Home Blog Page 78

கெஞ்சும் டிரம்ப்; நகைக்கும் உலகம்!

modi and trump - 2026
#image_title

பூனைக் குட்டி வெளியே வந்தது.

கெடு நாளுக்கு ((9ஆம் தேதி)) ஒரு நாள் முன்பே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 25% வரிவிதிப்பிற்கு இடைக்கால தடை அறிவித்து அதனை ஆகஸ்டு முதல் நாள் வரை நீடித்து உத்தரவிட்டார்.

கூடுதலாக இம்முறை இந்த கெடு தேதியை எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யப்படாது என தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.

சிரிப்பாய் சிரித்து கொண்டு இருக்கிறார்கள் அங்கு. கோமாளி போல் ட்ரம்பை மாற்றி வைத்து பகடி செய்து கொண்டு வருகிறார்கள்.

ஆனாலும் அவர் அசரவில்லை
வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் மூலம் கெடு நாள் நீடிப்பு அறிவித்ததோடு கிட்டத்தட்ட பத்தொன்பது நாடுகளுக்கு தனித் தனியே கடிதமும் எழுதி இருப்பதாக சொல்கிறார்கள். அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை…….

உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் போன் மேல் போன் கால்கள் செய்து டொனால்ட் ட்ரம்ப்பிடம் மன்றாடி கெஞ்சி கேட்டு கொண்டு வருகிறார்கள் என செய்தி தொடர்பாளர் பொது வெளியில் செய்தி அறிக்கை வாசிக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

ஏனெனில் இது என்ன மாதிரியான வெளியுறவு கொள்கை மற்றும் ராஜாங்க நடவடிக்கை என சீற ஆரம்பித்து இருக்கிறார்கள் உலகின் பல நாடுகளில்…. கெஞ்சி கேட்கும் அளவிற்கு அவசியம் என்ன வந்தது எங்களுக்கு…. என வறுத்தெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் அவர்கள்.

அப்படியே அமெரிக்கா சொல்வது நிஜம் என்றால் எதற்காக கடிதம் எழுதி கேட்ட வேண்டும்…….. நாங்கள் கெஞ்சி கேட்கும் நிலையில் இருக்கும் போது…?என கேள்வி கேட்டு அதிரடித்து வருகிறார்கள்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக நீடிக்க லாயிக்கற்றவர். அவரால்….. அவரது நிர்வாக திறமை இன்மையால் பங்கு வர்த்தகத்தில் மூன்று ட்ரில்லியன் டாலர்களை இழக்க நேரிட்டுள்ளது. போதாகுறைக்கு 21 அமெரிக்க விமான நிலையங்களில் கொரோனாவிற்கு பிந்தைய காலத்தில் இதுவே பொது ஊரடங்கு போல் காத்தாடி வருகிறது. கனடாவிலோ அமெரிக்க பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுவதில்லை ….. மீறினால் அந்த வணிக நிறுவனத்தை கனேடிய பிரஜைகள் புறக்கணிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

கனடாவில் இருந்து சரக்கு போக்குவரத்து விமானங்கள் கூட வருவதில்லை… இதே நிலை தான் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் விமானச் சேவைகள் வெகுவாக குறைந்து வருகிறது என சுட்டி காட்டி வருகிறார்கள்.

செப்டம்பர் வரையிலான காலத்திற்கான பிஸினஸ் கிளாஸ் முன்பதிவுகள் பெருமளவு கான்சல் செய்து இருக்கிறார்கள் ஐரோப்பியர்கள்.

இதை ட்ரம்ப்….. சமீபத்திய நாட்களில் விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள் என பகடி செய்து கொண்டு நிற்கிறார் அவர்.

காலக் கெடு நீடிப்பு அறிவித்ததோடு சில பல நாடுகளுக்கு உண்டான வரி விகிதங்களில் சம்மந்தா சம்மந்தமில்லாத மாற்றமும் செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

அமெரிக்காவின் நெருங்கிய வட்டத்தில் உள்ள நாடுகளான தென் கொரியா, ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா, தைவானில் இவரது இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஏற்கனவே இவர் பதவிக்கு வந்த சமயத்தில்….. கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ்… லாஸ் வேகாஸ் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று வரை எந்த ஒரு நிதியுதவியோ அல்லது இன்சூரன்ஸ் இழப்பீடு தொகையோ கொடுக்கவில்லை என்கிற ரீதியிலான புகைச்சல் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் மழை வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டிடும் போல் உள்ள இந்த சூழ்நிலையில் சரியான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப் படவில்லை என பலரும் பொரும ஆரம்பித்து இருக்கிறார்கள்.

நம் இந்திய தேசம் கடந்த வாரத்திலேயே…. கெடு நாளுக்காக ஏதும் செய்வதாகயில்லை. இந்திய நலனே பிரதானம் என பகிரங்கமாக அறிவித்திருந்தது குறிப்பிட்டதக்கது.

அந்த வகையில் பார்த்தால்… டொனால்ட் ட்ரம்ப் இறங்கி வந்து இந்தியாவிடம் கெஞ்ச ஆரம்பித்து இருக்கிறார் என்பதாக இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

அமெரிக்கா இந்தியா இடையேயான இடைக்கால வர்த்தக உடன்படிக்கை எட்டப்படும் போல் தெரிகிறது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….. ஓவல் அலுவலக செய்தி குறிப்பும் அதையே ஊர்ஜிதம் செய்து இருக்கிறது. இந்தியா, பெரிய அளவில் இறங்கி வரும் வாய்ப்பு இனி இல்லை என்கிறார்கள் அவர்கள்.

டொனால்ட் ட்ரம்ப் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றிருக்கும் அவரது பிக் ப்யூட்டிபுல் பில்லில் ஏகப்பட்ட வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது இந்தியர்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது ட்ரம்ப் நிர்வாகம்.

பிறகு ஏன் இத்தனை அலப்பறை என கேள்வி கேட்டால் ஒருத்தரும் வாயே திறக்கவில்லை.

ஆக செம்மத்தையாக வாங்கிக் கட்டிக் கொண்டு ட்ரம்ப் வெளிப்பார்வைக்கு வீர வசனம் பேசுகிறார் என பலரும் அவரை சமூக வலைதளங்களில் கேலி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆக பிரிக்ஸ், அமெரிக்காவின் அடி மடியிலேயே கைவைத்து அசைத்து பார்த்து இருக்கிறது. இனி ஒவ்வொரு கல்லாய் பெயர்த்து எடுக்க வேண்டியது தான் பாக்கி. நம்மவர் சத்தமில்லாமல் சாதித்து காட்டி இருக்கிறார். அதற்கு இந்த கெடு நாள் நீடிப்பே கண் கண்ட சாட்சி.

வரும் நாட்களில்…. அதாவது இந்த இருபது நாட்களில் இடைக்கால வர்த்தக உடன்படிக்கை பற்றி செய்தி வரும். பின்னர் அது நம் இந்திய தேசத்திற்கு மட்டும் நிரந்தரமாக இருக்கும் போலிருக்கிறது. அமெரிக்க நிர்வாக குளறுபடிகளால் அதன் நட்பு வட்டத்தில் உள்ள நாடுகளே ட்ரம்ப்பை சாட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஆக…. கொஞ்சம் கொஞ்சமாக நம் இந்திய தேசத்தின் செல்வாக்கு சர்வதேச அளவில் ஓங்க ஆரம்பித்து விட்டது என இதனை புரிந்து கொள்ளலாம்.

வாழ்க பாரதம். வெல்லட்டும் எட்டு திக்கும், ஓங்கட்டும் அதன் புகழ்.

  • ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

ஸ்ரீசைலேச அவதாரத் திருநாள்!

IMG 20250709 WA0009 - 2026

இன்று ஆனி மூலம்: ஸ்ரீசைலேச அவதாரத் திருநாள்!

ஓராண்டுகாலம் திருவாய்மொழியின் ஆழ்பொருளை நம்பெருமாளுக்கு ஸ்ரீ மணவாளமாமுனிகள் விவரித்து அதற்கு நம்பெருமாள் தந்த பரிசான ஸ்ரீசைலேசத் தனியன் அவதரித்தது ப்ரமாதீச ஆண்டு ஆனி மாதம் மூல நக்ஷத்திரத்தில் (9-7-1433).
எம்பெருமானாரிடம் ஸச்சிஷ்யனாக நின்று மந்த்ரோப தேசம் பெற்றும், ‘ஸ்ரீவைஷ்ணவ நம்பி’ என்ற தாஸ்ய நாமம் பெற்று இருந்தும், ஆசார்யனுக்கு குருதக்ஷிணையாக ஒன்றும் ஸமர்ப்பிக்கவில்லையே என்றும், ஆழ்வார் முகேந அருளிச் செய்த திருவாய்மொழிக்கு (பகவத் விஷயம்) வ்யாக்யானங் களை, ஈட்டின் ஸ்ரீஸூக்திகளை கேட்க வில்லையே” என்றும் ஸ்ரீரங்கநாதன் திருவுள்ளத்திலே குறையிருந்தது.

ஆண்டுதோறும் திருவாய்மொழி பாசுரங்களை மட்டும் செவிசாய்த்து ஏற்று மகிழும் ஸ்ரீரங்கநாதன், அக்குறையையும் அர்ச்சாவதாரத்திலேயே தீர்த்துக் கொள்ள, எம்பெருமானாரின் புனரவதாரமாக அவதரித்து ஆசார்யபூர்த்தியுள்ள ‘பொய்யில்லாத மணவாள மாமுனி கள்’ என்கிறபடியே ஜ்ஞாநக்கடலாகவும், வழுவில்லா அநுஷ்டாநபரராயும் உள்ள பெரியஜீயர் (ஸ்ரீமணவாளமா முனிகள்) பக்கத்தில் அர்த்தித்து (யாசித்து) பகவத் விஷய மான ஈடுகேட்டருளத் (செவிசாய்த்தருள) திருவுள்ளங் கொண்டார்.

ஒரு சமயம் பரிதாபீ வருஷத்தில் திருப்பவித்ர உத்ஸவம் நடந்து கொண்டிருந்தது. சாற்றுமுறையன்று நம்பெருமாள் புறப்பட்டருளி, திருப்பவித்திர மண்டபத்திலே பாகவதப் பெருங்குழுவோடு எழுந்தருளியிருந்தார். அச் சமயம் அடியார்கள் குழாங்கள் சூழ மணவாளமாமுனிகள் பெருமாளை மங்களா சாஸநம் செய்ய அவ்விடம் எழுந் தருளினார். அணியரங்கன் திருமுற்றத்தடியார்கள், ஆசார்ய புருஷர்கள், ஜீயர்கள், ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைத்துக் கொத்துக்கும் அருளப்பாடு ஸாதித்தருளி (அர்ச்சகமுகேந கூவியழைத்தருளி) ஜீயரும் முதலிகளுடன் கூடப் பெருமாளை மங்களா சாஸநம் பண்ணியருளி, திருவாராதநம் முடிந்தபிறகு மணவாளமாமுனிகளைத் தனித்து அருள்பாடிட்டருளி ஸ்ரீசட கோபனையும் ஸாதித்தருளி, “நாளை முதல் நம்முடைய பெரிய திருமண்டபத்திலே (சந்தன மண்டபத்திலே) பெரிய வண் குருகூர்நம்பியான ஆழ்வாருடைய திருவாய்மொழிப் பொருளை ஈடு முப்பத்தாறாயிரத்துடனே நடத்தும்”, என்ன, ஜீயரும் பெருமகிழ்ச்சியுற்று, மறுநாளே தொடங்குவதாக விண்ணப்பித்து மடத்திற்கு எழுந்தருளினார்.

மறுநாள் நம்பெருமாள் நாச்சிமார்களுடனே புறப்பட்டருளி பெரியதிருமண்டபத்திலே திவ்ய ஸிம்ஹா ஸநத்திலே அமர்ந்து திவ்யகோஷ்டியை போரவுகந்து, அந்த கோஷ்டியை அந்தர்பூதராய் சேர்த்தியை அநுபவிக்கிற, அயர்வறுமமரர்களான திருவனந்தாழ்வான், பெரியதிருவடி (கருடாழ்வார்), ஸேநாபதியாழ்வான் (விஷ்வக்ஸேநர்) என்கிற நித்யயசூரிகளோடும் வைகுந்தத்து முனிவரான நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்கள் பதின்மரோடும், நாதமுனி, யதிவரர் முதலான ஆசார்யர்களனைவரோடும் ஸ்ரீரங்க நாராயணஜீயர், திருமலைதந்தபட்டர் தொடக்கமானாரோ டும், அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்களின்பமிகு பெருங்குழுவோடும் கூடப் பேரோலக்கமாக (மஹா ஸபையாக) எழுந்தருளியிருக்க, பெரிய ஜீயராகிய மணவாள மாமுனிகள் எழுந்தருளிக் காலக்ஷேபம் ஸாதித்தருளத் தொடங் கினர். இவ்வாறு பேரோலக்கமாக இருந்து நம்பெருமாள் பத்துமாத காலம் திருவாய் மொழியின் ஆழ்பொருளைக் கேட்டருளினார்.

திருவாய்மொழி விரிவுரை முடிவுற்ற நாளன்று நம்பெருமாள் நாச்சிமார்களுடனும், நித்யசூரிகளுடனும், ஆழ்வார்கள் பதின்மருடனும் கூடிப்பெரிய குழுவாக பெரிய திருமண்டபத்திலே எழுந்தருளியிருக்க சாற்றுமுறையும் நடை பெற்றது.
நம்பெருமாளும் ஜீயரிடம் கொண்ட அளவுகடந்த மகிழ்ச்சியால் திவ்யப்பிரபந்தம் மற்றும் அதன் வ்யாக்யான வைபவங்களையும் ஜீயருடைய வைபவங்களையும் ப்ரகாசஞ் செய்தருளவேணுமென்றும் தாம் அநுஷ்டித்துக் காட்டவேணு மென்றும் திருவுள்ளமாய் ஜீயருக்கு ஆசார்ய ஸம்பா வனையாக, சில த்ரவ்யங்களும் ஏல லவங்க கர்ப்பூராதிகளும், திருப்பரியட்டங்களும் தாம்பூலமும் பழங்களும் ஸமர்ப் பிக்க, அழகியமணவாளபட்டர் என்ற திருநாமத்தையுடைய அர்ச்சக ருடைய குமாரராய், ஐந்து வயதுடைய ‘ரங்க நாயகம்’ என்கிற திருநாமத்தையுடையரான சிறுபிள்ளை, ஸம்பா வனைத் தட்டுக்களுக்கும் நம்பெருமாளுக் கும் நடுவே வந்து நின்றான்.
பெரியோர்கள், குழந்தை இடையே நிற்கின்றதே என்று அப்பாற்கொண்டு விட்டனர். அப்பாலே விட விட மறுபடியும் மறுபடியும் அங்கே வந்து நின்றான். கோஷ் டியினர் அக்குழந்தையைப் பார்த்து “நீர் நிற்கிற கார்யமே” தென்ன, அக்குழந்தை மாமுனிகளின் பக்கமாகக் கைகளைக் கூப்பிக் கொண்டு பயப்படாமல் ‘ ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்’ என்ன, பின்னுமே தென்ன, “யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்” என்று சொல்லி ஓடிப்போக பெரியோர்களெல்லோரும் ஆச்சர்யப்பட்டு இந்த ஸ்லோகத் தைப் பட்டோலைக் கொண்டு மஞ்சட்காப்புச் சாற்றி பெரிய பெருமாள் திருவடிகளில் சேர்ப்பித்து ரங்கநாயகத்தை வெகு வாகக் கொண்டாடினர். அழகியமணவாள பட்டருடைய குமாரரான ரங்கநாயகத்திடம் இதுபற்றிக்கேட்க அந்தக் குழந்தை தனக்கேதும் தெரியாதென்று பதிலளிக்க அனை வரும் நம்பெருமாளே ரங்கநாயகனாகிய குழந்தைவடிவில் வந்து இந்தத் தனியனை அருளிச்செய்தாரென்று அறுதி யிட்டனர்.

பெரியபெருமாளும் உகந்தருளி அவரை க்ருபை பண்ணியருளி, வரிசைகளும் ஸாதித்து, உடனே திருமலை, பெருமாள் கோயில் தொடக்கமான திருப்பதிகளுக்கு எல்லாம், ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் – யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்” என்று அநுஸந் தித்துத் தொடங்கவும், ப்ரபந்தம் சாற்றி, “வாழி திருவாய் மொழிப்பிள்ளை” என்று தொடங்கி “மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்” என்று அநுஸந்தித்துத் தலைக்கட்டவும் என்று ஜீயருக்கு ஸம்பாவனையுஞ் செய்தருளி வரிசையுடன் மடத்திற்கு அனுப்பியருளினார்.

583 ஆண்டுகளாக இந்தத் தனியன் அவதார உத்ஸவம் ஸ்ரீமணவாளமாமுனிகள் ஸந்நிதியில் நடைபெறுகிறது. அன்று மாலை ஸந்நிதியில், ஸந்நிதி ஆதீன கர்த்தரால் அப் பிள்ளார் அருளிச்செய்த ஸம்ப்ரதாய சந்திரிகை, பரவாதி கேசரியார் அருளிச்செய்த ஸ்ரீ சைல வைபவம் ஆகியவை ஸேவிக்கப்படும்.

  1. நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில்
    நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்,
    சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
    தொல்கிழமை வளர்பக்கம் நாலாம் நாளில்,
    செல்வம்மிகு பெரியதிரு மண்டபத்தில்
    செழுந்திருவாய் மொழிபொருளைச் செப்பும் என்று,
    வல்லியுறை மணவாளர் அரங்கர் நங்கள்
    மணவாள மாமுனிக்கு வழங்கினாரே.
  2. ஆனந்த வருடத்தின் கீழ்மை ஆண்டில் (ப்ரமாதீச)
    அழகான ஆனிதனின் மூலநாளில்,
    பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
    பௌரணையின் நாளிட்டுப் பொருந்தி வைத்தே,
    ஆனந்த மயமான மண்டபத்தில்
    அழகாக மணவாளர் ஈடு சாத்தி,
    வானவரும் நீர்இட்ட வழக்கே என்ன
    மணவாள மாமுனிகள் களித்திட்டாரே.

என்று மணவாளமாமுனிகள் விஷயமாக இந்தத் தனியன் அவதரித்த வைபவம், அப்பிள்ளார் அருளிச்செய்த ஸம்ப்ரதாய சந்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னோர் பெயரில் உள்ள பட்டாக்களை மாற்ற சிறப்பு முகாம்!

Dhinasari Home page

காரியாபட்டி வட்டார விவசாயிகள் தங்களின் முன்னோர் பெயரில் உள்ள பட்டா பெயர் மாற்றம் செய்ய ஜூலை 9-ல் தாசில்தார் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறதுஎன, காரியாபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் கீதா தெரிவித்துள்ளார்.

காரியாபட்டி வட்டாரத்தில் ,வேளாண் அடுக்குத் திட்டத்தில் விவசாயிகளின் நிலை உடமை விவரங்கள் வேளாண் துறை தோட்டக்கலை துறை மற்றும் சகோதரத்துறை அலுவலர்களால் இணையத்தில் கட்டணம் இன்றி பதிவு செய்யப்படுகிறது.

மேலும், இனிவரும் காலங்களில் மத்திய மாநில அரசு திட்டங்கள் பிரதமரின் விவசாய ஊக்க தொகை பயிர் காப்பீடு உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் இப்ப பதிவுகள் அடிப்படையில் வழங்கப்படும்.

தற்போது, விவசாயம் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள் தங்களின் நில உடமை விவரங்களை பதிவு செய்தால் மட்டுமே அடுத்த தவணை பெற முடியும் வேளாண் அடுக்குத் திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாமல் உள்ளோர் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .

இதில், பலர் முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ளதால், நில உடமை விவரங்களை பதிவு செய்ய முடியவில்லை இவர்களுக்காக ஜூலை 9-ல் காலை 10 மணிக்கு காரியாபட்டி தாசில்தார் அலுவலகங்களில் முன்னோர்கள் பெயரில் உள்ள பட்டா பெயர் மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில், விவசாயிகள் தேவையான ஆவணங்களை நேரில் கொண்டு வந்து பட்டா பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தச்சம்பத்து காளியம்மனுக்கு தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்!

theechatti vizha near cholavanthan - 2026

சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் ஆனித்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று காலை திருவேடகம் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் அக்னி சட்டி அலகு குத்தி ஊர்வலமாக வந்து திருக்கோவிலை அடைந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தச்சம்பத்து கிராமத்தினர் செய்து வருகின்றனர்

நெல்லை ராஜை வாசு கோயில் ஆனி திருதேரோட்டம் கோலாகலம்..

images 3 - 2026

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலின் ஆனிப்பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக திருதேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பல்வேறு நேர்ச்சை செலுத்தி வழிபாடுகள் நடத்தினர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்ட திருவிழா கடந்த ஜூன் 30ம் தேதி காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் நடந்தது. திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. 7ம் திருவிழாவான நேற்றுமுன்தினம் (6ம் தேதி) காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

images 4 - 2026

இதைத் தொடர்ந்து காலையில் பல்லக்கில் சுவாமி, அம்பாள் (தவழ்ந்த கோலத்தில்) வீதி உலா நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும், நடராஜபெருமான் சிவப்பு சாத்தியும் வீதிஉலா நடந்தது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி உட்பிரகாரம் வலம் வருதல் நடந்தது.

தொடர்ந்து 8ம் திருவிழாவான நேற்று திங்கட்கிழமை (7ம் தேதி) காலையில் சுவாமி நடராஜ பெருமான் பச்சை சாத்தி வீதிஉலா வருதலும், மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு தேர்கடாட்சம் வீதி உலா சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளிவாகனத்திலும் வீதி உலா நடந்தது. ஆனித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9ம் திருவிழாவான இன்று (8ம் தேதி) நடந்தது. இதில் அதிகாலையில் சண்டிகேஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் பக்தர்கள் மூலம் இழுக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள்ளாக சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் தேரில் எழுந்தருளல் நடந்தது. இதைத் தொடர்ந்து சரியாக காலை 8.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

தேரை தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆணி தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

சிந்தாமணி நாதசுவாமி கோவில் என்று அழைக்கப்படும் இக்கோவிலில் மூலஸ்தானத்தில் சிவன் பார்வதி சரிபாதியாக இணைந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகின்றனர் மூலஸ்தானத்தில் காட்சி தரும் ஒரே கோவில் இதுதான் என கூறப்படுகிறது .

இக்கோவில் தேரோட்டத்தை ஒட்டி திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் பின்பு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து பல்வேறு நேர்ச்சை செலுத்தி வழிபாடுகள் நடத்தினர் .திருத்தோரட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் .

FB IMG 1751975798860 - 2026

இதுபோல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் சுவாமி கோவிலில் இன்று ஆணி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது இக்கோவிலில் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றி தினசரி பல்வேறு நிகழ்வுகளுடன் திருவிழா நிகழ்வுகளும் சுவாமி வீதி உலாவும் விமர்சையாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து பல்வேறு நேர்ச்சைகள் செலுத்தினர்

வேறு வழியின்றி சரணடையும் பாகிஸ்தான்!

operation sinthoor - 2026

பயங்கரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ்தான் தயார்! வேறு வழியின்றி பாரதத்திடம் கொல்லைப்புறம் வழியாக சரணடைய தயாராகும் பாகிஸ்தான்! ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையும் சிந்து நதி ஒப்பந்த நிறுத்தமும் நல்ல பலனை தரத் தொடங்கி இருக்கிறது.

பாகிஸ்தானின் பூட்டோ பரம்பரை இளவரசரும் சிந்து மாகாணத்தின் அரசியல் முகமாகவும் இருக்கும் பிலாவல் பூட்டோ வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி தரும்போது ஹபீஸ் சையத் மற்றும் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளான். இந்தியாவிற்கு ஒரு நல்ல சைகையாக பயங்கரவாதிகளை நாடு கடத்த நாங்கள் தயாராக இருப்போம் என்றும் அவன் தெரிவித்துள்ளான்.

கடந்த வாரம் சரணடைதல் என்ற வார்த்தையே பாகிஸ்தான் அகராதியில் இல்லை என்று வீரவசனம் பேசினானே ? அதே பிலாவல் பூட்டோ தான் இன்று இப்படி அந்தர் பல்டி அடித்திருக்கிறான் .

இதே பிலாவல் பூட்டோ தான் சிந்து மாகாணத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் விவசாயிகள் மத்தியில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதை ஏற்க முடியாது. பாரதத்திற்கு இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளது. ஒன்று பாகிஸ்தானிற்கு சிந்து நதியை திறந்து விட வேண்டும். இல்லையேல் பாகிஸ்தானோடு போரிட்டு வெல்ல தயாராக வேண்டும் என்று பேசினான் .

ஆனால் பாகிஸ்தான் இன்னொரு அடியை பாரதத்திடம் வாங்க இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ராஜ ரீதியாகவும் தயாராக இல்லை என்பதை அங்குள்ள மக்கள் ஓரளவு உணர்ந்து இருக்கிறார்கள். அதனால் இவனது நாடகம் அங்கு எடுபடவில்லை. உண்மை நிலை எங்களுக்கும் தெரியும் என்று அவர்கள் முகத்தில் சாணி அடிக்க தயாராகிறார்கள் .

அதனால் வேறு வழியில்லாமல் சிந்து நதி நீருக்காக பாரதத்திடம் சரணடைய தயாராகிறது பாகிஸ்தான். அதனால் தான் எந்த பிலாவல் பூட்டோவை வைத்து எங்கள் நாட்டில் பயங்கரவாதிகள் இல்லை. நாங்கள் மிகவும் யோகியமானவர்கள். எங்களைப்போல் யோக்கிய சிகாமணிகளை நீங்கள் இந்த உலகில் வேறெங்கும் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள் என்று நீட்டி முழக்கினான்.

பாரதம்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. பாரதத்தின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் தான் பாகிஸ்தான் பேரழிவை சந்திக்கிறது என்று கடந்த மாதம் எந்த பிலாவல் போட்டோவை வைத்து பேச வைத்தார்களோ? அதே பூட்டோ வாயாலேயே பரிகாரம் தேடும் வகையில் ஹதீஸ் சையத் மௌலானா மசூத் அசார் உள்ளிட்ட அவர்களை நல்லெண்ண நடவடிக்கையாக பாரதத்திடம் ஒப்படைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பேச வைத்திருக்கிறார்கள்.

இதன் மூலம் ஹபீஸ் சையத் – மௌலானா மசூத் அசார் இருவரும் பாகிஸ்தானில் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் பாகிஸ்தானின் ராணுவம் உளவுத்துறை கண்காணிப்பில் பாதுகாப்பில் இருப்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள். இதன் மூலம் பாரதத்தில் நடக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கும் அதை செய்யும் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அரசு இயந்திரம் நேரடியான தொடர்பில் இருப்பதையும் ஒப்புக்கொண்டு உள்ளார்கள்.

இத்தனை காலமும் எவ்வளவோ ஆவணங்கள் சாட்சியங்களை பட்டியலிட்டு அவர்கள் பாகிஸ்தானில் தான் இருக்கிறார்கள் என்று பாரதம் பாகிஸ்தானிடம் சமர்ப்பித்த போதிலும் இது சொத்தை இது சொல்லை என்று சாக்குப் போக்கின் கீழ் பாகிஸ்தான் இந்த விஷயத்தை தட்டிக் கழித்தது. ஆனால் இன்று தான் வளர்த்த பயங்கரவாத வெறி நாய்களை தன் பாதுகாப்பிற்காக சுயநலத்திற்காக தானே காவு கொடுக்க தயாராகிவிட்டது. அந்த வகையில் இத்தனை காலம் அவர்கள் வளர்த்தெடுத்த பயங்கரவாதத்தில் கூட பாகிஸ்தான் உண்மையான விசுவாசத்தில் இல்லை என்பது நிரூபணம் ஆகிறது.

பாகிஸ்தானை நம்பி பாகிஸ்தானியர்கள் பயங்கரவாதிகளாக மாறுவதும் அவர்களை நம்பி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பயங்கரவாத திரளாக மாறியவர்களயுமே தன் குடிமக்கள் தன்னை நம்பிய தங்களை தலைவர்களாக ஏற்றுக் கொண்ட ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் என்ற குறைந்தபட்ச விசுவாசம் கூட இல்லாமல் இன்று அவர்களை பலி கொடுத்து தங்கள் தேசத்தை காத்துக் கொள்ள பாகிஸ்தான் தயாராகிறது.

எனில் பாகிஸ்தானின் சித்தாந்தத்தை பயங்கரவாத ஆதரவை நம்பி பாரதத்திலிருந்து கொண்டு பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை ஆதரிப்பதும் பாகிஸ்தான் இறையாண்மையை உயர்த்திப் பிடிப்பதும் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டே பாரதத்திற்கு எதிராக அத்தனை சதிகளையும் பாகிஸ்தான் ஆதரவில் செய்பவர்களுக்கும் பாகிஸ்தான் எப்படிப்பட்ட மரியாதையை கொடுக்கும்? அவர்களை எந்த இடத்தில் வைத்து பார்க்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். இதுதான் பாகிஸ்தானின் உண்மை முகம்.

அதெல்லாம் சரி. இதே பிலாவல் சில தினங்களுக்கு முன்பு சரண் அடைதல் என்ற பேச்சுக்கே இடமில்லை பாகிஸ்தானின் அகராதியிலேயே சரணடைதல் என்ற வார்த்தை கிடையாது என்று சவுடால் விட்டானே? இப்போது ஏன் இப்படி வலிய வந்து பம்மறான் ? என்று சிலருக்கு குழப்பம் நேரிடலாம்.

பயங்கரவாதத்தையும் கைவிட மாட்டோம். பாரதம் எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் நிறுத்த மாட்டோம். பயங்கரவாத உற்பத்தியையும் நிறுத்த மாட்டோம். எங்களிடம் இருக்கும் பாரதம் கோரும் பயங்கரவாதிகளை அவர்களிடமும் ஒப்படைக்கவும் மாட்டோம் என்பதை மிகத் தெளிவாக பாரதத்திடம் சரணடைதல் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை என்று பேசினான். அதாவது பாகிஸ்தான் இராணுவம் உளவுத்துறை பேச வைத்தது.

அதே பிலாவல் தான் இன்று ஹபீஸ் சையத் மசூத் அசாரை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம் என்று சரணாகதி வாக்கு வாக்குமூலத்தை உதிர்க்கிறான். அதாவது பாகிஸ்தான் இராணும் உளவுத்துறை இவனை பேச வைத்து இவன் மூலம் பாரதத்தை ஆழம் பார்க்கிறது.

இதன் பொருள் என்னவெனில் சரணடைதல் என்பதே எங்கள் அகராதியில் கிடையாது என்று அண்ணார் பேசிய பிறகு சொந்த குடும்பத்தின் வரலாற்றை தெரியாத உனக்கு தேசத்தின் வரலாறு மட்டும் எப்படி தெரிய போகிறது? என்று பாகிஸ்தானில் இருக்கும் மூத்த தலைமுறை சார்ந்தவர்கள் அல்லது உண்மையான அரசியல் வரலாறு தெரிந்தவர்கள் பாகிஸ்தான் நலன் கருதி இவனுக்கு தனியே பாடம் எடுத்து இருக்கலாம்.

அந்தப் பாடத்தில் தம்பி பூட்டோ அரசியல் செல்வாக்கு இருக்கிறது பாகிஸ்தானில் நமக்கு அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்று அதிகமாக ஆட்டம் போட வேண்டாம் . உன் தாய் பெனசீர் ஃபோட்டோவின் அரசியல் தான் உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். ஆனால் அவரின் தந்தையாரும் உங்களது தாத்தாவான சுல்பிகர் அலி பூட்டோ வின் காலம் பற்றி உனக்கு தெரியாது.

உன் தாத்தா சுல்பிகர் அலி காலத்தில் தான் கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் இடையே பெரும் உள்நாட்டு யுத்தம் மூண்டது . அதில் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானும் இப்போதைய வங்கதேசம் என்று சொல்லப்படும் புதிய தேசம் உருவானது. பாரதத்தின் ராணுவ உதவியால் தான் அது சாத்தியம் ஆனது. அதிலும் வெறும் 13 நாள் யுத்தத்தில் பூகோளத்தை மாற்றி ஒரு புதிய தேசத்தை இந்திய ராணுவம் உருவாக்கியது. அந்த கதை உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டிருக்கலாம்.

உலக நாடுகளின் அழுத்தம். அமெரிக்கா பிரிட்டனின் நேரடி எதிர்ப்பு . அரேபிய நாடுகளின் எதிர்ப்பு. அண்டை நாடுகள் எதுவும் உதவாத நிலை. உள்நாட்டில் பெரிய பொருளாதார பலமோ அந்நிய செலாவணி இருப்பு கிடையாது. நவீன ஆயுதங்கள் தொழில்நுட்பங்கள் தளவாடங்கள் எதுவும் கிடையாது. குறிப்பாக அயலக ராஜ்ஜிய பரிபாலனம் வலுவாக கிடையாது. அந்த நிலையிலும் அப்போதைய பாரதத்தின் பிரதமர் இந்திரா என்னும் பெண்மணி அப்போதைய ராணுவ தளபதி மானெக்ஷா வியூகத்தோடு துணிந்து களமிறங்கி வங்கதேசம் என்னும் ஒரு நாட்டையே உருவாக்கினார்.

அதில் பாரதத்தின் வியூகம் இப்படி இருக்கலாம் என்று பாகிஸ்தான் அப்போது நினைத்துக் கூட பார்க்காத அதிரடி வியூகத்தை இந்திய ராணுவம் களம் இறக்கியது. அதன் விளைவாக உலகம் நாடுகள் ஒட்டுமொத்தமாக ஆதரவு அளித்த போதிலும் அனைத்தும் பாகிஸ்தானுக்கு எட்டாக்கனியாகி கேவலமான தோல்வியை தழுவியது. அதிலும் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவும் தங்கள் தேசத்தின் இறையாண்மையை பற்றி எள்ளளவும் நினைக்காத பாகிஸ்தான் ராணுவத்தினர் சுமார் 93,000 ஆயிரம் வீரர்கள் அதிகாரிகள் தங்களது கால் சட்டையை அகற்றிவிட்டு அரை நிர்வாண கோலத்தில் பாரதத்தின் ராணுவத்திடம் முழு சரணாகதி அடைந்தார்கள். உன் தாத்தாவின் அந்த வீர வரலாறு தெரியுமா? என்று கேட்டிருக்கலாம்.

அவர்களை கௌரவமாக நடத்திய பாரதம் வெளிநாடுகளின் அழுத்தம் 93,000 அடிமைகளை கட்டி வைத்து பிரியாணி போட வசதி இல்லாத காரணம் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தானிடம் திரும்ப ஒப்படைத்தது.

சரணாகதி என்ற வார்த்தைக்கு பாகிஸ்தானில் இடமில்லை என்று நீ இன்று பேசலாம். ஆனால் பாகிஸ்தானின் வரலாற்றில் இன்னொரு நாட்டிடம் முழு சரணாகதி அடையும் வரலாற்றை தொடங்கி வைத்ததே உன் தாத்தாவின் காலத்தில் தான். அவரது காலத்தில் தான் பாகிஸ்தான் ராணுவம் எந்த காலத்திலும் தலை நிமிர்ந்து வாழ முடியாத பெரும் தோல்வி அவமானத்தை சந்தித்தது.

அதன் விளைவு இன்றளவிலும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு உலகில் கௌரவமோ மரியாதையோ கிடையாது. அதனால் சரணாகதி வரலாற்றை தொடங்கி வைத்த வம்சத்தில் இருந்தே பாகிஸ்தான் அகராதியில் சரணாகதி என்ற வார்த்தையே கிடையாது என்ற உன் கேட்கும் போது பாரதியர்களோ சர்வதேச சமூகமும் மட்டும் சிரிக்காது. கொலை வெறியில் இருக்கும் பாகிஸ்தான் மக்கள் கூட வேதனையில் விரக்தியில் சிரிப்பார்கள்.

அதனால் உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள இனி ஒரு முறை சரணாகதி என்ற வார்த்தை பாகிஸ்தானில் கிடையாது என்ற பாரதத்தை கோபமூட்டும் நகைச்சுவையை மறந்தும் செய்யாதே! என்று யாரேனும் புத்திமதி சொல்லி இருக்கலாம்.

பாரதம் அப்பவே அப்படி னா இப்ப எப்படினு? ஆபரேஷன் சிந்தூர்ல் பாத்தோம். அது வெறும் டிரெய்லர் தானாம். மோடி முழு படத்தை ஓட்டினா பாகிஸ்தான் பரலோகம் போயிடுமாம் சாமி. நாம பத்திரமா வெளிநாடு போய் வாழலாம் னு கனவு காணாதீங்க. அப்புறம் மர்ம நபர்களால் மர்ம மரணம்னு காணாம போயிடுவீங்க. உங்க வம்சம் இருக்கனும் னா புத்தியோட பொழைச்சிக்க பாரு பா னு யாராவது நலன் விரும்பிகள் ஆலோசனை சொல்லி இருக்கலாம்.

அதில் மண்டையில் இருந்த குழப்பம் தெளிந்து பாரதத்திடம் சரணாகதி அடைவதை தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்து பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் குரலாக பிலாவல் பேசுகிறான்.

இதனால் பாகிஸ்தான் திருந்துவிட்டதாகவோ அல்லது அவர்களின் தவறை உணர்ந்து விட்டதாகவோ அர்த்தம் இல்லை. ஆபரேஷன் சிந்து இன்னும் முடியவில்லை தற்காலிக நிறுத்தம்தான் என்ற பாரதத்தின் நிலைப்பாடு அவர்களை எந்த நேரம் என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் நிறுத்தி இருக்கிறது. உளவியல் ரீதியான இந்த தாக்குதல் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.

மறுபுறம் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற்றம் – பாரதம் கோரும் பயங்கரவாதிகளை பாகிஸ்தானிடம் ஒப்படைப்பது- எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடுவது செய்தால் மட்டுமே சிந்து நதியை மீண்டும் பாகிஸ்தானுக்கு வழங்குவது பற்றி யோசிக்க முடியும் என்று பாரதம் கடுமை காட்டுகிறது. சவூதி கத்தார் பஹ்ரைன் அமெரிக்கா பேசியும் பலன் இல்லை. அதனால் இப்போதைக்கு வேறு வழி இன்றி பாகிஸ்தான் முதல் கட்டமாக பயங்கரவாதிகளை பாரதத்திடம் ஒப்படைக்கும் முடிவிற்கு தயாராவது தெரிகிறது.

அந்த வகையில் இத்தனை காலம் பாரதம் எடுத்த ராணுவ நடவடிக்கைகள் துல்லிய தாக்குதல்கள் விட சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தம் என்ற நதிநீர் தாக்குதல் மிக நல்ல பலனை பாரதத்திற்கு தர தொடங்கி இருக்கிறது. மிகத் தாமதமாக எடுத்தாலும் மிக சரியான நகர்வை பாரதம் கொண்டு போவது பாகிஸ்தானின் இந்த தலைகீழ் மாற்றத்தில் உணர முடிகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான இது போன்ற உளவியல் ரீதியான தாக்குதல்கள் பாகிஸ்தான் மக்கள் மூலமாக அவர்களின் ஆட்சியாளர்கள் இராணுவத்திற்கு அழுத்தம் தரும் நடவடிக்கைகளை பாரதம் இன்னும் தீவிர படுத்த வேண்டும். அது மட்டுமே பாகிஸ்தானின் பயங்கரவாத உற்பத்தி – எல்லை தாண்டிய பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரும். பாரதத்தின் உள்நாட்டில் அமைதி நலன் வளர்ச்சி பாதுகாப்பு நிலை பெறும்.

பாரதம் ஆபரேஷன் சிந்தூர் தற்காலிக நிறுத்தம் மட்டுமே. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கிறோம் என்று காய் நகர்த்தி காத்திருந்தது போர் நிறுத்தம் நாங்கள் தான் கேட்டோம் என்ற ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் பயங்கரவாதிகளை ஒப்படைக்க தயார் எனும் பாகிஸ்தான் அறிவிக்க வேண்டும் என்ற இந்த தருணத்திற்காக தான் . அது நடந்து விட்டது. பாகிஸ்தான் அல்ல அது டெரரிஸ்தான் என்று பேசி வரும் ஜெய் சங்கர் ஜீ இனி பாகிஸ்தானை போகும் இடமெல்லாம் பஞ்சர் ஆக்குவார். இனி மோடி ஆடும் மங்காத்தா ஆட்டத்தில் பாகிஸ்தான் பாக்கிஸ்தான் ஆவது உறுதி.

ஜெய் ஹிந்த்.

ஜான்சி ராணி ஹிந்துஸ்தானி.

நாளை ஆட்டோக்கள் வேலைநிறுத்தத்தில் இவர்கள் பங்கேற்கவில்லையாம்!

madurai auto - 2026
#image_title

இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க மாநிலத் தலைவர் மணலி த. மனோகரன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது…

நாளை 9.7.25 அன்று இடதுசாரி தொழிற்சங்கங்கள் மற்றும் சில அரசியல்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் அரசியல் காழ்புணர்ச்சி கொண்டது. ஒருதலைப்பட்சமானது. இதனை இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. வேலை நிறுத்தத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் கலந்துகொள்ளாது. வழக்கம்போல நமது சேவை தொடரும்.

இடதுசாரிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக விலைபோனது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தின் நிர்வாக சீர்கேடு குறித்து இவர்கள் பேசியதில்லை. போக்குவரத்து, கூட்டுறவுத்துறை, மின்சாரத்துறை என பல துறைகளும் தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால், மலிவான அரசியலால் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. எந்த பெரிய தொழில் நிறுவனமும் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால் படித்த மாணவர்களுக்கு எந்த எதிர்காலம் தமிழகத்தில் இல்லை என்ற நிலை உள்ளது. உள்கட்டமைப்பு மிகவும் பலகீனமாக உள்ளது.

மேலும் வருகின்ற தேர்தலை கணக்கில் கொண்டு, வெற்று அரசியல் காரணங்களுக்காக இந்த வேலை நிறுத்தத்தை நடத்தி தேசியத்திற்கும், தேச ஒற்றுமைக்கும் எதிராக மக்களை திசைத்திருப்ப தொழிலாளர்களை பலிகடா ஆக்குவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தொழில், சேவை வரியான ஜி.எஸ்.டி. என்பது தனித்து இயங்குவது, அதில் எல்லா மாநில நிதி அமைச்சர்கள் நிதி செயலாளர்கள் இடம்பெறுகிறார்கள். இவர்கள் கொண்டு வரும் கருத்துகள் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டால் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. அந்த கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு பெட்ரோல், டீசல், எரிவாயுவை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர பரிந்துரைக்கலாமே? அது குறித்து இந்த கம்யூனிஸ்ட்கள் ஏன் பேசுவதில்லை.

கம்யூனிஸ்ட்கள் தந்திரமானவர்கள், அவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதற்கான காரணங்களில் ஒன்றில் கூட தமிழக மாநில அரசின் செயல்பாடு குறித்து எந்த விமர்சனங்களும் இல்லை.

தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என எல்லோரும் போராடுகிறார்கள். தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆட்டோ கட்டணம் சீரமைத்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆட்டோ தொழிலாளர்களுக்கு மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கு வாரியம் செய்ய வேண்டிய நல திட்டங்கள் குறித்து இதில் வலியுறுத்தவில்லை. மாறிவரும் சூழலால் ஆட்டோ ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டவில்லை.

எனவே, இடதுசாரிகள் சந்தர்ப்பவாதிகள். வருகின்ற தேர்தலில் மக்களை திசைத்திருப்பி அரசியல் லாபம் பெற தொழிலாளர்களை பலிகடா ஆக்குவதை தொழிலாளர்கள் உணர வேண்டும். இந்த தேவையற்ற வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

நாளை இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் மக்களுக்கான சேவை தொடரும். அதற்கு தக்க பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள், காவல்துறையினர் உறுதிபடுத்த வேண்டும்.

பொதுமக்கள் நலன் கருதி இந்து ஆட்டோ முன்னணி சங்கம் செயல்படும், அதற்கு மக்களின் நல்லாதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

எர்ணாகுளம் வேளாங்கண்ணி ரயில் நவீன பெட்டிகள்; பயணிகள் வரவேற்பு!

IMG 20250708 WA0001 - 2026

கொல்லம் – செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கம், கொல்லம் – செங்கோட்டை வழித்தடத்தில் எல்ஹெச்பி ரேக்காக மாற்றப்பட்ட எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலை வரவேற்றனர். பயணிகள் சங்கத் தலைவர் அட்வ. என். சந்திரமோகன் மற்றும் புரவலர் என்.பி. ராஜகோபால் ஆகியோர் புனலூர் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலின் லோகோ பைலட்டுகளுக்கு ஹரபர்பணம் வழங்கி, ரயில் எஞ்சினுக்கு மாலை அணிவித்து, பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.

சங்க நிர்வாகிகள் திபு ரவி, அஜிஷ் புன்னாலா, எஸ். லீ, சுமேஷ் எஸ், ரமேஷ் அவனூர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வரவேற்புக்கு தலைமை தாங்கினர்.

கொல்லம் – செங்கோட்டை வழித்தடத்தில் வழக்கமான ரயிலில் எல்ஹெச்பி ரேக் பெறுவது இதுவே முதல் முறை.

மீட்டர் கேஜ் காலத்தில் கொல்லத்திலிருந்து நாகூர் வரை தினமும் இயக்கப்பட்ட இந்த ரயிலை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் இந்த புதிய பெட்டிகளுக்கு வரவேற்பு தெரிவித்தனர். 07.07.25 இரவு முதன்முதலாக LHB பெட்டிகளுடன் செங்கோட்டைக்கு வந்த எர்ணாகுளம் – வேளாங்கண்ணி ரயிலை செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க சார்பில் பொருளாளர் & DRUCC உறுப்பினர் சுந்தரம் PRO ராமன் உறுப்பினர் சங்கர் ஆகியோர் வரவேற்று லோகோ பைலட் அசிஸ்டண்ட் லோகோ பைலட் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.

சாதுர்யமான சதுரங்க ஆட்டம்!

modi in brics - 2026

பிரமாண்ட இந்திய முன்னெடுப்புகள்!

பாரதப் பிரதமராக திரு நரேந்திர மோடியின் இந்த மூன்றாவது பதவி காலத்தில் யாராலும் கற்பனை செய்ய இயலாத விஷயங்களை முன்னெடுத்து வருகின்றார் அவர்.

தனது ராஜதந்திர ராஜாங்கம் மூலம் ஆனானப்பட்ட அமெரிக்காவிற்கே கடிவாளம் போட நினைக்கிறார். டாலர் தேசத்தின் மூக்கனாங்கயிறு நம் இந்திய தேசத்திடம் வர இருக்கிறது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து அவர் இந்திய நலனை தாண்டி, தன் நலன் கருதி மிக சாதுர்யமாக காய் நகர்த்தி தனது கட்டுப்பாட்டுக்குள் நம் தேசத்தை கொண்டு வர எத்தனிக்க… நம் இந்திய தரப்பில் ஆரம்ப காலத்தில் திணறினாலும் சமாளித்து கொண்டு எதிர் வினையாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.

இது இவ்வாண்டு பட்ஜெட்டில் நன்றாக வெளிப்பட்டது. அமெரிக்க அதிபராக அவரது முன்னெடுப்புகளை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப வரி வருவாய் இனங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. ஆன போதிலும் ட்ரம்ப் விடாப்பிடியாக உணவு பொருட்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட FMCG பிராடக்டிற்கு இந்திய சந்தையை திறந்த விட்டால் தான் ஆயிற்று என ஒற்றை காலில் நிற்க….. நம் இந்திய நிர்வாகம் தீர்த்து சொல்லி இருக்கிறார்கள்.

இந்திய நலனே பிரதானம் என அழுத்தம் திருத்தமாக சொல்லி விட… ட்ரம்ப் தனது முசட்டு தனத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்க ஆரம்பித்து இருக்கிறார் இதனை.

அவர் ஏற்கனவே அறிவித்திருந்த 25% சதவிகித வரிக்கு இடைக்கால தடை வரும் 9 ஆம் தேதியோடு முடிவடைய … இன்னமும் இருதரப்பிலும் இறுதி ஒப்பந்தம் ஏதும் கையெழுத்து ஆகவில்லை.

நம் இந்திய தேசம் வரையறுக்கப்பட்ட
தேதியை வைத்து என்ன செய்வது… நாங்கள் கேட்கும் எதற்கும் செவி சாய்க்காத போது….. என்கிறார்கள். போதாக்குறைக்கு உலக வர்த்தக மையத்தை தொடர்பு கொண்டு புகார் ஒன்றை பதிவு செய்து இருக்கிறார்கள். இது டொனால்ட் ட்ரம்பை ஏகத்திற்கும் சீண்டி விட்டு இருக்கிறது என்கிறார்கள்.

நம் இந்திய தேசம், இப்படி தடாலடியாக சட்டத்திற்கு புறம்பாக வரி திணிப்பை வளர்ந்து வரும் தேசத்தின் மீது பிரயோகிப்பது எவ்வகையில் சரி என கேள்வி கேட்டு அதிரடித் திருக்கிறார்கள். இந்த வாதம் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

இருண்டு போன ட்ரம்ப், பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதலாக பத்து சதவீத வரி என அறிவித்திருக்கிறார். இது அமெரிக்காவில் ஏகப்பட்ட புகைச்சலை கிளப்பி விட்டு இருக்கிறது.

போதாக்குறைக்கு எலான் மஸ்க் அவர் ஏற்கனவே அறிவித்திருந்த படி தனி கட்சி ஒன்றை தொடங்கி அதில் முக்கிய பதவியில் இந்தியர் ஒருவரை நியமிக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

பிரிக்ஸ் மாநாட்டில் கிரிப்டோ கரன்சியை தவிர்த்து டிஜிட்டல் கரன்சியை பற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்ரம்ப் பதவியேற்ற சமயத்தில் கிரிப்டோ கரன்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றி பேசி இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளவும்.

அடுத்ததாக ரஷ்யாவுடனான வர்த்தகம் மற்றும் நல்லுறவை மறுபரிசீலனை செய்ய அவசியம் என்ன வந்தது என கேள்வி கேட்டு இருக்கிறார்கள் நம்மவர்கள்.

ஆனால் அதேசமயம் ரஷ்யாவின் S500 மற்றும் ஐந்தாம் தலைமுறை விமானங்களை வாங்க விருப்பம் இல்லை என்று தடாலடியாக அறிவித்தும் விட்டார்கள்.

எங்கள் தேவை பட்டியலில் இது இல்லை என்கிறார்கள். அமெரிக்கா அறிவித்த 500% வரி பற்றி கவலை இல்லை என்றும் சொல்லிவிட… ட்ரம்ப் புலம்ப ஆரம்பித்து விட்டார் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…..

அதாவது இந்தியா, தனது தேவை மற்றும் தேச நலனுக்கு மாத்திரமே முன்னுரிமை என வெளிப்படையாக அறிவித்திருப்பதாக பலரும் இதனை அவதானிக்கிறார்கள்.

மேற்சொன்ன இவையெல்லாம் ஒரு புறம் இருக்க….. இந்திய தேவைகளை அமெரிக்கா பூர்த்தி செய்து கொடுக்க.. அது சொல்வதை இந்தியா கேட்க வேண்டும் என விரும்புகிறது.

அதற்கு வாய்ப்பு இல்லை ராசா என நம்மவர்களும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். அது தான் பொறுக்கவில்லை அதற்கு.

அப்படி என்ன இந்தியாவிற்கு அது செய்து கொடுக்க…. அல்லது துணை நிற்க விரும்பியது…????

இதற்கு நம் இந்திய தேசத்தின் நகர்வுகளை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட கால நிலுவையில் உள்ள கோரிக்கைகளில் ஒன்று….. தலாய் லாமாவின் கோரிக்கை. பல தசாப்தங்களாக இது தொடர்கிறது.
நாடு கடந்த திபெத்திய அரசாங்கத்தின் தலைவராக அவர் இருக்கிறார். திபெத்திய லாமாக்களின் தலைவராகவும் அவரே நீடிக்கிறார்.

தீபெத் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக நம்ப வைக்க பட்டாலும் அது சீனாவின் வல்லாதிக்கத்தின் கீழ் இயங்குகிறது என்பதே நிஜம்.
இவரது தொன்னூறாவது வயது பூர்த்தியை கடந்த வாரத்தில் உலகமே கொண்டாடியது.

இவரது கோரிக்கையை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்….. அதற்கு பதிலாக அக்ஷை சின் பிராந்தியத்தை மீட்டெடுக்க வேண்டும் என ஆளாளுக்கு யோசனை சொல்லிக் கொண்டு நிற்கிறார்கள்.

நம் இந்திய தரப்பில் இதற்கான முன்னெடுப்புகள் நீண்ட கால நோக்கில் செயல்படுத்திக் கொண்டே வருகிறார்கள்.

இந்த இடத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்து திபெத் தன்னாட்சிப் பிரதேசம் என்பதாக ஏற்றுக் கொண்டதாக தலாய் லாமாவே அதன் தலைவர் என்பதாக ஒப்புக் கொண்டதாக கூறி சர்வதேச சமூகத்திற்கு அறிக்கை வாசித்திருக்கிறார்கள்.

இது வெளிப்புற பார்வையில்…..
உள்ளூர அங்கு முகாமிட நோட்டம் போட்டுக் கொண்டு நிற்கிறார்கள். இந்தியா இதற்கு மசியவில்லை.

காஷ்மீர் பிராந்தியம் முழுவதும் நம் இந்திய தேசத்திற்கே சொந்தம் என்பதை ஆவணங்கள் அடிப்படையில் நிரூபித்து விட…. பாகிஸ்தான் வசம் அவர்கள் ஆக்ரமிப்பில் உள்ள பகுதிகளை மீட்டெடுக்க அமெரிக்க உதவி தேவைப்படும் என சகுனம் பார்த்து நிற்க…… அதெல்லாம் அப்படி ஒன்றும் தலைபோகிற அவசரம் இல்லை சடுதியில் பின் வாங்கி இருக்கிறார்கள் நம்மவர்கள்.

ஆப்ரேஷன் ஸிந்தூர் சமயத்தில் குறைந்த பட்சம் இந்த இடங்களையாவது நாம் மீட்டெடுத்து இருக்க வேண்டும் என நம் தேசத்து மக்கள் பலரும் விரும்பியதாக புலனாய்வு தகவலும் அரசுக்கு கிடைத்திருக்கிறது. ஆனாலும் நம் இந்திய அரசு அவசரப் பட வேண்டாம் என்கிற நிலைப்பாட்டில் விடாப்பிடியாக நின்றனர்.

அதற்கு காரணம் அமெரிக்க தலையீடு தான். பாகிஸ்தான் உடைந்தால் அதன் கடன் சுமையை நம் இந்திய தேசம் ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….

தவிர ஐநாவின் கண்காணிப்பில் அவர்களின் கூட்டு ராணுவம் மிச்ச சொச்சம் இருக்கும் பகுதியில் நிலை நிறுத்தப்படும் என்றனர்.

இது தேவையற்ற செலவினங்களை கொண்டு வரும் என்பதால் நம் இந்திய தரப்பில் ஏற்கவில்லை என்கிறார்கள்.

இவையெல்லாம் தாண்டி…….
விண்வெளியில் சீனா சர்வதேச நிலையத்தை கட்டமைப்பதோடு உலகின் அதி உணர் திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டரை நிலை நிறுத்த முழு மூச்சாக செயல்பட்டு கொண்டு வருகிறார்கள்…. இது மேற்கு உலக நாடுகளை பதைபதைக்க வைத்திருக்கிறது.

இன்று இல்லாவிட்டாலும் நாளை நம் இந்திய தரப்பில் இருந்து சீனாவிற்கோ அல்லது ஆப்பிரிக்க நாடுகளுடனோ வர்த்தகம் வலுப்பெற்று மேற்கு உலக நாடுகளில் தலைமை பீடமாக விளங்கும் அமெரிக்கா தனிமை பட நேரிடுமே என இப்போதே பயப்பட ஆரம்பித்து இருக்கிறார்கள் அவர்கள்.

இதற்கு நம் இந்திய தரப்பில் இருந்து ஒரு நகர்வு தான் காரணம் என்றும் சொல்கிறார்கள்.

இந்தியா…… ஐந்தாம் தலைமுறை விமானங்களில் ஆர்வம் காட்ட வில்லை. ஆனால் அதி நவீன ஏவுகனை தொழில்நுட்ப பண்புகளில் முன்னோடியாக விளங்குகிறார்கள்.
அதுபோலவே வான் பாதுகாப்பு சாதனங்களில் பட்டையை கிளப்புகிறார்கள்.

இவை இரண்டுமே இந்திய தேசத்தை பல மடங்கு பலமுள்ளதாக மாற்றி இருக்கிறது.

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தவே விமானங்கள் மற்றும் எதிரி நாட்டின் ரேடாரில் சிக்காதிருக்க அதி நவீன போர் விமானங்கள் தேவை. ஆனால் இவற்றையெல்லாம் இந்திய தரப்பில் அதி நவீன ஏவுகணைகள் கொண்டே சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு உலக அளவில் அதி நவீன அதி உச்ச தொழில்நுட்ப பண்புகளை கொண்ட பங்கர் பஸ்டர் குண்டுகளை கனமான குண்டு வீச்சு விமானங்களில் கொண்டு சென்று தாக்குதல் நடத்தும் நடைமுறை சாத்தியம் மட்டுமே இருக்க…… இந்தியா மாத்திரமே அதனை ஏவுகணை கொண்டு செலுத்தும் தொழில்நுட்ப பொறிமுறையில் வெற்றி கண்ட ஓரே நாடாக விளங்குகின்றது.

இது நம்மில் பலருமே அறிந்திராத விஷயம்.

இவையெல்லாம் வல்லரசு கனவு கண்டு கொண்டு இருக்கும் அமெரிக்கர்களுக்கு ஏற்கவில்லை.

நம்மவரோ விடாமல் சுழன்று சுழன்று பதம் பார்த்து வருகிறார்.

கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் நூற்றாண்டுக்கு முன் வெளிவந்த பத்திரிகை துணுக்கு செய்தி ஒன்றில்..
சீனா இந்தியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால்….. என்கிற தொனியில் கார்டூன் வரைபடம் ஒன்று மீண்டும் உலா வர ஆரம்பித்திருக்கிறது. பார்க்க படம் கீழே……

அதனை ஒட்டியே உலக நடப்புகள் இருப்பதாக மேற்கு உலக நாடுகளில் பலரும் வெளிப்படையாக புலம்பவே ஆரம்பித்து விட்டார்கள்.

டொனால்ட் ட்ரம்பே இருந்த பெயரை தக்க வைக்க முடியுமா என விட்டதை அவ்வப்போது முறைத்து பார்த்து கொண்டு வருகின்றார் என்கிறார்கள் அவரது அமைச்சரவை சகாக்கள்…..

மாறாக மறுமுனையில் நம் இந்திய தேசம் அனைத்திலும் ஆழமான வேர் பிடித்து வளர எத்தனித்து வருகிறது .
ஆம்…… இன்று உள்ள நிலையில் உலக அளவில் சீனாவின் அதிநவீன தொழில்நுட்ப பண்புகளை தொட்டுவிடும் தூரத்தில் இல்லை…. துரத்தி பிடிக்கும் தூரத்தில் ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் ஒரு நாள் வெற்றி கொண்டு விடுவோம்.

  • ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்

இன்று முதல் LHB கோச்சிங் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவுவண்டி..

IMG 20250627 WA0501 1 - 2026

இன்று முதல் சிவப்பு நிற அதிநவீன LHB பெட்டிகளுடன் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவுவண்டி (16361/16362)! தனது பயணத்தை புது பொலிவுடன் துவக்கியுள்ளது.

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவுவண்டி (16361/16362) வழி கொல்லம் புனலூர் செங்கோட்டை தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் ராஜபாளையம் ஶ்ரீவில்லிபத்தூர் சிவகாசி 07.07.2025 இன்று முதல் பல்வேறு வசதிகளுடன் கூடிய LHB பெட்டிகளுடன் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16361/16362) இயக்கப்படுகிறது.

மலை வழியாக முதன் முதலாக அதிநவீன எல்ஹெச்பி பெட்டிகள் இயக்கப்படுகிறது இதுவே முதல் முறையாகும்.இதுவரை மலை வழியாக சுற்றுலா ரயில் மற்றும் தாம்பரம் கொச்சுவேலி சிறப்பு ரயில் மட்டுமே இந்த ரக பெட்டிகளும் இயக்கப்பட்டது. கேரளா ரயில் நிலையங்களில் நடை மேடை நீளம் அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது.இப்பணிகள் முடிந்ததும் 22பெட்டிகளுடன் எர்ணாகுளம் வேளாங்கண்ணி ரயில் தினசரி ரயிலாக‌இயக்க வாய்ப்பு உள்ளது என கேரளா எம்பி கொடி குன்னில் சுரேஷ் தெரிவித்திருந்தார்.

பயணிகள்தெற்கு ரயில்வேக்கு நன்றி தெரிவித்து உள்ள நிலையில் இதே போன்று கொல்லம் சென்னை கொல்லம் வழி புனலூர் செங்கோட்டை மதுரை ரயில் செங்கோட்டை – தாம்பரம் – செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில்களிலும் LHB பெட்டிகள் இணைத்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொல்லம் – செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கம், கொல்லம் – செங்கோட்டை வழித்தடத்தில் எல்ஹெச்பி ரேக்காக மாற்றப்பட்ட எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று வரவேற்றனர். பயணிகள் சங்கத் தலைவர் அட்வ. என். சந்திரமோகன் மற்றும் புரவலர் என்.பி. ராஜகோபால் ஆகியோர் புனலூர் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலின் லோகோ பைலட்டுகளுக்கு ஹரபர்பணம் வழங்கி, ரயில் எஞ்சினுக்கு மாலை அணிவித்து, பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.

சங்க நிர்வாகிகள் திபு ரவி, அஜிஷ் புன்னாலா, எஸ். லீ, சுமேஷ் எஸ், ரமேஷ் அவனூர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வரவேற்புக்கு தலைமை தாங்கினர்.

கொல்லம் – செங்கோட்டை வழித்தடத்தில் வழக்கமான ரயிலில் எல்ஹெச்பி ரேக் பெறுவது இதுவே முதல் முறை.

மீட்டர் கேஜ் காலத்தில் கொல்லத்திலிருந்து நாகூர் வரை தினமும் இயக்கப்பட்ட இந்த ரயிலை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.