைக் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதிகளின் பதுங்கு இடங்களை மண்ணோடு மண்ணாக்கியதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களினி பெரும் பங்களிப்பு இருந்தது. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், இன்றும் கூட, பயங்கரவாதத்தை ஆதரித்தவர்களைத் தூங்க விடாமல் செய்திருக்கிறது.
நண்பர்களே, நமது தமிழ்நாட்டின் ஆற்றல்வளத்தை முழுமையாகப் பயன்படுத்த, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்தும் முயற்சிகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிலே நாங்கள் துறைமுகக் கட்டமைப்பை உயர்தொழில்நுட்பம் உடையதாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். இதோடு கூடவே, விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே துறை ஆகியவற்றுக்கு இடையேயும் கூட, பரஸ்பர ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம்.
இன்று தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட முனையத்தின் தொடக்க விழா இந்தத் திசையில் மேலும் ஒரு பெரிய முன்னெடுப்பாகும். 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த முனையம் இப்போது, ஒவ்வோர் ஆண்டும், 20 இலட்சத்திற்கும் அதிகமான பயணிகளை வரவேற்கும். முன்பு, ஆண்டுக்கு வெறும் மூன்று இலட்சம் பயணிகளை மட்டும் கையாளும் திறன் கொண்டதாக இருந்தது இது.
நண்பர்களே, வரவிருக்கும் காலத்தில், தேசதின் மேலும் பல வழிகள் வரை தூத்துக்குடியின் இணைப்பு அதிகரிக்கும், அப்போது இங்கிருக்கும் வியாபாரத்துக்கும், தொழில்களுக்கும் ஊக்கம் கிடைக்கும். தமிழ்நாட்டின் பெருநிறுவன பயணங்கள், கல்வித்துறை மையங்கள், உடல்நல கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இதனால் ஆதாயங்கள் உருவாகும். இதோடு கூடவே, இந்தப் பகுதியில் சுற்றுலாவுக்கான சாத்தியக்கூறுகளுக்கும் புதிய ஆற்றல் கிடைக்கும்.
நண்பர்களே, இன்று நாம் தமிழ்நாட்டின் இரண்டு பெரிய சாலை கட்டமைப்புகளையும் கூட மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறோம். கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தச் சாலைகள், இரண்டு பெரிய வளர்ச்சிப் பகுதிகளை சென்னையோடு இணைக்க இருக்கின்றன. இந்தச் சாலைகள், டெல்டா மாவட்டங்களைச் சென்னையோடு சிறப்பாக இணைக்கும் பணியை ஆற்றும்.
நண்பர்களே, இந்தத் திட்டங்களின் உதவியோடு, தூத்துக்குடி துறைமுகத்தின் இணைப்பும் கூட, இன்னும் சிறப்பாக ஆகியிருக்கிறது. இந்தச் சாலைகள், இந்த மொத்தப் பகுதியின், வாழ்க்கையைச் சுலபமாக வாழும் தன்மையை மேலும் சிறப்படையச் செய்யும். இதுகூடவே, வர்த்தகம், வேலைவாய்ப்புக்குமான புதிய பாதையும் திறக்கும்.
நண்பர்களே, நமது அரசாங்கம், தேசத்தின் ரயில்வே துறையை தொழில்துறை வளர்ச்சி மற்றும் தற்சார்பு பாரதத்தின் உயிர்நாடியாக கருதுகிறது. ஆகையால் தான், கடந்த 11 ஆண்டுகளிலே, தேசத்தின் ரயில்வேதுறைக் கட்டமைப்பு நவீனமயமாக்கம் என்ற புதிய போக்கைக் கடந்து வருகிறது. தமிழ்நாட்டின் ரயில்வே துறை கட்டமைப்பு, நவீனமயமாக்கல் இயக்கத்தின் ஒரு முக்கியமான மையமாகும்.
நமது அரசாங்கம் அமுத பாரதம் நிலையங்கள் திட்டத்தின்படி, தமிழ்நாட்டின் 77 நிலையங்களின் மறுமேம்பாட்டை மேற்கொண்டு வருகிறது. நவீன வந்தே பாரத் ரயில்கள் வரிசையில், தமிழ்நாட்டினி மக்களுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்து வருகிறது. தேசத்தின் முதல் மற்றும் தனித்தன்மை வாய்ந்த செங்குத்து தூக்கு ரயில் பாலமான பாம்பன் பாலமும் கூட, தமிழ்நாட்டில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாம்பன் பாலத்தால் வியாபாரம் செய்வதில் சுலபத்தன்மை மற்றும் பயணிப்பதில் சுலபத்தன்மை இரண்டுமே அதிகரித்திருக்கிறது.
நண்பர்களே இன்று தேசத்தில் மிகப்பெரிய மற்றும் நவீன கட்டமைப்புகளை மேம்படுத்தும் மாபெரும் வேள்வி நடைபெற்று வருகிறது. சில நாட்கள் முன்பாகத் தொடங்கப்பட்ட ஜம்மு கஷ்மீரத்தின் சினாப் பாலம், பொறியியல் அற்புதமாக கருதப்படுகிறது. இந்தப் பாலம் காரணமாக முதன்முறையாக ஜம்மு பகுதி, ஸ்ரீநகரோடு இணைக்கப்பட்டது.
இதைத் தவிர தேசத்தின் மிகவும் நீளமான பாலம் அடல் பாலம் உருவாக்கப்பட்டது….. அசாமிலே போகிபீல் பாலம் கட்டப்பட்டது. 7 கிலோம்கீட்டருக்கும் அதிக நீளம் ஆன சோன்மர்க் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டது…. இப்படி எத்தனையோ திட்டங்களை பாரத அரசு நிறைவேற்றி இருக்கிறது. இவை அனைத்தும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்திருக்கிறது.
நண்பர்களே, இன்றும்கூட, தமிழ்நாட்டிற்காக நாம் எந்த ரயில்துறைத் திட்டங்களை அர்ப்பணித்திருக்கிறோமோ, இவற்றால் தென் தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆதாயங்கள் ஏற்படும். மதுரை-போடிநாயக்கனூர் வழிப்பாதை மின்மயமாக்கப்பட்ட பிறகு இப்போது, இங்கே வந்தே பாரத் போன்ற ரயில்கள் பய்ணிக்கும் பாதை திறக்கப்பட்டு விட்டது. இந்த ரயில்வே திட்டங்கள் தமிழ்நாட்டின் வேகத்தை…. மற்றும் அதன் வளர்ச்சியின் வீச்சு இரண்டுக்குமே……….. ஒரு புதிய சக்தியை அளிக்க இருக்கிறது.
நண்பர்களே, இன்று இங்கே 2000 மெகாவாட் கூடங்குளம் அணுமின்சக்தித் திட்டத்திலிருந்து மின்சாரத்தைக் கொண்டு செல்லும் திட்டங்களுக்கான அடித்தளமும் நாட்டப்பட்டது. சுமார் 550 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகிவரும் இந்த அமைப்பு, வரவிருக்கும் ஆண்டுகளில் தேசத்திற்குத் தூய்மையான எரிசக்தியை அளிக்கும் பெரிய பங்களிப்பை ஆற்ற இருக்கிறது.
இந்த எரிசக்தி, பாரதத்தை உலக எரிசக்தி இலக்குகளையும், சுற்றுச்சூழல் உறுதிப்பாடுகளையும் நிறைவேற்றும் ஊடகமாக ஆகும். மின்சாரதி தயாரிப்பு அதிகரிக்கும் போது, தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு, உள்ளூர் நுகர்வோர் ஆகிய அனைவருக்கும் இதனால் இலாபம் ஏற்படும்.
நண்பர்களே, தமிழ்நாட்டில் பிரதம மந்திர் சூரியசக்தி வீடு இலவச மின்னாற்றல் திட்டமும் கூட, விரைவான கதியிலே செயல்பட்டு வருகின்றது. இதுவரை சுமார் ஒரு இலட்சம் விண்ணப்பங்கள் வந்து விட்டன, 40,000 சூரியசக்தி கூரை மீதான கருவிகள் பொருத்தப்பட்டு விட்டன. இந்தத் திட்டம் இலவசமானது, மாசேற்படுத்தா மின்சக்தியை அளிப்பது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
நண்பர்களே, தமிழ்நாட்டின் வளர்ச்சி, மேம்பட்ட தமிழ்நாடு என்ற கனவு….. இவை நமது முக்கியமான உறுதியாகும். நாங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கே தொடர்ந்து முதன்மையை அளித்து வந்திருக்கிறோம்.
கடந்த தசாப்தத்திலே, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு என்ற வகையிலே தமிழ்நாட்டிற்கு 3 இலட்சம் கோடி ரூபாயை அனுப்பியிருக்கிறது. இந்தத் தொகை, கடந்த யுபிஏ அரசாங்கம் வாயிலாக அளிக்கப்பட்ட தொகையோடு ஒப்பீடு செய்யும் போது மூன்று மடங்குக்கும் அதிகமானது.
இந்தப் பதினோரு ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பதினோரு புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைத்திருக்கின்றன. முதன்முறையாக, கரையோரப் பகுதிகளின் மீன்பிடித் துறையோடு தொடர்புடைய சமூகங்களுக்கு, எந்தவொரு அரசும் இத்தனை கரிசனத்தையும், அக்கறையையும் வெளிப்படுத்தியதில்லை. நீலப் புரட்சி வாயிலாக நாங்கள் கரையோரப் பொருளாதாரத்திற்கு விரிவாக்கம் அளித்து வருகிறோம்.
நண்பர்களே, தூத்துக்குடியின் இந்த மண், ஒரு புதிய புரட்சியின் சாட்சியாக ஆகிவருகிறது. இணைப்பு, மின்பரிமாற்றம், கட்டமைப்பு என இந்த அனைத்துத் திட்டங்களும், வளர்ச்சியடைந்த தமிழ்நாடு-வளர்ச்சியடைந்த பாரதத்தின் பலம்வாய்ந்த ஆதாரங்களாக ஆகவிருக்கின்றன. நான் மீண்டுமொரு முறை, தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும், இந்த அனைத்துத் திட்டங்களுக்குமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலப்பல நன்றிகள்.
பிரதமர் நரேந்திர மோடியின் உரை தமிழில் மொழிபெயர்த்து குரல் கொடுத்தவர்: ராமஸ்வாமி சுதர்ஸன்
பாரத தேசத்தின் மீது தாக்குதல் நடத்த நினைப்பவர்கள் ஹிந்துக்களின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இதனைத் தெளிவாக அறிய முடிகிறது. பாரத தேசத்தின் வளர்ச்சியை சகித்துக் கொள்ள விரும்பாத தேசத்துரோகிகள் வளர்ச்சிக்குக் காரணமானவர்களை ‘ஹிந்துத்துவர்கள்’ என்று முத்திரை குத்தி கலவரம் விளைவிக்கிறார்கள்.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக அனைத்து மதங்களுக்கும், குலங்களுக்கும், ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் பாரத தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் பயன்படும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பார்த்து வருகிறோம். பகை நாடுகளுக்குச் சரியான புத்தி புகட்டிவரும் அதே வேளையில், ‘எங்களுடையது முன்னேறிய நாடு’ என்று வல்லரசுகளுக்கு உறுதியாக எடுத்துக் கூறும் துணிச்சல் நிறைந்த பாரதத்தை கவனித்து வருகிறோம். இப்படிப்பட்ட உயர்வுக்குக் காரணமான தலைமையை ‘ஹிந்துத்துவம்’ என்று குற்றம் சாட்டுவது இடதுசாரிகளுக்கும், எதிர்கட்சி அரசியல் வாதிகளுக்கும் வழக்கமாகி விட்டது. உண்மையில் முன்னேற்றமே ‘ஹிந்துத்துவம்’ என்றால், பாரத தேசம் ஹிந்துத்துவ தேசமாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவோம்.
சுதந்திரத்திற்கு முன்பு மட்டுமின்றி, சுதந்திரம் கிடைத்த பின்னரும் கூட வஞ்சனைக்கும் வன்முறைக்கும் ஆளானது ஹிந்து மதமே. அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் வெளிவந்த ‘சங்கூர் பாபா’ வழக்கு நம் தேசத்தில் மதமாற்றக் கும்பலின் கொடூரம் பல பத்தாண்டுகளாக எத்தனை ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைத் தெளிவாக்குகிறது.
ஹிந்து பாபாக்களின் வேடத்திலும், பக்தர்களின் வேடத்திலும் பிற மதத்தவர் செய்யும் சதித் திட்டங்களும், வன்முறைக் கொடூரங்களும், வியூகங்களும் ஹிந்துக்களை மத மாற்றம் செய்வதும், பாரத தேசத்தைத் துண்டாடுவதுமே அவர்களின் இலக்காக இருப்பதைப் பறை சாற்றுகின்றன. பொறுமையும், சமரசமும், இணைந்து வாழ்வதும் இயல்பாகக் கொண்ட ஹிந்துக்களின் உதார குணத்தையும், அப்பாவித்தனத்தையும் அந்தத் தீயவர்களான துஷ்டர்கள் வாய்ப்புகளாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஹிந்துக்களின் ஊர்வலங்களில் கல்லெறிவது, பக்தர்கள் காவடிகளைச் சுமந்து காலில் செருப்பின்று நடந்து செல்லும் பாதையில் கண்ணடித் துண்டுகளைப் போடுவது போன்ற தாக்குதல்கள் பாரத தேசத்தில் பல இடங்களில் நடந்து வருவதைக் காண முடிகிறது.
பங்களாதேஷிலும், பாகிஸ்தானிலும் ஹிந்துக்களின் மீது கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதேபோல், இந்தியாவின் மேற்கு வங்கம், காஷ்மீர், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஹிந்து விரோதிகளின் கொடுஞ்செயல்கள், தலைவிரித்தாடுகின்றன.
இச்செயல்கள் ஹிந்து மதத்தின் மீது மட்டுமின்றி பாரத தேசத்தைத் துண்டாடும் நோக்கதோடுதான் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் தேச ஒருமைப்பாடு ஹிந்துத்துவ கொள்கைகளால் மட்டுமே சாத்தியம் என்பது நிரூபணமாகிறது.
யோகம், தத்துவம், ஆயுர்வேதம், கலைகள், அமைதியான சுபாவம் போன்ற அற்புதங்கள் பலவற்றைத் தன்னில் கொண்டுள்ள ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்வது அர்த்தமற்றது. ஹிந்துக்களை ஜாதியின் பெயராலும் குலத்தின் பெயராலும் முன்பு பிரித்ததும், இன்று பிரிப்பதும் ஹிந்து விரோதிகளே.
அரசியல் ஆதாயத்திற்காக இன்று சில அரசியல் கட்சிகள் குலங்களையும் ஜாதிகளையும் கணக்கிட்டு மக்களைத் தூண்டி வருகின்றன. உயர்சாதியினரை மதமாற்றம் செய்தால் அதிகத் தொகை தருவதாகவும், பிற ஜாதியினரை மதம் மாற்றினால் குறைந்த தொகை தருவதாகவும் கூறி வேற்றுமை காட்டுவது மதமாற்றும் கும்பல்களே. இந்த உண்மைகள் ஹிந்து விரோதிகளின் கண்ணில் படவில்லை போலும்.
‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஹிந்து பெண்கள் வஞ்சிக்கப்பட்டு வரும் கசப்பான உண்மையை ஹிந்துக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்றே தோன்றுகிறது. ஹிந்துத்துவத்தோடு ஒன்றிணையாவிட்டால் தம் இருப்புக்கும் தேசத்தின் பாதுகாப்புக்கும் ஆபத்து விளையும் என்ற உண்மையை ஒவ்வொரு ஹிந்துவும் உணரவேண்டும்.
பாரத தேசத்தில் அமைதியையும், வளர்ச்சியையும் விரும்பும் பிற மதத்தவரும் ஹிந்துத்துவ கோட்பாட்டை விரும்ப வேண்டும். ஏனென்றால், இந்தக் கோட்பாட்டில் அவர்களுடைய மதத்தின் சுதந்திரமும் பாதுகாப்பும் வளர்ச்சியும் கூட அடங்கி உள்ளது என்ற உண்மை சற்று யோசித்தால் புரியவரும்.
பதவியும், அதிகாரமும் கிடைக்கவில்லை என்ற ஆத்திரம், கொள்ளையடிப்பதற்கும் அழிவுகளை ஏற்படுப்படுத்துவதற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இவையெல்லாம் சேர்ந்து ஹிந்துக்களின் மீது வெறுப்பாகவும், அரசாங்கத்தின் மீது பகையாகவும் வெளிப்படுகின்றன.
ஹிந்துத்துவ ஆட்சியாக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் போன்ற நேர்மையும் நீதியும் உள்ள மாநிலங்களில் வஞ்சகர்களும் தீவிரவாதிகளும் அடையாளம் காட்டப்படுவதும், ஊழல்வாதிகளின் ஆட்டம் அடங்கிப் போவதும், அனைத்து மத மக்களும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதும், வெளிப்படையாகவே காணமுடிகிறது.
இத்தனையும் பார்த்த பின்னரும் ‘ஹிந்து விரோதம்’ என்பது தேவைதானா? வளர்ச்சியை நோக்கி தேசத்தை நடத்தும் தலைமையின் மேல் குற்றம் சாட்டுவது விவேகம்தானா?
மதமாற்றம் என்பதையே அறியாமல், அமைதியையும் பொறுமையையும் இயல்பாக கொண்ட ஹிந்து மதத்தை விட உயர்ந்ததும் உண்மையானதும் உலகில் வேறொன்று உள்ளதா?
இங்கிலாந்து, மாலத்தீவு பயணம் முடிந்து நேராக தாய்நாட்டில் பிரதமர் மோடி! தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக வரும் பிரதமர் மோதி ஜியை தமிழகம் வரவேற்கிறது!
நேற்று மாலத்தீவில் பாரதத்தின் உதவியுடன் கட்டப்பட்ட பாதுகாப்பு அமைச்சக கட்டடத்தை மாலத்தீவு ஜனாதிபதி முய்சுவுடன் சேர்ந்து பாரதப் பிரதமர் திறந்து வைத்தார்!
‘கெட் அவுட் மோடி’ என்று ஆரம்பித்த முய்சு, சீனாவுக்கு சாமரம் வீசினார். பலனில்லை. துருக்கி எர்டோகனுக்கு சாமரம் வீசினார். பலனில்லை. முடிவில் ‘கெட் அவுட் மோடி’ என்ற வாசகம் ‘வெல்கம் மோடி’ என்று ஆகியிருக்கிறது.
ஏற்கனவே ருபே கார்டுகளை ஏற்று வந்த மாலத்தீவு இனி இந்திய ரூபாயை ஏற்கும் என்கிறார்கள். இலங்கையிலும் அதே நிலைமை – இந்திய ரூபாய்க்கு வரவேற்பு.
நேபாளத்தில் கோவிலுக்குள் மாற்று மத மைனோவை அனுமதிக்காததால், நேபாளத்துடனான உறவைக் கெடுத்த பிரதமர் ராஜீவ் காந்தி. இன்று நேபாளம் கம்யூனிச நாடு. பாக் – சீன ஆதரவு நாடு ஆகியிருக்கிறது. பாரதத்துக்கு தலைவலியாக இருக்கிறது நேபாளம்.
அதே வேளையில், தன்னை அவமதித்த மாலத்தீவு எந்த துவேஷம் பாராட்டாமல், அந்த நாட்டை சீன – பாக் – துருக்கி வலையில் விழாமல் மீண்டும் பாரதத்தின் பக்கம் கொண்டு வந்திருக்கிறார் மோதிஜி.
இதனிடையே பிரதமர் மோடியை தமிழகத்துக்கு வரவேற்று சமூகத் தளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றன. அவற்றில் ஒன்று…
இன்று இங்கிலாந்து,மாலத்தீவு நாடுகளுக்கு சென்று சிறிதும் ஓய்வின்றி நாட்டு மக்களின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு கீழ் கண்ட திட்டங்களவு துவக்கி வைக்க/அடிக்கல் நாட்ட தமிழகம் வருகிறார் நமது மோடி ஜி அவர்கள்.
தூத்துக்குடி விமானநிலையம் ரூ.381 கோடி செலவில், சர்வதேச தரத்துக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1,350 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளம் தற்போது 3,115 மீட்டர் நீளமுள்ள ஓடுதளமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். இன்று 26-ஆம் தேதி தூத்துக்குடி வருகை தரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
இதுமட்டுமல்லாமல்,தமிழகத்தில், மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.
தஞ்சாவூர்விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் 2-ம் கட்டமான சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையில் ரூ.2,357 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டம்
ரூ.200 கோடி மதிப்பில் ஆறுவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ள தூத்துக்குடி துறைமுகச் சாலை
ரூ.99 கோடியில் மதுரை- போடிநாயக்கனூர் இடையே மின்மயமாக்கப்பட்டுள்ள ரயில் பாதை
ரூ.650 கோடியில் நாகர்கோவில் டவுன் – நாகர்கோவில் சந்திப்பு – கன்னியாகுமரி இடையிலான இரட்டை ரயில் பாதைரூ.283 கோடியில் ஆரல்வாய் மொழி – நாகர்கோவில் சந்திப்பு மற்றும் திருநெல்வேலி – மேலப்பாளையம் இடையிலான இரட்டை ரயில் பாதை என, சுமார் ரூ.4,800 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார்.
மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் அலகு-3 மற்றும் அலகு 4-ல் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக, ரூ.548 கோடியில் மின்பரிமாற்ற அமைப்புக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழகத்திற்கு, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பல கோடி ரூபாய் திட்டங்களை அள்ளித் தரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு, தமிழகமக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக தமிழகம் வரும் மாண்புமிகு பாரதப்பிரதமர் உலகம் போற்றும் உத்தமர் மோடிஜி அவர்களை தமிழக மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.!
இன்று தூத்துக்குடியில் பல்வேறு புதிய ரயில் திட்டங்களை துவக்கி வைக்கும் பிரதமர் சிறப்பு ரயில்களாக இயங்கும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருவனந்தபுரம் வடக்கு தாம்பரம் சிறப்பு ரயில்களை தினசரி ரயில்களாக நிரந்தரமாக இயக்க அறிவிப்பாரா என தென்மாவட்ட ரயில் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து, ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறார்.
தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் ரூ.452 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்காக மாலத்தீவில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில் இன்று இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பிரதமர் வருகிறார். அவருக்கு முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்த பின்னர், செட்டிநாடு கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலைய பயணிகள் முனையம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிடுகிறார்.
பின்னர், விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, தமிழகத்தில் ரயில்வே துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,032 கோடி மதிப்பிலான பணிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் முடிக்கப்பட்டுள்ள ரூ.2,557 கோடி மதிப்பிலான பணிகளை திறந்து வைக்கிறார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.548 கோடியில் 3 மற்றும் 4-வது உலையில் இருந்து மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மொத்தம் சுமார் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் தொடங்கிவைத்துப் பேசுகிறார்.
இந்த விழாவில் பிரதமர் பல்வேறு புதிய ரயில் திட்டங்களை துவக்கி வைப்பாரா என தென் மாவட்ட வரை பயணிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பல ஆண்டுகளாக வாரம் ஒரு முறை சிறப்பு ரயிலாக இயங்கும் விரைவு ரயில் தினசரி ரயிலாக நிரந்தரமாக இயக்க வேண்டும்.
திருவனந்தபுரம் வடக்கு முதல் தாம்பரம் வரை சிறப்பு ரயிலாக முதலில் வாரம் இரு முறை இயக்கப்பட்டு பிறகு வாரம் ஒரு நாளாக இயக்கப்பட்ட ரயில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலை பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கேரளா தென்காசி விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்த இந்த ரயில் நிரந்தரமாக தினசரி ரயிலாக இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த இரு ரயில்களையும் தினசரி ரயில்களாக இயக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் வர்த்தகர்கள் பொதுமக்கள் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் கொல்லம் திருநெல்வேலி கொல்லம் மதுரை இடையே புதிய மெமோ ரயில்களையும் இயக்கவும் கோட்டயத்தில் இருந்து கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் வழியாக ஈரோடு இயக்க உள்ள ரயிலை விரைவில் அறிவிக்கவும், ஏற்கனவே மீட்டர் கேஜ் வழித்தடத்தில் இயங்கிய கொல்லம் செங்கோட்டை கோயம்புத்தூர் தினசரி ரயிலை மீண்டும் இயக்கவும் ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தப் புதிய ரயில்களில் ஏதாவது ஒரு சில ரயில்கள் ஆவது இயக்கப்பட பிரதமர் முறைப்படியான அறிவிப்பை வெளியிடுவார் என்று பயணிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா ஐந்து கருட சேவையை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஆண்டாள்- ரெங்கமன்னார் மண்டபங்களுக்கு எழுந்தருள்கின்றனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஆண்டு தோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் கொடிப்பட்டம் மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு கருட கொடியேற்றம் நடைபெற்றது.
முதல் நாளன்று இரவு ஆண்டாள் ரெங்கமன்னார் 16 வண்டி சப்பரத்தில் 4 ரத வீதிகளில் உலா வந்தனர். ஜூலை 24-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் 5 கருட சேவையும், நடைபெற்றது . ஜூலை 26-ம் தேதி சயன சேவையும் ,28-ம் தேதி காலை 9:05 மணிக்கு முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.
வியாழன் அன்று நிகழ்ந்த ஐந்தாம் நாளில் காலை மங்களாசாசனம் இரவுஐந்து கருடசேவை நடந்தது. காலை 10 மணிக்கு பெரியாழ்வார் ஆடிப்பூர பந்தலுக்கு எழுந்தருள அங்கு சுந்தரராஜபெருமாள், ஸ்ரீனிவாசபெருமாள், திருத்தங்கால் அப்பன், ஆண்டாள்-ரெங்கமன்னார் ஆகியோருக்கு மங்களாசாசனம் நடந்தது.
மாலையில் அனைத்து பெருமாள்களுக்கும் நவகலச திருமஞ்சனம் நடந்தது. இரவு 10 மணிக்கு ஐந்துகருட சேவை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றுசுவாமி தரிசனம் செய்தனர்.தமிழகம் கேரளா ஆந்திரா மாநிலத்தில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வரும் திங்கட்கிழமை நடைபெறும் தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது