எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஐ.பி.எல் 2025 – இன்று இரண்டு ஆட்டங்கள் – 04.05.2025
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
கொல்கொத்தா vs ராஜஸ்தான்
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (206/4, ரசல் 57, ரகுவன்ஷி 44, குர்பாஸ் 35, ரஹானே 30, ரிங்கு சிங் 19ஆர்ச்சர், யுத்வீர் சிங், தீக்ஷணா, ரியன் பராக் தலா ஒரு விக்கட்) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (205/8, ரியன் பராக் 95, ஜெய்ஸ்வால் 34, ஹெட்மயர் 29, ஷுபம் துபே 25, மொயின் அலி, ஹர்ஷித் ராணா, வருண் தலா இரண்டு விக்கட், வைபவ் அரோரா 1/50) 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சுனில் நரேன் (9 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இரண்டாவது ஓவர் முடிவில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் (25 பந்துகளில் 35 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) அஜிங்க்யா ரஹானே உடன் (24 பந்துகளில் 30 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) இணைந்து வேகமாக அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அதன் பின்னர் அங்கிரிஷ் ரகுவன்ஷி (31 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர்), ஆண்ட்ரூ ரசல் (25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ரன், 4 ஃபோர், 6 சிக்சர்), ரிங்கு சிங் (6 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 19 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) மூவரும் அணி 20 ஓவர்களில் நாலு விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுக்க உதவினர்.
வெற்றிக்கு 20 ஓவர்களில் 207 ரன் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர், இளம் வயது வைபவ் சூர்யவம்ஷி (4 ரன்) முதல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதற்கு அடுத்து குனால் சிங் ராதோர் (பூஜ்யம் ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர் மற்றொரு தொடக்கவீரரான யசஸ்வீ ஜெய்ஸ்வால் (21 பந்துகளில் 34 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) ரியான் பாராக் (45 பந்துகளில் 95 ரன், 6 ஃபோர், 8 சிக்சர்) உடன் இணைந்து பவர் பிளே ஓவர்களில் 59 ரன்கள் எடுக்க வைத்தார்.
ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததும், துருவ் ஜுரல் மற்றும் வனிந்து ஹசரங்கா இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஷிம்ரன் ஹெட்மயர் (23 பந்துகளில் 29 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஷுபம் துபே (14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 25, 1 ஃபோர், 2 சிக்சர்), ஆர்ச்சர் (8 பந்துகளில் 12 ரன், 1 ஃபோர்) மூவரும் அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 205 என்ற நிலைக்குக் கொண்டு வந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கொல்கொத்தா அணியின் ஆண்ட்ரூ ரசல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
பஞ்சாப் vs லக்னோ
பஞ்சாப் கிங்க்ஸ் அணி (236/5, பிரப்சிம்ரன் சிங் 91, ஷ்ரேயாஸ் ஐயர் 45, ஷஷாங்க் சிங் 33, ஜோஷ் இங்கிலிஷ் 30, ஆகாஷ் சிங் 2/30, திக்வேஷ் ரத்தி 2/46, பிரின்ஸ் யாதவ் 1/43) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (199/7, ஆயுஷ் பதோனி 74, அப்துல் சமத் 45, ஆவேஷ் கான் 19, ரிஷப் பந்த் 18, எய்டன் மர்க்ரம் 13, அர்ஷ்தீப் சிங் 3/16, ஒமர்சாய் 2/33, மார்கோ ஜென்சன் 1/31, சாஹல் 1/50) 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அத்னால் முதலில் மட்டையாட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (1 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் (48 பந்துகளில் 91 ரன், 6 ஃபோர், 7 சிக்சர்) 18.5ஆவது வரை விளையாடினார்.
அவர், ஜோஷ் இங்கிலீஷ் (14 பந்துகளில் 30 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்), ஷ்ரேயாஸ் ஐயர் (25 பந்துகளில் 45 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), நெஹல் வதேரா 99 பந்துகளில் 16 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோருடன் இணைந்து பஞ்சாப் அணிக்கு நல்ல ஸ்கோர் அடைய உதவினார்.
இறுதியில் ஷஷாங்க் சிங் (15 பந்துகளில் 35 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (5 பந்துகளில் 15 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இருவரின் ஆட்டத்தால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 236 ரன் எடுத்தது.
237 என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய லக்னே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆயுஷ் பதோனி (40 பந்துகளில் 74 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) மட்டுமே சிறப்பாக ஆடினார். பின்னால் அப்துல் சமத் (24 பந்துகளில் 45 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்) நன்றாக ஆடினார்.
பிற வீரர்களான எய்டன் மர்க்ரம் (13 ரன்), மிட்சல் மார்ஷ் (பூஜ்யம் ரன்), நிக்கோலஸ் பூரன் (6 ரன்), ரிஷப் பந்த் (18 ரன்), டேவிட் மில்லர் (11 ரன்), ஆவேஷ் கான் (ஆட்டமிழக்காமல் 19 ரன்), பிரின்ஸ் யாதவ் (ஆட்டமிழக்காமல் 1 ரன்) ஆகியோர் நிலைத்து ஆடவும் முற்படவில்லை; வேகமாக ரன் சேர்க்கவும் முயலவில்லை.
இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 199 ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 37 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர், பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவிலில் கண்ணன் ராதா கல்யாண மகா உற்சவம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு இன்று மாலை முதல் பஜனை பாடல்கள் பாடப்பட்டு பக்தர்கள் பக்தி வெள்ளப் மிதந்தன பஜனை பாடல்களை கடையநல்லூர் பிரம்ம ஸ்ரீ ராஜகோபாலதாஸ் பாகவதர் குழுவினர் பஜனை பாடல்கள் பாடி பக்தர்களை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
தொடர்ந்து மறுநாள் காலை ஏழு மணி முதல் ராதா கல்யாணத்திற்கான பூஜைகள் மற்றும் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு காலை பதினோரு மணி அளவில் கண்ணன் ராதா திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
பின்னர், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு, திருக்கல்யாணத்தை நேரில் காணும் வாய்ப்பினை வருடா வருடம் ஏற்படுத்தி வரும் மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியினரும் மற்றும் ஸ்ரீ ராம பக்தை சபா சார்பாகவும் விமர்சையாக நடைபெற உள்ளது.
ஐ.பி.எல் 2025 – பெங்களூரு vs சென்னை – சின்னசாமி மைதானம் பெங்களூரு – 03.05.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (213/5, விராட் கோலி 62, ஜேக்கப் பெதல் 55, ரொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டமிழக்காமல் 53, மஹீஷா பதிரனா 3/36, சாம் கரன் 1/34, நூர் அகமது 1/26) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (213/5, ஆயுஷ் மெஹத்ரே 94, ரவீந்த்ர ஜதேஜா 77, லுங்கி நெகிடி 3/30, யஷ் தயாள் 1/41, க்ருணால் பாண்ட்யா 1/24) 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜேக்கம் பெதல் (33 பந்துகளில் 55 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் விராட் கோலி (33 பந்துகளில் 62 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினர்.
முதல் விக்கட்டுக்கு இருவரும் 97 ரன்கள் சேர்த்தனர். அவர்களுக்குப் பின்னால் வந்த தேவதத் படிக்கல் (15 பந்துகளில் 17 ரன்), ரஜத் படிதர் (15 பந்துகளில் 11 ரன்), ஜிதேஷ் ஷர்மா (8 பந்துகளில் 7 ரன்) ஆகியோர் இன்று அதிரடியாக ஆடமுடியவில்லை. 17ஆவது ஓவர் ஐந்தாவது பந்தில் ஜிதேஷ் ஆட்டமிழக்க டிம் டேவிட் (2 ரன்) ஆட வந்தார்.
18ஆவது ஓவர் நாலாவது பந்தில் ரஜத் படிதர் ஆட்டமிழக்க ரொமாரியோ ஷெப்பர்ட் (14 பந்துகளில் 53 ரன், 4 ஃபோர், 6 சிக்சர்) ஆட வந்தார். அதன் பின்னர் நடந்தது வரலாறு. 19ஆவது ஓவரில் ஷெப்பர்ட் 6, 6, 4, 6, 7nb, 0, 4 என 33 ரன்கள் அடித்தார். பந்து வீசியவர் கலீல் அகமது. இதன் மூலம் ஐபிஎல் ஆட்டங்களில் ஒரு ஓவரில் அதிக ரன் கொடுத்த பந்துவீச்சாளர் ஆனார்.
அடுத்த ஓவரில் 1, 4, 0, 4, 6, 6 என 21 ரன்கள் அடிக்கப்பட்டது. இரண்டு ஓவர்களிலும் சேர்த்து 54 ரன்கள் இந்த 54 ரன் கள் இல்லையென்றால் பெங்களூரு அணி 159 முதல் 170 ரன் வரை அடித்திருக்கும். ரொமாரியோ ஷெப்பர்ட் அதிக வேக அரைச்சதத்திற்குச் சொந்தக்காரர் ஆனார்.
214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் ஆயுஷ் மஹத்ரே (48 பந்துகளில் 94 ரன், 9 ஃபோர், 5 சிக்சர்) சிறப்பாக ஆடி அடித்தளம் அமைத்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷேக் ரஷீத் (11 பந்துகளில் 14 ரன்) மற்றும் மூன்றாவதாகக் களமிறங்கிய சாம் கரண் (5 ரன்) இருவரும் இன்று சோபிக்கவில்லை.
ஆனால் நாலாவதாகக் களமிறங்கிய ரவீந்தர் ஜதேஜா (45 பந்துகளில் 77 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) நன்றாக விளையாடி அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டுவந்தார்.
ஆயுஷ் மஹத்ரே 17ஆவது ஓவர், இரண்டாவது பந்தில் ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் டிவால்ட் ப்ருயிஸ் ஆட்டமிழந்தார். அப்போது தோனி (12 ரன்) விளையாட வந்தார். அந்நிலையில் வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டன. ஜதேஜா, தோனி இருவரும் வெற்றியை எப்படியும் பெற்றுத்தந்துவிடுவார்கள் என எண்ணி இருந்த நிலையில் 18ஆவது ஓவரில் சுயேஷ் ஷர்மா 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
அடுத்த ஓவரில் கோலி ஒரு மிக எளிதான கேட்சை விட்டுவிட்டார், இதனால் ஜதேஜாவுக்கு 4 ரன் கிடைத்தது. 19ஆவது ஓவரை புவனேஷ் குமார் வீசினார். தோனி ஒரு சிக்சரும், ஜதேஜா ஒரு ஃபோரும் அடித்ததால் அந்த ஓவரில் 14 ரன்கள் வந்தன.
கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில் யஷ் தயாள் பந்துவீச வந்தார். அந்த ஓவரில் மூன்றாவது பந்தில் தோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த பால் நோபாலாக வீசப்பட்டது; அந்த பந்தில் ஷவம் துபே (8 ரன்) ஒரு சிக்சர் அடித்தார்.
இதனால் அடுத்த மூன்று பந்துகளில் 6 ரன் அடித்தால் வெற்றி என்ற நிலை. ஆனால் 76 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த ஜதேஜாவும் அதிரடி வீரர் ஷிவம் துபேயும் மூன்று சிங்கிள் மட்டும் ஓடியதால் சென்னை அணி தோல்வியைத் தழுவியது.
ஆட்டநாயகனாக ரொமாரியோ ஷெப்பர்ட் அறிவிக்கப்பட்டார். பெங்களூரு அணி 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
ஒரு ஜோக்
கணவன் -என் மூக்குக் கண்ணாடியை எங்கே காணோம்? மனைவி – CSK கணவன் – என்ன சொல்ற? மனைவி – CSK அப்படீன்னா தெரியலையா? Bottom of the table.
இப்போது சுற்றுச் சூழல் பாதிக்காதா? ஆமைகள் குஞ்சு பொறிக்க இடையூறாகாதா? மீன்கள் சாகாதா? பவளப் பாறைகள் சிதையாதா?
கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்துக்கு மிக அருகேதான் குளச்சல். அங்கே இந்தத் துறைமுகம் வந்திருக்க வேண்டியது! அதற்கு சுற்றுச்சூழல் போராளிகள், மண்ணைக் காப்பவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், திராவிடியாள்கள், இடதுசாரிகள், முற்போக்குகள், லிபரல்கள்… எல்லாம் எகிறி எகிறிப் போராடித் தடுத்துவிட்டார்கள்.
குஜராத் மாதி வேறு இடமானால் “கார்ப்பரேட்” அம்பானிக்கு மோடி நாட்டின் செல்வங்களை தாரை வார்த்துவிட்டார் – என்ற வானுக்கும் பூமிக்கும் எகிறுவார்கள்!
இது அவர்கள் ஆளும் மாநிலம் ஆயிற்றே? முதல்வர் பிணராயி விஜயன் ஆயிற்றே? தொழில் வளர்ச்சி வேண்டுமே?
எனவே சிவப்புக் கொடியை சுருட்டி மூலையில் வீசிவிட்டு – “கார்ப்பரேட்” அம்பானி உள்ளே வருவதற்கு பச்சைக் கொடி காட்டி விட்டார்கள்! ஆனால் கம்யூனிஸ்டுகளிடம் ஒரு நல்ல வழக்கம் இருக்கிறது!
எந்த எந்தக் கொள்கைகளை அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டு எதிர்க்கிறார்களோ… அதே கொள்கைகளை அவர்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மிகத் தீவிரமாக அமல்படுத்துவார்கள்!
அப்போது – “நாட்டின் துறைமுகங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது – உள் கட்டமைப்புகளை பெருமுதலாளிகள் கைகளில் விடுவது”- என்றெல்லாம் பேச மாட்டார்கள். இப்போது அவர்கள் பார்வையில் அதானி “கார்ப்பரேட்” அல்ல – கேரளாவில் அவர் முன்னேற்றத்துக்கான “காம்ரேட்”!
இதை விட ஒரு படி மேலே போனவர் மேற்கு வங்கத்தில் புத்ததேவ் பட்டாசார்யா! டாடாவின் கார் தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுத்ததோடு நிறுத்திவிட்டு – மக்களிடம் நிலத்துக்கு ஏக்கருக்கு குறைந்த பட்ச விலை என்று அறிவித்துவிட்டு – யார் விற்கிறார்களோ போய் வாங்கிக் கொள் என்று டாடாவை அனுப்பி இருந்தால் பிரச்னை இல்லை!
ஆனால் புத்ததேவ் சிங்கூரில் விவசாயிகள் நிலங்களை அரசே கையகப்படுத்தி – ஈட்டுத் தொகை விவசாயிக்கு வழங்கிடும் வகையில் – டாடாவிடம் ஒப்படைக்கும் விதமாக செயல்பட்டார்.
இதைப்பற்றி இவர்களுடைய பங்காளியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் – “ஜனசக்தி” பத்திரிகையில் தா.பாண்டியன் ஒரு கட்டுரையே எழுதினார்.
மீறிப் போராடிய விவசாயிகளை நந்திகிராமிலும் சிங்கூரிலும் ஈவிரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளியது புத்ததேவ் தலைமையிலான அப்போதைய CPM அரசாங்கம்!
எனவே கம்யூனிஸ்டுகள் எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில் எதை எல்லாம் எதிர்ப்பார்களோ – அதை எல்லாம் அவர்கள் ஆளும் மாநிலங்களில் “கார்ப்பரேட்” துணையுடன் அமல்படுத்துவார்கள் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம்.
ஐ.பி.எல் 2025 – குஜராத் vs ஹைதராபாத் – அகமதாபாத் – 02.05.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
குஜராத் டைடன்ஸ் அணி (224/6, ஷுப்மன் கில் 76, ஜாஸ் பட்லர் 64, சாய் சுதர்ஷன் 48, வாஷிங்டன் சுந்தர் 21, உனத்கட் 3/35, பாட் கம்மின்ஸ் 1/40, சீஷன் அன்சாரி 1/42) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (186/6, அபிஷேக் ஷர்மா 74, ஹென்றி கிளாசன் 23, நிதீஷ் குமார் ரெட்டி ஆட்டமிழக்காமல் 21, ட்ராவிஸ் ஹெட் 20, பாட் கம்மின்ஸ் ஆட்டமிழக்காமல் 19, சிராஜ் 2/33, பிரசிட் கிருஷ்ணா 2/19, இஷாந்த் ஷர்மா 1/35, ஜெரால்ட் 1/36) 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் குஜராத் டைடன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (23 பந்துகளில் 48 ரன், 9 ஃபோர்) மற்றும் ஷுப்மன் கில் (38 பந்துகளில் 76 ரன், 10 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் மிகச் சிறப்பான தொடக்கம் தந்தனர்.
பவர் பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் குஜராத் அணி விக்கட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்தனர். ஏழாவது ஓவரில் சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்தபோது ஜாஸ் பட்லர் (37 பந்துகளில் 64 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) ஷுப்மன் கில்லுடன் இணைந்து அணியின் ஸ்கோரை கிடுகிடுவென்று உயர்த்தினர்.
அதன் பின் வந்தவர்களான வாஷிங்டன் சுந்தர் (16 பந்துகளில் 21, 1 சிக்சர்), ஷாருக் கான் (6 ரன்), ராகுல் திவாத்தியா (6 ரன்), ரஷீத் கான் (பூஜ்யம் ரன்) ஆகியோர் குறைந்த பந்துகளில் வேகமாக ரன் அடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது.
வெற்றிக்கு 225 ரன்கள் தேவை என்ற இலக்கோடு இரண்டாவதாக விளையாடவந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (16 பந்துகளில் 20 ரன், 4 ஃபோர்) மற்றும் அபிஷேக் ஷர்மா (41 பந்துகளில் 72, 4 ஃபோர், 6 சிக்சர்) இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர்.
மூன்றாவதாகக் களமிறங்கிய இஷான் கிஷன் (17 பந்துகளில் 13 ரன்), ஹென்றி கிளாசன் (18 பந்துகளில் 23 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) அனிகேத் வர்மா (7 பந்துகளில் 3 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (10 பந்துகளில் 21 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்), கமிந்து மெண்டிஸ் (பூஜ்யம் ரன்), பாட் கம்மின்ஸ் (10 பந்துகளில் 19 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் எவ்வளவோ முயன்றும் 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
மத்திய அரசுக்கு இணக்கமாக செல்வதை அடிமைத் தனம் என்று அர்த்தம் கொடுத்து.. எப்போதும் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தே மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்து கொண்டிருந்த திமுகவிற்கு…. கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட், சரியான சவுக்கடி கொடுத்துள்ளது.
விழிஞ்சம் துறைமுகம் தமிழகத்திற்கு வரவேண்டிய திட்டம். சுற்றுச்சூழல் பாதிப்பு, மீனவர்கள் போராட்டம் என்று சகட்டுமேனிக்கு மக்களை தூண்டிவிட்டு அரசியல் ஆக்கியது திமுக. இன்று அந்த திட்டம் கேரளாவுக்கு சென்று விட்டது மோடி அதை துவக்கி வைத்துள்ளார்.
சுற்றுச்சூழல், உயிரியல் என்று பேசிய சுற்று சூழல் வியாதிகள்! 2021 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு, நம்ம ஊர் கனிம வள கொள்ளையைப் பற்றி வாயை திறக்கவில்லை…. அது ஒரு புறம் இருக்கட்டும்…
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமர்ந்த மேடையிலேயே, காங்கிரஸ் கட்சியின் சசிதரூரும்…. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வரும் ஒருங்கே அமர்ந்து, கேரளாவுக்கான வளர்ச்சி அரசியலை முன்னெடுக்கிறார்கள்! ஆனால் இந்த திராவிட ஆடல் திமுகவோ… ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை நீக்குவதும், ரூபாய் சின்னத்தை மாற்றும் “தாழ்ச்சி” அரசியலை முன்னெடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்….
அதானி என்று கூறினாலே அய்யோ அம்மா என்று கதறும் அதே கம்யூனிஸ்ட் கட்சி…. தன்னுடைய மாநில வளர்ச்சி என்றவுடன், கப் சிப் ஆகி அதே அதானியிடம் இந்த துறைமுகத்தை ஒப்படைக்கிறது…
வாக்கு அரசியல் வேறு, வளர்ச்சி அரசியல் வேறு என்பதை கேரள கம்யூனிஸ்ட் முழுதும் உணர்ந்து இருக்கிறது இதைச் சுட்டிக்காட்டிய மோடி ஒரே மேடையில் காங்கிரஸ் எம் பி … கம்யூனிஸ்ட் முதல்வரும் ..அவர் விரும்பாத அதானியும் இருப்பதை பார்த்து சிலர் (இண்டி கூட்டணி) இன்று தூங்காமல் இருக்கப் போகிறார்கள் என்று நக்கலும் நையாண்டிமாக பேசியுள்ளார்.
மத்திய அரசுடன் மோதல் போக்கு அரசியலில் மட்டும் திமுக செலுத்திய கவனம்… வளர்ச்சி அரசியலை விலக்கியதன் விளைவு.. இதனால் தமிழகம் இன்று கடன் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
கச்சத்தீவு விவகாரத்தில் தமிழகத்தின் நலனை அடமானம் வைத்தது திமுக !காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை காற்றில் பறக்க விட்டது திமுக. இப்போது மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களையும் தடுத்து இருக்கிறது திமுக !
மாநில நலன் சார்ந்த அரசியலில், மத்திய அரசின் துணையும் அதனுடன் இணக்கமும் தேவை என்பதை கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் உணர்ந்து விட்டார். தமிழக முதல்வர் நிச்சயம் இதை என்றுமே உணரப் போவதில்லை !!ஸ்டாலினின் உண்மை முகத்தை மக்கள் பார்த்து விட்டார்கள்.
2026 இல் மத்திய அரசின் டபுள் எஞ்சின் சர்க்கார் தமிழகத்தில் அமைவது முக்கியம் என்பதை தமிழ் மக்கள் உணர தொடங்கி விட்டார்கள்.
தென்காசி – புனலூர் இடையே முற்றிலும் விஸ்டாடோம் பெட்டிகளடங்கிய சுற்றுலா ரயிலை குற்றால சீசன் காலத்தில் இயக்க வேண்டி செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே அமைச்சர் உள்ளிட்டோருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்ததாவது…
தென்காசி – புனலூர் இடையில் தினசரி விஸ்டாடோம் கண்ணாடி மேற்கூரை உள்ள சுற்றுலா ரயில் இயக்க கோரிக்கை விடுத்துள்ளோம். செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் இன்ஜினியர் முரளி செயலாளர் கிருஷ்ணன் உபதலைவர் ராஜேந்திரராவ் ஆகியோர் தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமேலாளர், ரயில்வே அமைச்சருக்கு 2019லேயே கடிதம் அனுப்பி வேண்டுகோள் வைத்தோம்.
அதில், ஜுன் மாதத்தில் குளுகுளு குற்றால சீசன் தொடங்குகிறது. லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி விரைவார்கள். இந்த சுற்றுலா பயணிகள் செங்கோட்டை புனலூர் ரயில் பாதையில் அமைந்துள்ள இயற்கைக் காட்சிகள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் வண்ணமிகு தோற்றங்களையும் பல குகைகளையும் கண்டு மகிழும் வண்ணம் தெற்கு ரயில்வே கண்ணாடி மேற்கூரை உள்ள சுற்றுலாவிற்கென வடிவமைக்கப்பட்ட விஸ்டாடோம் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட ஷட்டில் ரயிலை தினமும் தென்காசியிலிருந்து புனலூர் வரை இயக்க வேண்டும்.
தினமும் இரண்டு முறை தென்காசி மற்றும் புனலூரிலிருந்து இந்த ரயில்கள் ஜூன் தொடங்கி நவம்பர் வரை இயங்க வேண்டும். நீலகிரி மலை ரயில் போல இந்த ரயிலும் மிக்க புகழ் பெறும்… என்று குறிப்பிட்டிருந்தனர். தற்போது, ஜூன் மாதம் குற்றால சீஸன் தொடங்கவுள்ள நிலையில், மீண்டும் தங்கள் கோரிக்கையை அதிகாரிகளிடம் முன் வைத்துள்ளனர்.
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு மே 3ம் தேதி, நாளை தொடங்கி 5ம் தேதி வரை நடைபெறுகிறது. தருமபுரம் ஆதினத்தின் சார்பில் நடக்க உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதினம், மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவரது கார் உளுந்தூர்பேட்டை அருகே ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கியது.
அவர் சென்ற காரின் மீது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் கார் சேதமடைந்தது என்றாலும், இந்த விபத்தில் இறையருளால் மதுரை ஆதினம் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.
இந்நிலையில் தருமபுரம் ஆதினம் தமது சமூக வலைதள பக்கத்தில், “மதுரை ஆதினம் கார் விபத்து திட்டமிட்ட சதி” என புகார் தெரிவித்துள்ளார்.
அவர் தமது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை வந்துகொண்டிருந்த மதுரையாதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் காரினை பின்னே வந்து காரில் மோதியுள்ளனர் இது திட்டமிட்ட. சதியாக தெரிகிறது இறையருளால் ஆதீனகர்த்தர் உயிர்தப்பினார் காருக்கு சேதமாயிற்று என்ற விபரமறிந்த குருமணிகள் மதுரையாதீனத்துடன் தொடர்புகொண்டு பேசி நலம் விசாரித்தனர் ஆதீனகர்த்தருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியுள்ளார். – என்று தருமபுரம் ஆதினம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, இந்த செய்தி அறிந்து ஹிந்து முன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்ததுடன், அவருக்கு உரிய பாதுகாப்பளிக்க கோரிக்கை வைத்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், மதுரை ஆதீனம் அவர்களின் மீது திட்டமிட்ட கொலை தாக்குதலா? சுவாமிகளுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
இன்று மதியம் தவத்திரு மதுரை ஆதீனம் அவர்கள் பயணம் செய்த கார் மீது உளுந்தூர்பேட்டை அருகில் விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தினை ஏற்படுத்தியது பழைய வெள்ளை நிற வாகனம் என்றும், அதன் முன், பின் பக்கங்களில் வாகன எண் பிளேட் இல்லை என்று தெரிய வருகிறது. மேலும் காரில் குல்லா போட்ட நபர் முன் இருக்கையில் இருந்துள்ளார். மேலும் வேகமாக வந்த அந்த கார் தடுப்பு பேரீகார்டு அருகில் வந்து திரும்பி தாக்குவதற்கு முயற்சித்துள்ளது.
அதிருஷ்ட வசமாக இறைவன் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் அருளால் சுவாமிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என தவத்திரு திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள் கவலை தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற கொடூர சம்பவம் குறித்து சுவாமிகள் மன வருத்தத்துடன் தெளிவான கருத்தினை உறுதியாக தெரிவித்து இருந்தார். எனவே இவற்றை காவல்துறை கவனத்தில் கொண்டு இந்த விபத்து குறித்து முழுமையான தகவலை திரட்ட வேண்டும். மேலும் முழுமையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு இட வேண்டும்.
சுவாமிகளுக்கு தக்க பாதுகாப்பை உடனடியாக அளிக்க தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
விசிஷ்ட அத்வைத தத்துவத்தைப் பரப்பிய மகான் ஸ்ரீ ராமானுஜர் தமிழின் இனிமை கூட்டும் திவ்யப் பிரபந்தங்களை ஆலயங்களில் நிலைபெறச் செய்தார். மக்களிடம் வெகுவாகப் பரப்பினார். திருப்பாவை, திருவாய்மொழி விளக்கவுரைகள் அளித்தார். ஆயினும் அவர் நவரத்தினங்கள் போல் சம்ஸ்க்ருதத்தில் நூல்கள் எழுதினார். அவர் எழுதிய ஒன்பது நூல்களில் முக்கியமானது ‘கத்யத்ரயம்’.
வடமொழியில் பத்யம் என்றால் செய்யுள் என்றும், ‘கத்யம்’ என்றால் உரைநடை என்றும் பொருள். எனவே இது ஓர் உரைநடை நூல். ‘சரணாகதி கத்யம்’, ‘ஸ்ரீரங்க கத்யம்’, ‘வைகுண்ட கத்யம்’ என்ற பெயர்களில் ‘கத்யத்ரயம்’ மூன்று வசன கவிதைகள் எனும் தொகுப்பாக, சரணாகதியின் மேன்மையை விளக்குகின்றன.
ஒரு பங்குனி உத்திர நன்னாளில், திருவரங்கத்தில் பெரிய பிராட்டியாரும் நம்பெருமாளுமாக சேர்த்தியில் சேவை சாதித்த போது, ராமானுஜர், பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு பெருமாளிடம் சரண் புகுந்தார். பெருமாள் அதை அங்கீகரித்து, அவருடைய வாழ்நாள் முடியும் வரை ‘த்வய’ மந்திரத்தின் பொருளையே சிந்தித்து திருவரங்கத்தில் வாழும்படி நியமித்தார். இதை ‘சரணாகதி கத்யத்தில்’ விவரித்தார். ராமானுஜர் அவ்வாறு வாழ்கையில், தாம் வைகுந்தத்தில் சென்று அவருக்குச் செய்யும் தொண்டுகளையே இங்கே திருவரங்கநாதனுக்கு செய்ய வேண்டும் என்று ‘ஸ்ரீரங்க கத்யத்தில்’ வேண்டினார்.
அவர் தொண்டுக்கு மகிழ்ந்த அரங்கன், அவர் வைகுந்தத்தில் பெறவிருக்கும் பேறுகளை மனத்தில் தோற்றுவித்தான். அதனால் மகிழ்ச்சியடைந்த ராமானுஜர் தம் ஆனந்தத்தை ‘வைகுந்த கத்யத்தில்’ வெளிப்படுத்தினார். வைகுந்த மாநகரின் சிறப்புகள், அங்கு திருவோலக்கமிருக்கும் வைகுந்தநாதனின் சிறப்புகள்; அவனால் தாம் அங்கே அடையப்போகும் பேறு இவற்றை விவரித்தார்.
இம்மூன்று கத்யங்களும் நம்பெருமாளுக்கும் ஸ்ரீராமானுஜருக்கும் இடையே நடந்த ரகசிய உரையாடல்களே. ஆயினும் இந்த ரகசிய உரையாடல்களை, உலகத்தார் உய்யும் பொருட்டு, பகிரங்கமாக வெளியிட்டார் ராமானுஜர். இதுவே ‘கத்யத்ரயம்’. சரணாகதி எனும் நெறியின் எல்லா நுண்ணிய நிலைகளுக்கும் தெளிவான, ஐயந்திரிபற்ற விளக்கமாக ‘கத்யத்ரயம்’ அமைந்துள்ளது. சரணாகதி என்பது, ஒருவர் தன் குறைகள், நிறைவின்மை, இயலாமை முதலியவற்றை வெளிப்படையாக அறிவித்து, சரணம் புகுதல்.
கத்யத்தினைப் படைக்கும் முன், பிராட்டியின் திருவடிகளிலே சரணம் புகுகிறார் ராமானுஜர். ஏன்? பிராட்டி தாயாக இருப்பவள். இறைவனுக்குப் பிரியமானவள். சீற்றத்தை ஆற்றுபவள். பக்தனின் முறையீட்டைக் கேட்டு சமயமறிந்து விண்ணப்பித்து அவன் மனத்தில் இரக்கத்தை ஏற்படுத்துபவள்.
ஞானம், பலம், சக்தி, ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் என்ற இந்த ஆறு பண்புகளை உடையவன் பகவான். அவனை நாராயணன் என்ற சொல்லால் விளக்குகிறார்கள். கத்யம் எனும் வசன கவிதை ஆற்றொழுக்குப் போன்ற நடையும், ஓசை நயமும் கொண்டு விளங்குவது. ‘கத்யாம் கவினாம் நிகஷம் வதந்தி – கத்யங்கள் கவிகளுக்கு உரைகல்லாகும்’ எனும் மொழியால் இதன் சிறப்பை உணரலாம்.
ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரம் சேர்த்தி சேவை
சரணாகதி என்பதும் வேதாந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதுதான்! தைத்ரீய உபநிஷத், நாராயண அனுவாகம் 49, 50, 51வது ரிக்குகள், 1) வாய்மை தவறாமை, 2) உடல் வருத்தி செய்யும் தவம். 3)வெளிப்புலன்களை தன்வசப்படுத்தும் தவம், 4) மனத்தை அடக்கி ஒரே நிலைப்படுத்தும் சரமம், 5) கொடை, 6) அறவழி நடத்தல், 7) நன் மக்களைப் பெறுதல், 8) தினசரித் தீயோம்பல் 9) வேள்வி இயற்றல் 10) தேவர்களை பூசித்தல் 11) மனத்தால் பரப்ரஹ்மத்தை தியானித்தல் 12) பரபிரம்மத்தையே ஒரே பற்றாகக் கொண்டு மற்றெல்லாப் பற்றுகளையும் விட்டு, அவனையே நெறியும் இலக்குமாகப் பற்றும் சரணாகதி – என உயர் வரிசைப்படுத்தி ஒன்றுக்கு ஒன்று மேம்பட்டதாகவும், சரணாகதியை இறுதியாகவும் வைத்துப் பேசுகின்றன.
சரணம்- காப்பு, உதவி, இருப்பிடம். ஆகதி- வழி அடைதல். இவற்றால், சரணாகதி என்பது வேதாந்தத்தில் மிக உயர்வானதும் மிக எளிதானதுமாகச் சொல்லப்பட்டிருப்பது தெளிவாகும்.
இறைவன், உயிர்கள் மற்றும் உயிரற்ற பண்டங்களில் உள்ளுறைந்து, அவற்றைத் தன் உடைமைகளாகக் கொண்டு இயக்குகிறான் என்பதை சான்றுகளுடன் நிறுவினார் ராமானுஜர்.
“தனது வினைகளுக்கு ஏற்ப பிறவி எடுத்துள்ள ஜீவாத்மா, இறைவனுக்கு அடிமை; ஜீவாத்மாவின் அறிவும் இறைவனது ஞானமும் கடுகுக்கும் மலைக்கும் ஒத்து வேறுபட்டவை; ஜீவாத்மா ஞானத்தினால் முக்தியை அடைவது இயலாது; இறைவனது மேன்மையை அறிந்து அவனிடம் நீங்கா அன்பு கொண்டு, எண்ணெய் சீராக ஒழுகுதல் போல் இடைவிடா நினைவில் அவனை நிறுத்தலாகிற உபாஸனம் அல்லது பக்தி, அதன் மூலமே ஜீவாத்மா அவனை அடைய இயலும். பக்தி என்பது ஜீவாத்மா தனக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஞானத்தால் அவனிடம் மாறா விருப்பத்துடன் செயல்படுதல் ஆகும்” என்றார் ராமானுஜர்.
பக்திக்கு, கர்ம வழியிலும் ஞான வழியிலும் தேர்ச்சி வேண்டும்; பக்தி கடைபிடிப்பதற்கு கடினமாகவும் இருக்கும். மேலும் இந்த ஆத்மா அனுபவிக்க வேண்டிய வினைகள் யாவையும் அனுபவித்து முடித்த பிறகுதான் (அதற்கு பல பிறவிகளும் ஆகலாம் ) முக்தி கிடைக்கும். முக்தி அடைதல் இடையில் தடைபட்டுப் போகும் வாய்ப்பும் உண்டு.எனவே கர்ம – ஞான – பக்தி நெறிகளால் இப்பிறவிலேயே முக்தி நிச்சயம் இல்லை என்பதாலும், இந்த நெறிகளைக் கடைப்பிடிக்க முடியாதவர்களும் இருக்கிறார்கள் என்பதாலும், செயலும் ஞானமும் பக்தியும் பொதிந்த சரணாகதியை ராமானுஜர் வகுத்துத் தந்தார்.சரணாகதி, பக்தியினும் மேம்பட்டிருப்பதை இந்த ஒப்புநோக்கு விளக்கும்.
பக்தி
தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டவர்களுக்கே இயலும்.
கடினமான செய்முறை உடையது.
ஓர் ஆத்மா அனுபவித்து வரவேண்டிய வினைகள் (ப்ராரப்த கர்மா) முடியும்போதுதான் முக்தி கிட்டும். இதற்கு, பக்தி வழியிலுமே ஒன்றுக்கு மேற்பட்ட பிறவிகளும் பிடிக்கலாம்.
இடையீடுகள் ஏற்பட வழி உண்டு.
இது தன்முயற்சியை மையமாகக் கொண்டது. அதனால் ஆத்மாவின் இயல்பான ‘பரமாத்மாவுக்கு அடிமை நிலை’ மற்றும் இறைவனின் ஆளுமை நிலை இவற்றுடன் வேறுபடும்.
எனவே இறைவன் திருவுள்ளத்திற்கு அவ்வளவு உகப்பாய் இராது.
பிரபத்தி அல்லது சரணாகதி
இதற்கெனத் தனித்தகுதிகள் தேட வேண்டாம். இருக்கும் நிலையிலேயே சரணாகதியை யாரும் செய்யலாம்.
அவனைச் சரணம் அடைந்தால், நம் ஆத்மாவின் முக்தி அவனது பொறுப்பு ஆகும். அதனால் இடையூறு ஏற்பட வழியே இல்லை.
இது அவன் விருப்பத்தாலேயே கிட்டும் என்பதால் ஆத்மாவின் அடிமை நிலை மற்றும் இறைவனின் ஆளுமை இயல்புகளுக்கு ஒத்திருக்கும்.
அதனால் இறைவன் திருவுள்ளத்திற்கு உகப்பாயிருக்கும். இந்த சரணாகதி தான் வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள ‘ந்யாஸ வித்யை’ என்றும், அதை வலியுறுத்தவே இதிஹாஸங்களான ராமாயணம், மகாபாரதம் எழுந்துள்ளன என்றும் பகவத் ராமானுஜர் ஐயந்திரிபற நிலைநாட்டினார். *
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூவுலகில், அவதரித்து, பூலோக வைகுண்டமாகிய திருவரங்கத்தை,(ஆலயத்தை) நிர்வகித்து, இன்றும் கூட, ஆத்திகரும், நாத்திகரும், பகுத்தறிவு வாதிகளும், மறவாமல் உச்சரிக்கும் ஒரே ஆச்சார்யன், ஸ்வாமி ராமானுஜர் !.ஸ்வாமி ராமானுஜர் பிறந்த நாளில்,அவரின் புகழையும்,அரங்கனுக்கு அவர் செய்த அழிவில்லா கைங்கர்யங்களையும், அவரின் சிஷ்யர்கள் சிலரின் கைங்கர்யங்கள் பற்றி, சற்று விரிவாக பார்ப்போம் !
ராமானுஜர் அன்று நடைமுறைப் படுத்திய நிர்வாக முறை கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாய் இன்றும், நடைபெற்றுக் கொண்டே உள்ளது !.
1. இன்று எம்பெருமானார் அவதார திருநக்ஷத்ரம்.பற்றி..
3. தத்துவ தரிசிகள்! வேத வேதாந்த வித்தகர்கள், வடமொழி விற்பன்னர்கள். தண்டமிழ்ச் சான்றோர்கள்! இலக்கிய மேதைகள்! பொதுவுடைமை வாதிகள்! சமநீதிப் புரட்சியாளர்கள்! தமிழ்ப் பற்றாளர்கள், புதுக்கவிஞர்கள் மனிதநேய மாண்பினர்கள்- என்று இராமானுசரின் வாழ்க்கையை அலசி ஆராயாதவர்களே இல்லை எனலாம்.
4. உலகத்தின் விளிம்புகள் வரை விரிந்த, உடையவரின் உயர்ந்த வாழ்க்கையை, எழுத்துக்களில் வடித்தவர்களில், காலத்தினால் முற்பட்டவர், வடுகநம்பி என்ற ஆந்திரபூர்ணர். இவர் ‘யதிராஜ வைபவம்’ என்ற வடமொழி நூலில் 114 சுலோகங்களில் ஸ்ரீராமாநுஜரின் சரித்திரத்தை எடுத்துரைத்தார். இவர் இராமானுசருக்கு அணுக்கத் தொண்டராக வாழ்ந்தவர்.
5. உடையவர் காலத்திலே வாழ்ந்து அவருடைய குணங்களையும் ஞானத்தின் உயர்வையும் உலகறியச் செய்தவர் திருவரங்கத்தமுதனார். இவர் இயற்றிய இராமானுச நூற்றந்தாதியை இராமானுசரே கேட்டு மகிழ்ந்து அடியார் பெருமக்களை அனுதினமும் அதை அநுஸந்திக்கும்படி ஆணையும் இட்டருளினார்.
6. இராமானுச நூற்றந்தாதி, கட்டளைக் கலித்துறை யாப்பில் 108 பாடல்களைக் கொண்டது. ‘ப்ரபந்ந காயத்ரி’ என்று புகழப்படும் பெருமை வாய்ந்தது.
7. அமுதனாரையும் வடுகநம்பியையும் போல் இராமானுசர் காலத்திலேயே வாழ்ந்த ‘கருடவாஹன பண்டிதர்’ என்ற வித்வானால் விளம்பப்பெற்றது ‘திவ்யஸூரிசரிதம்’ என்ற வடமொழி நூலாகும். இது ஆழ்வார்களின் வரலாற்றையும் சேர்த்துச் சொல்கிறது. காவியரீதியில் இந்நூல் அமைந்து கற்போரைக் களிப்புறச் செய்கிறது.
8. இராமானுசரின் வாழ்க்கையைத் தெரிவிக்கும், பழமையான குருபரம்பரை நூல், ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம். இந்த நூலை, மணிப்ரவாள நடையில் எழுதியவர், நம்பிள்ளையின் சீடரும்,துறவியுமான,”” பின்பழகிய பெருமாள் ஜீயர்””.
9. ஆசிரியராகிய நம்பிள்ளையினும் மிக மூத்தவரான இவர், ஆசிரியர்க்கு அணுக்கராய்த் தொண்டுகள் செய்தவர்.
10. இத்தகைய பேரறிவாளர் ஆழ்வார்களின் வரலாற்றையும், ஆசார்யர்களின் வரலாற்றையும், சிறப்பாக இராமானுசரின் வரலாற்றையும், உரைநடையில் நூலாக்கி உதவினார்.
11. இராமானுசரின் வரலாற்றை வடமொழியிற் கூறுகின்ற மற்றொரு பெரிய நூல் ‘ப்ரபந்நாம்ருதம்’ ஆகும். இந்நூலை இயற்றியவர், வடுகநம்பியின் திருவம்சத்திலுதித்தவரான, அனந்தாசார்யர் என்பவர்
12. வடமொழியில் அமைந்த மற்றொரு ஸ்தோத்ர நூல் ‘யதிராஜ ஸப்ததி’ ஆகும். இதனை இயற்றியவர் வேதாந்தாசார்யர் என்ற, ஸ்ரீமந் நிகமாந்த தேசிகன். (கி.பி.1268 – 1369). இது 70 ச்லோகங்களைக் கொண்டது. இதில் இராமானுசரின் புகழைப் பல் வகையிலும் பறைசாற்றுகிறார் ஸ்ரீமந் நிகமாந்த தேசிகன்.
13. ஸ்ரீமணவாள மாமுனிகளால் இயற்றப்பெற்றதாய் வட மொழியில் அமைந்து புகழ் பெற்ற ஓரு நூல் ‘யதிராஜ விம்†தி’ ஆகும். இது 20 ச்லோகங்களில் செவிக்கினிதாகத் தொகுக்கப் பெற்றது. இவரது காலம் (கி.பி.1370 – 1443).
14. ஸம்ஸ்க்ருதத்தில் காவியரீதியில் அமைந்துள்ள மற்றொரு அருமையான நூல் ‘ஸ்ரீராமாநுஜ சம்பு’ ஆகும். இதனை இயற்றியவர் கி.பி.1600இல் வாழ்ந்த கர்க்க கோத்ரத்தில் உதித்தவரான ஸ்ரீராமாநுஜாசார்யர் என்பவர்.
15. வடமொழியில் நாடகப் பாங்கில் இயற்றப்பட்ட ஒருநூல் ‘யதிராஜ விஜயம்’ ஆகும். வாத்ஸ்ய வரதர் என்கிற, நடாதூரம்மாள் மரபில் வந்தவரும், சோளசிம்மபுரத்தில் வாழ்ந்தவருமான, “” ஸுதர்சநாசார்யர்”” என்பவருடைய குமாரர் ‘அம்மாளாசார்யர்’ என்ற மற்றொரு பெயர் கொண்ட, வரதாசார்யர் என்பவர். இவரால் இயற்றப்பட்டதே யதிராஜ விஜயம்.
16. குருபரம்பரை என்ற தலைப்பில், ஆசார்யர்களின் வரலாற்றைத் தமிழ்ச்செய்யுள் வடிவில், தெரிவிக்கும் நூல்களும் உள்ளன.
அவை (1) கீழையூர் சடகோப தாசர் இயற்றிய அரிசமய தீபம்,
(2) வடிவழகிய நம்பிதாசர் இயற்றிய குருபரம்பரை
(3) பரமயோகி விலாஸம்
(4) பாகை சீதாராமதாசர் இயற்றிய ‘இராமானுச சரிதை’
(5) குருபரம்பரைப் புராணம்
(6) கோழியாலம் சப்தம் வங்கீபுரம் ஸ்ரீநிவாஸாசார்யர் இயற்றிய திவ்யசூரி சரிதம்.
17. இத்தனை நூல்களுக்கும் நடுவே, தனித்தன்மைகளுடன் விளங்குவது பிள்ளை லோகார்ய ஜீயர் இயற்றிய ‘ராமாநுஜார்ய திவ்ய சரிதை’ என்ற நூல்.
18. இராமானுசரின் வாழ்க்கை வரலாற்றை, விரிவாகவும் புதிய கோணங்களில், பல புதுச்செய்திகளையும் கூறுகின்றது ‘ராமாநுஜார்ய திவ்யசரிதை’ என்ற இந்நூல்.
19. பிள்ளைலோகம் ஜீயர் வரலாற்றுணர்வு மிக்கவர்! காலக் குறிப்புகளை வரலாற்று ஆய்வாளர்களுக்கு விருந்தாகப் படைத்தவர்! இந்தியத் துணைக் கண்டத்தின் நிலவியல் அமைப்பு, தட்பவெப்பநிலை, ஆட்சியாளர்களின் ஆதிக்கம், அரசியல் மற்றும் மாற்றுச்சமயத்தினரின் எதிர்ப்புகள், ஏழை எளிய மக்கள் முதல் மேட்டுக்குடி மக்கள்வரை பரவியிருந்த சமுதாயச் சூழ்நிலை ஆகிய கூறுகளை உட்படுத்தி விரிந்து பரந்த இராமானுச திவ்ய சரித்திரத்தை வழங்கியிருக்கிறார் பிள்ளைலோகம் ஜீயர்.
20. அக்கால ஆட்சியியல், கலையியல், தொழில்முறை, ஆலய நிர்வாஹம் என்று பல்வகைத்துறைகளில் பழகியிருந்த தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார் இவர் தம் நூலில்.
21. இராமானுசப் பேராறு தென்னரங்கம் தொடங்கி இமயத்தின் கொடுமுடியிலேறியது! விசிஷ்டாத்வைதக் கொடியை ஆங்கே ஏற்றியது, அங்கிருந்து பெருகிஓடி, பல்வேறு மாநிலங்களில், வளம் கொழிக்க வைத்து,மடங்கள் பலவற்றை நிறுவித், தென்னன் தமிழான புல்லாணியில் கடலோடு கலந்தது. அப்பேராற்றில் குள்ளக் குளிரக் குடைந்தாடிய பெருமக்களே, பிள்ளையுறங்கா வில்லிதாசர், கோயில் வண்ணாத்தான், வயலாலி ஞானப்பெண் (இவள் திருக்குலத்தோர் என்று அழைக்கப்படும் தலித் வகுப்பைச் சார்ந்தவள்) ஆகியோரும் மற்றும் மாந்தர் பலரும் ஆவர்.
22. பிள்ளைலோகம் ஜீயர், இராமானுசரின் திக்விஜய வரலாற்றில், நெஞ்சை நெகிழ்விக்கும் நிகழ்ச்சிகள், பலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளார். இராமானுசர் பயணித்த பெருவழிகளைத், திசை சொல்லித் தொலைவு சொல்லி, ஒரு பயணவழிகாட்டும் படத்தையே ஜீயர் வரைந்து முன் வைத்திருக்கிறார். அவ்வழிப் புலம்பற்றி ஐநூறு ஆண்டு களுக்குப் பிறகு, ஜீயர் தாமும் ஒரு புனிதப் பயணம் மேற்கொண்டு வழிச் செலவில், செவிவழிச் செய்திகளைச் சேகரித்துத் தாம் எழுதிய, இராமானுச திவ்ய சரிதைக்குக் கருத்துக் கருவூலங்களைத் தொகுத்து வைத்துள்ளார்.
23. விக்ரமசோழன் திருவீதி கிழக்குப் பகுதியில், (கீழை உத்தர வீதி) இராமானுசர், திருவாய்மொழி விண்ணப்பம் செய்யும், இசைகாரர்களான அரையர்களைக் குடியமர்த்தி, அவ்வீதிக்குச் ‘செந்தமிழ்பாடுவார் வீதி’ என்று பெயர் சூட்டினார். ‘செந்தமிழ் பாடுவார்’ என்ற தொடரைத் திருமங்கை மன்னன் திருவாக்கிலிருந்து தேர்ந்தெடுத்தார். (பெரிய திருமொழி 2-8-2)
24. திருவரங்கம் பெரியகோயிலில் பணிபுரிந்த, அனைத்துக் கொத்திலுள்ளாரையும், அவர்கள் முன்பு வாழ்ந்துவந்த, வெளிச் சுற்றுக்களிலிருந்து குடிபெயரச் செய்து, நம்பெருமாள் கைங்கரியங்களுக்கு உதவும்படி, திருக்கோயிலுக்கு அண்மையில், உள் திருச்சுற்றுக்களில், வாழ்ந்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
25. ஆளவந்தார் வாழ்ந்திருந்த மடத்தினைப் பெரியநம்பிக்கும், அதன் எதிர்மனையை மாடத்திருவீதியில், (தற்போதைய கீழைச்சித்திரை வீதியில்) ஆழ்வானுக்கும், அந்த மனைக்குத் தெற்குப் பகுதியில் முதலியாண்டானுக்கு, ஒரு திருமாளிகையையும் அளித்தார்.
26. பூர்வகாலந்தொட்டு ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம விதிகளின்படி, திருவரங்கம் பெரியகோயிலில் வழிபாடுகள் நடந்து வந்தன. இடையில் (அவாந்தரத்தில்) வைகாநஸர்களின் ப்ரவேசம் ஏற்பட்டிருந்ததை, இராமானுசர் மாற்றி, மீண்டும்”” ஸ்ரீபாரமேச்வர ஸம்ஹிதை”” ப்ரகாரம், ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம வல்லுநர்களைக் கொண்டு, திருவாராதனங்களையும், திருவிழாக்களையும், நடத்தி வரும்படியான ஏற்பாடுகளைச் செய்தார்.
27. எம்பெருமானார் 25 ஆண்டுகள், திக் விஜயம் செய்து, திருவரங்கம் திரும்பினார். திக்விஜயயாத்ரையைத் திருமாலிருஞ்சோலையில் தொடங்கினார். அப்போதுதான் நூறு தடா நிறைய, அக்கார அடிசிலும் வெண்ணெயும், ஏறுதிருவுடையானுக்கு ஸமர்ப்பித்தருளினார். அழகர் திருமலையில் ராமாநுஜகூடம் எழுப்பி, பரமஸ்வாமி கைங்கர்யத்தை மேற்பார்வையிடுவதற்கு, ஒரு ஜீயரையும் நியமித்தருளினார்.
28. திருமகள் கேள்வனாய், அரவணைமேல் துயில்பவனாய், எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொண்டவனாய், தாழ்ந்த குணங்களுக்கு எதிரிடையான கல்யாணகுணங்களுக்கெல்லாம் ஒரிருப்பிடமானவனாய், பொருள்கள் அனைத்திலும் உள்ளுறைபவனாய் விளங்குபவன், ஸர்வேச்வரனான ஸ்ரீமந்நாராயணனிடம், நாம் சரணாகதி செய்யவேண்டும் என்ற, உன்னதத் தத்துவத்தைப் போதித்தார்.
29. ஒரு பங்குனி உத்தர நன்னாளிலே, அழகிய மணவாளனும், ஸ்ரீரங்கநாச்சியாரும் சேர்ந்து இருக்கின்ற, இருப்பிலே, நம்போல்வார் நற்கதி அடையும்படி, திவ்ய தம்பதிகளிடம் மூன்று கத்யங்களை (சரணாகதிகத்யம், ஸ்ரீரங்ககத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம்) விண்ணப்பம் செய்தார்.
30. நம்பெருமாளுக்கு, அனைத்துவித கைங்கர்யங்களையும், உரிய காலங்களில் நடத்தி வருவதற்காக,அந்தணர்களைக் கொண்ட, பத்துக் கொத்துக்களையும், அந்தணர் அல்லாதவர்களைக் கொண்ட, பத்துக் கொத்துக்களையும் ஏற்படுத்தி, அனைவரும் ஸ்ரீரங்கநாதனுடைய கைங்கர்யங்களில், தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கான, வழிமுறைகளை, ஏற்படுத்தி வைத்தார்.
32. இவ்வாறாக எழுந்தருளியிருந்த, உடையவரை ஆச்ரயித்த, முதலியாண்டானுடைய திருக்குமாரரான, கந்தாடை யாண்டான், நடாதூராழ்வான், ஸ்ரீபராசரவேதவ்யாச பட்டர், கூரத்தாழ்வான் ஆகியோர், ஸ்ரீபாஷ்யம் எழுதுவதற்கு உறுதுணையாகவும், கூரத்தாழ்வான் எம்பெருமானார் மடத்தில் உள்ள, நூலகத்திற்கு காப்பாளராகவும், பண்டகசாலைப் பொறுப்பான ராகவும் பணியாற்றி வந்தனர்.
33. அருளாளப் பெருமாள் எம்பெருமானார், தாம் மிகச் சிறந்த சாஸ்திரபண்டிதராய்த் திகழ்ந்து வந்தபோதிலும், அழகிய வெண்பாவில் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த கோட்பாடுகளை எல்லாம், தன்னுள்ளே கொண்டதாய் அமையப்பெற்ற, ஞானசாரம், ப்ரமேய சாரம் என்ற இரண்டு நூல்களை, அருளிச் செய்திட, அதனால் மகிழ்வுற்ற இராமானுசர், தம்முடைய திருவாராதனப் பெருமாளான, ‘பேரருளாளரை திருவாராதனம் பண்ணிக் கொண்டிரும்’ என்று நியமித்தருளினார்.
35. முதலியாண்டான், எம்பெருமானார் திருமண்காப்புச் சாற்றிக் கொள்ளும்போது, அதற்கான பணிவிடைகளைச் செய்வார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவாராதனம் ஸமர்ப்பிக்கும்போது, அவருக்கு அந்த கைங்கர்யத்தில் உதவி செய்திடுவார். எம்பெருமானார், திருவீதிகளில் எழுந்தருளுவதற்கு முன்பாக, அவருக்குத் திருவடி நிலைகளை (பாதுகைகளை) ஸமர்ப்பித்திடுவார்.
36. இந்தக் காரணம் பற்றியே, உடையவரது திருவடி நிலைகளுக்கு, முதலியாண்டான் என்ற பெயர், நிலை கொண்டு ள்ளது. ஆகவே அடியார்கள் எம்பெருமானார் ஸந்நிதியில், ஸ்ரீசடாரி ஸாதித்திடவேண்டும் என்று கேட்காமல் “முதலியாண்டான் ஸாதித்திட வேண்டும்” என்று பணிவோடு ப்ரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.
37. எம்பார், இரவில் இராமாநுசர் திருப்படுக்கையிலே, சயனித்திருக்கும் போது,அவருடைய திருக்கால்களைப் பிடித்து விடுவர். உடையவருடைய திருப்பரியட்டங்கள் திருத்தவும், திருக்கை ஸமர்ப்பிக்கவும், இரவில் எம்பெருமானார் படுக்கைக்கு எழுந்தருளும் முன்பு, அவருடைய திருப்படுக்கையைச் சோதிப்பதும், எம்பார் மேற்கொண்டு வந்த பணிகளாம்.
38. அன்றாடம் படுக்கை விரிப்புகள் சுத்தப்படுத்தப்பட்டு, வெயிலிலே உலர்த்தப் பெற்ற பிறகு, அவைகள் திருக் கட்டிலிலே சேர்த்திடப்படும். தினந்தோறும் எம்பார், உடையவர் படுக்கையறைக்கு எழுந்தருள்வதற்கு முன்பு, படுக்கையில் படுத்துப் புரள்வாராம். இதைக்கண்ட பலர் எம்பாரிடம் ‘இது தவறானதும், முறையற்ற செயலும் அல்லவா’ என்று வினவிட, அதற்கு எம்பார், தாம் இவ்வாறு செய்வது, படுக்கையில், ஏதேனும் முட்களோ,அல்லது புழுக்களோ, இருந்தால், அவை இராமானுசர் திருமேனிக்குத் துன்பம் விளைத்திடும், அவ்வாறு நேர்ந்திடாவண்ணம், தாம் இவ்வாறு செய்வதாக, மறுமொழி அளித்தார்.
39. கோமடத்து சிறியாழ்வான், திருக்கை செம்பும், ஸ்ரீபாதரக்ஷையும் எடுப்பர். பிள்ளை உறங்காவில்லிதாஸர், வரவு, செலவு கணக்குகளை அன்றாடம் எழுதிக் கொண்டும், கருவூல காப்பாளராகவும் பணிபுரிவர்.
40. அம்மங்கியம்மாள்(தலித் இனத்தைச் சார்ந்தவர் ) பால் அமுது காய்ச்சுவார். உக்கலாழ்வான், திருத்தளிகை மாற்றுவார். மாருதியாண்டான், திருவாராதனத்திற்கும், தளிகைக்குமான நீர் கொணர்ந்து சேர்ப்பார். மாறொன்றில்லா சிறியாண்டான், அமுதுபடி சுத்தம் செய்வது, கரியமுது திருத்துவது ஆகிய பணிகளைச் செய்துபோவார்.
41. வண்டரும், செண்டரும், தினந்தோறும் மடத்துக்கு 1,000 பொன் ஸமர்ப்பிப்பர். இவர்கள் உறையூர் சோழருடைய அரண் மனையில் படைத்தலைவர்களாக,பணி புரிந்து வந்தனர். இவர்கள் மல்யுத்த வீரர்கள்.
42. ராமாநுஜ வேளைக்காரர், எம்பெருமானார் எழுந்தருளும்போது, திருமேனிக்காவலராகப் பணி புரிந்து வந்தனர். அகளங்க நாட்டாழ்வான் எதிரிகளை அழித்து, திருவரங்கத்தைக் காத்திடும் பணியை செய்து வந்தார். இவ்வாறு உடையவரை ஆச்ரயித்திருந்தோர் பலரும், பல கைங்கர்யங்களை செய்து வந்தனர்.