கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சட்டவிரோதமாக ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தமிழகத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக வெளிநாட்டினர் ஊடுருவி வருகின்றனர். குறிப்பாக பங்களாதேஷ் போன்ற வெளிநாட்டினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான தங்கியுள்ளனர். இவர்களால் தமிழகத்தினுடைய உள்நாட்டுப் பாதுகாப்பு கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
உதாரணமாக கடந்த காலங்களில் பல சட்டவிரோத செயல்களில், போதை மருந்து கடத்தல் சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். குறிப்பாக பங்களாதேசை சேர்ந்தவர்கள் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், சென்னை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக போலி பாஸ்போர்ட், ஆதார் முதலியன தயார் செய்து இருந்து வருகின்றார்கள்.
சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் மிகப் பெரிய நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பங்களாதேசத்தை சேர்ந்தவர்கள். அதேபோல் அவினாசியில் பூர்ணா தேவி என்ற பெண்ணை வேலை செய்யும் இடத்தில் காதலித்து பங்களாதேஷுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு எந்தவித பாஸ்போர்ட், விசா கிடையாது.
பின்பு அந்த பெண் மர்மமான முறையில் மரணமடைந்து விட்டாள். பூர்ணா தேவி உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர முடியவில்லை. அதேபோல திருப்பூர் மங்கலம் ரோட்டில் ஒரு மளிகை கடையில் வேலை செய்த பங்களாதேசை சேர்ந்த முசுருதீன் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.
சமீபகாலமாக கோயமுத்தூர் – தொண்டாமுத்தூர் பகுதியில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா, பங்களாதேஷிகள் ஊடுருவி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் மாண்புமிகு உயர்நீதிமன்ற விசாரணையில் 48,000 பங்களாதேஷிகள் தமிழகத்தில் உள்ளதாக மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஈரோடு, பெருந்துறை,;திருப்பூர் பகுதியில் காவல்துறையினர் பங்களாதேசை சேர்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும். சட்ட விரோதமாக தமிழகத்தில் தங்கியுள்ள பங்களாதேஷிகளை கண்டுபிடித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தினைப் பாதுகாக்க வேண்டும். சாதாரண சட்டம்-ஒழுங்கு காவல்துறையினர் ரோந்து செல்லும் பொழுது விசாரித்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் இது நிரந்தரத் தீர்வாகாது. முழுமையான நடவடிக்கை ஆகாது.
பல்வேறு இடங்களில் தொழிலாளிகளைப் போல, வியாபாரிகளைப் போல ஊடுருவி வருகின்றனர். இவர்களை பெருக விட்டால் அசாம், மேற்கு வங்காளம் மாநிலங்களைப் போல நமது மாநிலத்திலும் பொருளாதாரத்திற்கும் வியாபார வர்த்தகம், பொது பாதுகாப்பிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்.
இதற்காக காவல்துறையில் தனியாக ஒரு துறை ஏற்படுத்தி, சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கைது செய்து நாடு கடத்துவதற்கு அந்த அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். இப்பொழுது சட்டம் ஒழுங்கு போலீசார் இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ஒவ்வொரு முறையும் சென்னை புழல் சிறையில் அடைத்து விசாரணை நடத்த பொழுது கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் கைதிகள் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாகிவிட்டார்.
இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.
தமிழகத்தின் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். எனவே தமிழக காவல்துறையில் இதனை தடுக்க சிறப்பு புலனாய்வு அமைப்பு ஒன்றை ஏற்படுத்திட வேண்டும். இந்த வெளிநாட்டு ஊடுருவக்காரர்களை கண்டுபிடித்து நாடு கடத்த வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ் காபந்து அரசின் முகமது யூனுஸ் சீனாவின் நீண்ட கால கோரிக்கை ஒன்றுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக வான்டட் ஆக வந்து அறிவித்திருந்தார்.
அது சிலிகுரி பகுதியை ஒட்டிய இடத்தில் சீனாவின் ஏர்-பேஸ் ஒன்றை கட்டிக் கொள்ள அனுமதிப்பது ஆகும். முதலில் நமக்கு சிலிகுரி பகுதியில் என்ன இருக்கிறது என தெரிய வேண்டும். அல்லது அது எங்கு அமைந்துள்ளது என்று தெரிந்து இருக்க வேண்டும்.
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை தரை மார்க்கமாக இணைக்கும் மிக மிக குறுகலான நிலப்பரப்பை தான் சிலிகுரி காரிடர் என்கிறோம். இதனை கோழிக்கழுத்து என்பர். பார்ப்பதற்கு வரைபடத்தில் அப்படி ஒரு தோற்றத்துடன் அது இருக்கும். வெறும் இருபது கிலோமீட்டர் குறுக்கு அளவு கொண்ட இடம்……சில இடங்களில் அது கூட 14 கிலோமீட்டருக்கு கீழே வந்து விடுகிறது.தற்சமயம் மேற்கு வங்க மாநிலத்தின் மேல் பகுதியில் வருகிறது.
சொல்லவா வேண்டும் மம்தா பானர்ஜி பற்றி ஓசைப்படாமல் ஒன்பது லட்சம் ஆதார் அடையாள அட்டைகளை வாரி வழங்கி இருக்கிறார் இவரது ஆட்சி காலத்தில்! ஒருத்தரும் இந்தியர் இல்லை என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்க முடியும் என்கிறார்கள். ஆன போதிலும் நடவடிக்கைகள் எடுப்பதில் பல நடைமுறை சிக்கல் உள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இப்படி ஆதார் அட்டை பெற்ற ஒருவர் கூட தற்சமயம் மேற்கு வங்காளத்தில் இல்லை. பிறகு? தென்னிந்திய மாநிலங்களில் குடிபெயர்ந்திருக்கிறார்கள்.
ஆப்ரேஷன் ஸிந்தூர் நடவடிக்கைகளின் போது. ஏழு இந்திய வடக்கிழக்கு மாநிலங்களை பிடித்துவிட வேண்டும் என்றெல்லாம் பேட்டி கொடுத்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. கடந்த ஆண்டு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவை அடித்து விரட்டி விட்டு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் என்பவரை பிடித்து வந்து பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கிறார்கள்.இது நடந்தது ஜோபைடன் ஆட்சி காலத்தில். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெற்றது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வந்தார்.
உடனடியாக இவர் பங்களாதேஷ் விட்டு பொட்டிபடுக்கையுடன் கிளம்ப தயாராகி இருந்தார். அதற்கேற்ப டொனால்ட் ட்ரம்ப் நம் இந்திய பிரதமர் சந்திப்பில், இது குறித்து செய்தியாளர்களிடம் கேட்டதற்கு. அவர் (அதாவது நம் இந்திய பிரதமரை) எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் .கூடவே என்னை விட சிறப்பாக செய்வார் என முண்டியடித்து பதில் தந்தார் ட்ரம்ப்.
இது நடந்தது பிப்ரவரி மாதத்தில்! ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற அத்தனையும் சீர் தூக்கிப் பார்த்தால், அதே பிப்ரவரி மாதத்தில் தான் ஏகப்பட்ட விஷயங்களுக்கான முன்னெடுப்பு நடந்திப்பது ஒவ்வொன்றாக தெரியவருகிறது. அத்தனையிலும் இந்திய எதிர்ப்பு ஏதோ ஒரு வகையில் இருக்கின்றது. யார் என ஆராய்ந்து பார்த்தால், டொனால்ட் ட்ரம்ப்பின் மகனை கை காண்பிக்கிறார்கள் இம்முறை.
அவர் பற்பல புதிய நிறுவனங்களை தொடங்கி இருக்கிறார் / வாங்கி இருக்கிறார். அல்லது இயக்குனராக வருகிறார். அந்த நிறுவனங்கள் அத்தனையும் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது. இந்நிறுவனங்களின் துரப்பணி எல்லாம் பாகிஸ்தானிய பங்களாதேஷ் ஒட்டிய இடங்களாகவே வருகிறது. அமெரிக்க அதிபர் நம் இந்திய பிரதமர் சந்திப்பின் பின்னரான காலத்தில் தான் காட்சிகள் எல்லாம் மாற்றம் கண்டு இருக்கிறது.
நம் இந்திய பிரதமர் எதற்கோ நோ சொல்லி இருக்கிறார். அழுத்தம் திருத்தமாக! அதன் வெளிப்பாடாக பற்பல விஷயங்கள் எல்லாம் முன்னெடுக்கப்பட்டுள்ளது மிக நன்றாக தெரிகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கான வித்து பிப்ரவரி மாதத்தில் ஊன்றிடப்பட்டுள்ளது. அதி நவீன உயர் திறன் மிக்க செயற்கை கோள் புகைப்படங்களை அமெரிக்க தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பெற்று இருக்கிறார்கள். அப்படி பெற்றது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருந்த போதிலும் அதன் இயக்குனர் பொறுப்பில் பாகிஸ்தானிய பிரஜை. அதுவும் கண்காணிப்பு குற்றவாளி ஒருவர் வருகிறார். இவரது நிறுவனத்திற்கான ஃபண்ட் அமெரிக்க கிராமின் சொசைட்டி வழங்கி இருக்கிறது. இதே கிராமின் வங்கி நிர்வாக குழு நிர்வாகிகளில் ஒருவராக நோபல் பரிசு பெற்ற யூனுஸ் வருகிறார். இவருக்கு ஒபாமாவே பரிசளித்திருக்கிறார். அந்த யூனுஸ் தான் இன்றைய பங்களாதேஷ் பிரதமர்.
மொத்த ஏழு நிறுவனங்களில் இருந்து பலருக்கும் ஃபண்ட்டிங் போயிருக்கிறது. பாகிஸ்தானில் மட்டும் 13 பேர் வருகிறார்கள்.அதில் முதல் இடத்தில் முனீர் வருகிறார். அதாவது பாகிஸ்தானிய ராணுவ தலைமை தளபதியே தான். ஆஸிம் முனீர் தான் அது.
ஆக இது அத்தனையும் இயற்கை எரிவாயு கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு தான் இத்தனை ஆர்ப்பாட்டமா என்றால். ஆம். கிட்டத்தட்ட இது அத்தனையும் பொருந்திப் போகிறது. பங்களாதேஷ் ஒட்டிய கடல் பிராந்தியத்தில் சுமார் 73,000 சதுர பரப்பளவில் இயற்கை எரிவாயு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே பாகிஸ்தானை ஒட்டிய அரபிக் கடலில் இதே போன்றதொரு படுகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இதன் பரப்பளவு வெளியிடப் படவில்லை.
இவை இரண்டையும் கைக்கொள்ள அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. ட்ரம்ப் குடும்பம் இதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் விருப்பங்கள் உண்டு. தவிர அடுத்த அதிபர் பதவிக்கு ஜூனியர் ட்ரம்பை கொண்டு வர உத்தேசித்து காய் நகர்த்தி வருகிறார்கள் ஒரு சாரார்.
இவற்றை எல்லாம் கணக்கிட்டு காய் நகர்த்த, நெப்போட்டிஸம், குடும்ப ஆட்சி, வாரிசுகள் அலப்பறை என்றாலே பற்றிக் கொண்டு வரும் பிரதமர் மோடிக்கோ, எரியும் தீயில் எண்ணெய் வார்த்தது போலானது. மிகத் தீவிரமான யுத்த முஸ்தீபுகள் முன்னெடுக்க இதுவும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.
இவையும் இன்றுள்ள நிலையில் ஒத்துப் போகிறது. சொல்லி வைத்தது போலே அரபு நாடுகளில் விஜயம் செய்தார் டொனால்ட் ட்ரம்ப். ஒரு ட்ரில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் என்றார் பொது வெளியில். ஆனால் எங்கே எதற்கு என வெளிப்படையாக வாயே திறக்கவில்லை அவர்.
வாதத்திற்கு, பாகிஸ்தானிய பங்களாதேஷ் பகுதிகளில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுத்து இவர் என்ன செய்ய போகிறார். எதற்கு இத்தனை அக்கப்போர்? இவற்றை எடுத்து இவர் நமக்கே விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தார் என்றால் எத்தனை பெரிய எத்தன் இவர் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு இந்தியா துணை போகக்கூடாது என்பது இவரது வாதம். அதேசமயம் இங்கு உள்ள படுகையில் இருந்து எடுத்து இவர் நமக்கே விற்பனை செய்ய உத்தேசித்து காய் நகர்த்தி இருந்தார் என்றால் நம்மை எவ்வளவு தூரம் நினைத்துக் கொண்டு இருக்கிறார் பாருங்கள். இந்தியா விடுவதாக இல்லை. அதேசமயம் வெளிப்படையாக எதையும் பேசவில்லை.
ஆனால் காரியத்தில் கண்ணாக இருக்கிறார்கள். ராணுவ பயிற்சி ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி முடிந்திருக்கிறார்கள். இதில் AI தொழில்நுட்ப பண்புகள் மூலம் ரோபோடிக்ஸ் முறையில் சிலவற்றை முன்னெடுத்ததாக சொல்கிறார்கள். சில பல காரணங்கள் முழுமையாக இங்கு விளக்க வில்லை. அதுபோலவே நம் இந்திய தரப்பில் கடற்படை மூலம் நோட்டம் (Notification to Airmen) நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள்.
யூனுஸ் முற்றாக எங்கோ பதுங்கி இருக்கிறார். அநேகமாக ஆப்ரேஷன் ஸிந்தூர் போன்றதொரு நடவடிக்கையை பங்களாதேஷ் பக்கமும் வரவிருக்கும் நாட்களில் எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது இவர்களின் நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால், ஏற்கனவே பங்களாதேஷ் துறைமுகத்தில் இருந்து எந்த ஒரு இறக்குமதியையும் இந்திய கிழக்கு பகுதியில் வரும் துறைமுகத்திலும் அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறார்கள். பங்களாதேஷில் இருந்து மும்பை துறைமுகத்திற்கு மாத்திரமே அனுமதி கொடுத்து அதிர வைத்து இருக்கிறார்கள்.
நிலப் பரப்பு ஊடாக மட்டுமன்றி கடல் வழி பாதைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் நம்மவர்கள். ஏதோ ஒன்றை மிகத் தீவிரமாக மிகத் துல்லியமாக தெளிவாக முன்னெடுத்து வருகிறார்கள். நாமும் கொஞ்சம் பொறுந்திருந்து பார்க்கலாம்.
மதுரை, உசிலம்பட்டி அருகே தென் திருப்பதி என அழைக்கப்படும் சிந்துபட்டி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பின் திருத் தேர்ரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சிந்துபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது, தென் திருப்பதி என, அழைக்கப்படும் பழமையான வெங்கடாஜபதி பெருமாள் திருக்கோவில்.
இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 11 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் 18 ஆண்டுகளுக்கு பின் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
60 அடி உயரமுள்ள திருத்தேருக்கு வர்ணம் பூசப்பட்டு வெங்கடாஜலபதி பெருமாள் சுவாமியை திருத்தேரில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோசங்களுடன் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வலம் வந்த திருத்தேரோட்டம், இறுதியில் கோவிலில் நிறைவுற்றது.
இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.
இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் பெஹல்கமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அப்பாவி இந்திய சுற்றுலா பயணிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்தது. அதன் மூலம் பாகிஸ்தான் நிலைகுலைந்த்து.
இதை அடுத்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, தண்ணீரும் செந்நீரும் ஒன்றாகப் பாய முடியாது என்று குறிப்பிட்டு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தார். அதுபோல், வணிகமும் பயங்கரவாதமும் ஒன்றாக மேற்கொள்ள முடியாது என்றார். பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாக பயணிக்க முடியாது என்றார். இதனால் பல்வேறு துறைகளில் இந்திய பாகிஸ்தான் உறவுகள் முற்றிலும் நின்று போயின. இதுவே உலக நாடுகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த நாடுகள், ஆயுதங்கள் அளித்த நாடுகளுகும் இந்தியா தனது உறவுகளில் திரைகளைப் போட்டு வருகிறது.
இந்த நிலையில், கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீசிக் கொண்டிருக்க முடியாது என்று குறிப்பிடும் வகையில் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிகளை இந்தியா முற்றிலும் நிறுத்தி உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையான பிரச்சினைகளை மையப்படுத்தி அனைத்து விதமான ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் தற்காலிகமாக இந்தியா விலகியுள்ளது. பெஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் உடனான எந்த விதமான உறவையும் இந்தியா ஆதரிப்பது இல்லை. பாகிஸ்தான் அணி உடனான கிரிக்கெட் தொடர்களிலும் இந்தியா விளையாடாது என ஏற்கெனவே அறிவித்திருந்தது
இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்பு நடத்தும் மகளிர் மற்றும் ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்தியா பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஆகியவற்றுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கக்கூடிய வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2025 ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை ஏசிசிக்கு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் பதட்டங்கள் மோசமடைவதால், இந்த நடவடிக்கை.
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற உள்ள மகளிர் வளர்ந்து வரும் அணிகள் ஆசிய கோப்பை 2025 போட்டியிலிருந்தும் பிசிசிஐ விலகியுள்ளது. தற்போது பாகிஸ்தானின் மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தலைமையிலான ஏசிசி, சர்ச்சையின் மையமாக உள்ளது. இந்திய அதிகாரிகளோ, தேச நலன் மற்றும் தேசிய உணர்வுகள் அதிகரித்துள்ள நேரம் என்பதை இந்த முடிவுக்கான காரணமாகக் குறிப்பிடுகின்றனர்.
பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் கூறியபோது, “பாகிஸ்தான் அமைச்சரை தலைவராகக் கொண்ட ஏசிசி ஏற்பாடு செய்யும் போட்டியில் இந்திய அணி விளையாட முடியாது. அதுதான் நம் நாட்டின் உணர்வு. நாங்கள் எங்கள் விலகலை வாய்மொழியாகத் தெரிவித்துவிட்டோம், மேலும் ஏசிசி நிகழ்வுகளில் எங்கள் எதிர்கால பங்கேற்பும் இனி ஆய்வு செய்யப்படும்.” என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் இந்த முடிவு, 2025 ஆசியக் கோப்பையின் அடித்தளத்தையே சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக செப்டம்பர் மாதம் டி20 வடிவத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. நடப்பு சாம்பியனான இந்தியா, 2023 பதிப்பின் இறுதிப் போட்டியில் இலங்கையை தோற்கடித்தது. எனவே இந்திய அணி மீண்டும் இந்த நிகழ்வில் தலைமை தாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பெரும்பாலான ஆசியக் கோப்பை ஸ்பான்சர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், இந்தியா இந்தப் பிராந்தியத்தின் மிகப்பெரிய ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கொண்டிருப்பதாலும், போட்டியின் போட்டித்தன்மையை மட்டுமல்ல, அதன் வணிக நம்பகத்தன்மையையும் அச்சுறுத்தியுள்ளதை பிசிசிஐ கவலையுடன் பார்க்கிறது.
2023ல் பயன்படுத்தப்பட்ட கலப்பு வடிவம் போன்ற ஒரு சமரச மாதிரியை ஏதாவது ஒரு வகையில் யோசித்து, இந்தியாவின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யாவிட்டால், இந்தத் தொடர்களே ரத்தாகும், அல்லது மேலும் தாமதத்துக்கு வழி செய்யக் கூடும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைப் பொறுத்தவரை, இதன் விளைவுகள் தெளிவு. பிசிசிஐயின் உறுதியான நிலைப்பாடு, தலைமை மாற்றங்கள் செய்யப்படாவிட்டால், ஏசிசி குடையின் கீழ் நடைபெறும் நிகழ்வுகளை பெரிய அளவில் புறக்கணிக்க வழிவகுக்கும்.
குறிப்பாக, கடைசியாக ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடத்தப்பட்டபோது, இந்தியா சுற்றுப்பயணம் செய்ய மறுத்ததன் விளைவாக, இறுதிப் போட்டி உட்பட அனைத்து இந்திய போட்டிகளும் இலங்கையில் நடத்தப்பட்டு, அதன்படி ஒரு கலப்பு வடிவம் உருவானது.
பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 க்கு இது ஒரு கவலைக்குரிய முன்னுதாரணமாக அமைந்துவிட்டது. பாகிஸ்தான் ஏற்பாடு செய்யும் எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்க பிசிசிஐயின் தயக்கம் அதிகரித்து வருவதால், ஐசிசி இடத்தை மாற்றவோ அல்லது நடுநிலையான மைதானங்களில் நடத்தும் முன்மாதிரியை ஏற்கவோ நேரிடும்.
ஆப்கானிஸ்தானின் பக்ராம் ஏர்பேஸ் இந்தியாவுக்கு கை மாறுகிறதா?
விஜயகுமார் அருணகிரி
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரி ய ஏர்பேஸான பக்ராம் ஏர்பே ஸை கைப்பற்ற இந்திய அரசு தலிபான்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறது.
1950 களில் ஆப்கானிஸ்தானின் நட்பு நாடாக இருந்த சோவியத் யூனியன் தான் பக்ராம் ஏர்பேஸை உருவாக்கிக் கொடுத்தது. 1989 வரை பக்ராம் ஏர்பேஸ் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அடுத்து அமெரிக்காவின் கைகளுக்கு மாறியது. 2021 ல் அமெரிக்கா பக்ராம் ஏர்பேஸை விட்டு விலகிய பிறகு தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது.
இப்பொழுது இந்த ஏர்பேஸை மீண்டும் கைப்பற்றி விட அமெரிக்கா துடிக்கிறது. சீனா பக்ராம் ஏர்பேஸை ஆட்டைய போட தலி பான்களை பணத்தினால் குளிப்பாட்டிக் கொண்டு இருக்கிறது.
இப்பொழுது இந்தியாவும் பக்ராம் ஏர்பேஸை கைப்பற்றி விட களத்தில் இறங்கி விட்டது. பக்ரா ம் ஏர்பேஸை கைப்பற்ற இந்தி யா களம் இறங்கியதால் தான் ட்ரம்பிற்கு இந்தியா மீது கோபம் வந்து விட்டது. இந்தியாவிற்கு பக்ராம் ஏர்பேஸ் மிக முக்கியமானது ஏன் என்றால் இந்தியா தஜிகிஸ்தானில் பர்கோர் மற்றும் அய்னி என்கிற இரண்டு நகரங்களில் ஏர்பேஸ்களை வைத்து இருக்கிறது. இது முழு அளவில் இந்தியாவின் ராணுவப்பயன்பாட்டுக்க்காக மட்டுமே இருக்கிறது.
வெளிநாடுகளில் இந்தியாவின் மிலிட்டரி பேஸ் உள்ள மிக முக் கியமான நாடு தஜிகிஸ்தான் தான். தஜிகிஸ்தான் பாகிஸ்தான் இடையே அனுமார் வால் மாதிரி ஆப்கானிஸ்தான் நீண்டு பாகிஸ்தானையும் தஜிகிஸ்தானையும் பிரித்து இருக்கிறது.
ஆப்கானிஸ்தானின் பக்ராம் ஏர்பேஸ் சீனாவின் கைகளுக்கு சென்று விட்டால் தஜிகிஸ்தானில் உள்ள இந்தியாவின் பர்கோர் மற்றும் அய்னி ஏர்பேஸ்களுக்கு சிக்கல் உண்டாகி விடும். இந்தியா விமானப்படைகள் பாகிஸ்தானை தாக்க விடாமல் சீனா பக்ராமில் இருந்து தடுத்து விடும்.
ஒரு வேளை பக்ராம் ஏர்பேஸ் இந்தியாவின் கைகளுக்கு வந்து விட்டால் பாகிஸ்தானின் க தை கந்தல் தான். வடக்கே தஜிகிஸ்தான் ஏர்பேஸ் மேற்கே ஆப்கானிஸ்தான் ஏர்பேஸ்களில் இருந்து இந்திய விமானப்படை பாகிஸ்தானை அடித்து நொறுக்கி விடும்.
அதனால் பக்ராம் ஏர்பேஸை கைப்பற்ற இந்தியா அனைத்து வழிகளிலும் முயற்சித்து கொண்டு இருக்கிறது. சோவியத் யூனியன் உருவாக்கி அமெரிக்கா நவீனப்படுத்திய பக்ராம் ஏர்பேஸ் இந்தியாவிற்கு கிடைத்து விட்டால் இந்தியாவும் வல்லரசுகளின் வழியில் பயணப்பட ஆரம்பித்து விடும்.
பக்ராம். இஸ்லாமிய நாட்டில் இந்து பெயர் மாதிரி தெரிகிறதே என்று யோசிக்கிறீர்களா? ப க்ராம் என்றால் சமஸ்கிருதத்தி ல் ராமனின் தோட்டம் என்று பெயராம். அதனால் பக்ராம் இந்தியாவின் தோட்டமாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
பஞ்சாப் கிங்க்ஸ் அணி (219/5, நெஹல் வதேரா 70, ஷஷாங்க் சிங் 59, ஷ்ரேயாஸ் ஐயர் 30, பிரப்சிம்ரன் சிங் 21, அஸ்மத்துல்லா ஒமர்சாய் 21, துஷார் தேஷ்பாண்டே 2/37, வெனா மபாகா, ரியன் பராக், ஆகாஷ் மத்வால் தலா ஒரு விக்கட்), ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (209/7, துருவ் ஜுரல் 53, யசஷ்வீ ஜெய்ஸ்வால் 50, வைபவ் சூர்யவன்ஷி 40, சஞ்சு சாம்சன் 20, ஹர்ப்ரீத் ப்ரார் 3/22, மார்கோ ஜேன்சன் 2/41, ஒமர்சாய் 2/44) 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அதன் தொடக்க வீரர்களில் ஒருவரான பிரியான்ஷ் ஆர்யா (9 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் மூன்றாவதாகக் களமிறங்கிய மிட்சல் ஓவன் (பூஜ்யம் ரன்) ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் பிரப் சிம்ரன் சிங் (10 பந்துகளில் 21 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) நாலாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். மிக மோசமான நிலையில் இருந்த பஞ்சாப் அணியின் ஸ்கோரை நெஹல் வதேரா (37 பந்துகளில் 70 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்), ஷ்ரேயாஸ் ஐயர் (25 பந்துகளில் 30 ரன், 5 ஃபோர்) மற்றும் ஷஷாங்க் சிங்-உடன் (30 பந்துகளில் 59 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) இணைந்து நல்ல நிலைக்கு உயர்த்தினார். இறுதியில் விளையாட வந்த அஸ்மத்துல்லா ஓமர்சாய் (9 பந்துகளில் 21 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடியதால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 219 ரன் எடுத்தது.
220 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆட ஆரம்பித்தா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் வெகு வேகமாக ரன் சேர்த்தது. பின்னர் சுணக்கம் ஏற்பட்டு 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. 16ஆவது ஓவர் முடிவில் வெற்றிக்கு 55 ரன்கள் தேவைப்பட்டது. துருவ் ஜுரல் (31 பந்துகளில் 53 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் (11 ரன்) இருவரும் ஆடிக்கொண்டிருந்தார்கள். 20ஆவது ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டன். ஆனால் அதுவரை நன்றாக ஆடிக்கொண்டிருந்த துருவ ஜுரல் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் வனிந்து ஹசரங்கா ஆட்டமிழந்தார். அடுத்த மூன்று பந்துகளில் 20 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை. ஆனால் அந்த 20 ரன்களை ராஜஸ்தான் அணி அடிக்க முடியவில்லை. அதனால் அந்த அணி தோல்வியைத் தழுவியது.
மூன்று விக்கட்டுகள் எடுத்த பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் ஹர்ப்ரீத் ப்ரார் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
டெல்லி vs குஜராத்
டெல்லி கேபிடல்ஸ் அணியை (199/3, கே.எல் ராகுல் 112, அபிஷேக் போரல் 30, அக்சர் படேல் 25, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 21, அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா ஒரு விக்கட்), குஜராத் டைடன்ஸ் அணி (205/0, சாய் சுதர்ஷன் ஆட்டமிழக்காமல் 108, ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 93) 10 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாடவந்த டெல்லி அணிக்கு கே.எல். ராகுல் இன்று தொடக்கவீரராகக் களமிறங்கினார். ஆனால் மற்றொரு தொடக்க வீர டியூ பிளேசிஸ் (5 ரன்) நாலாவது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் ராகுல் (65 பந்துகளில் 112 ரன், 14 ஃபோர், 4 சிக்சர்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் அபிஷேக் போரல் (19 பந்துகளில் 30 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), அக்சர் படேல் (16 பந்துகளில் 25 ரன், 2 ஃபோர் 1 சிக்சர்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (10 பந்துகளில் 21 ரன், 2 சிக்சர்) ஆகியோருடன் இணைந்து அணி யின் ஸ்கோரை 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட் இழப்பிற்கு 199 ரன் என்ற நிலைக்குக் கொண்டுவந்தார்.
200 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (61 பந்துகளில் 108 ரன், 12 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் ஷுப்மன் கில் (53 பந்துகளில் 93 ரன், 3 ஃபோர், 7 சிக்சர்) இந்த ஐபிஎல் சீசனில் வெற்றிகரமான தொடக்க வீரர் ஜோடி ஆகும். இவர்கள் இருவரும் 19 ஓவர்களில் 205 ரன் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
குஜராத் அணியின் சாய் சுதர்ஷன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
புள்ளிப் பட்டியலில் தற்போது முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத் (18), பெங்களூரு (17), பஞ்சாப் (17) ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன. நாலாவ்து இடத்திற்கு வரப்போகும் அணி எது என்பது மீதமுள்ள ஆட்டங்களில் முடிவாகும்.
விக்கிரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா பால்குடம் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமம் இந்து நாடார் உறவின் முறைக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. சக்தி கரகம் எடுத்து பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து நந்தவனத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து திருக்கோவிலை அடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் நாடார் மகாஜன மாநில தலைவர் கரிக்கோல்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். ஏற்பாடுகளை விக்கிரமங்கலம் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சங்க நிர்வாகிகள் தலைவர் ராஜேந்திரன், செயல் தலைவர் வையாபுரி, பொருளாளர் ராஜபாண்டியன், செயலாளர் சௌந்தர பாண்டி ,துணைச் செயலாளர் மனோகரன், பூசாரிகள் மோகன், சிவா ,பழனிவேல், பாலமுருகன் மற்றும் பலர் செய்திருந்தனர். விக்கிரமங்கலம் ஊராட்சி சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் செய்யப்பட்டது காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்
லட்சுமி ஹயக்கீரிவருக்கு சிறப்பு பூஜை
மதுரை அண்ணாநகர், வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் லட்சுமி ஹயக்கீரிவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இக் கோயிலில், மாதந்தோறும் திருவோணம் நட்சத்திரத்தன்று, லட்சுமி ஹயக்கீரிவருக்கு,சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெறுகிறது.
இன்று,திருவோணம் நட்சத்திரத்தன்று, லட்சுமி ஹயக்கீரிவருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது. கோயில் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் முத்துக்குமார், மணி மாறன் மற்றும் ஆன்மீக பெண்கள் குழுவினர் செய்து இருந்தனர்.
இதேபோல் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, இக் கோயிலில் உள்ள வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சணைகள் நடைபெற்றது. மதுரை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயம், மதுரை யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. பூஜைகளை, மணிகண்டன் பட்டர் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகி முருகன் மற்றும் ஆலய பரிபாலன சபை நிர்வாகிகள் செய்தனர்.
சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய போது தீயணைப்பு துறையினரால் காப்பாற்றப்பட்ட பிளஸ் ஒன் மாணவன் குடும்பத்துடன் சென்று அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் கள்ளழகர் தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் வைகை ஆற்றில் மூழ்கி பிளஸ் ஒன் மாணவர்கள் இருவர் உயிருக்கு போராடிய நிலையில் சோழவந்தான் தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அதில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவர் உயிரிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் இருந்த மற்றொருவனை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிளஸ் ஒன் மாணவன் ஒருவார சிகிச்சைக்கு பின்பு இயல்பு நிலைக்கு திரும்பினார். இந்த நிலையில் தனது உயிரை காப்பாற்றிய சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தனது குடும்பத்துடன் நேரில் சென்று நன்றியை தெரிவித்தார். நிலைய அலுவலர் நாகராஜன் முதலுதவி செய்த சரவணன் மற்றும் மதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மதுரை, உசிலம்பட்டியில் ஆப்ரேசன் சிந்தூர் மூலம் நீதியை நிலை நாட்டிய இந்திய இராணுவத்திற்கும், பாரத பிரதமருக்கும் நன்றி தெரிவித்து, பாஜக மதுரை மேற்கு மாவட்டம் சார்பில் மூவர்ண கோடி பேரணி நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம், ஆப்ரேசன் சிந்தூர் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அதிர வைத்து நீதியை நிலை நாட்டிய இந்திய இராணுவத்திற்கும், பாரத பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம் பாஜக மதுரை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது.
உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து துவங்கிய இந்த பேரணியை பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் சிவலிங்கம், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், மாவட்ட பொதுச் செயலாளர் இன்பராணி, மாவட்ட செயலாளர் தீபன் முத்தையா, தொழில் முனைவோர் பிரிவு மாவட்டத் தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் துவக்கி வைத்து மதுரை ரோடு, தேவர் சிலை வழியாக தேனி ரோடு முருகன் கோவிலில் நிறைவுற்றது.
இப்பேரணியில், பாரத தாய் மற்றும் நேதாஜி வேடமிட்டு பேரணியில் நடந்து வந்த இரு குழந்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். மதுரை மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு , பாரத பிரதமருக்கும், இந்திய இராணுவ வீரர்களுக்கும் நன்றி தெரிவித்து கோசங்களை எழுப்பி ஊர்வலமாக வந்தனர்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் தமிழகம் காவி நாடு அல்ல திராவிட நாடு என வழக்கம் போல பிரிவினையை தூண்டி இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்! ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தைப் போற்றுகின்ற மாநிலம் தமிழகம்! என்று இந்து முன்னணிஅமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நேற்று (17/05/2025) நடந்த “மத யானை” என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இது காவி நாடு அல்ல திராவிட நாடு என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தினுடைய ஆன்ம பலமே ஆன்மீக பலம் தான் என்பதை முதல்வர் அவர்கள் உணராமல் இவ்வாறு பேசியிருக்கிறார். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழகம். அப்படிப்பட்ட திருக்குறள் ஆன்மீகத்தை தான் பறைசாற்றுகிறது.
திராவிட நாடு என்பது ஒரு மாயை தானே தவிர அது உண்மையல்ல. திமுக ஆரம்ப காலம் முதலே திராவிடம் என்ற மாயையை கையில் எடுத்து தமிழகத்தில் நாத்திகம் என்ற பெயரில் இந்து விரோதம் தான் பேசி வருகிறது. இந்து மத இதிகாசங்களையும் இந்து மத கடவுள்களையும் நம்பிக்கைகளையும் கேலியும் கிண்டலும் பேசியதும் தி.மு.க தலைவர்களே.
தேர்தல் நேரத்தில் மொழி பிரிவினையைப் பேசி தமிழகத்தில் தேசிய சிந்தனையை எதிர்க்கும் நோக்கோடு செயல்பட்ட கட்சி திமுக. காவியை எதிர்ப்பதாக சொல்லி திமுகவிற்கு ஓட்டு போட்ட இந்துக்களின் மனதை புண்படுத்துகிறார் முதல்வர்.
காவி என்பதை ஒரு கட்சியினுடைய அடையாளமாக ஸ்டாலின் அவர்கள் பார்க்கிறார். ஆனால் காவி என்பது தியாகத்தின் அடையாளம். சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள் என வாய் கிழிய பேசும் திமுகவினர் தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் ஆன்மீகம் தான் போதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
தமிழகத்தில் தான் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்ய பிரபந்தம், அபிராமி அந்தாதி இன்னும் பலவிதமான பக்தி இலக்கியங்கள் மக்களை நல்வழிப்படுத்தி கொண்டிருக்கிறது.
பாரத நாட்டில் தமிழகத்தில் தான் அதிக கோவில்கள் உள்ளன. ஆன்மீகத்தோடு பின்னிப்பிணைந்த கலாச்சாரமும் பண்பாடும் தமிழகத்தில் இன்றுவரை போற்றப்பட்டு வருகிறது.
இதையெல்லாம் அறியாத திராவிட மாடல் அரசு ஆன்மீகப் பெரியோர்களான ஔவை பாட்டி, அருள் பிரகாச வள்ளலார், திருவள்ளுவர் ஆகியோர் நெற்றியில் இருந்த இந்து மத அடையாளங்களை அழித்து தங்களது இந்து விரோத போலி நாத்திக கருத்தைத் திணித்தது. அது மட்டுமல்லாமல் சனாதனத்தை அழிப்பேன் என திமுக தலைவர்களை பேச வைத்தது.
திராவிடம் என்பது ஒரு நிலப்பரப்பை குறிக்கும் சொல்தானே தவிர அது இனத்தை, மொழியை குறிப்பதல்ல. இன்னும் சொல்லப்போனால் இவர்கள் குறிக்கும் இந்த திராவிடம் என்ற சொல் தமிழனின் மாண்பை மறைத்து ஆங்கிலேயன் மேற்கத்திய நாகரிகத்தை திணிக்கும் கோட்பாடு என்பதுதான் நிதர்சனமான உண்மை.
திராவிடம் என்று உங்களால் வரையறுக்கப்பட்ட அண்டை மாநிலங்கள் ஆன கேரளாவிலோ கர்நாடகாவிலோ ஆந்திராவிலோ திராவிடம் என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்துவதே இல்லை. திமுக தங்களது சுய லாபத்திற்காக இந்து மதத்தை அழிக்கும் நோக்கோடு இது காவி நாடல்ல என பேசி வருகிறது . தேசிய கல்விக் கொள்கை என்பது அனைத்து மாணவர்களும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி, தாய்மொழி வழி கல்வியை இலவசமாக தருவதை உறுதி செய்கிறது. மேலும் பிற மொழிகளையும் கற்கவும் வாய்ப்பு தருகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள வலியுறுத்துகிறது.
இதுநாள் வரை தமிழக மாணவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் சரித்திரத்தை அறிய விடாமல் முகலாய ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்கள் வரலாற்றை தான் திணித்து வந்துள்ளார்கள். ஆனால் இன்று தமிழ் மன்னர்கள் ஆளுமையை வரலாற்றை படிக்கும் வாய்ப்பை தேசிய கல்விக் கொள்கை ஏற்படுத்தி தருகிறது. அதை சகிக்க முடியாமல் தேசிய கொள்கையை ஏற்க மாட்டோம் என கூறுவது அபத்தத்திலும் அபத்தம்.
திராவிட மாடல் தமிழ் வளர்த்த லட்சணம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்தவர்கள் வெறும் எட்டு நபர்கள் மட்டுமே. ஆனால் ஆங்கில மொழியில் நூற்றுக்கு நூறு எடுத்தவர்கள் மிகப் பலர் அந்த வகையில் திராவிடம் தமிழை வளர்த்ததா? அல்லது ஆங்கிலத்தை திணித்துள்ளதா? என்பதை அறிய முடிகிறது.
தேசிய கல்விக் கொள்கையை பற்றி பேசும் பொழுது சம்பந்தமே இல்லாமல் காவி என்ற புனித வார்த்தையை ஏதோ தீண்டாத வார்த்தை போல தமிழக முதல்வர் சித்தரித்து இருப்பது கண்டனத்துக்குரியதாகும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்து எழுச்சியை பார்த்து முதல்வர் அவர்கள் அச்சத்தில் இவ்வாறு பேசியிருக்கிறார். பல ஆன்மீகவாதிகளும் ரிஷிகளும் முனிவர்களும் தேசியத்தை உயிரெனக் கொண்ட வ.உ.சி., மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, சுப்ரமணிய சிவா இன்னும் பல தேச பக்தர்களும் அவதரித்த பூமி தமிழகம் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அனைத்து மதத்தினரின் வாக்குகளை வாங்கிக் கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் காழ்புணர்ச்சியோடு இது காவி நாடு அல்ல என பேசி இருக்கும் தமிழக முதல்வர் அவர்கள் தனது பேச்சினை திரும்ப பெற வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது
எப்போதெல்லாம் திமுகவின் ஊழலும் லஞ்சமும் அம்பலபடுத்த படுகிறதோ அப்போதெல்லாம் திராவிடம், வடக்கு தெற்கு, தமிழ் இந்தி என வாய்க்கு வந்த படி பிரிவினை பேசுவது திமுகவின் வாடிக்கை
அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கதுறை சோதனை மற்றும் துணை முதல்வருக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் அமலாக்க துறை சோதனை என்றவுடன் திமுகவின் லஞ்சம் ஊழல் அம்பலப்படுவதை திசை திருப்ப முதல்வர் இவ்வாறு பேசியிருக்கிறார் என்பதை மக்கள் அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள்..